பேச்சு:தமிழ் பாதுகாப்பு இயக்கம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.


மேலே உள்ள சுட்டி, ஒரு மொழி ஏன் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதற்கு அடிப்படை காரணங்களை எடுத்துரைக்கின்றது. தமிழ் ஏன் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதிலும் பார்க்க, ஒரு மொழி ஏன் பாதுகாக்கப்படவேண்டும் என்று நிறுவுதல் முக்கியம். --Natkeeran 01:38, 16 மார்ச் 2007 (UTC)

உண்மை. ஏற்கனவே அழிந்த மாந்த இனங்களும் மொழிகளும் மிகப் பெரும் கொடுமை கூறும் வரலாறு. ஆஸ்திரேலியாவில் வாழ்ந்த பல பழங்குடிகள் அறவே அற்றுவிட்டனர் (அழிக்கப்பட்டனர்). தென் அமெரிக்காவில் வாழ்ந்த ஓனோ இன மக்கள் வியப்பூட்டும் உடலியல் பண்புகள் கொண்டிருந்தனர். அவர்கள் மிக அண்மையிலேயே அழிந்தனர் (~1800). இன்றும் ஓரிருவரோ 100-200 மக்களோ பேசும் மொழிகள் மிகப்பல. ஒரேயொருவர் பேசும் மொழியும் உண்டு (அவருக்கும் இப்பொழுது வயது மிகவும் முதிர்ந்துவிட்டது). யாழ்ப்பாண பண்பாடு அழிக்கப்பட்டு வருவது இன்றும் நிகழும் மாபெரும் கொடுமை. 5-10 தலைமுறை கழித்து என்னாகும் என்று எண்ணிப்பாருங்கள். --செல்வா 02:08, 16 மார்ச் 2007 (UTC)

எல்லாப் பயனர்களும் படிக்கவேண்டிய கட்டுரை. நற்கீரனுக்கு நன்றிகள். என்று தமிழர்கள் தாங்கள் பணம் கொடுத்துச் செல்லும் இசை, நடன நிகழ்வுகளிலே தமிழ் வேண்டும், தாம் செல்லும் கோயில்களில் தமிழ் வேண்டும், தமிழ் பேசும் தாய்நிலங்களிலாவது கல்வி (10 ஆவது வரையாகிலும்) தமிழில் வேண்டும், அறமன்றங்கள், அலுவலகங்களில், தமிழ் வேண்டும் என்று தங்கள் உரிமைகளை வலுவாக கேட்டு நிலைநாட்டுவார்களோ அன்றுதான் தமிழும் வாழும். இக் கட்டுரையிலே ecology பற்றி கூறியிருப்பது கண்டு நான் மகிழ்ந்தேன். நுண்தொடர்புகளை தமிழர்கள் நன்கு அறிய வேண்டும். --செல்வா 02:33, 16 மார்ச் 2007 (UTC)

நல்ல சுட்டி, நல்ல கருத்துக்கள் செல்வா. தமிழ் நிலங்களில் நிச்சயம் ஒரு சமூக இயக்கத்தின் தேவைப்படுகிறது--Ravidreams 09:01, 16 மார்ச் 2007 (UTC)

நன்று! நன்று!!, நற்கீரனாரே--ஞானவெட்டியான் 15:24, 16 மார்ச் 2007 (UTC)


கருத்துக்களுக்கு நன்றி. உலகமயமாதல் சூழலில் தமிழர்களின் தனித்துவத்தை பேணுவதில் தமிழே அதிமுக்கிய கருவி. தமிழை முன்னிறுத்துவோர் பழமைக்குள் வாழ்வது என்றோ அல்லது மொழித் தீவரவாதிகள் என்றோ சிலர் சொல்வது அவ்வளவு பொருத்தமில்லை. பொதுவாக, தமிழர்கள் இரண்டு அல்லது இரண்டுக்கு மேற்பட்ட மொழிகளை அறிந்துள்ளார்கள் என்பது என் கணிப்பு. சிங்களம் தமிழ், இந்தி தமிழ், மலையாளம் தமிழ், சமஸ்கிரதம் தமிழ் என... எனவே தமிழை முன்னிறுத்துவது தமிழை மட்டும் முன்னிறுத்துவது என்று கருதப்படக்கூடாது. இது பலர் செய்யும் தப்புக் கணக்கு. இந்த தெரிவு எமக்கு முன் இல்லை என்றே சொல்லலாம்.

உலகமயமாதலை கண்டு நாம் பயப்பட தேவையில்லை. அது எமக்கு நல்ல ஆக்க ஊக்கங்கள் தரக்கூடிய ஒரு நிகழ்வு. ஆனால் அதை நாம் பிழையாக அணுகுவோமேயானால் அதன் கொடுரூமான முகம்களை சந்திக்க வேண்டி வரவேண்டு. இந்தியாவில் தமிழர்கள் உலகமயமாதலை அவர்களுக்கு இருக்கும் மொழி ரீதியான வெளித் தொடர்புகளை வைத்து நன்றாக பயன்படுத்தி கொள்ளலாம். பல பிற இந்திய மொழி மக்களுக்கு இந்த வாய்ப்பு இல்லை.

இந்தியத் தமிழர்களுக்கு உலகத் தமிழர்கள் ஒரு பலமே. தமிழர்களுக்கு தமிழ் பலம், ஒரு தொடர்பு பாலம், உலகை உணர ஒரு தனித்துவ வழி.

--Natkeeran 17:28, 16 மார்ச் 2007 (UTC)