எதுகை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.

யாப்பிலக்கணத்தில் தொடை என வழங்கப்படும் செய்யுள் உறுப்பு வகைகளில் எதுகை முக்கியமானதாகும். வெவ்வேறு அடிகளின் அல்லது சீர்களின் முதலெழுத்துக்கள் ஒத்துவரின் மோனை எனப்படின், இரண்டாவது எழுத்துக்கள் ஒத்துவருதல் எதுகை ஆகும்.

அடிதொறும் தலை எழுத்து ஒப்பது மோனை
அது ஒழித் தொன்றின் எதுகை ஆகும்

என்பது தொல்காப்பியர் கூற்று.

[தொகு] எதுகை வகைகள்

எதுகை சீர்களிலும், அடிகளிலும் வரக்கூடும். இவை முறையே சீரெதுகை என்றும் அடியெதுகை என்றும் அழைக்கப்படுகின்றன. பொதுவாக அடியெதுகையே செய்யுள்களில் சிறப்புப் பெறுகின்றது. சீரெதுகை அதிகம் கைக்கொள்ளப் படுவதில்லை.

[தொகு] இவற்றையும் கவனிக்கவும்

"http://ta.wikipedia.org../../../%E0%AE%8E/%E0%AE%A4/%E0%AF%81/%E0%AE%8E%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%88.html" இலிருந்து மீள்விக்கப்பட்டது