மகாவம்சம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.

மகாவம்சம் (பாளி மொழி:மகாவம்ச அல்லது மகாவங்ச,தமிழ் பெயர்ப்பு:பெரிய வரலாற்று தொடர்) பண்டைய இலங்கையின் வரலாற்றைக் கூறும் பாளிமொழியில் அமைந்த ஒரு தொகுப்பு நூலாகும்.இது விஜயனின் இலங்கை வருகை முதல்(கி.மு.543)மாகாசேனனின் ஆட்சிகாலம் வரை(கி.பி.334-361)இலங்கையின் வரலாற்றை தொகுக்கிறது.

மாகாவிகாரைச் சார்ந்த பௌத்தபிக்குகள் கி.மு 3ம் நூற்றாண்டிலிருந்து இலங்கையில் நிகழும் வரலாற்றுச் சம்பவங்களை தினக்குறிப்பேடு போன்று எழுதி பராமரித்து வந்தனர்.இவ் ஏடே கி.பி 5ம் நூற்றாண்டில் 'மகானாம' எனும் பௌத்தபிக்குவால் ஒன்றுபடுத்தி தொகுத்து மகாவம்சம் எனும் நூலாக வெளிப்பெற்றது.இவர் இலங்கை அரசன் தாதுசேனனின் சகோதரராவார். இவருடைய காலத்துக்கு ஐந்து நூற்றாண்டுகள் முந்திய வரலாற்று நூலான தீபவம்சத்தை சார்ந்தே நூலை தொகுத்துள்ளார்.இந் நூல் முழுமையாக பௌத்தமத கண்ணோட்டதிலே இலங்கையின் வரலாற்றை கூறிச்செல்கின்றது.

மகாவம்சத்தின் தொடர்ச்சியாக பல பௌத்தபிக்குகளால் எழுதப்பட்ட சூள வம்சம் எனும் நூல் கி.பி 4ம் நூற்றாண்டு முதல் பிரிட்டிஷார் முழு இலங்கையை கைப்பற்றிய ஆண்டான 1815 வரை நிகழ்ந்த வரலாற்றுச் சம்பவங்களை விபரிக்கின்றது.

மகாவம்சம் ஆங்கிலம்,ஜேர்மன் ஆகிய மொழிக்கு மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.


[தொகு] இவற்றையும் பார்க்கவும்

[தொகு] வெளி இணைப்புகள்

ஏனைய மொழிகள்