கால்நடை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.

மறி ஆடு
மறி ஆடு

வேளாண்மைத் துறையில், கால்நடை என்பது, உணவு, உரோமம், உடல்வலுப் பயன்பாடு என்பவற்றை நோக்கமாகக் கொண்டு வளர்க்கப்படுகின்ற விலங்குகளைக் குறிக்கும். கால்நடைகள் வளர்ப்பது, வாழ்வாதார மட்டத்திலோ அல்லது பெருமளவு இலாபம் தரக்கூடிய வகையிலோ நடைபெறலாம். கால்நடை வளர்ப்பு என்பது நவீன வேளாண்மைத் துறையின் முக்கிய கூறுகளில் ஒன்றாக இருக்கிறது. மனித சமூகம் வேட்டை மற்றும் உணவு சேகரித்தலை வாழ்க்கைமுறையாகக் கொண்டிருந்த நிலையிலிருந்து வேளாண்மை நிலைக்கு மாறிய காலத்திலிருந்து கால்நடை வளர்ப்பு இடம்பெற்றுவருகிறது.

[தொகு] கால்நடை வளர்ப்பின் தோற்றம்

 கால்நடை வளர்ப்பில் முக்கிய இடம்பெறும் செம்மறியாடுகள்.
கால்நடை வளர்ப்பில் முக்கிய இடம்பெறும் செம்மறியாடுகள்.

வேளாண்மைச் சமூகங்களின் தோற்றத்துடனேயே கால்நடை வளர்ப்புத் தொடங்கியது. விலங்குகளின், இனப்பெருக்க மற்றும் வாழ்க்கைச் சூழலை மனிதன் கட்டுப்படுத்தத் தொடங்கியபோது சில விலங்குகள் வீட்டுவிலங்குகள் ஆயின. காலப் போக்கில், கால்நடைகளின், கூட்டு நடவடிக்கை, வாழ்க்கை வட்டம், உடற்கூறு என்பவற்றில் தீவிர மாற்ரங்கள் உருவாகின. இன்றைய பண்ணை விலங்குகள் காடுகளில் வாழ்வதற்குப் பொருத்தமற்றவை ஆகும். ஆடுகள், செம்மறியாடுகள், பன்றிகள் என்பன கி.மு 8000 ஆண்டளவிலேயே ஆசியாவில் வளர்ப்பு விலங்குகளாக இருந்தன. குதிரை வளர்ப்பு கி.மு 4000 ஆண்டளவில் தொடங்கியதாகக் கருதப்படுகின்றது.

[தொகு] கால்நடை வளர்ப்பின் நோக்கங்கள்

  • இறைச்சி
  • பால் பொருட்கள்
  • இழைகள் - கால்நடைகளின் மயிர்
  • உரம் - கால்நடைக் கழிவுகள்
  • வேலைக்கு - வண்டி இழுக்க, பாரம் தூக்க
ஏனைய மொழிகள்