நாகூர் ரூமி
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
நாகூர் ரூமி, தனித்துவம் மிக்க தமிழ் எழுத்தாளர். ஆம்பூரில் மஸ்ஹரூல் உலும் கல்லூரியின் ஆங்கிலப் பேராசிரியராகப் பணியாற்றும் ரூமி, தமது குட்டியாப்பா நாவல் மூலம் தமிழ் இலக்கிய உலகில் தனிக் கவனம் பெற்றவர்.
இவரது இஸ்லாம் ஓர் எளிய அறிமுகம் என்கிற நூல், இஸ்லாத்தைக் குறித்து எல்லாத் தரப்பினரும் எளிதில் புரிந்துகொள்ளும் விதத்தில் எழுதப்பட்ட ஒரு சிறந்த படைப்பு.
மாணவர்களுக்காக இவர் எழுதிய சுய முன்னேற்ற நூல்களான அடுத்த வினாடி, ஜாலியா ஜெயிக்கலாம் வாங்க ஸ்டூடண்ட்ஸ் ஆகியவை பள்ளி, கல்லூரி மாணவர்களிடையே பெரும் வரவேற்பு பெற்றவை.
சூஃபியிசம் குறித்த ஆய்வைத் தற்சமயம் மேற்கொண்டு வரும் ரூமி, ஹோமரின் புகழ்பெற்ற காவியங்களான இலியத், ஒடிசி ஆகியவற்றைத் தமிழில் மொழிபெயர்க்கும் பணியிலும் ஈடுபட்டுள்ளார்.
நாகூர் ரூமியின் இயற்பெயர் ஏ.எஸ். முகம்மது ரஃபி. இவர் கம்பனையும் மில்டனையும் ஒப்பாய்வு செய்து டாக்டர் பட்டம் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.