பேச்சு:யாழ்ப்பாணத்துச் சாதியமைப்பு
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
சில கேளிவிகள்:
(1)இச் சாதிகள் எப்படி வரிசைப்படுத்தப்பட்டன (பள்ளர் 'உயர்ந்தவரா' 'பறையர்' உயர்ந்தவரா? 58 ஆவது சாதி எது, 57 ஆவது எது?), அதற்கு எந்நூலை அல்லது எம்முறையை அடிப்படையாக (ஆதாரமாக) காட்டுகிறார் நூலாசிரியர்?எந்த தமிழ் நூல்? எந்த அரசர் சட்டம், கல்வெட்டு?
(2) அல்லது வருண அடிப்படையில் (4? 5? 6? படிநிலைகள்??)
(3) கொடுத்துள்ள 58 சாதியரில் மக்கள் எண்ணிக்கையில் 1-20 வரை உள்ள சாதிகள் எப்படித் தங்கள் சாதிக்குள்ளேயே திருமணம் செய்து அடுத்த தலைமுறை உருவாக்கினர்? சாதிக் கலப்பு திருமணம் செய்தால், அவர்களுக்குப் பிறக்கும் குழந்தைகள் என்ன சாதி? மனு குழம்பித்தவித்த மாதிரியே யாழ்பாணத்து தமிழ் இனமும் இருந்ததா?
இக்கேள்விகளை புரிந்துகொள்வதற்காக கேட்கிறேன், இங்கே எழுதப்பட்டதை மறுப்பதற்காக அல்ல. என்ன அடிப்படை என்று அறிய விழைகிறேன். --C.R.Selvakumar 22:25, 21 ஜூலை 2006 (UTC)செல்வா
தமிழ் நாட்டில் மரமேறுவோர்கள் மரமேறிகள் என்னும் சாதி. இவர்களை சாணார் என்றும் தமிழகத்தில் அழைப்பர் (யாழ்பானத்தில் கூறும் சான்றார் என்பதும் இதுவே என்பது என் கணிப்பு). பள்ளிசாணார் (சென்னைப்பக்கம்), பனஞ்சாணார் (இவர்கள் தஞ்சாவூரைச் சேர்ந்த சாணார்கள், ஆனால் சென்னையில் பனமேறிகள் என்று கேள்விப்பட்டுள்ளேன்). சாணார்களின் உயர்வுப் பட்டப்பெயர்களில் ஒன்று வலங்கைஉயர்வுகொண்டார். சாணார்களில் ஒரு பிரிவினர் மேனாட்டார் என்று அழைக்கப்படுவர் (தமிழ்நாட்டில் திருநெல்வேலியில்).--C.R.Selvakumar 17:21, 23 ஜூலை 2006 (UTC)செல்வா
- இங்கே தரப்பட்ட எல்லாச் சாதிகளையுமே ஒன்றன் கீழ் ஒன்றாக வரிசைப்படுத்த முடியாது, சில சாதிகள் ஒன்றுக்கொன்று சமமான சமூக நிலையில் உள்ளவை. முற்காலத்தில் யாழ்ப்பாணத்தில் இருந்த சாதிகளைப் பற்றிப் பழைய நூல்கள் பலவற்றில் குறிப்புக்கள் உள்ளன. ஆனாலும் அச்சொட்டான உயர்வு தாழ்வு வரிசைகள் எதுவும் இருப்பதாகத் தெரியவில்லை. குழுக்களாக வெவ்வேறு சமூக மட்டங்களில் அவற்றை வரிசைப்படுத்தலாம். மேற்படி பட்டியலிலுள்ள சிறிய சாதிகள் மட்டுமன்றிச் சில பெரிய சாதிகளுமே இப்பொழுது இல்லாமல் போய்விட்டன. சம நிலையிலுள்ள சாதிகள் ஒன்றுடன் ஒன்று கலந்துவிட்டபடியால் இது நிகழ்ந்தது. யாழ்ப்பாணச் சமூக இயங்கியலில் இதை பெருங்குழுமத் தோற்றம் எனக் குறிப்பிடுகிறார்கள். இவை பற்றிக் கட்டுரையை மேலும் விரிவாக்கும் போது எழுதவுள்ளேன். கலப்புத் திருமணங்கள் மக்கள் தொகை கூடுதலாகவுள்ள சாதிகளிலும் நடைபெறுகின்றன. பெரும்பாலும் கலப்புத் திருமணம் செய்த குடும்பங்கள் சம்பந்தப்பட்டவற்றில் குறைந்த சமூக மட்டத்திலுள்ள சாதியுடன் இணைந்து விடுவதே பெரும்பான்மை. Mayooranathan 18:32, 23 ஜூலை 2006 (UTC)
-
- சாதிக்கொடுமைகள் பற்றியும் தகவல்கள் சேர்க்கப்படவேண்டும். --Natkeeran 19:40, 1 அக்டோபர் 2006 (UTC)
சாதிக் கொடுமைகள் பற்றி மட்டுமன்றி, சமூக மேல்நிலை இயக்கமும் சாதியும், சாதியொழிப்பு, தீண்டாமை ஒழிப்புப் போராட்டங்கள் போன்றவை பற்றியும் எழுத எண்ணியுள்ளேன். Mayooranathan 19:49, 1 அக்டோபர் 2006 (UTC)