திருநெல்வேலி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.

திருநெல்வேலி (Tirunelveli) இந்தியாவின் தென் மாவட்டமான தமிழ்நாட்டில் உள்ள ஒரு நகரம் ஆகும். இந்நகரம் அதே பெயருடைய மாவட்டத்தின் தலைநகருமாகும்.

திருநெல்வேலி (அ) நெல்லை நகரம், பொருணை எனப்படும் தாமிரபரணி ஆற்றங்கரையில் அமைந்துள்ளது. 2000 ஆண்டு பழமை வாய்ந்த இந்த நகரம் பாண்டிய மன்னர்களின் தலைநகரமாக சிலகாலம் செயல்பட்டது. இங்குள்ள நெல்லையப்பர் - காந்திமதி கோவில் மிகவும் பிரசித்தி பெற்றது.

பொருளடக்கம்

[தொகு] பெயர்க் காரணம்

இந்து பழங்கதைகளின் படி சிவ பெருமான் நெல்லுக்கு வேலியிட்டுக் காத்ததால் இது திருநெல்வேலி எனப்படுகிறது என்ற கருத்து உள்ளது.

[தொகு] இரட்டை நகரங்கள்

திருநெல்வேலியும் பாளையங்கோட்டையும் இரட்டை நகரங்கள் எனப்படுகின்றன. பாளையங்கோட்டை கல்விநிலையங்களுக்குப் பெயர்பெற்றது. இது தென்னிந்தியாவின் ஆக்ஸ்ஃபோர்டு என்றழைக்கப்படுகிறது. பாளையம்கோட்டைச் சிறையும் மிகவும் புகழ்பெற்றது. இந்திய சுதந்திரப் போராட்டத்தின் போது பல சுதந்திரப்போராட்ட வீரர்கள் இங்குதான் அடைக்கப்பட்டிருந்தனர்.

[தொகு] தமிழின் தோற்றம்

தமிழ் மொழியானது பொதிகை மலையில் தோன்றியதாகக் கருதப்படுகிறது. இது திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பாபநாசம் என்ற சிற்றூரில் உள்ளது. இந்து பழங்கதைகளின் படி சிவன் வியாசரையும் அகத்தியரையும் சமஸ்கிருதத்தையும் தமிழையும் உருவாக்க அனுப்பினார். அகத்தியர் பாபநாசம் வந்து தமிழை உருவாக்கினார்.

[தொகு] அல்வா

திருநெல்வேலி, அல்வா எனப்படும் இனிப்புப் பண்டத்திற்கு மிகவும் புகழ்பெற்றது. திருநெல்வேலி அல்வாவின் சுவைக்கு தாமிரபரணி ஆற்றின் நீரும் ஒரு காரணமாகச் சொல்லப்படுகிறது.

[தொகு] வெளி இணைப்புகள்


தமிழ்நாட்டு முத்திரை தமிழ்நாடு


தமிழ்நாடு தொடர்பான தலைப்புகள் | வரலாறு | அரசியல் | தமிழர்

தலைநகரம் சென்னை
மாவட்டங்கள் ஈரோடுகடலூர்கரூர்கன்னியாகுமரி

காஞ்சிபுரம்கிருஷ்ணகிரிகோயம்புத்தூர்சிவகங்கைசென்னைசேலம்தஞ்சாவூர்தர்மபுரிதிண்டுக்கல்திருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருவண்ணாமலைதிருவள்ளூர்திருவாரூர்தூத்துக்குடிதேனிநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபுதுக்கோட்டைபெரம்பலூர்மதுரைஇராமநாதபுரம்விருதுநகர்விழுப்புரம்வேலூர்

முக்கிய நகரங்கள் அம்பத்தூர்ஆலந்தூர்ஆவடிஈரோடுகடலூர்காஞ்சிபுரம்கும்பகோணம்கோயம்புத்தூர்சென்னைசேலம்தஞ்சாவூர்தாம்பரம்திண்டுக்கல்திருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பூர்திருவண்ணாமலைதிருவொற்றியூர்தூத்துக்குடிநாகர்கோயில்நெய்வேலிபல்லாவரம்புதுக்கோட்டைமதுரைஇராஜபாளையம்வேலூர்