விழித்திரை விலகல்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
விழித்திரை விலகல் (Retinal detachment) கண்ணில் ஏற்படும் ஒரு பாதிப்பாகும். விழித்திரையானது கண்ணின் உட்சுவரிலிருந்து உரிவதால் இது ஏற்படுகிறது. பத்தாயிரம் பேரில் ஒருவருக்கு ஏற்படும் இப்பாதிப்பிற்கு உடனடிச் சிகிச்சை அளிக்காவிடின் பார்வையிழப்பு ஏற்படலாம்.
விழித்திரையில் துவாரம் அல்லது கிழிவு ஏற்படுவதனாலேயே விழித்திரை விலக நேரிடுகிறது. அந்த இடைவெளியினூடாக திரவம் விழித்திரைக்குக் கீழே கசிவதால் கண்சுவருடன் உள்ள தொடுப்பு நலிவடைந்து விழித்திரை உரிகிறது. இதுவே விழித்திரை விலகலாகும். இவ்வாறு விலகிய விழித்திரையால் உள்வரும் ஒளிக்கதிர்களிலிருந்து தெளிவான படத்தைப் பெற முடியாது.
இந்தப் பாதிப்பு பெரும்பாலும் நடுத்தர வயதுக் குறும்பார்வையுடையோருக்கே ஏற்படுகிறது.