கணபதி ஐயர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.

கணபதி ஐயர் (1709 - 1794) ஈழத்தில் மரபுவழி நாடகங்களின் முன்னோடி என அறியப்படுபவர். அத்துடன் இவர் ஒரு சிற்றிலக்கியப் புலவரும் ஆவார்.

பொருளடக்கம்

[தொகு] வாழ்க்கைக் குறிப்பு

இப்புலவர் யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டையில் வசித்தவர். தமது சுற்றத்தவர்களுள் ஒருவரான சண்முக ஐயர் என்பவர் சில கீர்த்தனைகளுடன் தொடங்கி நிறைவேற்றாதுவிட்ட சுந்தரி நாடகத்தை வாளபிமன் நாடகம் என்று மாற்றி, எல்லோரும் வியக்கும் வண்ணம் பாடி முடித்தவர்.

[தொகு] இயற்றிய நூற்கள்

[தொகு] நாடகங்கள்

  • வாளபிமன் நாடகம்
  • வயித்திலிங்கக்குறவஞ்சி
  • மலையநந்தினி நாடகம்
  • அலங்காரரூப நாடகம்
  • அதிரூபவதி நாடகம்

[தொகு] சிற்றிலக்கியங்கள்

  • வட்டுநகர்ப்பிட்டி வயற்பத்திரகாளி பேரில் பதிகம், ஊஞ்சற் பிரபந்தம்
  • பருத்தித்துறை கணேசர் பேரில் வெண்பா, ஆசிரியம், கலி, வஞ்சி, மருள் என்னும் நூறு கவிதைகள்

[தொகு] உசாத்துணை

  • John H. Martyn, Notes on Jaffna, American Ceylon Mission Press, தெல்லிப்பழை, Ceylon, 1923, (2ம் பதிப்பு: 2003)