பாம் தீவுகள்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
தற்போது, துபாய், அமீரகத்தின் கடற்கரையை அண்டிக் கடலுக்குள், பேரீச்ச மரங்களின் வடிவில் அமைக்கப்பட்டுவரும் மூன்று பெரிய தீவுகள் பாம் தீவுகள் என அழைக்கப்படுகின்றன. இது அல் நக்கீல் புரொபர்ட்டீஸ் (Al Nakheel Properties) என்னும், நிறுவனத்தினால் அமைக்கப்பட்டு வருகிறது. இத் தீவுகள் ஒவ்வொன்றும் ஒரு பேரீச்ச மர வடிவத்தையும் அதன் தலைப் பகுதியைச் சூழ ஒரு பிறை வடிவத்தையும் கொண்டதாக வடிவமைக்கப்பட்டு உள்ளது. துபாய்க் கடற்கரையின் அகலமான கண்டத் திட்டும், பாரசீக வளைகுடா ஆழம் குறைவாக இருப்பதும் இத் தீவுகள் கட்டப்படுவதைச் சாத்தியமாக்கி உள்ளன.
[தொகு] மூன்று தீவுகள்
பாம் தீவுகள் மூன்றும், அவை அமைந்துள்ள இடங்களின் பெயரால் அழைக்கப்படுகின்றன.
- பாம், ஜுமேரா
- பாம், ஜெபல் அலி
- பாம், டெய்ரா