சோ. இளமுருகனார்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
சோ. இளமுருகனார் (1908 - 1975, நவாலி, யாழ்ப்பாணம்) தமிழ் மரபு பேணுவதிலே கண்ணுங் கருத்துமாக விளங்கிய பண்டிதர். அரசியல் சார்பான தமிழுணர்ச்சி மிக்க ஆக்கங்களை ஆக்கியவர். நாடகாசிரியர், கண்டன ஆசிரியர்.
[தொகு] வாழ்க்கைக் குறிப்பு
இவர் நவாலியூர் சோமசுந்தரப் புலவரின் மூத்த புதல்வர். நவாலியூர் சோ. நடராசனின் தமையனார். பண்டிதை பரமேஸ்வரியின் கணவர். வவுனியா பண்டிதர் சு. இராஜ ஐயனார் முதலானோரிடம் தமிழ் கற்றவர்.
[தொகு] இயற்றிய நூல்கள்
- திருத்தண்ணச் சுந்தர புராணம் என்னும் ஈழத்துச் சிதம்பர புராணம். இது பண்டிதை பரமேஸ்வரியாரின் உரையுடன் 1972 இல் வெளிவந்தது.
- உசன்பதித் திருமுருகன் கப்பற்பாட்டு (1961)
- திருமுருகாற்றுப்படைக்கு விளக்கவுரை