கொன்றுண்ணிப் பறவைகள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.

செம்பழுப்பு ஃஆரிசுப் பருந்து
செம்பழுப்பு ஃஆரிசுப் பருந்து

கொன்றுண்ணிப் பறவைகள் என்பன எலி, முயல் போன்ற பாலூட்டி வகை விலங்குகளையும், கோழி, புறா போன்ற பிற பறவைகளையும் கொன்று தின்னும் பறவையினத்தைக் குறிக்கும். இப்பறவைகள் தம் வல்லுகிரால் (உகிர்=நகம்) தம் இரையைப் பற்றி, கூரிய நுனியுடைய அலகால் கிழித்து உண்ண வல்லன. இதில் பல்வேறு வகையான கழுகு, வல்லூறு,ஆந்தை போன்ற பறவைகள் அடங்கும்.