சூர்யகாந்தம்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
சூர்யகாந்தம் 17 வது மேளகர்த்தா இராகமாகும். அக்னி என்றழைக்கப்படும் 3 வது சக்கரத்தில் 5 வது மேளம்.
1. ஆரோகணம் : ஸ ரி க ம ப த நி ஸ் அவரோகணம் : ஸ் நி த ப ம க ரி ஸ
2. இந்த இராகத்தில் ஷட்ஜம், சுத்த ரிஷபம், அந்தர காந்தாரம், சுத்த மத்திமம், பஞ்சமம், சதுஸ்ருதி தைவதம், காகலி நிஷாதம் ஆகிய சுரங்கள் வருகின்றன.
3. இந்த இராகத்தின் பெயர் அசம்பூர்ண மேள பத்ததியில் சாயாவதி என்றழைக்கப்படுகிறது.
சுப்ரதீபம், சௌராஷ்டிரம், பைரவம், வசந்தா ஆகியவை இந்த மேளத்தின் ஜன்யங்களாகும்.
[தொகு] உருப்படிகள்
- கிருதி : முத்துமோமு : ஆதி : தியாகராஜர்.
- கிருதி : கனவோ நனவோ :மிஸ்ரசாபு : கோபாலகிருஷ்ணபாரதியார்.
- கிருதி : சிறீ சாம்பசிவாய : ரூபகம் : முத்தையா பாகவதர்.
- கிருதி : கஞ்சம் கொஞ்சும் : ரூபகம் : கோடீஸ்வர ஐயர்.
- கிருதி : பேசாதே நெஞ்சமே : மிஸ்ர சாபு : முத்துத் தாண்டவர்.