சு. வேலுப்பிள்ளை (சு. வே)
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
இலங்கையின் சிறப்புமிக்க உருவகக்கதை எழுத்தாளரும் நாடகாசிரியருமாவார்.(பி: 24.5.1921). ஒரு தமிழ்ப்பண்டிதர். பயிற்றப்பட்ட தமிழாசிரியராக 1946 முதல் 1981 வரை ஆசிரியப்பணி புரிந்தவர்.
பொருளடக்கம் |
[தொகு] சிறுகதைகள்
சு.வேயின் முதல் சிறுகதையான 'கிடைக்காத பலன்' 1943ல் ஈழகேசரியில் வெளியானது. சு.வே யின் சிறுகதைகள், 'மண் வாசனை', 'பால்காவடி', ஆகிய தலைப்புகளில் தொகுதிகளாக வெளிவந்தன. இவரது உருவகக்கதைகள் 1999ல் மித்ர வெளியீடாக தொகுப்பாக வெளிவந்தன.
[தொகு] நாடகத்துறை
1965ல் இலங்கை கலைக்கழகம் நடாத்திய நாடகப்போட்டியில் இவரது' வஞ்சி' என்ற ஓரங்க நாடகம் முதல் பரிசு பெற்றது. அடுத்த ஆண்டும் இவரது 'எழிலரசி' என்ற் முழுநீள நாடகம் முதல் பரிசு பெற்றது.
[தொகு] வானொலி நாடகங்கள்
1960ல் இலங்கை வானொலி நாடகப்போட்டியில் இவரது' மண் வாசனை'க்கு முதல் பரிசு கிடைத்தது. 1968ல் 'ஒருமை நெறித்தெய்வம்' என்ற நாடகம் பரிசு பெற்றது. சு.வே வானொலி கிராம சேவைக்கு பல வானொலித் தொடர் நாடகங்களையும் எழுதினார்.
- ஏட்டிலிருந்து (1964) - 14 வாரங்கள்
- கிராமராஜ்யம் (1964) - 32 வாரங்கள்
- பொன்னாச்சிக் குளம் (67-68) -97 வாரங்கள்
- நவயுகம் (1969)- 12 வாரங்கள்
[தொகு] வெளிவந்த நூல்கள்
- மண் வாசனை - (சிறுகதைத் தொகுதி)
- பாற் காவடி - சிறுகதைத் தொகுதி
- சு. வே. உருவகக் கதைகள்
- சிறுவர் கதை இலக்கியம்