கா. கைலாசநாதக் குருக்கள்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
கா. கைலாசநாதக் குருக்கள் இலங்கையைச் சேர்ந்த ஆய்வாளர், பேராசிரியர். யாழ்ப்பாணம் நல்லூர் மங்கையர்க்கரசி வித்தியாசாலை, பரமேசுவராக் கல்லூரி ஆகியவற்றில் கல்வி கற்ற இவர் இலங்கைப் பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றார். பின்னர் பூனா பல்கலைக்கழகத்தில் இதிகாச புராணங்களிற் காணப்படும் சைவம் பற்றியும், தென்பாரதத்திலும் இலங்கையிலும் நிகழும் சைவக் கிரியைகள் பற்றியும் ஆய்வு செய்து கலாநிதிப் பட்டம் (முனைவர்) பெற்றார். ஆங்கிலம், தமிழ், இலத்தீன், பாளி, வடமொழி ஆகியவற்றில் புலமை மிக்கவ இவர் கொழும்புப் பல்கலைக்கழகம், பேராதனைப் பல்கலைக்கழகம், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் ஆகியவற்றில் பணியாற்றினார்.
[தொகு] இவரது நூல்கள்
- சம்ஸ்கிருத இலகுபோதம்
- வடமொழி இலக்கிய வரலாறு
- சைவத் திருக்கோயிற் கிரியைநெறி
- இந்துப் பண்பாடு சில சிந்தனைகள்
[தொகு] வெளி இணைப்புக்கள்
- இந்துப் பண்பாடு சில சிந்தனைகள் (நூலகம் திட்டம் நூல்#279)