நெடுங்குடி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.

புதுக்கோட்டை மாவட்டத்தில் புகழ் பெற்ற திருக்கோயில்களில் ஒன்றாக விளங்குகிறது நெடுங்குடி பிரசன்ன நாயகி உடனுறை கைலாசநாதர் திருக்கோயில். காரைக்குடியில் இருந்து அறந்தாங்கி செல்லும் வழியில் கீழாநிலைக்கோட்டையிலிருந்து இரண்டரை கிலோமீட்டர் மேற்கில் உள்ளது. இவ்வாலயத்தைத் தென்கயிலை என்றே இம்மாவட்டத்தில் மட்டுமின்றி, வெளி மாவட்டங்களிலும் இருந்து வரும் பக்தர்களும் அழைக்கின்றனர்.

[தொகு] புராணம்

அசுர சகோதரர்கள் இருவரின் விருப்பத்திற்கிணங்க, கைலாசநாதர் காசிநாதர் என்று இரு வடிவிலும் சிவன் மகிழ்வுடன் வசிப்பதாகச் சொல்கிறது தலபுராணம்.

[தொகு] அருகில் உள்ள முக்கிய இடங்கள்

புதுக்கோட்டை, அறந்தாங்கி, காரைக்குடி, திருமயம்