தயிர்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
தயிர் என்பது பாலின் திரிந்து தோன்றும் ஒரு பொருள் ஆகும். ஒரு வகை பாக்டீரியம் பாலின் மீது செயல்புரிந்து பாலைத் தயிராக மாற்றுகிறது. பாலுடன் எலுமிச்சைச் சாறு, வினிகர், அல்லது தயிர் போன்றவற்றைச் சேர்ப்பதன் மூலம் பால் திரிய வைக்கப் படுகிறது.
தென்னிந்தியாவில் பொதுவாக உணவு வேளையின் கடைசியில் இது உட்கொள்ளப் படுகிறது. இலங்கையில் பெரும்பாலும் இவை சோற்றுடன் சேர்ந்து உட்கொள்ளப்படுகின்றது. இலங்கையில் பெரும்பாலும் எருமைப் பாலில் இருந்தே தயிர் தயாரிக்கப்படுகின்றது. இவ்வாறு தயாரிக்கப்படும் தயிரே நன்றாகக் கெட்டியாக இருக்கும் அவ்வாறில்லாமல் பசுப்பாலில் இருந்து தயாரிக்கப்படும் தயிர் கெட்டியாக இருக்காது. இவற்றை சட்டிகளில் விற்பனைசெய்வர். இல்ங்கையில் மெல்சிரிபுர அரச பாற்பண்ணைகளில் இவற்றைத் தேனுடன் கலந்து ஓர் சிற்றுண்டிபோல் விற்பனை செய்கின்றார்கள்.