எரியும் முட்செடி
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.

எரியும் முட்செடி, என்பது யாத்திராகமம் நூலில் காணப்படும் ஒரு புதுமையாகும், யாவே கடவுள் மோசேயை, இஸ்ரவேலரின் எகிப்து அடிமை வாழ்விலிருந்து அவர்கள மீட்பதற்கான தலைவராக அழைக்க பயன்படுத்தினார்.
[தொகு] யாத்திராகமம் நூலில் உள்ளவை
மோசே எகிப்தை விட்டு தப்பிவந்து எத்திரோவிடம் வாழ்ந்தபோது, ஆடுகளை மேய்த்து கொண்டிருக்கும் போது மலைமீது எரியும் முட்செடி ஒன்றை கண்டு மரம் மரம் வெந்துபோகமல் இருக்க கண்டு அதனருகே போனார்.[1] அப்போது கடவுளின் ஆவி முட்செடியின் நடுவிலிருந்து மோசேயை அழைத்து, அவர் நிற்பது புனித பூமி என்றும்,மோசேயின் பாதணிகளை அகற்றுமாறும் கட்டளையிட்டு, தன்னை "நான் ஆபிரகாமின் தேவனும் ஈசாக்கின் தேவனும் யாக்கோபின் தேவனுமாகிய உன் பிதாக்களுடைய தேவனாயிருக்கிறேன்" என அறிமுகப்படுத்தினார்.[2] பின்பு கடவுள் மோசேயை எகிப்துக்கு போய் அரசனிடம் பேசி இஸ்ரவேலரை விடுவித்து அவர்களை வாக்களிக்கப்பட்ட நாட்டுக்கு வழிநடத்துமாறு கட்டளையிட்டார்.
[தொகு] வணக்கத் தளம்
இந்த சம்பவம் நடந்ததாக கருதப்படும் இடத்தில் இப்போது ஒரு ஆலயம் அமைந்துள்ளது. இங்கு இப்போது காணப்படும் முட்செடி மோசேக்கு கடவுள் தோன்றிய முட்செடியின் வழிவருவது என்பது நம்பிக்கையாகும். மோசேக்கு கடவுள் தோன்றிய மரம் இறந்துவிட்டது.