மலஹரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.

மலஹரி 15வது மேளகர்த்தா இராகமாகிய, "அக்னி" என்றழைக்கப் படும் 3வது சக்கரத்தின் 3 வது மேளமாகிய மாயாமாளவகௌளையின் ஜன்ய இராகம் ஆகும். விடியற்காலையில் பாடக் கூடிய இவ்விராகம் ஔடவ- ஷாடவ இராகம் ஆகும். இவ்விராகம் கருணைச் சுவையை வெளிப்படுத்தும்.

ஆரோகணம்: ஸ ரி11 ப த1 ஸ்
அவரோகணம்: ஸ் த1 ப ம13 ரி1
  • இந்த இராகத்தில் ஷட்ஜம், சுத்த ரிஷபம் (ரி1), அந்தர காந்தாரம் (க3), சுத்த மத்திமம்(ம1), பஞ்சமம், சுத்த தைவதம் (த1 ஆகிய சுரங்கள் வருகின்றன.

[தொகு] இதர அம்சங்கள்

  • ஆரோகணத்தில் க , நி வர்ஜம். அவரோகணத்தில் நி மட்டும் வர்ஜம். இது உபாங்க இராகம் ஆகும்.
  • புரந்தரதாசர் இந்த இராகத்தில் பிள்ளையார் கீதம் ஒன்றும், மகேஸ்வரர் கீதம் ஒன்றும், விஷ்ணு கீதங்கள் இரண்டும் இயற்றியுள்ளார்.
  • மலத்தை நீக்குகின்ற இராகம் என்ற பொருளைக் கொண்ட இவ்விராகம் மனித உள்ளத்தில் இருக்கும் மாசை நீக்கி தூய்மைப்படுத்தும் இராகம் எனக் கருதப்படுகின்றது.
  • இதன் பெயர் பழமையான இசை இலக்கண நூல்களில் காணப்படுகின்றது. (திருவாவடுதுறை ஆதீன ஏட்டுப் பிரதியில் குறிஞ்சிப்பண் என்பது மலஹரி எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.)
  • இந்த இராகம் மழைக்காலத்துக்குரியது எனக் குறிப்பிடப்படுகின்றது.

[தொகு] உருப்படிகள்

  1. கீதம் : "சிறீகணநாத" - ரூபகம் - புரந்தரதாசர்.
  2. கீதம் : "கெரயநீரனு" - திரிபுடை - புரந்தரதாசர்.
  3. கிருதி : "பஞ்சமாதங்க" - ரூபகம் - முத்துஸ்வாமி தீஷிதர்.
  4. கிருதி : "இதுவோ நின்" - மிஸ்ரசாபு - பெரியசாமித்தூரன்.
  5. கிருதி : "மேலுகோவையா" - ஆதி - ஷாஜி மகாராஜா.
"http://ta.wikipedia.org../../../%E0%AE%AE/%E0%AE%B2/%E0%AE%B9/%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%B9%E0%AE%B0%E0%AE%BF.html" இலிருந்து மீள்விக்கப்பட்டது