பொன்னியின் செல்வன்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
பொன்னியின் செல்வன், கல்கி எழுதிய புகழ் பெற்ற தமிழ் புதினமாகும். 1950 - 1955 ஆண்டு வரை கல்கி வார இதழில் தொடர்கதையாக வெளியிடப்பட்டது. இப் புதினத்துக்குக் கிடைத்த மக்கள் ஆதரவு காரணமாகத் தொடர்ந்தும் பல்வேறு காலகட்டங்களில் இதே புதினத்தைக் கல்கி இதழ் தொடராக வெளியிட்டது. தவிர தனி நூலாகவும் வெளியிடப்பட்டுப் பல பதிப்புக்களைக் கண்டுள்ளது. கி.பி. 1000 ஆண்டு வாக்கில் இருந்த சோழ சாம்ராஜ்ஜியத்தை அடிப்படையாகக் கொண்டு இந்த வரலாற்றுப் புதினம் எழுதப்பட்டிருக்கிறது. பொன்னியின் செல்வன், பல்வேறு நாடகக் குழுக்களால் நாடகமாகவும் அரங்கேற்றப்பட்டுள்ளது.
இப் புதினம், புது வெள்ளம், சுழல்காற்று, கொலைவாள், மணிமகுடம், தியாக சிகரம் என 5 பாகங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. மொத்தமாக 300க்கு மேற்பட்ட அத்தியாயங்களைக் கொண்டது.
பொருளடக்கம் |
[தொகு] கதையின் வரலாற்றுப் பின்னணி
[தொகு] முக்கிய பாத்திரங்கள்
- வந்தியத்தேவன்
- குந்தவை
- அருள்மொழிவர்மன்
- நந்தினி
- ஆழ்வார்க்கடியான் நம்பி
- அநிருத்தப் ப்ரும்மராயர்
- செம்பியன் மாதேவி
- வானதி
- சுந்தர சோழர்
- பழுவேட்டரையர்
[தொகு] தமிழ்ப் புதின வரலாற்றில் இதன் பங்கு
இந்த நூல் தமிழில் வரலாற்று புதினங்களுக்கு ஒரு முன்னோடியாகவே அமைந்ததென்று சொன்னால், அது சிறிதும் மிகை ஆகாது.
இக்கதையின் முடிவுரையில், கல்கி குறிப்பிட்டு இருப்பது போல், விக்ரமன், சாண்டில்யன் போன்றவர்கள் தமிழ் வரலாற்றை புதினங்களாக்கிக் கொடுக்க முயன்று இருக்கிறார்கள்.
எனினும் பொன்னியின் செல்வனுக்கு இணையாக இன்று வரை ஒரு புதினமும் சிறப்பாக வரவில்லை என்ற பரவலான அபிப்பிராயம் உள்ளது.
[தொகு] இவற்றையும் பார்க்கவும்
[தொகு] வெளியிணைப்புகள்
- பொன்னியின் செல்வன் (தமிழில் TSCII வடிவில்)
- பொன்னியின் செல்வன் (Unicode வடிவில்)
- பொன்னியின் செல்வன்(PDF வடிவில்)