தொ. மு. ராமராய்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
தொ. மு. ராமராய் (பி. 1852) தமிழ்நாட்டைச் சேர்ந்த சௌராஷ்டிர இன அறிஞர். தமது தாய்மொழியின் வளர்ச்சிப் பணியில் தம்மை முழுமையுமாக ஈடுபடுத்தியவர்.
[தொகு] வாழ்க்கைச் சுருக்கம்
ராமராயின் குடும்பப் பெயர் ஜாபாலி கோத்திரத்தைச் சேர்ந்த 'தொப்பே' என்பதாகும். தந்தையின் பெயர் முனிசவ்ளி. தாயார் பெயர் மீனாட்சி. சிறு வயதிலிருந்தே கல்வியில் மிகுந்த ஆர்வம் கொண்டிருந்த ராமராய் 1871-ம் ஆண்டில் பண்டிதர் லட்சுமணாச்சார்யரின் மாணவராகி சகல வேத உபநிடத சாத்திரங்களிலும் பன்மொழி இலக்கண இலக்கியங்களிலும் விரிவான கல்வி கற்றார்.
தாய்மொழி சௌராஷ்டிரம் தவிர சமஸ்கிருதம், ஹிந்தி, குஜராத்தி, மராத்தி, பஞ்சாபி, வங்காளி, ஒரியா, தெலுங்கு, கன்னடம், மலையாளம், தமிழ், ஆங்கிலம் முதலிய மொழிகளைக் கற்றுப் புலமை பெற்றார். 1880-ம் ஆண்டிலிருந்து முழு நேரத்தையும் செல்வத்தையும் ஸவ்ராஷ்டிர மொழி இலக்கிய வளர்ச்சிக்கே செலவிட்டார்.
ராமராய் அவர்கள் சௌராஷ்டிர மொழிக்கென முழுமையான அளவில் அறிவியல் ரீதியாக வரிவடிவம் அமைத்து அச்சு எழுத்துக்களையும் தயாரித்தார். அவற்றைக் கொண்டே நிறைய நூல்களைத் தம் செலவிலேயே பிரசுரித்தார்.
[தொகு] எழுதிய நூற்கள்
- ஸவ்ராஷ்ட்ர போதினி
- ஸவ்ராஷ்ட்ர பிரைமர்
- ஸவ்ராஷ்ட்ர முதல் பாட புஸ்தகம்
- ஸவ்ராஷ்ட்ர இரண்டாம் பாட புஸ்தகம்
- ஸவ்ராஷ்ட்ர நீதி ஸம்பு
- ஸவ்ராஷ்ட்ர வியாகரணம்
- ஸவ்ராஷ்ட்ர நந்தி நிகண்டு மற்றும் பல.
- சதுர்பாஷா வல்லரி (தமிழ், தெலுங்கு, சமஸ்கிருதம், ஸவ்ராஷ்ட்ரம், ஆகிய நான்கு மொழி சொற்தொகுப்பு)
‘’ஸவ்ராஷ்ட்ர நீதி ஸம்பு’’ என்னும் நீதி நூல் ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கப்பட்டது. திருமுருக கிருபானந்த வாரியார் தமது திருப்புகழமிர்தம் என்னும் நூலில் இந்நூலைப் பிரசுரித்துத் தமிழ் மக்களிடையே பரப்பியுள்ளார்.