வே. அகிலேசபிள்ளை
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
வே. அகிலேசபிள்ளை (1853 - 1910, திருகோணமலை), ஈழத்துப் புலவர்களில் ஒருவர். பல சிற்றிலக்கியங்களைப் பாடியும் பதிப்பித்தவருமாவார்.
[தொகு] வாழ்க்கைக் குறிப்பு
இவர் திருகோணமலை வேலுப்பிள்ளையின் புதல்வர். குமாரவேலுப்பிள்ளை, சிறிய தந்தை தையல்பாகம்பிள்ளை முதலானோரிடம் தமிழ் இலக்கிய இலக்கணங்களைக் கற்றுத் தேறியவர். பயிற்றப்பெற்ற ஆசிரியராகவும் அரசினர் கல்லூரி அதிபராகவும் பணிபுரிந்தவர். இராசக்கோன், அழகக்கோன் என்பார் இவரது புதல்வர்கள்.
[தொகு] இயற்றிய நூல்கள்
- திருகோணமலை விசுவநாதசுவாமி ஊஞ்சல்
- திருகோணமலை சிவகாமியம்மன் ஊஞ்சல்
- திருகோணமலை பத்திரகாளி ஊஞ்சல்
- நிலாவெளி சித்திவிநாயகர் ஊஞ்சல்
- திருக்கோணைநாயகர் பதிகம்
- திருகோணமலை வில்லூன்றி கந்தசாமி பத்துப் பதிகம்
- திருகோணமலை விசாலாட்சியம்மை பெருங்கழிநெடில் விருத்தம் (1923)
- வெருகல் சித்திரவேலாயுதசாமி பேரிற் சொல்லிய அடைக்கலமாலை, ஊசல் (1887)
- வெருகல் சித்திரவேலாயுதசாமி பேரில் சிறைவிடுபதிகம், நெஞ்சறிமாலை முதலியன.
- திருக்கோணாசல வைபவம்
[தொகு] பதிப்பித்த நூல்கள்
- திருக்கரசைப் புராணம் (1890)
- வெருகல் சித்திரவேலாயுதர் காதல் (1906)
- நரேந்திர சிங்கராசன் வசந்தன் சிந்து (1908)