சதுரங்கபட்டினம்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
சதுரங்கபட்டினம் தமிழ் நாட்டின் தலைநகர் சென்னையின் தெற்கே 70கிமி தொலைவில் அமைந்துள்ளது.
தற்போதுள்ள இந்த கடலோர நகரத்தை, 17ஆம் நூற்றாண்டில் நெதர்லாந்து நாட்டினர் நிறுவினர். அவர்களால் வாணிபத்திற்காக அமைக்கப்பட்ட பெரிய கோட்டை ஒன்று மிக பெரிய தானிய கிடங்குகள், பாசறைகள் மற்றும் பல அறகல் இன்னும் காணப்படுகிறது. பெரிய மதில்களைக் கொண்டிருந்த இந்தக் கோட்டையை ஆங்கிலேயர்கள் 1818 ஆம் ஆண்டு கைப்பற்றினர். தற்போது, இந்த கோட்டை இந்திய தொல்லியல் துறையினரால் பராமரிக்கப்பட்டு வருகிறது.
அண்மையில், இதன் அண்டை ஊரான கல்பாக்கத்தின் சென்னை அணுமின் நிலையம், மற்றும் இந்திரா காந்தி அணுவாராய்ச்சி மையம் ஆகியவற்றால், இந்த ஊர் பெயர் பெற்றுள்ளது.
சதுரங்க பட்டினக் கோட்டையில், பல ஓவியங்களும், அழகிய வேலைப்பாடுகளுடைய சமாதிகளும், ஸ்தூபங்களும் உள்ளன.