இளங்கீரன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.

இளங்கீரன் ஈழத்து முஸ்லிம் எழுத்தாளர்களில் தனித்துவமானவர். ஐம்பதுகளில் ஈழத்துத் தமிழ் நாவலுக்குப் புதிய பரிணாமத்தைக் கொடுத்தவர். ஏறத்தாழ இருபதுக்கு மேல் நாவல்களை எழுதிச் சாதனை புரிந்தவர். சிறந்த மேடைப் பேச்சாளர். மரகதம் என்ற இலக்கிய சஞ்சிகையை சில காலம் நடத்தியவர். இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் தோற்றத்தோடு அதில் இணைந்து செயற்பட்டவர்களில் ஒருவர்.

பொருளடக்கம்

[தொகு] தொடர் கதை

தினகரன் பத்திரிகையில் இவர் தொடராக எழுதி வந்த ' நீதியே நீ கேள் ' தொடர் கதை வாசகர்களால் மிகவும் வரவேற்கப்பட்டதோடு பின்னர் நூலாக வெளிவந்தது.

[தொகு] வானொலி நாடகங்கள்

இலங்கை வானொலி தேசிய சேவையில் இவர் எழுதிய ஏராளமான நாடகங்கள் ஒலிபரப்பாகின. "மனித புராணம்", "வாழப்பிறந்தவர்கள்" போன்ற தொடர் நாடகங்களும் அவற்றில் அடங்கும்.


[தொகு] எழுதிய நாவல்கள்

  • ஓரே அணைப்பு
  • மீண்டும் வந்தாள்
  • பைத்தியக்காரி
  • பொற்கூண்டு
  • கலா ராணி
  • மரணக் குழி
  • காதலன்
  • அழகு ரோஜா
  • வண்ணக் குமரி
  • காதல் உலகிலே
  • பட்டினித் தோட்டம்
  • நீதிபதி
  • எதிர்பார்த்த இரவு
  • மனிதனைப் பார்
  • மனிதர்கள்
  • புயல் அடங்குமா? (1954, தினகரன்)
  • சொர்க்கம் எங்கே (1955, தினகரன்)
  • மனிதர்கள் (1956, தினகரன்)
  • இங்கிருந்து எங்கே? (1961, தினகரன்)
  • காலம் மாறுகிறது (1964, தினகரன்)
  • மண்ணில் விளைந்தவர்கள் (1960, தமிழன்).
  • அவளுக்கு ஒரு வேலை வேண்டும் (1972, வீரகேசரி).
  • அன்னை அழைத்தாள் (1977, சிரித்திரன்)

[தொகு] வெளிவந்த நூல்கள்

  • தென்றலும் புயலும் (நாவல், 1955)
  • நீதியே நீ கேள்! (நாவல், 1959)

[தொகு] நூலகம் திட்டத்தில் இவரது நூல்கள்