தமிழ் ராப் இசை (சொல்லிசை)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.

சொற்களை ராகத்துடன் கோவையாக வேகமாக தொடராக பாடுவதை ராப் இசை எனலாம். ராப் இசை வடிவம் அமெரிக்காவில் 1970 களில் அமெரிக்க கறுப்பின மக்களின் இசை ஆக்க வெளிப்பாடாக ஆரம்பித்து உலக பொதுப் பாட்டின் ஒரு அங்கமாகிவிட்டது. ராப் இசை அமெரிக்க கறுப்பின மக்களின் பண்பாட்டு சூழமைவில் தோன்றியதால், ராப் இசை வடிவமும் அதன் பிரதிகளும் அந்த மக்களின் பின்புலத்தையும் உள்வாங்கியே பிரதிபலிக்கின்றன. தமிழ் ராப் இசை அமெரிக்க ராப் இசைவடிவத்தின் தமிழ் வடிவம் எனலாம். தமிழில் ராப் இசையை சொல்லிசை என்றும் குறிப்பிடுவர். தமிழில் அடுக்குமொழித் தொடர்கள் ராப் பாடல்களில் பெரும்பாலும் இடம்பெறுகின்றன.

பொருளடக்கம்

[தொகு] தமிழ் இலக்கியத்தில் சொல்லிசைச் சிறப்பு

[தொகு] கலிங்கத்துப் பரணி

எடும்எடும் எடும்என எடுத்தோர்
இகல்வலி கடல்ஒலி இகக்கவே
விடுவிடு விடுபரி கரிக்குழாம்
விடும்விடும் எனஒலி மிகைக்கவே

விளைகனல்  விழிகளின் முளைக்கவே
மினல்ஒளி கனலிடை பிறக்கவே
வளைசிலை உரும்என இடிக்கவே
வடிகனை நெடுமழை சிறக்கவே

12_கலிங்கத்துப்_பரணி_போர்_பாடியது

[தொகு] அருணகிரிநாதரின் கந்தரநுபூதி

உருவாய் அருவாய் உளதாய் இலதாய்
மருவாய் மலராய் மணியாய் ஒளியாய்க்
கருவாய் உயிராய்க் கதியாய் விதியாய்க்
குருவாய் வருவாய் அருள்வாய் குகனே

[தொகு] இவற்றையும் பார்க்க

[தொகு] வெளி இணைப்புகள்

இசை வடிவங்கள் (தமிழ்) தொகு
தமிழிசை | கருநாடக இசை | கிராமிய இசை | மெல்லிசை | திரையிசை | ராப் இசை (சொல்லிசை) | பாப் இசை | துள்ளிசை