நெல்லி
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
நெல்லி (Emblica offinalis அல்லது Phyllanthus emblica) யுபோர்பியேசி குடும்பத்தைச் சேர்ந்த ஒரு தாவரம். இது இந்திய மருத்துவ முறைகளில் வெகுவாகப் பயன்படுத்தப்படுகிறது.
[தொகு] அடங்கியுள்ள சத்துக்கள்
நெல்லிக்காயில் புரதம், கொழுப்பு, கரிச்சத்து, சுண்ணாம்பு, தாதுப் பொருட்கள், இரும்பு, மற்றும் அதிக அளவில் வைட்டமின் 'சி' சத்து ஆகியவை உள்ளன.
[தொகு] மருத்துவப் பண்புகள்
இது இதயத்திற்கு வலிமையை வழங்குகிறது. மற்றும் குடற்புண், இரத்தப்பெருக்கு, நீரிழிவு, கண் நோய் ஆகியவற்றைக் குணமாக்கும். அதன் காரணமாக கல்ப உருவிலும், வற்றல் உருவிலும், பாகு வடிவத்திலும், களிம்பு வடிவத்திலும் இதைப் பயன்படுத்துவர். இது தவிர நெல்லிக்காய் தைலம் உச்சந்தலையைக் குளிரச் செய்யும் மற்றும் கருமையான தலைமயிரைத் தரும்.
[தொகு] தமிழ் இலக்கியத்தில் இடம்
நீண்ட ஆயுளைத் தரவல்ல நெல்லிக்கனி ஒன்று மன்னன் அதியமானுக்கு கிடைக்கிறது. அந்நெல்லிக்கனியை தான் உண்பதை விட ஔவையார் உட்கொண்டால் தமிழுக்கு மிக்க பயன் விளையும் என்று அவருக்கு கொடுத்ததாக இலக்கியத்தில் உள்ளது.