ஆர். சிவலிங்கம்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
ஆர். சிவலிங்கம் (இணுவில், யாழ்ப்பாணம்) உதயணன் என்ற புனைபெயரில் ஏராளமான சிறுகதைகள், நாவல்களைப் படைத்தவர்.
இவருடைய இரண்டு நாவல்கள் 'வீரகேசரிப் பிரசுரங்கள்' வரிசையில் வெளியிடப்பட்டுள்ளன. சிறந்த மொழிபெயர்ப்பாளர். பின்லாந்தின் தேசியக் காவியமான கலேவலா என்ற பாடல் தொகுப்பு இவரால் 1994இல் மொழிபெயர்க்கப்பட்டது. பல வருடங்களாக பின்லாந்தில் வாழ்ந்து வரும் இவர், பின்னிஷ் மொழியுடனும் பின்னிஷ் கலாசாரத்துடனும் நன்கு பழக்கப்பட்டுவிட்டதால், பின்னிஷ்-கரேலிய மூலப் பிரதியிலிருந்து நேரடியாகத் தமிழில் மொழிபெயர்த்துத் தர முடிந்தது.
[தொகு] வெளியான நூல்கள்
- பொன்னான மலரல்லவோ (நாவல், வீரகேசரிப் பிரசுரம்)
- அந்தரங்க கீதம் (நாவல், வீரகேசரிப் பிரசுரம்)
- கலேவலா (மொழிபெயர்ப்புக் கவிநூல், 1994)