இந்திய கணித அறிஞர்கள்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
கணித இயலுக்கு அரும் பங்களித்த புகழ் பெற்ற கணித இயல் அறிஞர்கள் தொன்றுதொட்டு இருந்து வந்துள்ளனர். இந்துவெளி (சிந்துவெளி) நாகரிகக் காலத்திலிருந்தே தற்காலம் வரையிலும் கணிதவியலுக்கு ஆக்கங்கள் தந்தவர்கள் பலர் உள்ளனர். இந்தியாவில் இருந்து பல கருத்துக்கள் நடுகிழக்கு நாடுகளுக்கும் அங்கிருந்து ஐரோப்பாவிற்கும் ஒருகாலத்தில் பரவியது என பலர் எண்ணுகின்றனர். இந்திய கணித அறிஞர்களின் சிறப்பான பங்களிப்புகள் குறுகிய சில குழுக்களைத்தவிர பரவலாக அறியப்படாததாகவே உள்ளன. இப்பங்களிப்புகளைப்பற்றி சில வரலாற்று ஆய்வாளர்களும் எழுதியுள்ளனர்
பொருளடக்கம் |
[தொகு] கி.மு.
- யஞ்ஞவால்க்யா, கி.மு. 1800 கணித முறைப்படி குண்டங்கள் அமைத்தல் பற்றி சடபாத பிராமணத்தில் எழுதியவர்.
- லகதா கி.மு. 1350 வேதவழி வானவியல் கருத்துக்கள்.
[தொகு] கி.பி. 1-1000
- ஆரியபட்டா - கி.பி. 500 வானவியல் அறிஞர். பல அரிய கணக்கு வகைகள் தந்தவர். வட்டத்தின் விட்ட வகுப்ப்பான பை க்கு தோராய மதிப்பைத் தந்தார்
- வராஃகமிகிரர்
- முதல்- பாஸ்கரா, கி.பி.620
- பிரம்மகுப்தா - கி.பி. 598-668 சுழியின் கருத்தை கணக்கில் பயன்படுத்தல்.
- விரஃகங்கா (கி.பி. 8 ஆம் நூற்றாண்டு) - Gave explicit rules for the Fibonacci series.
- சிறீதரா காலப்பகுதி கி.பி. 650-850 க்குள் வாழ்ந்தவர். உருண்டையின் கன அளவும், இருபடி சமன்பாட்டுக்குத் தீர்வும் தந்தவர்.
- வீரசேனா கி.பி. 8 ஆம் நூறாண்டு. மடக்கை (logarithm) பற்றியும், 2, 3, 4 ஆகிய எண்களை அடியாகக் கொண்டு கணக்கிடும் முறையையும் கூறினார்.
- கோவிந்தசாமி கி.பி. 9ஆம் நூற்றாண்டு. முக்கோண சைன்களைத் துல்லியமாக கணக்கிட உதவியவர்.
- மகாவீரா கி.பி. 9 ஆம் நூற்றாண்டு.
- சயதேவா கி.பி. 9 ஆம் நூற்றாண்டு. பெல் (Pell) போன்ற சமன்பாடுகளுக்கு சக்கரவலா என்னும் முறையில் தீர்வு காணுதல். புகழ்பெற்ற செருமானிய கணித அறிஞர் ஹென்க்கல் (Henkel) சயதேவாவின் முறையை மிகவும் பாராட்டியுள்ளார்.
- 2ஆம் ஆரியபட்டா, கி.பி. 920-1000 மகா சித்தாந்தா என்னும் நூலை இயற்றியவர்.
[தொகு] 1கி.பி. 1000-1800
- பிரம்மதேவா கி.பி. 1060-1130
- சிறீபதி, கி.பி. 1019-1066
- கோபாலா - ஃவிப்பனாக்சி (Fibonacci) எண் வரிசையைப் பற்றி ஃவிப்பனாக்சிக்கு முன்னால் விளக்கியுள்ளவர்.
- ஏமச்சந்திரா - இவரும் ஃவிப்பனாக்சி (Fibonacci) எண் வரிசையைப் பற்றி ஃவிப்பனாக்சிக்கு முன்னால் விளக்கியுள்ளவர்.
- 2ஆம் பாஸ்கரா - நுண்கணிதம் பற்றி கருத்துக்கள் தந்தவர்.
- Gகணேச உபாத்தியாயா 13 ஆம் நூற்றாண்டு ஏரணர் (Logician), மிதிலா குழுவினர்.
- நாராயண பண்டிதர் 1340-1400, கேரள (சேர நாட்டு) அறிஞர். கணித கௌமுடி என்னும் நூலை ஆக்க்யவர். பொறுக்கல் கணக்கை (combinatorics) எதிர்பார்த்தவர்.
- மாதவா கி.பி. 1350-1425 கேரள (சேர நாட்டு) அறிஞர். நுண்கணிதத்தில் பல கருத்துக்களை விதைத்தவர். கணிதவியல் பகுபாய்வின் (mathematical analyis) தந்தை எனப் புகழப்படுபவர்.
- பரமேசுவரர் கி.பி.1360 -1455, கேரள (சேர நாட்டு) அறிஞர். வானவியல், வடிவவியலில் பங்களிப்பு.
- நீலகண்ட சோமயாஜி, கி.பி. 1444-1545 கேரள (சேர நாட்டு) அறிஞர். இவர் தந்திர சங்கிரகா என்னும் நூலையும், ஆர்யபாட்டிய பாசியம் என்னும் நூலையும் எழுதியுள்ளார்.
- மகேந்திர சூரி 14 ஆம் நூற்றாண்டு. யந்திரராஜா என்னும் நூலை எழுதியவர். வானவியல் பற்றி கனக்கிடும் விண்மீன்கணித்தட்டு (astrolobe) பற்றி ஒரு நூல் எழுதியுள்ளார்.
- சங்கர வாரியார் சுமார் கி.பி. 1530. நீலக்ண்ட சோமாயாஜியின் எழுதிய தந்திர சங்கிரகா என்னும் நூலுக்கு விரிவுரை எழுதியுள்ளார்.
- ஜ்யேஷ்டதேவா கி.பி. 1500-1610, கேரள (சேர நாட்டு) அறிஞர். இவர் யுக்திபாஷா என்னும் நுண்கணிதம் பற்றிய முதல் நூலை எழுதியவர்.
- அச்சுத பிஷாரடி, கி.பி.1550-1621, கேரள (சேர நாட்டு) அறிஞர். வானவியல், கிரகணக் கணக்கீடு ஆகியவற்றில் பங்களித்துள்ளார்.
- முனீசுவரா 17 ஆம் நூற்றாண்டு
- கமலாகரா (1657)
- சகன்னாதா (1730)
[தொகு] கி.பி. 1800களில்
- இராமானுசன் (1887-1920)
- அல்லாடி கிருஷ்ணசாமி ஐயங்கார் (1892]]-1953)
- பிரசந்த சந்திர மஃகாலனோபிஸ் (1893-1972)
- சத்தியேந்திர நாத் போசு (1894]]-1974)
[தொகு] கி.பி. 1900 களில்
- ராஜ் சந்திர போசு (1901-1987)
- சுப்பிரமணிய சந்திரசேகர் (1910-1995)
- டி.கே. ராய்-சௌதிரி
- ஹரீஷ் சந்திரா (1923-1983)
- சி. ராதாக்கிருஷ்ண ராவ்
- சிறீராம் சங்கர் அபயங்கர் (1930-)
- சகுந்தலா தேவி (1939-)
- விஜய் குமார் பட்டோடி (1945-1976)
- நரேந்திர கருமார்கர் (1957-)
- எம்.வி.சுப்பாராவ் (1921-2006)
- வசிஷ்ட நாராயண் சிங்க்
- திவாகர் விசுவநாத்
- தனஞ்சய் மஃகெந்தாளே
- பாமா சிறீனிவாசன் (1935-)