எஸ். ஜேசுரட்னம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.

இளவாலையில் பிறந்த இவர் புகழ் பெற்ற வானொலி, திரைப்பட நடிகர் ஆவார். தற்போது பிரான்ஸ் நாட்டில் வசித்து வருகிறார். இப்போதும் அங்கே தயாராகும் குறுந்திரைப் படங்களில் நடித்து வருகிறார்.

[தொகு] வானொலியில்

இலங்கை வானொலியில் கிராமிய சேவையில் தொடராக ஒலிபரப்பான 'முகத்தார் வீடு' என்ற நாடகத்தை எழுதியதோடு, பிரதான பாத்திரத்தில் நடித்து புகழ் பெற்றவர்.

[தொகு] திரைப்படத்தில்

'வாடைக்காற்று' திரைப்படத்தில், 'பொன்னுக் கிழவர்' பாத்திரத்தில் நடித்து, சிறந்த தமிழ் துணை நடிகருக்கான ஜனாதிபதி விருதைப் பெற்றவர்.