கொடுமுடி மகுடேசுவரர் கோயில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.

கொடுமுடி மகுடேசுவரர் கோயில் (திருப்பாண்டிக் கொடுமுடி) பாடல் பெற்ற தலங்களில் ஒன்றாகும். சம்பந்தர், அப்பர், சுந்தரர் மூவரதும் பாடல் பெற்ற இத்தலம் பெரியார் மாவட்டத்தில் அமைந்துள்ளது. ஆதிசேடனுக்கும் வாயுவுக்கும் இடையில் ஏற்பட்ட போட்டியில் ஆயிரம் சிகரங்களுள் ஒன்று ஐந்து மணிகளாகச் சிதறியபோது அவற்றில் ஒன்று கொடுமுடியாகவும் ஆகிற்று என்பது தொன்நம்பிக்கை. சுந்தரர் நமச்சிவாகப் பதிகம் பாடிய தலமாகும்.