கூடைப்பந்தாட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.

கூடைப்பந்தாட்டம் உலகில் மிகப்பிரபலமான விளையாட்டுகளில் ஓன்று. உலகம் முழுவதும் சுமார் 200 நாடுகளில் விளையாடப்படுகின்றது.

பொருளடக்கம்

[தொகு] விளையாட்டு முறைமைகள்

கூடைப்பந்தாட்டம் முறையே ஐந்து வீரர்களைக்கொண்ட இரண்டு அணிக்களிற்கிடையே இடம் பெறும். ஒவ்வொரு வீரரும் குறிப்பான பங்களிப்பு வழங்குவர். நியமமாக இரண்டு காப்பாளர்கள் (guards) இரண்டு முன்னணிகளும் (forwards) ஒரு மத்திய வீரரும் (center) விளையாடுவர். ஒவ்வொரு நிலைக்கும் தனித்துவமான பயிற்சிகள் அவசியம். மத்திய வீரர் அணியின் மிக உயரமான வீரராக இருப்பார். இவர் எதிர் அணியிடம் பந்து இருந்தால் அவர்கள் பந்தை கூடைக்குள் வீசுவதைத்தடுப்பார். காப்பாளர்கள் அணியின் வேகமான பந் து பரிமாற்றும் ஆற்றல் உடையவர்களாக இருப்பர். எது எவ்வாறாகினும் வீரர்கள் விரும்பிய இடத்தில் விளையாடலாம்.

[தொகு] தந்திரோபாயம்

கூடைப்ந்தாட்டம் மிக வேகமான விளையாட்டாகும் . ஆதலால் அணிக்குள் மிகவும் ஒற்றுமை நிலவவேண்டும். பொதுவாக அணியை ஒரு பயிற்றுவிப்பாளர் பயிற்றுவிப்பார். இவரே அணியின் தந்திரோபாயங்களை முடிவு செய்வார். அணியிடம் பந்து இருக்கும்போது பந்தை கூடைக்குள் போடுவதும், எதிரணியிடம் பந்து இருக்கும்போது பந்து கூடைக்குள் விழாமல் தடுப்பது அல்லது பந்து மீதான கட்டுப்பாடை இழக்கச்செய்வதும் முக்கியமான செயற்பாடுக்ளாகும்.

[தொகு] புள்ளி வழங்கும் முறைகள்

3.1 மீற்றர் உயரத்தில் உள்ள வளையம் ஊடாக வீசுவதன் மூலம் புள்ளிகளைப் பெறுவர். வீரர்கள் கூடைப்பந்தை நிலத்தில் துள்ள வைத்தவாறோ அல்லது தமக்கிடையில் பரிமாற்றிக்கொள்வதன் மூலமோ பந்தை இடமாற்றுவர். பந்தை வளையத்தின் ஊடாக போடுவதன் மூலம் இரண்டு புள்ளிகளை பெறலாம். குறித்த எல்லைக்கு அப்பால் நின்று பந்தை போடுவதன் மூலம் மூன்று புள்ளிகளை பெறலாம். எதிர் தரப்பு முறைதவறாக நடக்கும்போது (illegal contact) இடையூறு அற்ற வீச்சு ஓன்றையோ அல்லது கூடுதலாகவோ பெறலாம். இந்த வீச்சுக்கு ஒரு புள்ளி வழங்கப்படும்.

[தொகு] இவற்றையும் காணவும்

  • மைக்கல் ஜோர்டான்
  • மஜிக் ஜோன்சன்
  • சிகாகோ புல்ஸ்