இராமலிங்க அடிகள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.

இராமலிங்க அடிகள்படிம மூலம்:TamilNation.org
இராமலிங்க அடிகள்
படிம மூலம்:TamilNation.org

வள்ளலார் என்று அழைக்கப்படும் இராமலிங்க அடிகளார் (அக்டோபர் 5, 1823 - ஜனவரி 23, 1873) ஓர் ஆன்மீகவாதி ஆவார்.

பொருளடக்கம்

[தொகு] பிறப்பு

இவர் சிதம்பரத்தில் இருந்து 10மைல் தொலைவிலுள்ள மருதூரில் பிறந்தவர். பெற்றோர் இராமையாபிள்ளை, சின்னம்மாள். இராமலிங்கர் பிறந்த எட்டாம் மாதத்திலேயே தந்தையை இழந்தார். தாயார் குழந்தைகளோடு பொன்னேரி சென்று வாழ்ந்தார். பின்னர் சென்னையில் குடியேறினார்.

[தொகு] சன்மார்க்க சிந்தனையாளர்

தன் வாழ்வின் பெரும்பகுதியை சென்னையில் வாழ்ந்த இவர், நவீன சமுதாயங்களின் பிரச்சினைகளை உணர்ந்திருந்தார். அனைத்து சமய நல்லிணக்கத்திற்காகவும் (சமரச சமயம்) சன்மார்க்கத்திற்காகவும் (righteousness in all endeavours) தன் வாழ்நாளை அர்ப்பணித்து பணியாற்றினார். இந்நோக்கத்தை அடையும் பொருட்டு சிதம்பரம் அருகே உள்ள வடலூரில் சத்திய ஞானசபை மற்றும் சத்திய தருமசாலை அமைத்தார். அவர் வாழ்ந்த காலத்தில் அவருடைய சிந்தனைகள் மிகவும் முற்போக்குடையதாக கருதப்பட்டாலும், தற்பொழுது உலகெங்கும் அவருடைய சிந்தனைக்கு ஒத்த கொள்கைகள் புரிந்துகொள்ளப்பட்டு பின்பற்றப்படுகிறது.

[தொகு] திருவருட்பா

இவர் பாடிய எட்டாயிரம் பாடல்களின் திரட்டு திருவருட்பா என்று அழைக்கப்படுகிறது. இவரது உரைநடை, கடிதங்கள், யாவும் தொகுக்கப்பெற்றுத் தனி நூலாக ஊரன் அடிகள் வெளியிட்டுள்ளார்.

[தொகு] இவற்றையும் பார்க்கவும்

[தொகு] வெளி இணைப்புகள்


ஏனைய மொழிகள்