நானு ஓயா
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
நானு ஓயா இலங்கையின் மத்திய மாகணத்தின் நுவரெலியா தேர்தல் மாவடத்தில் நுவரெலியா நகரில் இருந்து 20 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள ஒரு நகரமாகும். இது அவிசாவளை நகரையும் நுவரெலியா நகரையும் இணைக்கும் ஏ-7 பெருந்தெருவில் அமைந்துள்ளது. மகாவலி கங்கையின் முக்கிய கிளையாரான நானு ஒயா நகரின் அருகே பாய்கிறது. இந்தியத் தமிழர்கள் பெரும்பான்மையாக உள்ள ஒரு நகரமாகும். இதன் அரசியல் நிர்வாகம் நுவரெலியா பிரதேச சபையால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இங்கு வாழும் பெரும்பான்மையான மக்கள் தேயிலை துறைச்சார்ப்பான தொழிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.மரக்கறி செய்கையும் கால்நடை வளர்ப்பும் இரண்டாம் நிலை முக்கிய தொழில்களாகும். நகரம் கடல் மட்டத்தில் இருந்து 1682 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது. இலங்கை தொடருந்து சேவையின் பதுளை-கொழும்பு பாதை இந்நகரூடகச் செல்கிறது.