தி. ஜானகிராமன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.

தி.ஜானகிராமன்
தி.ஜானகிராமன்

தி.ஜானகிராமன் (T.Janakiraman) ஒரு புகழ்பெற்ற தமிழ் எழுத்தாளர். தி.ஜா என்றும் அழைக்கப்படுபவர். சக்தி வைத்தியம் என்ற சிறுகதைத் தொகுப்புக்காக தமிழுக்கான சாகித்ய அகாதமி பரிசு பெற்றவர். தமிழின் மிகப்புகழ்பெற்ற நாவல்களான மோகமுள், மரப்பசு, அம்மா வந்தாள் போன்றவற்றை எழுதியவர்.

தி.ஜா இசையை எழுத்தாக்கிய அபூர்வ எழுத்தாளர். தஞ்சை மாவட்டம் மன்னார்குடியை அடுத்து தேவங்குடியில் 1921இல் பிறந்தவர். பத்து வருடங்கள் பள்ளி ஆசிரியராகப் பணியாற்றிவர், பின்பு அகில இந்திய வானொலியில் பணியாற்றி ஓய்வு பெற்றார். 1982ம் ஆண்டு தி.ஜானகிராமன் மரணமடைந்தார்.

பொருளடக்கம்

[தொகு] படைப்புகள்

  • பிடிகருணை
  • மனிதாபிமானம்
  • யாதும் ஊரே
  • அக்பர் சாஸ்திரி
  • அடி
  • அன்னை (மூலம்: கிரேசியா டெலடா - நோபல் பரிசு பெற்றது)
  • அன்பே ஆரமுதே
  • அபூர்வ மனிதர்கள்
  • அமிர்தம்
  • உயிர்த்தேன்
  • எருமைப் பொங்கல்
  • ஒரு துளி துக்கம்
  • கமலம்
  • கொட்டுமேளம்
  • சிவஞானம்
  • செம்பருத்தி

[தொகு] நாவல்

  • மோகமுள்
  • அம்மா வந்தாள்
  • மரப்பசு
  • நளபாகம்
  • மலர்மஞ்சம்

[தொகு] சிறுகதை

  • சிவப்பு ரிக்ஷா
  • சக்தி வைத்தியம்

[தொகு] நாடகம்

  • நாலுவேலி நிலம்
  • வடிவேல் வாத்தியார்

[தொகு] கட்டுரை

  • உதயசூரியன் (ஜப்பான் பயன நூல்)
  • அடுத்த வீடு ஐம்பது மைல் (பயணக் கட்டுரை)
  • கருங்கடலும் கலைக்கடலும் (பயணக் கட்டுரை)

[தொகு] வெளி இணைப்புகள்

ஓர் எழுத்தாளர் பற்றிய இந்தக் குறுங்கட்டுரையைத் தொகுப்பதன் மூலம் நீங்கள் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.