உதகமண்டலம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.

உதகமண்டலம்

உதகமண்டலம்
மாநிலம்
 - மாவட்டங்கள்
தமிழ்நாடு
 - நீலகிரி மாவட்டம்
அமைவிடம் 11.40° N 76.70° E
பரப்பளவு
 - கடல் மட்டத்திலிருந்து உயரம்
  ச.கி.மீ

 - 2213 மீட்டர்
கால வலயம் IST (ஒ.ச.நே.+5:30)
மக்கள் தொகை (2001)
 - மக்களடர்த்தி
93,921
 - /ச.கி.மீ
குறியீடுகள்
 - அஞ்சல்
 - தொலைபேசி
 - வாகனம்
 
 - 643 00x
 - +0423
 - TN43


ஊட்டி என்றும், உதகை என்றும் அழைக்கப்படும் உதகமண்டலம் (ஆங்கிலம்: Udhagamandalam) தென்னிந்திய மாநிலமான தமிழத்தில் நீலகிரி மலையில் அமைந்த ஊராகும். இதுவே நீலகிரி மாவட்டத்தின் தலைநகரமுமாகும்.

இது கடல் மட்டத்திலிருந்து 7347 அடி (2239 மீ) உயரத்தில் உள்ளதால் குளுமையாக உள்ளது.

[தொகு] வரலாறு

12-ஆம் நூற்றாண்டில் நீலகிரி மலையில் ஹொய்சாளர்களின் ஆட்சி புரிந்தனர். பின்னர், திப்பு சுல்தானின் மைசூர் இராஜ்ஜியத்தில் ஒரு பகுதி ஆன இப்பகுதி 18-ஆம் நூற்றாண்டில் ஆங்கிலேயரின் கைக்கு மாறியது.

அப்போது கோயம்புத்தூர் மாகாணத்தில் ஆளுனராக இருந்த ஜான் சல்லிவன் என்பவர், இப்பகுதியின் குளுமையான தட்பவெட்ப நிலையை விரும்பி இங்கிருந்த தோடா, இரும்பா, பதகா பழங்குடியினரிடம் இருந்து நிலங்களை வாங்கினார்.

நீலகிரி மலை இரயில்
நீலகிரி மலை இரயில்

ஆங்கிலேயரின் ஆட்சியில் இம்மலைப் பிரதேசம் நல்ல வளர்ச்சியைக் கண்டது. வளைந்து நெளிந்து செல்லும் சாலைகளும், நீலகிரி மலை இரயில் பாதையும் அமைக்கப்பட்டது. இதன் காரணமாக உதகை, ஆங்கிலேயருக்கு கோடைக் கால தலைநகரமாக விளங்கியது.

உதகையில் உள்ள ஒரு தேயிலைத் தோட்டம்
உதகையில் உள்ள ஒரு தேயிலைத் தோட்டம்