விசுவநாத நாயக்கர்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
விசுவநாத நாயக்கர் மதுரையை ஆண்ட நாயக்க மன்னர்களுள் முதலாமவன். இவனது ஆட்சியில் கேரளத்தின் முப்பது பகுதி உட்பட மதுரை, இராமநாதபுரம், திருநெல்வேலி, திருச்சி, கோயம்புத்தூர், சேலம் ஆகிய பகுதிகள் அடங்கியிருந்தன. 72 பாளையங்களை உருவாக்கினான். அவை 1800 ஆம் ஆண்டுவரை நீடித்திருந்தன.