நாதம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.

நாதம் என்பது இசைக்கு மிக முக்கியமானது என்பதுடன் இசைக்கும் ஆதரமானது ஆகும். காதிற்கு இனிமையைத் தரும் வனி நாதம் என்று அழைக்கப்படும். நாதத்தினின்று சுருதிகளும், சுருதிகளினின்று ஸ்வரங்களும், ஸ்வரங்களினின்று இராகங்களும் உற்பத்தியாகின்றன.

[தொகு] நாதத்தின் வகைகள்

நாதம் இரு வகைப்படும்.

  • ஆகத நாதம்.
  • அனாகத நாதம்.

[தொகு] ஆகத நாதம்

மனிதனுடைய முயற்சியால் உற்பத்தியாக்கப்படும் நாதம் ஆகத நாதம் ஆகும். நாம் கேட்கும் சங்கீதம், பாடும் சங்கீதம், வாத்தியங்களில் வாசிக்கப்படும் சங்கீதம் முதலியவைகள் எல்லாம் ஆகத நாதத்தைச் சேர்ந்தவையாகும்.

மேலும் இந்நாதம் மூன்று வகைகளாகப் பிரிக்கப்படும்,

  • ப்ராணி சம்பவ நாதம்

அதாவது (உயிருள்ள) தேகத்திலிருந்து உற்பத்தியாகும் நாதம். உ+ம் : வாய்ப்பாட்டு

  • அப்ராணி சம்பவ நாதம்

அதாவது வஸ்துகளாகிய வீணை போன்ற தந்தி வாத்தியங்களினின்று உற்பத்தியாகும் நாதம்.

  • உபய சம்பவ நாதம்

அதாவது (உயிருள்ள) பிராணிகளின் ஸஹாயத்தைக் கொண்டு மூங்கிலைப் போன்ற வஸ்துக்களில் உற்பத்தியாக்கப் படும் நாதம். கட்டைகளைக் கொண்டு செய்யப்பட்ட குழல், நாதசுவரம் போன்ற கருவிகளினின்று உண்டாக்கப்படும் நாதம் இதற்கு உதாரணமாகும்

[தொகு] அனாகத நாதம்

மனிதனுடைய முயற்சியின்றி இயற்கையிலேயே கேட்கப்படும் நாதம். இது யோகிகளாலும், சித்தர்களாலும் மட்டும் அறியக்கூடியது. தியாகராஜ சுவாமிகள் ஒரு சிறந்த நாத யோகி. அனாகத நாதத்தை உணர்ந்து தனது அனுபவங்களை "ஸ்வர ராக ஸூதாரஸ" போன்ற கிருதிகளில் வெளியிட்டிருக்கின்றார்.

"http://ta.wikipedia.org../../../%E0%AE%A8/%E0%AE%BE/%E0%AE%A4/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D.html" இலிருந்து மீள்விக்கப்பட்டது