திரு. வி. கலியாணசுந்தரனார்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
திருவாரூர் விருத்தாசலம் கலியாணசுந்தனார் (திரு. வி. க., ஆகஸ்ட் 26, 1883 - செப்டம்பர் 17, 1953) அரசியல், சமுதாயம், சமயம் எனப் பல துறைகளிலும் ஈடுபாடுகொண்டு பல நூல்களை எழுதிய தமிழறிஞர். சிறந்த மேடைப் பேச்சாளர்.
[தொகு] வாழ்க்கைச் சுருக்கம்
காஞ்சிபுரம் மாவட்டத்துச் சைதாப்பேட்டை வட்டத்துத் துள்ளம் என்னும் சிற்றூரில் விருத்தாசலம் - சின்னம்மா தம்பதிகளுக்கு ஆறாவது மகவாகப் பிறந்தார்.
பள்ளிப்படிப்பிற்குப் பின்னர் நா. கதிரவேற்பிள்ளை போன்ற தமிழறிஞர்களிடம் பாடம் கேட்டுச் சிறந்த புலமை பெற்றார். பள்ளி ஆசிரியராகப் பணியைத் தொடங்கியவர் பின்னர் தேசபக்தன், திராவிடன், நவசக்தி போன்ற பத்திரிகைகளில் ஆசிரியராக இருந்து நாட்டு விடுதலைக்குத் தொண்டாற்றினார்.
தொழிற்சங்கத்தைத் தோற்றுவித்துத் தொழிலாளர்களின் உரிமைக்கும் முன்னேற்றத்திற்கும் பாடுபட்டார். சிறந்த மேடைப் பேச்சாளரான இவர் அரசியல், சமுதாயம், சமயம் எனப் பல துறைகளிலும் ஈடுபாடுகொண்டு பல நூல்களை எழுதினார்.
[தொகு] எழுதிய நூற்கள்
- பெண்ணின் பெருமை
- மனித வாழ்க்கையும் காந்தியடிகளும்
- இந்தியாவும் விடுதலையும்
- தமிழ்த் தென்றல்
- சீர்திருத்தம் அல்லது இளமை விருந்து
- முருகன் அல்லது அழகு
- பொதுமை வேட்டல்