அழகப்பர் பொறியியற் கல்லூரி
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
காரைக்குடியைச் சேர்ந்த முனைவர் ஆர்.எம்.அழகப்ப செட்டியார் பல கல்வி நிறுவனங்களை நிறுவி கல்வித் தொண்டாற்றினார். அவர் உருவாக்கிய கல்வி நிறுவனங்களில் ஒன்றுதான் காரைக்குடியிலிருக்கும் அழகப்ப செட்டியார் பொறியியல் மற்றும் தொழிநுட்பக் கல்லூரி.
[தொகு] வரலாறு
இக்கல்லூரி 1952-ஆம் வருடம் ஜூலை திங்கள் 21-ஆம் நாள் துவங்கப்பெற்றது.
கல்லூரியின் பிரதான கட்டிடத்தை அன்றய குடியரசுத்தலைவர் முனைவர் இராஜேந்திர பிரசாத் 1953-ஆம் ஆண்டு பிப்ரவரி 19 அன்று அடிக்கல் நாட்டி துவங்கிவைத்தார்.
1966-ஆம் ஆண்டு இக்கல்லூரி தமிழ்நாடு அரசின் வசம் ஒப்படைக்கப்பட்டது.
1969-ஆம் ஆண்டு மின்னணு மற்றும் தொலைத்தொடர்பு பொறியியல் (Electronics and Communication Engineering) துறைக்கான புலம் (faculty) துவங்கப்பட்டது.
1983-ஆம் ஆண்டு நுண்ணலை மற்றும் ஒளியியல் பொறியியல் (Microwave and Optical Engineering) பட்டமேற்படிப்பு (M.E) துவங்கப்பட்டது.
1988-ஆம் ஆண்டு கணிப்பொறி பயன்பாட்டியல் (Computer Application) பட்டமேற்படிப்பு (MCA) துவங்கப்பட்டது.
2001-ஆம் ஆண்டு கணிப்பொறி அறிவியல் பொறியியல் படிப்பு (B.E Computer Science) துவங்கப்பட்டது.
31.12.2001 அன்று அண்ணா பல்கலைக்கழகத்தின் ஒன்றினைந்த கல்லூரியாக ஆக்கப்பட்டது.