மரூஉ

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.

மரூஉ என்பது தமிழ் சொற்களில், குறிப்பாக பெயர்ச் சொற்களில், பெரிதும் மாற்றம் அடைந்து, மருவி, வழங்கும் சொல். பெயர்ச் சொற்களில் மரூஉ எடுத்துக்காட்டுக்கள்:

  • தஞ்சாவூர் என்பது தஞ்சை ஆவது
  • புதுச்சேரி என்பது புதுவை ஆவது
  • சோழன் நாடு என்பது சோணாடு (சோணாடு சோறுடைத்து என்னும் வழக்கைக் காண்க)
  • உறையூர் என்பது உறந்தை ஆவது.

வினைச்சொற்களிலும் மரூஉ உண்டு. எடுத்துக்காட்டாக:

  • வருகிறது என்பது வருகுது (நாமக்கல் கவிஞர் இரமலிங்கம் பிள்ளை அவர்களின் “கத்தியின்றி இரத்தமின்றி யுத்தமொன்று வருகுது”)

போலி மரூஉ: இவை அடிச்சொல்லில் அதிகம் வேறு படாமல், பெரும்பாலும் ஓரிரு எழுத்துக்களில் மாறு பட்டு வரும் இடங்கள். எடுத்துக்காட்டாக:

  • சாம்பல் என்பது சாம்பர்
"http://ta.wikipedia.org../../../%E0%AE%AE/%E0%AE%B0/%E0%AF%82/%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%82%E0%AE%89.html" இலிருந்து மீள்விக்கப்பட்டது