கோ. நடேசையர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.

கோதண்ராம நடேசையர் (1887 - 1947; தஞ்சாவூர், இந்தியா) மலையத்தின் (இலங்கை) மிக முக்கியமான ஒரு பதிப்பாளர். இந்தியாவில் வசித்த காலத்தில் இன்ஸ்யூரன்ஸ், ஆயில் என்ஜின்கள், வங்கி பரிசோதனை, ஒற்றன் (நாவல்) போன்ற நூல்களை வெளியிட்டார். 1920 முதல் கொழும்பில் வசிக்கத் தொடங்கி தேசநேசன் (1922), தேசபக்தன் (1924), The Citizen (1922), Forward (1926), Estate Labour (1924) முதலிய பத்திரிகைகளை நடாத்தினார். இலங்கை தேசிய காங்கிரசுடன் இணைந்து செயற்பட்டார்.

1930 இல் ஹட்டன் நகரில் குடியேறிய நடேசையர் அங்கு சகோதரி அச்சகத்தை தொடங்கினார். 25.11.1931 இல்தானெழுதிய நீ மயங்குவதேன்? என்ற கட்டுரைத் தொகுப்பை வெளியிட்டார். இவரது மனைவி மீனாட்சி அம்மையார் எழுதிய பாடல்களை இந்தியத் தொழிலாளர் துயரங்கள் எனும் தலைப்பில் இரண்டு பாகங்களாக வெளியிட்டார்.

1933 இல் புபேந்திரசிங்கள் அல்லது நரேந்திரபதியின் நரக வாழ்க்கை எனும் நூலை இரண்டு பாகங்களாக வெளியிட்டார். இந்நூல் இந்தியாவின் பாட்டியாலா மகாராஜா செய்த அக்கிரமங்களை ஆவணப்படுத்தியது. இந்நூலுக்கு இந்தியாவிற்குள் செல்லத் தடை விதிக்கப்பட்டது.

[தொகு] நடேசையர் எழுதி வெளியிட்ட நூல்கள்

  • தொழிலாளர் அந்தரப் பிழைப்பு நாடகம் (1941)
  • இந்தியா இலங்கை ஒப்பந்தம் (1941)
  • தொழிலாளர் சட்ட புத்தகம் (1942)
  • அழகிய இலங்கை (1944)
  • Indo Ceylon Crisis (1941)
  • கதிர்காமம் (1946)

[தொகு] நடேசையர் பதிப்பித்த நூல்கள்

  • மீனாட்சியம்மையாரின் இந்தியர்களது இலங்கை வாழ்க்கையின் நிலைமை (1940)