அறுபடைவீடுகள்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
தமிழ் நாட்டில், இந்து சமயக் கடவுள்களில் ஒருவரும், தமிழ்க் கடவுள் எனக் கருதப்படுபவருமான முருகப் பெருமானுக்குச் சிறப்பானவையாகக் கொள்ளப்படும் ஆறு கோயில்கள் ஒவ்வொன்றும் அவருடைய படைவீடு எனப்படுகின்றது. இந்த ஆறு இடங்களும் ஒருமித்து அறுபடைவீடுகள் என அழைக்கப்படுகின்றன. இந்த ஆறு இடங்கள்,
- திருப்பரங்குன்றம்,
- திருச்செந்தூர் அல்லது திருச்சீரலைவாய்,
- திருவாவினன்குடி,
- திருவேரகம்,
- குன்றுதோறாடல்,
- பழமுதிர்சோலை
என்பனவாகும்.