பேச்சு:பாண்டியர்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
இக்கட்டுரையில் இரண்டு பட்டியல்கள் உள்ளன இருப்பது நல்லதா அல்லது தனித்து ஒரு பட்டியல் இருப்பது நல்லதா?--நிரோஜன் சக்திவேல் 14:16, 8 பெப்ரவரி 2007 (UTC)
- நிரோஜன், ஒரு பட்டியலை நீக்குவதுதான் சரி. வார்ப்புருவில் இருக்கும் பொழுது, கட்டுரையில் இருக்கத்தேவை இல்லை. நீக்கிவிடுங்கள்.--செல்வா 15:22, 8 பெப்ரவரி 2007 (UTC)
- நிரோ, நீங்கள் வார்ப்புருவில் தந்துள்ள ஆட்சிக் காலங்களை எந்த நூலில் இருந்து பெற்றீர்கள் அல்லது எந்த ஆய்வுக் கட்டுரையில் இருந்து பெற்றீர்கள் என குறிப்பது மிகத்தேவையானது. --செல்வா 15:28, 8 பெப்ரவரி 2007 (UTC)
விரைவில் குறிக்கின்றேன் மேலும் நீங்கள் உசாத்துணையாகத் தந்த நூல் மிகவும் பழைமையானதாகவுள்ளது நான் வைத்துள்ள நூல் புதிது.இங்கு அனைத்துப் பாண்டியர் தகவல்களும் உண்டு வெகு விரைவில் அனைத்தும் விக்கியில் சேர்க்கப்படும்.--நிரோஜன் சக்திவேல் 15:58, 8 பெப்ரவரி 2007 (UTC)
- மிக்க நன்றி. ப.சின்னசாமியின் நூல் அண்மையில் வெளிவந்த நூல், எனவே அதில் கூடிய தெளிவு இருக்கும். கட்டாயம், இங்கே த.வியில் இருந்த பழைய குறிப்புகளைத் திருத்தியும் விரித்தும் எழுதுங்கள். நல்ல பணி. மூவேந்தர்களைப் பற்றி விரிவாக த.வி.யில் இருக்க வேண்டியது மிகவும் தேவையானது. --செல்வா 20:59, 8 பெப்ரவரி 2007 (UTC)
நிரோ, மிகுந்த பாராட்டுகள்! அருமையாக வளர்ந்து வருகின்றது இக்கட்டுரை! வாழ்த்துக்கள்!--செல்வா 16:28, 10 பெப்ரவரி 2007 (UTC)
நன்றி திரு செல்வா அவர்களே--நிரோஜன் சக்திவேல் 16:34, 10 பெப்ரவரி 2007 (UTC)
[தொகு] விமர்சனப் பார்வை தேவை
பாண்டியர் ஆட்சி ஒரு கதையில் வருவது போல, nostalgia தன்மையோடு தரப்படுகின்றது. செங்கோல் ஆட்சி சிலரால் தரப்பட்டிருக்கலாம். கொடுங்கோல் ஆட்சி எவ்வப்பொழுது நிலவியது? அடுக்கமைவு சமூக கட்டமைப்பு? பொதுமக்களுக்கு இருந்த உரிமைகள் எவை? வாழ்நிலை என்ன? இந்த நோக்கிலும் தகவல்கள் சேர்க்கப்பட்டல் கட்டுரை மேம்படும். --Natkeeran 17:57, 1 மார்ச் 2007 (UTC)
இனிமேல் தான் அவையெழுதவேண்டும் எவ்வாறு பாண்டியரின் ஆட்சியில் வஞ்சகர்கள் தோன்றினர் என்பதனைத்துமிப்புத்தகத்தில் உளது.விரைவில் சேர்க்கப்படும்.இப்பொழுது பாண்டியர்கள் வரலாறுகள் உருவாக்கப்படுகின்றது.--நிரோஜன் சக்திவேல் 18:08, 1 மார்ச் 2007 (UTC)