பேச்சு:சமயக் கட்டுரைகள் எழுதல் கையேடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.

[தொகு] குறிப்புகள்

  • சமயக் கட்டுரைகள் எழுதும்பொழுது சமய நம்பிக்கையுடையோரின் மனதை நோகடிக்காமல் இருப்பது முக்கியம்.
  • அதேவேளை கலைக்களஞ்சியத்தின் முக்கிய நோக்கம் ஆதாரபூர்வமான தகவல்களை முன்வைப்பதுதான்.
  • நம்பிக்கையை அடிப்படையாக கொண்ட சமயக் கருத்துக்களை ஆதாரபூர்வமான முறையில் எப்படி எழுதுவது என்பதுவே சமயக் கட்டுரைகளில் இருக்கும் சிக்கல்.
  • சமயக் கட்டுரைகளை பரப்புரையாக எழுதுதல் முற்றாக தவிர்க்கப்படவேண்டும்.
  • சமயக் கட்டுரைகளை எழுதும் பொழுது பகுத்தறிவுக்கு தெளிவாக மூடநம்பிக்கைகள் என்று தெரிபவற்றை தவிர்க்கலாம், அல்லது அவை மூடநம்பிக்கைகள் என்பதையும் அல்லது என்ற பார்வையையும் சேர்த்தல் அவசியம்.
  • சமயக் கருத்துக்கள் மனிதனால் உருவாக்கப்பட்டவையா? அல்லது கடவுளால் மனிதனுக்கு தரப்பட்டவையா? இந்த விடயத்தை தேவைப்படும் இடங்களில் வேறுபடுத்தி காட்டுதல் நன்று.
  • நடைமுறைச் சமயம் எதிர் கருத்தியல் சமயம்?
  • "அற்புத நிகழ்சிகளுக்கு" நூல்களை விட பிற ஆதாரங்கள் உண்டா?
  • "உண்மைகள்" என்று தரும் விடயங்களுக்கு சமய நூல்களைத் தவிர வேறு ஆதாரங்கள் இல்லையென்றால், அவை "சமய நம்பிக்கைகள்/உண்மைகள்" என்று தருதல் நன்று.
  • புனிதப்படுத்தல் தவிர்க்கப்படுதல் நன்று.
  • சமயக் கருத்துக்களுக்கும் அறிவியற் கோட்பாடுகளுக்கும் காணப்படும் முரண்பாடுகள் தெளிவாக சுட்டிக்காட்டப்படல் வேண்டும்.

--Natkeeran 01:21, 29 டிசம்பர் 2006 (UTC)