திருவாரூர் தியாகராசசுவாமி கோயில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.

திருவாரூர் தியாகராசசுவாமி கோயில் பாடல் பெற்ற தலங்களில் ஒன்றாகும். அப்பர், சம்பந்தர். சுந்தரர் மூவரதும் பாடல் பெற்ற இத்தலம் தஞ்சை மாவட்டத்தில் அமைந்துள்ளது. இத்தலத்தில் மனுநீதிச் சோழனுக்கு அருள் கிடைத்தது என்பது தொன்நம்பிக்கை. பரவையார் உதித்த தலம் எனப்படுகிறது.