உடல்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
"மனிதன்" கண்ணுக்குத் தெரிந்தவற்றாலும், கண்ணுக்குப் புலப்படாதவைகளாலும் உருவாகி உள்ளான்.
இங்கு மனிதன் என்பவனுக்கு உயிர் உண்டு. இந்த உயிர் பல பெயர்களால் அழைக்கப் படுகிறது. உயிர் இல்லாவிடில் "உடல்", பிணம், சடலம் எனத் தமிழிலும், பிரேதம், சவம் என்று சமக்கிருத்திலும் அழைக்கப்படும்.
இவ்வுடல், எலும்பு, நரம்பு, சதை அல்லது நிணம், ஆகியவற்றால் ஆக்கப்பட்டுள்ளது என மருத்துவர்கள் கூறுவார்கள். "மெய்யியல்" அறிந்த சித்தனோ அல்லது ஞானியோ, இவ்வுடல் ஐம்பூதங்கள்லால் ஆக்கப் பட்டது என்பான்.