என். எஸ். கிருஷ்ணன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.

 கலைவாணர் என்.எஸ். கிருஷ்ணன்
கலைவாணர் என்.எஸ். கிருஷ்ணன்

கலைவாணர் என்.எஸ். கிருஷ்ணன் (நவம்பர் 29, 1908 - ஆகஸ்ட் 30, 1957) தமிழ்த் திரைப்பட நகைச்சுவை நடிகராவார்.

49 ஆண்டுகள் வாழ்ந்து ஆயிரம் ஆண்டு காலச் சாதனையை கலைத்துறை மூலம் செய்து காட்டியவர் கலைவாணர் என்.எஸ். கிருஷ்ணன் அவர்கள். கூத்தாடிகளாக, குறை மனிதர்களாக, அரிதார வேலைக்காரர்களாகக் கருதி ஒதுக்கித் தள்ளப்பட்ட நடிகர் சமுதாயத்தில், அறிவு விளக்கேற்றி வைத்து மக்களுக்குத் தொண்டு செய்யப் பிறந்தவர்கள் என்ற நிலையை உருவாக்கியவர்.

கலைவாணர் சகலகலாவாணர். அவர் பாடுவார், ஆடுவார், நடிப்பார், நடிக்க வைப்பார், எழுதுவார், எழுதவைப்பார், இயக்குவார், மேடையில் உரை ஆற்றுவார். சிரிக்கவைத்து சிந்திக்கச் செய்வதில் வல்லவர். பிறர் மனதைப் புண்படுத்ததாமல் பண்படுத்தும் முறையில் நகைச்சுவையைக் கையாளும் கலை உணர்வு மிக்கவர். பழங்கலைகளின் பண்பு கெடாமல் அவற்றைப் புதுமைப் படுத்தி மக்கள் மன்றத்திற்குத் தந்தவர். அவர் நடத்திய கிந்தனார் கதாகாலட்சேபமும், தெருக்கூத்து, வில்லுப்பாட்டு போன்றவைகளும் இதற்குச் சான்று.

அறிவியல் கருத்துக்கள் நாட்டில் பரவ வேண்டும் என்பதில் அக்கறை, ஆர்வம் கொண்டவர். ஏறத்தாழ 150 படங்களுக்கு மேல் நடித்துள்ள அவர் சீர்திருத்தக் கருத்துக்களை திரைப்படங்களில் துணிவோடு எடுத்துக் கூறியவர். கலையுலகில் கருத்துக்களை வாரி வழங்கியது போல் தமது வாழ்க்கையிலும் ஆயிரக் கணக்கானவர்களுக்கு பணத்தை வாரி வாரி வழங்கியவர்.

அண்ணல் காந்தியடிகளிடமும், காந்திய வழிகளிலும் மிகுந்த பற்று கொண்டவர். காந்தியடிகளின் மறைவுக்குப் பினனர், அவரது நினைவைப் போற்றும் வகையில், ஐம்பதாயிரம் ரூபாய்க்கு மேல் தமது சொந்தப் பணத்தைச் செலவிட்டு தமது ஊரான நாகர்கோவிலில் அண்ணல் காந்தியடிகளுக்கு நினைவுத்தூண் எழுப்பியவர்.

ஏனைய மொழிகள்