இராஜராஜ சோழன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.

பிரகதீஸ்வரர் கோவிலில் இராஜராஜ சோழனின்  சிலை
பிரகதீஸ்வரர் கோவிலில் இராஜராஜ சோழனின் சிலை

சோழரது புகழ் பெற்ற மன்னருள் முதலாம் இராஜராஜன் முதன்மையானவன். கி.பி 985 முதல் கி.பி 1012 வரை சோழ நாட்டைப் பெரும் புகழுடன் ஆட்சி புரிந்தவன் மாமன்னன் இராஜராஜன். இராஜராஜ சோழன் இடைக்கால சோழ மன்னர்களில் மிக உன்னதமானவன். இவன் கி.பி 957 முதல் கி.பி 973 வரை சோழ நாட்டை ஆண்ட சுந்தர சோழனுடைய இரண்டாவது மகனாவான். சுந்தர சோழனுக்கும் சேரத்து வானவன் மாதேவிக்கும் ஐப்பசி திங்கள் சதய நன்னாளில் பிறந்த இவனது இயற்பெயர் "அருண்மொழிவர்மன்". இவன் ஆட்சியின் 3ம் ஆண்டு முதலே ராஜ ராஜ சோழன் எனப்பட்டான் (988) தந்தை இறந்ததும் இவன் உடனடியாகப் பதவிக்கு வரவில்லை. 12 வருடகால உத்தம சோழனின் ஆட்சிக்குப் பின்னரே இவன் ஆட்சிப் பொறுப்பை ஏற்றுக்கொண்டான். விசயாலய சோழன் நிறுவிய சோழ இராச்சியம் இவன் காலத்திலும் இவன் மகன் இராஜேந்திர சோழன் காலத்திலும் மிக உயர்நிலை எய்தியது. இராஜராஜனின் காலம் பிற்காலச் சோழர் வரலாற்றில் மட்டுமன்றித் தென்னிந்திய வரலாற்றிலேயே ஒரு பொற்காலமாகும்.

தஞ்சைப் பெரிய கோயில், ஒரு தோற்றம்
தஞ்சைப் பெரிய கோயில், ஒரு தோற்றம்
சோழ மன்னர்களின் பட்டியல்
முற்காலச் சோழர்கள்
இளஞ்சேட்சென்னி கரிகால் சோழன்
நெடுங்கிள்ளி நலங்கிள்ளி
கிள்ளிவளவன் கொப்பெருஞ்சோழன்
கோச்செங்கண்ணன் பெருநற்கிள்ளி
மாற்றார் இடையாட்சி கி.பி. 200-848
இடைக்காலச் சோழர்கள்
விஜயாலய சோழன் கி.பி. 848-871(?)
ஆதித்த சோழன் 871-907 CE
பராந்தக சோழன் I கி.பி. 907-950
கண்டராதித்தர் கி.பி. 950-957
அரிஞ்சய சோழன் கி.பி. 956-957
சுந்தர சோழன் கி.பி. 957-970
உத்தம சோழன் கி.பி. 970-985
இராஜராஜ சோழன் I கி.பி. 985-1014
இராஜேந்திர சோழன் கி.பி. 1012-1044
இராஜாதிராஜ சோழன் கி.பி. 1018-1054
இராஜேந்திர சோழன் II கி.பி. 1051-1063
வீரராஜேந்திர சோழன் கி.பி. 1063-1070
அதிராஜேந்திர சோழன் கி.பி. 1067-1070
சாளுக்கிய சோழர்கள்
குலோத்துங்க சோழன் I கி.பி. 1070-1120
விக்கிரம சோழன் கி.பி. 1118-1135
குலோத்துங்க சோழன் II கி.பி. 1133-1150
இராஜராஜ சோழன் II கி.பி. 1146-1163
இராஜாதிராஜ சோழன் II கி.பி. 1163-1178
குலோத்துங்க சோழன் III கி.பி. 1178-1218
இராஜராஜ சோழன் III கி.பி. 1216-1256
இராஜேந்திர சோழன் III கி.பி. 1246-1279
சோழர் சமுகம்
சோழ அரசாங்கம் சோழ இராணுவம்
சோழர் கலைகள் சோழ இலக்கியம்
பூம்புகார் உறையூர்
கங்கைகொண்ட சோழபுரம் தஞ்சாவூர்
தெலுங்குச் சோழர்கள்
edit

கடலிலும் தரையிலும் தனது படை வலிமையைப் பெருக்கிய அவன் பல அண்டை நாடுகளின் மீதும் படையெடுத்து, அவற்றைத் தனது கட்டுப்பாட்டின் கீழ்க் கொண்டுவந்தான். பாண்டி நாடு, சேர நாடு முதலிய நாடுகளில் கொடி நாட்டிய அவன், வட திசையிலும் கங்கர்கள், நுளம்பர்கள், சாளுக்கியர்கள் முதலியவர்களையும் வென்றான். கடலில் ஈழம், இலட்சத் தீவுகள் முதலியவற்றையும் கைப்பற்றிக்கொண்டு, கடாரம் வரை படை செலுத்தியதாகத் தெரிகிறது.

நிர்வாகத்துறையிலும் சிறப்பான முறைகளைக் கடைப் பிடித்தான். பேரரசு மண்டலங்களாகவும், அவை மேலு சிறிய வளநாடு எனப்படும் பிரிவுகளாகவும், வளநாடுகள் நாடுகளாகவும் பிரிக்கப்பட்டு அவைகளூடாக முழுப் பேரரசையும் கட்டுப்படுத்தினான். கி.பி 1001 ல் சோழ ராச்சியம் மூழுவதையும் அளப்பித்து அவற்றுக்கு நிலவரியை ஒழுங்குபடுத்தினான் பிற வேந்தர் படையெடுப்பு இவன் காலத்தின் முழுவதும் நடைபெறவேயில்லை இதன் மூலம் மக்கள் எத்தகைய இன்னலுமின்றி வாழ்ந்தார்கள். மிக பயிற்சி பெற்ற தரைப்படை,கடற்படை வைத்திருந்தான்

இராஜராஜனுக்குப் பல மனைவியர்கள் இருந்தனர். இவர்களுள் உலகமாதேவியே பட்டத்தரசி ஆவாள். வானவன் மாதேவியின் மகனே பெருவீரனான முதலாம் ராஜேந்திரன் ஆவான். இது தவிர இரண்டு பெண்கள் பற்றிய குறிப்பக்கள் உள்ளன. முத்தவள் மாதேவடிகள் மற்றவள் குந்தவை. ஏனையோர் குறித்து கல்வெட்டு குறிப்புகள் இல்லை

சமயம், கலை மற்றும் கட்டிடக்கலைத் துறைகளிலும் அவன் பிரமிக்கத்தக்க அளவு பணிகள் ஆற்றியுள்ளான். தஞ்சைப் பெரிய கோயில் என அழைக்கப்படும், பிருஹதீஸ்வரர் கோயில், மேற்படி துறைகளில் அவனுடைய ஈடுபாட்டுக்குத் தெளிவான எடுத்துக்காட்டாகும்.

[தொகு] இராஜராஜன் பற்றிய புனைவு ஆக்கங்கள்

  1. இராஜராஜ சோழன் - கலைமாமணி ஆர்.ராமநாதன் என்பவரால் எழுதப்பட்ட நாடக பிரதி.இந் மேடை நாடகபிரதியே பின்னர் சிவாஜி கணேசன் நடிப்பில் திரைப்படமாக எடுக்கப்பட்டது.இந்நாடகப்பிரதி நூல்வடிவாக பிரேமா பிரசுரம் சென்னை-24 ஆல் வெளியிடப்பட்டுள்ளது.தென்னிந்திய பல்கழைக்கழகங்களில் அங்கீகரிக்கப்பட்ட Study Material ஆகவும் இந்நூல் காணப்படுகின்றது.
  2. பொன்னியின் செல்வன் - கல்கி கிருஷ்ணமூர்த்தியால் எழுதப்பட்ட வரலாற்று நாவல் இதில் அருண்மொழிவர்மன் எனும் இயற்பெயருடன் இராஜ இராஜனின் இளமைப்பருவம் பற்றிய தகவல்களுடன் நாவல் எழுதப்பட்டுள்ளது.
  3. உடையார் - பாலகுமாரனால் எழுதப்பட்டது.இராஜ இராஜன் பேரரசனான பின்னர் நடந்த நிகழ்வுகளைப்பற்றி குறிப்பிடுகின்றது.
  4. காந்தளூர் வசந்தகுமாரன் கதை - சுஜாதாவால் எழுதப்பட்டது.இராஜ இராஜன் காலத்தில் காந்தளூர் சாலையில் இடம்பெற்ற போர் பற்றிய நிகழ்வுகளை குறிக்கின்றது

[தொகு] இவற்றையும் பார்க்கவும்

ஏனைய மொழிகள்