பேச்சு:தமிழ் அரிச்சுவடி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.

தமிழ் அரிச்சுவடி

இந்த தலைப்பில் மேலே தரப்பட்ட விபரம் தவறானது.

தமிழில் 12 உயிர் ஒலிகள் உண்டு என்பது மிக்க மிக்க தவறான. தமிழில் 18 உயிர் ஒலிகள் உண்டு என்பது மிக்க மிக்க தவறானது.

தமிழில் 12 உயிர் எழுத்துக்கள் உண்டு என்பதுதான் சரியானது. தமிழில் 18 மெய் எழுத்துக்கள் உண்டு என்பது தான் சரியானது.

தமிழைப் புரிந்துகொள்க. http://www.omniglot.com/writing/tamil.htm

விக்கிப்பீடியா, தயவுடன் இந்த தவறினை திருத்துக.


நண்பரே நீங்கள் தவறாகப் புரிந்து கொண்டுள்ளீர்கள். கட்டுரையில், "உயிரொலிகளைக் குறிக்க 12 எழுத்துக்கள்", "மெய்யொலிகளைக் குறிக்க 18 எழுத்துக்கள்" என சரியாகத்தான் குறிப்பிடப்பட்டுள்ளது. இது 12 எழுத்துக்கள் மெய்யொலிகளையும், 18 எழுத்துக்கள் உயிரொலிகளையும் குறிக்கும் எனப் பொருள்படும். 12 உயிரொலிகளும், 18 மெய்யொலிகளும் உண்டு என்ற பொருள் தராது.

தவிர இங்கு இடம் பெறும் கட்டுரைகளில் பிற கட்டுரைகளையோ, இணைய தளங்களையோ பெயர் குறித்து விமர்சித்து எழுதுவது சரியல்ல என்பது எனது கருத்து. Mayooranathan 20:22, 13 நவ 2004 (UTC)

[தொகு] தமிழ் எழுத்தில் கிரந்த எழுத்துக்கள் - அறிஞர் இராம.கி யின் கருத்துக்கள்

"வடமொழிக்கென உருவாக்கிய கிரந்த எழுத்துக்களை நுழைத்து தமிழ்மொழியை எழுதும் போக்கு, முட்டாள் தனமாக 17, 18-ஆம் நூற்றாண்டுகளிலே தான் எழுந்தது. கல்வியிற் சிறந்த கம்பன் கூட வடவெழுத்து ஒரீஇ தான் எழுதினான். "கிரந்த எழுத்தைக் கலந்து தமிழை எழுத வேண்டும்" என்று சொல்லுவது எப்படி என்றால் "உரோமன் எழுத்தில் இருந்து தோன்றிய கோத்திக் எழுத்துக்களையும், சிரில்லிக் எழுத்துக்களையும் உள்நுழைத்து ஆங்கிலம், பிரஞ்சு போன்றவற்றை எழுத வேண்டும்" என்று சொல்லுவது போல் இருக்கிறது. கேட்டால், ஆங்கிலக்காரனும், பிரஞ்சுக்காரனும் நம்மை அடிக்க வருவார்கள்." http://valavu.blogspot.com/2007/02/2_21.html