சு. இராசரத்தினம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.

சு. இராசரத்தினம் (1884 - 1970), இந்து போர்ட் இராசரத்தினம் எனச் சிறப்பாக அழைக்கப்பட்டவர். சைவ சமய அபிவிருத்தியில் கவனம் செலுத்தியவர். யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த தமிழ் அரசியல்வாதி.

[தொகு] வாழ்க்கைச் சுருக்கம்

இவர் சுப்பிரமணியம் என்பவரின் புதல்வர். வழக்கறிஞராக இருந்தவர். டிசம்பர் 1, 1923 இல் சேர் பொன்னம்பலம் இராமநாதன், சேர் வைத்திலிங்கம் துரைச்சாமி போன்றோரின் ஆதரவுடன் ஆரம்பிக்கப்பெற்ற சைவ வித்தியாபிவிருத்திச் சங்கத்தின் வளர்ச்சியிலே முக்கிய பங்காற்றினார். தமிழ்ப் பகுதிகளில் சைவப்பள்ளிகளை ஆரம்பித்து திறம்பட நடத்தி வந்தார். அக்டோபர் 1928 இல் திருநெல்வேலியில் சைவாசிரியர் பயிற்சி நிறுவனத்தை ஆரம்பிக்கக் காரணகர்த்தராக இருந்திருக்கிறார்.

[தொகு] சட்டசபை உறுப்பினர்

1924 ஆம் ஆண்டு முதல் சட்டசபைப் பிரதிநிதியாக ஏழு ஆண்டுகள் பதவி வகித்தார். அக்காலத்தில் சைவர்களுக்குத் தீமையாக நடைமுறையில் இருந்த பல சட்டங்களைத் திருத்தியமைக்கக் காரணமாயிருந்தார். கிறிஸ்தவப் பள்ளிகளுக்கு அருகில் சைவப்பள்ளிகள் அமைக்கவும், சைவப் பள்ளிகளுக்கு உதவி நன்கொடை பெற்றுத்தரவும் அக்காலகட்டத்தைய சட்டசபை காரணமானது குறிப்பிடத்தக்கது.