கிழிந்த ஆடையும் பழந்துருத்தியும் உவமை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.

கிழிந்த ஆடையும் பழந்துருத்தியும் இயேசு கூறிய உவமான கதையாகும். இது லூக்கா 5:36-40, மத்தேயு 11:17, மாற்கு 2:18-22 இல் காணப்படுகிறது. இது இயேசுவின் சீடர் ஏன் நோன்பிருப்பதில்லை எனக்கேட்டபோது இயேசு அதனை நியாப்படுத்தி சொன்ன உவமையாகும். இது கதை வடிவில் இல்லாமல் உறைநடைவடிவில் அமைந்த உவமையாகும். மேலும் இது விவிலியத்தில் சேர்க்கப்படாத நற்செய்தி நூலான தோமையாரின் நற்செய்தியிலும் காணப்படுகிறது (தோமஸ் 104 மற்றும் 47).

பொருளடக்கம்

[தொகு] உவமை

எவரும் புதிய ஆடையிலிருந்து ஒரு துண்டைக் கிழித்து அதைப் பழைய ஆடையோடு ஒட்டுப் போடுவதில்லை. அவ்வாறு ஒட்டுப் போட்டால் புதிய ஆடையும் கிழியும் புதிய துண்டும் பழையதோடு பொருந்தாது.

அதுபோலபப் பழைய தோற்பைகளில் எவரும் புதிய திராட்சை மதுவை ஊற்றி வைப்பதில்லை ஊற்றி வைத்தால் புதிய மது தோற்பைகளை வெடிக்கச் செய்யும். மதுவும் சிந்திப் போகும் தோற்பைகளும் பாழாகும். புதிய மதுவைப் புதிய தோற்பைகளில்தான் ஊற்றி வைக்க வேண்டும். பழைய திராட்சை மதுவைக் குடித்தவர் எவரும் புதியதை விரும்பமாட்டார் ஏனெனில்"பழையதே நல்லது" என்பது அவர் கருத்து.

[தொகு] பொருள்

பழையவை புதியவற்றுடன் சேரமுடியாது என்பது இதன் கருத்தாகும். அதாவது இங்கு புதிய திராட்சை மது அல்லது புதிய துணி கிறிஸ்தவமாகும். அது பழைமையான இஸ்ரவேலில் இணையாது என்பதாகும்.

[தொகு] இவற்றையும் பார்க்கவும்

இயேசுவின் உவமைகள் - தொகு
கனிகொடா அத்திமரம் | வலை | இரவில் வந்த நண்பன் | நல்ல சமாரியன் | நல்ல ஆயன் | வளரும் விதை | புதையல் | திராட்சை தோட்ட வேலையாட்கள்  | புளித்த மா | காணாமல் போன காசு | காணாமல் போன ஆடு | மன்னர் மகனின் திருமணம் | கடுகுவிதை | முத்து | பரிசேயனும் பாவியும் | தாலந்துகள் உவமை | ஊதாரி மைந்தன் | மூட செல்வந்தன் | செல்வந்தனும் இலாசரசும் | நேர்மையான பணியாள் | செம்மறியாடுகளும் வெள்ளாடுகளும் | விதைப்பவனும் விதையும் | கோதுமையும் களைகளும் | பத்து கன்னியர் | இரண்டு கடன்காரர் | இரண்டு மகன்கள் | நேர்மையற்ற நடுவர் | நீதியற்ற வீட்டுப் பொறுப்பாளர் | இரக்கமற்ற பணியாளன் | திராட்சை செடி | பொல்லாத குத்தகையாளர் | வீடு கட்டிய இருவர் |கிழிந்த ஆடையும் பழந்துருத்தியும்

[தொகு] உசாத்துணைகள்

[தொகு] வெளியிணப்புகள்

ஏனைய மொழிகள்