தேம்பாவணி
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
தேம்பாவணி என்னும் நூல் இயேசு பிரான் மீது இயற்றப்பட்ட முதற் பெரும் செய்யுள் வகை நூலாகும். இந்நூலை இத்தாலிய நாட்டவரான வீரமாமுனிவர் (1680 - 1742) அவர்கள் தமிழில் திறம்பட ஆக்கிய நூல் எனப் புகழப்படுகிறது. கிறிஸ்தவ சமயத்தின் சுருக்கமென்றே இந்நூலை அறிஞர்கள் மதிப்பிடுகின்றனர்.
பொருளடக்கம் |
[தொகு] தேம்பாவணியின் பொருள்
தேம்பா + அணி எனப் பிரித்து வாடாத மாலை என்றும், தேன் + பா + அணி எனப் பிரித்துத் தேன் போன்ற இனிய பாடல்களின் மாலை என்றும் இதற்குப் பொருள் உண்டு. இயேசு நாதரை வளர்த்த தந்தையாகிய சூசையைத் தலைவராகக் கொண்டு இது பாடப்பட்டது. சூசையப்பருக்குத் தேம்பாவணி எனப் பெயரிட்டு இந்நூலில் பாடியுள்ளார்.
[தொகு] தேம்பாவணியின் அரங்கேற்றம்
இந்நூல் கி.பி. 1726 ஆம் ஆண்டில் மதுரையில் புலவர்கள் முன்னிலையில் அரங்கேற்றம் செய்யப்பட்டது.
[தொகு] நூலின் அமைப்பு
தேம்பாவணி மூன்று காண்டங்களைக் கொண்டது. ஒவ்வொன்றிலும் 12 படலமாக 36 படலங்கள் உள்ளன. மொத்தம் 3,615 விருத்தப் பாக்கள் 90 சந்த வகைகளுடன் பாடப் பெற்றது தேம்பாவணி.
[தொகு] தேம்பாவணியில் சில வரிகள்
தேம்பாவணியில் உள்ள கடவுள் வாழ்த்தில் உள்ள சில வரிகள்:
கார்த்திரள் மறையாக் கடலிலுண் மூழ்காக் கடையிலா தொளிர்பரஞ் சுடரே நீர்த்திரள் சுருட்டி மாறலை யின்றி நிலைபெறுஞ் செல்வநற் கடலே போர்த்திரள் பொருதக் கதுவிடா வரணே பூவனந் தாங்கிய பொறையே சூர்த்திரள் பயக்கு நோய்த்திரள் துடைத்துத் துகடுடைத் துயிர்தரு மமுதே