தெமொதரை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.

தெமொதறை (தென் மதுரை), பதுளை மாவட்டத்தில் உள்ளவொரு அழகிய நகரமாகும். தமிழ் மக்கள் அதிகமாக வாழும் இவ்வூர் தேயிலைத் தோட்டங்களுக்கு புகழ் பெற்றதாகும். இங்கே இலங்கையில் வேறெங்கும் காணமுடியாத புகையிரதப் பாலமும், மலையை சுற்றும் குகையும் அமைந்துள்ளது. இந்தியாவிலிருந்து தேயிலைத் தோட்டங்களில் தொழில் செய்ய இந்த இடத்தில் குடியேறியவர்களுக்கு இப்பிரதேசம் தென் மதுரையை ஞாபகப்படுத்தியதால், அவர்கள் இவ்விடத்துக்கு தென் மதுரையென பெயரிட்டனர், பின்னர் இது தெமொதறையென மருவிற்று.