மலைச் சொற்பொழிவு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.

 மலைப் பிரசங்கம்கால் என்ரிக் புலொக்கின் ஓவியம், 1890.
மலைப் பிரசங்கம்கால் என்ரிக் புலொக்கின் ஓவியம், 1890.

மலைப் பிரசங்கம் மத்தேயு நற்செய்தி 5-7 இன் படி நாசரேத்தூர் இயேசுவினால் (சுமார் கி.பி. 30 இல்) இன்றைய வட இசுரேலின் மலைப்பாங்கான பகுதியில் தமது சீடருக்கும் அங்கிருந்த பொதுமக்களுக்கும் கொடுக்கப்பட்ட ஒரு பிரசங்கமாகும். இப்பிரசங்கத்தின் ஆரம்பம் ஆசிர்வாதங்களைக் கொண்டுள்ளது, மேலும் இது கிறிஸ்து கற்பித்த செபத்தையும், அகிம்சை, "அடுத்த கன்னத்தையும் காட்டு" போன்ற இயேசுவின் முக்கிய படிப்பினகளைக் கொண்டுள்ளது. பல கிறிஸ்தவர்கள் மலைப்பிரசங்கத்தை பத்துக்கட்டளைகளிற்கான இயேசுவின் விளக்கமமென கருதுகின்றனர். மலைப்பிரசங்கம் கிறிஸ்தவத்தின் மையக்க்கருத்துக்களைக் கொண்டிருப்பதோடு காந்தி,டால்ஸ்ட்டாய் போன்றோ் அதனை பின்பற்றினார்கள்.