2007
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
![]() |
இப்பதிவு ஒரு நிகழும் செய்திக் குறிப்பை பதிவு செய்கின்றது. இப்பதிப்பில் இடம்பெறும் தகவல்கள் திடீர், தொடர் மாற்றங்களுக்கு உள்ளாகலாம். |
2007 (MMVII) கிரிகோரியன் நாட்காட்டியில் ஒரு சாதாரண ஆண்டாகும். இது ஒரு (நெட்டாண்டு அல்ல.
தமிழ் நாட்காட்டி: ஏப்ரல் 13 வரை விய ஆண்டும். ஏப்ரல் 14 இலிருந்து சர்வசித்து ஆண்டும் ஆகும்.
திருவள்ளுவர் ஆண்டு: ஜனவரி 15 வரை 2037. ஜனவரி 16 இலிருந்து 2038.
பொருளடக்கம் |
[தொகு] நிகழ்வுகள்
[தொகு] ஏப்ரல் 2007
[தொகு] மார்ச் 2007
- மார்ச் 26 - கொழும்பில் கட்டுநாயக்கா விமானப்படைத் தளம் மீது விடுதலைப் புலிகளின் விமானங்கள் தாக்குதல் நடத்தியன.
- மார்ச் 13: 2007 துடுப்பாட்ட உலகக் கோப்பை போட்டி மேற்கிந்தியத் தீவுகளில் தொடங்கியது.
- மார்ச் 6: இந்தோனீசியாவின் சுமாத்ராவில் இடம்பெற்ற இரண்டு அடுத்தடுத்த நிலநடுக்கங்களில் 70 பேர் வரையில் கொல்லப்பட்டுள்ளனர். இதன் தாக்கம் மலேசியா, மற்றும் சிங்கப்பூர் வரை உணரப்பட்டுள்ளது.
- மார்ச் 1 - இலங்கை விமானப் படையின் பிரி-06 ரக பயிற்சி விமானம் அநுராதபுரம் அருகில் வீழ்ந்து நொருங்கியதில் அதன் பயிற்சியாளரும் பயிற்சி பெற்ற விமானியும் சம்பவ இடத்திலேயே கொல்லப்பட்டனர்.
[தொகு] பெப்ரவரி 2007
- பெப்ரவரி 27: மட்டக்களப்பு நகரில் உள்ள இலங்கை விமானப் படையினரின் விமான ஓடுபாதையை நோக்கி நடத்தப்பட்ட எறிகணை வீச்சில் இலங்கைக்கான அமெரிக்க, இத்தாலியத் தூதுவர்கள் எறிகணையின் சிதறல்களால் காயமடைந்துள்ளனர். விடுதலைப் புலிகள் இச்சம்பவத்திற்கு கவலை தெரிவித்துள்ளனர்.
- பெப்ரவரி 19: இந்தியாவில் இருந்து பாகிஸ்தான் சென்றுகொண்டிருந்த புகைவண்டியில் புதுடில்லியில் இருந்து 100கிமீ தொலைவில் பனிபட் என்ற இடத்தில் இரு குண்டுகள் வெடித்ததில் 64 பேர் வரையில் பலியாயினர்.
- பெப்ரவரி 16: 2000 ஆம் ஆண்டில் தர்மபுரி பேரூந்து தீவைப்பு சம்பவத்தில் மூன்று மாணவிகளை உயிருடன் எரித்துக் கொலை செய்த அ.தி.மு.க. பிரமுகர்கள் மூவருக்கு தூக்குத்தண்டனயும் மேலும் 25 பேருக்கு 7 ஆண்டுகள் சிறைத்தண்டனையும் வழங்கித் தீர்ப்பளிக்கப்பட்டது.
- பெப்ரவரி 11: இங்கிலாந்து அணி முக்கியமான ஒரு-நாள் சர்வதேச கிரிக்கெட் போட்டித் தொடர் வெற்றியை 1997 ஆண்டுக்குப் பின் முதற்தடவையாக வெளிநாடொன்றில் வென்றுள்ளது. சிட்னியில் ஆஸ்திரேலியா அணிக்கெதிரான இறுதிப்போட்டியில் 34 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து வெற்றி பெற்றது.
[தொகு] ஜனவரி 2007
- ஜனவரி 19: இலங்கையின் கிழக்கே மட்டக்களப்பு மாவட்டத்தில் இதுவரை விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த வாகரையைத் தாம் கைப்பற்றிவிட்டதாக இலங்கை இராணுவம் கூறியுள்ளது.
- ஜனவரி 15: முன்னாள் ஈராக்கிய அதிபர் சதாம் ஹுசேனின் உறவினர் பர்சான் இப்ராகிம், முன்னாள் ஈராக்கிய பிரதம நீதிபதி அவாட் ஹமெட் ஆகியோர் 1982 ஆம் ஆண்டில் 148 ஷியைட் முஸ்லிம்கள் கொல்லப்பட்ட நிகழ்ச்சியில் உடந்தையாக இருந்த குற்றத்திற்காகத் தூக்கிலிடப்பட்டனர்.
- ஜனவரி 6: இலங்கை, காலி மாவட்டம் மீட்டியகொட சீனிகம பகுதியில் இடம்பெற்ற பேருந்துக் குண்டுவெடிப்பில் 15 பொதுமக்கள் வரையில் கொல்லப்பட்டும் 40 பேர் வரை படுகாயமும் அடைந்தனர். இது புலிகளின் செயலாகும் என இலங்கை அரசு குற்றஞ்சாட்டியுள்ளது. புலிகள் இதனை மறுத்துள்ளனர்.
- ஜனவரி 5: இலங்கை, கொழும்பிலிருந்து 36கிமீ தொலைவில் நித்தம்புவ என்ற இடத்தில் இடம்பெற்ற பேருந்துக் குண்டுவடிப்பில் 6 பொதுமக்கள் கொல்லப்பட்டும் 50 பேர் வரை காயமடைந்தும் உள்ளனர். இது புலிகளின் செயலாகும் என இலங்கை அரசு குற்றஞ்சாட்டியுள்ளது.
- ஜனவரி 2: இலங்கை, மன்னார் இலுப்பைக்கடவையில் இடம்பெற்ற இலங்கைப் படையினரின் வான் தாக்குதலில் 8 சிறுவர்கள் உட்பட 15 பொதுமக்கள் கொல்லப்பட்டும் 40 பேர் படுகாயமும் அடைந்தனர்.
- ஜனவரி 1 - தென் கொரியாவின் பான் கி மூன் ஐநாவின் புதிய செயலாளர் நாயகம் ஆனார்.