அய்யன்காளி
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
அய்யன்காளி (1863 - 1914) இந்திய தாழ்குடிகளான தலித் மக்களின் தலைவர்களில் ஒருவராவார்.தலித் மக்களின் நல்வாழ்வுக்காக,தீண்டாமைக்கு எதிராக பல போராட்டங்களை கேரளாவில் முன்னின்று நடாத்தியவ்ர் ஆவார்.
1863ம் ஆண்டு ஆகஸ்ட் 28ம் திகதி திருவிதாங்கூரில் (கேரளா) திருவனந்தபுரத்தை அடுத்த வெங்கனூர் எனும் ஊரில் தாழ்குடி விவசாய குடும்பத்தில் மூத்த மகனாக பிறந்தார்.அக்கால கேரள நிலவிய தீண்டாமையால் அய்யன்காளி சிறுவயதுமுதல் பாதிக்கப்பட்டவராகவும் கண்ணுற்றவராகவும் இருந்தார்.அக்கால கட்டத்தில் தலித்துகளின் கல்வி உரிமை,பொது தெருவில் நடமாடும் சுதந்திரம்,பெண்கள் மேலாடை அணிய அனுமதிக்காமை போன்ற கொடுமைகள் உயர் சாதி மக்களால் நிகழ்த்தப்பட்டது..
இக் கொடுமைக்ளுக்கெதிராக போராடுவதற்கு அய்யன்காளி படைகளை அமைத்து வழி நடாத்திச் சென்றார்.இப் போராட்டத்தின் விளைவாக 1900ம் ஆண்டில் தலித் மக்கள் பொது தெருவில் நடமாடும் சுதந்திரத்தையும்,1914ம் ஆண்டுவாக்கில் கல்வி கற்கும் உரிமையும் கிடைக்கப்பெற்றனர்.தலித் மக்களின் வாழ்வியல் முன்னேற்றதிற்காக சாதுஜன பரிபாலன சங்கதினை அமைத்தார்.தலித் மக்களின் முதலாவது சட்டசபை பிரதிநிதியாக இவர் 1910ல் தேர்வு செய்யப்பட்டார்.