வார்ப்புரு:நுழைவாயில்:இலங்கை/நுழைவாயில்:இலங்கை news
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
- மாவிலாறு அணையை திறக்க படையினர் தீவிர முயற்சி
(29 யூலை 2006) திருகோணமலை மாவட்டம் வெருகல் பகுதியிலுள்ள `மாவில்' ஆற்றை நோக்கி வெலிக்கந்தையிலிருந்து நேற்று வெள்ளிக்கிழமை அதிகாலை படையினர் மேற்கொண்ட இராணுவ நடவடிக்கையை தாங்கள் முறியடித்துள்ளதாக விடுதலைப் புலிகள் தெரிவித்துள்ளனர்.
மகாவலி ஆற்றின் கிளை ஆறான வெருகல் ஆற்று நீர் சிங்களப் பிரதேசத்துக்கு செல்வதை விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியிலுள்ள வெருகல் மக்கள் கடந்த ஒருவாரமாகத் தடை செய்துள்ள நிலையிலேயே இந்த ஆற்று நீரை சிங்களப் பகுதிக்கு திறந்துவிடும் நோக்கில் படையினர் இந்த இராணுவ நடவடிக்கையை நேற்றுக் காலை மேற்கொண்டனர்.