ஆதி சங்கரர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.

ஆதி சங்கரர்
ஆதி சங்கரர்

ஆதிசங்கரர், அத்வைதம் - இரண்டற்ற நிலை என்கிற தத்துவத்தை உலகத்திற்கு எடுத்துக்காட்டிய தமிழர்.

பொருளடக்கம்

[தொகு] பிறப்பு

இவர் இன்றைய கேரளத்திலுள்ள காலடி என்னுமிடத்தில் பிறந்தார். இவரது அன்னையின் பெயர் ஆர்யாம்பாள். தந்தையார் பெயர் சிவகுரு. இவரது காலம் கி.மு இரண்டாம் நூற்றாண்டு எனவும் கி.பி ஏழாம் நூற்றாண்டு எனவும் இரு வாதங்கள் நிலவுகின்றன.

[தொகு] துறவறம்

தமது நான்காம் அகவையில் துறவறம் மேற்கொண்ட சங்கரர் கோவிந்த பகவத்பாதர் என்பவரிடம் அத்வைதம் முதலிய விஷயங்களைக் கற்றுத் தேர்ந்தார்.

[தொகு] மனீஷா பஞ்சகம்

தமது அத்வைதக் கொள்கைகளை பறைசாற்றி வரும்போது ஒரு நாள் சங்கரர் ஆற்றில் நீராடி விட்டு வருகிற பொது ஐந்து நாய்களுடன் சண்டாளர் ஒருவர் அவர் முன்னே வருகின்றார்.

அதைக் கண்டு பதைத்த சங்கரரின் சீடர்களும் சங்கரருக்கு வழி விட்டு ஒதுங்குமாறு அவரைக் கேட்கின்றனர். பின்னர் சங்கரரும் வழி விடுமாறு கோருகிறார். அப்போது அச் சண்டாளர் "தாங்கள் போதிக்கும் அத்வைதக் கொள்கைப் படி ஜீவாத்மாவும் பரமாத்மாவும் ஒன்றாயிற்றே. தாங்கள் எம்மை எப்படி நகரச் சொல்கிறீர்கள்? தாங்கள் சொல்வது ஏற்புடையதாக இல்லை என்னிலிருந்து நான் எவ்வாறு அகல்வது?" எனக் கேட்பதாக சங்கர விஜயம் கூறுகின்றது.

உண்மையுணர்ந்தவராய், அத்வைதத்தின் பரிபூர்ண உண்மையை தமக்கே உணர்த்தி அருளியதாக கூறி அச்சண்டாளரை தமது குருவாக ஏற்று சங்கரர் மனீஷா பஞ்சகம் பாடினார். இதுவே சங்கரருக்கு அத்வைத ஞானம் பரிபூர்ணமாக கிடைத்த சம்பவம் ஆகும்.

இவ்வுண்மையை சங்கரருக்கு உணர்த்த சண்டாள உருவில் சிவனே வந்ததாக சங்கர விஜயம் முதலிய நூல்கள் கூறுகின்றன.

[தொகு] ஷண்மத ஸ்தாபனம்

தொன்று தொட்டு நிலவி வந்த சைவம் வைணவம் சாக்தம் காணாபத்யம் கௌமாரம் சௌரம் முதலியவற்றை முறைப் படுத்தி ஆறு சமயங்களாக (ஷண்மதங்கள்) வகுத்தளித்தார்.

தமது எண்ணத்தில் சமூகத்திற்கு ஒவ்வாத ஆதாரமற்ற, தேவையற்ற சமயப் பழக்க வழக்கங்களாக கருதியவைகளைச் சாடவும் செய்தார்.

[தொகு] வாதங்கள்

காபாலிக சமயம், அவர் தடுத்தாட்கொண்ட சமயங்களுள் ஒன்று. இன்றைய சென்னைக்கு அருகில் இருக்கும் மாங்காடு எனும் ஊரே காபாலிகர்களோடு சங்கரர் வாதம் செய்த இடமாகும்.

கர்ம மீமாம்ஸா எனப் படும் கொள்கையினை பின்பற்றி மஹிஷ்மதி எனும் ஊரில் வசித்து வந்த மண்டன மிஸ்ரர் உடன் அவரது மனைவி சரஸவாணி முன்னிலையில் வாதம் செய்தார் சங்கரர். மண்டன மிஸ்ரரைத் தொடர்ந்து அவரது மனைவி சரஸவாணியுடனும் வாதிடுகின்றார் சங்கரர்.

இன்றைய தஞ்சை மாவட்டத்திலுள்ள திருவிடைமருதூர் எனும் ஊரில் சைவ சமயத்தவருடன் வாதிடுகின்றார் சங்கரர்.