நகுலன் (எழுத்தாளர்)
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
நகுலன் தமிழ் எழுத்தாளர். நகுலன் திருவனந்தபுரத்தில் வாழ்ந்துவருபவர். தமிழ்ச் சிறுகதைகளில் பல புதிய பரிசோதனைகள் செய்தவர். பழந்தமிழ் இலக்கியத்திலும் நவீன ஆங்கில இலக்கியத்திலும் மிகுந்த ஈடுபாடுகொண்டவர். 'எழுத்து' இதழில் எழுதத் துவங்கியவர். இவர் தொகுத்த 'குருஷேத்திரம்' இலக்கியத் தொகுப்பு, தமிழில் மிக முக்கியமானதாகும். விளக்கு விருது, ஆசான் விருது உள்ளிட்ட பல விருதுகளைப் பெற்றவர் நகுலன்.
[தொகு] குறிப்பிடத்தக்க படைப்புகள்
- நகுலன் கவிதைகள்
- நாய்கள்
- ரோகிகள்
- வாக்குமூலம்
- மஞ்சள்நிறப் பூனை.