சீத்தலைச் சாத்தனார்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
சீத்தலைச் சாத்தனார் சங்க காலத்தில் வாழ்ந்த புலவர்களில் ஒருவர். மணிமேகலை என்னும் காப்பியத்தைப் படைத்தவர்.
சீத்தலைச் சாத்தனார் பிறந்த ஊர் சீத்தலை என்பர். சீத்தலை என்பது சீர்தண்டலை என்பதன் சுருக்கம். மதுரையிலே வாழ்ந்தவர். கூல வாணிகம் செய்தவர். கூலம் என்பது நவதானியம். இவர் பல தானிய மணிகளின் வணிகம் செய்து இருக்கிறார்.
இவர் பௌத்த சமயத்தைச் சேர்ந்தவர் என்பதை இவரது மணிமேகலைக் காப்பியத்தால் அறியலாம். புத்த மதக் கருத்துக்களை ஆழ்ந்த அனுபவ முறையில் கூறியுள்ளார். மணிமேகலை தவிர இவரது பாடல்கள் நற்றிணை, குறுந்தொகை, அகநானூறு, புறநானூறு, திருவள்ளுவ மாலை ஆகிய தொகை நூல்களில் காணக்கிடைக்கின்றன.
இவரோடு நட்புக் கொண்டிருந்த புலவர் சிலப்பதிகாரம் இயற்றிய இளங்கோவடிகள் ஆவார். இளங்கோவடிகள் சாத்தனாரை நன்னூற் புலவன், தண்டமிழ்ச் சாத்தன் என்று போற்றியிருக்கிறார்.
[தொகு] உசாத்துணை
- இரா. வடிவேலன், இலக்கிய வரலாற்றுச் சிந்தனைகள் (2003), சென்னை: அருணோதயம்.