ஆன் றணசிங்ஹ
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
ஆன் றணசிங்ஹ (ஒக்டோபர் 2, 1925) ஜேர்மனியில் பிறந்த யூதப் பெண்மணி. இரண்டாவது உலக யுத்தம் தொடங்குமுன்பு, இனப் படுகொலையிலிருந்து தப்பி இங்கிலாந்து சென்று, தாதியாகக் கடமை புரிந்தார்; அங்கு சந்தித்த இலங்கையரைத் திருமணம் செய்தார். ஆங்கிலத்தில் கவிதை எழுதுபவர். 'கவிதைகள்' (1971), 'சொற்களினால் எமது வாழ்க்கையை எழுதுகிறோம்' (1972), அழியாநிலைக்கும் இருளிற்கும் எதிராக' (1985) முதலிய தொகுப்புக்கள் வெளிவந்துள்ளன.pakuppu:இலங்கை எழுத்தாளர்கள்