தஞ்சை சரசுவதிமகால் நூலகம்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
தஞ்சை சரசுவதிமகால் நூலகம் என்பது உலகில் உள்ள தொன்னூலகங்களில் ஒன்றாக சிறப்பாகக் கருதப்படுகின்றது. சுமார் 600 ஆண்டுகளுக்கு முன்னர் (கி.பி. 1400களிலே) இருந்த சோழர்கள் காலத்தில் தோன்றி, அவர்கள் பணியால் வளர்ச்சி யடைந்து, பின்னர் தஞ்சை நாயக்க மன்னர்களால் வளர்க்கப்பட்டு அதன் பின்னர் தஞ்சையை ஆண்ட மராட்டிய மன்னர்களால் வளர்ச்சியுற்று, இன்று பன்மொழிச் சுவடிகளும், காகிதத்தில் எழுதிய நூல்களும், ஓவியங்களும் கொண்ட ஓர் ஒப்பரிய நூலகமாகத் திகழ்கின்றது. கல்வெட்டில் கிடைத்துள்ள ஆதாரங்களின் படி (ARE 168, 169, 1961-62) இந்நூலகம் முதலில் சரசுவதி பண்டாரகம், புத்தகப்பண்டாரம் எனவும் இந்நூலகத்தில் பணி புரிதவர்களை சரசுவதி பண்டாரிகள் எனவும் என வழங்கப்பட்டது. கி.பி. 1122 முதலே இருந்தற்கான அடிக்கோள்கள் உள்ளன.
[தொகு] உசாத் துணை
1. ஆ. குணசேகரன், தஞ்சை சரசுவதிமகால் நூலகம், சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம், டி,டி.கே சாலை, சென்னை-18, ஆண்டு குறிப்பிடபடவில்லை ஆனால் சான்றுரை ஒன்றில் 10.8.2004 என்னும் நாள் குறிப்பிட்டுள்ளது. பக்கங்கள் 262.