இளம்பூரணர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.

இன்று கிடைக்கின்ற மிகப் பழைய தமிழ் நூலான தொல்காப்பியத்துக்கு முதன் முதலில் உரை எழுதியவர் இளம்பூரணர் ஆவார். தொல்காப்பியத்தின் எழுத்ததிகாரம், சொல்லதிகாரம், பொருளதிகாரம் ஆகிய மூன்று அதிகாரங்களுக்கும் உரை எழுதினார். இவர் சமண சமயத்தவர் ஆவார்.