நியூட்டனின் மூன்றாம் விதி
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.

நியூட்டனின் மூன்றாவது விதிக்கு ஓர் எடுத்துக்காட்டு: இருவர் பனியின் மீது ஸ்கேட் (சறுக்குக் கத்திக் காலணி) அணிந்து ஒருவரை ஒருவர் தள்ளிக் கொண்டு அசையாது நிற்கும் காட்சி. ஒருவர் உந்தித் தள்ளும் விசைக்கு ஏற்ப மற்றவரும் சரிசமமாக எதிர் விசை தருதல்.
நியூட்டனின் மூன்றாவது விதியானது "ஒவ்வொரு வினைக்கும் (action) அதற்கு இணையான எதிர் வினை உண்டு." கூறுகின்றது. ஐசாக் நியூட்டன் தான் 1687ல் இலத்தீன் மொழியில் எழுதிய பிரின்சிப்பியா மாத்தமாட்டிக்கா (Principia Mathematica.)[1]என்னும் நூலில் கீழ்க்காணுமாறு கூறுகிறார் (இலத்தீனில்):
Lex III: Actioni contrariam semper et æqualem esse reactionem: sive corporum duorum actiones in se mutuo semper esse æquales et in partes contrarias dirigi.
ஆங்கிலத்தில்: All forces occur in pairs, and these two forces are equal in magnitude and opposite in direction.
தமிழில்: எல்லா விசைகளும் இரட்டையாக உள்ளன, அவ்விரு விசைகளும் அளவில் இணையாகவும், திசையில் எதிரெதிராகவும் இருக்கும்.
மேற்கண்ட நியூட்டனின் மூன்றாம் விதியானது மொத்த உந்தம் மாறா விதி என்பதில் இருந்து எழுவதாகும்.
[தொகு] இவற்றையும் பார்க்க
[தொகு] குறிப்புகள்
- ↑ நூலின் முழுப்பெயர்: Philosophiae Naturalis Principia Mathematica (ஃவிலாசொஃவி நாட்டுராலிஸ் பிரின்சிப்பியா மாத்தமாட்டிக்கா) 1687