திருச்செங்காட்டங்குடி உத்தராபதீசுவரர் கோயில்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
திருச்செங்காட்டங்குடி உத்தராபதீசுவரர் கோயில் பாடல் பெற்ற தலங்களில் ஒன்றாகும். சம்பந்தர், அப்பர் பாடல் பெற்ற இத்தலம் தஞ்சை மாவட்டத்தில் அமைந்துள்ளது. இத்தலத்தில் பிள்ளையார் கயமுகாசுரனைக் கொன்ற பழிதீர வழிபட்டார் என்பது தொன்நம்பிக்கை. இறைவன் சிறுத்தொண்டரிடம் பிள்ளைக்கறியமுது கேட்டு அருள்புரிந்த தலமென்பதும் தொன்நம்பிக்கை.