மகாவலி கங்கை
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
மகாவலி கங்கையே இலங்கையின் மிக நீண்ட நதியாகும். இது 335 கி.மி நீளம் கொண்டதாகும். இந்நதி சிவனொளிபாதத்தில் உற்பத்தியாகி திருகோணமலையில் கடலில் சங்கமமாகின்றது. இந்த ஆற்று நீரைப் பயன்படுத்தி விவசாயமும் நீர்மின் உற்பத்தியும் பெருமளவில் நடைபெறுகிறது. சுமார் ஆயிரம் சதுர கிலோ மீற்றர் நிலம் இவ்வாற்று நீரின் மூலம் பயிரிடப்படுகிறது என்று கணக்கிடப்பட்டுள்ளது.