சுரதா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.

சுரதா (???? - 2006) என்னும் புலவரின் இயற்பெயர் இராசகோபாலன். இவர் மன்னார்குடியில் பிறந்து வளர்ந்தவர். புரட்சிக் கவிஞர் பாரதிதாசனிடம் கொண்ட பற்றுதலால் பாரதிதாசனின் இயற்பெயராகிய சுப்புரத்தினம் என்பதின் அடிப்படையில் தன் பெயரை சுப்புரத்தினதாசன் என்று மாற்றிக்கொண்டார். தன் மாற்றுபெயரின் சுருக்கமாக சுரதா என்னும் பெயரில் பல மரபுக்கவிதைத் தொகுப்புகள் தந்தவர். செய்யுள் மரபு மாறாமல் எழுதிவந்த இவர் உவமைகள் தருவதில் தனிப்புகழ் ஈட்டியவர். இதனால் இவரை உவமைக் கவிஞர் என்று சிறப்பித்துக் கூறுவர்.

[தொகு] சுரதாவின் படைப்புகள்

  • தேன்மழை (கவிதைத் தொகுப்பு)
  • துறைமுகம் (பாடல் தொகுப்பு)
  • சிரிப்பின் நிழல் (பாடல் தொகுப்பு)
  • சுவரும் சுண்ணாம்பும் (பாடல் தொகுப்பு)
"http://ta.wikipedia.org../../../%E0%AE%9A/%E0%AF%81/%E0%AE%B0/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%BE.html" இலிருந்து மீள்விக்கப்பட்டது