அருந்ததி ராய்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.

அருந்ததி ராய்

பிறப்பு: 1961 Nov 24

இந்தியா

தன்மையாளர்: நாவலாசிரியை
தேசியம்: இந்தியர்
எழுதிய காலம்: 1996ல்-இன்றுவரை
முதல்படைப்பு: The God of Small Things


அருந்ததி ராய் இந்தியாவைச் சேர்ந்த ஒரு பெண் எழுத்தாளர் ஆவார். இவர் மேகாலயாவில் உள்ள ஷில்லாங்கில் நவம்பர் 24, 1961-ல் பிறந்தார். பின்னர் தனது சிறுவயதில் கேரளாவில் வளர்ந்தார். தனது முதல் நாவலான த காட் ஆப் ஸ்மால் திங்ஸ் (The God of Small Things) நாவலுக்காக புக்கர் பரிசு பெற்றார். இவர் மே 2004-ல் சிட்னி அமைதிப் பரிசையும் வென்றார்.

[தொகு] வெளி இணைப்புகள்