மருதத் தமிழர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.

வயலும் வயல் சார்ந்த இடமும் மருதம் எனப்படும். தமிழர்களில் பெரும்பான்மையினோர் வயலை சார்தே வாழ்கின்றார்கள். அம்மக்களுக்கு வேளாண்மையே முக்கிய தொழில். வேளாண்மை மருதத் தொழில் என்றும் குறிப்பிடப்படுவதுண்டு[1]. மருதத் தமிழர் என்பதற்கு ஈடாக தமிழ் உழவர்கள் அல்லது தமிழ் விவசாயிகள் என்றும் குறிப்பிடலாம். ஆனால் மருதது தமிழர் எனப்படும் பொழுது இடம், வாழ்வியல், வரலாறு போன்ற அம்சங்களும் இணைந்து வருகின்றன.