இந்தியாவிலுள்ள பெருநகரங்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.

தில்லி, மும்பை, கொல்கத்தா, சென்னை, பெங்களூர், மற்றும் ஹைதராபாத் போன்றவை இந்தியாவிலுள்ள சில முக்கியமான மாநகரங்களாகும். போக்குவரத்து நெரிசல், சுற்றுச்சூழல் மாசு, தண்ணீர் பற்றாக்குறை போன்றவை இந்நகரங்கள் சந்திக்கும் பொதுவான இடையூறுகளாகும்.

இவற்றுள் மும்பை நாட்டின் பொருளாதாரத் தலைநகரமாக விளங்குகிறது. சென்னை, பெங்களூர் தகவல் தொழில்நுட்பத்துறையில் முன்னணியில் விளங்குகின்றன.