முத்துராமலிங்கத் தேவர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.

தென் தமிழகத்தில் பசும்பொன் எனும் சிற்றூரில் அக்டோபர் 30 தேதி பிறந்தவர் முத்துராமலிங்கம். தலை சிறந்த சுதந்திரப் போராட்டத் தியாகியாக விளங்கியவர். நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் தலைமையில் பரங்கிரை எதிர்த்த இந்திய தேசிய இராணுவத்திற்கு தமிழகத்திலிருந்து பெரும் படையை திரட்டி அனுப்பிய பெருமை இவரைச் சாரும். தலை சிறந்த பேச்சாளராகவும் ஆன்மீகவாதியாகவும் திகழ்ந்த இவரது பிறந்த நாள் தமிழக அரசு விழாவாக பசும்பொன்னில் வருடந்தோறும் கொண்டாடப் பட்டு வருகின்றது.