சோலை சுந்தரபெருமாள்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
சோலை சுந்தரபெருமாள், தன் தொட்டில் பூமியான தஞ்சை மண்ணின் நேசத்தை படைப்புகளில் வெளிப்படுத்தும் தேர்ந்த படைப்பாளி. விவசாயம் சார்ந்த வேளாண் மக்களின் வாழ்க்கையை, வலியை, கொண்டாட்டத்தை மாறாத வட்டார மொழியில் எழுதிவரும் இவர் ஒரு பள்ளி ஆசிரியர். இவரது ‘செந்நெல்’ நாவல் இலக்கிய விமர்சகர்களால் பெரிதும் பாராட்டப்பட்டது. தற்போது திருவாரூருக்கு அருகில் உள்ள காவனூர் என்ற சிறு கிராமத்தில் வசிக்கிறார்.
[தொகு] எழுதிய நாவல்கள்
- நஞ்சை மனிதர்கள்
- செந்நெல்
- தப்பாட்டம்