தமிழ் முஸ்லிம்கள் அன்றாடம் பயன்படுத்தும் வார்த்தைகள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.

தமிழ் மொழியை தாய்மொழியாக கொண்ட தமிழ் முஸ்லிம்கள் (குறிப்பாக தமிழகத்தைச் சேர்ந்தவர்கள்) அன்றாடம் தங்கள் வாழ்வியலில் பயன்படுத்தும் வார்த்தைகளுக்கான தொகுப்புகள். இலங்கையில் உள்ள முஸ்லிம்களும் பெரும்பாலானர்வர்கள் தமிழையே தாய்மொழியாக்கொண்டுள்ளதோடு இவற்றில் பெரும்பாலனாவற்றைப் பாவிக்கின்றனர்.

பொருளடக்கம்

[தொகு] உலக முஸ்லிம்கள் அனைவராலும் பயன்படுத்தப்படும் வார்த்தைகள்

இதில் சில வார்த்தைகள் இஸ்லாமிய நடைமுறைகளுக்கு உரியவைகளாகும், அதாவது அப்படிப்பட்ட வார்த்தைகள் உலகம் முழுவதும் உள்ள முஸ்லிம்கள் அனைவரும் பயன்படுத்தும் வார்த்தைகளாகும். அவை பெரும்பாலும் அரபி மொழி உச்சரிப்பை கொண்டிருக்கும்.

  1. அஸ்ஸலாமு அலைக்கும் - உங்கள் மீது சாந்தியும், சமாதானமும் உண்டாவதாக.
  2. அல்லாஹ் - (ஒரிறைக்) கடவுள்,
  3. முகம்மது (இலங்கைத் தமிழ்: முஹம்மது) - முகம்மது நபி, இறைத்தூதர், இஸ்லாமியர்கள் முகம்மது நபி அவர்கள் மீது வைத்திருக்கும் அன்பை வெளிப்படுத்துவதற்காக தங்கள் பெயருக்கு முன் "முகம்மது" என்று சேர்த்துக்கொள்வர். உதா. முகம்மது சலீம்.
  4. யா-அல்லாஹ் - கடவுளே, பிரார்த்தனையின் போது, துயரத்தின்போது விளிக்கப்படும் வார்த்தை.
  5. பிஸ்மில்லாஹ் - கடவுளின் பெயரால் (ஆரம்பிக்கிறேன்), இந்த வார்த்தை பெரும்பாலும் ஒரு செயலை செய்யும் பொழுது சொல்லப்படும்.
  6. பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிற்றஹீம் - அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய கடவுளின் திருப்பெயரால் (ஆரம்பிக்கிறேன்)
  7. இன்ஷா அல்லாஹ் - கடவுள் நாடினால் (நடக்கும்)
  8. அல்ஹம்துலில்லாஹ் - கடவுளுக்கு நன்றி.
  9. ஜகாத் - ஏழைகளுக்கான அரசாங்க வரி.
  10. ஷைத்தான் - தீய செயல்களுக்கு தூண்டுகிறவன்,

[தொகு] தமிழ் முஸ்லிம்கள் உறவு முறைகளுக்கு பயன்படுத்தும் வார்த்தைகள்

தமிழகத்தைப் பொறுத்தவரை உறவுமுறைகளில் முஸ்லிம்கள் பயன்படுத்தும் வார்த்தைகள் மிகவும் சுவராஸ்யமாய் இருக்கும். காரணம் ஒரு ஊரில் பயன்படுத்தும் வார்த்தைகள் பக்கத்து ஊரில் வேறு மாதிரியாய், அப்படியே தலைகீழாய் கூட இருக்கும். (pls quote ur place name in brackets with comma if more than one place)

  1. வாப்பா,அத்தா,வாவா - தந்தை, வாப்பா - கடற்கரை பகுதிகளான கீழக்கரை, அதிராம்பட்டினம், தொண்டி, இராமநாதபுரம், காரைக்கால், நாகூர், போன்ற ஊர்களில் விளிக்கிறார்கள். இமாம் ஷாஃபி மத்ஹப் (School of thoughts) பின்பற்றுபவர்களாய் இருப்பார்கள். அதேபோல், தந்தையை அழைக்க *அத்தா* என்கிற வார்த்தையை இமாம் ஹனபி மத்ஹப் (School of thoughts) பின்பற்றுபவர்கள் உபயோகப்படுத்த பார்க்கலாம். வாவா என்று திருநெல்வேலி மாவட்டம் தென்காசியில் அழைக்கிறார்கள்.
  2. உம்மா - அம்மா
  3. உம்மம்மா, பெரியம்மா - அம்மாவுடைய அம்மா, பெரியம்மா என்று அதிராம்பட்டிணத்தில் அழைக்கிறார்கள்
  4. ராத்தம்மா,லாத்தம்மா(?) - அம்மாவின் பெரிய சகோதரி, பெரியம்மா என்று சில ஊர்களில் அழைக்கிறார்கள்(quote place)
  5. சாச்சி(அதிராம்பட்டிணம்) - அம்மாவின் தங்கை, சித்தப்பாவின் மனைவி.
  6. ராத்தா, லாத்தா - அக்கா, அதிராம்பட்டிணம், நாகூர் போன்ற ஊர்களில் ராத்தா என்றும் காரைக்கால்,உடன்குடி, பொறையாறு(?) போன்ற ஊர்களில் லாத்தா என்றும் அழைக்கிறார்கள்.
  7. காக்கா, நானா (இலங்கைத் தமிழ்: நாணா) - அண்ணன், உடன்குடி, நாகூர், கீழக்கரை, காயல்பட்டிணம், மற்றும் அதிராம்பட்டினம் காக்காவும் பட்டுக்கோட்டை அண்ணன்களும், நானா என்று காரைக்கால்,?? போன்ற ஊர்களில் அழைக்கிறார்கள்.
  8. சாச்சா, சச்சா - தந்தையின் சிறிய சகோதரர். சித்தப்பா, அம்மாவின் தங்கையின் கணவர்
  9. பெரியவாப்பா, பெரியப்பா - தந்தையின் பெரிய சகோதரர், அம்மாவின் அக்கா கணவர்.
  10. வாப்பி(பு)ச்சா - தந்தையின் தாய்(அதிராம்பட்டிணம், உடன்குடி)
  11. அப்பா - தாத்தா, அம்மாவின் தந்தை, அப்பாவின் தந்தை (அதிராம்பட்டிணம்,) இருவரையுமே இப்படித்தான் அழைக்கிறார்கள்.
  12. ராதா - தந்தையின் தந்தை (தென்காசி)
  13. ராதி - தந்தையின் தாய் (தென்காசி)
  14. நானா - அம்மாவின் அப்பா (தென்காசி), அண்ணன்(காரைக்கால்)
  15. நானி(நி?) - அம்மாவின் அம்மா(தென்காசி)
  16. பெரிய வாவா - தந்தையின் மூத்த சகோதரர்
  17. சிறிய வாவா - தந்தையின் சிறிய சகோதரர்.
  18. மாமி(அதிராம்பட்டிணம்), குப்பி(தென்காசி) - தந்தையின் சகோதரி
  19. காளா - அம்மாவின் சகோதரி (தென்காசி)
  20. மச்சி(அதிராம்பட்டிணம்), மண்ணி(பள்ளப்பட்டி) - அண்ணனின் மனைவி
  1. நாசுவன்(அதிராம்பட்டிணம்) - நாவிதர், சிகை அலங்காரம் செய்பவர்

[தொகு] மார்க்க விற்பன்னர்கள்/மார்க்கம் தொடர்புடையவை

(விற்பன்னர்கள் என்பது சரியா???)

  1. ஹஜ்ரத், உஸ்தாத்(உருது) - ஆசிரியர், பாடம் நடத்துபவர்.
  2. மௌலவி - ??
  3. இமாம் - பள்ளிவாசலில் தொழுகை நடத்துபவர்.
  4. மோதினார், முஅத்தின் - பள்ளிவாசலை பராமரிப்பவர், தொழுகைக்கு அழைக்கும் பணி செய்பவர்.
  5. ஆலிம் - 7 வருட இஸ்லாமிய படிப்பை முடித்த பட்டதாரி.
  6. பாங்கு - தொழுகைக்கு அழைத்தல்
  7. (திருக்) குர்ஆன் - முஸ்லிம்களின் புனித நூல். இது 1450 ஆண்டுகளுக்கு முன் கடவுளால் முஹம்மது நபிக்கு இறக்கப்பட்டது.
  8. ஹதீஸ் - முஹம்மது நபி அவர்களின் அன்றாட வாழ்க்கை வரலாற்று தொகுப்புகள். புஹாரி சரீப்
  9. சுன்னத் - நபிவழி, முஹம்மது நபியின் வாழ்க்கை வரலாற்றை அறிந்து அதன்படி நடத்தல்.
  1. ஜும்ஆ - வெள்ளிக்கிழமை பகல் ஊர்மக்கள் அனைவரும் ஒரிடத்தில்(பள்ளிவாசலில்) கூடி நின்று தொழுதல்
  2. குத்பா - மார்க்கப் பிரசங்கம், வெள்ளிக்கிழமை ஜும்ஆ விலும் திருமணத்தின் பொழுதும் நிகழ்த்தப்படுதல்.

[தொகு] உடை மற்றும் அலங்காரம்

  1. ஜிப்பா(jibba) - ஆண்கள் அணியும் வெள்ளைத் துணியிலான உடை.
  2. புர்கா, பர்தா(bardha) - பெண்கள் தங்களின் கண்ணியத்தை பேணுவதற்காக, பெண்மையை மறைப்பதற்காக அணியும் உடை. இவை அநேகமாய் கருப்பு நிறத்திலே இருக்கும்
  3. துப்பட்டி - உயர்தர வெள்ளைத் துணியிலான, பெண்கள் தங்களை மறைத்துக்கொள்வதற்கான உடை.
  4. சுர்மா - கண்திரைகளில் இடப்படும் ஒருவகை சுட்ட கல். இவை நபிவழி என்று நம்பப்படுகிறது.

[தொகு] உணவு, பதார்த்தங்கள்

  1. கொலக்கட்டை - ஒருவகை இனிப்பு பலகாரம், அரிசி மாவுடன் சிறுபறுப்பு, சக்கரை, சேர்த்து வேகவைத்து சாப்பிடுதல்
  2. வட்லப்பம் (அதிராம்பட்டிணம்) - முட்டை, சீனி, பால் போன்றவற்றை சேர்த்து நன்கு அடித்து பின் வேகவைத்து செய்யப்படும் விசேச பண்டம். இவை அநேகமாய் விருந்து, பண்டிகை நாட்களில் தயார் செய்கிறார்கள்.
  3. தேத்தண்ணி (அதிராம்பட்டிணம்) - தேநீர்
  4. புளியாணம் (அதிராம்பட்டிணம்) - (புளி) ரசம்
  5. ஆனம் - மீன் ஆனம் =மீன் குழம்பு
  6. தாளிச்சா - அநேகமாய் திருமண விருந்துகளில் இவை கொடுக்கப்படுகிறது. உருளைகிழங்குடன், கத்தரிக்காய், தக்காளி, மற்றும் பல காய்கறிகளுடன் ஆட்டு ஈரல் சேர்ந்து வைக்கப்படும் ருசிமிக்க குழம்பு.
  7. ஐந்து-கறி-சோறு - கத்தரிக்காய் பச்சடி,உருளைக்கிழங்கு(ஆட்டு ஈரலுடன்), இனிப்பு, ரசம் அத்துடன இறைச்சி் ஆகிய ஐந்து தனித்தனி வகைகளின் கலவையையே ஐந்து கறிசோறு என்று அழைக்கிறார்கள்,
  8. மாசி - காயவைக்கப்பட்ட ஒருவகை மீன், இதனை தூள் செய்து, அத்துடன் மிளகாய் பொடி சேர்த்து தூளாக்கி, வெங்காயம், எழுமிச்சை சேர்த்து ரசம்+சோற்றுடன் சேர்த்து சாப்பிடுவார்கள். இவை பெரும்பாலும் நோன்புக்காலங்களில் பயன்படுத்துவார்கள். இவ்வகை உணவு மலேசியா, மாலத்தீவுகளிலிருந்து வருகிறது.
  1. சகன் - நால்வர் ஒன்றாய் அமர்ந்து சாப்பிட உபயோகிக்கும் அகலமான பாத்திரம். அதிராம்பட்டிணம், நாகூர், முத்துப்பேட்டை, மல்லிப்பட்டிணம் போன்ற ஊர்களில் திருமண விருந்துகளில் இந்த முறையைப் பார்க்கலாம்.

[தொகு] நிறுவனங்கள்

  1. மதரஸா - இஸ்லாமிய கல்லூரி, இங்கு இஸ்லாமிய பாடத்திட்டங்கள், குர்ஆன் மனனம் செய்தல் போன்றவை பயிற்றுவிக்கப்படுகிறது.
  2. எதிம் கானா - அநாதை இல்லம்.
  3. பைத்துல்மால் - பொது நிதியகம், பொதுமக்களிடம் ஜகாத், போன்றவற்றை, வசூல் செய்து ஏழைகளுக்கு விநியோகிக்கும் ஸ்தாபனம். பார்க்க அதிரை பைத்துல்மால்

[தொகு] விளிச்சொற்கள்

  1. சபூர் செய் - பொறுமை காத்திரு, பொறுமையாய் இரு, ஒருவர் துன்பத்திலிருக்கும் பொழுது, (ஆறுதலுக்காக) சொல்லப்படுவது.
  2. துஆ செய் (இலங்கைத் தமிழ்: துவா)- எனக்காக பிரார்த்தனை செய்
  3. நிய்யத் வை - (நல்லவற்றிற்காக, தூய எண்ணத்துடன்) உறுதி எடுத்துக்கொள்

[தொகு] பொதுவான சொற்கள்

  1. நfப்ஸ் - மன இச்சை, ஆசை. நப்ஸை கட்டுப்படுத்திக்கொள்- ஆசையை கட்டுப்படுத்திக்கொள்.
  2. பொஸ்Sப்p - கொடுப்பினை. அவனுக்கு பொஸ்ப் இருந்திருக்கிறது, இந்த பிரியாணி சாப்பிடுவதற்கு. (இந்த வார்த்தை எதிர்பாராதவிதமாக விருந்து ஏற்பாடு செய்து அப்பொழுது திடிரென நண்பர் ஒருவர் அங்குவரும் பொழுது அவரைப் பார்த்து சொல்லப்படுதல்)
  3. ஹக் - பங்கு, அவனுடைய ஹக்கை கொடுத்துவிடு (அவனுடைய பங்கை கொடுத்துவிடு)
  4. ராஹத் - ராஹத்தாய் இருக்கிறது(அதிராம்பட்டிணம்) - காற்றோற்றமாய் இருக்கிறது.
  5. மிஸ்கீன்(உருது?) - வழிப்போக்கர், பிச்சை எடுப்பவர்.

[தொகு] திருமணம்

  1. நிக்காஹ் - திருமணம், ஆண் பெண் இருவருக்கும் ஏற்படும் தாம்பத்ய, வாழ்வியல் ஒப்பந்தம்.
  2. வலிமா - திருமண விருந்து, மணமகன் அவருடைய நண்பர்களுக்கு அளிக்கும் விருந்து.
  3. மஹர் - தங்கம் அல்லது பணமாக மணமகன் மணமகளுக்கு கொடுக்கும் திருமண அன்பளிப்பு. மணமுறிவு ஏற்படும் விடத்து இதனை மணமகன் திருப்பி கேட்க கூடாது என்று வழியுறுத்தப்படுகிறது, அது மலையளவாகினும் சரியே.
  4. தலாக் - விவாகரத்து, மணமுறிவு.
  5. கத்னா செய்தல், சுன்னத் கல்யாணம் - ஆண் பிள்ளைக்கு ஆணுறுப்பில் உள்ள அதிகப்படியான தோலை வெட்டுதல்.

[தொகு] சோகம், துக்கம்

  1. இன்னாலில்லாஹி (வ இன்னா இலைஹி ராஜிஊன்) - கடவுளிடமிருந்தே வந்தோம் அவனிடமே செல்ல இருக்கிறோம். ஒருவரின் இறந்த செய்தி அல்லது பொருட்கள் காணாமல் போகும் விடத்து இந்த வாக்கியம் சொல்லப்படுகிறது.
  2. ஜனாஸா, மய்யித்து - இறந்தவரது உடல்.
  3. வஃபாத் - வஃபாத்தாகிவிட்டார்கள், இறந்துவிட்டார்கள்
  4. கஃபன் - இறந்தவரது உடலை கட்ட பயன்படும் (வெள்ளைத்) துணி.
  5. கப்ர்(kabr) - இறந்தவர் புதைக்கப்பட்டிருக்கும் இடம்.
  6. கப்ருஸ்தான்,மையவாடி (அதிராம்பட்டிணம்), அடக்கஸ்தலம் - இறந்தவர்கள் புதைக்க உபயோகிக்கும் இடம்.
  7. சந்தாக்(santhak) - இறந்தவர்களை தூக்கிச்செல்ல பயன்படுத்தப்படும்.