கம்யூனிஸ்ட் அறிக்கை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.

கம்யூனிஸ்ட் அறிக்கை

கம்யூனிஸ்ட் அறிக்கை அல்லது கம்யூனிஸ்ட் விஞ்ஞாபனம் (ஆங்கிலம்:The Communist Manifesto,ஜேர்மன்:Das Manifest der Kommunistischen Partei) பெப்ரவரி 21, 1948ம் ஆண்டு கம்யூனிஸ்ட் லீக்கினால் ஏற்பாடு செய்யப்பட்ட மாநாட்டில் வெளியிடப்பட்ட அறிக்கை ஆகும். கம்யூனிச கோட்பாட்டாளர்களான கார்ல் மார்க்ஸ் மற்றும் பிரெட்ரிக் ஏங்கல்ஸ் இருவரும் இணைந்து எழுதியுள்ளனர். இவ்வறிக்கை கம்யூனிஸ்ட் லீக்கின் நோக்கம் மற்றும் நடவடிக்கைகள் என்பவற்றை விவரிப்பதுடன், முதலாளித்துவத்தினை வீழ்த்துவதற்கும், சமவுடமை சமூகத்தினை உருவாக்குவாக்கும் பட்டாளி வர்க்க புரட்சியை உண்டு பண்ணுவதற்குமான முன்னெடுப்புக்களை பரிந்துரைக்கின்றது. இதன் காரணமாக இவ்வறிக்ககை உலகில் கட்சி சார் அரசியலில் நடவடிக்கையில் மிக்க செல்வாக்குச் செலுத்துகின்றது. 'உலக தொழிலாளர்களே ஒன்றுபடுங்கள்' (Working men of all countries, unite!) என்பது இவ்வறிக்கையின் புகழ்பெற்ற வாசகம் ஆகும்.

[தொகு] பதிப்பு

கம்யூனிஸ்ட் அறிக்கையின் மலையாளப் பதிப்பு
கம்யூனிஸ்ட் அறிக்கையின் மலையாளப் பதிப்பு

கம்யூனிஸ்ட் அறிக்கை முதலில் 1848 ல் ஜேர்மன் மொழியில் வெளியிடப்பட்டது. ஆங்கிலத்தில் 1850ம் ஆண்டு ஹெலன் மெக்ஃபார்லேன் (Helen MacFarlane) என்பவரால் மொழிபெயர்க்கப்பட்டது. இன்றுவரை பல மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.

[தொகு] வெளி இணைப்புக்கள்