நந்திக் கலம்பகம்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
நந்திக் கலம்பகம், தமிழில் உருவான கலம்பக இலக்கியங்களில் ஒன்று. இது பல்லவ மன்னன் நந்திவர்மனைக் குறித்துப் பாடப்பட்டது.
சோமேசர் முதுமொழி வெண்பா என்னும் நூல் நந்திக் கலம்பகத்தால் நந்திவர்ம பல்லவன் மாண்டதாகக் கூறும். நந்திவர்மனிடம் இருந்து அரசைக் கவரும் நோக்கில் அவனது தம்பியால் ஒழுங்குசெய்யப்பட்டு அறம்பாடுதல் என்னும் முறையில் இப் பாடல்கள் பாடப்பட்டன என்பது சிலரது கருத்து. இதனை மறுத்துக்கூறுவாரும் உள்ளனர்.