கடப்பா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.

கடப்பா இந்தியாவின் ஆந்திர மாநிலத்திலுள்ள ஒரு மாவட்டத்தின் பெயரும் தலைநகரின் பெயரும் ஆகும். இது ஆந்திராவின் ராயலசீமா பகுதியில் உள்ளது. கடப்பா ஆந்திரப்பிரதேசத்தின் தென்மத்தியப் பகுதியில் அமைந்துள்ளது. இது பென்னா ஆற்றின் தெற்கே 8 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது.

[தொகு] புவியியல் கூறுகள்

இதன் பரப்பளவு 15,359 ச.கி.மீ. ஆகும். மக்கள் தொகை: 2001 ஆம் ஆண்டு கணக்கெடுப்பின் படி 25.73 இலட்சம் தோராயமாக.

[தொகு] வரலாறு

பதினொன்றாம் நூற்றாண்டில் இருந்து பதினைந்தாம் நூற்றாண்டு வரை இது சோழமண்டலத்தின் ஒரு பகுதியாக இருந்தது. பின்னர் 1565-இல் முகலாயர்கள் இதைக் கைப்பற்றினர். 1800 முதல் ஆங்கிலேயர்களின் கட்டுப்பாட்டில் இருந்தது.

புஷ்பகிரி, ரேணிகுண்டா, மற்றும் திருப்பதி இதன் அண்டை நகரங்கள் ஆகும்.

"http://ta.wikipedia.org../../../%E0%AE%95/%E0%AE%9F/%E0%AE%AA/%E0%AE%95%E0%AE%9F%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE.html" இலிருந்து மீள்விக்கப்பட்டது