ஜோர்ஜ் சந்திரசேகரன்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
ஜோர்ஜ் சந்திரசேகரன் (பி 1940) இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தில் அறிவிப்பாளராகவும், செய்தி வாசிப்பாளராகவும், நாடகத் தயாரிப்பாளராகவும் பணி புரிந்தவர். கொழும்பில் பிறந்த இவர் கொட்டாஞ்சேனை சென்ற். பெனடிக்ட் கல்லூரியில் பயின்றவர். 1968ல் இருந்து 1996ல் ஓய்வு பெறும் வரை அறிவிப்பாளராக செயற்பட்டார்.
[தொகு] கலை,இலக்கியத்துறை
வானொலி, தொலைக்காட்சி,மேடை நாடகங்களில் நடித்தவர். எழுதி இயக்கியிருக்கிறார். இலங்கை வானொலி தேசிய சேவையில் ஒலிச்சித்திரம் என்ற வாராந்த நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கியிருக்கிறார். தினகரன், வீரகேசரி, செய்தி போன்ற பத்திரிகைகளில் சிறுகதைகள் எழுதியவர். சஞ்சிகைகளில், ஓவியங்கள், கார்ட்டூன் தொடர்கள் வரைந்தவர். மேனாட்டு இலக்கியங்களில் மிகுந்த புலமை உள்ளவர்.
[தொகு] எழுதிய நூல்கள்
- ஜோர்ஜ் சந்திரசேகரனின் சிறுகதைகள் (1995-ம் ஆண்டுக்கான சாஹித்ய விருது பெற்றது)
- அபத்த நாடகம் ( மொழிபெயர்ப்பு நாடகம்)
- ஒரு சருகுக்குள்ளே கசியும் ஈரங்கள் ( வாழ்க்கை அனுபவங்கள்)