சோலைக்கிளி
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
சோலைக்கிளி (இயற்பெயர்: உதுமாலெவ்வை முகம்மது அதீக்) இலங்கையின் வடகிழக்கு மாகாணத்தின் கல்முனையைச் சேர்ந்த ஒரு கவிஞர். 1980களிலே எழுதத் தொடங்கியவர். இருப்பு சஞ்சிகையின் ஆசிரியர்களுள் ஒருவர்.
[தொகு] விருதுகள்
- இலங்கை அரசின் சாகித்திய விருது (பாம்பு நரம்பு மனிதன் - சிறந்த கவிதைத் தொகுதி, 1996)
- இலங்கை அரசின் சாகித்திய விருது (பனியில் மொழி எழுதி - சிறந்த கவிதைத் தொகுதி, 1997)
- சுதந்திர இலக்கிய விழா விருது (காகம் கலைத்த கனவு - கவிதைத் தொகுதி 1991)
- இலங்கை வடக்கு கிழக்கு மாகாண சபையின் சாகித்திய விருது (எட்டாவது நகரம் - கவிதைத் தொகுதி, 1988)
- ஜப்பான் அரசின் கலாசார வுங்கா விருது (2005)
[தொகு] வெளியான நூல்கள்
இதுவரையில் ஏழு கவிதைத்தொகுதிகளை வெளியிட்டுள்ளார். அவற்றில் சில:
- பாம்பு நரம்பு மனிதன்
- காகம் கலைத்த கனவு
- பனியில் மொழி எழுதி
- எட்டாவது நகரம்
- என்ன செப்பங்கா நீ..