சுந்தர ராமசாமி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.

சுந்தர ராமசாமி

பிறப்பு: 1931 மே 30

நாகர்கோவில், தமிழ்நாடு, இந்தியா,

இறப்பு: 2005 அக் 14
கலிபோர்னியா, அமெரிக்கா
தன்மையாளர்: நாவலாசிரியர், சிறுகதை எழுத்தாளர், கவிஞர்.
தேசியம்: இந்தியர்
எழுதிய காலம்: 1951 - 2005
முதல்படைப்பு: தோட்டியின் மகன் -மொழிபெயர்ப்பு
Influences: தொ.மு.சி.ரகுநாதன், புதுமைப்பித்தன்
Influenced: ஜெயமோகன்

சுந்தர ராமசாமி, (மே 30, 1931 - அக்டோபர் 14, 2005) நவீன தமிழ் இலக்கியத்தின் மிகச் சிறந்த எழுத்தாளர்களுள் ஒருவர். இவர் ஒரு நாவலாசிரியர், சிறுகதை எழுத்தாளர் மற்றும் கவிஞர் என்று பல பரிமாணங்களைக் கொண்டவர். பசுவய்யா என்ற புனைப்பெயரில் கவிதைகள் எழுதுபவர். நவீனத் தமிழ் இலக்கியத்தில், தமிழ் மொழியினை பல்வேறு பரிமாணங்களில் வாசகர்களுக்கு அறிமுகப்படுத்தியவை இவர் எழுத்துக்கள்.

இவர், நாகர்கோவில் அருகே உள்ளே தழுவிய மகாதேவர் கோவில் என்ற கிராமத்தில் பிறந்தார். தன் இளைய பருவத்தில்,தொ.மு.சி.ரகுநாதனிடம் மிகுந்த ஆர்வத்தை கொண்டிருந்தார். தொ.மு.சி-யினால் மார்க்ஸிய தத்துவங்களிலும் ஈர்க்கப்பட்டவராக இருந்தார். பிறகு தொ.மு.சி ஆசிரியராக இருந்த சாந்தி என்ற பத்திரிகையில் எழுதத் தொடங்கினார்.

பொருளடக்கம்

[தொகு] படைப்புகள்

[தொகு] நாவல்

  • ஒரு புளியமரத்தின் கதை
  • ஜே.ஜே. சில குறிப்புகள்
  • குழந்தைகள் பெண்கள் ஆண்கள்

[தொகு] சிறுகதைகள்

  • காகங்கள்
  • பல்லக்குத் தூக்கிகள்

[தொகு] கட்டுரைகள்

  • காற்றில் கரைந்த பேரோசை
  • விரிவும் ஆழமும் தேடி
  • ந.பிச்சமூர்த்தியின் கலை:மரபும் மனிதநேயமும்
  • தமிழகத்தில் கலவி: வே.வசந்தி தேவியுடன் ஒர் உரையாடல்
  • இறந்த காலம் பெற்ற உயிர்

[தொகு] கவிதை

  • நடுநிசி நாய்கள் (க்ரியா வெளியீடு)
  • 107 கவிதைகள்

[தொகு] மொழிபெயர்ப்பு

  • செம்மீன் - தகழி சங்கரப்பிள்ளை
  • தோட்டியின் மகன் - தகழி சங்கரப்பிள்ளை

[தொகு] நினைவோடைகள்

  • க.நா.சுப்ரமண்யம்
  • சி.சு. செல்லப்பா
  • கிருஷ்ணன் நம்பி
  • ஜீவா

[தொகு] வெளி இணைப்புகள்