கூழங்கைத் தம்பிரான்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
கூழங்கைத் தம்பிரான் (இ. 1795) யாழ்ப்பாணத்தில் கி.பி. 18ம் நூற்றாண்டில் வாழ்ந்த ஒரு சிற்றிலக்கியப் புலவர். இவர் தமிழ் இலக்கண இலக்கியங்களிலும் சித்தாந்த சாத்திரங்களிலும் மிக்க பாண்டித்திய முடையவர்.
[தொகு] வாழ்க்கைச் சரிதம்
இவர் காஞ்சிபுரத்தில் பிறந்தவர். இவர் திருப்பனந்தாள் மடத்திலிருந்தபோது, அம்மடாதிபதி தம்முடைய கண்டிகை களவு போயினமை காரணமாகச் சந்தேகங் கொண்டு அவரைச் சத்தியம் செய்யுமாறு கேட்க, அவர் உருக்கிய நெய்யிலே கையிடச்சொன்னாலுஞ் செய்வேனென்று கூறி, அவ்வாறு கூசாது கையிட்டுத் தன் சத்தியத்தை நாட்டி அதனாற் கை கூழையாகப் பெற்றவர் என்று கூறுவர்.
யாழ்ப்பாணம் வந்த இவருக்கு வண்ணார்பண்ணையில் இருந்த வைத்திலிங்கச் செட்டியார் என்னும் வணிகர் நண்பராய் இருந்து பரிபாலித்து வந்தார். பவணந்தி முனிவர் இயற்றிய நன்னூலுக்கு விளக்கம் எழுதினார். அத்துடன் யோசேப்பு புராணம் என்னும் காவியத்தை 21 காண்டத்தில் 1023 விருத்தத்தில் பாடி தமது நண்பரான பிலிப்பு தெ மெல்லோ பாதிரியாருக்கு அர்ப்பணம் செய்தார். பிற்காலத்தில் சுண்டிக்குளி சிவியா தெரு இவருக்கு உறைவிடமாய் இருந்தது.
[தொகு] இயற்றிய பிரபந்தங்கள்
- சித்திவிநாயகர் இரட்டைமணிமாலை
- நல்லைக் கலிவெண்பா
- தேவப்பிரசை திருக்கதை யோசேப்புப் புராணம்
- கூழங்கையர் வண்ணம்