அடையாறு (நதி)
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
அடையாறு சென்னை நகரில் ஓடும் ஆறுகளில் ஒன்று. இந்த ஆறு செம்பரம்பாக்கம் ஏரியில் துவங்கி சென்னை நகர் வழியாகச் சென்று வங்காள விரிகுடாவில் கலக்கிறது. சென்னையில் ஓடும் கூவம் அளவிற்கு இல்லாவிடினும், இந்த ஆறு மாசு மிகுந்து காணப்படுகிறது. ஆதலால் முன்பு நடைபெற்ற மீன்பிடி இப்பொழுது சாத்தியமற்றதாகி விட்டது.