பேச்சு:குமரிக்கண்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.

[தொகு] கற்பனைக் கண்டம்?

Lemuria is a myth. There is no scientific evidence to show that such a continent existed. This being the case, I don't think this article presents clearly that this is a myth/hypothetical land mass. --Madhu 15:45, 16 மார்ச் 2007 (UTC)

ஆம். இக்கருத்து தெளிவாகக் குறிப்பிடப்பட வேண்டும்.--Sivakumar \பேச்சு 15:52, 16 மார்ச் 2007 (UTC)

இக்கட்டுரையில் நூற்குறிப்புகளில் உள்ளன எனவே கூறியுள்ளேன் தவிர அவை அப்படி இருந்திருக்கலாம் எனக் கூறவில்லை. ஆனாலும் உணமையாக இருந்திருக்கலாம். இராமாயணத்தினை வைத்து ராமரையும். இராவணனையும் எந்த அளவிற்கு நம்ப முடியுமோ அதே அளவிற்கு இப்பண்டைத் தமிழ் இலக்கியங்களை நம்பலாம் என நினைக்கின்றேன். மேலும் சிலப்பதிகாரம் போன்ற நூல்கள் தமிழனின் நாடகம்,இலக்கணம் போன்ற பல தகவல்கள் உள்ளன. இவற்றினையும் போல் இக்குமரிக்கண்டத் தகவல் இருந்திருக்கலாம் அதனால் அது myth ஆக இருக்க முடியாது என நினைக்கின்றேன். ஆனாலும் இக்கட்டுரையில் காப்பியங்களில் கூறப்பட்டுள்ளன எனவே குறித்துள்ளேன். தவறுகள் இருந்தால் திருத்தவும்.--நிரோஜன் சக்திவேல் 16:06, 16 மார்ச் 2007 (UTC)

மேலும் இத்தகவல்களைக் கூறும் சிலப்பதிகாரம் போன்ற நூல்கள் வெறும் கற்பனையென்றால் இன்று நாம் உபயோகிக்கும் தமிழ் கூட வெறும் myth ஆகவே இருத்தல் வேண்டும் ஆனால் இன்று தமிழ் myth அல்ல.--நிரோஜன் சக்திவேல் 16:08, 16 மார்ச் 2007 (UTC)

இந்துப் பெருங்கடல், பசுபிக் கடல் ஆகிவற்றினால் பிரிக்கப்பட்டுள்ள நிலப்பகுதிகள் சிலவற்றில் வாழும் உயிரினங்களின் ஒற்றுமையை விளக்க முற்பட்ட 19 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த அறிஞர்கள் சிலர் இபகுதிகளை எல்லாம் இணைத்த பாரிய நிலப்பகுதியொன்று இருந்திருக்கக்கூடும் என்ற எடுகோள் ஒன்றை முன் வைத்தனர். இதற்கு லெமூரியா என்றும் பெயர் இடப்படது. பிற்காலத்தில் இந்தக் கொள்கை அடிபட்டுப் போய்விட்டது என்றே கூறப்படுகிறது. இது உண்மையாகக் கூடவே இருந்தாலும், இந்நிலம் கடல் கொள்ளப்பட்டுப் பல மில்லியன் ஆண்டுகளுக்கு மேலாகியிருக்க வேண்டும் என்பதே கருத்து. இது நிச்சயமாக மனிதன் தோன்றுவதற்கு முந்திய காலமாகும். எனவே சில தமிழ் இலக்கியங்களில் காணப்படும் குமரிக் கண்டம் என்பதை இதனுடன் இணைக்க முடியாது. குமரிக்கண்டம் என்ற தலைப்பில் கட்டுரை இருக்கலாம். ஆனால் குமரிக்கண்டமும் லெமூரியா என்பதும் ஒன்று என்பதற்கு ஆதாரம் கிடையாது. அதனால் இப்படிச் சிலர் முன்னர் கருதினார்கள் என எழுதலாமே ஒழிய அதுதான் உண்மை என்பது போல் எழுதுவது சரியல்ல. Mayooranathan 16:25, 16 மார்ச் 2007 (UTC)
நிரோ, இது myth-ஆ அல்லது உண்மையாகவே இருந்த ஒரு கண்டமா என நம்மால் கூற இயலாது. ஆனால், நமக்கு தெரிந்த, நம்மிடம் உள்ள ஆதாரங்களை கட்டுரையில் தந்து விட்டோமானால், இக்கட்டுரையைப் படிப்பவர்கள் அதிலிருந்து ஒரு 'informed conclusion'-க்கு வர முடியும். அந்த வகையில் இக்கட்டுரையில், இந்த இரு காப்பியங்களில் மட்டுமே குமரிக் கண்டத்தைப் பற்றி குறிப்புகள் உள்ளதென தெளிவாக குறிப்பிட வேண்டும்... அல்லது, இக்கண்டம் உண்மையில் இருந்தது என கூற எந்த 'scientific' ஆதாரமும் இல்லை என்பதை தெளிவாக குறிப்பிட்டால் நன்றாக இருக்கும் என்பதே என் கருத்து. Wikipedia is NOT the place for original research. இங்கு பார்க்கவும்[1]. --Madhu 16:28, 16 மார்ச் 2007 (UTC)
நிரோ, it looks much better now, நன்றி. ஒரே ஒரு suggestion - தற்போது கட்டுரையில், இலெமூரியாவும் குமரிக் கண்டமும் ஒன்று தான் என சிலப்பதிகாரத்திலும் மணிமேகலையிலும் குறிப்பிடப்பட்டுள்ளது என்பது... தவறல்லவா? இந்த வாக்கியத்தைத் திருத்தினால் கட்டுரை தெளிவாக இருக்கும். --Madhu 17:04, 16 மார்ச் 2007 (UTC)

நான் எழுதியது உங்களுக்குப் புரியவில்லை போலும். ஆங்கில ஆராய்ச்சியாளர்களின் குமரிக்கண்டத்தினைத் தான் ஆங்கில ஆராய்ச்சியாளர்கள் லெமூர் இனம் இருந்த காரணத்தினால் லெமூரியா என அழைத்தனர். மேலும், அவ்வாறு இவர்கள் அழைத்த இலெமூரியாக் கண்டம் என்பது தமிழ் இலக்கிய நூல்களில் தகவல்களின் உதவியுடன் எனக் கருதுகின்றேன்.இரண்டும் ஒரே பகுதியிலேயே உள்ளது.--நிரோஜன் சக்திவேல் 17:15, 16 மார்ச் 2007 (UTC)

நிரோஜன், நீங்கள் எழுதிய லெமூரியா என்ற கட்டுரையில் கூறப்பட்டுள்ளவை சரியான கருத்துக்கள். ஆனால் குமரிக் கண்டம் கட்டுரையில் தான் முரண்பாடு. உங்களுடைய லெமூரியா கட்டுரையிலேயே லெமூரியாக் கொள்கை கைவிடப் பட்டது பற்றியும் அவ்வாறு இருந்திருக்கக்கூடிய நிலம் 20 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னரே மூழ்கிவிட்டது என்று இருப்பதையும் கவனித்தீர்களா? தமிழ் இலக்கியங்கள் பேசுவது சில ஆயிரம் ஆண்டுகளைத் தான். மில்லியன் ஆண்டுக் கணக்குகள் எல்லாம் தமிழர் வரலாற்றுக்குப் பொருந்தி வராது. நிற்க. ஏறத்தாழ 2000 ஆண்டுகள் பழமை காட்டக்கூடிய சங்ககாலத் தமிழ் இலக்கியமான கலித்தொகையிலும், அதற்கும் பிற்பட்ட சிலப்பதிகாரத்திலும் தான் கடல்கோள் பற்றிய குறிப்புக்கள் வருகின்றன. கலித்தொகையில் இது பற்றி ஒரேயொரு வரி தான் உள்ளது.
மலிதிரையூர்ந்து தன்மண் கடல் வௌவலின்

இதன்படி பாண்டியனுடைய நிலம் கடல் கொள்ளப்பட்டது என்றே உள்ளது. குமரிக் கண்டம் பற்றிய கதை இல்லை.

சிலப்பதிகாரத்தில் பின்வரும் இரண்டு வரிகள் உள்ளன.

பஃறுளி ஆற்றுடன் பன்மலை அடுக்கத்துக்
குமரிக் கோடும் கொடுங்கடல் கொள்ள....

இங்கேயும் பஃறுளி ஆற்றையும், குமரி மலையையும் கடல் கொண்டதாகத் தான் உள்ளது. பிற்காலத்தில் 10 ஆம் நூற்றாண்டுக்குப் பின்னர் இவற்றுக்கு உரை எழுதியவர்கள் இதனுடன் தங்கள் கருத்துக்களையும் சேர்த்துப் பெருப்பித்துள்ளார்கள். எப்படிப் பார்த்தாலும், தமிழ் இலக்கியங்கள் கூறும் கடல் கொண்ட தென்னாடு மிகப்பெரிய நிலம் அல்ல. இதற்கும் 19 நூற்றாண்டில் கருதப்பட்ட லெமூரியாவுக்கும் மில்லியன் கணக்கான ஆண்டுகள் வேறுபாடு உண்டு. உங்கள் கட்டுரையில் இரண்டும் ஒன்று எனக் கருதப்பட்டுள்ளது. இது ஒரு முக்கிய முரண்பாடு. Mayooranathan 18:25, 16 மார்ச் 2007 (UTC)

[தொகு] விமர்சனங்கள்

"During the nineteenth century, Lemuria was imagined as a land that once bridged India and Africa but disappeared into the ocean millennia ago, much like Atlantis. A sustained meditation on a lost place from a lost time, this elegantly written book is the first to explore Lemuria's incarnations across cultures, from Victorian-era science to Euro-American occultism to colonial and postcolonial India. The Lost Land of Lemuria widens into a provocative exploration of the poetics and politics of loss to consider how this sentiment manifests itself in a fascination with vanished homelands, hidden civilizations, and forgotten peoples. More than a consideration of nostalgia, it shows how ideas once entertained but later discarded in the metropole can travel to the periphery--and can be appropriated by those seeking to construct a meaningful world within the disenchantment of modernity. Sumathi Ramaswamy ultimately reveals how loss itself has become a condition of modernity, compelling us to rethink the politics of imagination and creativity in our day." [2]


உண்மையினை விளக்கிய அனைவர்க்கும் நன்றிகள் தவறுகளைத் திருத்துவதற்குத் தானே விக்கிபீடியா.இனிமேல் தவறுகள் இல்லாதவண்ணம் கட்டுரைகளை உருவாக்க முயற்சி செய்கின்றேன்.--நிரோஜன் சக்திவேல் 19:45, 16 மார்ச் 2007 (UTC)

தவறுகளே இல்லாமல் எதையும் செய்யமுடியாது. சிலவேளைகளில் தவறுகளே பல விடயங்களை ஆராய்வதற்குத் தூண்டுகோல்களாக அமைகின்றன. முக்கியமானது என்னவெனில், யாராவது தவறென்று சுட்டிக்காட்டினால் அதை மீளாய்வு செய்து பார்க்கின்ற மனப்பக்குவம் இருக்கவேண்டும். அது விக்கிபீடியாவில் பங்களிக்கும் அனைவருக்குமே இருக்கிறது என்பதில் எனக்கு மகிழ்ச்சிதான். நன்றி நிரோஜன். Mayooranathan 20:28, 16 மார்ச் 2007 (UTC)


இக் கட்டுரையில் பல பிழையான கருத்துகள் உள்ளன. இதனை நான் திருத்தி எழுதுகிறேன். மது கூறியது போல, உள்ள செய்திகளைத் தருவதுதான் முறை. நம்பத் தக்க கருத்துகள் யாரேனும் தந்திருந்தால், அதனை யார் எங்கே கொடுத்துள்ளார்கள் என்று கொடுப்பதால் தவறில்லை. கட்டுரை எழுதுபவர் நடுநிலை கொள்ள வேண்டும். தான் கூறுவதற்கு வலுவான உறுதிகோள்கள் தரவேண்டும். தொல்காப்பியம் கி.மு 1000 என்பதும், லெமூரியா கண்டம்தான் தொல் தமிழகம் என்பதும், உலகமொழிகள் எல்லாம் தமிழில் இருந்தே தோன்றியது என்பதும் போதிய அளவு உறுதி பயக்கும் ஆய்வுகள் செய்யாமல் கூறுவது, சில முற்றிலும் தவறானது. கடல்கோள்களால் நிலப்பகுதி கடலுள் மூழ்கி இருக்கலாம் (~5000-10000 அல்லது 20,000-40,000 ஆண்டளவில் கூட இருக்கலாம்), ஆனால் அவைகளுக்கு போதிய அளவு வலு சேர்க்கும் அகழ்வாய்வு போன்ற சான்றுகள் வேண்டும். தமிழர் வாழ்ந்தற்கான தடயங்கள் வேண்டும். பொதுவாக தமிழில் புனைகதைகள் மிக மிகக் குறைவு (பிற தொல் இனங்களை ஒப்பிடும் பொழுது), மற்றும் பழம் புலவர்கள் உண்மையின் அடிப்படையிலேயே பதிவுகள் செய்தார்கள் என்று நம்பும் படியாக அவர்கள் கூற்றுகள் மெய்யாகிவருவதும் உண்மை எ.கா பறவை, விலங்கியல், நிலைத்திணை இயல் (தாவர இயல்) கருத்துக்கள், அப்பொழுதாண்ட அரசர்கள் பற்றியன. குமரிக் கண்டம் இருந்ததென்று தமிழ் இலக்கியம் கூறவில்லை, ஆனால் "பன்மலை அடுக்கத்துக் குமரிக் கோடும் கொடுங்கடல் கொள்ள" என்று சொல்வதாலும் (பிற பாடல்களாலும்) ஏதோ ஓரளவிற்குப் பெரிய நிலம் கடல்கோளால் அழிந்ததாகக் இலக்கியம் கூறுவதாகச் சொல்வதில் தவறில்லை. ஆஸ்திரேலியப் பழங்குடியினர் அங்கு எப்படிச் சென்றனர் (அல்லது அங்கு இருக்க நேர்ந்தது), முதலான பல கேள்விகள் உண்டு. அவர்களுடைய மரபணுக்கள் தென் இந்தியர்களுடன் தொடர்பில்லாமல் இருப்பதாகக் கண்டுள்ளனர். இதே போல இலங்கை வேட்டா (??) மக்களுக்கும் தொடர்பில்லை என்று கூறுகின்றனர். ஆப்பிரிக்கர்களுக்கும், நடுத்தரை மக்களோடு எண்ணப்படும் இந்திய/தென்னிந்தியர்களுக்கும் என்ன தொடர்புகள் Elamite என்னும் தொல் ஈரானியர்களுக்கும் தமிழர்களுக்கும் என்ன தொடர்பு, சிந்துவெளி நாகரித்திற்கும் தமிழர் நாகரித்திற்கு என்ன தொடர்பு என்று கேள்விகள் ஏராளம், ஆனால் உறுதிப்பாடு செய்யாமல் எதனையும் சொல்வது தவறாகும். --செல்வா 21:23, 16 மார்ச் 2007 (UTC)

நான் வழங்கிய தகவல்கள் அனைத்துமே பெருமைமிகு பாண்டியர்கள் வீரவரலாறு என்ற நூலில் குறிப்பிடப்பட்டிருந்தது. ஆகையால் அவ்வாறு எழுதிவிட்டேன். ஆனாலும் எது உண்மை எது பொய் என்று உறுதிப்படுத்த இயலாமல் போலவே அப்புத்தகத்திலும் வழங்கப்பட்டிருந்தது. மேலும். இன்றைய உண்மைகள் நாளை பொய்யாகலாம் பொய்கள் உண்மையாகலாம்.ஆனாலும் ஆதாரம் போதிய அளவு இல்லாத மேலும் ஆர்வமூட்டக்கூடிய இதுபோன்ற கட்டுரைகள் மிகவும் அவசியம் அதனால் செல்வா இதனை விரிவாக எழுதிகின்றீர்களாயின் நன்றாகவிருக்கும்.--நிரோஜன் சக்திவேல் 23:23, 16 மார்ச் 2007 (UTC)

விரிவாக்கியதற்கு செல்வாவிற்கு நன்றி--நிரோஜன் சக்திவேல் 01:05, 18 மார்ச் 2007 (UTC)