அகிலன்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
பி. வி. அகிலாண்டம் (P.V.Akilandam) என்ற இயற்பெயர் கொண்ட அகிலன், நாவலாசிரியராக, சிறுகதயாளராக, நாடகாசிரியராக, சிறுவர் நூலாசிரியாராக, மொழிபெயர்பாளராக, கட்டுரையாளராக சிறப்புப் பெற்ற தமிழ் எழுத்தாளர். சித்திரப்பாவை நூலுக்காக, 1975ஆம் ஆண்டின் ஞான பீட விருது பெற்றார். இவ்விருது பெற்ற முதல் தமிழ் எழுத்தாளர் இவரேயாவார். வேங்கையின் மைந்தன் என்ற நாவலுக்காக, 1963 ஆம் ஆண்டு தமிழுக்கான சாகித்ய அகாதமி விருது பெற்றார்.
அகிலனுடைய பெரும்பாலான படைப்புகள் அநேக இந்திய மொழிகளிலும் சீனம், மலாய், ஜெர்மன், ஆங்கிலம் மற்றும் ரஷ்ய மொழி போன்ற அயல்நாட்டு மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.
பொருளடக்கம் |
[தொகு] படைப்புகள்
[தொகு] புதினங்கள்
- பாவை விளக்கு
- சித்திரப்பாவை
- நெஞ்சின் அலைகள்
- எங்கே போகிறோம் ?
- பெண்
- பால்மரக்காட்டினிலே
- துணைவி
- புதுவெள்ளம்
- வாழ்வெங்கே
- பொன்மலர்
- சிநேகிதி
- வானமா பூமியா
- இன்ப நினைவு
- அவளுக்கு
- வேங்கையின் மைந்தன்
- கயல்விழி
- வெற்றித்திருநகர்
[தொகு] கலை
- கதைக் கலை
- புதிய விழிப்பு
[தொகு] சுயசரிதை
- எழுத்தும் வாழ்க்கையும்
[தொகு] மொழிபெயர்ப்பு நூல்கள்
- தாகம் ஆஸ்கார் வைல்ட்
[தொகு] சிறுகதை தொகுதிகள்
- சத்ய ஆவேசம்
- ஊர்வலம்
- எரிமலை
- பசியும் ருசியும்
- வேலியும் பயிரும்
- குழந்தை சிரித்தது
- சக்திவேல்
- நிலவினிலே
- ஆண் பெண்
- மின்னுவதெல்லாம்
- வழி பிறந்தது
- சகோதரர் அன்றோ
- ஒரு வெள்ளை சோறு
- விடுதலை
- நெல்லூர் அரசி
- செங்கரும்பு
[தொகு] சிறுவர் நூல்கள்
- தங்க நகரம்
- கண்ணான கண்ணன்
- நல்ல பையன்
[தொகு] பயண நூல்கள்
- மலேசியா சிங்கப்பூரில் அகிலன்
[தொகு] கட்டுரை தொகுப்புகள்
- நாடு நாம் தலைவர்கள் (கட்டுரைகள், 2000)
- வெற்றியின் ரகசியங்கள்
[தொகு] விருதுகள்
- 1963 - சாகித்ய அகாதமி விருது (வேங்கையின் மைந்தன்)
- 1975 - ஞான பீட விருது (சித்திரப்பாவை)
- 1975 - ராஜா சர் அண்ணாமலை விருது (எங்கே போகிறோம்?)