தமிழீழ தேசிய தொலைக்காட்சி
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
தமிழீழ தேசிய தொலைக்காட்சி என்பது தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பினால் நடாத்தப்படும் செய்மதித் தொலைக்காட்சிச் சேவையாகும். 2005 மார்ச் 26 ம் திகதி துவங்கப்பட்ட இத் தொலைக்காட்சிச் சேவையின் தலைமை நிலையம் கிளிநொச்சியில் அமைந்துள்ளது. இச் சேவையே இலங்கையில் ஆரம்பிக்கப்பட்ட முதலாவது செய்மதித் தொலைக்காட்சிச் சேவையாகும். தினமும் இரண்டு மணிநேரம் ஓளிபரப்பாகிறது. இலங்கை, இந்தியா, மாலைதீவு, பாக்கிஸ்தான் போன்ற நாடுகளில் செய்மதித் தொடர்பு மூலம் இதனைப் பார்க்கலாம்.