அன்னமாச்சாரியார்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.

தல்லபாக்கம் அன்னமாச்சாரியார் (மே 9, 1408 - பெப்ரவரி 23, 1503) 15ம் நூற்றாண்டில் தென்னிந்தியாவில் வாழ்ந்த கருநாடக இசைக் கலைஞர். திருப்பதி வெங்கடேஸ்வரர் கோயிலுடன் மிக நெருங்கிய தொடர்பு கொண்டிருந்தவர். வெங்கடேஸ்வரர் மீது அவர் பாடிய சங்கீர்த்தனைகள் என்ற பஜனைப் பாடல்கள் புகழ்பெற்றவை.

பொருளடக்கம்

[தொகு] வாழ்க்கைக் குறிப்பு

அன்னமாச்சாரியார் ஆந்திரா மாநிலத்தில் தல்லபாக்கம் என்ற ஊரில் பிறந்தவர். இவரது மனைவி திம்மக்கா என்பவரும் பாடல்கள் இயற்றியவர்.

அன்னமாச்சாரியார் தென்னிந்திய இசையில் தோற்றுவித்த மரபுகள் பல பின்வந்தோரால் வளர்க்கப்பட்டு விருத்தியடைந்தன. பஜனை மரபினைத் தொகுத்து வழங்கிய சிறப்பு இவருக்குண்டு. பல்லவி, அநுபல்லவி, சரணம் போன்றவை இவரால் உருவாக்கப்பட்டவை என்று கருதப்படுகிறது.

இவருடைய மகன் திருமாலாச்சாரியார், பேரன் சின்னையர் ஆகியோரும் தென்னிந்திய இசை வராலாற்றில் முக்கிய இடம் வகிப்பவார்கள்.

[தொகு] பஜனைப் பாடல்கள்

இவர் 32,000க்கும் மேற்பட்ட பஜனைப் பாடல்களை (சங்கீர்த்னைகள்) கருநாடக இசை முறையில் இயற்றியுள்ளார். இவரது பெரும்பாலான பாடல்கள் செப்புத் தட்டுகளில் எழுதப்பட்ட இவரது பெரும்பாலான பாடல்கள் திருப்பதி வெங்கடேஸ்வரர் கோயிலில் உள்ள சிறு அறை ஒன்றில் சுமார் மூன்று நூற்றாண்டுகளாக மறைத்து வைக்கப்பட்டிருந்து பின்னர் 1922ஆம் ஆண்டில் கண்டுபிடிக்கப்பட்டன. இவரது பாட்ல்களில் சூமார் 12,000 மட்டுமே இப்போது கிடைக்கப்பட்டுள்ளன.

பஜனைப் பாடல்கள் தவிர ஒவ்வொன்றும் 100 பாடல்கள் அடங்கிய 12 சாதகங்களையும் இயற்றியிருக்கிறார். இராமனைப் பாடும் மரபிலும் இவருக்குப் பங்குண்டு.


[தொகு] திரைப்படம்

இவரது வாழ்க்கையை மையமாகக் கொண்டு அன்னமையா என்ற தெலுங்குத் திரைப்படம் கே. ராகவேந்திரராவின் தயாரிப்பில் தயாரிக்கப்பட்டது. இத்திரைப்படத்தில் அன்னமாச்சாரியாரின் கீர்த்தனைகள் பல இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

[தொகு] வெளி இணைப்புகள்

ஏனைய மொழிகள்