இராஜேந்திர சோழன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.

சோழ மன்னர்களின் பட்டியல்
முற்காலச் சோழர்கள்
இளஞ்சேட்சென்னி கரிகால் சோழன்
நெடுங்கிள்ளி நலங்கிள்ளி
கிள்ளிவளவன் கொப்பெருஞ்சோழன்
கோச்செங்கண்ணன் பெருநற்கிள்ளி
மாற்றார் இடையாட்சி கி.பி. 200-848
இடைக்காலச் சோழர்கள்
விஜயாலய சோழன் கி.பி. 848-871(?)
ஆதித்த சோழன் 871-907 CE
பராந்தக சோழன் I கி.பி. 907-950
கண்டராதித்தர் கி.பி. 950-957
அரிஞ்சய சோழன் கி.பி. 956-957
சுந்தர சோழன் கி.பி. 957-970
உத்தம சோழன் கி.பி. 970-985
இராஜராஜ சோழன் I கி.பி. 985-1014
இராஜேந்திர சோழன் கி.பி. 1012-1044
இராஜாதிராஜ சோழன் கி.பி. 1018-1054
இராஜேந்திர சோழன் II கி.பி. 1051-1063
வீரராஜேந்திர சோழன் கி.பி. 1063-1070
அதிராஜேந்திர சோழன் கி.பி. 1067-1070
சாளுக்கிய சோழர்கள்
குலோத்துங்க சோழன் I கி.பி. 1070-1120
விக்கிரம சோழன் கி.பி. 1118-1135
குலோத்துங்க சோழன் II கி.பி. 1133-1150
இராஜராஜ சோழன் II கி.பி. 1146-1163
இராஜாதிராஜ சோழன் II கி.பி. 1163-1178
குலோத்துங்க சோழன் III கி.பி. 1178-1218
இராஜராஜ சோழன் III கி.பி. 1216-1256
இராஜேந்திர சோழன் III கி.பி. 1246-1279
சோழர் சமுகம்
சோழ அரசாங்கம் சோழ இராணுவம்
சோழர் கலைகள் சோழ இலக்கியம்
பூம்புகார் உறையூர்
கங்கைகொண்ட சோழபுரம் தஞ்சாவூர்
தெலுங்குச் சோழர்கள்
edit

இராஜேந்திர சோழன் இராஜராஜ சோழனின் மகனாவார்.

இன்றைய இந்தியாவை விடப் பெரிய நிலப்பரப்பை , இந்தியாவிற்கு வெளியே வென்று , கடல் கடந்த தூர நாடுகளில் விண்ணுயரப் புலிக்கொடியைப் பறக்க விட்டவன் அவன் . இலங்கையையும் , மாலத் தீவையும் , வடக்கே வங்காள தேசம் வரை விரிவுபடுத்தியவன் . கங்கை வெற்றியை அடுத்து இராஜேந்திர சோழனின் மாபெரும் படையெடுப்பு கடல் வழி கடார படையெடுப்பு கி.பி 1025 யில் நடந்தது .

கடாரம் - மலேயா , சுமத்ரா, ஜாவா , போர்னியோ , பிலிப்பைன்ஸ் , பார்மோஸா, சீனாவின் கான்டன் ஆகிய இடங்களில் பரவியிருந்தது.ஏறத்தாழ, பத்து நாட்கள் கடற்பயணம் , அதன்பின் நிலத்தில் சோர்வின்றி நிகழ்த்த வேண்டிய உற்சாகமான போர் , இவற்றிற்கேற்ப சீரான பயிற்சிகள் என திட்டமிட்டு , 60,000 யானைகளும் , பல்லாயிரக்கணக்கான குதிரைகளும் , இலட்சக்கணகான வீரர்களும் சுமந்து செல்லக்கூடிய கப்பல்களை கட்டி கடாரம் சென்ற இராஜேந்திரனை , கடாரத்தோரால் நிறுத்தமுடியவில்லை .

கடாரம் மட்டுமின்றி பர்மாவிலிருந்து , இந்தோனேஷியாவின் தெற்கு முனை வரை இராஜேந்திரன்வென்ற நிலப்பரப்பு ஏறத்தாழ 36 இலட்சம் சதுர கிலோ மீட்டர்கள் (இன்றைய இந்திய நிலப்பரப்பு 32,87,263 சதுர கிலோ மீட்டர்கள்) .

இதை மெய்க்கீர்த்தி,

"அலைகடல் நடுவுள் பலகலஞ் செலுத்தி

சங்கிராம விசையோத் துங்கவர்மன் ஆகிய

கடாரத் தரசனை வாகையம்

பொருகடல் கும்பக் கரியொடும்

அகப்படுத்து உரிமையிற் பிறக்கிய பெருநிதி பிறக்கமும் ,

ஆர்த்தவன் அகநகப் போர்த்தொழில் வாசலில்

விச்சா திரத்தொ ரணமு மொய்த்து ஒளிர்

புனைமணிப் புதவமுங் கனமணி கதவமும் .." என குறிப்பிடுக்கிறது .

இவ்வளவு சிரமப்பட்டு நாடுகளை வென்ற இராஜேந்திர சோழன் , அவற்றை தன் பேரரசுடன் இணைத்துக்கொள்ளவில்லை . கடாரத்து பட்டத்து யானையையும் , பெரும் திறைப் பொருளையும் மட்டுமே எடுத்து தன் மேலாதிக்கத்தை நிலைநாட்டியதோடு அவன் நிறைவடைந்தான் .

[தொகு] Reference

(இதயம் - 1/6/1999 )தமிழுக்கு இத்தனை சோதனைகள் ஏன் - முனைவர் .இ.ஜே. சுந்தர் .

ஏனைய மொழிகள்