ஆதவன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.

ஆதவன்
ஆதவன்

கே.எஸ்.சுந்தரம் என்ற இயற்பெயர் கொண்ட ஆதவன் (Aadhavan), 1942ம் வருடம் கல்லிடைக்குறிச்சியில் பிறந்தவர். இவருடைய மனைவியின் பெயர் ஹேமலதா சுந்தரம், மகள்கள் சாருமதி, நீரஜா. அறுபதுகளில் எழுதத் துவங்கி, தமிழ் சிறுகதை உலகில் பல குறிப்பிடத் தக்க சாதனைகளை நிகழ்த்தியவர். இந்திய இரயில்வேயில் சில ஆண்டுகள் பணியாற்றிய பிறகு, டெல்லியில் உள்ள 'நேஷனல் புக் டிரஸ்டின்' தமிழ்ப் பிரிவின் துணையாசிரியராகப் பல ஆண்டுகள் பணியாற்றியுள்ளார். பின்னர் பெங்களூருக்கு மாற்றலாகி வந்த ஆதவன் 1987ஆம் ஆண்டு ஜூலை 19ஆம் தேதி சிருங்கேரி துங்கா நதியின் சுழலில் சிக்கி மரணமடைந்தார்.

மரணத்திற்கு பின் 1987ஆம் ஆண்டிற்கான சாகித்ய அகாதெமி விருதினை அவருடைய "முதலில் இரவு வரும்" என்ற சிறுகதைக்காக வழங்கியது.

இவரது படைப்புகள் பல இந்திய மொழிகளிலும், ஆங்கிலம், பிரெஞ்சு, ரஷ்யன் உள்ளிட்ட உலக மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன.

என் பெயர் ராமசேஷன் :

நடுத்தர மக்களின் எண்ணப்போக்கினையும், முரண்பாடுகளையும் பாரபட்சமின்றி துகிலுரித்துக் காட்டுபவை இவர் கதைகள். இவருடைய நாவல், "என் பெயர் ராமசேஷன்", காமம் என்பதை உளவியல் ரீதியாக அணுகி மக்களின் போலித்தன மூகமூடியினை கிழித்துக் காட்டும் தன்மையுடையது. ஆதவனின் "என் பெயர் ராமசேஷன்" நாவல் வித்தாலி ·பூர்ணிகா அவர்களால் ரஷ்ய மொழியில் மொழிபெயர்க்கப்பட்டு ஒரு லட்சம் பிரதிகள் விற்பனையாயின.

காகித மலர்கள் :

வெவ்வேறு "வேடங்களின்" கைதிகள் அரசியல் தலைவர்கள், mob psychology வேண்டுகிற கொச்சையான படிமங்களின் கைதிகள். அதிகாரிகள், "நடக்கிறபடி நடக்கட்டும். நமக்கேன் வம்பு ?" என்ற playsafe மனப்பாங்கின் கைதிகள். அறிவு ஜீவிகள், அந்தந்த நேரத்தில் நாகரிகமான, அதிக செலவாணி உள்ளதாக உள்ள சில சார்புகளை அபிநயத்துக்கொண்டு, சில "தியரிகளை" உச்சாடனம் செய்துகொண்டு, "உஞ்சவிருத்தி" செய்கிற பிராமண பிம்பத்தின் கைதிகள். பெண்கள் ஆணின் "அடிமை", "மகிழ்வூட்டும் கருவி" அல்லது இந்த பிம்பங்களுக்கெதிராகப் புரட்சி செய்கிறவள் - என்கிற பிம்பங்களின் கைதிகள், இளைஞர்கள், வயதையும், "வேடங்கள்" அணியும் திறனையும் ஒட்டியே வாய்ப்புகள் வழங்குகிற ஒரு அமைப்பில் நிரந்தரமான ஒரு insecurityஇன், ஒரு alienationஇன் கைதிகள். இத்தகைய பல கைதிகளையே ஆதவனுடைய "காகித மலர்கள்" அறிமுகம் செய்கிறது.

பொருளடக்கம்

[தொகு] படைப்புகள்

[தொகு] குறுநாவல்

  • இரவுக்கு முன்பு வருவது மாலை (1974)
  • சிறகுககள்
  • மீட்சியைத் தேடி
  • கணபதி ஒரு கீழ்மட்டத்து ஊழியன்
  • நதியும் மலையும்
  • பெண், தோழி, தலைவி (1982)

[தொகு] சிறுகதை

  • கனவுக்குமிழிகள் (1975)
  • கால் வலி (1975)
  • ஒரு அறையில் இரண்டு நாற்காலிகள் (1980)
  • புதுமைப்பித்தனின் துரோகம் (1981)
  • முதலில் இரவு வரும் (1985)

[தொகு] நாவல்

  • காகித மலர்கள் (1977)
  • என் பெயர் ராமசேஷன் (1980)

[தொகு] நாடகம்

  • புழுதியில் வீணை

[தொகு] வெளி இணைப்புகள்

  • திசைகள் இணைய இதழின், செப்டம்பர் மாத இதழ் ஆதவன் சிறப்பிதழாக வெளிவந்தது. அதில் வெளிவந்த கட்டுரைகள் இங்கே 1,2,3.
"http://ta.wikipedia.org../../../%E0%AE%86/%E0%AE%A4/%E0%AE%B5/%E0%AE%86%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D.html" இலிருந்து மீள்விக்கப்பட்டது