குணசீலம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.

குணசீலத் திருத்தலம் திருச்சி மாவட்டத்திலுள்ள புகழ் பெற்ற திருத்தலங்களில் ஒன்றாகும். திருச்சியிலிருந்து சேலம் செல்லும் வழியில் அமையப்பெற்றுள்ள இக்கோவிலிற்கு மனநோயாளிகள் சிகிச்சைக்காக வரவழைக்கப்படுவது இத்திருத்தலத்தின் சிறப்பம்சமாகும். மேலும் இத்திருத்தலத்தில் பிரசன்ன வெங்கடாச்சலபதி குடிகொண்டுள்ள இவ்வாலயம் 108 திவ்ய தேசங்களுள் ஒன்றாகக் கருதப்படுகின்றது. இத்திருத்தலத்திற்கு அருகாமையிலேயே காவிரி ஆறு ஓடுகின்றது.

[தொகு] வரலாற்றுக் கூற்றுகள்

குணசீலத்திருத்தலத்தின் பெயரானது குணசீலர் எனும் மகரிஷியினுடையை பெயரால் அழைக்கப்படுகின்றது எனவும், பிரசன்ன வெங்கடாச்சலபதியின் கோவிலை சோழ மன்னர்களில் ஒருவனான ஞான வர்மாவால் சிறியதாகக் கட்டப்பெற்றதாகவும் மேலும் கடவுளின் வாக்குப்படி இக்கோவில் கலியுகமான 5000 வருடத்தில் இத்திருக்கோவில் மிகப்பெரிய கோவிலாக கட்டப்படவுள்ளதாக சான்றுகள் விளக்குகின்றன.