கண்ணாப்பூர் நடுதறியப்பர் கோயில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.

கண்ணாப்பூர் நடுதறியப்பர் கோயில் (கன்றாப்பூர் கோயில்) பாடல் பெற்ற தலங்களில் ஒன்றாகும். அப்பர் பாடல் பெற்ற இத்தலம் தஞ்சை மாவட்டத்தில் அமைந்துள்ளது. இத்தலத்தில் வைணவனுக்கு மனைவியான சைவப்பெண் ஒருவர் சிவலிங்க வழிபாடு செய்வது கண்டு அதனைக் கோடரியால் வெட்ட இறைவன் வெளிபட்டு அருள் புரிந்தார் என்பது தொன்நம்பிக்கை.