நாதம்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
நாதம் என்பது இசைக்கு மிக முக்கியமானது என்பதுடன் இசைக்கும் ஆதரமானது ஆகும். காதிற்கு இனிமையைத் தரும் வனி நாதம் என்று அழைக்கப்படும். நாதத்தினின்று சுருதிகளும், சுருதிகளினின்று ஸ்வரங்களும், ஸ்வரங்களினின்று இராகங்களும் உற்பத்தியாகின்றன.
[தொகு] நாதத்தின் வகைகள்
நாதம் இரு வகைப்படும்.
- ஆகத நாதம்.
- அனாகத நாதம்.
[தொகு] ஆகத நாதம்
மனிதனுடைய முயற்சியால் உற்பத்தியாக்கப்படும் நாதம் ஆகத நாதம் ஆகும். நாம் கேட்கும் சங்கீதம், பாடும் சங்கீதம், வாத்தியங்களில் வாசிக்கப்படும் சங்கீதம் முதலியவைகள் எல்லாம் ஆகத நாதத்தைச் சேர்ந்தவையாகும்.
மேலும் இந்நாதம் மூன்று வகைகளாகப் பிரிக்கப்படும்,
- ப்ராணி சம்பவ நாதம்
அதாவது (உயிருள்ள) தேகத்திலிருந்து உற்பத்தியாகும் நாதம். உ+ம் : வாய்ப்பாட்டு
- அப்ராணி சம்பவ நாதம்
அதாவது வஸ்துகளாகிய வீணை போன்ற தந்தி வாத்தியங்களினின்று உற்பத்தியாகும் நாதம்.
- உபய சம்பவ நாதம்
அதாவது (உயிருள்ள) பிராணிகளின் ஸஹாயத்தைக் கொண்டு மூங்கிலைப் போன்ற வஸ்துக்களில் உற்பத்தியாக்கப் படும் நாதம். கட்டைகளைக் கொண்டு செய்யப்பட்ட குழல், நாதசுவரம் போன்ற கருவிகளினின்று உண்டாக்கப்படும் நாதம் இதற்கு உதாரணமாகும்
[தொகு] அனாகத நாதம்
மனிதனுடைய முயற்சியின்றி இயற்கையிலேயே கேட்கப்படும் நாதம். இது யோகிகளாலும், சித்தர்களாலும் மட்டும் அறியக்கூடியது. தியாகராஜ சுவாமிகள் ஒரு சிறந்த நாத யோகி. அனாகத நாதத்தை உணர்ந்து தனது அனுபவங்களை "ஸ்வர ராக ஸூதாரஸ" போன்ற கிருதிகளில் வெளியிட்டிருக்கின்றார்.