ஆர். மகாதேவன்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
தேவன் அல்லது ஆர். மகாதேவன், செப்டம்பர் 8, 1913 - மே 5, 1957) பிரபல நகைச்சுவை எழுத்தாளர். பல நகைச்சுவைக் கதைகளையும் கட்டுரைகளையும் தேவன் என்ற புனைபெயரில் எழுதியவர். துப்பறியும் சாம்பு இவரது பிரபலமான படைப்பாகும்.
பொருளடக்கம் |
[தொகு] வாழ்க்கைக் குறிப்பு
தமிழ் நாட்டில் கும்பகோணத்தை அடுத்த திருவிடைமருதூரில் செப்டம்பர் 8, 1913 அன்று பிறந்தார். கும்பகோணம் அரசினர் கல்லூரியில் பி.ஏ. பட்டம் பெற்றார்.
[தொகு] பத்திரிகாசிரியர்
சிறிது காலம் பள்ளியொன்றில் ஆசிரியராகப் பணியாற்றியபின் தனது 21 வது வயதில் ஆனந்தவிகடன் வார இதழில் துணை ஆசிரியராகச் சேர்ந்தார். 1942 முதல் 1957 வரை நிர்வாக ஆசிரியராக இருந்தார். 23 ஆண்டுக் காலம் விகடனில் ஐந்நூறுக்கும் மேற்பட்ட சிறுகதைகள், நூற்றுக்கணக்கான நகைச்சுவைக் கட்டுரைகள், இருபதுக்கும் மேற்பட்ட நாவல்கள் எழுதினார்.
[தொகு] எழுத்துலகில்
துப்பறியும் சாம்பு இவரது பிரபலமான பாத்திரப் படைப்பு. கோமதியின் காதலன் திரைப்படமாக வெளியாயிற்று. இவர் எழுதிய மிஸ் ஜானகி, மிஸ்டர் வேதாந்தம், ஜஸ்டிஸ் ஜகந்நாதன், கல்யாணி, மைதிலி, துப்பறியும் சாம்பு முதலிய நாவல்கள், மேடை நாடகங்களாகவும் பல இடங்களில் நடிக்கப் பட்டன. மிஸ்டர் வேதாந்தம், ஸ்ரீமான் சுதர்சனம் இரண்டு நாவல்களும் இயக்குநர் ஸ்ரீதர் தயாரித்து, சின்னத்திரையிலும் வழங்கப்பட்டன.
ஐம்பதுகளில் இவர் அயல்நாட்டுச் சுற்றுப் பயணங்கள் மேற்கொண்ட போது எழுதிய ஐந்து நாடுகளில் அறுபது நாள் புத்தகமாக வெளியானது. தேவன் சென்னை தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் தலைவராக இரு முறை பதவி வகித்திருக்கிறார்
ஜஸ்டிஸ் ஜகந்நாதன் நாவல், 1974 இல் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டு வெளியானது.
[தொகு] தேவனின் படைப்புகள்
[தொகு] நாவல்கள்
- மைதிலி
- கோமதியின் காதலன்
- துப்பறியும் சாம்பு
- கல்யாணி
- மிஸ் ஜானகி
- ஸ்ரீமான் சுதர்ஸனம்
- மிஸ்டர் வேதாந்தம்
- ஜஸ்டிஸ் ஜகந்நாதன்
- லட்சுமி கடாட்சம்
- ஸி.ஐ.டி. சந்துரு
[தொகு] பயணக் கட்டுரைகள், சிறுகதைகள், தொகுப்புகள்
- ராஜாமணி
- மாலதி
- நடந்தது நடந்தபடியே
- ராஜியின் பிள்ளை
- மல்லாரி ராவ் கதைகள்
- ஏன் இந்த அசட்டுத்தனம்
- விச்சுவுக்குக் கடிதங்கள்
- பார்வதியின் சங்கல்பம்
- அப்பளக் கச்சேரி
- சீனுப்பயல்
- மனித சுபாவம்
- சின்னஞ் சிறுகதைகள்
- பல்லிசாமியின் துப்பு
- ஜாங்கிரி சுந்தரம்
- போக்கிரி மாமா
- பெயர்போன புளுகுகள்
- ரங்கூன் பெரியப்பா
- சொன்னபடி கேளுங்கள்
- ஐந்து நாடுகளில் அறுபது நாள்
- மோட்டார் அகராதி
- ராஜத்தின் மனோரதம்
- கமலம் சொல்கிறாள்
- ஸரஸுவுக்குக் கடிதங்கள்
- போடாத தபால்
- அதிசயத் தம்பதிகள்
- சின்னக் கண்ணன்
அண்மையில் அல்லையன்ஸ் பதிப்பகம் 'தேவ'னின் பல படைப்புகளை வெளியிட்டுள்ளது. கிழக்குப் பதிப்பகம் துப்பறியும் சாம்பு வை ஒரு செம்பதிப்பாக வெளியிட்டுள்ளது.
[தொகு] மறைவு
தமது 44-ஆவது வயதில், 1957 மே 5 ஆம் தேதி அன்று தேவன் மறைந்தார்.