மச்ச அவதாரம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.

திருமாலின் மச்ச அவதாரம்
திருமாலின் மச்ச அவதாரம்

மச்ச அவதாரம் வைணவ சமயக் கடவுள் திருமாலின் முதல் அவதாரம். மச்சம் என்பது சமசுகிருத மொழியில் மீன் எனப்பொருள் தரும். இந்த அவதாரத்தில் திருமால் நான்கு கைகளுடன் மேற்பாகம் மனித உருவாகவும் கீழ்ப்பாகம் மீனின் உருவாகவும் கொண்டவராகத் தோன்றினார் என்று மச்ச புராணம் கூறுகிறது.

இதில் மச்சாவதாரத் தோற்றம், திருமால் நீர்ப்பிரளயத்திலிருந்து உலகைக் காத்தமை, பிரம சிருட்டி, திரிபுர வதம், தாரகாசுரனுடன் போர், பார்வதி சிவபெருமானை மணத்தல், கந்தனாகிய முருகனின் தோற்றம் ஆகியவற்றை உணர்த்துகிறது. (அபிதான சிந்தாமணி - பக் 1236)


இந்து மதம் | திருமாலின் பத்து அவதாரங்கள்
மச்சம் | கூர்மம் | வராகம் | நரசிம்மர் | வாமனர் | பரசுராமர் | இராமர் | கிருஷ்ணர் | பலராமர் | கல்கி