வேலூர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.

வேலூர், இந்திய மாநிலமான தமிழகத்தைச் சேர்ந்த நகரமும், வேலூர் மாவட்டத்தின் தலைநகரும் ஆகும். பாலாற்றின் கரையில் உள்ள வேலூரின் முக்கிய இடமாக வேலூர் கோட்டை விளங்குகிறது. இக்கோட்டையின் உள்ளே இந்துக் கோயில், கிறித்தவ ஆலயம், இஸ்லாமியரின் மசூதி ஆகியவை உள்ளன.

[தொகு] வரலாறு

வேலூர் கோட்டை 16ஆம் நூற்றாண்டில் விஜயநகர ஆட்சியின் போது சின்ன பொம்மி நாயக்கரால் கட்டப்பட்டது. 17ஆம் நூற்றாண்டின் மத்தியில் பிஜாப்பூர் சுல்தான் இக்கோட்டையை கைப்பற்றினார். பின்னர் மராட்டியர்களாலும், தில்லியின் தௌத் கானாலும் கைப்பற்றப்பட்டது. இதன் பின்னர் ஆற்காடு நவாபுகளின் பொறுப்பில் இக்கோட்டை விடப்பட்டது. 1760ஆம் ஆண்டு இக்கோட்டை பிரிட்டிஷ் கிழக்கிந்திய கம்பெனியினரின் வசம் சென்றது. திப்பு சுல்தானை வென்ற பிறகு அவருடைய மகன்களை இக்கோட்டையில் ஆங்கிலேயர் சிறை வைத்தனர். 1806 ஆம் ஆண்டு ஆங்கிலேய ஆட்சிக்கு எதிராக இக்கோட்டையில் இந்திய சிப்பாய்கள் கலகம் நிகழ்த்தினர்.

[தொகு] வெளி இணைப்புகள்


தமிழ்நாட்டு முத்திரை தமிழ்நாடு


தமிழ்நாடு தொடர்பான தலைப்புகள் | வரலாறு | அரசியல் | தமிழர்

தலைநகரம் சென்னை
மாவட்டங்கள் ஈரோடுகடலூர்கரூர்கன்னியாகுமரி

காஞ்சிபுரம்கிருஷ்ணகிரிகோயம்புத்தூர்சிவகங்கைசென்னைசேலம்தஞ்சாவூர்தர்மபுரிதிண்டுக்கல்திருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருவண்ணாமலைதிருவள்ளூர்திருவாரூர்தூத்துக்குடிதேனிநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபுதுக்கோட்டைபெரம்பலூர்மதுரைஇராமநாதபுரம்விருதுநகர்விழுப்புரம்வேலூர்

முக்கிய நகரங்கள் அம்பத்தூர்ஆலந்தூர்ஆவடிஈரோடுகடலூர்காஞ்சிபுரம்கும்பகோணம்கோயம்புத்தூர்சென்னைசேலம்தஞ்சாவூர்தாம்பரம்திண்டுக்கல்திருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பூர்திருவண்ணாமலைதிருவொற்றியூர்தூத்துக்குடிநாகர்கோயில்நெய்வேலிபல்லாவரம்புதுக்கோட்டைமதுரைஇராஜபாளையம்வேலூர்
"http://ta.wikipedia.org../../../%E0%AE%B5/%E0%AF%87/%E0%AE%B2/%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D.html" இலிருந்து மீள்விக்கப்பட்டது