சாத்தன்குளம் அ. இராகவன்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
சாத்தன்குளம் அ.இராகவன் (1902 - தமிழ்நாடு), நுண்கலை ஆய்வாளர் வல்லுனர், எழுத்தாளர், ஆசிரியர்.
[தொகு] வாழ்க்கைக் குறிப்பு
சாத்தன்குளம் அருணாசலக் கவிராயர் இராகவன் 1902 - 1981
நுண்கலைச் செல்வர் சாத்தன்குளம் அ.இராகவன் கல்வித்துறையில் ஆசிரியப்பணி, சுயமரியாதை இயக்கப்பணி, பொதுவுடமை இயக்கப்பணி எனப் பல பரிணாமங்களில் செயற்பட்டு, வளமான அனுபவங்களை உள்வாங்கியவர்.
தமிழர்களின் புழங்குபொருள் பண்பாடு குறித்து விரிவான ஆய்வுகள் இன்னமும் நிகழ்த்தப்பெறாத நிலையில், நுண்கலைச் செல்வர் சாத்தன்குளம் அ.இராகவன் அவர்களால் எழுதப்பட்ட நூல்கள் தமிழர்களின் புழங்குபொருள் பண்பாட்டை அறிவதற்கு உதவுகின்றன.
தமிழர் பண்பாட்டு வரலாறு, கலை வரலாறு, தொழில்நுட்ப வரலாறு, தொல்பொருள் ஆய்வு வரலாறு ஆகிய துறைகளில் ஆய்வுசெய்து விரிவாக நூல்கள் எழுதியவர். கலைத்துறையில் 20 ஆண்டுகளாக தொடர்ந்து நூல்களை எழுதியவர்.
[தொகு] வெளியான நூல்கள்
- தமிழர் பண்பாட்டில் தாமரை,
- தமிழ்நாட்டுத் திருவிளக்குகள்,
- தமிழக சாவக கலைத் தொடர்புகள்,
- இறைவனின் எண்வகை வடிவங்கள்,
- வேளாளர் வரலாறு,
- தமிழ்நாட்டுக் கோயிற் கட்டிடக்கலை,
- நம்நாட்டுக் கப்பற் கலை,
- தமிழ்நாட்டு அணிகலன்கள்,
- தமிழ்நாட்டு படைகலன்கள்,
- தென்னிந்திய கோயில் கட்டிடக்கலைகள்,
- இசையும் யாழும்,
- கோ நகர் கொற்கை,
- ஆதிச்சநல்லூரும் பெருநைவெளி நாகரீகமும்,
- குடியரசுக் கட்டுரைகள்,
- அறிவு இதழ்க் கட்டுரைகள்,
- ஆய்வுக் கட்டுரைகள்,