மாயாமாளவகௌளை
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
மாயாமாளவகௌளை என்பது கருணை, பக்தி ஆகிய உணர்ச்சிகளை வெளிப்படுத்தும் இராகம் ஆகும். எப்போதும் பாடத்தகுந்தது. இந்துஸ்தானி இசையில் இதற்கு பைரவ தாட் எனப் பெயர்.
[தொகு] இலக்கணம்
- 15 வது மேளகர்த்தா. அக்னி என அழைக்கப்படும் 3 வது சக்கரத்தில் 3 வது மேளம். இந்த இராகத்தின் பழைய பெயர் மாளவ கௌளை ஆகும். கடபயாதி திட்டத்திற்காக மாயாமாளவகௌளை என நீட்டப்பட்டுள்ளது.
- இந்த இராகத்தில் ஷட்ஜம், சுத்த ரிஷபம், அந்தர காந்தாரம், சுத்த மத்திமம், பஞ்சமம், சுத்த தைவதம், காகலி நிஷாதம் ஆகியன சுரங்கள்.
- இது ஒரு மூர்ச்சனகாரக மேளம். பல ஜன்ய இராகங்களை உடைய பழமையான மேளம்.
- 2 பெயர்களை உடைய ஸ்வரஸ்தானங்கள் இந்த இராகத்தில் வராததாலும், ஜண்டை ஸ்வர்க்கோர்வைகள், தாட்டு ஸ்வரக்கோர்வைகள் மற்றும் துரித கால, சௌக்க காலக் கோர்வைகள் இந்த இராகத்திற்குப் பொருத்தமாக வருவதாலும் மாணவ மாணவியர் முதன் முதலில் பயிற்சி செய்ய வேண்டிய வரிசைகளை இந்த இராகத்தில் நம் முன்னோர்கள் இயற்றியுள்ளனர்.
- இதன் எண்ணை (15) திருப்பிப் போட்டால் இதன் நேர் பிரதி மத்திம மேளமாகிய காமவர்த்தனியின் எண் (51) வரும்.
[தொகு] உருப்படிகள்
- கீதம்: கணநாதா, தாளம்: ரூபகம், ஆக்கம்: பொன்னையாப்பிள்ளை
- கிருதி: துளசிதள, தாளம்: ரூபகம், ஆக்கம்: தியாகராஜ சுவாமிகள்
- கிருதி: ஆடிக்கொண்டார், தாளம்: ஆதி, ஆக்கம்: முத்துத்தாண்டவர்
- கிருதி: தேவ தேவ, தாளம்: ரூபகம், ஆக்கம்: ஸ்வாதித்திருநாள் மகாராஜா