தமிழ் இலக்கியம்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
தமிழ் இலக்கியம் | |
---|---|
சங்க இலக்கியம் | |
அகத்தியம் | தொல்காப்பியம் |
பதினெண் மேற்கணக்கு | |
எட்டுத்தொகை | |
ஐங்குறுநூறு | அகநானூறு |
புறநானூறு | கலித்தொகை |
குறுந்தொகை | நற்றிணை |
பரிபாடல் | பதிற்றுப்பத்து |
பத்துப்பாட்டு | |
திருமுருகாற்றுப்படை | குறிஞ்சிப் பாட்டு |
மலைபடுகடாம் | மதுரைக் காஞ்சி |
முல்லைப்பாட்டு | நெடுநல்வாடை |
பட்டினப் பாலை | பெரும்பாணாற்றுப்படை |
பொருநராற்றுப்படை | சிறுபாணாற்றுப்படை |
பதினெண் கீழ்க்கணக்கு | |
நாலடியார் | நான்மணிக்கடிகை |
இன்னா நாற்பது | இனியவை நாற்பது |
கார் நாற்பது | களவழி நாற்பது |
ஐந்திணை ஐம்பது | திணைமொழி ஐம்பது |
ஐந்திணை எழுபது | திணைமாலை நூற்றைம்பது |
திருக்குறள் | திரிகடுகம் |
ஆசாரக்கோவை | பழமொழி நானூறு |
சிறுபஞ்சமூலம் | முதுமொழிக்காஞ்சி |
ஏலாதி | கைந்நிலை |
சங்ககாலப் பண்பாடு | |
தமிழ்ச் சங்கம் | தமிழ் இலக்கியம் |
பண்டைத் தமிழ் இசை | சங்ககால நிலத்திணைகள் |
சங்க இலக்கியங்களில் தமிழர் வரலாறு | |
edit |
கிடைக்கக்கூடிய உறுதியான சான்றுகளின் அடிப்படையில், தமிழ் இலக்கியம் இரண்டாயிரம் ஆண்டுக்குக் குறையாத பழமை வாய்ந்தது எனக் கூறமுடியும். தற்போது கிடைக்கும் தமிழ் இலக்கிய நூல்களிற் சில கிறீஸ்து சகாப்தத்துக்கு முற்பட்டவை என்பது சில ஆராய்ச்சியாளர்கள் முடிபு.
தமிழ் இலக்கியங்களை அவை எழுதப்பட்ட காலத்தின் அடிப்படையில் கீழ்க்கண்டவாறு பிரிப்பர்.
- சங்க இலக்கியம் - வரலாற்றுக்கு முற்பட்ட காலம் முதல் கடைச்சங்க காலம் (சுமார் கி.பி. மூன்றாம் நூற்றாண்டு) வரை.
- இடைக்கால இலக்கியம் - இவற்றில் பெரும்பாலும் சிற்றிலக்கியங்கள், பக்தி மார்க்க நூல்கள்
- இக்கால இலக்கியம் - பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் இருந்து தற்காலம் வரை.
தமிழ் இலக்கிய மரபுகளின்படி, தற்போது கிடைக்கக்கூடிய சான்றுகள் காட்டுகின்ற காலக் கணக்குகளுக்கு பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே தமிழ் இலக்கிய வளம் உள்ள மொழியாக இருந்ததாகக் கூறப்படுகின்றது. தொல்பழங்காலத்தில், அக்காலப் பாண்டிய அரசர்களின் ஆதரவில், ஒன்றுக்குப்பின் ஒன்றாக மூன்று தமிழ்ச்சங்கங்கள் தமிழாராய்ந்ததாகவும், அக்காலத்தில் தமிழிலக்கியங்கள் பல இயற்றப்பட்டதாகவும் நம்பப்படுகிறது. முதற்சங்கம், இடைச்சங்கம், கடைச்சங்கம் என அழைக்கப்படும் இம் முச்சங்கங்கள் சார்ந்த இலக்கியங்களிலே கடைச்சங்க நூல்கள் மட்டுமே தற்போது கிடைப்பதாகச் சொல்லுகிறார்கள். முன்னிரண்டு சங்கங்களையும் சேர்ந்த நூல்கள், அக்காலங்களில் ஏற்பட்ட கடல்கோள்களின்போது, நாட்டின் பெரும்பகுதியுடன் சேர்ந்து அழிந்து போனதாம். எனினும், முதலிரு சங்கங்கள் இருந்தது பற்றியோ அல்லது அக்காலத்தில் இலக்கியங்கள் இருந்தது பற்றியோ போதிய உறுதியான ஆதாரங்கள் எதுவுமில்லை.
[தொகு] தமிழ் இலக்கியம் - நவீன காலம்
18ம், 19ம் நூற்றாண்டு காலப்பகுதியில் தமிழ்நாட்டில் அரசியல், மதம், கல்வி போன்ற தளங்களில் பல விதமான மாற்றங்கள் இடம்பெற்றன. குன்றக்குடி, திருவாடுதுறை, திருப்பானந்தால் போன்ற சைவ மடங்களி்ன் ஆதரவாலும், சில புலவர் பரம்பரையினரின் முயற்சியாலும் தமிழ் இலக்கிய செல்வங்கள், விழுமியங்கள் அழிவுறுவது காலத்தால் தடுக்கப்பட்டது. இதுகாறும் அன்னிய ஆட்சியாலும், அவர்களுக்கு முட்டு கொடுப்பவர்களாலும், மேற்கத்திய கலாச்சாரத்தின் பாதிப்பாலும் ஆங்கில மொழியின் செல்வாக்காலும் நசிவடைந்து கிடந்த தமிழ் மொழி, தமிழ் இலக்கியம் என்பன அச்சியந்திரங்களின் வருகையும், நிலையான ஆங்கிலேயர் ஆட்சியும், பின்னர் ஏற்பட்ட சுதந்திர இந்திய ஆட்சியும் மதசுதந்திரமும், கல்வி முறையில் ஏற்பட்ட தோற்ற வளர்ச்சி, நவீன சிந்தனைகளின் உருவாக்கம் போன்ற காரணிகளால் இக் காலகட்டத்தில் பெரிதும் வளர்ச்சியுற்றது. இக்காலகட்டத்தில் இடம்பெற்ற முக்கிய மாற்றமாக குறிப்பிடத்தக்க விடயங்களாவன:
* சங்க இலக்கியங்கள் மீளக் கண்டுபிடிக்கப்பட்டதும் அச்சேறியதும். * உரைநடையில் எழுதுவது அறிமுகமானது. (19ஆம் நூற்றாண்டின் கடைப்பகுதி) * புதுக்கவிதை எனும் புதுப்பாணி தோற்றம் பெற்றது. (20ஆம் நூற்றாண்டின் முற்பகுதி) * மணிப்பிரவாக நடை ஒழிந்தது.(20ஆம் நூற்றாண்டின் பிற்பகுதி)
அச்சியந்திரங்களின் வருகையால் ஏடுகளில் மட்டும் இருந்த தமிழ் இலக்கியங்கள் உ. வே. சாமிநாதையர்,ஆறுமுக நாவலர், சி. வை. தாமோதரம்பிள்ளை போன்றோரின் மீள் கண்டுபிடிப்பாலும்,அயராத உழைப்பாலும் அச்சாக வெளிவந்தது.
[தொகு] இவற்றையும் பார்க்கவும்
- தமிழ் உரை நூல்கள்
- தமிழ் உரைநூல் ஆசிரியர்கள்