பெப்ரவரி 29
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
பெப்ரவரி 29 கிரிகோரியன் ஆண்டில் நெட்டாண்டு ஒன்றின் 60 ஆவது நாளாகும். ஆண்டு முடிவிற்கு மேலும் 306 நாட்கள் உள்ளன. பெப்ரவரி 29 வரும் ஒரு ஆண்டு நெட்டாண்டு என அழைக்கப்படுகிறது. இந்த நாள் நான்கு வருடங்களுக்கு ஒரு முறை நான்கால் வகுபடும் எண்ணிக்கையிலான ஆண்டுகளில் மட்டுமே (எடுத்துக்காட்டு: 2000, 2004, 2008 என்பன) வருகிறது. எனினும், நூற்றாண்டு ஆண்டுகளில் 400 ஆல் வகுபடாத நூற்றாண்டுகளான 1900, 2100 போன்றவை நெட்டாண்டுகளல்ல.
பொருளடக்கம் |
[தொகு] நிகழ்வுகள்
- 1960 - மொரொக்கோவில் இடம்பெற்ற நிலநடுக்கத்தில் 3,000 பேர் வரையில் கொல்லப்பட்டனர்.
- 1996 - பெருவைச் சேர்ந்த போயிங் 737 விமானம் விழுந்து நொருங்கியதில் 123 பயணிகள் இறந்தனர்.
[தொகு] பிறப்புகள்
- 1896 - மொரார்ஜி தேசாய், இந்தியப் பிரதமர் (இ. 1995)
- 1904 - ருக்மிணி தேவி அருண்டேல், பரத நாட்டியக் கலைஞர். (இ. 1986)