முல்லை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.

முல்லை என்பது பண்டைத் தமிழகத்தில் பகுத்து அறியப்பட்ட ஐந்து வகைத் தமிழர் நிலத்திணைகளில் ஒன்றாகும். காடும், காடு சார்ந்த இடங்களும் முல்லை நிலமாகும். செம்மண் பரந்திருத்தலால் முல்லை நிலமானது செம்புலம் எனவும் அழைக்கப்பட்டது.

[தொகு] முல்லை நிலத்தின் பொழுதுகள்

கார் என்னும் பெரும் பொழுதும் மாலை என்னும் சிறுபொழுதும் முல்லை நிலத்துக்குரிய பொழுதுகளாகும்.

[தொகு] முல்லை நிலத்தின் கருப்பொருட்கள்

  • தெய்வம்: திருமால்
  • மக்கள்: இடையர், இடைச்சியர், ஆயர், ஆய்ச்சியர்
  • பறவைகள்: காட்டுக் கோழி
  • விலங்குகள்: மான், முயல்
  • மலர்கள்: முல்லை, பிடா
  • பண்: பறை, முல்லை யாழ்
  • தொழில்: சாமை, வரகு விதைத்தல், களை எடுத்தல், குழலூதல், ஏறு தழுவல், குரவைக் கூத்தாடல்
தமிழர் நிலத்திணைகள்
குறிஞ்சி | முல்லை | மருதம் | நெய்தல் | பாலை
"http://ta.wikipedia.org../../../%E0%AE%AE/%E0%AF%81/%E0%AE%B2/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88.html" இலிருந்து மீள்விக்கப்பட்டது