அக்னி (இதழ்)
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
அக்னி 1970களில் கவிஞர் ஈழவாணனை ஆசிரியராகக் கொண்டு ஈழத்திலிருந்து வெளிவந்த கவிதைக்கான சஞ்சிகை. அக்னி ஐந்து இதழ்கள் மட்டுமே வெளிவந்த பொழுதும், அன்றைய காலகட்டத்தில் தனித்துவமான ஈழத்தில் பல புதுக்கவிதையாளர்கள் உருவாக வழி வகுத்த ஒரு சஞ்சிகையாக திகழ்ந்தது. கவிதைக்கென வெளிவந்த சஞ்சிகையாக அறிவிக்கப்பட்டாலும் புதுக்கவிதை மட்டுமல்லாது நூல் விமர்சனம், திரைப்படம், ஓவியம், போன்ற பல்வேறு துறைச் சார்ந்த கட்டுரைகளையும் அது வெளியிட்டது. அதன் ஐந்தாவது இதழ் கறுப்பின மக்களின் கவிதை இலக்கிய சிறப்பிதழாக வெளிவந்தது. அச்சிறப்பிதழில் முருகையன், எம். ஏ. நுஃமான், கே. எஸ். சிவகுமாரன், பண்ணாமத்துக் கவிராயர் போன்றவர்களின் சிறப்பான தமிழ் மொழிபெயர்ப்பில் கறுப்பின மக்களின் கவிதைகள் இடம் பெற்று இருந்தன.