சித்தூர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.

சித்தூர் இந்தியாவின் ஆந்திர மாநிலத்திலுள்ள ஒரு மாவட்டத்தின் பெயரும் தலைநகரின் பெயரும் ஆகும். இவ்வூரிலுள்ள திருப்பதி மற்றும் காளஹஸ்தி போன்றவை மிகப் புகழ் பெற்றவை. இம்மாவட்டத்தின் மக்கள்தொகை 1991-ஆம் ஆண்டு கணக்கெடுப்பின் படி 133,462 ஆகும். இது மாங்காய்கள், தானியங்கள், கரும்பு ஆகியவற்றுக்கான முக்கியமான சந்தையாகும். இங்கு எண்ணெய் வித்து மற்றும் அரிசி ஆலைகளும் அமைந்துள்ளன.

[தொகு] சித்தூர் மாவட்டம்

இதன் வடமேற்கில் அனந்தபூர் மாவட்டமும் , வடக்கில் கடப்பா மாவட்டமும், வடகிழக்கில் நெல்லூர் மாவட்டமும், தமிழ்நாடு மாநிலம் தெற்கிலும் கர்நாடக மாநிலம் தென்கிழக்கிலும் எல்லைகளாக அமைந்துள்ளன. இமாவட்டத்தின் பரப்பளவு 15, 359 ச.கி.மீ.களாகும்.

1905-ஆம் ஆண்டு வட ஆற்காடு, கடப்பா, நெல்லூர் மாவட்டங்களில் இருந்து சித்தூர் மாவட்டம் உருவாக்கப்பட்டது.

[தொகு] சித்தூர் மாவட்டத்தில் உள்ள குறிப்பிடத்தக்க நகரங்கள்

  • புத்தூர்
  • காளஹஸ்தி
  • இரேணிகுண்டா
  • திருப்பதி
  • சித்தூர்
  • குப்பம்
  • மதனப்பள்ளி

[தொகு] வெளி இணைப்புகள்

சித்தூர் பற்றிய வலைத்தளம்