சுவாமி விபுலானந்த இசை நடனக் கல்லூரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.

இலங்கை மட்டக்களப்பு சுவாமி விபுலானந்த இசை நடனக் கல்லூரி 26 மார்ச் 1982 இல் கட்டிடத்திற்கன ஆரம்பப்பணிக்ள் அமைச்சர் இராஜதுரை அவர்களால் கல்லடி உப்போடையில் உள்ள இராமகிருஷ்ண மிஷன் மண்டபத்தில் தமிழக இசை விற்பன்னர்கள் ஆகிய சீர்காழி கோவிந்தராஜன் மற்றும் பலவரது கலைநிகழ்வுகளுடன் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

29 மே 1982 இல் இராமகிருஷ்ண சுவாமிகள் அமரர் ஜீவனானந்தஜி அவர்களால் பூசை நடத்தி மாணவர்களை ஆசீர்வதித்து ஆரம்பித்து வைக்கப்பட்டது. இந்து சமயகலாசார அலுவல்கள் திணைக்களம் இதை நன்கு பராமரித்து வந்தாலும் கல்வித்திணைக்களம் தகுந்த வேதனம் வழங்காமையால் இப்பாடநெறியைப் பட்டாதாரிப் பாடநெறியாக்கவேண்டும் என்று பலரும் வேண்டுகோள் விடுத்ததால் பின்னர் 2001 ஆம் ஆண்டில் கிழக்கிலங்கைப் பல்கலைக்கழகத்தின் ஓர் வளாகமாக்கப்பட்டது.