பெலாரஸ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.



பெலாரஸ் குடியரசு

கொடி

சின்னம்
குறிக்கோள்
நாட்டு வணக்கம் நாம் பெலாரஸ்யர்

அமைவிடப்படம்
அரசின் வலைத்தளம்: [1]
கண்டம் ஐரோப்பியா
தலைநகரம்
 - அமைவிடம்
மின்ஸ்க்

53°55′ N 27°33′ E

பெரிய நகரம் மின்ஸ்க்
ஆட்சி மொழி(கள்) ரஷ்ய மொழி
பெலாரஸ்ய மொழி
அரசு
  குடியரசுத் தலைவர் (சனாதிபதி)
குடியரசு
அலெக்சாண்டர் லுகாசென்கோ
விடுதலை
 - திகதி
சோவியத் யூனியன் இடமிருந்து
குடியரசு நாள்
தன்னாட்சி உரிமை அறிவிப்பு
  விடுதலை அறிவிப்பு
 
 
July 27 1990
August 25 1991


பரப்பளவு
 - நீர்
207,600ச.கி.மீ (93வது)
புறக்கணிக்கத்தக்கது%
மக்கள் தொகை
 - மொத்தம் (2005)
 - மக்கள் தொகை அடர்த்தி

9,755,000(81வது)
ச.கி.மீ.க்கு 49 (142வது)
மொ.தே.உ.
 - ஆண்டு
 - ஆள்வீதம்
$$79.13 பில்லியன் (64வது)
2005

$7,700(104வது)

மனித வளர்ச்சி சுட்டெண் 0.786(67வது)
நாணயம் பெலாரஸ்யன் ரூபிள் BYR
நேர வலயம்
 - கோடை காலநேரம்
ஒ.ச.நே. +2
ஒ.ச.நே. +3
இணைய குறி .by
தொலைபேசி +375
நாட்டின் விலங்கு [[]]
நாட்டின் பறவை [[]]
நாட்டின் மலர்
குறிப்புகள்:

பெலாரஸ் (English:Belarus; Belarusian: Беларусь, Łacinka: Biełaruś; Russian: Белору́ссия) முற்றிலும் நில எல்லைகளைக்கொண்ட கிழக்கு ஐரோப்பாவைச் சேர்ந்த ஒரு நாடாகும். ரஷ்யா, உக்ரைன், போலந்து, லித்துவேனியா, லத்வியா ஆகியன இதன் அண்டை நாடுகளாகும். இந்நாட்டின் தலைநகர் மின்ஸ்க்(Minsk). பிரெஸ்ற், குரெட்னோ, கோமெல், மொகிலெவ், விற்றெப்ஸ்க் என்பன இந்நாட்டின் மற்றைய முக்கிய நகரங்கள்.


பெலாரஸ் என தற்போது அழைக்கப்படும் பகுதிகள் பெரும்பாலும் லித்துவேனியா, போலந்து, ரஷ்யப்பேரரசு போன்ற நாடுகளின் பகுதிகளாகவே வரலாற்றுக் காலங்களில் இருந்து வந்தன. இறுதியில் பெலாரஸ் 1922 இல் சோவியத் யூனியனின் ஒரு குடியரசாக(பெலாரஸ்ஸியன் சோவியத் சோசலிசக் குடியரசு) மாறியது. 27 ஆகஸ்ட் 1990 இல் தனது தன்னாட்சி உரிமையை அரசுசார்பாக அறிவித்தது. சோவியத் யூனியனின் உடைவைத் தொடர்ந்து 25 ஆகஸ்ட் 1991 பெலாரஸ் குடியரசு என்ற நாடாக தம் விடுதலையை (சுதந்திரப்) அறிவிப்பு செய்துகொண்டது.


1994 இல் இருந்து அலெக்சாண்டர் லுகாசென்கோ இந்நாட்டின் குடியரசுத் தலைவராக உள்ளார். பெலாரஸ் தற்போது அயல்நாடான ரஷ்யாவுடன் ரஷ்யா பெலாரஸ் யூனியன் (Union of Russia and Belarus)என்னும் திட்டம் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்திவருகிறது. இத்திட்டத்தில் இரு நாடுகளின் பொருளாதாரங்களை இணைப்பதுடன் மற்றும் பல விடயங்களும் அடங்கும்.


இதன் அயல்நாடான உக்ரைனில் 1986 இல் நடந்த செர்ணோபில் விபத்தினால் ஏற்பட்ட அணுக்கசிவு விளைவுகளினால் தொடர்ந்தும் இந்நாடு பாதிப்படைந்துவருகிறது.