பேச்சு:வ. வே. சு. ஐயர்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
இந்தக் கட்டுரையைத் திருத்தி எழுதுவதைவிடப் புதிதாக எழுதுவது இலகுவாயிருக்கும். புதிய கட்டுரையை உருவாக்கிவிட்டு இதனை நீக்கப் பரிந்துரைக்கிறேன். --கோபி 16:07, 21 நவம்பர் 2006 (UTC)
- ஆம்--Ravidreams 16:38, 21 நவம்பர் 2006 (UTC)
-
- ஆனால் 5500 கட்டுரைகளை எட்டும்வரை வ. வே. சு. ஐயர் பற்றிய கட்டுரை எழுதப்படாதிருந்தது ஆச்சரியம்தான். --கோபி 16:43, 21 நவம்பர் 2006 (UTC)
- இந்த கட்டுரையில் கிறிஸ்தவ இஸ்லாம் மதங்கள் மீதான ஆசிரியரின் கருத்துக்களை கட்டவிழ்த்து விட்டுள்ளார். ஆதாரமற்ற வகையிலும் உண்மைக்கு புறம்பான வகையிலும் ஆபிரகாமிய சமயங்கள் பற்றிய கருத்துக்கள் இங்க்க் தரப்பட்டுள்ளன, வ.வே.சுப்ரமணியம் முக்கியவராக தோன்றுகிறது இருப்பினும் இந்த கட்டுரை அவரப்பற்றிப் பேசுவதை விட ஏனைய சமயங்களை குறை கூறுவதிலேயே ஈடுபடுகிறது. இக்கட்டுரையை உடனடியாக நீக்க பரிந்துரைக்கிறேன். இன்னும் ஒரு வாரத்துக்குள் எதிர்ப்பில்லாவிட்டால் இது நீக்கப்படும்.--டெரன்ஸ் \பேச்சு 05:32, 27 மார்ச் 2007 (UTC)
- ஆனால் 5500 கட்டுரைகளை எட்டும்வரை வ. வே. சு. ஐயர் பற்றிய கட்டுரை எழுதப்படாதிருந்தது ஆச்சரியம்தான். --கோபி 16:43, 21 நவம்பர் 2006 (UTC)
இக்கட்டுரையில் உள்ள முக்கிய வாழ்க்கைக் குறிப்புகளை மட்டும் விட்டு மீதமானவற்றை நீக்கிவிடலாம் என்பது எனது கருத்து. ஆட்சேபனை இல்லாவிடில் நானே இதனைத் திருத்துகிறேன்.--Kanags 08:39, 27 மார்ச் 2007 (UTC)
-
-
- நன்றி சிறீதர் கட்டுரை நன்றாகவுள்ளது. :) --Umapathy 12:28, 27 மார்ச் 2007 (UTC)
-
[தொகு] தமிழ் குருகுலமும் ஒப்பற்ற பணிகளும்:
"பிரிட்டிஷாரின் கல்வித்திட்டத்தால் இந்தியர்கள் தனது முன்னோர்களைப்பற்றியும், இந்நாட்டின் வரலாறு, கலாச்சாரம், மற்றும் வாழ்வுமுறைகளைப் பற்றியும் மிகத் தாழ்வாக எண்ணத் துவங்கினர். உண்மை நிலையை அறிவதைவிட ஆங்கிலேயருக்கு அடிமையாக இருப்பதால் கிடைக்கும் சமூக பொருளாதார உயர்வுகளைப் பெறும் கனவுகளில் வாழ்க்கையை கழித்தனர். கிருத்துவ மதத்தாரால் நிர்ணயிக்கப்படும் பாடங்களாலும், நிர்மாணித்து நிர்வகிக்கப்படும் கல்வி நிலையங்களாலும் தன்னை தாழ்த்துதல் உயர்வு என்னும் தற்காப்பு மன நிலைக்கும் வாழ்வை பணித்திருந்தனர்.
இவை போன்ற செயல்கள் இந்தியாவை பலவீனமாக்கி இந்தியரை இழிநிலைக்கு தள்ளூவதை தவிர்க்கவும், இந்தியரை வலிமையுடையோராய் மாற்றவும் முடிவு செய்த தமிழ் காதலரான வவேசு, ஆங்கிலேய விஷம போதனைகளுக்கு எதிராக, 1922ல் சேரன் மாதேவியில் தமிழ்க்குருகுலம் என்ற கல்வி நிலையத்தை தொடங்கினார். அதை நிர்வகிக்க பரத்வாஜ் ஆசிரமத்தையும் அமைத்தார். 1924ல் பாலபாரதி என்ற இதழைத் தொடங்கினார். தொழிற்கல்வியும் அறிவுக் கல்வியும் மாணவர்க்கு அளித்தார்."
[தொகு] குருகுல ரகளை
"ஆங்கிலேயருக்கு இந்தியர் தாழ்ந்தவரே என்பதை அரசியல் பலத்தால் மற்ற இந்தியரின்மேல் திணித்து தம்முடைய சொந்த வாழ்க்கையை உயர்த்த நினைத்த ஆங்கில ஆதிக்க ஆதரவாளர்கள் ஜஸ்டிஸ் பார்ட்டி போன்ற கட்சிகளை நிறுவி இந்தியர்களை ஜாதி, மொழி, மற்றும் இனத்தின் அடிப்படையில் பிரிக்க முனைந்தனர். மற்ற சுதந்திரப் போராட்ட வீரர்களையும் பெரும்புகழ், பண பலம், ஆதிக்க பலம் போன்ற ஆசைகளைக் காட்டி தம்பக்கம் இழுத்து ஆங்கிலேயர்களுக்கான இந்திய விஷமப் பிரச்சார பீரங்கிகளை உருவாக்கிவந்தனர்.
இத்தகைய பண, அதிகார பலத்திற்காகக் கொள்கை மாறுபவர்களும், கட்சி மாறுபவர்களும் ஆங்கிலேய அரசிற்கும், அரசாங்க மதமான கிருத்துவத்திற்கு ஆதரவாகவும் இந்திய தத்துவங்களையும், நம்பிக்கைகளையும் எதிர்த்து வந்தனர்.
இறைவனுக்கும் மனிதருக்கும் இடையில் இருக்கக்கூடியது ஆண்டான் - அடிமை உறவு மட்டுமே என்று நம்புகின்ற, போதிக்கின்ற ஆபிரகாமிய மதங்கள் இவ்வுலகையே ஆள்வோன் - அடிமைகள் கண்ணோட்டத்தில் பார்ப்பவை. இத்தகைய ஆபிரகாமிய மதங்களின்கீழ்பட்டு அடிமைகளாய் பல நூற்றாண்டுகள் வாழ்ந்த இந்தியர்கள் ஏற்றுக்கொண்டுவிட்ட சமூக பொருளாதார தாழ்மைகளில் ஒன்று ஜாதி அடிப்படையில் அமைந்துவிட்ட உயர்வு தாழ்வுகள்.
ஆளும் வர்க்கத்திற்கு அணி செய்வதே பணியென்றிருந்த ஜஸ்டிஸ் கட்சிக்கு ஆதரவாளர்களாக மாற விரும்பிய சில கொள்கை வியாபாரிகள், ஆங்கிலேயர் அமைத்துவந்த பார்ப்பனீய கருத்துருவாக்கத்தை பயன்படுத்தினர்.
பிரச்சாரத்தால் பொய்யை உண்மையாக்கலாம் என்கின்ற சமுதாய உளவியலை நன்றாகப் பயன்படுத்தத் தெரிந்த ஆங்கிலேய அரசும், கிருத்துவ ஏகாதிபத்தியமும், இவற்றின் தொண்டிற்கே தண்டனிட்டு வாழ்ந்துவந்த சிலரும் காத்திருந்த வாய்ப்பு குருகுலத்தின் மூலம் கிடைத்தது ஒரு துர்பாக்கியமே. உணர்ச்சிக் கலப்பின்றி, தெளிவாக, நிதானமாகப் பார்த்துத் தெளிய வேண்டியது இந்நிகழ்வு.
வேதகால ஹிந்துத்துவத்தை அரசியல் கொள்கையாக மட்டுமல்லாமல் வாழ்க்கை நெறியாகக் கொண்ட வவேசு அவர்கள் இந்த ஜாதிப்பாகுபாடுகளை எதிர்த்துவந்ததோடு, இவை அழியத் தேவையான பல காரியங்களையும் செய்துவந்தார்.
தமிழ் குருகுலத்தில் அனைத்து மாணவர்களுக்கும் ஒரே மாதிரியான முறையில் நன்னெறிகளும், விஞ்ஞானமும், கலை இலக்கியங்களும், உடல்வலிவுப் பயிற்சிகளும் போதிக்கப்பட்டன. மாணவரும் ஆசிரியரும்கூட சமானமான வசதிகளையே அனுபவித்துவந்தனர்.
இந்த தமிழ் குருகுலத்தில் பிள்ளைகளைச் சேர்க்கும் பெரும்பாலான பெற்றோர்கள் முற்போக்கு மனம் கொண்டவர்களாக விளங்கினர். இத்தகைய முற்போக்காளர்களிடம் தமிழ் குருகுலத்தில் நடந்து வருவது சமபந்தி போஜனமே என்பதை ஒரு அறிவிப்பாக சொல்லவேண்டிய அவசியம் இல்லாதிருந்தது. இதுவே தேவையில்லாத திரிபுகளை உருவாக்கக் காரணமாயும் ஆகிவிட்டது.
வவேசு அவர்கள் தமது தமிழ்க் குருகுலத்தில் சமபந்தி உணவு முறையையே நடத்தலானார். அவரது முற்போக்கு செயல்பாடே பெரிய பிரச்சினையை கிளப்பியது. அனைத்து ஜாதியினரும் ஒன்றாய் அமர்ந்து சமபந்தி செய்வதை பிற்பாடு அறிந்துகொண்ட இரு பிராமண மாணவர்களின் பெற்றோர் அதற்கு எதிர்ப்புத் தெரிவித்தனர்.
இந்தியர்களை தாழ்நிலைக்குக் கொண்டுவர முயற்சிசெய்தவர்களுக்குக் கிடைத்துவந்த அதீத உதவிகள்போல் இன்றி, வவேசு மக்கள் தரும் நன்கொடையை நம்பியே குருகுலத்தை நடத்திவந்தார். எதிர்ப்புத் தெரிவித்த இரு மாணவர்களின் பெற்றோர்களோ குருகுலத்திற்கு உற்சாகமாய் உதவியவர்கள். இந்த விஷயத்தில் இருதலை கொள்ளியாய் தவித்த வவேசு அந்த இரண்டு மாணவர்களுக்கு மட்டும் தனியே சாப்பிட விதிவிலக்கு அனுமதி கொடுத்தார். தாற்காலிக ஏற்பாடாக அவர்களுக்குச் சமையல் அறையிலிருந்து போஜன கூடத்துக்கு வரும் வழியில் இருந்த உக்கிராண அறை (ஸ்டோர் ரூம் பக்கம்) பாதையில் உணவு பரிமாறினார்கள்.
இவ்விருவரைத் தவிர ஏனைய மாணவர்களும், ஆசிரியர்களும் ஜாதி வேறுபாடின்றி சமபந்தியில் அமர்ந்து உணவருந்தினர். இதை வவேசு அவர்களே முன்னின்றும் நடத்திவந்தார். தமக்குப் பந்திப் பிரிவினையில் நம்பிக்கை இல்லையென்று, தாம் சமபந்தியில் போஜனம் செய்வதன் மூலம் வவேசு அவர்கள் காட்டினார்.
விலக்களிக்கப்பட்டது இரண்டே இரண்டு சிறுவர்களுக்கு மட்டும்தான். அதுவும், அவர்களுடைய பெற்றோர், குருகுலத்துக்கு நிதி வழங்கியவர்கள் என்ற சங்கடத்துக்காக. இதுவும் ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்றுதான் என்றாலும், அன்றைய நிதி நிலைமையில், குருகுலத்தைத் தொடர்ந்து நடத்த வேண்டிய கட்டாய சூழ்நிலையில், வவேசு அவர்களுக்கு வேறு வழி இருந்திருக்கவில்லை.
தங்கள் குருகுலத்தைப் பற்றிப் பெருமையாகத் தங்கள் பெற்றோருக்கு தெரிவித்த சில மாணவர்கள் அத்துடன் இரண்டு பிராம்மணச் சிறுவர்களுக்கு சமபந்தி போஜனத்திலிருந்து விலக்களித்து, தனியே சாப்பாடு போடுகிறார்கள் என்ற செய்தியையும் சொன்னார்கள்.
தங்களுக்கு ஆதரவளித்துவந்த ஆங்கிலேய அரசாங்கத்திற்கு உதவும் வகையில் விலைபோகிவிட்ட சிலர் இந்த நிகழ்வை திரித்தலுக்குட்படுத்தினர். இப்படிப்பட்ட பேச்சுகளால், வவேசு ஏதோ எல்லா பிராமணச் சிறுவர்களுக்கும் தனிப்பந்தி வைத்திருக்கிறார் என்பது போன்ற ஒரு தோற்றம் பரவிவிட்டது. சமூகச் சீர்திருத்தத்தில் ஆர்வமுள்ள சில பெற்றோர்களுக்கு இச்செய்தி வருத்தம் தந்தது. சமபந்தி போஜனம் என்ற முன்னேற்றத்திலிருந்து நழுவிவிட்ட பிற்போக்கான ஏற்பாடு இது என்று கருதினார்கள்.
இருப்பினும் நேரில் உண்மையறிந்த பெற்றோர்கள் சமபந்தி நடக்கிறது என்பதையறிந்து சமாதானமாயினர். குருகுலமும் தொடர்ந்து நடந்தது. உள்நோக்கம் கொண்ட கொள்கை வியாபாரிகளின் பொய்யுரைகளுக்கான காரணங்களை புரிந்துகொண்ட காங்கிரஸ் கட்சி இந்த ரகளையை ஏற்றுக்கொள்ளாமல் குருகுலத்திற்கு அளித்துவந்த உதவியை தொடர்ந்து செய்துவந்தது. இதனைக் காரணம் காட்டி காங்கிரஸ் கட்சியிலிருந்து பிரிந்த பலர் ஆங்கிலேய அரசாங்கத்திற்கும், ஆபிரகாமிய மதங்களுக்கும் ஆதரவாக பல வியாபர சமூக அமைப்புக்களை அமைத்தனர். ஒரு பக்கத்திலிருந்து மட்டும் திரிந்த செய்திகளைப் படித்தறிந்து அதனைப் பெரிதாக்கிக் கொண்டே போவதுபோன்ற நடவடிக்கைகளுக்கு வித்திட்டனர்.
இருப்பினும் இக்குருகுலம் தீரமிகு வீரரான வவேசுவின் தலைமையில் தொடர்ந்து நடந்துவந்தது. அனைத்து ஜாதி மாணவர்களும் ஒன்றாய் கல்வி பெற்றனர்.
இந்த சம்பவம் நிறைய திரிப்புகளுக்கு உள்ளான ஒன்று. இது குறித்துத் தம் நிலையை விளக்கி வவேசு ஹிந்து பத்திரிகைக்கு ஒரு கடிதம் எழுதினார். ஹிந்து பத்திரிகையின் நூற்றாண்டுப் பதிப்பிலிருந்து கிடைக்கும் இக்கடிதம் பின்வருமாறு:
In a letter published in The Hindu on April 15, V. V. S. Aiyer said that except in the case of two Bhrahmin boys in the case of all other Brahmin and non-Brahmin students there was common dining and he made it clear that no Brahmin taken into the Gurukula thereafter would be given any exemption from the general mess." (A Hundred Years of The Hindu - page 337)"