மைதிலி
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
மைதிலி எண்பதுகளின் இறுதியில் எழுத ஆரம்பித்த ஈழத்துப் பெண் கவிஞர். 1973 இல் புங்குடுதீவில் பிறந்த இவர் யாழ்ப்பாணத்திலிருந்து வெளியான திசைவார இதழ் மூலம் அறிமுகமானவர். "கொற்றவை" என்னும் புனைபெயரிலும் கவிதைகள் எழுதியுள்ளார். இப்பொழுது கனடாவில் வசிக்கிறார். துணைவர் உதயசங்கர். பிள்ளைகள் நிரா, சேரா. இவரது முதற் கவிதைத் தொகுப்பு இரவில் சலனமற்றுக் கரையும் மனிதர்கள்.