பா. அகிலன்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
பா. அகிலன் (அராலி, யாழ்ப்பாணம்) ஈழத்தின் புதுக்கவிதையாளர்களில் ஒருவர். கவிதைகளில் மட்டுமின்றி நாடகத்துறையிலும் அதிக ஈடுபாடுள்ளவர். இவரது கவிதைகள் எண்ணிக்கையில் குறைவெனினும் அதிக கவனம் பெற்றவை. இவரது கவிதைகளின் தொகுப்பு பதுங்குகுழி நாட்கள் என்ற தலைப்பில் வெளியாகியுள்ளது.