ஆஹிரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.

ஆஹிரி என்பது கருநாடக இசையில் 14வது மேளகர்த்தா இராகமாகிய, "அக்னி" என்றழைக்கப் படும் 3வது சக்கரத்தின் 2 வது மேளமாகிய வகுளாபரணத்தில் பிறக்கும் இராகம் ஆகும். எப்போதும் பாடக் கூடிய இவ்விராகம் ஆரோகண- வக்ர சம்பூர்ண இராகம் ஆகும். இரவில் பாட ஏற்ற இவ்விராகம் பாஷாங்க இராகம் ஆகும். சோகச் சுவையை வெளிப்படுத்துகின்ற இராகம். "ஆஹிரியைக் காலையில் பாடினால் அன்னம் கிடைக்காது" என்பது ஒரு பழமொழி.


ஆரோகணம்: ஸ ரி1 ஸ க31 ப த1 நி2 ஸ்
அவரோகணம்: ஸ் நி2 தா1 ப மா13 ரி 1
  • இந்த இராகத்தில் ஷட்ஜம், சுத்த ரிஷபம் (ரி1), சாதாரண காந்தாரம் (க2), அந்தர காந்தாரம் (க3), சுத்த மத்திமம் (ம1), பஞ்சமம், சுத்த தைவதம் (த1), சதுஸ்ருதி தைவதம் (த2), காகலி நிஷாதம் (நி3) ஆகிய சுரங்கள் வருகின்றன.

[தொகு] இதர அம்சங்கள்

  • பண்டைத் தமிழிசையில் இந்த இராகத்திற்கு பண் பஞ்சமம் என்று பெயர்.
  • சிலர் இவ்விராகம் 8வது மேளமாகிய தோடியின் ஜன்யம் என்றும், வேறு சிலர் 20வது மேளமாகிய நடபைரவியின் ஜன்யம் என்றும் எண்ணுகின்றார்கள். வகுளாபரணம், தோடி, நடபைரவி ஆகிய மூன்று மேளங்களிலும் தோன்றும் சுரங்கள் இவ்விராகத்தில் வருவதை கவனிக்கவும்.
  • அந்தரகாந்தாரம் இந்த இராகத்திற்கு ஒரு முக்கியமான அம்சம் ஆகும். சுத்த ரிஷபம் கம்பித சுரமாகும்.
  • இவ்விராகத்தில் சௌக கால பிரயோகங்கள் அதிகமாகப் பிரயோகிக்கப்படுகின்றன. பழமையான, முக்கிய இசை நூல்களில் இந்த இராகத்தின் பெயர் காணப்படுகின்றது.
  • இந்த இராகத்தில் மூன்று அன்னிய சுரங்கள் வருகின்றன; பல நுட்ப சுருதிகள் தோன்றுகின்றன; ஆகையால் இது கவனமாகக் கையாளப்பட வேண்டிய இராகம் ஆகும்.

[தொகு] உருப்படிகள்

  1. கிருதி : "ஆதய சிறீ" - ஆதி - தியாகராஜ சுவாமிகள்.
  2. கமலாம்பா நவாவர்ணம் : "சிறீ கமலாம்பா" - திஸ்ர ஏகம் - முத்துஸ்வாமி தீட்சிதர்.
  3. நவரத்ன மாலிகை : "மாயம்மனி" - ஆதி - சியாமா சாஸ்திரிகள்.
  4. பதம் : "ராராரா" - திரிபுடை - ஷேத்ரக்ஞர்.
  5. கிருதி : "பரமபுருஷ" - மிஸ்ரசாபு - சுவாதித்திருநாள் மகாராஜா.
"http://ta.wikipedia.org../../../%E0%AE%86/%E0%AE%B9/%E0%AE%BF/%E0%AE%86%E0%AE%B9%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF.html" இலிருந்து மீள்விக்கப்பட்டது