உமா வரதராஜன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.

உமா வரதராஜன் ஈழத்தின் குறிப்பிடத்தக்க சிறுகதையாசிரியர்களுள் ஒருவர். ரஞ்சகுமார், திருக்கோவில் கவியுவன் ஆகியோருடன் சேர்த்துப் பட்டியலிடப்படுபவர். இவரது சிறுகதைகள் கணையாழி, கீற்று, களம், வீரகேசரி, இந்தியா டுடே ஆகியவற்றில் வெளிவந்துள்ளன. வியூகம் என்ற இதழைத் தொடங்கியவர். அது இரண்டே இதழ்களுடன் நின்று போனது. இவரது பதின்மூன்று சிறுகதைகளின் தொகுப்பு உள்மன யாத்திரை என்னும் நூலாக வெளிவந்துள்ளன. திரைப்படங்கள் தொடர்பில் பத்தி எழுத்துக்களையும் எழுதி வருகிறார்.

ஓர் எழுத்தாளர் பற்றிய இந்தக் குறுங்கட்டுரையைத் தொகுப்பதன் மூலம் நீங்கள் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.