வீரவில சர்வதேச விமான நிலையம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.

வீரவில சர்வதேச விமான நிலையம் இலங்கையி நிர்மான பணிகள் ஆரம்பிக்கப் பட்டுள்ள புதிய விமான நிலையமாகும். இது கட்டுமான வேலைகள் முடிவடையும் போது வீரவில இலங்கையின் இரண்டாவது பன்னாட்டு விமான நிலையமாக விளங்கும். இலங்கை அதிபராக மகிந்த பதவியேற்றதன் முதலாம் ஆண்டு நிறைவைக் குறிக்கும் நாளான நவம்பர் 19, 2006 அடிக்கல் நாட்டப்பட்டு ஆரம்பிக்கபட்டது[1].

இவ்விமானநிலையமானது 4 கிலோமீட்டர்கள் நீளமான ஓடுபாதை மற்றும் ஒரே நேரத்தில் 14 விமானங்களைத் தரிக்கும் வசதி போன்றவற்றைக் கொண்டிருக்கும். இதற்காக 125 மில்லியன் அமெரிக்க டாலர்களை இலங்கை அரசு செலவிடவுள்ளது [2]. இத்திட்டமானது 2009 இல் நிறைவடையும் என எதிர்பார்க்கப் படுகின்றது. இத்திட்டமானது நிறைவுறுகையில் இலங்கையில் மீண்டும் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு அடுத்ததாக இரண்டாவது விமானநிலையம் உருவாகும்.

[தொகு] உசாத்துணைகள்

  1. வீரவில சர்வதேச விமான நிலையம் டெய்லி மிரர் அணுகப்பட்டது நவம்பர் 29 2006 (ஆங்கிலத்தில்)
  2. வீரவிலவிலும் சர்வதேச விமான நிலையம் வீரகேசரி, அணுகப்பட்டது நவம்பர் 29, 2006 (தமிழில்)
ஏனைய மொழிகள்