ஷாமினி ஸ்ரோரர்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
ஷாமினி ஸ்ரோரர் (இயற்பெயர்: ஷாமினி ஜெயசிங்கம்) இலங்கை வானொலி நாடகங்களில் நடித்தவர். தற்போது அவுஸ்திரேலியாவில் சிட்னியில் வசிக்கிறார். அங்கும் மேடை நாடகங்களில் நடித்து வருகிறார். தணியாத தாகம் வானொலி தொடர் நாடகத்தில், முக்கிய பாத்திரம் ஒன்றில் நடித்தவர். இலங்கை ரூபவாகினியில் ஒளிபரப்பான முதலாவது தொலைக்காட்சி நாடகமான ' கற்பனைகள் கலைவதில்லை' என்ற நாடகத்தை எழுதிய மருத்துவ கலாநிதி ஜே. ஜெயமோகன் இவரது உடன்பிறந்தவர் ஆவார்.