நீலாசலநாதர் கோயில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.

நீலாசலநாதர் கோயில் (இந்திர நீலப் பருப்பதம்) பாடல் பெற்ற தலங்களில் ஒன்றாகும். சம்பந்தர் பாடல் பெற்ற இத்தலம் இமயமலைச் சாரலில் அமைந்துள்ளது. இத்தலத்தில் இந்திரன் வழிபட்டான் என்பது தொன்நம்பிக்கை. காளாத்தியிலிருந்து சம்பந்தர் இத்தலம் மீது பதிகம் பாடினார் எனப்படுகிறது.