சு. ஸ்ரீகந்தராசா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.

சு. ஸ்ரீகந்தராசா மேடை நாடகம், கவிதை, கட்டுரை, விமரிசனம், பத்தி எழுத்துக்கள் முதலான துறைகளில் ஈடுபாடுள்ள ஒரு சட்டத்தரணி ஆவார். ஒரு வில்லிசைக் கலைஞரும் ஆவார். ஈழத்தில் இருந்து புலம்பெயர்ந்து தற்போது அவுஸ்திரேலியாவில் மெல்பேர்ணில் வசித்து வருகிறார். பாடும் மீன், செந்தமிழ்ச் செல்வர் போன்ற பட்டங்களை பெற்றவர்.

பொருளடக்கம்

[தொகு] வாழ்க்கைச் சுருக்கம்

இலங்கையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் களுவாஞ்சிக்குடியைப் பிறப்பிடமாகக் கொண்டவர் சுப்பையா ஸ்ரீகந்தராசா. இளமையிலிருந்தே தமிழ்ப் பணியிலும் சமூகப் பணியிலும் பிரபல்யமானவர்.

[தொகு] இலக்கியப் பணி

சுதந்திரன் இதழ் நடத்திய கவிஞர் நீலாவணன் நினைவு வெண்பாப் போட்டியில் (1975) முதல் பரிசு பெற்றார். தமது 24 வயதிலேயே மட்டக்களப்பில் சிறந்த பேச்சாளருக்கான சொல்லின் செல்வர்' என்ற பட்டமும் பெற்றார். அவுஸ்திரேலியாவில் எல்லாளன் நாடகத்தை எழுதி இயக்கி மேடையேற்றினார். எஸ்.பொ.வின் வலை நாடகத்தையும் இயக்கியிருக்கிறார்.

[தொகு] சமூக சேவை

அவுஸ்திரேலியத் தமிழ் அகதிகள் கழகத்தின் தலைவராகவும், விக்ரோரிய ஈழத்தமிழ்ச் சங்கத்தின் தலைவராகவும் இருந்திருக்கிறார். தமிழ்ச்சங்கம் சார்பில் முத்தமிழ் விழா, போட்டிகள், அனைத்துலக இலக்கியப் போட்டிகள் பலவற்றை நடத்தியிருக்கிறார்.

[தொகு] எழுதிய நூல்கள்

  • சந்ததிச் சுவடுகள் (மேடை நாடகங்கள், 1988)
  • மனதைக் கவரும் மட்டக்களப்பு நாட்டுப்பாடல்கள்
  • தமிழே தமிழினமே தாயகமே
  • தமிழின் பெருமையும் தமிழரின் உரிமையும் (ஆய்வுக்கட்டுரைகள், 2006)
  • ஓர் ஆஸ்திரேலிய ஈழத்தமிழரின் இந்தியப் பயணம் (2006)