திருச்செம்பொன்பள்ளி
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
திருச்செம்பொன்பள்ளி (செம்பனார்கோயில் சொர்ணபுரீஸ்வரர் கோயில்) பாடல் பெற்ற தலங்களில் ஒன்றாகும். சம்பந்தர், அப்பர் பாடல் பெற்ற இத்தலம் நாகப்பட்டினம் மாவட்டம் மயிலாடுதுறை நகரின் அண்மையில் அமைந்துள்ளது. தாட்சாயணிக்கு அருள் கிடைத்ததும் வீரபத்திரர் தோன்றியதும் இத்தலத்தில் எனப்படுகிறது. இத்தலத்தில் இந்திரன் விருத்திராசுரனைக் கொல்ல வச்சிராயுதம் பெற்றான் என்பதும் தொன்நம்பிக்கை.