தமிழ் உரைநூல் ஆசிரியர்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.

பல ஆண்டுகளுக்கு முன் பாடல் வடிவில் எழுதப்பட்ட தமிழ் நூல்களின் பொருளை உரைவடிவில் விரித்து எழுதியவர்கள் தமிழ் உரைநூல் ஆசிரியர்கள் ஆவர்.

மொழிகள் காலப் போக்கில் மாற்றம் அடைகின்றன. பழைய சொற்கள் வழக்கிழப்பதும், புதிய சொற்கள் தோன்றுவதும் இயல்பு. இவற்றைவிட இலக்கண மாற்றங்களும் ஏற்படுவதுண்டு. இதனால் ஒரு காலத்தில் ஆக்கப்பட்ட நூல்களைப் பல நூற்றாண்டுகளுக்குப் பின் வருவோர் புரிந்து கொள்ள முடியாமல் போய்விடுகிறது. இது மட்டுமன்றி குறிப்பிட்ட ஒரு காலத்தில் நூல்களை ஆக்குவதற்குப் பயன்பட்ட இலக்கிய வடிவம் பரவலாகப் புரிந்து கொள்வதற்கு ஏற்றது இல்லாமலும் போகக் கூடும். இதனால் காலத்துக்குக் காலம் இத்தகைய நூல்களுக்கு மக்கள் புரிந்து கொள்ளும் வகையில் உரைகள் எழுதப்படுவதும், மேலும் காலம் செல்ல அந்த உரைகளே புரிந்து கொள்ளப்படாது போகப் புதிய உரைகள் எழுதப்படுவது வழக்கமாக நிகழ்வதே.

இந்த அடிப்படையில் சுமார் 2000 ஆண்டுகளுக்கு மேற்பட்ட பழமை கொண்ட இலக்கியத்தைக் கொண்ட தமிழும் இதற்கு விதி விலக்கு அல்ல. சங்க காலத்திலும், அதன் பின்னர் சங்கம் மருவிய காலத்திலும் எழுதப்பட்ட நூல்கள் மொழியில் ஏற்பட்ட மாறுதல்களால் புரிந்து கொள்ளப்படாமல் போனது ஒரு புறம் இருக்கப் பா வடிவில் சுருக்கமாகச் சொல்லப்பட்ட விடயங்களை விரிவாக விளக்க வேண்டிய தேவையும் ஏற்பட்டதனால் பிற்காலங்களில் இவற்றுக்குப் பல உரை நூல்கள் எழுந்தன. இவ்வாறான உரை நூல்களை எழுதிய உரை ஆசிரியர்களின் பட்டியலைக் கீழே காண்க.


உரயாசிரியர் உரை எழுதிய நூல்கள்
இளம்பூரணர் தொல்காப்பியம்
சேனாவரையர் தொல்காப்பியம்
தெய்வச் சிலையார் தொல்காப்பியம்
நச்சினார்க்கினியர் தொல்காப்பியம்
கலித்தொகை
குறுந்தொகை
பத்துப்பாட்டு
சீவக சிந்தாமணி
மணக்குடவர் திருக்குறள்
பரிதி திருக்குறள்
பரிமேலழகர் திருக்குறள்
பரிப்பெருமாள் காலிங்கர்
காலிங்கர் திருக்குறள்
அரும்பத உரையாசிரியர் சிலப்பதிகாரம்
அடியார்க்கு நல்லார் சிலப்பதிகாரம்
மயிலை நாதர் நன்னூல்
சங்கர நமச்சிவாயர் நன்னூல்
சிவஞான முனிவர் நன்னூல்
ஆறுமுக நாவலர் நன்னூல்
குணசாகரர் யாப்பருங்கலம்
யாப்பருங்கலக் காரிகை