கர்ணன்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
கர்ணன் மகாபாரதம் இதிகாசத்தின் முக்கிய பாத்திரங்களுள் ஒருவர்.
[தொகு] பிறப்பும் வளர்ப்பும்
கர்ணன் சூரியனால் குந்தி தேவிக்கு பிறந்தவர். ஆகையால் பஞ்ச பாண்டவர்களுக்கு மூத்தவர் ஆகிறார். பிறந்தவுடன் கர்ணனை தொட்டிலிட்டு ஆற்றுடன் அனுப்பி விடுகிறார் குந்தி. அதிரதன் என்ற தேரோட்டி இவரை வளர்க்கிறார். அதிரதனின் மனைவி ராதை. பிறக்கும் போதே காதில் குண்டலமும் கவசமும் தரித்து கர்ணன் பிறந்தார்.
[தொகு] மகாபாரதத்தில் கர்ணனின் அறிமுகம்
துரோணரிடம் குருகுலம் பயின்ற பின்னர் பாண்டவர்களும் கௌரவர்களும் மக்கள் மத்தியில் தாங்கள் பெற்ற ஆயுதப் பயிற்சியினை செய்து காட்டுகிறார்கள். அது சமயம் அர்ஜுனன் செய்த வில் வித்தைகளை தாமும் எளிதாகச் செய்ய முடியும் எனக் கூறி அரங்கத்துள் நுழைகிறார் கர்ணன். துரோணர் அனுமதியோடு அவற்றையெல்லாம் செய்தும் காட்டுகிறார். தான் அவமதிக்கப் பட்டதாக உணர்ந்த அர்ஜுனன் கர்ணனை போருக்கு அழைக்கிறார். கிருபர் பெருமையற்ற பரம்பரையில் வந்தவர்களுடன் அரச குமாரர்கள் போரிடுவது தகாது எனவும் எனவே கர்ணனை தம்மைத் தாமே அறிமுகம் செய்துக் கொள்ளும் படியும் கூறுகிறார். அது சமயம் துரியோதனன் கர்ணனை அங்க தேசத்து அதிபதியாக்கி முடிசூட்டுகின்றார். தன் மானம் காத்த துரியோதனனுக்கு தன்னையே கர்ணன் அர்பணித்துவிடுகிறார். கர்ணனுக்கு நிகரான வில்லாளி இல்லை என்ற முடிவுக்கு தருமரும், அர்ஜுனனைப் பற்றிய கவலை தமக்கு இனி இல்லை என்ற முடிவுக்கு துரியோதனனும் வருகிறார்கள்.
[தொகு] பரசுராமரிடம் வில் வித்தை
கர்ணன் பரசுராமரிடம் வில் வித்தை பயின்றார். அரச பரம்பரையினருக்கு கற்றுக் கொடுக்கக் கூடாது என்பது பரசுராமரின் கொள்கையாக இருந்தது. ஒரு நாள் பரசுராமர் கர்ணனின் மடியில் தலை வைத்து உறங்கும் போது கர்ணனின் தொடையினை வண்டு துளைக்கிறது. அசைந்தால் குருவினுடைய நித்திரை கலைந்து விடும் என்று கர்ணன் வலியை பொறுத்துக் கொள்கிறார். கண் விழித்த பரசுராமர் அரச பரம்பரையில் வந்தவர்களைத் தவிர பிறரால் இத்தகைய கடுமையான குடைச்சல் வலியைப் பொறுக்க முடியாது எனவும் கூறுகிறார். கர்ணன் தம்மைப் பற்றி பரசுராமரிடம் தெரிவித்த தகவல்கள் தவறானது என்பதை ஒப்புக் கொள்கிறார். உமக்கு தேவைப் படும் போது எம்மிடமிருந்து நீ பயின்ற வித்தைகள் பலன் அளிக்காது போகும் என பரசுராமர் சாபமிடுகிறார்.
வியாசரின் மகாபாரதம் | |
---|---|
கதை மாந்தர் | |
குரு வம்சம் | மற்றவர்கள் |
சாந்தனு | கங்கை | பீஷ்மர் | சத்யவதி | சித்ராங்கதன் | விசித்திரவீரியன் | அம்பிகா | அம்பாலிகா | விதுரன் | திருதராஷ்டிரன் | காந்தாரி | சகுனி | சுபத்ரா | பாண்டு | குந்தி | மாத்ரி | தருமர் | பீமன் | அர்ஜூனன் | நகுலன் | சகாதேவன் | துரியோதனன் | துச்சாதனன் | யுயுத்சு | துசாலை | திரெளபதி | இடும்பி | கடோற்கஜன் | அகிலாவதி | உத்தரை | உலுப்பி | சித்திராங்கதா | அம்பா | Barbarika | பாப்ருவாஹனன் |Iravan | அபிமன்யு | பரீட்சித்து | விராடன் | கிருபர் | துரோணர் | அஷ்வத்தாமா | ஏகலைவன் | கிரிதவர்மன் | ஜராசந்தன் | சாத்யகி | மயாசுரன் | துர்வாசர் | சஞ்சயன் | ஜனமேஜயன் | வியாசர் | கர்ணன் | ஜயத்திரதன் | கிருஷ்ணர் | பலராமர் | துருபதன் | இடும்பன் | திருஷ்டத்யும்னன் | சால்யன் | அதிரதன் | சிகண்டி |
மற்றயவை | |
பாண்டவர் | கௌரவர் | அஸ்தினாபுரம் | இந்திரப்பிரஸ்தம் | குருச்சேத்திரப் போர் | பகவத் கீதை |