ஸ்ரீமத் வேங்கடரமண பாகவதர்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
ஸ்ரீமத் வேங்கடரமண பாகவதர் சமஸ்கிருதப் புலமையும் இசையில் மிகுந்த தேர்ச்சியும் உடையவராய் விளங்கியவர்.
ஸ்ரீ வேங்கடரமணர் கி.பி.1781ல் பிறந்து 1889 வரை நூற்றியெட்டு ஆண்டுகள் வாழ்ந்தார். தஞ்சை மாவட்டம் அய்யம்பேட்டையில் இவரது ஜெயந்திவிழா ஸவ்ராஷ்ட்ர மக்களால் மிக விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது.
ஸத்குரு தியாகப்பிரம்மத்தையும் வேங்கடரமண பாகவதரையும் பிணைத்திருந்த குரு ஸிஷ்ய உறவு மகத்துவம் வாய்ந்தது.
வேங்கடரமணர் ஸவ்ராஷ்ட்ர மொழியில் நிறையப் பக்திரஸக் கீர்த்தனைகள் இயற்றியுள்ளார். தமது தெலுங்குக் கிருதிகள் அனைத்திலும் இறுதியில் 'தியாகராஜ' என்ற முத்திரையிட்டுக் குருகாணிக்கை செலுத்தியுள்ளார்.
கி.பி.1943ல் ஸ்ரீ தியாகராஜ ஸ்வாமிகள் பயன்படுத்திய பாதுகை, பாராயணம் செய்த தெலுங்கு பாகவதம், கையெழுத்து ஏட்டுச் சுவடிகள், ஸ்ரீ வேங்கடரமணபாகவதரின் பாதுகைகள், பூஜா பாத்திரங்கள், அவர் இயற்றிய கீர்த்தனைகள், புதிய வர்ணங்கள், ஸ்வர ஜதிகள் முதலியவை அடங்கிய அற்புத பொக்கிஷமான ஏட்டுச் சுவடிகள் மதுரை ஸவ்ராஷ்ட்ர ஸபையைச் சேர்ந்த வேங்கடரமண மந்திரத்தில் பாதுகாக்கப்பட்டு வருகின்றன.