லேவி கோத்திரம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.

லேவி என்பது இஸ்ரவேலரின் 12 கோத்திரங்களில் ஒன்றாகும். லேவியர் கோத்திரம் யாக்கொபின் மனைவியான லேயாள் மூலம் பிறந்த மூன்றாவது [1] ஆண் குழந்தையான லேவியின் வழிவரும் கோத்திரமாகும். இப்பெயரின் பொருள் சேர்ந்திருத்தல் என்பதாகும். லேவியர்கள் அர்சகர்களாக தெரிந்து கொள்ளப்பட்ட கோத்திரமாகும்[2]. இயேசுவா இஸ்ரவேலருக்கு கானான் நாட்டை பகிரும் போது லேவி கோத்திரத்த்ருக்கு நிலம் எதனையுன் கொடுக்கவில்லை. லேவி கோத்திரத்தார் சமய கடமைகளை தவிர்த்த விடத்து அரசியல் கடமைகள எதுவும் கொடுக்கப்படவில்லை. ஆகவே ஏனைய கோத்திரத்தார் லேவியருக்கு காணிக்கை கொடுக்க வேண்டும் என கட்டலையிடப்பட்டது.


[தொகு] உசாத்துணை

  1. ஆதியாகமம் 29:34
  2. யாத்திராகமம் 28: