ஜி. நாகராஜன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.

ஜி. நாகராஜன் (பி. மதுரை, இந்தியா). தமிழ்ச் சிறுகதை எழுத்தாளர். பாலியல் ஒடுக்குமுறை குறித்து தீவிர விவாதங்களை உருவாக்கும் எழுத்து நாகராஜனுடையது. கல்லூரிப் பேராசிரியராக வாழ்வைத் துவக்கினார். போதையின் பிடியில் அகப்பட்டு நாற்பது வயதிற்குள் இறந்துபோனார்.

இவரது கதைகள் வாழ்வின் போலித்தனத்தை, இழிவை விமர்சனம் செய்கின்றன. நிழல் உலகமாக இருந்து வரும்பாலியல் தொழிலாளர்களின் வாழ்வு இவரது படைப்புகள் எங்கும் உக்கிரமாக வெளிப்படுகின்றன.

முக்கியபடைப்புகள்: குறத்தி முடுக்கு, நாளை மற்றும் ஒரு நாளே.