வி. திவ்வியராஜன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.

வி. திவ்வியராஜன் (பி: வரணி, யாழ்ப்பாணம்) பாடகர், பாடலாசிரியர், நடிகர், கதாசிரியர், இசை அமைப்பாளர், திரைப்பட இயக்குனர் என்ற பல அடை மொழிகளுக்கு உரித்தானவர். இலங்கையில் ரூபவாகினி நடத்திய "உதயகீதம்" மெல்லிசைப்போட்டியில் கலந்து முதலிடம் பெற்றவர். அங்கே "கிராமத்துக் கனவுகள்" முதலான வானொலி நாடகங்களிலும் நடித்தவர். இவர் பாடிய, மெட்டமைத்த பல பாடல்கள் கனடாவில் இறுவட்டுக்களாக வந்திருக்கின்றன.


[தொகு] திரைப்படம்

  • சகா - இவரே திரைக்கதை எழுதி, இயக்கி, தயாரித்த திரைப்படம்

[தொகு] இறுவட்டுக்கள்

  • புலரும் வேளையில் - அருவி வெளியீடு
  1. புலரும் வேளையில் - சாந்தினி வர்மனுடன்
  2. சிறுநண்டு மணல் மீது - சங்கீதா திவ்யராஜனுடன்
  3. வெள்ளி சிணுங்கி - தனிப் பாடல்
  4. பாட்டனார் பண்படுத்தி - சாந்தினி வர்மனுடன்
  • காற்றோடு பேசு - அருவி வெளியீடு
  1. ஊரான ஊரிழந்தோம் - தனிப் பாடல்
  2. அக்கரையில் நீயிருக்க - சாந்தினி வர்மனுடன்


[தொகு] வெளி இணைப்புக்கள்

ஊரான ஊரிழந்தோம் - பாட்ல் கேட்க