சி. சிவசேகரம்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
சி. சிவசேகரம் ஈழத்தின் குறிப்பிடத்தக்க எழுத்தாளர். கவிதைகள், விமர்சனங்கள், அரசியற் கட்டுரைகள் மற்றும் கவிதை மொழிபெயர்ப்புக்கள் ஆகியவற்றில் குறிப்பிடத்தக்க பங்காற்றியுள்ளார். இவர் பேராதனை பல்கலைக்கழகத்தின் பொறியியல் பீடத்தின் முதுநிலை விரிவுரையாளரலாக பணியாற்றிவருகின்றார். மேலும் எந்திரவியல் பிரிவின் தலைவராகவும் பதவிவகிக்கிறார்.[1] 2002 ஆம் ஆண்டு வடக்கு கிழக்கு ஆளுனர் விருது இவருக்கு வழங்கப்பட்டது.[2]
[தொகு] சிவசேகரம் அவர்களின் கவிதைகள்
துரோகி எனத் தீர்த்து முன்னொரு நாள் சுட்ட வெடி சுட்டவனைச் சுட்டது சுடுமாறு ஆணை இட்டவனைச் சுட்டது குற்றஞ் சாட்டியவனை சாட்சி சொன்னவனை தீர்ப்பு வழங்கியவனைச் சுட்டது தீர்ப்பை ஏற்றவனைச் சுட்டது சும்மா இருந்தவனையுஞ் சுட்டது.....