திருமறைக்காடு வேதாரண்யநாதர் கோயில்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
திருமறைக்காடு வேதாரண்யநாதர் கோயில் பாடல் பெற்ற தலங்களில் ஒன்றாகும். சம்பந்தர், அப்பர், சுந்தரர் மூவரதும் பாடல் பெற்ற இத்தலம் தஞ்சை மாவட்டத்தில் அமைந்துள்ளது. இத்தலத்தில் வேதங்களால் அடைக்கப்பட்ட கதவும் திறக்கவும் மூடவும் சம்பந்தரும் அப்பரும் பதிகம் பாடினர் என்பது தொன்நம்பிக்கை. சேரமான் பெருமாள் சுந்தரருடன் வழிபட்ட தலம் எனப்படுகிறது.