மொங்கோலியப் பேரரசு
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
மொங்கோலியப் பேரரசு (1206 - 1368) அதன் உச்சநிலையில் 36 மில்லியன் சதுர கிலோமீட்டர் பரந்து ஏறத்தாழ 100 மில்லியன் மக்களைக் கொண்டிருந்த உலக வரலாற்றின் மிகப்பெரிய பேரரசாகும். இது 1206 இல் செங்கிஸ் கான் என்பவனால் மொங்கோலிய துர்கிக் இனக்குழுக்களை ஒன்றிணைத்து உருவாக்கப்பட்டது. இப்பேரரசு அதன் உச்சநிலையில் தென்கிழக்கு ஆசியாவிலிருந்து மத்திய ஐரோப்பா வரை பரந்து காணப்பட்டது. 1227 இல் செங்கிஸ் கான் மரணித்த பின்னர் Yuan Dynasty, Il-Khanate, Chagatai Khanate, Golden Horde ஆகிய நான்கு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டு செங்கிஸ் கானின் மகன்களான தனித்தனிக் கானினால் ஆட்சி செய்யப்பட்டது. 1350 களில் இப்பிரதேசங்களின் ஒற்றுமை முற்றாகச் சீர்குலைந்த நிலையில் அவை தனித்தனியாயின.