கட்டிடச் சூழல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.

மனிதனால் செயற்கையாக அமைக்கப்படுகின்ற சூழல் கட்டிடச் சூழல் என்ற சொற்றொடரால் குறிக்கப்படுகின்றது. இது மிகப் பெரிய நகரங்களையும், நெடுஞ்சாலைகள், பாலங்கள், நீர்ப்பாசனத் திட்டங்கள், பூங்காக்கள், தனிப்பட்டவர்களின் வீடுகள் முதலியவற்றையும், சிறிய நினைவுச் சின்னங்களையும் கூட தன்னுள் உட்படுத்தும்.

இது, கட்டிடக்கலை, நாடு, நகரத் திட்டமிடல், குடிசார் பொறியியல், போக்குவரத்துப் பொறியியல், நிலத்தோற்றக்கலை போன்ற பல கட்டுமானத் தொடர்புடைய துறைகளையும் தழுவியதாக உள்ளது.