திருக்கோணாசல வைபவம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.

திருக்கோணாசல வைபவம் இலங்கையின் திருக்கோணமலையில் அமைந்துள்ள திருக்கோணேச்சரத்தின் வரலாற்றைக் கூறும் நூலாகும். இந்நூல் திருக்கோணமலையைச் சேர்ந்த வே. அகிலேசபிள்ளை என்பவரால் 1889 இல் இயற்றப்பட்டது. சுமார் அறுபது ஆண்டுகளின் பின்னர் 1950 இலேயே நூலாசிரியரின் மகனான அளகக்கோன் என்பவரால் அச்சிடப்பட்டது. 1999 இல் இரண்டாவது பதிப்பு வெளிடப்பட்டது.