நாகப்பட்டினம்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
நாகப்பட்டினம் இந்தியாவின், தமிழகத்தில் உள்ள ஊரும், நாகப்பட்டினம் மாவட்டத்தின் தலைநகரும் ஆகும். இந்நகரம் நாகை என்றும் அழைக்கப்படுகிறது. இது வங்காள விரிகுடா கடலோரத்தில் உள்ளது. 2005 டிசம்பரில் ஏற்பட்ட சுனாமியால் பெரிதும் பாதிப்புக்குள்ளான பகுதிகளில் நாகப்பட்டினமும் ஒன்றாகும்.
[தொகு] பெயர்க்காரணம்
பண்டை கலத்தில், “நாகநாடு”, “நாகதீழம்” எனும் குறிப்புகள் இவ்வூரைப் பற்றியதே [ஆதாரம் தேவை] . இலங்கையின் புத்த பிட்சுக்களுகக்கு இவ்வூரிடத்தில் நெருங்கிய சம்மந்தம் இருந்தது. குலோத்துங்க சோழனின் ஆனைமங்கல செப்புத் தகடு ஒன்றின்படி, Kasiba Thera என்ற புத்தத் துறவி கி.மு. ஆறாம் நூற்றாண்டில் நாக நாட்டின் புத்தத் துறவிகள் உதவியுடன் இங்குள்ள புத்தக் கோவில் ஒன்றை புதுப்பித்துள்ளார் என்று தெரிய வருகிறது. இந்த "நாகர் அன்னம் விகார்" என்பதே பின்னர் "நானான விகார்" என்றழைக்கப்பட்டது.
நாகப்பட்டினம் சோழப் பேரரசின் பழமைவாய்ந்த துறைமுக நகரங்களுள் ஒன்று. இது "நாவல் பட்டிணம்" - கப்பல்கலின் நகரம் என்றும் அழைக்கப்பட்டது.
[தொகு] மேலும் பார்க்க
நாகப்பட்டினம், 2004 இந்தியப்பெருங்கடல் நிலநடுக்கத்தை தொர்ந்து உருவான ஆழிப்பேரலையினால் மிகுந்த பாதிப்புக்குள்ளான பகுதிகளுள் ஒன்று.