கோயம்புத்தூர் மாவட்டம்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
- இக்கட்டுரை கோயம்புத்தூர் மாவட்டத்தைப் பற்றியது. கோயம்புத்தூர் நகரைப் பற்றி அறிய, கோயம்புத்தூர் பக்கத்தைக் காணவும்.
கோயம்புத்தூர் மாவட்டம் | |
[[படிமம்:|240px]] கோயம்புத்தூர் மாவட்டம்:அமைந்த இடம் |
|
தலைநகரம் | கோயம்புத்தூர் |
மிகப்பெரிய நகரம் | கோயம்புத்தூர் |
மாவட்ட ஆட்சியர் |
[[]] |
ஆக்கப்பட்ட நாள் | |
பரப்பளவு | 7469 கி.மீ² (வது) |
மக்கள் தொகை (2001) அடர்த்தி |
42,71,856 (22வது) 572/கி.மீ² |
வட்டங்கள் | 9 |
ஒன்றியங்கள் | 19 |
நகராட்சிகள் | 59 |
கிராம பஞ்சாயத்துகள் | 389 |
சிறப்பு கிராம பஞ்சாயத்துகள் | |
கோயம்புத்தூர் மாவட்டம் இந்திய மாநிலமான தமிழ்நாட்டின் முப்பது மாவட்டங்களில் ஒன்றாகும். பொருளாதாரத்திலும், தொழிற்துறையிலும் முன்னேற்றமடைந்த தமிழக மாவட்டங்களில் இதுவும் ஒன்று. தமிழகத்தின் மூன்றாம் பெரிய நகரமான கோயம்புத்தூர் நகரம், இம்மாவட்டத்தின் தலைநகரம் ஆகும்.
பொருளடக்கம் |
[தொகு] வரலாறு
பழமை வாய்ந்த கொங்கு நாட்டின் ஒரு பகுதியாய் திகழ்ந்த இம்மாவட்டத்தில் பழங்குடியினர் வாழ்ந்து வந்தனர். இவர்களில் 'கோசர்' எனும் பழங்குடியினரின் தலைநகரமான 'கோசம்பத்தூர்' என்பதே பிற்காலத்தில் 'கோயம்புத்தூர்' என மருகி இருக்கக்கூடும் என்று தெரிகிறது.
பழங்குடியினரின் ஆதிக்கம் இவ்விடத்தில் வெகு காலம் நீடிக்கவில்லை. இராஷ்ட்ரகுடர்களிடம் இப்பகுதி சில காலம் இருந்து பின்னர் இராஜராஜ சோழன் காலத்தில், சோழர் கைக்கு மாறியது. சோழ அரசு வீழ்ச்சி அடைந்த பின் கொங்கு நாடு சாளுக்கியர்களாலும், பின்னர் பாண்டியர்களாலும் ஆளப்பட்டது. பாண்டியர்களின் ஆட்சியில் உள்நாட்டு பிரச்சனைகள் இருந்த போது, டெல்லி சுல்தான் தலையிட்டதனால் இப்பகுதி மதுரை சுல்தானின் கைக்கு மாறியது. இவர்களிடமிருந்து இப்பகுதியினை 1377-78-ஆம் ஆண்டு விஜயநகர பேரரசு கைப்பற்றியது. இதற்குப் பின் இப்பகுதியினை மதுரை நாயக்கர்கள் ஆண்டனர்.
[தொகு] புவியியல்
[தொகு] நதிகள்
பவானி, நொய்யல் மற்றும் அமராவதி ஆறுகள் இம்மாவட்டத்தில் பாய்கின்றன.
[தொகு] நிர்வாகம்
[தொகு] வட்டங்கள்
கோயம்புத்தூர் மாவட்டம் 9 வட்டங்களாக பிரிக்கப் படுகிறது.
- பொள்ளாச்சி
- கோயம்புத்தூர் (வடக்கு)
- அவினாசி
- பல்லடம்
- உடுமலைபேட்டை
- திருப்பூர்
- வால்பாறை
- கோயம்புத்தூர் (தெற்கு)
- மேட்டுப்பாளையம்
[தொகு] மக்கள் வகைப்பாடு
இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இம்மாவட்டத்தில் 42,71,856 மக்கள் வசிக்கின்றார்கள்.[1] இவர்களில் 51% ஆண்கள், 49% பெண்கள் ஆவார்கள். கோயம்புத்தூர் மாவட்ட மக்களின் சராசரி கல்வியறிவு 77% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 85%, பெண்களின் கல்வியறிவு 69% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. இம்மாவட்ட மக்கள் தொகையில் 10% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.
[தொகு] ஆதாரங்கள்
[தொகு] வெளி இணைப்புகள்
![]() |
தமிழ்நாடு
|
---|---|
தலைநகரம் | சென்னை |
மாவட்டங்கள் | ஈரோடு • கடலூர் • கரூர் • கன்னியாகுமரி •
காஞ்சிபுரம் • கிருஷ்ணகிரி • கோயம்புத்தூர் • சிவகங்கை • சென்னை • சேலம் • தஞ்சாவூர் • தர்மபுரி • திண்டுக்கல் • திருச்சிராப்பள்ளி • திருநெல்வேலி • திருவண்ணாமலை • திருவள்ளூர் • திருவாரூர் • தூத்துக்குடி • தேனி • நாகப்பட்டினம் • நாமக்கல் • நீலகிரி • புதுக்கோட்டை • பெரம்பலூர் • மதுரை • இராமநாதபுரம் • விருதுநகர் • விழுப்புரம் • வேலூர் |
முக்கிய நகரங்கள் | அம்பத்தூர் • ஆலந்தூர் • ஆவடி • ஈரோடு • கடலூர் • காஞ்சிபுரம் • கும்பகோணம் • கோயம்புத்தூர் • சென்னை • சேலம் • தஞ்சாவூர் • தாம்பரம் • திண்டுக்கல் • திருச்சிராப்பள்ளி • திருநெல்வேலி • திருப்பூர் • திருவண்ணாமலை • திருவொற்றியூர் • தூத்துக்குடி • நாகர்கோயில் • நெய்வேலி • பல்லாவரம் • புதுக்கோட்டை • மதுரை • இராஜபாளையம் • வேலூர் |