நெல்லூர்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
நெல்லூர் இந்தியாவின் ஆந்திர மாநிலத்திலுள்ள ஒரு மாவட்டத்தின் பெயரும் தலைநகரின் பெயரும் ஆகும். இது இந்தியாவின் ஆந்திர மாவட்டத்தில் உள்ள ஒரு கடலோர மாவட்டம் ஆகும். 2001-ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி இதன் மக்கள்தொகை 2,668,564 ஆகும். இது பென்னாற்றின் தென்கரையில் அமைந்துள்ளது. கிழக்கில் வங்காள விரிகுடாவும் தெற்கில் தமிழ்நாடும் வடக்கில் பிரகாசம் மாவட்டமும் கடப்பா மாவட்டமும் எல்லைகளாக அமைந்துள்ளன. இதன் மொத்தப் பரப்பளவு 13,076 ச. கி. மீ.கள் ஆகும்.
[தொகு] வரலாறு
இம்மாவட்டம் 1953 அக்டோபர் 1 வரை பழைய சென்னை மாகாணத்தின் பகுதியாகவே இருந்தது. பின்னர் நவம்பர் 1, 1956-இல் மொழிவாரி மாநிலங்கள் அமைக்கப்பட்ட போது இது ஆந்திரத்தின் ஒரு பகுதியாக ஆனது.