எஸ். எஸ். கணேசபிள்ளை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.

வானொலி, மேடை நடிகரும், நாடகாசிரியருமான எஸ். எஸ். கணேசபிள்ளை , யாழ்ப்பாணம் வரணியில் பிறந்தார் இதனாலேயே இவர் தனது புனைபெயரை 'வரணியூரான்' என்று வைத்துக்கொண்டார். 3 தலைமுறை காலத்துக்கு மேலாக வானொலி நாடகங்களில் நடித்தும், எழுதியும் வந்தவர். பல மேடை நாடகங்களை எழுதி, இயக்கி, நடித்து மேடையேற்றியிருக்கிறார். தொலைக்காட்சி நாடகங்களையும் எழுதி நடித்துமிருக்கிறார். 1995ல் கொழும்பில் காலமானார்.


பொருளடக்கம்

[தொகு] வானொலி தொடர் நாடகங்கள்

  • புளுகர் பொன்னையா
  • அசட்டு மாப்பிள்ளை
  • இரை தேடும் பறவைகள்

[தொகு] மேடை நாடகங்கள்

  • பாசச்சுமை
  • நம்பிக்கை
  • புளுகர் பொன்னையா
  • அசட்டு மாப்பிள்ளை

[தொகு] சிறுகதைகள்

"வரணியூரான்" என்ற பெயரில் சிறுகதைகளை தினகரன், வீரகேசரி போன்ற தேசிய தினசரிகளில் எழுதியிருக்கிறார்.

[தொகு] வெளிவந்த நூல்கள்

  • இரை தேடும் பறவைகள் (வானொலி நாடகம்)
  • அசட்டு மாப்பிள்ளை (மேடை நாடகம்)