வாலி (திரைப்படம்)
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
வாலி | |
இயக்குனர் | எஸ்.ஜே.சூர்யா |
---|---|
கதை | எஸ்.ஜே.சூர்யா |
நடிப்பு | அஜித் சிம்ரன் யோதிகா விவேக் பாலாஜி |
இசையமைப்பு | தேவா |
வெளியீடு | தமிழ் 1999, கன்னடம் 2001 |
மொழி | தமிழ், கன்னடம் |
IMDb profile |
வாலி (1999) ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். இதே திரைப்படம் கன்னடத்தில் மீள் உருவாக்கம் செய்யப்பட்டுத் தேனித் தென்றல் தேவாவில் இசையமைப்பில் உருவாக்கப்பட்டு 2001 ஆம் ஆண்டு கர்நாடகத்தில் திரையிடப்பபட்டு பெங்களூரில் 100 நாட்களுக்கு ஓடி சாதனைபடைத்த படம்.
பொருளடக்கம் |
[தொகு] கதை
கதைச்சுருக்க எச்சரிக்கை: கதைச்சுருக்கம் மற்றும் / அல்லது கதை முடிவு விவரங்கள், கீழே தரப்பட்டுள்ளன.
இக்கதை இராமாயணத்தில் வரும் சுக்ரீவனின் சகோதரனான வாலியைப் சுக்ரீவனின் மனைவியை வைத்திருப்பது போன்றே இக்காலகட்டத்தில் நடக்கும் சம்பவங்களைக் கொண்டு ஆல்டிமேட் ஸ்டார் அஜித்குமாரின் ஹீரோவாகவும் வில்லனாகவும் இரட்டை நடிப்பில் அசத்திய திரைப்படம். தேவாவும் சிவாவும் இரட்டைச் சகோதரர்கள். காது கேட்காதவராகவும் ஊமையுமான தேவா இவர்களில் மூத்தவர். தனது குறைபாடுகளை யாரும் கண்டுபிடிக்காதவாறு செய்வதில் இவர் அனைவரது பாராட்டுகளையும் பெறுவார். விளம்பர நிறுவனத்தில் தலைமைப் பீடத்தில் இருக்கும் தேவா ஒரு பொருளை ஆசைப்பட்டால் அப்பொருளை அடையாமல் விடமாட்டார். அச்சமயம் சிவா பார்த்து விரும்பிய பெண்ணான பிரியாமீது எதிர்பாராத வண்ணம் தேவா காதல் கொள்கின்றார். பின்னர் தேவா தனது தம்பியும் அப்பெண்ணை காதலிப்பதனை அறிந்து கடுங்கோபம் கொள்கின்றார். பல சமயம் பிரியாவை தன் வசம் அடைய முனைந்தும் தோற்றுவிடுகின்றார். ஒரு சமயம் சிவா பணிவிடயமாக வெளியூர் செல்ல நேரிடுகின்றது. இச்சந்தர்ப்பத்தினைப் பயன்படுத்திக் கொள்ளும் தேவா பிரியாவிடம் தான் சிவா என நம்பவைத்து பிரியாவும் சிவாவும் தேனிலவிற்குச் சென்ற வீட்டிற்கு உள் நுழைகின்றார். இதனைத் தெரிந்துகொள்ளும் பிரியா எவ்வாறு தன்னைக் காப்பாற்றிக் கொள்கின்றார் என்பதே திரைக்கதை முடிவு.
[தொகு] பாடல்கள்
- ஜீ பிரியா - எஸ்.பி பாலசுப்பிரமணியம், ஸ்வர்னலதா
- நிலவைக் கொண்டுவா - உன்னிகிருஷ்ணன், அனுராதா ஸ்ரீராம்
- வானில் காயுதே - மனோ , அனுராதா ஸ்ரீராம், சூர்யா
- ஏப்ரல் மாதத்தில் - உன்னிகிருஷ்ணன், ஹரிஹரன்
- சோனா சோனா - ஹரிஹரன், அஜித்
[தொகு] வசூல்
- 270 நாட்கள் திரையில் இத்திரைப்படம் திரையிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.
- 100 நாட்களிற்கு மேலாக இதன் கன்னட டப்பிங் திரைப்படம் கர்நாடகத்தில் ஓடியது.