எல்லோரும் இந்நாட்டு மன்னர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.

1960-ல் வெளி வந்த படம் 'எல்லோரும் இந்நாட்டு மன்னர்'. இந்தப் படத்தின் மூலக்கதையை எழுதியவர் மா. லட்சுமணன் என்பவர். படத்துக்குத் திரைக்கதை, வசனம் கலைஞர் கருணாநிதி எழுதினார். ஜூபிடர் பிக்சர்ஸ் தயாரிப்பான இத்திரைப்படத்தில் கதாநாயகனாக ஜெமினி கணேசன் நடித்தார்.

காலஞ் சென்ற கவிஞர் பட்டுக்கோட்டை கலியாணசுந்தரம் இத்திரைப்படத்தில் எழுதிய புகழ் பெற்ற பாடல் இது -

"என்னருமைக் காதலிக்கு வெண்ணிலாவே-நீ இளையவளா மூத்தவளா வெண்ணிலாவே கண்விழிக்கும் தாரகைகள் வெண்ணிலாவே-உன்னைக் காவல்காக்கும் தோழியரோ வெண்ணிலாவே"


[தொகு] குறிப்பு

இலங்கையரான கவிஞர் ஈழத்து ரத்தினம் இத்திரைப்படத்தின் தலைப்புப் பாடலான 'எல்லோரும் இந்நாட்டு மன்னர்' என்ற பாடலை எழுதிப் புகழ் பெற்றவர்.