கூவம்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
கூவம் சென்னை நகரில் பாயும் இரண்டு ஆறுகளில் ஒன்று, அடையாறு மற்றொன்று. ஒரு காலகட்டத்தில் தூய நீர் ஓடிய இந்த ஆற்றில் மீன் பிடி தொழிலும் படகுப் போட்டிகளும் நடைபெற்றன. இன்று சென்னை நகரின் மக்கள் தொகைப் பெருக்கத்தின் விளைவாக மாசு நிறைந்த ஆறாக ஓடுகிறது. இந்த ஆறு மொத்தம் 65 கி.மீ ஓடுகிறது. 2004 டிசம்பர் சுனாமியின் போது இந்த ஆறு ஒரு வடிகாலாக செயல் பட்டதால் சென்னை நகரம் அதிக பாதிப்புக்கு உள்ளாகாமல் தப்பித்தது.