இட்டாநகர்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
இட்டாநகர் அருணாச்சல பிரதேசத்தின் தலைநகரமாகும். இது இமயமலை அடிவாரத்தில் அமைந்துள்ளது. நிஷி என்னும் பழங்குடிகளே இங்கு பெரும்பான்மையினராக வசிக்கும் பழங்குடிகள் ஆவர்.தலைநகராக இருப்பதன் காரணமாக, இட்டாநகர் நாட்டின் பிற பகுதிகளுடன் தரை வழியாகவும் வான் வழியாகவும் நன்கு இணைக்கப்பட்டுள்ளது.
15ஆம் நூற்றாண்டை சேர்ந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இட்டா கோட்டை, இந்நகருக்கு அருகில் உள்ளது. இக்கோட்டையின் பெயரை ஒட்டியே இந்நகர் இப்பெயரைப் பெற்றது. இது தவிர, பழமையான கங்கை ஏரியும், தலாய் லாமாவால் புனிதமானதாக அறிவிக்கப்பட்ட புத்தக் கோயில் ஒன்றும் இங்கு அமைந்துள்ளது. இந்நகரின் முக்கிய வாழ்வாதாரமாக வேளாண்மை அமைந்துள்ளது.
[தொகு] வெளியிணைப்புகள்
- India Travel வலைவாசலில் இட்டாநகர் (ஆங்கிலத்தில்)
இந்தியாவின் மாநில, பிரதேச தலைநகரங்கள் | ![]() |
---|---|
அகர்தலா | அய்சால் | பெங்களூர் | போபால் | புவனேஸ்வர் | சண்டிகர் | சென்னை | டாமன் | தேஹ்ராதுன் | தில்லி | திஸ்பூர் | காந்திநகர் | கேங்டாக் | ஹைதராபாத் | இம்பால் | இட்டாநகர் | ஜெய்ப்பூர் | கவராத்தி | கோஹிமா | கொல்கத்தா | லக்னௌ | மும்பை | பனாஜி | பாட்னா |பாண்டிச்சேரி | போர்ட் பிளேர் | ராய்ப்பூர் | ராஞ்சி | ஷில்லாங் | ஷிம்லா | சில்வாசா | ஸ்ரீ நகர் | திருவனந்தபுரம் |