சுய மரியாதை இயக்கம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.

சுயமரியாதை இயக்கம் என்பது தமிழகத்தில் ஈ. வெ. ராமசாமி எனும் பெரியார் அவர்களால் தொடங்கப்பட்ட ஓர் இயக்கமாகும். இது இருபதாம் நூற்றாண்டின் ஆரம்ப காலத்தில் பிராமண ஆதிக்கத்தை எதிர்த்து தொடங்கப்பட்ட இயக்கமாகும். சமுதாயத்தில் சாதியின் அடிப்படையில் தாழ்த்தப்பட்டவர்கள் இவ்வியக்கத்தில் சேர்த்துக்கொள்ளப்பட்டனர். இவர்களின் நலனுக்காகவும், மூட நம்பிக்கையையும் எதிர்த்தும் போராடுவதே இதன் நோக்கமாக இருந்தது. இது மக்கள் இடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. இதன் விளைவாக பிற்காலத்தில் தமிழகத்தில் தாழ்த்தப்பட்டவர்களுக்கு பல துறைகளிலும் அதிக அளவு இட ஒதுக்கீடு தரப்பட்டது. இன்று தமிழகத்திலுள்ள இரண்டு முக்கிய கட்சிகளான தி.மு.க.வும், அ.தி.மு.க.வும் இவ்வியக்கத்திலிருந்து தோன்றியனவே.