ரோம்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.

ரோம் நகரில் உள்ள கொல்லேசியம் என்னும் திறந்தவெளிப் பேரரங்கு
ரோம் இத்தாலியின் தலைநகரம் ஆகும். இதுவே இத்தாலியின் மக்கள்தொகை மிக்க நகரமும் ஆகும். இந்நகரில் சுமார் 2.8 மில்லியன் மக்கள் வாழ்கிறார்கள். இந்நகரம் இத்தாலிய மூவலஞ்சூழ் தீவகத்தில் (தீபகற்பத்தில்) நடு மேற்குப் பகுதியில் அனியென் ஆறானது டைபர் ஆற்றில் கலக்கும் இடத்தில் அமைந்துள்ளது. 2005 ஆம் ஆண்டுக் கணிப்பின் படி ரோம் மாநகரம் மட்டுமே சுமார் 97 யூரோ (€ 97) பொருள் ஈட்டம் பெற்றது, மேலும் இது இத்தாலிய நாட்டு உற்பத்தியில் 6.7% ஆகும்.
ரோம் நகரமானது இரட்டையர்களாகிய ரோமலஸ் என்பாரும் ரேமஸ் என்பாரும் சேர்ந்து கி.மு. 753ல் நிறுவியதாக ஒரு தொல்மரபு கூறுகின்றது. அகழ்வாராய்ச்சியின் படியும் சுமார் கி.மு 8 ஆம் நூற்றாண்டு வாக்கில் இருந்து தொடர்ந்து மக்கள் இன்று ரோம் நகரம் உள்ள பகுதியில் வாழ்ந்து வந்துள்ளனர் என்று கண்டுபிடித்துள்ளனர்.