வடமாராட்சி இந்து மகளிர் கல்லூரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.

வடமாராட்சி இந்து மகளிர் கல்லூரி யாழ்ப்பாணம் வடமராட்சிப் பகுதியில் பருத்தித்துறையில் அமைந்திருக்கும் ஒரு பெண்கள் உயர்தரப் பாடசாலையாகும்.

[தொகு] வரலாறு

1940களின் ஆரம்பத்தில் வடமராட்சிப் பகுதி இந்துக்களுக்கு அவர்களின் இந்துத்துவத்தைப் பேணும் வகையில் ஒரு மகளிர் பாடசாலை அமைக்கும் தேவை கருதி இப்பாடசாலை 1944 ஆம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்டது. ஆரம்பத்தில் எம். கார்த்திகேசு என்பவரின் தலைமையில் ஒரு 11 பேர் கொண்ட குழு உருவாக்கப்பட்டு கார்த்திகேசு அவர்களுக்குச் சொந்தமான ஒரு வீட்டிலேயே இப்பாடசாலை முதலில் பாலர் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரையில் 40 மாணவர்களுடன் ஆரம்பிக்கப்பட்டது. பின்னர் இப்பாடசாலைக்கென நிரந்தரக் காணி வாங்கப்பட்டு பல வகுப்பறைகளுடன் 10ம் வகுப்பு வரை வகுப்புகள் விஸ்தரிக்கப்பட்டன. 1946 இல் இக்கல்லூரி இலங்கை கல்வித் திணைக்களத்தில் உத்தியோகபூர்வமாகப் பதிவு செய்யப்பட்டது.