பேச்சு:கொங்குத் தமிழ்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
கொங்கு கட்டுரையில் இருந்து உள்ளடக்கத்தின் தனித்தன்மை நோக்கி புதிய கட்டுரையாக ஆக்கப்பட்டுள்ளது. ஆரம்பத்தில் பயனர்:Kurumban இந்த தகவல்களைத் தொகுத்தார். --Natkeeran 21:48, 17 மார்ச் 2007 (UTC)
[தொகு] கொங்குத் தமிழ் குறித்து
கட்டுத் தரை போன்ற சொற்கள் புதுகையிலும் புழக்கத்தில் இருக்கிறது. மலகாயிதம் என்பது மழையில் நனையாமல் இருக்க உதவும் polythene sheetஐ குறிக்கும் மழைக் காகிதம் தான். மலகாயிதம் என்பதை மழகாயிதம் என்றாவது மாற்றலாமா?
செல்வா, எச்சு என்ற சொல்லை நீங்கள் ஒரு கட்டுரையில் பயன்படுத்திப் பார்த்திருக்கிறேன். இது உரைத் தமிழில் பயன்படுத்தத்தக்கது தானா? உங்கள் கட்டுரையை பார்க்கும் வரை இது extra என்ற சொல்லின் கொச்சை வடிவமோ என்று நினைத்துக் கொண்டிருந்தேன்.
கட்டுரைக்கு நன்றி, குறும்பன். நானும் பல ஆண்டுகள் கோவையில் வாழ்ந்திருப்பதால் இந்த சொற்களை நினைவு கூறுவதில் நினைவுகூர்வதில் மகிழ்ச்சி--ரவி 09:27, 18 மார்ச் 2007 (UTC)
- ரவி, நினைவு கூறல், நினைவு கூரல், நினைவுகூர்தல், நினைவுகூறுதல். எது சரியானது?--Kanags 11:46, 18 மார்ச் 2007 (UTC)
கனக்ஸ், நினைவுகூர்ந்ததற்கு நன்றி :) க்ரியாவின் தற்காலத் தமிழ் அகராதியில் நினைவுகூர் என்று தந்திருக்கிறது. அதை வாங்கி வந்தது நல்லதாய்ப் போனது !--ரவி 15:51, 18 மார்ச் 2007 (UTC)
- ரவி க்ரியாவின் தற்கால அகராதி பல நல்ல அமைப்புகள் கொண்டிருந்தமொழுதும், ஏராளமான சொற்கள் விடுபட்டுள்ளுள்ளன. பல சொற்களுக்கு உள்ள பொருட்ள்கள் கொடுக்கப்படவில்லை. கழக அகராதி இதைவிட மிக நல்ல அகராதி. நினைவு கூர்தல் என்பது கூர்->கூர்தல் (to attend intelligently to something - here it means to recall with care). அடுத்ததாக எச்சு என்னும் சொல் செந்தமிழ்ச் சொல்தான். எஞ்சு -எச்சு. திருவள்ளுவர் "அவரவர் தம் எச்சத்தால்" என்று கூறுவதில் உள்ள எச்சம் என்பது எச்சு என்பதன் வழி வந்தது தான். எச்சு என்பது ஒரு கலைச்சொல்லும் ஆகும் ஓர் எண்ணை வேறு ஓர் எண்ணால் வகுக்கும் பொழுது மிஞ்சி இருப்பதும் எச்சம் தான். எச்சம், எச்சு என்பது remainder. பிற அறிவியல் பொறியியல் துறைகளிலும் residue முதலானவற்றுக்குப் பயன்படுத்தலாம். --செல்வா 02:20, 19 மார்ச் 2007 (UTC)