கொங்கு நாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.

கொங்கு என்ற சொல்லுக்கு தேன், பூந்தாது என்று பொருள்.


[தொகு] கொங்கு நாடு

கொங்கு நாடு என்பது தமிழகத்தின் மேற்கே அமைந்த பகுதி. கோவை, ஈரோடு, சேலம், நாமக்கல் மற்றும் கரூர் மாவட்டங்களோடு பழனி பகுதியையும் மைசூர் பகுதியையும் உள்ளடக்கியது.

தற்போது கொங்கு என்று சொன்னாலே மக்கள் நினைவுக்கு வருவது கொங்கு மண்டலத்தின் பகுதியான கோவை மற்றும் அப்பகுதி மக்களின் தமிழ்.

கொங்கு நாடு தனி ஒரு அரசாக இருந்ததில்லை, இப்பகுதியானது பல்வேறு கால கட்டங்களில் சேர, சோழ, பாண்டிய அரசுகளின் கீழும் பிற்காலத்தில் விசய நகர & மைசூர் அரசுகளின் கீழும் இருந்து பின் கடைசியாக பரங்கையர்களின் (பிரிட்டானிய அரசு) கீழ் வந்தது.

விவசாயமே முதன்மையான தொழில. பவானி, அமராவதி ஆகிய காவிரியின் துணையாறுகள் கொங்கு மண்டலத்தின் வழியாக சென்று காவிரியுடன் கலக்கிறது.

கொங்கு பகுதியின் விவசாய குடிகள் வேளாளர்கள், அவர்கள் கொங்கு வேளாளர்கள் என்று அறியப்படுவார்கள். கொங்கு வேளாளர்களை கவுண்டர் என்றும் அழைப்பர்.

[தொகு] கொங்கு தமிழ்

கொங்கு நாட்டு மக்கள் பேசும் தமிழ் கொங்கு தமிழ் என்று அழைக்கப்படுகிறது. தமிழின் சிறப்பு 'ழ' என்பது போல் கொங்கு தமிழின் சிறப்பு 'ற' & 'ங்'. 'என்னடா' என்பதை 'என்றா' என்பார்கள். மரியாதை கொடுத்து பேசும் தமிழ் கொங்கு தமிழ். என்னங்க, சொல்லுங்க, வாங்க, போங்க என்று எதிலும் 'ங்க' போட்டு மரியாதையாக பேசுவார்கள். பெரியவர்களிடம் பேசும் போது 'ங்க' என்பதற்கு பதில் 'ங்' போட்டும் பேசுவார்கள். சொல்லுங், வாங், போங், சரிங் , இல்லீங் என்று 'க' வை சொல்லாமல் முழுங்கி விடுவார்கள்.

கொங்கு பகுதியில் புழங்கும் சில சொற்கள் மற்றும் அதற்கான பொருள்.

  1. எச்சு - அதிகம்.
  2. ஒப்புட்டு - போளி
  3. சிலுவாடு - சிறு சேமிப்பு
  4. நோக்காடு - நோய்
  5. ஒடக்கான் - ஓணான்
  6. பொடக்காலி - புழக்கடை
  7. கட்டுத்தரை - மாட்டுத் தொழுவம்
  8. அட்டாரி, அட்டாலி - பரண்
  9. தாரை - பாதை
  10. அப்பச்சி , அப்புச்சி- தாய்வழி தாத்தா
  11. அம்மாயி- தாய்வழி பாட்டி
  12. எகத்தாளம் - திமிரு/ நக்கல்
  13. மலகாயிதம் - பாலிதீன் காகிதம்
  14. ஒறம்பற - விருந்தினர்
  15. தொலாவு - தேடு
  16. பொடனி - பின்கழுத்து
  17. நோம்பி - திருவிழா
  18. பொட்டாட்டம் - அமைதியாக இருத்தல்