பிரம்மபுத்திரா ஆறு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.

பிரம்மபுத்திரா இந்தியாவின் வடகிழக்கே அஸ்ஸாம் மாநிலம், வங்காள தேசம் வழியாகப் பாய்ந்து வங்காள விரிகுடாக் கடலில் கலக்கும் கழிமுக நிலப்பகுதி
பிரம்மபுத்திரா இந்தியாவின் வடகிழக்கே அஸ்ஸாம் மாநிலம், வங்காள தேசம் வழியாகப் பாய்ந்து வங்காள விரிகுடாக் கடலில் கலக்கும் கழிமுக நிலப்பகுதி

பிரம்மபுத்திரா ஆறு, திபேத்தில் உள்ள கயிலை மலையில் புறப்பட்டு திபேத், இந்தியா, பங்களாதேசம் ஆகிய நாடுகளில் பாய்ந்து வங்காள விரிகுடாக் கடலில கலக்கின்றது. இவ்வாறு மிகப்பெரிய ஆறு, மிக உயரத்திலும் ஓடும் பேராறு. மலைத்தொடரில் சராசரி 4000 மீ உயரத்தில் 1700 கி.மீ பாய்ந்தோடுகின்றது. பொதுவாக இந்தியாவில் பெண்பால் பெயரிட்டு அழைப்பது வழக்கம், ஆனால் இவ்வாறு 'புத்திரா' என்று முடிவதால், இது சிறப்பாக ஆண்பால் பெயரிட்டு வழங்கப்படுகின்றது.