முல்லை
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
முல்லை என்பது பண்டைத் தமிழகத்தில் பகுத்து அறியப்பட்ட ஐந்து வகைத் தமிழர் நிலத்திணைகளில் ஒன்றாகும். காடும், காடு சார்ந்த இடங்களும் முல்லை நிலமாகும். செம்மண் பரந்திருத்தலால் முல்லை நிலமானது செம்புலம் எனவும் அழைக்கப்பட்டது.
[தொகு] முல்லை நிலத்தின் பொழுதுகள்
கார் என்னும் பெரும் பொழுதும் மாலை என்னும் சிறுபொழுதும் முல்லை நிலத்துக்குரிய பொழுதுகளாகும்.
[தொகு] முல்லை நிலத்தின் கருப்பொருட்கள்
- தெய்வம்: திருமால்
- மக்கள்: இடையர், இடைச்சியர், ஆயர், ஆய்ச்சியர்
- பறவைகள்: காட்டுக் கோழி
- விலங்குகள்: மான், முயல்
- மலர்கள்: முல்லை, பிடா
- பண்: பறை, முல்லை யாழ்
- தொழில்: சாமை, வரகு விதைத்தல், களை எடுத்தல், குழலூதல், ஏறு தழுவல், குரவைக் கூத்தாடல்
தமிழர் நிலத்திணைகள் |
---|
குறிஞ்சி | முல்லை | மருதம் | நெய்தல் | பாலை |