பரமஹம்ஸ நித்யானந்தர்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
பரமஹம்ஸ நித்தியானந்தர் (பிறப்பு ஜனவரி 1,1978) தமிழ்நாட்டில் திருவண்ணாமையில் பிறந்தார். இளம் வயதில் பக்தி மார்க்கத்தினையும், சிறு வயதில் யோகமார்க்கத்தினையும், தந்திரமார்க்கத்தினையும் கற்றுத்தேர்ந்தவராவார்.
தனது பன்னிரண்டாம் வயதில் பவளக் குன்றில் 'உடல் தாண்டி அனுபவம்' எனும் பேரானந்த நிலையினை முதல் ஆன்மீக அனுபவமாக அடந்தார். பதினேழாம் வயதில் வீட்டை விட்டு வெளியேறி பரிவராஜக வாழ்க்கையினைத் தொடர்ந்தார்.
இரண்டாயிரம் மைல்களுக்கு மேல் பாதயாத்திரையாக நடந்து சென்று இந்தியாவின் எல்லா ஆன்மீக நிறுவனங்களைப் பற்றியும், அவற்றின் செயல்பாடுகள் பற்றியும் ஆராய்ந்து தேர்ந்தார். திபெத் வரை சென்ற பரஹம்ஸர் இமயமலையில் பல கடுமையான தவ நிலையின் பின்னர் ஞான அனுபூதி எனும் பேரானந்த நிலையினை ஜனவரி 1, 2000 ஆண்டு அடைந்ததாகவும், தன்னுள் நிகழ்ந்து கொண்டிருக்கும் நித்திய ஆனந்தம் அனைத்து மனிதர்களிற்கும் கிடைக்க வேண்டுமென்பதற்காக தியானபீடம் என்ற சேவை நிறுவனத்தினை ஜனவரி 1, 2000 ஆம் ஆண்டில் ஆரம்பித்தும் வைத்தார். இந்நிறுவனம் 800 கிளைகளுடன் 21 நாடுகளிலும் பரந்து விரிந்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.