அரியாலை நீர்நொச்சியந்தாழ்வு சித்திவிநாயகர் கோயில்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
அரியாலை நீர்நொச்சியந்தாழ்வு சித்திவிநாயகர் கோயில் யாழ்ப்பாணம் அரியாலையில் யாழ்-கண்டி சாலையில் (A9) சற்றே உள்ளே அமைந்துள்ளது. இதன் மூல விக்கிரமானது காசியில் இருந்து கொண்டுவரப்பட்டதாகக் கர்ணபரம்பரைக் கதைகள் கூறுகின்றன. 1918 ஆம் ஆண்டு அட்வகேட் அருளம்பலம் இந்த ஆலயத்தை விஸ்தரிக்க உதவினார். இந்த ஆலயம் அரியாலை சிவன் கோயில் உடன் அமைந்துள்ளது. இந்த ஆலயத்திற்குச் சொந்தமான வயல், தென்னந்தோப்புக்கள் ஆகியன உள்ளபோதிலும் தற்போதைய உள்நாட்டுப் பிரச்சினையால் இவை உள்ள கிழக்கு அரியாலைப் பகுதியை அணுகமுடியாமல் உள்ளது. இந்த ஆலயக் காணியிலேயே அரியாலை ஸ்ரீ பார்வதி வித்தியாசாலை அதனுடன் அமைந்த பாலர் பாடசாலை மற்றும் அரியாலை சரஸ்வதி சனசமூக நிலையங்கள் ஆகியவை அமைந்துள்ளன.