குஜராத் வன்முறை 2002
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
குஜராத் வன்முறை 2002 எனக் குறிப்பிடுவது இந்தியாவின் குஜராத் மாநிலத்தில் 2002 ம் ஆண்டு அம் மாநிலத்தின் சிறுபான்மை சமூகமான முஸ்லிம்களுக்கு எதிராக இந்து மதவெறியர்களால் நிகழ்த்தப்பட்ட வன்கொடுமைகளையாகும். பெப்ரவரி 27,2002 கோத்ரா ரயில்நிலையத்தில் இந்து யாத்திரிகள் பயணம் செய்த ரயில்பெட்டி எரிக்கப்பட்டு 58 பேர் இறந்தசம்பவத்தை அடுத்தே குஜராத்தில் இந்து-முஸ்லிம் களுக்கிடையில் வன்முறை நிகழ்ந்தது.
இந்திய மத்திய அரசின் தகவலின்படி இவ் கொடிய வன்முறையின் நிமித்தம் 790 முஸ்லிம்களும்,254 இந்துக்களும் கொல்லப்பட்டும்,2458 பேர் காயமடைந்தும் 223 பேர் காணாமலும் போயுள்ளதோடுமேலும்,பெண்கள் 919 விதவைகளாகவும் 606 சிறார்கள் அனாதைகளும் ஆக்கப்படுள்ளனர்.சுயாதீன மனித உரிமை கண்காணிப்பாளரகளின தரவுகளின்படி வன்முறையில் இறந்தோரின் எண்ணிக்கை 1000 ற்கு அதிகமென கூறப்பட்டுள்ளது அமெரிக்க காங்கிரஸ் சபையின் Congress Research Service (CRS) தகவலின் படி இவ்வெண்ணிக்கை 2000 குமதிகமெனவும் இவற்றில் அதிகமானோர் முஸ்லிம்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.ஆயினும் இந்திய நடுவன் அரசு இவற்றையெல்லாம் மறுதலித்துள்ளது.
வன்முறையில் வீடுகள்,கட்டிடங்கள் தீவைக்கப்பட்டதுடன்,நபர்கள் உயிருடன் எரித்துக்கொல்லப்பட்டும்,பெண்கள் கூட்டாக வண்புணர்ச்சிக்கும் உள்ளானார்கள்.