அர்ஜூனன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.

அர்ஜூனன் மகாபாரத காப்பியத்தில் இடம் பெறும் முக்கிய கதாப்பாத்திங்களுள் ஒருவராவார். இவர் பஞ்ச பாண்டவர்களில் மூன்றாமவர். கிருஷ்ணரின் நண்பர். சிறந்த வில் வித்தைக்காரராக சித்தரிக்கப்படும் இவர், பாண்டவர், மற்றும் கௌரவர்களுக்கு குருவான துரோணரின் முதன்மையான சீடராவார். பகவத் கீதையானது, குருட்சேத்திரப் போரின் முன் இவருக்கும் கிருஷ்ணருக்கும் இடையே நடைபெற்ற உரையாடலாக மகாபாரதத்தில் இடம் பெறுகிறது.


பஞ்ச பாண்டவர்கள்
அர்ஜூனன் | பீமன் | தர்மன் | நகுலன் | சகாதேவன்