தமிழ்ப்பணி (இதழ்)
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
தமிழ்ப்பணி என்னும் திங்களிதழ் 1967ல் இருந்து வெளிவருகின்றது. இது கவிதை, கட்டுரைகள் அடங்கிய படைப்புகளைத் தாங்கி வருகின்றது. இவ்விதழில் பெரும்பாலும், தமிழ் மொழி, தமிழர், தமிழ்நாடு, இலங்கை மற்றும் தமிழர் பெருமளவில் வாழும் நிலப்பகுதிகளில் நிலவும் அரசியல் பற்றிய செய்திகளையும் கருத்துக்களையும் வெளியிடுகின்றது. இதன் நிறுவனரும் சிறப்பாசிரியரும் வா.மு.சேதுராமன் அவர்கள். இவரை பெருங்கவிக்கோ என்றும் அழைப்பார்கள். 2006 ஆம் ஆண்டு (திருவள்ளுவர் ஆண்டு 2037) வரை தமிழ்ப்பணியின் 39 தொகுதிகள் வெளிவந்துள்ளன.