ஹோய்சாலேஸ்வரர் கோவில்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.

பீடத்தில் யானைகளின் வரிசை
ஹோய்சாலேஸ்வரர் கோவில் என்பது பனிரெண்டாம் நூற்றாண்டில் ஹோய்சாலர்களால் கட்டப்பட்ட சிவன் கோவில் ஆகும். இது விஷ்ணுவர்த்தனர் என்ற அரசனின் ஆட்சிக் காலத்தில் கட்டப் பட்டது. இக்கோவில் ஹளபீடு என்னும் ஊரில் உள்ளது. பதினான்காம் நூற்றாண்டில் முகலாயர்களின் படையெடுப்பினால் இக்கோவில் சேதப்படுத்தப் பட்டது. இந்த ஹளபீடு, பேளூரில் இருந்து 16 கி.மீ தொலைவிலும், ஹாசனில் இருந்து 31 கி.மீ தொலைவிலும் மைசூரில் இருந்து 149 கி.மீ தொலைவிலும் அமைந்துள்ளது. ஹளபீடு முன்பு துவாரசமுத்திரம் என்று அழைக்கப் பட்டு வந்தது.