கொழும்பு மாவட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.

கொழும்பு இலங்கையின் மிகப் பெரிய நகரமும், வர்த்தக தலை நகரமுமாகும். இது இலங்கைத் தீவின் மேற்குக் கரையோரத்தில் அமைந்துள்ளது. இது இலங்கையின் பழமை வாய்ந்த நகரங்களில் ஒன்றல்ல. 16 ஆம் நூற்றாண்டுக்கு முந்திய காலப்பகுதியில் கோட்டே அரசின் ஒரு பகுதியாகவும், முஸ்லிம் வர்த்தகர்களின் ஒரு தளமாகவும் விளங்கிய இவ்விடம், 16 ஆம் நூற்றாண்டுக்குப் பின்னர் போத்துக்கேயரின் வரவுக்குப் பின்னரே முக்கியத்துவம் அடையத் தொடங்கியது.

கொழும்பில் அண்ணளவாக சிங்கள மக்களும், தமிழ் பேசும் மக்களும் சம அளவில் வாழ்கின்றனர்.

கொழும்பு என்ற பெயர் “கொள அம்ப தொட்ட” என்ற் சிங்கள மொழிப் பெயரிலிருந்து மறுவியதகும். (கொள-பச்சை,அம்ப-மா,தொட்ட-துறைமுகம்). இது இலங்கையில் அப்போதிருந்த போர்த்துக்கேயரால் கிறிஸ்தோபர் கொலம்பஸை நினைவுகூறும் வகையில் கொலோம்போ என மாற்றப்பட்டது. கொழும்பின் சனத்தொகை 2001ஆம் ஆண்டில் 377,396-ஆக காணப்பட்டது. (பாரிய கொழும்பு 2,234,289). கொழும்பு வட அகலாங்கு 6°54' கிழக்கு நெட்டாங்கு 79°50' இல் அமைந்துள்ளது.