திருமெய்யம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.

திருமெய்யம் என்னும் ஊர் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ளது. இங்கு சிவனுக்கும் திருமாலுக்கும் குடைவரை கோயில்கள் உண்டு. இங்கே இசை கல்வெட்டுக்கள் உண்டு. சிவன் கோயில் சற்று பழையது என்பர். வைணவர்களுக்கு இவ்வூர் சிறப்பு மிக்கது. இது ஆழ்வார் பாடல் பெற்றா தலம். திருமங்கை ஆழ்வார் இவ்வூரில் உள்ள திருமாலை,

“மையார் கடலும் மணிவரையும் மா முகிலும்
கொய்யார் குவளையும் காயாவும் போன்று இருண்ட
மெய்யானை மெய்யமலையானைச் சங்கேத்தும்
கையானை கைதொழாக் கையல்லகண்டாமே

என பாடியுள்ளார்.

இவ்வூரில் இந்திய விடுதலை வீரரும், பின்னாள்காங்கிரசில் தலைவராயும் இருந்த திரு சத்தியமூர்த்தி அவர்கள் இங்கே 1887ல் பிறந்தார்.

[தொகு] வெளி இணைப்பு

திருமெய்யம் பற்றிய வலைப் பதிவு