பேச்சு:நாலாயிர திவ்வியப் பிரபந்தம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.

மயூரநாதன், இராமானுச நூற்றந்தாதி எழுதிய திருவரங்கத்தமுதனார் அவர்கள் 12 ஆழ்வார்களுள் ஒருவர் இல்லை. 12 ஆழ்வார்கள் பாடிய பாடல்களின் எண்ணிக்கை 4000 அல்ல (சற்று குறைவு). கட்டுரையில் திருத்த வேண்டும்.--செல்வா 20:08, 14 பெப்ரவரி 2007 (UTC)

இவர் ஆழ்வார்களுள் ஒருவர் அல்லவானாலும் இவர் பாடிய பாடல்களும் நாலாயிர திவ்யப் பிரபந்த நூல்களுள் ஒன்றாகக் கணிக்கப்படுகிறது. இதையும் சேர்த்துத் தான் 4000 என்கிறார்கள். (பேராசிரியர் ஜெ. ஸ்ரீசந்திரனின் தமிழ் இலக்கிய வரலாறு) Mayooranathan 20:16, 14 பெப்ரவரி 2007 (UTC)
இப்பொழுதிருக்கும் முதல் வரி"வைணவ சமயத்தில் ஆழ்வார்கள் என்று போற்றப்படும் பன்னிரண்டு பெரியார்களால் இயற்றப்பட்ட பாடல்களின் தொகுப்பே நாலாயிர திவ்யப் பிரபந்தம் எனப்படுகின்றது.". இதனை கீழ்க்காணுமாறு திருத்தினால் சரியாக இருக்கும் என நினைக்கிறேன். நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?
வைணவ சமயத்தில் ஆழ்வார்கள் என்று போற்றப்படும் பன்னிரண்டு பெரியார்களால் இயற்றப்பட்ட பாடல்ளோடு திருவரங்கமுதனார் செய்த இராமானுச நூற்றந்தாதியும் சேர்த்த தொகுப்பே நாலாயிர திவ்யப் பிரபந்தம் எனப்படுகின்றது.