ஈராக் மீதான ஆக்கிரமிப்பு, 2003

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.

ஈராக் மீதான ஆக்கிரமிப்பு, 2003 மார்ச் 20, 2003 இல் ஈராக்கின் விடுதலை என்ற பெயரில் அமெரிக்கக் கூட்டு படைகளால் ஆரம்பிக்கப்பட்டது. சதாம் உசேன் தலைமையிலான அரசாங்கத்திடம் பாரிய அழிவுகளை ஏற்படுத்தக்கூடிய இரசாயன ஆயுதங்கள் இருப்பதாகக் குற்றஞ்சாட்டியே இந்த ஆக்கிரமிப்பினை பயங்கரவாதத்திற்கு எதிரான போர் எனக் கூறிக் கூட்டுப் படைகள் ஆரம்பித்தன. நாற்பது நாடுகளின் உதவியோடு இத்தாக்குதல் நடத்தப்பட்டது. ஈராக்குக்கு ஆதரவாக சில நாடுகள் குரல் கொடுத்தபோதும் அவை சொல்லளவிலான ஆதரவாகவே இருந்தன. இறுதியாக டிசம்பர் 13, 2003 இல் சதாம் உசேன் கைது செய்யப்பட்டார். இதன் பின்னர் பாரிய அளவிலான தாக்குதல்கள் நிறுத்தப்பட்ட போதிலும் கூட்டுப் படைகளுக்கும் ஈராக் போராளிகளுக்கும் இடையே தொடர் மோதல்கள் இடம் பெறுகின்றன. ஏறத்தாழ 655,000 மக்கள் கொல்லப்பட்டுள்ளதாக சில கணக்கெடுப்புக்கள் தெரிவிக்கின்றன.