துளசி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.

துளசி (Ocimum Sanctum) மூலிகைச் செடியாகும். இந்தியா இலங்கை போன்ற நாடுகளில் காணப்படுகிறது. ஏறத்தாழ 50 சென்ரிமீட்டர் வரை வளரக் கூடிய இச்செடியின் அனைத்துப் பாகங்களும் மருத்துவக் குணம் கொண்டவை. இது கோயிற் பூசைகளில் குறிப்பாக பெருமாள் கோயில்களில் பயன்படுத்தப்படுவதால் கோயிற் பூந்தோட்டங்களில் வழக்கமாகக் காணப்படுகிறது. வீடுகளில் துளசியை வளர்த்து பூசிக்கும் வழக்கமும் உண்டு.

[தொகு] மருத்துவக் குணங்கள்

  • சளி, இருமல், வறட்டு இருமல் போன்றவற்றுக்கும் மருந்தாகும்.
  • தொற்றுநோய்களை எதிர்க்கும்.
  • சீரண சக்தியை அதிகரித்து பசியை அதிகரிக்கும்
  • வயிற்றுப் பொருமலைத் தணிக்கும்
  • துளசிவிதை ஆண்மையை அதிகரிக்கும்
  • ஞாபக சக்தியை அதிகரிக்கும்
  • வெண்தோல், ஆஸ்துமா, மூச்சிறைப்பு, இடுப்புப்பிடிப்பு, சிறுநீரகப் பிரச்சினைகள் போன்றவற்றுக்கும் மருந்தாகும்.

[தொகு] வெளி இணைப்புக்கள்

"http://ta.wikipedia.org../../../%E0%AE%A4/%E0%AF%81/%E0%AE%B3/%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B3%E0%AE%9A%E0%AE%BF.html" இலிருந்து மீள்விக்கப்பட்டது
ஏனைய மொழிகள்