வடை
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
வடை பலகார வகைகளில் ஒன்றாகும். உணவுடனும் சிற்றுண்டியாகவும் பரிமாறப்படுவதாகும். தமிழர்களில் எல்லா விழாக்கள், சடங்குகளில் பொதுவாகப் பரிமாறப்படுவதாகும். உளுந்து வடை, பருப்பு வடை என்பன பரவலான வடை வகைகள்.
உளுத்தம் பருப்பு அல்லது கடலைப் பருப்பை ஊற வைத்து கெட்டியாக அரைத்து நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய் போன்றன சேர்த்து அளவாக உப்புச் சேர்த்துப் பிசைந்தெடுத்துச் சிறு சிறு உருண்டைகளாக்கித் தட்டிக் கொதித்த எண்ணெயில் போட்டு வடை சுடப்படுகிறது. உளுந்து வடையில் நடுவில் சிறு துளை இடப்படும்.