நெல்லியடி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.

நெல்லியடி இலங்கையின் வடக்கில் உள்ள ஒரு சிறிய நகரமாகும். கரவெட்டி கிராமத்தின் நடுவில் அமைந்துள்ள இது தற்போது வடமராட்சிப் பகுதியில் புதிய ஒரு சேவை நிலையமாக உருவாகி வருகின்றது. நான்கு பிரதான வீதிகள் (பருத்தித்துறை, கொடிகாமம், திக்கம், யாழ்ப்பாணம் செல்லும் வீதிகள்) சந்திக்கும் சந்தியில் அமைந்துள்ளதால் முக்கியத்துவம் பெறுகிறது. வடமராட்சிப் பகுதியில் வங்கிகள் உட்பட பல முக்கிய வணிகம் சார் நிறுவனங்கள் நெல்லியடியில் தமது கிளை அலுவலகங்களை உருவாக்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது. நெல்லியடியில் உள்ள நெல்லியடி மத்திய மகா வித்தியாலயத்தில் முகாம் இட்டிருந்த இலங்கை அரச இராணுவத்தின் மீது ஜூலை 5, 1987 இல் கப்டன் மில்லர் தற்கொலைத் தாக்குதல் நடத்தியதன் மூலம் புலிகளின் கரும்புலிகள் அத்தியாயம் ஆரம்பித்தது இவ்விடத்தில்தான்.

[தொகு] இங்கு பிறந்த கலைஞர்கள்

  • கந்தவனம் (ஐயா அண்ணன்)- பல்துறைக் கலைஞர்
  • 'யமன்' வேலாயுதம்- கூத்து நடிகர்
  • இளைய பத்மநாதன் - நவீன நாடகக் கலைஞர்


[தொகு] வெளி இணைப்பு