டெங்கு காய்ச்சல்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
டெங்கு காய்ச்சல் மனிதர்களிடையே தீ நுண்மங்களால் ஏற்படும் ஒரு நோய் ஆகும். இது கொசுக்களால் பரவுகிறது. இந்நோய் வந்தால் கடும்காய்ச்சலும் கடுமையான மூட்டு வலியும் தசை வலியும் ஏற்படும். இந்நோய் 200 ஆண்டுகளுக்கு முன்பே கண்டறியப்பட்டுள்ளது.
பொருளடக்கம் |
[தொகு] நோய் பரவும் முறை
தீ நுண்மத்தால் பாதிக்கப்பட்ட ஏடிஸ் (Aedes) வகைக் கொசுக்களால் (இலங்கை வழக்கு: நுளம்பு) இந்நோய் பரவுகிறது. ஆனால் இது ஒருவரிடம் இருந்து மற்றொரு இன்னொருவருக்குப் பரவுவதில்லை. நோய் பாதித்தவரை கடித்த கொசு மற்றொருவரை கடிப்பதன் மூலம் இந்நோய் பரவுகிறது. இக்கொசுக்கள் பொதுவாக பகலிலேயே மனிதர்களைக் கடிக்கின்றன. பொதுவாக விடியற்காலையிலும் பிற்பகலிலும் இக்கொசு கடிக்கின்றது.
[தொகு] நோயின் அறிகுறிகள்
- நல்ல காய்ச்சல்
- கடும் தலைவலி
- கடுமையான மூட்டு மற்றும் தசை வலி
- வாந்தி மற்றும் அரிப்பு
[தொகு] பண்டுவ (மருத்துவ) முறை
நோய்க்கான குறிப்பிட்ட மருந்து இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை. எனினும் பெரும்பாலும் இந்நோய் இரண்டு வாரங்களில் குணமாகி விடுகிறது. நல்ல ஓய்வு, நிறைய நீர்ம உணவு உட்கொள்ளுதல், காய்ச்சலுக்குத் தகுந்த மருந்து உட்கொள்தல் போன்றவை நோயின் கடுமையைக் குறைக்க உதவும்.
[தொகு] தடுப்பு முறைகள்
கொசு கடிக்காமல் பாதுகாத்துக்கொள்ளல், கொசு உருவாகாமல் தடுக்க சுற்றுப்புறத்தைத் தூய்மையாக வைத்துக்கொள்தல் போன்றவை இந்நோயைத் தடுக்க உதவும்.