தெணியான்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
தெணியான் புனை பெயரால் அறியப்படும் கந்தையா நடேசன் (பி. ஆகஸ்ட் 06, 1942) ஈழத்தின் குறிப்பிடத்தக்க முற்போக்கு எழுத்தாளர்களில் ஒருவர். இலங்கையின் யாழ்ப்பாணத்திலுள்ள பொலிகண்டி வல்வெட்டித்துறையைச் சேர்ந்தவர்.
[தொகு] எழுத்துப்பணி
'விவேகி'யில் 'பிணைப்பு' என்ற சிறுகதையுடன் ஆரம்பித்து ஏறக்குறைய 120கு மேற்பட்ட சிறுகதைகள் எழுதியிருக்கிறார். நாவல், குறுநாவல், கவிதை, வானொலி நாடகங்களும் எழுதியுள்ளார்.
[தொகு] இவரது நூல்கள்
- விடிவை நோக்கி (நாவல், வீரகேசரிப் பிரசுரம்)(1973)
- கழுகுகள் (நாவல்) (1981)
- சொத்து (சிறுகதைத் தொகுப்பு)(1984)
- பொற்சிறையில் வாடும் புனிதர்கள் (நாவல்) (1989)
- மாத்து வேட்டி (சிறுகதைத்தொகுதி) (1990)
- மரக்கொக்கு (நாவல், வெளியீடு: நான்காவது பரிமாணம், கனடா, (1994)
- காத்திருப்பு (நாவல்) (1999)
- கானலில் மான் - (நாவல்) (2002)
- சிதைவுகள் ( குறுநாவல்கள்) (2003) வெளியீடு: மீரா பதிப்பகம் கொழும்பு)