இணுவில் பரராஜசேகரப் பிள்ளையார் கோயில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.

இணுவில் பரராஜசேகரப் பிள்ளையார் கோயில் யாழ் மாவட்டத்தில் இணுவில் தெற்கிலுள்ள மடத்துவாசலில் அமைந்துள்ளது. இக்கோயிலின் சிற்ப ஓவிய வேலைப்பாடுகள் ஒரு சிறப்பான அம்சமாகும்.

ஆரியச் சக்கரவர்த்தியான பரராஜசேகரனின் சிம்மாசனப் பெயருடன் விளங்கும் இக்கோயிலில் மூல மூர்த்தியான விநாயகருடன் பஞ்சமுக விநாயகர், லட்சுமி, சுப்பிரமணியர், வைரவர், சண்டேசுவரர், நவக்கிரகம் என்போர் பரிவார மூர்த்திகளாக உள்ளனர்.

வைகாசி சதயத்தில் கொடியேறித் திருவாதிரையில் தேரும் அடுத்துத் தீர்த்தோற்சவமும் நடைபெறுகின்றன. இங்கு மூன்று தேர்கள் பவனியில் கலந்து கொள்கின்றன.

அ. க. பொன்னம்பலபிள்ளை இக்கோயிலுக்குத் திருவூஞ்சல் பாடியுள்ளார்.