புஞ்சை நற்றுணையப்பர் கோயில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.

புஞ்சை நற்றுணையப்பர் கோயில் (திருநனிபள்ளி) பாடல் பெற்ற தலங்களில் ஒன்றாகும். சம்பந்தர் பாடல் பெற்ற இத்தலம் நாகப்பட்டினம் மாவட்டம் மயிலாடுதுறை நகரின் அண்மையில் அமைந்துள்ளது. இத்தலத்தில் சம்பந்தரின் தாயார் பகவதியம்மையார் பிறந்தார் எனப்படுகிறது.