கோவில்பட்டி
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
கோவில்பட்டி | |
மாநிலம் - மாவட்டங்கள் |
தமிழ்நாடு - தூத்துக்குடி |
அமைவிடம் | 9.17° N 77.87° E |
பரப்பளவு - கடல் மட்டத்திலிருந்து உயரம் |
ச.கி.மீ
|
கால வலயம் | IST (ஒ.ச.நே.+5:30) |
மக்கள் தொகை (2001) - மக்களடர்த்தி |
87,458 - /ச.கி.மீ |
கோவில்பட்டி (ஆங்கிலம்:Kovilpatti), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள தூத்துக்குடி மாவட்டத்தில் இருக்கும் ஒரு நகராட்சி ஆகும்.
பொருளடக்கம் |
[தொகு] புவியியல்
இவ்வூரின் அமைவிடம் 9.17° N 77.87° E ஆகும்.[1] கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 106 மீட்டர் (347 அடி) உயரத்தில் இருக்கின்றது.
[தொகு] மக்கள் வகைப்பாடு
இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 87,458 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.[2] இவர்களில் 49% ஆண்கள், 51% பெண்கள் ஆவார்கள். கோவில்பட்டி மக்களின் சராசரி கல்வியறிவு 76% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 82%, பெண்களின் கல்வியறிவு 70% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட மிக அதிகம். கோவில்பட்டி மக்கள் தொகையில் 11% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.
[தொகு] தொழில்
கோவில்பட்டி நகரம் தீப்பெட்டி தயாரிப்புக்கு பெயர் போனது. பட்டாசுத் தொழிற்சாலைகளும் இங்கு உண்டு. இந்நகர் மற்றும் சுற்றியுள்ள நிலங்களில் முக்கிய விளைபொருட்கள் பருத்தி, நிலக்கடலை மற்றும் கேழ்வரகு, கம்பு போன்ற தானிய வகைகளாகும். இங்கு விளையும் பருத்தியை இடுபொருளாகக் கொண்டு லக்ஷ்மி மில்ஸ், லாயல் மில்ஸ் எனும் இரண்டு பெரிய பஞ்சாலைகள் அமைந்துள்ளன. கோவில்பட்டியின் வளர்ச்சிக்கு இவ்விரண்டு ஆலைகளும் பெரிய பங்காற்றியுள்ளன. கோவில்பட்டி நகரில் தயாராகும் 'கடலை மிட்டாய்' என்னும் இனிப்புப்பண்டம் புகழ் பெற்றது.
[தொகு] ஆதாரங்கள்
- ↑ Kovilpatti. Falling Rain Genomics, Inc. இணைப்பு அக்டோபர் 20, 2006 அன்று அணுகப்பட்டது.
- ↑ 2001-ம் ஆண்டிற்கான இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அறிக்கை. இணைப்பு அக்டோபர் 20, 2006 அன்று அணுகப்பட்டது.