செயங்கொண்டார்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.

செயங்கொண்டார் என்னும் புலவர் சங்க இலக்கியமான கலிங்கத்துப்பரணியைப் பாடியவர். முதலாம் குலோத்துங்கனுடைய அவைக்களப் புலவராக இருந்தவர். முதன் முதலில் பரணி பாடியவர் இவரே. இவரது வரலாறு அறியப்படவில்லை. இவரது காலம் கி.பி. 12ஆம் நூற்றாண்டின் முற்பகுதியாக இருக்கலாம் என அறியப்பட்டுள்ளது.

பிற்காலப் புலவரான பலபட்டடைச் சொக்கநாதர் "பரணிக்கோர் செயங்கொண்டான்" என்று சிறப்பித்துப் பாடியுள்ளார். ஒட்டக்கூத்தரும் "தெந்தமிழ்த்தெய்வப் பரணி" என்று இவர் பாடிய பரணியைச் சிறப்பித்துள்ளார்.

புகார் நகர வணிகப் பெருமக்களைச் சிறப்பித்து இசை ஆயிரம் என்ற நூலையும் பாடியுள்ளார். அத்துடன் உலாமடல் என்னும் நூலையும் பாடியுள்ளார்.