பிரமீள்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
பிரமீள் (20 ஏப்ரல், 1939 - 6 ஜனவரி, 1997) என்ற பெயரில் எழுதிய தருமு சிவராம், ஒரு தமிழ் எழுத்தாளர், கவிஞர் மற்றும் கலை, இலக்கியக் கட்டுரையாளர் ஆவார். கிழக்கு இலங்கை திருகோணமலையைச் சேர்ந்தவர். இவர் தர்மு அரூப் சிவராம், தர்மோ அபயிரூஹ்ப்ஜ் சிவராம் போன்ற பல புனை பெயர்களில் எழுதினார். எழுபதுகளின் ஆரம்பத்திலேயே இந்தியா சென்று விட்டார். பிறகு தம் பெரும்பாலான வாழ்நாளைச் சென்னையிலேயே கழித்தார். சி.சு.செல்லப்பாவின் எழுத்து பத்திரிகையில், தமது இருபதாவது வயதில் எழுதத் துவங்கிய பிரமீள், நவீன தமிழ்க் கவிதையுலகில் தனி அடையாளம் கொண்டவர். ஓவியம், சிற்பம், நாடகம், மொழியாக்கம், கட்டுரைகள் என விரிந்த தளங்களில் இயங்கிய பிரமீள், தமிழ் உரைநடை குறித்துக் கூர்மையான விமர்சனமும் அவதானிப்பும் கொண்டவர்.
பொருளடக்கம் |
[தொகு] படைப்புகள்
[தொகு] கவிதைத் தொகுதிகள்
- கண்ணாடியுள்ளிருந்து
- கைப்பிடியளவு கடன்
- மேல்நோக்கிய பயணம்
[தொகு] சிறுகதை தொகுப்பு
- லங்காபுரி ராஜா
[தொகு] நாவல்
- ஆயி