சுப்ரமண்ய ராஜு
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
சுப்ரமண்ய ராஜு (ஜூன் 6, 1948 - டிசம்பர் 10, 1987, பாண்டிச்சேரி) தமிழ் எழுத்தாளர். இயற்பெயர் விஸ்வநாதன். சென்னை சுந்தரம் க்ளைடன் மற்றும் டி.டி.கே. நிறுவனங்களில் பணியாற்றியவர். மனைவியும் இரு பெண் குழந்தைகளும் அவருக்கு உண்டு. சென்னை நந்தனம் சிக்னல் அருகே நடந்த ஒரு மோசமான சாலை விபத்தில் உயிரிழந்தபோது அவருக்கு வயது 39 மட்டுமே.
சுப்ரமண்ய ராஜு வாழ்ந்த காலம், எழுதியவை இரண்டுமே கொஞ்சம்தான். ஆனால் ஒரு பெரும் தலைமுறையையே பாதித்த எழுத்தாளர் அவர். அவருக்கு முந்தைய தலைமுறையைச் சேர்ந்த எழுத்தா ளர்கள் முதல் இன்றைக்குப் புதிதாகத் தோன்றியிருக்கும் தலைமுறைவரை அவரைக் கொண்டாடவும் ஆராதிக்கவும் செய்கிறார்கள்.
'இன்று நிஜம்' என்கிற ஒரு தொகுப்புத்தான் ராஜு வாழ்ந்த காலத்தில் வெளியான அவரது புத்தகம்.
[தொகு] இவரது நூற்கள்
- இன்று நிஜம்
- சுப்ரமண்ய ராஜு கதைகள் (கிழக்கு பதிப்பகம், 2006)