டி. ஜி. எஸ். தினகரன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.

டி. ஜி. எஸ். தினகரன்
பிறப்பு ஜூலை 1 1935 (வயது 71)
இந்தியாவின் கொடி சுரந்தை, தமிழ்நாடு
பணி மறைபரப்புனர்
துணை ஸ்டெல்லா தினகரன்

டி. ஜி. எஸ். தினகரன் (பிறப்பு ஜூலை 1, 1935 சுரந்தை, தமிழ்நாடு) அல்லது துரைசாமி கெப்ரீ சாமுவேல் தினகரன் இயேசு அழைக்கிறார் நிறுவனத்தின் அமைப்பாளரும் இந்தியாவின் முன்னனி கிறிஸ்தவ மறைபரப்புனருமாவார். இவர் காருன்யா பல்கலைக்கழகத்தின் வேந்தரும் ஆவார்.

[தொகு] சரிதம்

[தொகு] குழந்தைப்பருவம்

துரைசாமி, எப்சிபா தம்பதிகளுக்கு ஒரே மகனாக தென் தமிழகத்தின் திருநெல்வேலி மாவட்டத்தில் தினகரன் பிறந்தார். இவரது தந்தை ஒரு பாடசாலை ஆசிரியர் ஆவர், தாய் எப்சிபா வீட்டுமனைவியாக இருந்தார். குடும்பம் மிகவும் வறுமையில் வாடியது. தாயார் குணப்படுத்தப்பட முடியாத நரம்பு வியாதியால் பாதிக்கப்பட்டு வந்தார்.

[தொகு] இயேசுவை ஏற்றல்

வாலிபராயிருந்தபோது வறுமையும், வேலையில்லாத் திண்டாட்டமும் காரணமாக 1955 பெப்ரவரி 11 அன்று தற்கொலை எண்ணத்துடன் தொடருந்துப் பாதைக்கு சென்றார். செல்லும் வழியில் காவல்துறையில் வேலை செய்த தனது சித்தப்பாவை சந்தித்தார். கடவுள் பக்தி நிறைந்த அவருடைய வார்த்தைகள் ஒவ்வொன்றும், தினகரனுடைய உள்ளத்தில் அளவில்லாத விசுவாசத்தை ஏற்படுத்தியது. அவருடைய வாழ்க்கை முற்றிலுமாக மாற்றப்பட்டது. அகமகிழ்வுடன் வீட்டிற்குச் சென்றார். முழங்காற்படியிட்டு இயேசுவை வணங்கத் தொடங்கினார்.