பேச்சு:சிங்களப் புத்தாண்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.

தமிழ் சிங்களப் புத்தாண்டு??? இரண்டும் தொடங்கும் தேதி ஒன்று என்றாலும் தமிழ்ப் புத்தாண்டு, சிங்களப் புத்தாண்டு என்று தனித்தனியாகச் சொல்வது தானே சரியாக இருக்கும்? சிங்கள ஆண்டுக் கணக்கு, மாதக் கணக்கு முறை அனைத்தும் தமிழ் முறையை ஒத்திருக்கிறதா?--ரவி 12:47, 14 ஏப்ரல் 2007 (UTC)

அது தெரியாது, ஆனால் ஒரே நாளிலேயே அமையும். ஒன்றாக சொல்வதுதான் சிறப்பு. இலங்கையில் ஒரு மரபும் கூட. விரும்பினால் தமிழ் புத்தாண்டு என்று ஒரு புதுக்கட்டுரை வரையலாம். --Natkeeran 12:51, 14 ஏப்ரல் 2007 (UTC)

தமிழ்ப் புத்தாண்டு என்ற பெயரில் ஒரு பக்கம் ஏற்கனவே உள்ளது. எனவே இக்கட்டுரை தேவையில்லை. இரண்டும் ஒரே நாளில் வருவதால் கலண்டர்களில், பத்திரிகைகளில், மற்றும் பொதுவாக சிங்கள, தமிழ்ப் புத்தாண்டு (comma வைக் கவனிக்க) என்று வசதிக்காகக் கூறுவார்கள். ஆனால் இரண்டும் ஒன்றல்ல. வித்தியாசமான முறைகளிலேயே இருவரும் கொண்டாடுவர். வேண்டுமானால் சிங்களப் புத்தாண்டு என்று தனியான கட்டுரை தொடங்கலாம்.--Kanags 13:07, 14 ஏப்ரல் 2007 (UTC)

கனக்ஸின் கருத்துடன் உடன்படுகிறேன்--ரவி 13:20, 14 ஏப்ரல் 2007 (UTC)

//காலையில் எழுந்து மருத்து நீர் வைத்து முழுகி, புத்தாடை அணிந்து, கிரிபத் அல்லது பொங்கலும் பிற பலகாரங்களும் செய்து, உற்றார் உறவுனருடன் பகிர்ந்து உண்டு களித்து இருப்பது மரபு//

சிங்களவர்களும் மருத்து நீர் வைப்பார்களா? கேள்விப்படவில்லை. சிங்களவர் வெள்ளை ஆடை அணிந்து புத்த கோயில்களுக்கு செல்வர். சிங்களவர் பின்பற்றும் முறையையும் தமிழர் பின்பற்றும் முறையையும் வேறு வேறாகக் குறிப்பிட வேண்டும். இக்கட்டுரையை அநுமதிப்பதானால் தலைப்பில் இலங்கைத் தமிழர் என்பது குறிப்பிட்டுக் காட்ட வேண்டும். அத்துடன் கட்டுரையில் இலங்கை என்று குறிப்பிடப்படவில்லை. இக்கட்டுரை இலங்கைக்கு மட்டுமே பொருந்தும். மலையாளிகளும் இதே நாளிலேயே புத்தாண்டு கொண்டாடுகிறார்கள் என்பதைக் கவனிக்கவும். அவர்களும் இதே முறையில் தான் புத்தாண்டைக் கொண்டாடுவார்கள்.--Kanags 13:47, 14 ஏப்ரல் 2007 (UTC)

மருத்து நீர்? கை விசேடம்?கிரிபத்? சிங்களவர் எல்லாரும் பௌத்தர்களா? பௌத்தர்கள் அல்லாதோர் இதைக் கொண்டாடுகிறார்களா? எப்படி கொண்டாடுகிறார்கள் என்பதைக் குறிக்க வேண்டும்--ரவி 14:18, 14 ஏப்ரல் 2007 (UTC)

சிங்களவரில் 75% மேலானவர் பௌத்தர்கள் கூறப்படுகின்றது.மற்றும் சிங்கள புத்தாண்டு கொண்டாடும் முறை என முக்கியமாக விகாரை செல்வது, புதுபானையில் சமைப்பது, வீடுகளுக்கு செல்வது, எண்ணை தேய்த்து முழுகுவது,றபான அடிப்பது விளையாட்டுபோட்டி வைப்பது அவுருது குமாரி எனும் அழகி போட்டி பற்றியெல்லாம என சில காட்சிகள தொலைக்காட்சியில் பார்ததுண்டு --கலாநிதி 17:08, 14 ஏப்ரல் 2007 (UTC)