நீர்முள்ளி
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
நீர்முள்ளி (Hydrophila spinosa) மருத்துவ மூலிகையாகப் பயன்படும் செடியாகும். முழுச் செடியும் மருத்துவ குணமுடையதாகும். வயல்கள், குளம், குட்டைகளில் நிமிர்ந்து வளரும் இதன் கணுக்களில் முட்கள் காணப்படும். பூ இளஞ்சிவப்பு நிறமானதாகும்.
[தொகு] மருத்துவ குணங்கள்
நீர்முள்ளிக் குடிநீர் உட்கொள்ள சிறுநீர் எரிவு, சிறுநீர்க்கட்டு, கால் வீக்கம் போன்ற நோய்கள் குணமாகும்.
[தொகு] உசாத்துணை
- மூலிகைகள் - ஓர் அறிமுகம்" - சித்தமருத்துவ கலாநிதி சே. சிவசண்முகராஜா, 2003