ஆதியாகமம்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.

ஆதியாகமம் கிறிஸ்தவ விவிலியத்தின் பழைய ஏற்பாட்டின் முதலாவது நூலாகும். விவிலியத்தில் காணப்படும் திருச்சட்ட நூல்களில் (டோறா அல்லது ஆகம நூல்கள்) முதலாவதாகும். யூத நம்பிக்கையின் படி இது மோசேயால் எழுதப்பட்டதாகும். உலகின் படைப்பு முதல் இஸ்ரவேல் மக்கள் எகிப்துக்கு செல்லும் வரையான வரலாற்றை கூறுகின்றது. மொத்தம் 50 அதிகாரங்கள் காணப்படுகிறது.
பொருளடக்கம் |
[தொகு] அறிமுகம்
ஆதியாகமம் கடவுளால் உலகம் படைப்பு, ஆதாம் ஏவாளின் பாவம், காயின் ஆபேல் கதை மற்றும் நோவாவின் பெருவெள்ளப்பெருக்குடன் ஆரம்பிக்கிறது.
12 ஆம் அதிகாரம் அபிராமின் (பின்பு ஆபிரகாம்) அழைப்போடு ஆரம்பிக்கிறது. கடவுள் அபிராமை ஊர் என்ற அவரது சொந்த ஊரிலிருந்து கானான் (பலஸ்தீனம்) நாட்டுக்கு அழைத்து அவரை ஆசீர்வதிக்கிறார்ர் (ஆதியாகமம் 12:3). [1] பின்பு அபிரகாமின் மகனான ஈசாக்கு, ஈசாக்கின் மகனான யாக்கோபு (பின்பு இஸ்ரவேல்) என்பவர்கள் பற்றியும் குறிப்பிடுகிறது. இஸ்ரவேலர் பஞ்சத்துக்கு தப்பி வாழ எகிப்துக்கு செல்லும் வரலாற்றுடன் ஆதியாகமம் முற்றுகிறது.
[தொகு] எழுத்தாளர்
ஆதியாகமம் நூல் யாரால் என்பது பற்றி நூலில் வெளிப்படையாக எதுவும் குறிப்பிடப்படவில்லை. யூத மத நம்பிக்கையின் படி, இது சீனாய் மலைமீது கடவுள் சொல்ல மோசே எழுதிய நூலாகும். பல காரணங்களை ஆதாரமாக கொண்டு விவிலிய அறிஞ்சர் இதை இப்போது நம்புவது கிடையாது. மாறாக கி.மு. 440 தொடக்கம் இன்று வரை உள்ள ஆதியாகமமானது சுமேரியர்களின் வேதன்நூலகளில் இருந்து பெறப்பட்டதாக நம்பப்படுகிறது.
[தொகு] உலக படைப்பின் திகதி
ஆதியாகமத்திலும் பின்வரும் நூல்களிலும் காணப்படும் வம்சாவளி பட்டியல்களைக் கொண்டு உலக படைப்பின் நாளை கிறிஸ்தவரும் யூதரும் வெவ்வேராக கணக்கிட்டுள்ளனர். இந்த கணிப்புகளின் படி உலகம் கிமு 4வது ஆயிரவாண்டு ஆண்டலவில் படைக்கப்பட்டதாகும். ஆதியாகமத்தின் படி உலகம் 6 -24மணி-நாட்களில் படைக்கப்பட்டதாகும்.
பல ஆய்வாளர்கள் ஆதியாகமத்தில் குறிப்பிடப்பட்டுள்ள வரலாற்று சம்பவங்களை கேள்விக்குற்படுத்தியுள்ளார்கள். மேலும் ஆதியாகமத்தை பயன்படுத்தி உலகின் வயதை கணிப்பிடுவது பெரும்பான்மையான ஆய்வாளர்களால் நிராகரிக்கப்பட்டுள்ளது. இப்போதும் பல இதை பற்றி விவாதிக்கின்றார்கள்.
[தொகு] கிறிஸ்தவ நோக்கு
கிறிஸ்தவ விவிலியத்தின் புதிய ஏற்பாடு புதிய ஏற்பாடில் ஆதியாகமம் பல சந்தர்ப்பங்களில் நேரடியாக மேற்கோள் காட்டப்பட்டுள்ளது. இம்மேற்க்கோள்கள் ஆதியாகமத்தை உண்மை தன்மையை புதிய ஏற்பாட்டு ஆசிரியர்கள் நம்பியதை எடுத்து காட்டுகிறது. புதிய ஏற்பாட்டில் ஆதியாகமம் யாரால் எழுதப்பட்டது என நேரடியாக தெரிவிக்காவிட்டாலும் பல இடங்களில் திருச்சட்ட நூல்களை (டோறா அல்லது ஆகம நூல்கள்) "மோசேயின் ஆகமமங்கள்" என குறிப்பிடப்பட்டுள்ளது. [2]
யோவான் நற்செய்தியில் ஆதியாகமத்தின் முதலாவது அதிகாரதுக்கு ஒத்த வசன நடை பின்பற்றப்பட்டுள்ளது. பல கிறிஸ்தவர்கள் இதனை அப்போஸ்தலர் ஆதியாகமத்தை ஏற்றுகொண்டு அதனை போதித்தற்கான ஆதாராமாக தெரிவிக்கின்றார்கள். மேலும் திருமணம்,[3] பாவம் [4],மரணம் [5] போன்ற அடிப்படையான விடயங்களுக்கு ஆதியாகமம் கிறிஸ்தவரால் மேற்கோள் காட்டப்படுகிறது.
புதிய ஏற்பாடில் காணப்படும் மேற்கோள்களுக்கு மேலதிகமாக, பல கிறிஸ்தவ வேதியியல் அறிஞ்சர்கள் ஆதியாகமத்தையும் அதிலுள்ள சம்பவங்களையும் உண்மை என்பத பலவிதமான முறைகள் மூலம் நீருபிக்க முயற்சி செய்கின்றார்கள். பல நூற்றாண்டுகள் ஆகியும் இன்னமும் இந்த தர்க்கங்கள் நடந்தவண்ணமேயுள்ளன. இவை படைப்பியல்வாதிகளுக்கும் பரிணாமவியல்வாதி களுக்குமான விவாதங்களாகும்.
[தொகு] இஸ்லாமிய நோக்கு
இஸ்லாம் லோத்து [6] என்பவர் தனது மகள்களை பாலியல் வல்லுறவு செய்துகொள்ளும் படி ஒரு கூட்டத்துக்கு கொடுக்க முன்வந்த்தையும் [7][8] பின்பு தானே அதிக மதுபோதையால் தனது மகள் மாரை கர்ப்பமாகியதையும் மறுக்கிறது.[7]
[தொகு] உசாத்துணை
- ↑ ஆதியாகமம் 12:3
- ↑ உதாரணமாக:மாற்கு 12:19,மாற்கு 12:26, லூக்கா 24:27
- ↑ ஆதியாகமம் 2:20-24
- ↑ ஆதியாகமம் 3:
- ↑ ஆதியாகமம் 3:19 ஆதியாகமம் 5:12
- ↑ ஆதியாகமம் 19:8
- ↑ 7.0 7.1 இஸ்லாமிய நோக்கு
- ↑ கிற்ஸ்தவத்துக்கு பதில்