விழுப்புரம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.

விழுப்புரம்

விழுப்புரம்
மாநிலம்
 - மாவட்டங்கள்
தமிழ்நாடு
 - விழுப்புரம்
அமைவிடம் 11.38° N 78.15° E
பரப்பளவு   ச.கி.மீ
கால வலயம் IST (ஒ.ச.நே.+5:30)
மக்கள் தொகை (2001)
 - மக்களடர்த்தி
95,439
 - /ச.கி.மீ


விழுப்புரம், தமிழ்நாட்டில் உள்ள ஒரு நகரமாகும். இந்நகரம் விழுப்புரம் மாவட்டத்தின் தலைநகராகவும் விளங்குகிறது. விழுப்புரம் மாவட்டம் தமிழ்நாட்டின் இரண்டாவது பெரிய மாவட்டமாகும். இம்மாவட்டம் திருச்சி - சென்னையை சாலையை இணைக்கும் தேசியநெடுஞ்சாலை எண் 45ன் நடுவே அமைந்துள்ளது. விழுப்புரத்தில் இருந்து பிற மாவட்டங்களை நன்கு இணைக்கும் தொடர்வண்டிச் சந்திப்பு ஒன்று இங்கு உள்ளது. இம்மாவட்டத்தின் முதன்மை வருமானம் ஈட்டும் தொழிலாக வேளாண்மை உள்ளது. 1980களில் இம்மாவட்டதின் கல்வி அறிவு மிகக் குறைவாக இருந்தாலும் தற்போது சற்று மேம்பட்டு 75 விழுக்காடாக உள்ளது.

[தொகு] புவியியல்

11 38' 25" வடக்குக்கும் 12 20' 44" தெற்குக்கும்: 78 15' 00" மேற்குக்கும் 79 42' 55" கிழக்குக்கும் இடையில் 722203 ஹெக்டர் பரப்பில் விழுப்புரம் மாவட்டம் அமைந்துள்ளது. இம்மாவட்டம், தென்னாற்காடு மாவட்டத்தில் இருந்து 30.09.1993 அன்று பிரித்தெடுக்கப்பட்டு விழுப்புரம் மாவட்டம் என்று பெயர் சூட்டப்பட்டது. தென்னாற்காடு மாவட்டத்தின் எஞ்சிய பகுதி கடலூர் மாவட்டமாக அறிவிக்கப்பட்டது.

விழுப்புரம் மாவட்டத்தின் கிழக்கிலும் மேற்கிலும் கடலூர் மாவட்டம் அமைந்துள்ளது; மேற்கில் சேலம் மற்றும் தர்மபுரி மாவட்டங்களும் வடக்கில் திருவண்ணாமலை மற்றும் காஞ்சிபுரம் மாவடங்களும் அமைந்துள்ளன.

[தொகு] சுற்றுலா

  • செஞ்சிக் கோட்டை, கல்வராயன் மலை ஆகியவை விழுப்புரத்துக்கு அருகில் உள்ள சுற்றுலா தளங்களாகும். திருக்கோயிலூர், திருவக்கரை முதலியவை அருகில் உள்ள புகழ்பெற்ற வணக்கத் தளங்கள் ஆகும்.

[தொகு] வெளியிணைப்புகள்

ஏனைய மொழிகள்