ஆபோகி
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
ஆபோகி 22வது மேளகர்த்தா இராகமாகிய, "வேத" என்றழைக்கப் படும் 4வது சக்கரத்தின் 4 வது மேளமாகிய கரகரப்பிரியாவின் ஜன்ய இராகம் ஆகும். ப, நி என்னும் ஸ்வரங்கள் வர்ஜம் ஆதலால் இது ஒரு வர்ஜ இராகம் ஆகும். இது ஒரு ஔடவ இராகம். உபாங்க இராகம்.
ஆரோகணம்: | ஸ ரி2 க2 ம1 த2 ஸ் |
அவரோகணம்: | ஸ் த2 ம1 க2 ரி2 ஸ |
- இந்த இராகத்தில் ஷட்ஜம், சதுஸ்ருதி ரிஷபம் (ரி2), சாதாரண காந்தாரம் (க2), மத்திமம் (ம1) , சதுஸ்ருதி தைவதம் (த2), ஆகிய சுரங்கள் வருகின்றன.
[தொகு] இதர அம்சங்கள்
- இது ஒரு சர்வ ஸ்வர கமக வரிக ரத்தி இராகம் ஆகும்.
- இது திரிஸ்தாயி இராகம் ஆகும். மேலும் எப்போதும் பாடக் கூடியது.
- நீண்ட ஆலாபனைக்கு இடம் கொடுக்காத இராகம்..
- கச்சேரியின் ஆரம்பத்தில் பாடுவதற்குரிய இராகம். தியாகராஜ சுவாமிகளால் பிரசித்திக்கு வந்த இராகங்களில் இதுவும் ஒன்று.
- மூர்ச்சனாகர ஜன்ய இராகம். இதன் மத்திம மூர்ச்சனையே வலஜி இராகம் ஆகும்.
- கருணைச் சுவை கொண்ட இராகம்.
[தொகு] உருப்படிகள்
- வர்ணம் : "எவரி போதன" - ஆதி - பட்டணம் சுப்பிரமணிய அய்யர்.
- கீர்த்தனை : "சபாபதிக்கு" - ரூபகம் - கோபாலகிருஷ்ண பாரதியார்.
- கிருதி : "சேவிக்க வேண்டுமையா" - ஆதி - முத்துத் தாண்டவர்.
- கிருதி : "நன்னு போரவநீ" - ஆதி - தியாகராஜர்.
- கிருதி : "மனஸூநில்பசத்தி" - ஆதி - தியாகராஜர்.