பூபாளம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.

பூபாளம் 8வது மேளகர்த்தா இராகமாகும். நேத்ர என்றழைக்கப் படும் 2வது சக்கரத்தின் 2வது மேளமாகிய தோடியின் ஜன்னிய இராகம் ஆகும். விடியற்காலையில் பாடக் கூடிய இவ்விராகம் ஔடவ- ஔடவ இராகம் ஆகும். மிகப் பழமையான, மங்களகரமான இராகம்.

ஆரோகணம்: ஸ ரி12 ப த1 ஸ்
அவரோகணம்: ஸ் த1 ப க2 ரி1
  • இந்த இராகத்தில் ஷட்ஜம், சுத்த ரிஷபம் (ரி1), சாதாரண காந்தாரம் (க2), பஞ்சமம், சுத்த தைவதம் (த1) ஆகிய சுரங்கள் வருகின்றன.

[தொகு] இதர அம்சங்கள்

  • ஆரோகண அவரோகணத்தில் ம , நி விலக்கு (வர்ஜம்). இது உபாங்க இராகம் ஆகும்.
  • பண்டைத்தமிழ் இசையில் இந்த இராகத்திற்கு புறநீர்மைப் பண் என்று பெயர்.
  • ஜண்டை சுரக்கோர்வைகளும், தாட்டு சுரக்கோர்வைகளும் இவ்விராகத்திற்கு அழகைக் கொடுக்கின்றன.
  • பேராசிரியர் சாம்பமூர்த்தி அவர்கள் இந்த இராகத்தில் அந்தர காந்தாரம் தான் சற்று அசைவுடன் பேசுகிறது, பூர்வக் கிரந்தங்களில் இது தோடி மேளத்தின் ஜன்யமாக கூறப்பட்டிருந்தாலும் உண்மையில் மாயாமாளவகௌளை மேளத்தின் பிறப்பாகக் (ஜன்யமாகக்) கொள்வதே சிறந்தது என்று கூறுகின்றார்.

[தொகு] உருப்படிகள்

  1. தேவாரம் : "மங்கையற்கரசி" - ஆதி - திருஞானசம்பந்தர்.
  2. கிருதி : "அன்னை ஜானகி" - ஆதி - அருணாசலக் கவிராயர்.
  3. கிருதி : "தினமிதே நற்றினமே" - ஆதி - பாபநாசம் சிவன்.
  4. கிருதி : "சக்தி தனக்கே" - ஏகம் - சுப்பிரமணிய பாரதியார்.
  5. கிருதி : "திருப்பள்ளி எழுந்தருள்" - ஆதி - கவி குஞ்சர பாரதியார்.