திருநெல்வேலி நெல்லையப்பர் கோயில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.

திருநெல்வேலி நெல்லையப்பர் கோயில் பாடல் பெற்ற தலங்களில் ஒன்றாகும். சம்பந்தர் பாடல் பெற்ற இத்தலம் திருநெல்வேலி நகரில் அமைந்துள்ளது. இத்தலத்தில் இறைவனுக்கு அமுதாக்குவதற்கு உலரப்போட்ட நெல் மழையினால் நனையாதவாறு வேலியிட்டுக் காப்பாற்றப்பட்டது என்பது தொன்நம்பிக்கை.