பேச்சு:சங்க இலக்கியம்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
[தொகு] சங்க இலக்கியம் எடுத்துக்காட்டுக்கள்
[தொகு] கணியன் பூங்குன்றனாரின் 192- ஆம் புறநானூற்றுப் பாடல்
பாட்டும் இராம.கி இங்கு குறிப்பிட்ட விளக்கமும்.
- யாதும் ஊரே, யாவரும் கேளிர்;
- தீதும், நன்றும், பிறர் தர வாரா;
- நோதலும், தணிதலும், அவற்றோர் அன்ன;
- சாதலும் புதுவது அன்றே! வாழ்தல்
- இனிது என மகிழ்ந்தன்றும் இலமே! முனிவின்
- இன்னாது என்றலும் இலமே! மின்னொடு
- வானம் தண் துளி தலைஇ ஆனாது,
- கல்பொருது இரங்கும், மல்லல் பேர்யாற்று
- நீர்வழிப் படூஉம் புனை போல், ஆருயிர்
- முறைவழிப் படூஉம் என்பது திறவோர்
- காட்சியில் தெளிந்தனம் ஆகலின், மாட்சியில்
- பெரியோரை வியத்தலும் இலமே!
- சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே!
- யாதும் ஊரே,யாவரும் கேளிர்;
- எல்லா ஊரும் எங்கள் ஊர்தான், எல்லோரும் எங்கள் உறவுகள் தான்;
- தீதும், நன்றும், பிறர் தர வாரா;
- தீயது, நல்லது என்பவை பிறர் தந்து வருபவை இல்லை;
- நோதலும், தணிதலும், அவற்றோர் அன்ன;
- துன்பமும், அதன் தீர்வும் கூட அதுபோல் தான்.
- சாதலும் புதுவது அன்றே! வாழ்தல்
- செத்துப் போவது ஒன்றும் புதியது இல்லை.
- இனிது என மகிழ்ந்தன்றும் இலமே! முனிவின்
- வாழ்க்கை இனியது என்று சொல்லி மகிழ்ச்சிப் படுவதும் இல்லை.
- இன்னாது என்றலும் இலமே! மின்னொடு
- மாறி, வாழ்க்கையில் இருந்து விலகி ஏற்கும் துறவு கொடியது என்று சொல்லுவதும் இல்லை;
- வானம் தண் துளி தலைஇ ஆனாது,
- வானம், மின்னல் வெட்டும் மழையாய் குளிர்ந்த துளிகளைப் பெய்ய,
- கல்பொருது இரங்கும், மல்லல் பேர்யாற்று
- கல், மண் ஆகியவற்றைப் புரட்டிக் கொண்டு இறங்கி, பெருகி வரும் யாற்று நீரில் சிக்கி,
- நீர்வழிப் படூஉம் புனை போல், ஆருயிர்
- அதன் தடத்திலே போகும் புனையைப் போல, அரிய உயிரியக்கம் ஆனது முன்னால்
- முறைவழிப் படூஉம் என்பது திறவோர்
- இட்ட முறைவழியே போகத் தான் செய்யும் (நியதி வழிப் படும்) என்று வாழ்க்கையின் திறம் அறிந்தவர்கள் சொல்லுவார்கள்.
- காட்சியில் தெளிந்தனம் ஆகலின், மாட்சியில்
- அந்த காட்சியில் நாங்கள் தெளிந்தோம் ஆகையால்,
- பெரியோரை வியத்தலும் இலமே!
- பெரியவர்களைக் கண்டு வியத்தலும் இல்லை;
- சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே!
- சிறியவர்களை இகழ்தல் அதனிலும் இல்லை.