கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
[தொகு] தன்யாசி
- இது 8வது மேளகர்த்தா இராகமாகிய, "நேத்ர" என்றழைக்கப் படும் 2வது சக்கரத்தின் 2வது மேளமாகிய தோடியின் ஜன்ய இராகம் ஆகும். காலையில் பாடக் கூடிய இவ்விராகம் ஔடவ- சம்பூர்ண இராகம் ஆகும்.
- இந்த இராகத்தில் ஷட்ஜம், சுத்த ரிஷபம் (ரி1), சாதாரண காந்தாரம் (க2), சுத்த மத்திமம் (ம1), பஞ்சமம், சுத்த தைவதம் (த1), கைசிகி நிஷாதம் (நி2), ஆகிய சுரங்கள் வருகின்றன.
[தொகு] இதர அம்சங்கள்
- ஆரோகணத்தில் ரி , த வர்ஜம். இது உபாங்க இராகம் ஆகும்.
- இந் த இராகத்தின் நிஷாத மூர்ச்சனையே சாலகபைரவி (22) இராகம் ஆகும்.
- பக்திச் சுவை நிரம்பிய இராகம்.
- மங்களங்கள் பாடுவதற்கும் வர்ணனைகளுக்கும் ஏற்ற இராகம்.
[தொகு] உருப்படிகள்
- தானவர்ணம்: "நெனருஞ்சி" - அட - வீணை குப்பையர்.
- கிருதி : "ஏமகுவபோதிஞ்சரா" - ஆதி - மைசூர் சதாசிவராயர்.
- கிருதி : "சங்கீத ஞானமு" - ஆதி - தியாகராஜர்.
- கிருதி : "கனக சபாபதி" - ஆதி - கோபாலகிருஷ்ணபாரதியார்.
- கிருதி : "காணாமல் வீணிலே" - மிஸ்ரசாபு - முத்துத்தாண்டவர்.