பாஞ்சாலங்குறிச்சி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.

பாஞ்சாலங்குறிச்சி கோட்டையின் இன்றைய தோற்றம்
பாஞ்சாலங்குறிச்சி கோட்டையின் இன்றைய தோற்றம்

பாஞ்சாலங்குறிச்சி தமிழ் நாட்டில் உள்ள ஓர் ஊராகும்.

[தொகு] வரலாறு

ஆதியில் திருநெல்வேலி மாவட்டம் சாலிக்குளத்தை அடுத்துள்ள காட்டில் வேட்டையாடச் சென்றனர் கட்டபொம்மனின் மூதாதையர். அங்கு குறிப்பிட்ட இடத்தில் முயல் திடீரென்று வேட்டை நாய்களை எதிர்த்து விரட்டத் துவங்கியது. வீரமூட்டும் சக்தி அந்த நிலத்திற்கு இருப்பதை அறிந்து வியந்து, தமது பாட்டன் பாஞ்சாலன் நினைவாக பாஞ்சாலங்குறிச்சி என்று பெயரிட்டு கோட்டை கொத்தளங்களுடன் தலைநகர் அங்கு அமைக்கப்பட்டது.

பாஞ்சை மண்ணுக்கு மிக அருகாமையில்தான் கப்பலோட்டிய தமிழன் வ. உ. சிதம்பரம் அவர்கள் பிறந்த ஒட்டப்பிடாரம் உள்ளது.