மதுரா
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
மதுரா (தமிழிலக்கிய பெயர்: வடமதுரை), இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலத்தில் அமைந்துள்ள ஒரு நகரம்.
தசாவதாரங்களில் ஒன்றான கிருஷ்ணாவதாரத்தில், விஷ்ணு இப்பூவுலகில் கிருஷ்ணனாக அவதரித்த இடம் யமுனை நதிக்கரையிலுள்ள இந்த மதுரா நகரமாகும். ஆகையால் இந்நகரம் இந்துக்களின் புனித நகரமாகக் கருதப்படுகிறது.