குப்பிழான் ஐ. சண்முகம்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
ஐ. சண்முகலிங்கம் (பிறப்பு ஆகஸ்டு 1, 1946, குப்பிழான், யாழ்ப்பாணம்) குப்பிழான் ஐ. சண்முகம் என்ற பெயரில் எழுதும் ஈழத்து எழுத்தாளர். பேராதனைப் பல்கலைக் கழகத்தில் கலைப்பட்டம் பெற்ற இவர் ஓர் ஆசிரியர். சிறுகதையாசிரியராக கவனம் பெற்ற சண்முகன் இசை, சினிமா, ஓவியம் போன்றவற்றிலும் ஈடுபாடுடையவர். அலையின் ஆரம்ப ஆசிரியர் குழுவில் இடம்பெற்றவர்.
[தொகு] இவரது நூல்கள்
- கோடுகளும் கோலங்களும் (சிறுகதைகள் - 1976)
- சாதாரணங்களும் அசாதாரணங்களும் (சிறுகதைகள் - 1982)
- அறிமுகங்கள் விமர்சனங்கள் குறிப்புக்கள் (2003)