பேச்சு:பத்துக் கட்டளைகள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.

டெரென்ஸ், நான்காவது கட்டளையில் 4. பிதாவையும் மாதாவையும் சங்கித்திரு என்றால் என்ன பொருள்? பிதா மாதா என்பதை விட நல்ல தமிழ்ச்சொற்கள் இருப்பதை ஏன் பயன் படுத்துவதில்லை? தமிழர்களுக்குத் தமிழில் சொன்னால் தானே உள்ளத்தை சென்றடையும்? ஜி.யு. போப் அவர்கள் தமிழ் திருவாசகத்தைப் படித்து அப்படி உள் உருகினார் என்பது வரலாறு (வேற்று சமயத்தைச் சார்ந்தவராய் இருந்தும்). ஏன் என்று எண்ணிப்ப்பாருங்கள். நல்ல தமிழில் இருந்தால் கருத்துக்கள் ஆழப் பதியும். நல்ல கருத்துக்கள் எந்த சமயத்தைச் சார்ந்ததாய் இருந்தாலும், பற்றுதல் ஏற்படச் செய்யும். இங்கு சமயத்தில் பற்று ஏற்படுத்துவது கருத்தல்ல என்றாலும், கொடுக்கப்பட்டுள்ள கருத்துக்கள் நல்ல தமிழில் இருத்தல் வேண்டும் அல்லவா? விளங்கும் படியாகவும் இருக்க வேண்டும் அல்லவா?--C.R.Selvakumar 03:32, 1 ஆகஸ்ட் 2006 (UTC)செல்வா

செல்வா இந்த கட்டுரையை இன்னும் நான் முடிக்கவில்லை. உங்கள் கருத்துக்களை பார்த்து மாற்றம் செய்கிறேன். நான் இங்கே கொடுத்த பத்துக் கட்டளைகள் விக்கி பயனர் ஒருவர் கத்தோலிக்கம் என்னும் கட்டுரையில் இட்டவையாகும். சீர்த்திருத்த சபைகள் "உன் தகப்பனையும் உன் தாயையும் கனம்பண்ணுவாயாக" என்று பாவிக்கிறார்கள். நல்ல தமிழ் சொற்கள் தேடி சேர்க்கிறேன்.--டெரன்ஸ் 14:43, 1 ஆகஸ்ட் 2006 (UTC)