அமுதவல்லி
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
அமுதவல்லி - ஜுபிடர் பிக்சர்ஸ் தயரிப்பாக 1959ல் வெளிவந்த திரைப்படம். இதில் டி. ஆர். மகாலிங்கம் கதாநாயகனாகவும், எஸ். ஏ. நடராஜன் வில்லனாகவும் நடித்தார்கள். டி. ஆர். மகாலிங்கம் இரட்டை வேடத்தில் நடித்திருக்கிறார்.
[தொகு] இடம்பெற்ற பாடல்
- டி. ஆர். மகாலிங்கம் - பி. சுசீலா பாடிய -
ஆடை கட்டி வந்த நிலவோ கண்ணில் மேடை கட்டி ஆடும் எழிலோ (ஆடை கட்டி) குளிர் ஓடையில் மிதக்கும் மலர் ஜாடையில் சிரிக்கும் இவள் காடு விட்டு வந்த மயிலோ நெஞ்சில் கூடு கட்டி வாழும் குயிலோ
[தொகு] துணுக்குகள்
இத்திரைப்படம் பற்றி "கல்கி" பத்திரிகையில் வந்த சுவையான விமர்சன வரிகள்- "படத்தில் சந்திரகாந்த ரசம் அருந்தினால் பழைய ஞாபகங்கள் மறையும் எனக் கூறுகிறார்கள். அது கிடைத்தால் நாமும் இப்படத்தை மறக்க தோதாக இருக்கும்"