பொன். கந்தையா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.

பொன். கந்தையா (பி. கரவெட்டி, யாழ்ப்பாணம்), இலங்கையின் வரலாற்றில் தேர்தல் மூலம் தெரிவு செய்யப்பட்ட முதலாவது பொதுவுடமை கட்சி (இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி) பாராளுமன்ற உறுப்பினர் ஆவார்.

[தொகு] அரசியல் வரலாறு

பொன்.(பொன்னம்பலம்) கந்தையா இங்கிலாந்தில் கல்வி கற்று திரும்பிய பொழுது இடதுசாரி சிந்தனையுடன் வந்தார். இலங்கையில் கொம்யூனிஸ்ட் அமைப்பை உருவாக்குவதில் முதன்மைப் பங்கு வகித்தவர். இலங்கைப் பல்கலைக்கழகத்தின் நூலகராக பணியாற்றியவர். கொழும்பு மாநகர சபையின் வேண்டுகோளின்படி, கொழும்பு பொது நூல்நிலையத்தை சீர்திருத்துவது பற்றி ஆராய்ந்து அறிக்கை வழங்கியவர். பருத்தித்துறைத் தொகுதியில் 1947, 1952தேர்தல்களில் போட்டியிட்டுத் தோற்றாலும் 1956இல் 6317 மேலதிக வாக்குகளினால் அமோக வெற்றியீட்டினார்.

  • பருத்தித்துறைத் தொகுதி - 1956 தேர்தல்

பொன்.கந்தையா (கொம்யூனிஸ்ட் கட்சி) -14,381 வாக்குகள் எம்.சிவசிதம்பரம் (சுயேட்சை) - 8,064 வாக்குகள் கே.துரைரட்னம் ( சமஷ்டி கட்சி) - 5,859 வாக்குகள்

தமிழ் மக்களால் தெரிவு செய்யப்பட்ட ஒரேயொரு இடதுசாரிப் பாராளுமன்ற உறுப்பினர் இவராவார். தமிழ் மக்களின் பிரச்சினைகளைப் புதிய கண்ணோட்டத்தில் பார்த்ததுடன் சிறுபான்மைத் தமிழர்களின் விடிவுக்கும் குரல் கொடுத்தவர். பலராலும் பாராட்டப்பட்டவர். தாழ்த்தப்பட்ட சிறுவர்களின் கல்வி மேம்பாட்டிற்காகப் பாடசாலைகளில் அவர்களையும் அனுமதிக்க வேண்டுமென்று கோரியவேளை 1960களில் கல்வி அமைச்சராக இருந்த டபிள்யூ. தகநாயக்காவின் உதவியினால் தாழ்த்தப்பட்ட பிள்ளைகள் படிப்பதற்கென வசதியற்ற பகுதிகளில் 11 பாடசாலைகளைத் தொடக்கி வைத்தார். தனிச்சிங்களச்சட்டம் கொண்டு வரப்பட்ட போது பொன் கந்தையா நெருக்கடியிலிருந்து நெருக்கடிக்கு என்ற தலைப்பில் பாராளுமன்றத்தில் புகழ் கொண்ட உரையை நிகழ்த்தினார்.

[தொகு] வெளி இணைப்புகள்