மத்தியமாவதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.

மத்தியமாவதி 22வது மேளகர்த்தா இராகமாகிய "வேத" என்றழைக்கப் படும் 4வது சக்கரத்தின் 4 வது மேளமாகிய கரகரப்பிரியாவின் ஜன்ய இராகம் ஆகும். தேவாரப் பண்களில், செந்துருத்தி என்னும் பெயருடன் அழைக்கப்படுகிறது. இது பாடவேண்டிய காலம் நண்பகல் ஆயினும், மிகவும் சுபகரமான இராகமானதால் இதை எப்போதும் பாடலாம்.

ஆரோகணம்: ஸ ரி21 ப நி2 ஸ்
அவரோகணம்: ஸ் நி2 ப ம1 ரி2

[தொகு] இதர அம்சங்கள்

  • இந்த இராகத்தில் ஷட்ஜம், சதுஸ்ருதி ரிஷபம் (ரி2), சுத்த மத்திமம் (ம1) , பஞ்சமம், கைசிகி நிஷாதம் (நி2), ஆகிய சுரங்கள் வருகின்றன.
  • க, த என்னும் ஸ்வரங்கள் வர்ஜம் ஆதலால் இது ஒரு வர்ஜ இராகம் ஆகும். இது ஒரு ஔடவ இராகம். உபாங்க இராகம்.
  • இது கமக வரிக ரத்தி இராகம் ஆகும்.
  • இது திரிஸ்தாயி இராகம் என்பதுடன் இது புராதன இராகம் ஆகும்.
  • நீண்ட ஆலாபனைக்கு இடம் கொடுக்காத இராகம்.
  • சுத்த கர்னாடக இராகம் ஆகும்.
  • இதன் தாடுப் பிரயோகங்கள் மிகவும் ரஞ்சகமானவை. இவ்விராகம் இசை நாடகங்களில் உபயோகப் படுத்தப்படும் இராகங்களில் ஒன்று.
  • சர்வ ஸ்வர மூர்ச்சனாகார ஜன்ய ராகம். இவ்விராகம் மோகனத்தின் ரிஷப மூர்ச்சனையே ஆகும்.
  • இதன் ரி, ம, ப, நி சுரங்கள் கிரக பேதம் மூலம் முறையே இந்தோளம், சுத்தசாவேரி, உதயரவிச்சந்திரிக்கா, மோகனம் ஆகியவற்றைக் கொடுக்கும்.
  • இந்த இராகத்தை கச்சேரி, பஜனை, காலஷேபம், நாடகம் முதலிய நிகழ்ச்சிகளின் இறுதியில் பாடி முடிக்கும் வழக்கம் தொன்று தொட்டு இருந்து வருகின்றது. பல்வேறு இராகங்களைக் கேட்பதன் மூலமாக பல்வேறு இரச உணர்ச்சிகள் நமக்கு ஏற்படுகின்றன.

[தொகு] உருப்படிகள்

  1. வர்ணம் : "எவரி போதன" - ஆதி - பட்டணம் சுப்பிரமணிய அய்யர்.
  2. கீர்த்தனை : "சபாபதிக்கு" - ரூபகம் - கோபாலகிருஷ்ண பாரதியார்.
  3. கிருதி : "சேவிக்க வேண்டுமையா" - ஆதி - முத்துத் தாண்டவர்.
  4. கிருதி : "நன்னு போரவநீ" - ஆதி - தியாகராஜர்.
  5. கிருதி : "மனஸூநில்பசத்தி" - ஆதி - தியாகராஜர்.