குற்றப்பத்திரிகை (திரைப்படம்)
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
குற்றப் பத்திரிகை கன்னடத்தில் சயனைட் என வெளிவந்த திரைப்படத்தைத் தழுவி தமிழில் உருவாக்கப்பட்ட திரைப்படமாகும். [1]. ராஜீவ் காந்தி படுகொலையுடன் தொடர்புடைய ஒற்றைக் கண் சிவராசா, சுபா ஆகிய பாத்திரங்கள் தொடர்பான இந்தத் திரைபடம் பல்வேறு தடைகளுக்குப் [2]பின்னர் வெளிவந்துள்ளது. கர்நாடகத்தில் வெற்றிகண்ட கன்னடத்திரைப்படம் தமிழில் ஆர். கே. செல்வமணியின் இயக்கத்தில் ராம்கி, ரகுமான், ரம்யா கிருஷ்ணன், ரோஜா, விஜயகுமார் மற்றும் பல நடிக/நடிகைகளின் நடிப்பில் வெளிவந்துள்ளது.
[தொகு] உசாத்துணைகள்
- ↑ திரையில் சிவராசன், சுபாவின் இறுதிநாட்கள் பிபிசி அணுகப்பட்டது ஏப்ரல் 14, 2007
- ↑ குற்றப்பத்திரிகை படத்துக்கு தடை நீங்கியது MSN இந்தியா, அணுகப்பட்டது ஏப்ரல் 14, 2007