மாற்கு நற்செய்தி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.

புனித மாற்கு, வெனிஸ்
புனித மாற்கு, வெனிஸ்
புதிய ஏற்பாடு
மத்தேயு
மாற்கு
லுக்கா
யோவான்
பணிகள்
உரோமர்
1 கொரிந்தியர்
2 கொரிந்தியர்
கலாத்தியர்
பிலிப்பியர்
பிலேமோன்
1 தெசலோனிக்கியர்
2 தெசலோனிக்கியர்
எபேசியர்
கொலொசெயர்
1 திமோத்தேயு
2 திமோத்தேயு
தீத்து
எபிரெயர்
யாக்கோபு
பேதுரு
பேதுரு
யோவன்
யோவன்
யோவன்
யூதா
வெளிபபடுத்தல்கள்


மாற்கு நற்செய்தி கிறிஸ்தவ விவிலியத்தின் புதிய ஏற்பாட்டு நற்செய்தி நூல்களில் இரண்டாவது நூலாகும். இயேசுவின் திருமுழுக்கிலிருந்து (ஞானஸ்நானம்) நூல் ஆரம்பிக்கிறது. இயெசுவின் வாழ்வின் கடைசி வாரத்துக்கு முக்கியத்துவம் கொடுத்து எழுதப்பட்டுள்ளது. கி.மு. 60-80 இடைப்பட்ட காலத்தில் எழுதப்பட்டது. நான்கு நற்செய்தி நூல்களில் முதலாவதாக எழுதப்பட்டது என கருதப்படுகிறது. மொத்தம் 16 அதிகாரங்களில் 678 வசனங்களை கொண்டுள்ளது.

மாற்கு புனித இராயப்பரின் (Peter) சீடராவார். இராயப்பர் இயேசு பற்றி கூறியவற்றையும் வேறு மூலங்களிலிருந்து தான் பெற்ற தகவல்களையும் தொகுத்து, மாற்கு நற்செய்தி எழுதப்பட்டதாக கருதப்படுகிறது. மூல நூல் கிரேக்க மொழியில் எழுதப்பட்டது. மாற்கு இந்நூலை எழுதும் போது உரோமயில் இருந்த்தாக முன்னர் கருத்ப்பட்டாலும் இப்போது அவர் சிரியாவில் இருந்தே இந்நூலை எழுதினார் எனற கருத்து மேலோங்கியுள்ளது.


மூல நூல் உரோமை இராச்சியத்தின் கிரேக்க மொழிபேசுபவர்களுக்காக (யூதரல்லாதோர்) எழுதப்பட்டது. எனவே நூலில் யூத வழக்குகள் விரிவாக விளக்கப்பட்டுள்ளன. அரமைக் (இயேசு பேசிய மொழி) பழமொழிகளையும் வசனங்களையும் தெளிவுபடுத்தியிக்கிறார். பெரும்பாலான வசனங்கள் மத்தேயு மற்றும் லூக்கா நற்செய்திகளுடன் பொதுவானதாக காணப்படுகிறது. ஆய்வாளர்களீன் கருத்துப்படி 51 வசனங்கள் மட்டுமே மாற்குவின் சுயமான வசனங்களாகும். இம்மூன்று நூல்களும் (மத்தேயு, மாற்கு, லூக்கா) ஒத்திருப்பது அவர்கள் ஒரே மூலத்தை பாவித்படியுனாகும் என்பது ஆய்வாள்ரின் கருத்தாகும்.

[தொகு] உசாத்துணை