சோ. இளமுருகனார்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.

சோ. இளமுருகனார் (1908 - 1975, நவாலி, யாழ்ப்பாணம்) தமிழ் மரபு பேணுவதிலே கண்ணுங் கருத்துமாக விளங்கிய பண்டிதர். அரசியல் சார்பான தமிழுணர்ச்சி மிக்க ஆக்கங்களை ஆக்கியவர். நாடகாசிரியர், கண்டன ஆசிரியர்.

[தொகு] வாழ்க்கைக் குறிப்பு

இவர் நவாலியூர் சோமசுந்தரப் புலவரின் மூத்த புதல்வர். நவாலியூர் சோ. நடராசனின் தமையனார். பண்டிதை பரமேஸ்வரியின் கணவர். வவுனியா பண்டிதர் சு. இராஜ ஐயனார் முதலானோரிடம் தமிழ் கற்றவர்.

[தொகு] இயற்றிய நூல்கள்