காட்டுப்புத்தூர்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
காட்டுப்புத்தூர் | |
மாநிலம் - மாவட்டங்கள் |
தமிழ்நாடு - திருச்சிராப்பள்ளி |
பரப்பளவு | ச.கி.மீ |
கால வலயம் | IST (ஒ.ச.நே.+5:30) |
மக்கள் தொகை (2001) - மக்களடர்த்தி |
11,115 - /ச.கி.மீ |
காட்டுப்புத்தூர் (ஆங்கிலம்:Kattuputhur), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும்.
பொருளடக்கம் |
[தொகு] மக்கள்தொகைக் கணக்கெடுப்பு
2001 இந்திய மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி 11,115 பேர் இங்கு வசிக்கின்றார்கள்.[1] இவர்களில் 50% ஆண்கள், 50% பெண்கள் ஆவார்கள். காட்டுப்புத்தூர் மக்களின் சராசரி கல்வியறிவு 70% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 79%, பெண்களின் கல்வியறிவு 60% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. காட்டுப்புத்தூர் மக்கள் தொகையில் 10% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.
[தொகு] வசதிகள்
இங்கு 1 அரசு உதவி பெறும் மேல்நிலைப்பள்ளி, 2 தொடக்கப்பள்ளிகள், 1 காவல் நிலையம், 1 அஞ்சல் நிலையம், 1 கிளை நூலகம், 1 பேருந்து நிலையம் மற்றும் 6 கோவில்கள் உள்ளன.
இங்குள்ள ஜமீந்தார் மேல்நிலைப்பள்ளி, நூறு ஆண்டுகளுக்கு முன் ஜமீந்தாரால் துவக்கப்பட்டது. இப்பள்ளியானது காட்டுப்புத்தூரை சுற்றியுள்ள நாப்பதுக்கும் மேற்ப்பட்ட கிராமங்களுக்கு கல்வியறிவை தருகிறது.
[தொகு] அயலூர்கள்
நாமக்கல், துறையூர், சேலம், தொட்டியம், முசிறி, திருச்சி, மோகனூர், வேலூர், கரூர், திருச்செங்கோடு, கோயம்புத்தூர் போன்ற நகரங்கள் நேரிடையாக தரைவழியாக இணைக்கப்பட்டுள்ளன.
காட்டுப்புத்தூரை சுற்றியுள்ள சீத்தப்பட்டி, கணபதிபாளையம், கருக்கமடை, மூங்கில்ப்பட்டி, ஆலாம்பாளையம்புதூர், சுள்ளிப்பாளையம், பிடாரமங்கலம், முருங்கை போன்ற கிராமங்கள் தங்கள் முக்கிய தேவைகளுக்கு காட்டுப்புத்தூரை சார்ந்தே இருக்கின்றன.
[தொகு] ஆதாரங்கள்
- ↑ 2001-ம் ஆண்டிற்கான இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அறிக்கை. இணைப்பு ஜனவரி 30, 2007 அன்று அணுகப்பட்டது.