புற்றுநோய்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.

நலமுடைய கலங்கள் சரி செய்ய இயலா நிலைக்குச் சேதம் உற்றால் கலங்கள் தாமே அழியும் தன்மை கொண்டுள்ளதால் (இதனை கலத் தற்கொலை (apoptosis) என்று அழைப்பர்) அவ்வழி சிதைவுற்று நீக்கப்படும். ஆனால் புற்றுநோய் உற்ற கலங்கள்,தாமே அழியாமல், கட்டற்ற முறையில் மேலும் மேலும் பிரிந்து பருகுகின்றது.
நலமுடைய கலங்கள் சரி செய்ய இயலா நிலைக்குச் சேதம் உற்றால் கலங்கள் தாமே அழியும் தன்மை கொண்டுள்ளதால் (இதனை கலத் தற்கொலை (apoptosis) என்று அழைப்பர்) அவ்வழி சிதைவுற்று நீக்கப்படும். ஆனால் புற்றுநோய் உற்ற கலங்கள்,தாமே அழியாமல், கட்டற்ற முறையில் மேலும் மேலும் பிரிந்து பருகுகின்றது.

புற்று நோய் கட்டுப்பாடற்று கலங்கள் பிரிந்து பெருகுவதால் ஏற்படும் நோய் ஆகும். இந்த கலங்கள் பிரிந்து பரவி மற்ற தசைகளையும் தாக்குகின்றன. முதிர்ச்சியடைந்த நிலையில் இந்த புற்றுக்கலங்கள் குருதியின் வழியாகப் பரவுகின்றன. புற்று நோய் ஆனது எந்த வயதினரையும் தாக்கும் எனினும் வயது கூடக்கூட புற்றுநோய் தாக்கும் வாய்ப்பும் அதிகரிக்கிறது. மேலை நாடுகளில் இறப்பிற்கான முதன்மைக் காரணங்களில் இதுவும் ஒன்றாகும்.

புற்றுநோயில் பலவகைகள் உள்ளன. புற்றுக்கலங்கள் உள்ள இடத்தைக் கொண்டு அவை தொண்டைப்புற்றுநோய், குடல் புற்று, இரத்தப்புற்று என அழைக்கப்படுகின்றன. புகை பிடித்தல், கதிர் வீச்சுக்கு ஆட்படுதல், குடிப்பழக்கம், சில வகை நுண்மங்கள் (வைரஸ்) போன்றவை புற்று நோய் ஏற்படக் காரணமாக இருக்கலாம்.

[தொகு] வெளி இணைப்புகள்