வடமராச்சி ஒப்பரேசன் லிபரேசன்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
1986 இல் விடுதலைப் புலிகளிடம் இருந்து விடுவிக்கும் இராணுவநடவடிக்கை எனப்பொருள்படும் ஆப்பரேஷன் லிபரேஷன் நடவடிக்கை இலங்கை இராணுவத்தால் நடத்தப்பட்டது. இந்த இராணுவ நடவடிக்கை மூலம் பலாலியில் இருந்து வெளிவந்த இராணுவத்தினர் வசாவிளான், குரும்பசிட்டி போன்ற பகுதிகளில் முன்னேறினர். இந்த இராணுவ நடவடிக்கை மூலம் பெருந்தொகை மக்கள் இடம்பெயர்ந்தனர். இதில் பெரும்பாலன தமிழர்களின் வீடுகள் எதுவித காரணமும் இன்றி புல்டோசர்கள் மூலம் இடிக்கத்தழிக்கப்பட்டது. மேலும் பலாலி விமான நிலையம் இருந்து திருச்சிக்கான சர்வதேச விமானப் போக்குவரத்து இடைநிறுத்தப்பட்டு முழுமையான இராணுவ விமான தளமாக்கப்பட்டது. மேலும் பல அப்பாவித்தமிழர்களில் பூர்விகப் பிரதேசங்களைப் பலாத்காரமாகப் பறிமுதல் செய்து பலாலி விமானநிலையமும் விஸ்தரிக்கப்பட்டது. இன்றும் இப்பிரதேசத்தில் இருந்து இடம்பெயர்ந்தவர்கள் மீளத்திரும்புவதற்கான உரிமைகள் மறுக்கப்படுகின்றது. இந்த இராணுவ நடவடிக்கை மூலம் அப்பாவி இலங்கைத் தமிழர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளே இலங்கைத் தமிழர்கள் இந்தியாவின் தலையீடு வேண்டும் எனக் கோரக் காரணம் ஆயிற்று. இந்த இராணுவ நடவடிக்கை அடுத்தே 1987 இல் இந்திய அமைதி காக்கும் படை இலங்கை வந்தது.