பெனிற்ரோ முசோலினி
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
பெனிரோ அமில்கார் அன்டிரியா முசோலினி (ஞூலை 29, 1883 - ஏப்ரல் 28, 1945) என்ற முழுப்பொயர் கொண்ட முசோலினி இத்தாலிய நாட்டுக்கு 1922 - 1943 காலப்பகுதியில் தலைமை வகித்தவர். இத்தாலிய அரசை பாசிச அரசாக மாற்றி ஏகபோக சர்வதிகார ஆட்சியை முசோலினி நடத்தினார். அரச கட்டமைப்புகளையும், தனியார் நிறுவனங்களையும், ஊடகங்களையும், திறனாளர்களையும் தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்து வன்முறை, பரப்புரை, ஏகபோக அணுகுமுறை ஊடாக பாசிச அரசை உருவாக்கி பேணினார். கிட்லருடன் சேர்ந்து உலக யுத்தம் இரண்டில் நேச நாடுகளுக்கு எதிராக போரிட்டு தோற்று இறந்தார்.