லூயி பாஸ்ச்சர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.

லூயி பாஸ்ச்சர்
பிரெஞ்ச் [நுண்ணுயிர் ஆய்வாளர்]] மற்றும் வேதியியல் ஆய்வாளர்
பிறப்பு டிசம்பர் 27, 1822
டோல், ஷுரா, பிரான்ஸ்
இறப்பு செப்டம்பர் 28, 1895
[செயின்ட்-குளோடு, ஹோ-டி-சீன், டோல், ஷூரா


லூயி பாஸ்ச்சர் (டிசம்பர் 27 1822 – செப்டம்பர் 28 1895) ஒரு புகழ்பெற்ற பிரெஞ்ச் நுண்ணியிர் ஆய்வாளரும் வேதியியல் ஆய்வாளரும் ஆவார். இவர் செய்த நடத்திய ஆய்வுகளின் பயனாய் பல நோய்கள் நுண்ணியிரிகளால் ஏற்படுவது என்று நிறுவினார். இவர்தான் முதன்முதலாக வெறிநாய் முதலிய வெறிநோய் ஏறிய விலங்களின் கடியில் இருந்து காக்க ஒரு தடுப்பூசி மருந்தைக் கண்டுபிடித்தார். பாலும், குடிக்கும் கள்ளும் எவ்வாறு கெட்டுப் போகாமல் இருப்பது என்பதற்காக இவர் முன்வைத்த முறை இன்று பாஸ்ச்சரைசேஷன் என்னும் பெயரில் பெருவழக்காக உள்ளது. இம்முறையில் பாலைச் சூடு செய்து நுண்ணுயிரிகளைக் கொல்வதால் பால் கெடாமல் இருக்கின்றது. நுண்ணியிரி இயலை நிறுவிய மூவருள் இவர் ஒருவராகக் கருதப்படுகின்றார். மற்றவர்கள் ஃவெர்டினாண்ட் கோன்(Ferdinand Cohn) அவர்களும் ராபர்ட் கோஃக் (Robert Koch)