ஜெகசிற்பியன் (எழுத்தாளர்)
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
"விக்கிபீடியா:புதிய பக்கங்களை உருவாக்குவது" எப்படி என்ற பக்கத்தில் இடப்பட்டிருந்த இப்பகுதியை வெட்டி இங்கே ஒட்டியுள்ளேன். இது விக்கிபீடியாவுக்கு உகந்த வடிவத்துக்கு மாற்றப்படவேண்டியுள்ளது.
ஜெகசிற்பியன் அவர்கள் இருபதாம் நூற்றாண்டுப் புனைகதை எழுத்தாளர்களில் விரல்விட்டு எண்ணத்தக்கவர்களில் ஒருவராகத் திகழ்ந்தார் உடலளவில்! திகழ்கிறார் அவரது எழுத்தளவில். அவர் தனது அரை நூற்றாண்டு வாழ்க்கையில் ஒரு நூற்றாண்டுச் சாதனையைப் புனைகதை வளத்திற்குள் சாதித்துள்ளார் எனின் மிகையன்று. ஒரு நூற்றாண்டு அளவில் பேசக்கூடிய அளவிற்கு, இந்திய இலக்கியச் சிற்பிகள் வரிசையில் இடம்பெறும் அளவுக்குப் பல்முனைகளில் சாதனைகளை நிகழ்த்தியுள்ளார் அவர். அவர் படைப்புக்களான சிறுகதைகளிலும், சமூகப் புதினங்களிலும், வரலாற்றுப் புதினங்களிலும் நாடகங்களிலும், கட்டுரைகளிலும் தன் முத்திரையைப் பதிக்கத் தவறவில்லை. ஆழ்ந்து விருப்பு வெறுப்பற்ற முறையில் அவரது படைப்புக்களை மெதுவாக உள்வாங்கி அசைபோடும் எந்த இலக்கியச் சுவைஞனும், திறனாய்வாளரும் இதை ஒப்புவர்.
தம்முடைய பாத்திரங்களைப் படைப்பதிலும், அவற்றைச் சுற்றியுள்ள உலகைச் சித்தரிப்பதிலும் தனித்தன்மையோடு விளங்குகிறார் ஜெகசிற்பியன். இணைப்பது தெரியாமல் காட்சிகளையும் பாத்திரங்களையும் பிணைக்கக் கூடிய கலை அவரிடம் இருக்கிறது. இது எவ்வளவு பெரிய அரிய செயல் என்பதை ஒவ்வொரு புதினப் படைப்பாளியும் அறிவர். வாழ்க்கை என்பது தொடர்ச்சியானது என்ற கொள்கை ஜெகசிற்பியனுக்கு இருந்தது. ஒவ்வொரு நாள் வாழ்க்கையும், இன்பங்களோடும் துன்பங்களோடும் தொடர்ந்து நடந்து கொண்டு போகிறது என்பது அவர் கொள்கை.
கடந்த இருபதாம் நூற்றாண்டின் மையப் பகுதியில் வாழ்ந்து, எழுத்தையே முழுநேரத் தொழிலாகக் கொண்டு, அதில் ஓர் கொள்கையைக் கடைப்பிடித்து, கடைசிவரை காசுக்காகத் தான் கொண்ட கொள்கையில் நிறம் மாறாமல் வாழ்ந்த எழுத்துக் கலைஞன்தான் ஜெகசிற்பியன். இத்தகு படைப்பாளியின் எழுத்தின் நயத்தை, அவர்தம் ஆளுமையை மிகக் குறைந்த அளவிலேயே, திறனாய்வாளர்களும் அறிஞர்களும் எடை போட்டிருக்கிறார்கள். அவர் எழுத்தளவுக்கு யாரும் போடவில்லை என்பதைக் காணும்போது , இலக்கிய நெஞ்சம் கொஞ்சம் வலிக்கத்தான் செய்கிறது. இருப்பினும் , அவரது அமரத்துவம் வாய்ந்த பல படைப்புக்களின் ராகத்தை அறிஞர் உலகுக்குச் சமர்பிக்க, சாகித்ய அக்காதெமி எனக்கு ஒரு வாய்ப்பை வழங்கியுள்ளமைக்கு என் நன்றியை அந்நிறுவனத்திற்கு முதற்கண் தெரிவிப்பதில் மகிழ்கிறேன். அதேபோல், தன்னை இந்திய இலக்கியச் சிற்பிகளுள் ஒருவராக நியாயமான வகையில் அங்கீகரித்த சாகித்திய அக்காதெமியின் பெருந்தன்மையைக் கண்டு ஜெகசிற்பியனின் ஆன்மா நிச்சய்ம் மகிழ்வெய்தும்.
அவரின் நூற்று ஐம்பத்து நான்கு சிறுகதைகள் பன்னிரண்டு தொகுதிகளாகவும், இரு குறுநாவல்களும் இரு தொகுதிகளாகவும் மொத்தம் பதினான்கு தொகுதிகள் வெளிவந்துள்ளன. இவற்றுள் முப்பது சிறுகதைகளும், குறுநாவல்களும் ங்கிலம், ஜேர்மன்,இந்தி, கன்னடம் ஆகிய மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டிருக்கின்றன என்பது உவகையூட்டும் செய்தியாகும். ஒரு P.E.N. மாநாட்டில் , டாக்டர் அ.சிதம்பரநாதன் செட்டியார், ஜெகசிற்பியனின் 'ஜலசமாதி' சிறுகதையை உலகச் சிறுகதைகளின் தரத்தை எட்டியுள்ளது என்று குறிப்பிட்டிருப்பதும் இங்கு நோக்கத்தக்கது.
பல இதழ்களில் சிறுகதை, குறுநாவல் எழுதிய போதிலும் ஜெகசிற்பியன் என்ற பெயர் தமிழ் வாசகர்களுக்குப் பளிச்சென்று தெரிய வந்தது 1957இல் 'ஆனந்த விகடன்' நடத்திய வெள்ளிவிழாப் போட்டியில்தான். அதில் அவர் இரு முதற் பரிசுகளைப் பெற்றார்.
1.சிறுகதை: நரிக்குறத்தி 2.வரலாற்றுப் புதினம்: திருச்சிற்றம்பலம்.
அடுத்து, 'தமிழ்நேசன்' என்ற மலேசியத் தினசரியில் அவர் எழுதிய 'மண்ணின் குரல்' சமூகப் புதினம் தனி நூலாக வெளியானபோது தமிழ்ப்புதின வாசகர்கள் அவரது பேராற்றலை வேறு கோணத்தில் அறிந்தார்கள்.
'ஜீவகீதம்' தொடர்புதினத்தை 17.1.1965 முதல் 'கல்கி' இதழில் அவர் எழுதியது அவருக்குப் பெரிய வாசகர் வட்டத்தைப் பெற்றுத் தந்தது. --Ngiri 15:31, 20 ஏப்ரல் 2006 (UTC)இப்புதினம் 'நேஷன்ல் புக் ட்ரஸ்ட்டால்' பதின்மூன்று இந்திய மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டது. சென்னைப் பல்கலைக்கழகப் புகுமுக வகுப்பு, உயர்நிலைப் பள்ளிக் கல்வி கியவற்றில், தமிழ்ப்பாட நூல்களில் 'அவன் வருவான்', 'நொண்டிப் பிள்ளையார்' ஆகிய சிறுகதைகள் பாடமாக வைக்கப்பெற்றன.
மதுரைக் காமராசர் பல்கலைக் கழகம் முதுகை (எம்.ஏ) வகுப்பிற்கு 'ஆலவாயழகன்' என்ற வரலாற்றுப் புதினத்தையும், 'நடை ஓவியம்' என்ற ஓரங்க நாடகத் தொகுப்பையும் பாடநூல்களாக வைத்தது.
அண்ணாமலைப் பல்கலைக் கழகத் தமிழ் முதுகலை வகுப்பில் ஜெகசிற்பியன் சிறுகதைகள், வரலாற்றுப் புதினங்கள் பற்றிய ஆய்வையும், அமெரிக்க கபிலடெல்பியாவின் பென்சில்வேனியா பல்கலைக் கழகம், தெற்காசிய மொழிஇயல் ஆராய்ச்சிப் பிரிவைச் சேர்ந்த திராவிட மொழிகள் ஆராய்ச்சித் துறையினர் 'ஜெகசிற்பியன் சிறுகதைகள்' சமூகப் புதினங்கள் பற்றி ஆராய்ச்சி செய்துள்ளனர்.
1975இல் அண்ணாமலைப் பல்கலைக் கழக ய்வாளர் வி.குமாரவேலு என்பார் ஜெகசிற்பியனின் 'சொர்க்கத்தின் நிழல்' , 'ஜீவகீதம்' கிய புதினங்களை எம்.ஏ. பட்டத்திற்கு ஆய்வு செய்துள்ளார்.
1975இல் டி.பத்மாசனி என்பார் எம்.ஏ. பட்ட ஆய்வுரைக்கு ஆலவாயழகன், நந்திவர்மன் காதலி ஆகிய புதினங்களை ஆய்வு செய்தார் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில்.
1980இல் எஸ்.சுப்பிரமனியன் என்பார் ஜெகசிற்பியனின் 'சொர்க்கத்தின் நிழல்' புதினத்தை எம்.பில். பட்டத்திற்கு ஆய்வு செய்துள்ளார். ஜெகசிற்பியனின் வரலாற்று நாவல்கள் பற்றி பி.எச்.டி. பட்டத்திற்கு உமா ஜெயசீலன் என்பவர் ஆய்வுச் செய்துள்ளார். மேலும் ஜெகசிற்பியனின் சிறுகதைகள் பற்றி எம்.கபில். பட்டத்திற்கு குமாரி என்பவர் ஆய்வு செய்துள்ளார் என்பதும் இங்கு குறிப்பிட வேண்டியவை.
சென்னை இராணிமேரி கல்லூரியின் முன்னாள் முதல்வர், முன்னாள் தமிழ்த் துறைத் தலைவர் டாக்டர் திருமதி வெ.கனகசுந்தரம் அவர்கள் 'ஜெகசிற்பியனின் சமூகப் புதினங்கள்' என்ற பொருளில் பி.எச்.டி. பட்டத்திற்காக ஆய்வு செய்து, பட்டம் பெற்றபின் அதே தலைப்பில் நூலாகவும் வெளியிட்டுள்ளார்.
ஈரோடு சிக்கையா நாயக்கர் கல்லூரியின் தமிழ்ப் பேராசிரியர் டாக்டர் மா.மயில்சாமி அவர்கள் 1984இல் 'ஜெகசிற்பியன் சமூக நாவல்களில் கதைக் கருத்துகளும், அவைகளின் வளர்ச்சியும்- ஓர் ஆய்வு' என்ற தலைப்பில் பி.எச்.டி. பட்டத்திற்காக ஆய்வு செய்து பட்டம் பெற்றிருக்கிறார்.
இங்கிலாந்தின் கேம்பிரிட்ஜ், இண்டர்நேஷன்ல் பயோ கிராபிக்ஸ் செண்டர் தனது 'சர்வதேச எழுத்தாளர்கள், சிரியர்கள்- யார் எவர்?' நூலின் எட்டாம் பதிப்பில் இஅவரது வாழ்க்கைக் குறிப்பைக் கேட்டு வாங்கி வெளியிட்டுள்ளனர்.
தம் எழுத்தை நிலை நிறுத்த அதற்கொரு பக்கபலமாக இருக்கவோ, எழுத்தைத் தவிர வேறு எந்த நிறுவனத்தின் அல்லது ஊடகத்தின் தொடர்பை நாடாதவர். பதவிகள் அல்லது பதவியில் உள்ளோர் தொடர்பு, பெரிய மனிதர்களின் நட்பு, வசதியுள்ளோர் தரவு, கட்டுக்கோப்பான கலை இலக்கிய சமுதாய, அரசியல், உள்நாட்டு, வெளிநாட்டு நிறுவனங்களின் துணை இவ்வாறு ஏதோ ஒரு சார்பு நிலையில் தான் முழுநேர எழுத்தாளர் ஜீவனம் நடத்துவது முடியும் என்று நிரூபணமாகிவரும் அன்றைய காலகட்டத்திலும், ஏன் இன்றைய காலகட்டத்திலும், இலக்கியச் சூழலிலும் ஜெகசிற்பியன் முற்றிலும் மாறுபட்டவராக எழுதி நிலைத்தவர்.
காருகுறிச்சி அருணாசலமும், எஸ்.ஜானகியும் தமிழர்களை- நாதசுரம்- பாட்டு ஆகிய 'இசையெனும் இன்பவெள்ளத்தில் நீந்த வைத்த திரைப்படம் கொஞ்சும் சலங்கை- இந்தப் படத்திற்கு உரையாடலை எழுதியவர் ஜெகசிற்பியன்.
பொருளடக்கம் |
[தொகு] வெளியான ஜெகசிற்பியனின் படைப்புக்கள் சில
[தொகு] சிறுகதைத் தொகுதிகள்:
அக்கினி வீணை (1958) ஊமைக்குயில் (1960) நொண்டிப் பிள்ளையர் (1961) நரிக்குறத்தி (1962) ஞானக்கன்று (1963) 'ஒரு நாளும் முப்பது வருடங்களும்' (இரு குறுநாவல்கள்; 1962) இன்ப அரும்பு (1964) காகித நட்சத்திரம் (1966) கடிகாரச் சித்தர் (1967) மதுரபாவம் (1967) நிழலின் கற்பு (1969) அஜநயனம் (1972) ஒரு பாரதபுத்திரன் (1974)
[தொகு] சமூக நாவல்கள்:
ஏழ்மையின் பரிசு (1948) சாவின் முத்தம் (1949) கொம்புத் தேன் (1951) தேவதரிசனம் (1962) மண்ணின் குரல் (1964) ஜீவகீதம் (1966) காவல் தெய்வம் (1967) மோகமந்திரம் (1973) ஞானக்குயில் (1973) கிளிஞ்சல் கோபுரம் (1977) றாவது தாகம் (1977) காணக் கிடைக்காத தங்கம் (1977) இனிய நெஞ்சம் (1978) சொர்க்கத்தின் நிழல் (1978) இன்று போய் நாளை வரும் (1979) இந்திர தனுசு (1979)
[தொகு] வரலாற்று நாவல்கள்:
மதுராந்தகி (1955) நந்திவர்மன் காதலி (1958) நாயகி நற்சோணை (1959) லவாயழகன் (1960) மகரயாழ் மங்கை (1961) மாறம்பாவை (1964) பத்தினிக் கோட்டம் (பாகம் 1; 1964) பத்தினிக் கோட்டம் (பாகம் 2; 1976) சந்தனத் திலகம் (1969) திருச்சிற்றம்பலம் (1974) கோமகள் கோவளை (1976)