பேச்சு:தொல்காப்பியம்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
தொல்காப்பியம் தலைசங்க காலத்தில் பாண்டிய மன்னர்களால் அரங்கேற்றப்பட்டது.ஆனால் இக்கட்டுரையில் கடைச்சங்க காலம் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.--நிரோஜன் சக்திவேல் 01:42, 17 பெப்ரவரி 2007 (UTC) மேலும் இத்தகவலைப் பெற்றவர் எங்கிருந்து பெற்றவர் எனக் குறிக்கவும்.அது எந்த காலத்தகவல் எனவும் தெரிவிக்கவும்.--நிரோஜன் சக்திவேல் 01:53, 17 பெப்ரவரி 2007 (UTC)
-
- தொல்காப்பியத்தைப் பொதுவாக இடைச் சங்ககாலத்து நூல் என்பர். தலைச் சங்க காலத்து இலக்கண நூல் அகத்தியம் என்பர். இதெல்லாம் உறுதியுடன் நிறுவப்பட்ட முடிவுகள் அல்ல. தொல்காப்பியத்தின் பெரும்பகுதி (இடைச் செருகல்கள் நீங்கலாக) கி.மு 200-300க்கு முற்பட்டது என்பதில் ஐயம் இல்லை.இடைச் செருகல்கள் கி.பி. 5-10 ஆவது நூற்றாண்டுகளாகவும் இருக்ககூடும். கி.மு 500, 700, 1000 என்று சொல்வதெல்லாம் ஏற்கவும் முடியாது மறுக்கவும் முடியாது. காலம் கணித்தவர்களின் பெயர்கள் கட்டுரையில் உள்ளது. அவர்கள் எல்லோரும் புகழ் பெற்ற அறிஞர்கள்.--செல்வா 02:04, 17 பெப்ரவரி 2007 (UTC)
தொல்காப்பியம் கடைச்சங்கத்தில் அரங்கேற்றப்பட்டிருக்கலாம் ஆனால் 7000 கி.மு என இப்புத்தகத்தில் 2001 இல் வந்ததில் குறிப்பிடப்பட்டுள்ளது அதுதான் கேட்டேன்.சில வேளை அவ்வறிஞர்கள் எந்த ஆண்டுக் காலத்தவர் என்று ஏனெனில் எனக்குத் தெரியாது.--நிரோஜன் சக்திவேல் 02:16, 17 பெப்ரவரி 2007 (UTC)
மேலும் இது மிக்கவும் சிக்கலானது காரணம் இப்புதகத்தில் தலைச்சங்க காலம் என்க் குறிப்பிடப்பட்டுள்ளது ஆனாலும் நீங்கள் கூறுவதற்கிணைய இருந்தாலும் சரி சரியானதகா இருந்தால் சரி.எதற்கும் இவ்வாறான தகவல் சிக்கல்கள் உள்ள இக்கட்டுரைகளினை என்னுடைய பாண்டியர் கட்டுரையினையும் சேர்த்து தனியே ஒரு பட்டியலில் இட வேண்டும்.--நிரோஜன் சக்திவேல் 02:20, 17 பெப்ரவரி 2007 (UTC)
- தெ.பொ.மீ, வையாபுரிப் பிள்ளை, இலக்குவனார் ஆகியோர் உலகப் புகழ் பெற்ற ஆய்வாளர்கள். தமிழில் கி.மு 300க்கு முன் உள்ள உறுதியான வரலாற்று சான்றுகள் இல்லை. அண்மையில் கி.மு 1000 ஆண்டளவில் உள்ள சில அகழ்வாராய்ச்சிக் குறிப்புகள் தமிழ்நாட்டிலேயே கிடைத்துள்ளது (சிந்து வெளி எழுத்துக்களுடன்). அறிவியல் முறைப்படி நிறுவப்படும் உறுதி பயக்கும் சான்றுகளின் அடிப்படையில் சற்று குறைத்தே மதிப்பிடுவது நல்லது. தமிழ்ப் பண்பாடு கி.மு 10,000 ஆகக் கூட இருக்கலாம், ஆனால் உறுதி பயக்கும் சான்றுகளின் அடிப்படையிலேதான் நாம் கட்டுற்று நிற்க வேண்டும். கி.மு 300க்கு முன்னர் உள்ள அரசர்கள் பற்றிய செய்திகள் உண்மையாக இருக்கும் என்றே நானும் நம்புகிறேன், ஆனால் அவர்கள் கால கி.மு 500, 700 என்பதெல்லாம் போதிய சான்றுகள் இல்லாமல் உறுதி செய்யமுடியாது. தோராயமாக எடுத்துரைக்கலாம்.--செல்வா 03:03, 17 பெப்ரவரி 2007 (UTC)