ஆவணி அவிட்டம்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
ஆவணி அவிட்டம் என்னும் ஆண்டுச் சடங்கு உபநயனம் செய்து கொண்ட பிராமணர் பொதுவாக ஆவணிப் பௌர்ணமியில் கொண்டாடும் உபாகர்மம் ஆகும். இது யசுர்வேதிகள் கொண்டாடும் தினமாகும். இத்தினத்தில் கொண்டாட முடியாதிருந்தால் ஆடிப் பௌர்ணமியிலோ அல்லது புரட்டாதிப் பௌர்ணமியிலோ யசுர் வேதிகள் கொண்டாடுவர்.
ஆவணி அவிட்டத்தில் உபநயனம் செய்தோர் தங்கள் பூணூலைப் புதுப்பிப்பதோடு வேதங்களைப் படிக்கவும் தொடங்குவர். மேலும் பிதுர்களையும் இருடிகளையும் குறித்துத் தர்ப்பணமும் செய்வர்.