வே. அகிலேசபிள்ளை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.

வே. அகிலேசபிள்ளை (1853 - 1910, திருகோணமலை), ஈழத்துப் புலவர்களில் ஒருவர். பல சிற்றிலக்கியங்களைப் பாடியும் பதிப்பித்தவருமாவார்.

[தொகு] வாழ்க்கைக் குறிப்பு

இவர் திருகோணமலை வேலுப்பிள்ளையின் புதல்வர். குமாரவேலுப்பிள்ளை, சிறிய தந்தை தையல்பாகம்பிள்ளை முதலானோரிடம் தமிழ் இலக்கிய இலக்கணங்களைக் கற்றுத் தேறியவர். பயிற்றப்பெற்ற ஆசிரியராகவும் அரசினர் கல்லூரி அதிபராகவும் பணிபுரிந்தவர். இராசக்கோன், அழகக்கோன் என்பார் இவரது புதல்வர்கள்.

[தொகு] இயற்றிய நூல்கள்

  • திருகோணமலை விசுவநாதசுவாமி ஊஞ்சல்
  • திருகோணமலை சிவகாமியம்மன் ஊஞ்சல்
  • திருகோணமலை பத்திரகாளி ஊஞ்சல்
  • நிலாவெளி சித்திவிநாயகர் ஊஞ்சல்
  • திருக்கோணைநாயகர் பதிகம்
  • திருகோணமலை வில்லூன்றி கந்தசாமி பத்துப் பதிகம்
  • திருகோணமலை விசாலாட்சியம்மை பெருங்கழிநெடில் விருத்தம் (1923)
  • வெருகல் சித்திரவேலாயுதசாமி பேரிற் சொல்லிய அடைக்கலமாலை, ஊசல் (1887)
  • வெருகல் சித்திரவேலாயுதசாமி பேரில் சிறைவிடுபதிகம், நெஞ்சறிமாலை முதலியன.
  • திருக்கோணாசல வைபவம்

[தொகு] பதிப்பித்த நூல்கள்