சிவயோக சுவாமி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.

சிவயோக சுவாமி (1872 - 1964) ஈழத்தில் ஆன்மிக சாதனைகளில் சிறந்து விளங்கிய ஞானிகளில் ஒருவர்.

பொருளடக்கம்

[தொகு] வாழ்க்கைக் குறிப்பு

அம்பலவாணருக்கும் சின்னாச்சி அம்மாவுக்கும் மே 1872 இல் ஒரு புதன்கிழமை யாழ்ப்பாணம், மாவிட்டபுரத்தில் ஒரு சாதாரண விவசாயக் குடும்பத்தில் பிறந்த யோகசுவாமிகளின் இயற் பெயர் சதாசிவம். இவர் 10 வயதாகும் முன்னரே தாய் இறந்துவிட இவரது மாமனார் இவரை வளர்த்து வந்தார். சிறு வயதிலேயே படிப்பில் கெட்டிக்காராக இருந்ததுடன் உயரமான மாமரக் கொப்புகளில் தனிமையில் இருப்பது இவரது பொழுது போக்கு. பின்னர் இலங்கை நீர்ப்பாசனத் திணைக்களத்தில் களஞ்சியக் காப்பாளராக அரசாங்க உத்தியோகத்தில் சேர்ந்து கிளிநொச்சியில் பணிபுரிந்தார்.

[தொகு] செல்லப்பா சுவாமிகளுடன் ஐக்கியமாதல்

1905 ம் ஆண்டு நல்லூர் கந்தசுவாமி கோயில் தேரடியில் செல்லப்பா சுவாமியைக் கண்டதிலிருந்து இவர் வாழ்க்கை திசைமாறியது. இவரைக் கண்டவுடனேயே செல்லப்பா சுவாமி சிங்கக் கர்ச்சனையாக "டேய்! நீ யார்?" என உலுக்கி "ஒரு பொல்லாப்பும் இல்லை!" என உறுமினார். செல்லப்பாசுவாமியின் குரலிலும் பார்வை கூர்மையிலும் கட்டுப்பட்ட சதாசிவம் அக் கணமே வேலையை உதறிவிட்டு சாமியிடம் சரணடைந்தார். and life for him became one of intense spiritual discipline, severe austerity and stern trials.

[தொகு] கொழும்புத்துறையில் ஆசிரமம்

குரு தீட்சை பெற்று சாமியின் மிதியடிகளை வாங்கி கொண்டு அவரின் ஆசீர்வாதத்துடன் கொழும்புத்துறைக்கு போனார். அங்கு ஒரு இலுப்பை மரத்தடியில் அமர்ந்திருப்பது வழமை. செல்லப்பா சாமி 1911 இல் சமாதி அடைந்த பின்னர் சாமியின் பக்தர்கள் கொழும்புத்துறையில் சிறு குடில் அமைத்துக் கொடுத்தார்கள். அங்கு சுமார் ஐந்து வருடங்கள் கடும் தியானம் புரிந்தார். ஆனால் யோகருக்கும் குருவைப் போன்று ஊர் சுற்றுவது பிடித்த காரியம். யோகர் கால் படாத தெருவே யாழ்ப்பாணத்தில் இல்லை எனலாம். வேட்டி, சண்டிக்கட்டு, தோளில் ஒரு துண்டு இவற்றுடன் எங்கும் நடந்து திரிவார். யாழ்ப்பாணம் தவிர இலங்கையின் மற்றைய பகுதிகளுக்கும் சென்று பக்தர்களுக்கு அருள் பாலித்து வந்தார். வாழ்க்கையின் அனைத்து மட்டங்களிலும் இவருக்கு பக்தர்கள் இருந்தனர். இந்துக்கள் மட்டுமல்லாது பௌத்த, கிறிஸ்தவ, முஸ்லீம் மதங்களிலும் ஏராளமானோர் இவரிடம் சென்று வந்தார்கள். டிசம்பர் 1934 இல் சிவதொண்டன் என்ற பெயரில் ஒரு மாதாந்த சஞ்சிகையை ஆரம்பித்து நடாத்தினார். 1940 ஆம் ஆண்டில் யோகசுவாமி தல யாத்திரைக்காக இந்தியா சென்றார். காசி, சிதம்பரம் என்று பல இடங்களுக்கும் சென்றவர் ரமண மகரிஷியை அவரது அருணாச்சல ஆசிரமத்தில் சந்தித்தார்.

[தொகு] நான்கு மகாவாக்கியங்கள்

யோகசுவாமிகள் தன்னிடம் பிரச்சனைகளுடன் வருபவர்களுக்குத் திரும்பத்திரும்பக் கூறுவது:

  1. எப்பவோ முடிந்த காரியம்
  2. நாம் அறியோம்
  3. ஒரு பொல்லாப்பும் இல்லை
  4. முழுதும் உண்மை

பின்னால் அவரின் பக்தர்கள் இவற்றை மகா வாக்கியம் என்று வகைப் படுத்தினர்[1].


[தொகு] நற்சிந்தனை

யோகசுவாமிகள் தனது போதனைகளை பாடல்களாகவும், கவிதைகளாயும் இயற்றினார். இவை இவை இன்று நற்சிந்தனைத் தொகுப்பாக உலகெங்கிலும் உள்ள சுவாமியின் பக்தர்களால் படிக்கப்பட்டு வருகின்றது.

[தொகு] மறைவு

மார்ச் 1964 ஆம் ஆண்டு மாலை 3:30 மணியளவில் யோகசுவாமிகள் தனது 91வது வயதில் கொழும்புத்துறையில் உள்ள அவரது ஆசிரமத்தில் காலமானார்.


[தொகு] குறிப்பிடத்தக்க சீடர்கள்

  • இலங்கையின் கடைசி ஆங்கிலேய தேசாதிபதி சோல்பரி பிரபுவின் மகன் இவருடைய சீடர். இவரைப் போலவே வேட்டி துண்டுடன் யாழ்ப்பாணக் கோவில்களில் சஞ்சரித்தவர்.
  • ஹவாய் ஆதீனம் சுப்பிரமணியசுவாமி என்ற ஒரு அமெரிக்கரால் ஆரம்பிக்கப்பட்டது. இவரும் தான் யோகசுவாமிகளின் சீடர் என்றே குறிப்பிடுகிறார்.

[தொகு] அடிக்குறிப்புகள்

  1. யோகசுவாமிகளின் மகாவாக்கியப் பொருள், சைவநன்மணி நா. செல்லப்பா

[தொகு] வெளி இணைப்புகள்