கள்வனின் காதலி (1955 திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.

கள்வனின் காதலி
இயக்குனர் வி. எஸ். ராகவன்
தயாரிப்பாளர் [[]]
[[]]
[[]]
[[]]
கதை கல்கி
நடிப்பு சிவாஜி கணேசன்
பானுமதி ராமகிருஷ்ணா
குசல குமாரி
[[]]
இசையமைப்பு [[]]
[[]]
ஒளிப்பதிவு [[]]
படத்தொகுப்பு [[]]
வினியோகம் [[]]
வெளியீடு 1955
கால நீளம் 190 நிமிடங்கள்.
நாடு இந்தியா
மொழி தமிழ்
IMDb profile

கள்வனின் காதலி 1955 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும்.வி. எஸ். ராகவன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சிவாஜி கணேசன் மற்றும் பலரும் நடித்துள்ளனர்.

பொருளடக்கம்

[தொகு] வகை

[தொகு] கதை

கதைச்சுருக்க எச்சரிக்கை: கதைச்சுருக்கம் மற்றும் / அல்லது கதை முடிவு விவரங்கள், கீழே தரப்பட்டுள்ளன.

கணக்கப்பிள்ளை முத்தையா (சிவாஜி கணேசன்) ஒரு அப்பாவி. தன் தங்கையின் நல் வாழ்வுக்காக தன்னையே வருத்திக் கொள்கிறான். ஆனால் கொடியவர்களால் அவனது தங்கை பாழ்படும் போது சகிக்க முடியாமல் முரடனாகிறான். நடுவில் அவனுக்கு இருக்கும் ஒரே உதவி அவனது காதலி கல்யாணி (பானுமதி). தொடர்ந்து வரும் சோதனைகளால் பொலிசாரால் தேடப்படும் அளவில் முத்தையன் கள்வனாகிறான். கடைசியில் அவன் பொலிசாரால் சுடப்பட்டு இறக்கிறான்.


[தொகு] துணுக்குகள்

  • கல்கி கிருஷ்ணமூர்த்தி ஆனந்த விகடனில் பணியாற்றிய போது எழுதிய தொடர் நாவல் 'கள்வனின் காதலி'
  • 'வெயிற்கேற்ற நிழலுண்டு வீசும் தென்றல் காற்றுண்டு' என்று கண்டசாலா-பானுமதி பாடிய பாடல் இன்றைக்கும் ரசிக்கப்படுகிற பழைய பாடல்களில் ஒன்றாகும்

"வெய்யிற்கேற்ற நிழல் உண்டு வீசும் தென்றல் காற்றுண்டு கையில் கம்பன் கவி உண்டு கலசம் நிறைய அமுதுண்டு தெய்வ கீதம் பல உண்டு தெரிந்து பாட நீ உண்டு வையம் தரும் இவ் வனமன்றி வாழும் சொர்க்கம் வேறுண்டோ"

(உமர் கய்யாம் பாரசீக மொழியில் எழுதிய கவிதையை தமிழில் மொழிபெயர்த்தவர், கவிமணி தேசிகவிநாயகம்பிள்ளை)

[தொகு] வெளியிணைப்புகள்