ஜயசிக்குறு
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
ஜயச்சிக்குறு (சிங்களம்:ஜயசிக்குறு = வெற்றிநிச்சயம்) இராணுவ நடவடிக்கையானது யாழ் - கண்டி A-9 பெருந்தெருவை யாழ்ப்பாணத்திற்காகத் திறப்பதை முக்கிய நோக்கமாகக் இலங்கை இராணுவத்தினால் தொடங்கப்பட்ட இராணுவ நடவடிக்கையாகும். தமிழீழ விடுதலைப் புலிகளினால் இது ஓர் ஆக்கிரமிப்பு நடவடிக்கை என்றும் இதன் நோக்கம் விடுதலைப் புலிகளின் வன்னிப் பிரதேசத்தை இரண்டாகப் பிரித்து விடுதலைப் புலிகளின் நடவடிக்கைகளை இரண்டாக உடைபதாகும் என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த நடவடிக்கை மூலம் யாழ் கண்டி சாலையின் கிளிநொச்சிப் பகுதியில் வவுனியா வடக்குப் பகுதியில் இருமருங்கிலும் உள்ள தமிழர்களின் வீடுகள் புல்டோசர் கொண்டு மூலம் தரை மட்டமாக்கப்பட்டது. ஆரம்பத்தில் அப்போதய இலங்கையின் பிரதி பாதுகாப்பு அமைச்சரான அனுருத்த ரத்தவதையின் வழிகாட்டலின்கீழ் இப்போர் முன்னெடுப்புச் செய்யப்பட்டது. இந்நடவடிக்கை மூல இலங்கை இராணுவத்தினர் பெரும் நிலப்பரப்புகள் கைப்பற்றப்பட்ட்டது. பெரும் எண்ணிக்கையான பொதுமக்கள் அகதிகளாயினர். இந்த இராணுவ நடவடிகைக்கு பதில் நடவடிக்கையாக விடுதலைப் புலிகளின் ஓயாத அலைகள் எனப்பெயரிடப்பட்ட தாக்குதல்களை தொடுத்தனர்.