சடையவர்மன் பராக்கிரம பாண்டியன்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
பாண்டிய மன்னர்களின் பட்டியல் | |
---|---|
முற்காலப் பாண்டியர்கள் | |
வடிம்பலம்ப நின்ற பாண்டியன் | |
குடுமி | |
கடைச்சங்க காலப் பாண்டியர்கள் | |
முடத்திருமாறன் | கி.பி. 50-60 |
மதிவாணன் | கி.பி. 60-85 |
பெரும்பெயர் வழுதி | கி.பி. 90-120 |
பொற்கைப் பாண்டியன் | கி.பி. 100-120 |
இளம் பெருவழுதி | கி.பி. 120-130 |
அறிவுடை நம்பி | கி.பி. 130-145 |
பூதப் பாண்டியன் | கி.பி. 145-160 |
நெடுஞ்செழியன் | கி.பி. 160-200 |
வெற்றிவேற் செழியன் | கி.பி.200-205 |
தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியன் | கி.பி. 205-215 |
உக்கிரப் பெருவழுதி | கி.பி. 216-230 |
மாறன் வழுதி | கி.பி. 120-125 |
நல்வழுதி | கி.பி. 125-130 |
கூட காரத்துத் துஞ்சிய மாறன் வழுதி | கி.பி. 130-140 |
இலவந்திகைப் பள்ளித் துஞ்சிய நன்மாறன் | கி.பி. 140-150 |
குறுவழுதி | கி.பி.150-160 |
வெள்ளியம்பலத்துத் துஞ்சிய பெருவழுதி | கி.பி. 160-170 |
நம்பி நெடுஞ்செழியன் | கி.பி. 170-180 |
இடைக்காலப் பாண்டியர்கள் | |
கடுங்கோன் | கி.பி. 575-600 |
அவனி சூளாமணி | கி.பி. 600-625 |
செழியன் சேந்தன் | கி.பி. 625-640 |
அரிகேசரி | கி.பி. 640-670 |
ரணதீரன் | கி.பி. 670-710 |
பராங்குசன் | கி.பி. 710-765 |
பராந்தகன் | கி.பி. 765-790 |
இரண்டாம் இராசசிம்மன் | கி.பி. 790-792 |
வரகுணன் | கி.பி. 792-835 |
சீவல்லபன் | கி.பி. 835-862 |
வரகுண வர்மன் | கி.பி. 862-880 |
பராந்தகப் பாண்டியன் | கி.பி. 880-900 |
பிற்காலப் பாண்டியர்கள் | |
மூன்றாம் இராசசிம்மன் | கி.பி. 900-945 |
வீரபாண்டியன் | கி.பி. 946-966 |
அமர புயங்கன் | கி.பி. 930-945 |
சீவல்லப பாண்டியன் | கி.பி. 945-955 |
வீரகேசரி | கி.பி. 1065-1070 |
சடையவர்மன் சீவல்லபன் | கி.பி. 1145-1150 |
பராக்கிரம பாண்டியன் | கி.பி.1150-1160 |
சடையவர்மன் பராந்தக பாண்டியன் | கி.பி.1150-1162 |
மாறவர்மன் சீவல்லபன் | கி.பி. 1132-1162 |
சடையவர்மன் குலசேகர பாண்டியன் | கி.பி. 1162-1175 |
சடையவர்மன் வீரபாண்டியன் | கி.பி. 1175-1180 |
விக்கிரம பாண்டியன் | கி.பி. 1180-1190 |
முதலாம் சடையவர்மன் குலசேகரன் | கி.பி. 1190-1218 |
முதலாம் மாறவர்மன் சுந்தரபாண்டியன் | கி.பி. 1216-1238 |
இரண்டாம் சடையவர்மன் குலசேகரன் | கி.பி. 1238-1250 |
இரண்டாம் மாறவர்மன் சுந்தரபாண்டியன் | கி.பி. 1239-1251 |
முதலாம் சடையவர்மன் சுந்தரபாண்டியன் | கி.பி. 1251-1271 |
இரண்டாம் சடையவர்மன் வீரபாண்டியன் | கி.பி. 1251-1281 |
சடையவர்மன் விக்கிரமன் | கி.பி. 1149-1158 |
முதலாம் மாறவர்மன் குலசேகர பாண்டியன் | கி.பி. 1268-1311 |
மாறவர்மன் விக்கிரம பாண்டியன் | கி.பி. 1268-1281 |
சடையவர்மன் சுந்தரபாண்டியன் | கி.பி. 1276-1293 |
சடையவர்மன் பராக்கிரம பாண்டியன் | கி.பி. 1422-1463 |
இரண்டாம் சடையவர்மன் குலசேகர பாண்டியன் | கி.பி. 1429-1473 |
அழகன் பெருமாள் பராக்கிரம பாண்டியன் | கி.பி. 1473-1506 |
குலசேகர தேவன் | கி.பி. 1479-1499 |
சடையவர்மன் சீவல்லப பாண்டியன் | கி.பி. 1534-1543 |
பராக்கிரம குலசேகரன் | கி.பி. 1543-1552 |
நெல்வேலி மாறன் | கி.பி. 1552-1564 |
சடையவர்மன் அதிவீரராம பாண்டியன் | கி.பி. 1564-1604 |
வரதுங்கப் பாண்டியன் | கி.பி. 1588-1612 |
வரகுணராம பாண்டியன் | கி.பி. 1613-1618 |
கொல்லங்கொண்டான் | (தகவல் இல்லை) |
edit |
சடையவர்மன் பராக்கிரம பாண்டியன் கி.பி. 1422 முதல் 1463 வரை பாண்டிய நாட்ட்டில் ஆட்சி செய்த மன்னனாவான். தென்காசிக் கோயிலிலுள்ள இவனது மெய்க்கீர்த்தி." பூமிசைவனிதை,நாவினில் பொலிய" எனத் தொடங்கும். பொன்னி பெருமான், மானகவசன் போன்ற சிறப்புப் பெயர்களினையும் பெற்றிருந்த இம்மன்னன் புலமை மிக்கவனாகவும் வடமொழி அறிந்தவனாகவும் விளங்கினான்.
[தொகு] ஆற்றிய போர்கள்
திருக்குற்றாலத்தில் சேர மன்னனொருவனுடன் போர் புரிந்து வெற்றி பெற்றான் என தளவாய் அக்கிரகாரச் செப்பேட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது. முதலைக்குளம், வீரகேரளம், புதூர் போன்ற ஊர்களில் பலரை வென்றுள்ளான் இம்மன்னன்.
[தொகு] ஆற்றிய அறப்பணிகள்
- விந்தனூர் மற்றும் ஜந்து ஊர்களிற்கு அக்கரகாரம் அமைத்து அந்தணர்களுக்குத் தானம் வழங்கினான் சடையவர்மன் பராக்கிரம பாண்டியன்.
- திருக்குற்றாலம், திருப்புடை மருதூர் ஆகிய ஊர்களில் உள்ள சிவாலயங்களிற்கு மண்டபங்கள் அமைத்தான்.
- நெல்லை சிவன் கோயிலின் நள்ளிரவு வழிபாட்டிற்காக நிவந்தங்கள் அளித்தான் என மெய்க்கீர்த்திகளில் சடையவர்மன் பராக்கிரம பாண்டியனைப் பற்றிக் குறிப்பிடப்பட்டுள்ளன.
- தென்காசி குன்றமன்ன கோயிலைக் கட்டியெழுப்ப உத்தரவிட்ட சடையவர்மன் பராக்கிரம பாண்டியன் அங்கு பல சிற்பங்களினையும் அமைக்க உத்தரவிட்டான். இவ்வாலயத்திற்கு நாள் வழிபாட்டிற்கும், விழா எடுக்கவும் தேவதானம், இறையிலியாக பல ஊர்களை உதவினான் என்பதும் குறிப்பிடத்தக்கது.
- சடையவர்மன் பராக்கிரம பாண்டியனின் கனவில் சிவன் தோன்றி தென்காசி, சித்ரா நதிக்கரையில் ஆலயம் அமைக்குமாறு கேட்டுக்கொண்டதற்கிணைய 17 ஆண்டுகள் இக்கோயில் பணிகள் நடைபெற்று கட்டு முடிக்கப்பட்டதென கற்றூண் கல்வெட்டு குறிப்பிடுகின்றது குறிப்பிடத்தக்கது.
- தென்காசிக் கோயிலில் ஒன்பது நிலைக் கோபுரங்கள் முழுமையானதாகக் கட்டப்படவில்லை ஆனால் இம்மன்னன் தனது பரம்பரையினருக்கு இக்கோபுரங்களை முழுமையானதாகக் கட்டியெழுப்ப ஆணையிட்டான்.
- தென்காசிக் கோயிலில் இவன் சடையவர்மன் பராக்கிரம பாண்டியன் எழுதிய பாடல்கள் வரையப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.இக்கோயிலிலேயே பிற்காலத்தில் வந்த பாண்டிய மன்னர்கள் முடிசூட்டிக்கொண்டனர்.
- செங்கோல் ஆட்சியை நடத்திய சடையவர்மன் பராக்கிரம பாண்டியன் விசுவநாதப் பேரேரி என்ற பெயருடன் ஒரு ஏரியை அமைத்தான் என்பதும் குறிப்பிடத்தக்கது.