காளையார்கோயில் காளேசுவரர் கோயில்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
காளையார்கோயில் காளேசுவரர் கோயில் (திருக்கானப்பேரூர்) பாடல் பெற்ற தலங்களில் ஒன்றாகும். சம்பந்தர், சுந்தரர் ஆகியோரின் பாடல் பெற்ற இத்தலம் இராமநாதபுரம் மாவட்டத்தில் அமைந்துள்ளது. இத்தலத்தில் இறைவன் காளை வடிவங் கொண்டு கையில் பொற்செண்டும் திருமுடியிற் சுழிதும் கொண்டு சுந்தரருக்குக் காட்சி தந்தார் என்பது தொன்நம்பிக்கை.