நாலாயிர திவ்வியப் பிரபந்தம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.

வைணவ சமயத்தில் ஆழ்வார்கள் என்று போற்றப்படும் பன்னிரண்டு பெரியார்களால் இயற்றப்பட்ட பாடல்களோடு திருவரங்கமுதனார் செய்த இராமானுச நூற்றந்தாதியும் சேர்த்த தொகுப்பே நாலாயிர திவ்யப் பிரபந்தம் எனப்படுகின்றது. இப்பாடல்கள் ஆறாம் நூற்றாண்டு தொடக்கம் ஒன்பதாம் நூற்றாண்டுவரையான காலப் பகுதியைச் சேர்ந்தவை. இப் பாடல்களைத் தொகுத்தவர், நாதமுனி என்பவர் ஆவார். இவற்றுட் பெரும்பாலானவை பண்ணுடன் பாடக்கூடிய இசைப்பாடல்களாகும்.

இந்த நூல் ஆன்ற தமிழ் மறை, ஐந்தாவது வேதம், திராவிட வேதம், திராவிட பிரபந்தம் என்றெல்லாம் வர்ணிக்கப்பட்டுள்ளது.

நாலாயிர திவ்வியப் பிரபந்தம் நான்கு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. இவை,

  1. முதலாயிரம்
  2. பெரிய திருமொழி
  3. திருவாய்மொழி
  4. இயற்பா

என்பனவாகும்.

நாலாயிர திவ்யப் பிரபந்தத்தில் அடங்கியுள்ள நூல்களையும், அவற்றில் அடங்கியுள்ள பாடல்களின் எண்ணிக்கையும், அவற்றைப் பாடியோரின் பெயர்களையும் கீழேயுள்ள அட்டவணையில் காணலாம்.

நூல்கள் பாடல் எண்ணிக்கை பாடியோர்
முதல் திருவந்தாதி 100 பொய்கையாழ்வார்
இரண்டாம் திருவந்தாதி 100 பூதத்தாழ்வார்
மூன்றாம் திருவந்தாதி 100 பேயாழ்வார்
நான்முகன் திருவந்தாதி 96 திருமழிசையாழ்வார்
திருச்சந்த விருத்தம் 120 திருமழிசையாழ்வார்
திருவிருத்தம் 100 நம்மாழ்வார்
திருவாசிரியம் 7 நம்மாழ்வார்
பெரிய திருவந்தாதி 87 நம்மாழ்வார்
திருவாய்மொழி 1102 நம்மாழ்வார்
பெருமாள் திருமொழி 105 குலசேகர ஆழ்வார்
பெரிய திருமொழி 1084 திருமங்கையாழ்வார்
திருக்குறுந்தாண்டகம் 20 திருமங்கையாழ்வார்
திருநெடுந்தாண்டகம் 30 திருமங்கையாழ்வார்
பெரிய திருமடல் 78 திருமங்கையாழ்வார்
சிறிய திருமடல் 40 திருமங்கையாழ்வார்
திருவெழுகூற்றிருக்கை 1 திருமங்கையாழ்வார்
திருப்பள்ளியெழுச்சி 10 தொண்டரடிப் பொடியாழ்வார்
அமலனாதிபிரான் 10 திருப்பாணாழ்வார்
திருப்பல்லாண்டு, திருமொழி 473 பெரியாழ்வார்
நாச்சியார்திருமொழி 143 ஆண்டாள்
திருப்பாவை 30 ஆண்டாள்
கண்ணினுண் சிறுதாம்பு 11 மதுரகவியாழ்வார்
இராமானுச நூற்றந்தாதி 108 திருவரங்கத்தமுதனார்

[தொகு] வெளியிணைப்புகள்