தெய்வச் சிலையார்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
தெய்வச் சிலையார் தொல்காப்பியச் சொல்லதிகாரத்துக்கு உரை எழுதியவர் ஆவார். இவரது காலம் சரியாகத் தெரியவில்லை எனினும், தொல்காப்பியத்துக்கு உரை எழுதிய இன்னொரு உரையாசிரியரான சேனாவரையருக்குப் பிற்பட்டவர் என்பதற்குச் சான்றுகள் உள்ளன. இவர் வடமொழியிலும் புலமை மிக்கவர் எனக் கருதப்படுகின்றது.