சூறாவளி (இதழ்)
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
சூறாவளி என்பது க. நா. சுப்ரமண்யம் ஏப்ரல் 1939 இல் தொடங்கிய சிற்றிதழ். மணிக்கொடியில் எழுதி வந்த படைப்பாளிகளின் எழுத்துக்களை வெளியிடுவதற்காகத் தொடக்கப்பட்ட இதழ். இவ்விதழில் புதுமைப்பித்தன், கு.ப. ராஜகோபாலன் போன்றோர் எழுதினர். பாரதிதாசனின் கவிதைகள் வெளிவந்தன. வசன கவிதையைப் பற்றிய விவாதங்கள் இவ்விதழிற்தான் முதன்முதல் வெளிவந்தன. வியாபார நோக்கில் இவ்விதழ் வெற்றி பெறவில்லை. கிழமைதோறும் (வாரந்தோறும்) வந்துகொண்டிருந்த இவ்விதழ் 20 இதழ்கள் வந்தபின் செப்டம்பர் 1939 இல் நின்றுவிட்டது.