ஹம்சான்ந்தி
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
ஹம்சானந்தி 53வது மேளகர்த்தா இராகமாகிய, "பிரம்ம" என்றழைக்கப் படும் 9வது சக்கரத்தின் 5வது மேளமாகிய கமனச்ரமவின் ஜன்ய இராகம் ஆகும். ப என்னும் ஸ்வரம் வர்ஜம் ஆதலால் இது ஒரு வர்ஜ இராகம் ஆகும். இது ஒரு ஷாடவ இராகம். உபாங்க இராகம்.
ஆரோகணம்: | ஸ ரி1 க3 ம2 த2 நி3 ஸ் |
அவரோகணம்: | ஸ் நி3 த2 ம2 க3 ரி1 ஸ |
- இந்த இராகத்தில் ஷட்ஜம், சுத்த ரிஷபம் (ரி1), அந்தர காந்தாரம் (க3), பிரதி மத்திமம் (ம2) , சதுஸ்ருதி தைவதம் (த2), காகலி நிஷாதம் (நி3) ஆகிய சுரங்கள் வருகின்றன.
[தொகு] இதர அம்சங்கள்
- இது ஒரு சர்வ ஸ்வர கமக வரிக ரத்தி இராகம் ஆகும்.
- பிரத்தியாகத கமகம் இவ்விராகத்திற்கு அழகைக் கொடுக்கின்றது.
- கருணைச்சுவையை வெளிப்படுத்தும் இவ்விராகம் மாலை நேரத்தில் பாடுவதற்கு மிகவும் பொருத்தமானதாகும்.
- இந்துஸ்தானி இசையில் இந்த இராகம் பூர்யசோகினி என்று அழைக்கப்படுகின்றது.
[தொகு] உருப்படிகள்
- கிருதி : "நானே உன்னை" - ஆதி - மாயூரம் வேதநாயகம்பிள்ளை.
- கிருதி : "மாதவமாய" - ஆதி - பாபநாசம் சிவன்.
- கிருதி : "சொல்லித்தான் தெரியுமா" - ஆதி - அம்புஜம் கிருஷ்ணா.
- கிருதி : "பன்னிருகை வேலனே" - ரூபகம் - தண்டபாணி தேசிகர்.
- திருப்புகழ் : "நிறைமதி" - ஆதி - அருணகிரிநாதர்.