பலாலி
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
பலாலி யாழ்ப்பணத்தில் உள்ள ஒரு பாழடைந்த நகரமாகும். இலங்கை விடுதலை அடைந்த போது, இங்குள்ள விமான நிலையம் மூலம் திருச்சிக்கு விமான சேவைகள் இருந்த போதும் பாதுகாப்பு காரணங்களை முன்னிட்டுப் பின்னர் கைவிடப்பட்டது. இங்கு 1986 இல் மேற்கொள்ளப்பட்ட ஒப்ரேசன் லிபரேசன் (Operation Liberation) என்னும் இராணுவ நடவடிக்கை மூலம் பலாலி, குரும்பசிட்டி தமிழர்களின் வீடுகள் தரைமட்டமாக்கப்பட்டு பலாலி விமானத்தளம் விரிவாக்கப்பட்டது. மிகைப் பாதுகாப்பு வலயமாக இலங்கை அரசினால் அறிவிக்கப் பட்டுள்ள இப்பகுதியில், இன்றுவரை இடம்பெயர்ந்த அப்பாவிப் பொதுமக்களினால் மீளக் குடியேற இயலாமல் உள்ளது.