கோயிலூர் மந்திரிபுரீசுவரர் கோயில்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
கோயிலூர் மந்திரிபுரீசுவரர் கோயில் (திருவுசாத்தானம்) பாடல் பெற்ற தலங்களில் ஒன்றாகும். சம்பந்தர் பாடல் பெற்ற இத்தலம் தஞ்சை மாவட்டத்தில் அமைந்துள்ளது. இத்தலத்தில் இறைவன் விசுவாமித்திரருக்கு நடனக்காட்சியருளினார் என்பதும் இராமர் சேது அணை கட்டுவதற்காக இறைவனிடம் மந்திர உபதேசம் பெற்றார் என்பதும் தொன்நம்பிக்கைகள்.