கனக செந்திநாதன்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
இரசிகமணி கனக செந்திநாதன் குரும்பசிட்டியில் பிறந்த ஈழத்து எழுத்தாளர். சிறுகதைகள், நாவல்கள், கட்டுரைகள் எனப் பல்துறைகளில் தன் திறமையை வெளிக்காட்டியவர். தன் கடைசிக் காலம் வரை எழுதிக் கொண்டிருந்தவர். கரவைக்கவி கந்தப்பனார் என்ற புனைபெயரில் ஈழத்துப் பேனாமன்னர்களை அறிமுகம் செய்தவர். "நடமாடும் நூல்நிலையம்" என ஈழத்து இலக்கிய உலகில் பேசப்பட்டவர்.
[தொகு] இவரது சில நூல்கள்
- வெண்சங்கு (சிறுகதைகள்)
- ஈழத்து இலக்கிய வரலாறு (ஆய்வு)
- வெறும் பானை (நாவல்)
- விதியின் கை (நாவல்)
- ஒருபிடி சோறு (நாடகம்)
- ஈழம் தந்த கேசரி
- கவின்கலைக்கு ஓர் கலாகேசரி
- கலை மடந்தையின் தவப் புதல்வன்
- நாவலர் அறிவுரை
- கடுக்கனும் மோதிரமும்