கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
[தொகு] சாவேரி
- இது 15வது மேளகர்த்தா இராகமாகிய, "அக்னி" என்றழைக்கப் படும் 3வது சக்கரத்தின் 3 வது மேளமாகிய மாயாமாளவகௌளையின் ஜன்ய இராகம் ஆகும். எப்போதும் பாடக் கூடிய இவ்விராகம் ஔடவ- சம்பூர்ண இராகம் ஆகும். பழமையான இவ்விராகம் கருணைச் சுவையை வெளிப்படுத்தும்.
- இந்த இராகத்தில் ஷட்ஜம், சுத்த ரிஷபம் (ரி1), அந்தர காந்தாரம் (க3), சுத்த மத்திமம்(ம1), பஞ்சமம், சுத்த தைவதம் (த1), காகலி நிஷாதம் (நி3) ஆகிய சுரங்கள் வருகின்றன.
[தொகு] இதர அம்சங்கள்
- ஆரோகணத்தில் க , நி வர்ஜம். இது உபாங்க இராகம் ஆகும்.
- பல்லவி சேஷய்யர் இந்த இராகத்தை எட்டு மணித்தியால நேரம் பாடியதாக சொல்லப்படுகின்றது
- பஞ்சம வர்ஜ சுரக்கோர்வைகளும், தாட்டு சுரக்கோர்வைகளும் இவ்விராகத்திற்கு அழகைக் கொடுக்கின்றன.
- இவ்விராகத்தின் ஆரோகண, அவரோகண முறையை 22வது மேளத்தில் கையாண்டால் சாலகபைரவியும், 28வது மேளத்தில் கையாண்டால் யதுகுலகாம்போதியும், 29வது மேளத்தில் கையாண்டால் ஆரபியும் கிடைப்பதைக் காணலாம்.
[தொகு] உருப்படிகள்
- வர்ணம் : "ஸரஸூட" - ஆதி - கொத்தவாசல் வெங்கடராமய்யர்.
- கிருதி : "சிறீராஜகோபால" - ஆதி - முத்துஸ்வாமி தீஷிதர்.
- கிருதி : "சம்கரி சம்குரு" - ரூபகம் - சியாமா சாஸ்திரிகள்.
- கிருதி : "முருகா முருகா" - மிஸ்ரசாபு - பெரியசாமித்தூரன்.
- கிருதி : "தரிதாபுலேக" - ஆதி - தியாகராஜர்.