வல்லிபுரம்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
வல்லிபுரம் என்பது இலங்கையின் வடபகுதியிலுள்ள யாழ்ப்பாணக் குடாநாட்டின் கிழக்குக் கடற்கரையோரமாக அமைந்துள்ள ஒரு ஊராகும். இப்பொழுது இது மிகவும் குடித்தொகை அடர்த்தி குறைந்த இடமாக உள்ளது. பழங்காலத்தில் இவ்விடத்தில் முக்கியமான குடியிருப்புக்கள் இருந்ததற்கான தொல்பொருட் சான்றுகள் கிடைத்துள்ளன. இதனையும், வேறு இலக்கிய ஆதாரங்களையும் முன்வைத்து, சிங்கைநகர் என்று குறிப்பிடப்படுகின்ற யாழ்ப்பாண அரசின் தலைநகரமே வல்லிபுரம் என்று சில ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.