இடைக்காடனார்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
இடைக்காடனார் அல்லது இடைக்காடர் என அழைக்கப்படும் இவர் சங்கத் தமிழ்ப் புலவர்களுள் ஒருவர். இடைக்காடு என்னுமிடத்தைச் சேர்ந்தவர் என்பர் இதனாலேயே இவரது பெயர் இடைக்காடனார் ஆகியது. இவர் முல்லைத் திணைச் செய்யுள்களை அதிகமாகப் பாடியிருப்பதனால் இவர் ஆயர் குலத்தைச் சேர்ந்தவராக இருக்கலாம் எனச் சிலர் கருதுகின்றனர்.
சங்கத் தொகை நூல்களிலே இவர் பாடிய பாடல்கள் காணப்படுகின்றன. புறநானூறு, குறுந்தொகை ஆகிய நூல்களில் தலா ஒவ்வொரு பாடலும், நற்றிணையில் மூன்றும், அகநானூற்றில் ஆறுமாக மொத்தம் 11 பாடல்கள் இவர் பெயரில் உள்ளன.