விஜயன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.

விஜயன் இலங்கையின் வரலாற்றுப் பதிவுள்ள முதலாவது அரச வம்சத்தின் முதல் மன்னன் ஆவான். இவன் ஆரிய இனத்தைச் சேர்ந்த இந்துவாகக் கருதப்படுகிறான்.

விஜயன் பதினெட்டு வயதை அடைந்த போது, அவனுடைய முறையற்ற நடத்தை காரணமாக, அவனது நண்பர்கள் 700 பேருடன் சேர்த்து இந்தியாவின் குஜராத் மாநிலத்திலிருந்து அவனுடைய தந்தையால் நாடுகடத்தப் பட்டான். அவர்கள் கப்பலில் செல்லும் போது புயல் வீசவே கப்பல் தம்பலகாமத்தில் தரை ஒதுங்கியது. விஜயன், அங்கே இயக்கர் தலைவி குவேனியைக் கண்டு அவளை மணந்து இலங்கையின் மன்னன் ஆனான். இவர்களுக்கு இரு குழந்தைகள் பிறந்தார்கள்.

ஆனால் பின்னர் பட்டம் கட்டுவதற்கு அரசகுமாரி தேவைப்படவே, குவேனியை துரத்திவிட்டு பாண்டி நாட்டிலிருந்து அரசகுமாரியை வருவித்து மணந்து முடிசூடிக் கொண்டான்.

இவன் கி.மு 543 தொடக்கம் கி.மு 504 வரை, 38 ஆண்டுகள் ஆட்சி செய்ததாக மகாவம்சம் கூறுகின்றது.

"http://ta.wikipedia.org../../../%E0%AE%B5/%E0%AE%BF/%E0%AE%9C/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D.html" இலிருந்து மீள்விக்கப்பட்டது