கன இராகங்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.

கன இராகங்கள் எனப்படுபவை கருநாடக இசையில் தானம் (கனம்) அல்லது மத்யம காலம் பாடுவதால் அல்லது வாசிப்பதால் எளிதாக வெளிப்படும் இராகங்கள் ஆகும். கனராகங்கள் இரு வகைப்படும். அவை:

  • கனபஞ்சக இராகங்கள்
  • திவிதிய கனபஞ்சக இராகங்கள்

[தொகு] கனபஞ்சக இராகங்கள்

தானத்தினால் பிரகாசிக்கும் இராகங்கள் கனபஞ்சக இராகங்கள் எனப்படும். அவையாவன :

  1. நாட்டை
  2. கௌளை
  3. ஆரபி
  4. வராளி
  5. சிறீராகம்

இவ் ஐந்து இராகங்களிலும் நுட்ப சுருதிகள், கமகங்கள், அல்பத்துவ துர்லப ஸ்வரப் பிரயோகங்கள் முதலியன காணப்படும். இவ் ஐந்து கனராகங்களிலேயே தியாகராஜ சுவாமிகள் பஞ்சரத்ன கீர்த்தனைகளை இயற்றியுள்ளார்.

[தொகு] திவிதிய கனபஞ்சக இராகங்கள்

கனபஞ்சக இராகங்களுக்கு அடுத்தபடியாக முக்கியத்துவம் பெறும் ஐந்து இராகங்களும் திவிதிய கனபஞ்சக இராகங்கள் எனப்படும். அவையாவன :

  1. கேதாரகௌளை
  2. ரீதிகௌளை
  3. நாராயணகௌளை
  4. சாரங்கநாட
  5. பௌளி