பெண்கள் சந்திப்பு மலர் 2004

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.

39 க்கு மேற்பட்ட பெண் படைப்பாளிகளின் படைப்புக்களுடன், பெண்கள் சந்திப்புக் குழுவினரால் வெளியிட்டு வைக்கப்பட்ட எட்டாவது மலர் இது.

இதன் அட்டைப்படம் அர்த்தமுள்ள அழகிய நவீன ஓவியத்துடன் காணப்படுகின்றது. முன் அட்டைப் படத்தை வாசுகியும் பின் அட்டைப் படத்தை அருந்ததியும் வரைந்துள்ளார்கள். மலரில் இடம் பெற்ற ஆக்கங்களுக்கு வலுவும் அழகும் சேர்ப்பனவையாக மோனிகா, சுகந்தி சுதர்சன், சௌந்தரி, ஆரதி, அருந்ததி, வாசுகி போன்றோரின் ஓவியங்கள் மலரினுள்ளே பொருத்தமாக நிறைந்திருப்பது மலரின் இன்னொரு சிறப்பம்சம்.

[தொகு] உள்ளடக்கம்

குறிப்பிட்டுச் சொல்லும் விதமாக, மலரில் 10 சிறுகதைகள் இடம் பெற்றுள்ளன. பத்தையும் வெவ்வேறு கோணங்களிலிருந்து பத்துப் பெண்கள் எழுதியுள்ளார்கள்.

கட்டுரைகளைப் பார்க்கும் போது ஆறு கட்டுரைகள் இடம் பிடித்துள்ளன.

கவிதைகளைப் பார்க்கும் போது, 23க்கு மேற்பட்ட கவிதைகள் இடம் பெற்றுள்ளன. இவைகள் பெண்களின் விடுதலையை, அடக்கப் படுகிறோம் என்று தெரிந்தும் விட்டு வெளியேற முடியாத இயலாமையை, அடைந்து கிடந்தாலும் மனதால் சுதந்திரமாகப் பறக்கத் துணிந்த பெண்களின் தன்மையை, விட்டு விடுதலையாகி விடுவோம் என்ற நம்பிக்கையை, இருப்பின் அவசியத்தை..., யுத்தத்தின் கோலங்களை, இயற்கையின் சீற்றங்களை... என்று பல விடயங்களை உணர்வுகள் கலந்து சொல்கின்றன.

ஓவியர் வாசுகியுடனான செவ்வியொன்றும் மலரில் இடம் பெற்றுள்ளது.

[தொகு] வெளி இணைப்புகள்