சேவியர் (கவிஞர்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.

ஜோசப் சேவியர்
ஜோசப் சேவியர்

சேவியர் எனும் பெயரில் எழுதும் ஜோசப் சேவியர் குமரி மாவட்டக் காரர். இணைய இதழ்களிலும், அச்சு இதழ்களிலும் தொடர்ந்து இயங்கி வருகிறார்.

இதுவரை ஆயிரத்துக்கும் மேற்பட்ட கவிதைகளை எழுதியுள்ள இவரது கவிதைகள் 'சேவியர் கவிதைகள் காவியங்கள்' எனும் பெயரில் உலக தமிழ் மொழி அறக்கட்டளை யினால் வெளியிடப்பட்டுள்ளது.

கவிதைகள், சிறுகதைகள், கட்டுரைகள், விமர்சனங்கள் என பல தளத்திலும் இயங்கி வரும் இவரது பேட்டிகள் பத்திரிகைகளிலும் தொலைக்காட்சியிலும் ஒளிபரப்பாகியிருக்கிறது.

இதுவரை ஒன்பது நூல்கள் வெளியிட்டுள்ளார்.

பொருளடக்கம்

[தொகு] கவிதை நூல்கள்

  • ஒரு மழை இரவும் ஓராயிரம் ஈசல்களும்,
  • மன விளிம்புகளில்,
  • நில் நிதானி காதலி,
  • கல் மனிதன்

[தொகு] சிறுகதைகள்

  • கி.மு - விவிலியக் கதைகள்.

[தொகு] காவியங்கள்

  • இயேசுவின் கதை
  • அன்னை

[தொகு] வாழ்க்கை வரலாற்று நூல்

  • இயேசு என்றொரு மனிதர் இருந்தார்.

தமிழின் முன்னணி எழுத்தாளர்கள், இந்தியக் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் என பலரின் பாராட்டுகளையும் பெற்ற இவரது படைப்புகளுக்காக பல அங்கீகாரங்களும் கிடைத்திருக்கின்றன.

[தொகு] இவருடைய வலைத்தளங்கள்

[தொகு] இவரது பேட்டிகளில் ஒன்று

  • பேட்டி[3]