விநாயகமூர்த்தி முரளிதரன்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
கருணா அம்மான் என்றழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் (பிறப்பு 1966) மார்ச் 2004 இல் உருவாக்கப்பட்ட தமிழீழ மக்கள் விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவராவார்.
[தொகு] வாழ்க்கை வரலாறு
கிழக்கிலங்கை மட்டக்களப்பு கிரானில் பிறந்தார். இவர் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பில் 1983 ஆண்டில் இணைந்து கொண்டார். 2003 ஆம் ஆண்டில் இவர் விடுதலைப் புலிகாளின் அமைப்பின் தலைவராகிய பிரபாகரன் ஆல் கிழக்குமாகாண மட்டு அம்பாறை விசேட கட்டளை அதிகாரியாக நியமிக்கப்பட்டார்.
[தொகு] விடுதலைப் புலிகளில் இருந்து பிரிவு
விடுதலைப் புலிகள் கிழக்கு மாகாணத்தைப் புறக்கணிப்பதாகக் கூறி விடுதலைப் புலிகள் அமைப்பில் இருந்து விலகியதோடு புரிந்துணர்வு ஒப்பந்தம் தம்முடனும் செய்யப்பட வேண்டும் என்று கூறினார். விடுதலைப் புலிகளோ ஒழுக்காற்று நடவடிக்கைகள் காரணமாக இவர் விடுதலைப் புலிகள் அமைப்பில் இருந்து நீக்கப்பட்டதாக அறிவித்தனர்.
விடுதலைப் புலிகளோ கருணாவின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளை மீளப் பெற்றுக்கொண்டதாகக் கூறியபோதிலும் கிழக்கிலங்கையில் தமிழீழ விடுதலைப் புலிகள் ஆயுதங்களுடன் வெளிப்படையாக்கவே திரிவதும் சோதனைச் சாவடியில் உள்ள காவற் துறையினர் இவர்களை நிறுத்துவதோ விசாரிப்பதோ இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.[ஆதாரம் தேவை]
[தொகு] மனித உரிமை மீறல்கள்
கருணா குழுவினர் மட்டக்களப்பில் சிறுவர்களைப் பெரும்பாலும் பதின்ம வயதினரை வலுக்கட்டாயமாகப் படையில் சேர்பது அவதானிக்கப்பட்டுள்ளது. இவர்கள் விடுதலைப் புலிகளுக்கு எதிராக இயங்குவதால் இலங்கை இராணுவத்தினரும் இவர்களின் நடவடிக்கைக்கு ஆதவளித்து வருகின்றனர். [ஆதாரம் தேவை]