நாதநாமக்கிரியை
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
நாதநாமக்கிரியை இது 15வது மேளகர்த்தா இராகமாகிய, "அக்னி" என்றழைக்கப் படும் 3வது சக்கரத்தின் 3 வது மேளமாகிய மாயாமாளவகௌளையில் பிறக்கும் இராகம் ஆகும். கருணைச்சுவையை வெளிப்படுத்தும் இவ்விராகம் ஒரு துணை (உபாங்க) இராகம் ஆகும். மாலையில் பாட உகந்த இந்த இராகமானது இசை நாடகங்களில் அதிகமாகப் பயன்படுத்தப்படும்.
ஆரோகணம்: | ஸ ரி1 க3 ம1 ப த1 நி3 |
அவரோகணம்: | நி3 த1 ப ம1 க3 ரி1 ஸ நி3 |
- இந்த இராகத்தில் ஷட்ஜம், சுத்த ரிஷபம் (ரி1), அந்தர காந்தாரம் (க3), சுத்த மத்திமம்(ம1), பஞ்சமம், சுத்த தைவதம் (த1), காகலி நிஷாதம் (நி3) ஆகிய சுரங்கள் வருகின்றன.
[தொகு] இதர அம்சங்கள்
- இது நிஷாதம் எல்லையாகக் கொண்ட ஒரு இராகம் அதாவது மந்தர ஸ்தாயி சுரங்கள் மட்டுமே வந்து மேல் ஸ்தாயி ஷட்ஜம் தொடாத இராகம்; இதனை நிஷாதாந்திய இராகம் என்றும் கூறுவர்.
- பண்டைத் தமிழிசையில் இவ்விராகத்திற்கு பெயர் பண் சீகாமரம்.
- மாயாமாளவகௌளை தோன்றுவதற்கு முன்பே இவ்விராகம் வழக்கத்தில் இருந்தது.
- சௌக கால பிரயோகங்கள் இவ்விராகத்தில் அதிகம் பயன்படுத்தப்படுகின்றன.
- பிரத்தியாகத கமகம் இந்த இராகத்தின் ஒரு சிறப்பு அம்சமாகும்.
- கிராமிய இசையிலிருந்து மரபு இசைக்கு வந்த இராகங்களில் இதுவும் ஒன்று. ஆனந்தக் களிப்பு என்ற வர்ண மெட்டு இவ்விராகத்தில் அமைந்ததாகும்.
[தொகு] உருப்படிகள்
- திவ்வியநாமக்கீர்த்தனை : "கருணாஜலதே" - ஆதி - தியாகராஜ சுவாமிகள்.
- கிருதி : "அனுமானே நீயே" - மிஸ்ரசாபு - அருணாசலக் கவிராயர்.
- கிருதி : "சிவலோக நாதனை" - ரூபகம் - கோபாலகிருஷ்ண பாரதியார்.
- கிருதி : "நீலகண்டாய" - மிஸ்ரசாபு - முத்துசுவாமி தீட்சிதர்.
- கிருதி : "நினைப்பதெப்போது" - ஆதி - மாயூரம் வேதநாயகம் பிள்ளை.