கோணங்கி
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
கோணங்கி (கோவில்பட்டி, தூத்துக்குடி மாவட்டம்) தமிழ் எழுத்தாளர். கோணங்கியின் இயற்பெயர் இளங்கோ. சுதந்திர போரட்டத்தில் முக்கிய பங்கு வகித்த மதுரகவி பாஸ்கரதாசின் பேரன் இவர்.
தமிழ் நவீன கதையுலகின் தனித்துவமான குரல் கோணங்கியுடையது. கவிதைக்கு மிக நெருக்கமாக உள்ள உரைநடையும், அரூபங்களை மொழியில் சாத்தியமாக்கிக் காட்டும் விந்தையும் கொண்டது இவரது கதையுலகம். கல்குதிரை என்ற சிற்றிதழின் ஆசிரியர்.
இவரது பாழி, பிதுரா என்ற இரண்டு நாவல்களும் தமிழ் நாவலுக்கென்ற மரபான தளங்களை தவிர்த்து, புதிய கதை சொல்லும் முறையில் எழுதப்பட்டு மிகுந்த கவனம் பெற்றவை.
[தொகு] இவரது நூல்கள்
- மதினிமார்கள் கதை (சிறுகதை தொகுப்பு 1986)
- கொல்லனின் ஆறு பெண் மக்கள் (சிறுகதை தொகுப்பு 1989)
- பொம்மைகள் உடைபடும் நகரம் (சிறுகதை தொகுப்பு 1992)
- பட்டுப்பூச்சிகள் உறங்கும் மூன்றாம் சாமம் (சிறுகதை தொகுப்பு 1994)
- உப்புக் கத்தியில் உறையும் சிறுத்தை (சிறுகதை தொகுப்பு 1997)
- பாழி (2000)
- பிதிரா (2004)