என். டி. ராஜ்குமார்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.

என். டி. ராஜ்குமார் (நாகர்கோவில், தமிழ்நாடு) தமிழ் நவீன கவிதையில் தலித் கவிதைகளை முன்னெடுத்துச்செல்லும் கவிஞராக அறியப்படுகிறார். தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்றத்தில் செயல்படுபவர். 'வந்தனம்' என்னும் நாடகக்குழுவை நடத்திவருகிறார்.

இவரது கவிதைகள் பிரெஞ்சு மற்றும் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. தலித் விடுதலைக்கான கோபமும் போராட்ட குணத்தின் வெளிப்பாடாகவும் பல கவிதைகள் எழுதியுள்ளார். இவரது கவிதைத் தொகுப்புகளில் காணப்படும் மாந்திரீக மொழியின் உக்கிரம் நிரம்பிய எண்ணற்ற கவிதைகளால் தற்போது எழுதும் கவிஞர்களில் தனக்கென தனியான எழுத்துப் பாணியும் நவீன கவிதைகளில் அதிகம் பயன்படுத்தப்பட்டிராத மாந்திரீக மொழியும் கைவரப்பெற்ற கவிஞராக அறியப்படுகிறார் என். டி. ராஜ்குமார். 'தெறி' என்ற கவிதைத் தொகுப்பு நாடகமாக்கப் பட்டதாகக் தெரிகிறது.

[தொகு] இவரது கவிதைத்தொகுப்புகள்

  • தெறி (1997)
  • ஒடக்கு (1999)
  • ரத்தசந்தனப் பாவை (2001)
  • காட்டாளன் (2003)
  • கல் விளக்குகள்

[தொகு] வெளி இணைப்புகள்