ஆஹிரி
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
ஆஹிரி என்பது கருநாடக இசையில் 14வது மேளகர்த்தா இராகமாகிய, "அக்னி" என்றழைக்கப் படும் 3வது சக்கரத்தின் 2 வது மேளமாகிய வகுளாபரணத்தில் பிறக்கும் இராகம் ஆகும். எப்போதும் பாடக் கூடிய இவ்விராகம் ஆரோகண- வக்ர சம்பூர்ண இராகம் ஆகும். இரவில் பாட ஏற்ற இவ்விராகம் பாஷாங்க இராகம் ஆகும். சோகச் சுவையை வெளிப்படுத்துகின்ற இராகம். "ஆஹிரியைக் காலையில் பாடினால் அன்னம் கிடைக்காது" என்பது ஒரு பழமொழி.
ஆரோகணம்: | ஸ ரி1 ஸ க3 ம1 ப த1 நி2 ஸ் |
அவரோகணம்: | ஸ் நி2 தா1 ப மா1 க3 ரி 1ஸ |
- இந்த இராகத்தில் ஷட்ஜம், சுத்த ரிஷபம் (ரி1), சாதாரண காந்தாரம் (க2), அந்தர காந்தாரம் (க3), சுத்த மத்திமம் (ம1), பஞ்சமம், சுத்த தைவதம் (த1), சதுஸ்ருதி தைவதம் (த2), காகலி நிஷாதம் (நி3) ஆகிய சுரங்கள் வருகின்றன.
[தொகு] இதர அம்சங்கள்
- பண்டைத் தமிழிசையில் இந்த இராகத்திற்கு பண் பஞ்சமம் என்று பெயர்.
- சிலர் இவ்விராகம் 8வது மேளமாகிய தோடியின் ஜன்யம் என்றும், வேறு சிலர் 20வது மேளமாகிய நடபைரவியின் ஜன்யம் என்றும் எண்ணுகின்றார்கள். வகுளாபரணம், தோடி, நடபைரவி ஆகிய மூன்று மேளங்களிலும் தோன்றும் சுரங்கள் இவ்விராகத்தில் வருவதை கவனிக்கவும்.
- அந்தரகாந்தாரம் இந்த இராகத்திற்கு ஒரு முக்கியமான அம்சம் ஆகும். சுத்த ரிஷபம் கம்பித சுரமாகும்.
- இவ்விராகத்தில் சௌக கால பிரயோகங்கள் அதிகமாகப் பிரயோகிக்கப்படுகின்றன. பழமையான, முக்கிய இசை நூல்களில் இந்த இராகத்தின் பெயர் காணப்படுகின்றது.
- இந்த இராகத்தில் மூன்று அன்னிய சுரங்கள் வருகின்றன; பல நுட்ப சுருதிகள் தோன்றுகின்றன; ஆகையால் இது கவனமாகக் கையாளப்பட வேண்டிய இராகம் ஆகும்.
[தொகு] உருப்படிகள்
- கிருதி : "ஆதய சிறீ" - ஆதி - தியாகராஜ சுவாமிகள்.
- கமலாம்பா நவாவர்ணம் : "சிறீ கமலாம்பா" - திஸ்ர ஏகம் - முத்துஸ்வாமி தீட்சிதர்.
- நவரத்ன மாலிகை : "மாயம்மனி" - ஆதி - சியாமா சாஸ்திரிகள்.
- பதம் : "ராராரா" - திரிபுடை - ஷேத்ரக்ஞர்.
- கிருதி : "பரமபுருஷ" - மிஸ்ரசாபு - சுவாதித்திருநாள் மகாராஜா.