புலம்பெயர் ஈழத்தமிழர்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
தொழில் நோக்குக்காகவோ ஈழப்போராட்டம் காரணமாகவோ ஈழத்தில் இருந்து பிற நாடுகளுக்கு சென்று அங்கே தற்காலிகமாகவோ நிரந்தரமாகவோ தங்கள் வாழ்க்கையை அமைத்து கொண்டவர்களை புலம்பெயர் ஈழத்தமிழர்கள் எனலாம். 1983 இலங்கை கலவரங்களுக்குப் பின்னர் ஏறத்தாழ எட்டு இலட்சத்துக்கும் மேற்பட்ட ஈழத்தமிழர்கள் புலம்பெயர்ந்திருக்கலாம் என்று கணிப்பிடப்படுகின்றது. இவர்களில் பெரும்பான்மையானவர்கள் இந்தியா, ஐரோப்பா, கனடா ஆகிய இடங்களில் வசிக்கின்றார்கள்.