பேச்சு:போர்க்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.

விடுதலைப் புலிகளின் போராளிகளைப் பற்றிய அறிவு எனக்கு கிடையாது. எனினும், அனைத்துப் போராளிகளுக்கும் தனிக்கட்டுரைகள் உருவாக்காமல் குறிப்பிடத்தக்க போராளிகளுக்கு மட்டும் தனிக்கட்டுரைகள் உருவாக்குமாறு வேண்டுகிறேன். இது தொடர்பாக, பிற இலங்கை விக்கிபீடியர்கள் கவனித்து ஆற்றுப்படுத்த வேண்டுகிறேன்--ரவி 22:26, 5 அக்டோபர் 2006 (UTC)

அனைத்துப் போராளிகளின் வரலாறுகள் கிடைப்பது அரிதே குறிப்பாக 17 ஆயிரத்திற்கு மேற்பட்ட போராளிகள் இதுவரை வீரச்சாவு அடைந்துள்ளனர் ஆனால் பொதுவாக கரும்புலிகள் மற்றும் குறிப்பிடும் படி சிலருடைய வரலாறுகள் மட்டுமே அனைவருக்கும் தெரியும்படி உள்ளது.அதனால் கவலை வேண்டாம்.--சக்திவேல் நிரோஜன் 22:38, 5 அக்டோபர் 2006 (UTC)

ரவி, இங்கும் ஒரு வித local vs general கேள்வி எழுகின்றது. ஒரு கிராமத்தை எடுத்துக்கொண்டால் அவ்வூரை சார்ந்த இறந்த போராளிகளுக்கு முக்கியத்துவம் தருவார்கள். ஆனால் ஒரு பொது வட்டத்தில் அவர்களது முக்கியத்தும் ஒப்பீட்டளவில் குறைந்து இருக்கலாம். த.வி. க.க. ஒரு தனியார் விளம்பரப்பலைகை அல்ல, ஆனால் இதை எப்படி வரையறை செய்வது என்பது அவ்வளவு சுலபமல்ல என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. --Natkeeran 01:02, 6 அக்டோபர் 2006 (UTC)

எல்லா மாவீரர்களுக்கும் தனித்தனிக் கட்டுரைகள் அமைக்க வேண்டும். ஆனால் மில்லர், போர்க், கிட்டு, சார்ல்ஸ் அன்ரனி, சங்கர், மாலதி, திலீபன், ராதா, பொன்னம்மான், செல்லக்கிளி அம்மான், அங்கயற்கண்ணி போன்றவர்களுக்கு முன்னுரிமை கொடுப்பது நல்லது. ஏனையவர்கள் எவ்விதத்திலும் குறைந்தவர்கள் அல்லர். தாயகத்துக்காகத் தம் இன்னுயிரை ஆகுதியாக்க முன்வந்தவர்கள் எல்லோரும் மாவீரர்களே. ஆதலால் புலிகள் அல்லாதவகளுக்கும் கட்டுரை எழுதுவதை வரவேற்போம்.--தமிழீழன் 02:17, 6 அக்டோபர் 2006 (UTC)

சமகால அரசியல் உள்ளடக்கங்களைத் தமிழ் விக்கிபீடியாவில் உள்ளீடு செய்பவர்களுக்கு ஒரு வேண்டுகோள். சமகாலத் தமிழ் அரசியல் விடயங்கள் மிக மிக உணர்ச்சி பூர்வமானவை. இவற்றால் எழக்கூடிய பிரச்சினைகள் தமிழ் விக்கிபீடியாவைப் பல வழிகளிலும் பாதிக்கக்கூடியவை. தமிழ் விக்கிபீடியா இன்னும் போதிய அளவு பிரபலமில்லாததால் ஓரளவுக்குப் பிரச்சினைகள் இல்லாமல் இருக்கிறது. ஆனால் தற்போதைய போக்குகள் தொடருமானால் தேவையற்ற அழுத்தங்களைக்கூடச் சந்திக்க வேண்டியிருக்கலாம். இங்கே பங்களிப்பவர்களும், பயன்பெற வருபவர்களும் பல்வேறுபட்ட கருத்துக்களைக் கொண்டிருக்கிறார்கள். அளவுக்கதிகமான சமகால அரசியல் விடயங்கள் த.வி.க்குப் பிழையான அடையாளத்தை வழங்கக்கூடியது. விக்கிபீடியாவுக்குப் பங்களிப்பவர்களை ஈர்ப்பதிலும், அதனைப் பிரபலப்படுத்துவதிலும் இது சிக்கல்களை ஏற்படுத்தும். தமிழ் விக்கிபீடியா எதிர்நோக்கக்கூடிய மிகவும் பிரச்சினையான ஒரு விடயமாக இதனை நான் உணர்கிறேன். நாங்கள் விரும்பிய எதனையும் இங்கே உள்ளீடு செய்ய வாய்ப்பு இருப்பது உண்மைதான். அதற்காக எல்லா விடயங்களையும் முன்பின் யோசியாமல் உள்ளீடு செய்யக்கூடாது. தமிழ் விக்கிபீடியாவுக்கு, ஒரு பரந்த நோக்கம் இருக்கிறது. நாங்கள் செய்யும் செயல்கள் அதனைப் பாதிக்க விடக்கூடாது. பலர் இதை உருவாக்குவதில் ஆண்டுக்கணக்கில் உழைக்கிறோம். ஓரளவு பணச் செலவும் சம்பந்தப்பட்டுள்ளது. எதற்காக?. இது பரந்த தமிழ்ச் சமுதாயத்துக்கு நீண்டகாலம் பயன்படவேண்டும் என்பதற்காகத்தான். நம் எல்லோரூடைய வாழ்க்கைக் காலங்களையும் கடந்து நின்று நிலைக்க வேண்டும். இன்று குறைந்த அளவில் பங்களிப்பாளர்கள் இருக்கிறோம், எங்களுக்குள் புரிந்துணர்வுகளை வளர்த்துக்கொள்வது இலகு. ஆயிரக்கணக்கில் பங்களிப்பாளர்கள் வரும்போது, கட்டுரைகளின் உள்ளடக்கங்கள் தொடர்பில், கருத்துவேறுபாடுகள், முரண்பாடுகள் ஏற்படுகின்ற காலங்களில், உறுதியாகச் செயற்படுவதற்குரிய தார்மீக உரிமையை நாங்கள் பெறுவது, இப்பொழுது எப்படிச் செயற்படுகிறோம் என்பதில் தான் தங்கியுள்ளது. சமகால அரசியல் பேசுவதற்கு நூற்றுக்கணக்கான இணையத் தளங்களும், ஊடகங்களும் இருக்கின்றன. விக்கிபீடியா ஒரு கலைக்களஞ்சியம். தமிழுக்கென இருக்கும், இதுபோன்ற ஓரிரு இணையத் தளங்களில் ஒன்று. சிறந்தமுறையில் வளர்த்தெடுப்பதற்கான நல்லவாய்ப்புக் கொண்டது. சமகால அரசியல் சர்ச்சைகளினால் இதச் சிதைந்துபோக விடவேண்டாம். தமிழ் விக்கிபீடியா இவற்றுக்குரிய இடம் அல்ல.இதற்குமேல் விளக்கமாக எழுத முடியாது. தயவுசெய்து ஒவ்வொருவரும் சிந்தித்து உணர்ந்து கொள்ளவும். Mayooranathan 06:31, 6 அக்டோபர் 2006 (UTC)
ஆம், நான் கூற விரும்பியதை நீங்கள் கூறியுள்ளீர்கள். தேவையற்ற சட்ட சிக்கல்களையும் தவிர்க்க வேண்டும். அரசியல் சார்பு விடயங்களுக்கென விக்கியாவில் தனி தளம் அமைக்கப்பட்டுள்ளதைக் கவனிக்கவும். விக்கிபீடியா வளர வேண்டிய நடுநிலைநோக்கு கலைக்களஞ்சியம். இங்கு கலைக்களஞ்சியத்திற்குப் பொருத்தமான தலைப்புகளில் எண்ணற்ற கட்டுரைகள் உருவாக்கப்பட வேண்டியுள்ளன. தனிப்பட்ட அல்லது நமது ஒட்டுமொத்த சமுதாயத்தின் அரசியல் ஆர்வங்களை வளர்ப்பதற்கான தளம் ஒரு கலைக்களஞ்சியம் அல்ல. வலைப்பதிவுகள் போன்றவையே அதற்கு சரியானவை. ஏற்கெனவே மொழிப்பற்று, மொழித்தூய்மை விடயங்களிலேயே ஸ்ரீநிவாசனுடன் மாற்றுக் கருத்து ஏற்பட்டதையும் நாம் நினைவு கூற வேண்டும். -- Sundar \பேச்சு 06:43, 6 அக்டோபர் 2006 (UTC)

மயூரநாதன், சுந்தர் ஆகியோரின் கருத்துக்கள் முக்கியமானவை. நான் ஓரளவு இவ்வாறே உணர்ந்த போதும் இதுவரை அவதானித்த அளவில் விடுதலைப் புலிப் போராளிகள் பற்றிய கட்டுரைகளில் அரசியற் கருத்துக்கள் காணப்படவில்லையாதலால் கருத்துக் கூறவில்லை.

எனது கருத்து யாதெனில் அரசியல் சார்புக் கருத்துக்களற்ற விதத்தில் எழுதப்பட்ட கட்டுரைகள் ஏற்றுக் கொள்ளக்கூடியவையே. ஆனால் நூற்றுக்கணக்கில் இத்தகைய கட்டுரைகள் நிச்சயம் பிழையான அபிப்பிராயத்தை ஏற்படுத்தும். மேலும் இவர்களின் முக்கியத்துவம் தொடர்பான கேள்விகளும் எதிர்காலத்தில் வரும்; அப்போது விவாதங்கள் நிலைமைகளைச் சிக்கலாக்கும். உதாரணத்துக்கு தற்கொலைப் போராளியொருவர் தொடர்பான கட்டுரையொன்று விவாதத்துக்குள்ளானால் அது உணர்வுபூர்வமானதாகி விடும்.

இதுவரை உருவாக்கப்பட்டவை இருக்கட்டும். ஆனால் இனி வருங்காலங்களில் இத்தகைய கட்டுரைகளை உருவாக்க முன் முக்கியத்துவம் தொடர்பில் கவனம் செலுத்த வேண்டும். மிகவும் குறிப்பிடத்தக்கவர்களான திலீபன் போன்றவர்கள் பற்றிய கட்டுரைகள் அவசியமானவை. மேலும் சில முக்கிய திருப்பங்களுடன் சம்பந்தப்படும் போராளிகள் பற்றிய கட்டுரைகள் (உ-ம்: சங்கர், மில்லர்) ஏற்றுக் கொள்ளக் கூடியவையே. ஆனால் அரசியற் கருத்துக்களற்ற விதத்தில் அமைவது உறுதிப்படுத்தப்படல் வேண்டும்.

மேலும் போராளிகள் தொடர்பான தகவல்கள் சில வலைப்பதிவுகள் மற்றும் இணையத்தளங்களிலே உள்ளனவாதலால் அத்தளங்களுக்கு தமிழீழ விடுதலைப் புலிகளின் மாவீரர்கள் பட்டியல் பக்கத்தில் இணைப்புக் கொடுப்பது பயனுள்ளதாகும். நாம் உருவாக்க வேண்டிய கட்டுரைகள் பல்லாயிரக்கணக்கில் உள்ளன. ஆதலால் ஏற்கனவே இணையத்தில் உள்ளனவான இவற்றினை உருவாக்க அவசரமுமில்லை. நன்றி. கோபி 07:33, 6 அக்டோபர் 2006 (UTC)

இதுவரை இக்கருப்பொருளில் எழுதப்பட்ட கட்டுரைகளில் எவ்விதக் நடுநிலை குறைபாடோ பிரச்சார நடையோ காணவில்லை. நிரோ மெனக்கெட்டு எழுதி இருப்பதாலும் பிற இலங்கை விக்கிபீடியர்களும் கவனித்துக் கொண்டிருப்பதாலும், இது வரை தனிக்கட்டுரை எழுதப்பட்டவர்கள் நிச்சயம் கவனிக்கத்தகுந்த போராளிகளாக இருப்பர் என்று நம்புகிறேன். திலீபன் போன்றோரை குறித்து நானும் நிறைய அறிந்திருக்கிறேன். எனவே, எந்தக் கட்டுரையையும் நீக்க வேண்டிய நோக்கில் என் கருத்தை பதியவில்லை. இனி இது போன்ற கட்டுரைகளிலும் அதீத முக்கியத்துவமும் கவனமும் கொண்டு செயல்படவேண்டும் என்பதே என் வேண்டல். சுந்தர் பரிந்துரைத்தபடி விக்கியா போன்ற தளங்களையோ தனி இணையத்தளங்களிலோ தகவல்களை தந்து இங்கிருந்து வெளி இணைப்புகள் தருவதில் எந்த ஆட்சேபணையில்லை. தமிழீழனின் பதிப்பில் அனைத்துப் போராளிகளுக்கும் தனிக் கட்டுரை வேண்டும் என்று குறிப்பிட்டிருக்கிறார். அது கவனக்குறைவால் எழுந்த எழுத்துப்பிழையாக இருக்கலாம் என நினைக்கிறேன். ஏனெனில், அடுத்த வரியில் அதற்கு மாறான கருத்தை தெரிவித்திருக்கிறார். ஒரு வேளை அனைத்துப் போராளிகளுக்கும் தனிக் கட்டுரை வேண்டும் என்று அவர் கூறுவாரானால் அதில் உடன்பாடில்லை. அனைத்துப் போராளிகளின் பெயர்ப்பட்டியல்களை தருவது கூட விக்கிபீடியாவின் சாத்தியத்துக்கும் தேவைக்கும் அப்பாற்பட்டது. போராளிகளின் முக்கியத்துவத்தை எந்த விதத்திலும் குறைத்து மதிப்பிடவில்லை. சம காலத்தில் பலவாறும் முத்திரை குத்தப்படுபவர்கள் வருங்காலத்தில் தியாகிகளாகவும் விடுதலை வீரர்களாகவும் வணங்கப்படுவதுண்டு. இதற்கு இந்தியாவிலேயே பகத்சிங், வாஞ்சினாதன் என பல எடுத்துக்காட்டுக்கள் உண்டு. இவர்கள் போல் பலரும் INAவில் இறந்திருக்ககூடும் என்றாலும் ஒரு சிலரை மட்டுமே கவனித்து விக்கிபீடியாவில் இடம்பெறச்செய்கிறோம். இதே போக்கை இலங்கை விதயத்திலும் செய்தால் மகிழ்ச்சியே. ஒவ்வொரு நாட்டுக்கும் விடுதலை, போராட்ட வரலாறு உள்ளது. அது மிகவும் மதிக்கப்படவேண்டியது. எனினும் அனைத்து தரவுகளையும் இங்கு குவிக்காமல், கலைக்களஞ்சிய நோக்கங்கள், வரையறைகளை பேண வேண்டும் என்பதே நம் குறைந்தபட்ச புரிந்துணர்வாக இருக்க வேண்டும். மயூரனாதன், கோபி, சுந்தர் கருத்துக்களோடு முழுக்க ஒத்துப் போகிறேன்--ரவி 07:46, 6 அக்டோபர் 2006 (UTC)

மயூரநாதன், கோபி, ரவி, சுந்தர் ஆகியவர்களின் கருத்திற்கு உடன்படுகின்றேன். தமிழ் விக்கிபீடியா இன்னமும் நிறையச் சாதிக்க வேண்டியுள்ளது நிறையப் பிரபலமும் அடையவேண்டும். போராட்டம் சம்பந்தமான சில கட்டுரைகளில் எனக்குப் பிரச்சினை இல்லை ஆனால் குறிப்பாக இலங்கையில் இப்போதிருக்கின்ற நிலையில் இலங்கையில் தமிழர்கள் மர்மான முறையில் ஆட்கள் கட்டத்தப்படும் சிலர் கொல்லப் பட்ட நிலையிலும் இலக்கத்தகடுகள் அற்ற வெள்ளை வான்கள் மூலம் கடத்தப்படும் நிலையில் இவ்வாறான கட்டுரைகள் குறிப்பாக இலங்கையர்களின் பங்களிப்பைக் குறைக்கக் கூடும். இது ஓர் எதிர்மறையான விளைவை ஏற்படுத்தலாம். எனவே துறைசார்ந்த கட்டுரைகளையே விக்கிபீடியர்கள் வழங்குமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றேன். --Umapathy 09:39, 6 அக்டோபர் 2006 (UTC)
மேலே உள்ள கருத்துக்களுடன் பெரும்பாலும் ஒத்துப்போகின்றேன். தமிழ் விக்கிபீடியாவை அரசியல் சிக்கல்களில் சீர்கெடாமல் வைத்திருப்பது முக்கியம். குறிப்பாக வெகு வேகமாக மாறக்கூடிய தற்கால அரசியல். ஆனால், நாம் சமூகத்தில் நிகழும் நிகழ்வுகளை தவர்க்க முடியாது. 61 மாணவிகள் கொல்லப்படும் பொழுது, "தற்போதைய நிகழ்வுகள்" என்ற ஒரு பகுதி இருக்கும்பொழுது அதைப்பற்றி குறிப்பிடாமல் இருப்பது அவ்வளவு பொருந்தாது. அரசியலை தவர்க்க முடியாது ஆனால் அதன் கூர்மையான பகுதிகள் எம்மை குத்தாமல் இருக்கும்படி நடந்து கொள்வதே பொருந்தும். எனினும், அதற்காக selective amnesia அல்லது censorship செய்ய முடியாது. அது விக்கியின் அடிப்படைத் தத்துவத்துக்கே பொருந்தாது.
அப்துல் கலாமை பின்பற்றி சொல்வோமானல் "Politics of Politics" பற்றி அவ்வளவு எழுதாமல் "Politics of Development" பற்றி எழுதினால் நன்று. பக்கி ஃபள்ளர் அவர்களைப் பின்பற்றி சொல்வதானால் development through poltics என்பதை விட development through design என்பதே நன்று. இயன்றவரை நடுநிலைமையோடு எழுத வேண்டும். தகவல் செறிவு, விடயநோக்கு நடை போன்றவையும் த.வி. க.க. வளர்ச்சிக்கு முக்கியம்.
எமது தனிப்பட்ட அரசியல் நிலைப்பாடுகள் இயன்றவரை த.வி. நடுநிலைமையையோ அல்லது அதன் இருப்பையோ வளர்ச்சியையோ பாதிக்காது வண்ணம் இருக்கும் வெளிப்படுத்த முனைய வேண்டும். த.வி.க.க சார்பற்ற கொள்கையை தெளிவுற கூற வேண்டும், அமுல்படுத்த வேண்டும்.
மாவீரர்கள் பற்றி தகவல்கள் தரும் தளங்கள் பல இருக்கின்றன. முக்கிய நபர்களுகுக்கு மட்டும் தகவல் தருவது பொருந்தும் என்று நினைக்கின்றேன். விக்கியா போன்ற தளத்தில் வேண்டுமானால் அனைத்து வீரர்களையும் இணைக்கலாம்.
உமாபதி கூறியவற்றையே நானும் அழுத்தி சொல்ல விரும்புகின்றேன். அரசியல் தவிர்ந்த பல துறைகள் விரிந்து கிடக்கின்றன. மருத்துவம், கல்வி, சுற்றுச்சூழல், தினசரி வாழ்வியல், பண்பாடு, கணிதம் என பல துறைகள் விரிந்து கிடக்கின்றன, அவற்றில் கவனம் செலுத்துவோம். இருப்பினும், தற்காலத்தில் நடக்கும் செய்திகளை/வரலாற்றை பதிய பகிர விக்கி ஒரு அரிய வழி, அதை பொறுப்புடன் சார்பற்று, நடுநிலைமையுடன் பயன்படுத்தினால் அனைவரும் பயன்பெறலாம்.
--Natkeeran 14:44, 6 அக்டோபர் 2006 (UTC)

உங்கள் அனைவரின் கருத்துக்களுக்கும் உடன்படுகின்றேன் போராளிகளின் வரலாறுகளை உருவாக்குவதை முற்றிலும் தவிர்க்கின்றேன்.--சக்திவேல் நிரோஜன் 15:17, 6 அக்டோபர் 2006 (UTC)

மயூரநாதனின் கருத்துடன் முற்றிலும் எனக்கு உடன்பாடே. வீணான சர்ச்சைகளைத் தவிர்க்கவும் மேலும் ஆக்கபூர்வமான பயனர்களை உள்வாங்கவும் அவருடைய ஆலோசனைகள் பயன்படும். இப்போதைக்கு ஈழ வரலாறு தொடர்பான கட்டுரைகளுக்கு முன்னுரிமை அளித்து ஏற்கனவே உள்ள பல குறுங்கட்டுரைகளை மேலும் விரிவாக்கப் பயனர்கள் உதவுவார்கள் என நம்புகிறேன்.--Kanags 00:47, 7 அக்டோபர் 2006 (UTC)

அனைத்துப் போராளிகளின் வீரகாவியங்களையும் கட்டுரைகளாக இணைக்க வேண்டும் என்றே கருத்துரைத்தேன். ஆயினும் அது பொருத்தமற்றது என்பதை உணர்த்தியுள்ளீர்கள். --தமிழீழன் 22:22, 5 நவம்பர் 2006 (UTC)