சிரின் எபாடி
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
சிரின் எபாடி ( பாரசீக மொழி:عبادی; பிறப்பு யூன் 21 1947) ஈரானிய மனித உரிமைகள் போராளியாவார். இவர் ஈரானில் குழந்தைகளி மனித உரிமைகளை பாதுகாப்பதற்கான அமைப்பை நிறுவி செயற்பட்டார். 2003 ஆண்டில் அமைதிக்கான நோபெல் பரிசு பெற்றவர். இவருக்கு இப்பரிசானது மக்களாட்சி மற்றும் மனித உரிமைக்காகப்போராடியதற்காக வழங்கியிருக்கிறது. ஒரு வழக்குரைஞராக, பேராசியராக, எழுத்தராக, போராளியாக, உறுதியுடன், இரானிலும் வெளியிலும் மிகத்தெளிவாக அவர் தனது குரலை வெளிப்படுத்தியுள்ளார். அவர் துணிவுடனும், முழு மனதோடும், மிரட்டல்களைப் பொருட்படுத்தாமலும் நிலைத்து நின்று போராடியிருக்கின்றார்.
அவருடைய போராட்டக்களம் மனித உரிமை, எந்த சமூகமும் நாகரிகமானது அல்ல அது அதனுடைய குழந்தைகளையும் பெண்களையும் மதிக்காதபோது என்ற அடிப்படையில் காணப்பட்டது. வன்முறை மிகுந்த ஒரு சமூகத்தில், அவர் வன்முறையற்ற போராட்டத்தை வலியுறுத்தியிருக்கின்றார். ஒரு சமூகத்தின் கோலாட்சி தேர்தல் மூலமாகவே அமைக்கப்படவேண்டுமென்பது அவருடைய அடிப்படையான கருத்து. சமூகக்குழப்பங்களை விழிப்புணர்வு, பேச்சு வார்த்தை இவற்றின் அடிப்படையில் தீர்வு காணவேண்டுமென்பதை இவர் ஆதரிக்கின்றார்.
எபாடி ஒரு விழிப்புணர்வு பெற்ற முசுலிம். இவர் இசுலாமிற்கும் மனித உரிமைக்கும் இந்த ஒரு முரண்பாட்டையும் காணவில்லை. நோர்வே நோபெல் குழு ஒரு பெண் அதுவும் ஒரு முசுலிம் உலகத்துப்பெண்ணை அங்கீகரிப்பதில் மகிழ்வுறுகின்றது. அவரால் இந்த உலகம் மனித உரிமைக்காக எங்கெங்கெல்லாமிருந்து போராடுகின்றனரோ அவரோடு இயைந்து பெருமையடையும்.
கடந்த பத்தாண்டுகளாக, குடியாட்சியும் மனித உரிமையும் பல நாடுகளிலும் முன்னேறியுள்ளது. இந்த விருதால் நோபெல் குழு இந்த முன்னேற்றத்தை முடுக்கிவிடும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது.
இந்த விருதால் இரானிய மக்கள் தங்களின் குடிமகன் முதன்முறையாக இவ்விருதைப்பெறுவதற்காக மிகவும் பெருமைப்படுவர் என நம்புகின்றோம். இவ்விருது மனித உரிமைக்காகவும், குடியாட்சிக்காகவும்,இரான் நாட்டிலும், முசுலிம் உலகிலும், பிற நாடுகளிலும் போராடுபவர்களுக்கு புதிய உற்சாகத்தையும் தெம்பையும் தரும் என்பதில் ஐயமில்லை.