திருகோணமலை கோட்டை
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
திருகோணமலை கோட்டை திருகோணமலை நகரின் வடக்கே அமைந்துள்ளது. இந்தக் கோட்டை போர்த்துக்கீசரால் கட்டப்பட்டது. பின்னர் ஒல்லாந்தர்(பிரான்சியர் இதனை பிடித்து மீண்டும் ஒல்லாந்தரிடம் ஒப்படைத்தனர்), மற்றும் ஆங்கிலேயரால் கைப்பற்றப்பட்டது. இந்தக் கோட்டையினுள்ளேயே புகழ் பூத்த திருக்கோணேச்சர ஆலயம் அமைதுள்ளது. தற்போது இலங்கை இராணுவதின் பலமான முகாமாக விளங்குகின்றது. சமாதான ஒப்பந்தம் கைச்சாதான பின்பு இதனுள்ளே செல்வதற்கான கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளது.
திருக்கோணேச்சரத்துக்குப் போகும் பாதையும் கோட்டைக்குப் போகும் பாதையும் ஒன்றாகும். கோட்டை நுழைவாயிலில் உள்ள வரலாற்று பதிவு தகட்டைப் பார்த்தால் இந்தக் கோட்டையின் மீதான காலனி சக்திகளின் ஆர்வத்தைப் புரிந்துகொள்ளலாம்.
[தொகு] வரலாறு
1623 ல் இந்தக் கோட்டை போர்த்துக்கேயரால் கட்டப்பட்டது. 1639 ல் பேர்த்துக்கேயர் இந்தக் கோட்டையைக் கைப்பற்றினர். இதன் பின்பு மீள்கட்டுமானம் போன்ற பெருமளவான மாற்றங்களுக்குக் கோட்டை உள்ளானது. 1672 ல் பிரெஞ்சுக்காரர் இந்தக் கோட்டையைத் தாக்கிக் கைப்பற்றினர்.
ஜனவரி 8 , 1782 இல் இந்த கோட்டை பிரித்தானியரால் கைப்பற்றப்பட்டது. இதே ஆண்டு ஆகஸ்ட் 29 ல் பிரெஞ்சுக்காரர் இந்தக் கோட்டையை மீளக் கைப்பற்றினர். 1783 ல் பிரான்ஸ் இதை பிரித்தானியரிடம் கையளிக்க பிரித்தானியர் ஒல்லாந்தரிடம் கையளித்தனர். இருந்தாலும், 1795 ல் பிரித்தானியர் மீள இந்தக் கோட்டையைக் கைப்பற்றியதுடன் 1948 ல் இலங்கை சுதந்திரம் அடையும் வரை தமது கட்டுப்பாட்டில் வைத்திருந்தனர். பல காலனி ஆதிக்க சக்திகள் இந்த பிரட்ரிக் கோட்டையில் கவனம் செலுத்தக் காரணமாக அமைந்தது திருகோணமலையின் இயற்கைத் துறைமுகமே.