ஹோய்சாளப் பேரரசு
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
ஹோய்சாளப் பேரரசு தென்னிந்தியாவின் ஒரு பகுதியை கி.பி 1000 முதல் 1346 வரை கர்நாடக மாநிலத்தின் பேளூரை தலைநகராகக் கொண்டு ஆண்டு வந்தது. ஹோய்சாளர்கள் தங்களுடைய கட்டிடக்கலைக்காக இன்றளவும் போற்றப்படுகின்றனர். சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட கோயில்கள் கற்நாடகம் முழுதும் பரவியுள்ளன. இவற்றில் மிகச்சிறப்பானவை பேலூர், ஹளபீடு, சோமநாதபுரம் ஆகிய ஊர்களில் உள்ளன. ஹோய்சாள மன்னர்கள் சமண, இந்து சமயங்களைப் பின்பற்றினர். விஷ்னுவர்த்தனன் என்ற மன்னரும் அவருடைய வாரிசுகளும் வைணவர்கள் ஆவர்.