நான் உங்கள் தோழன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.

நான் உங்கள் தோழன்
இயக்குனர் எஸ். வி. சந்திரன்
தயாரிப்பாளர் வி. பி. கணேசன்
கதை கலைச்செல்வன்
நடிப்பு வி. பி. கணேசன்
சுபாஷினி
எஸ். ராம்தாஸ்
எம். எம். ஏ. லத்தீப்
கே. ஏ. ஜவாஹர்
கலைச்செல்வன்
ஹரிதாஸ்
ருக்மணி தேவி
ஜெனிடா
சந்திரகலா
எஸ். என். தனரட்னம்
விமல் சொக்கநாதன்
ஜெயதேவி
இசையமைப்பு எம். கே. ரொக்சாமி
ஒளிப்பதிவு எஸ். வாமதேவன்
படத்தொகுப்பு எஸ். வி. சந்திரன்
வினியோகம் கணேஷ் பிலிம்ஸ்
வெளியீடு 1978
நாடு இலங்கை
மொழி தமிழ்

1978ம் ஆண்டு இலங்கை திரைப்பட உலகிற்கு ஒரு முக்கியமான ஆண்டு. இந்த ஆண்டில் மொத்தம் 6 ஈழத்து தமிழ்த் திரைப்படங்கள் திரையிடப்பட்டன. அவற்றுள் முதலாவது திரைப்படந்தான் நான் உங்கள் தோழன். தொழிற்சங்கத் தலைவர்களில் ஒருவரான வி. பி. கணேசன் தனது முதலாவது படமான புதிய காற்றுக்கு கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து எடுத்த திரைப்படம்.


அவரே இந்தமுறையும் பிரதான பாத்திரத்தில் நடித்தார். சுபாஷினி, கே. ஏ. ஜவாஹர், எஸ். ராம்தாஸ், எம், எம், ஏ. லத்தீப், ருக்மணி தேவி போன்ற பலரை தன்னுடன் நடிக்கவைத்தார். எஸ். வி. சந்திரன் இத்திரைப்ப்டத்தை இயக்கினார். அவரே படத்தொகுப்பாளரும் கூட். எம். கே. ரொக்சாமி இசையமைக்க, சாந்தி, முருகவேள், சாது ஆகியோர் இயற்றிய பாடல்களை முத்தழகு, கலாவதி, சுண்டிக்குளி பாலச்சந்திரன், மொஹிதீன் பெக், கனகாம்பாள் என்பவர்கள் பாடினார்கள்.

கொழும்பு, மலையகம் என்பவற்றோடு யாழ்ப்பாணத்து நகர வீதிகளிலும், மட்டக்களப்பு மாமாங்கத் திருவிழாவிலும் கூட படப்ப்டிப்பு நடத்தினார்கள்.

[தொகு] கதை

கதைச்சுருக்க எச்சரிக்கை: கதைச்சுருக்கம் மற்றும் / அல்லது கதை முடிவு விவரங்கள், கீழே தரப்பட்டுள்ளன.

ஒரு கிராம மருத்துவமனையில் மருத்துவராக கண்ணன்(கணேசன்) வேலை பார்க்கிறான். அந்த கிராமத்துப் பெண்ணான ராதாவுக்கு(சுபாஷினி) கண்ணன் மேல் விருப்பம். ஆனால் அவள் மேல் ராஜன்(லத்தீப்) மோகம் கொள்கிறான். ராதாவின் எண்ணம் அறிந்த அவனுக்கு கண்ணனை பழி வாங்கவேண்டுமென்ற் எண்ணம் வருகிறது. ஒரு சந்தர்ப்பத்தில் ராஜனிடமிருந்து தப்புவதற்காக ராதா கண்ணனின் மருத்துவமனையில் அடைக்கலம் புகுகிறாள், அங்கே தவறுதலாக மயக்கமருந்தை ராதா குடிக்க, ராஜன் அவளைக் கெடுத்து விடுகிறான். பழி எதிபார்த்தது போலவே கண்ணன் மேல் விழுகிறது. நல்லகாலமாக ராஜன் குற்றத்தை ஒப்புக்கொள்ள, எல்லாம் சுபமாக முடிவடைகிறது.

[தொகு] குறிப்பு

  • வி. பி. கணேசன் ஒருவரே இலங்கையில் 3 தமிழ்த் திரைப்படங்களை தயாரித்தவர். அவர் மூன்றிலும் வெவ்வேறு இயக்குனர்கள், இசையமைப்பாளர்கள், கதாநாயகிகள், துணைக் கதாநாயகர்கள் என்று சந்தர்ப்பம் கொடுத்தார்.
  • அக்கால இந்தியப்படங்களில் சிலவேளைகளில் அரசியல் தலைவர்களின் மகாநாடுகள், இறுதி ஊர்வலங்கள் என்பனவற்றை இணத்துக் கொள்வதைப் போல, இத்திரைப்படத்தில் எஸ். ஜே. வி. செல்வநாயகம் அவர்களின் இறுதி ஊர்வலம் இணைக்கப்பட்டது.