தென்றலும் புயலும்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
தென்றலும் புயலும் | |
இயக்குனர் | எம். ஏ. கபூர் |
---|---|
தயாரிப்பாளர் | மருத்துவர் எஸ். ஆர். வேதநாயகம் |
திரைக்கதை | எஸ். ஆர். வேதநாயகம் |
நடிப்பு | சிவபாதவிருதையர் ஹெலன்குமாரி சாம்பசிவம் எஸ். ஆர். வேதநாயகம் சித்தி அமரசிங்கம் கே. ஏ. ஜவாஹர் டீன் குமார் செல்வம் பெர்னாண்டோ சந்திரகலா எஸ். என். தனரட்னம் ஜோபு நஷீர் |
இசையமைப்பு | ரீ. பத்மநாதன் |
ஒளிப்பதிவு | எம். ஏ. கபூர் |
படத்தொகுப்பு | அலிமான் |
வினியோகம் | ராஜேஸ்வரி பிலிம்ஸ் |
வெளியீடு | 1978 |
நாடு | இலங்கை |
மொழி | தமிழ் |
1978ல் இலங்கையில் திரையிடப்பட்ட 6 ஈழத்து தமிழ்த் திரைப்படங்களில் இதுவுமொன்று. திருகோணமலையைச் சேர்ந்த மருத்துவர் எஸ். ஆர். வேதநாயகம் தான் பலமுறை மேடையேற்றிய மேடை நாடகத்திற்கு, தானே திரைக்கதை, வசனம் எழுதி, திரைப்படமாக தயாரித்தார்.
இத்திரைப்படத்தில் சிவபாதவிருதையர், எஸ். ஆர். வேதநாயகம், டீன் குமார், சாம்பசிவம், ஹெலன் குமாரி, சந்திரகலா, கே. ஏ. ஜவாஹர் போன்ற பலர் நடித்தார்கள். பல சிங்களத் திரைப்படங்களிலும், சில ஈழத்துத் தமிழ்த் திரைபபடங்களிலும் பணியாற்றிய அனுபவத்துடன் எம். ஏ. கபூர் ஒளிப்பதிவையும், இயக்கத்தையும் பொறுப்பேற்றார். அலிமான் படத் தொகுப்பைக் கவனித்தார். "நிர்மலா" படத்தின் இசையமைப்பாளரான திருமலை ரி. பத்மநாதன் இசையமைப்பு செய்தார். சண்முகப்பிரியா இயற்றிய பாடல்களை முத்தழகு, பேர்டினண்ட் லோபஸ், கலாவதி, சுஜாதா ஆகியோர் பாடினார்கள்.
[தொகு] குறிப்பு
- யாழ்ப்பாணத்தில் சமகாலத்தில் "லிடோ" திரையரங்கில் "தென்றலும் புயலும்" திரைப்படமும், "ராணி" திரையரங்கில் "வாடைக்காற்று" திரைப்படமும் காண்பிக்கப்பட்டன. இப்படி இரண்டு ஈழத்து தமிழ்த்திரைப்படங்கள் ஒரு நகரத்தில் சமகாலத்தில் திரையிடப்படுவது அரிதாகும்.
- இத்திரைப்படத்தில் பின்னணி பாடிய பேர்டினண்ட் லோபஸ் தான் "நிர்மலா" படத்தில் இடம்பெற்ற புகழ் பெற்ற பாடலான " கண்மணி ஆடவா" என்ற பாடலைப் பாடியவர்.