கிழக்கிலங்கைப் பல்கலைக்கழகம்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
பொருளடக்கம் |
[தொகு] வரலாறு
கிழக்குப் பல்கலைக் கழகமானது இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தில் வந்தாறுமூலையில் அமைந்துள்ளது. இதன் ஓர் வளாகம் திருகோணமலையில் அமைந்துள்ளது. இப்பல்கலைக் கழகத்திற்கான மருத்துவபீடத்தை ஆரம்பிக்கும் அனுமதி பல்கலைக் கழக மானிய ஆணைக்குழுவினால் வழங்கப் பட்டுள்ளது.
1960 பதுகளில் ஓர் தொகை நிலப்பரப்பை திருகோணம்லை நிலாவெளியில் வாங்கி கிழக்கிலங்கையில் பல்கலைக் கழகம் ஒன்றை நிறுவுவதற்கு சிலோண் பல்கலைக் கழகப் பேராசிரியர்கள் முயற்சித்தபோதும் போதுமான நிதியுதவி கிடைக்காமையால் கைவிடப்பட்டது.
கிழக்குப் பல்கலைக் கழகமானது பகுதியானது ஒப்பீட்டு ரீதியில் சண்டையிலீடுபடுபவர்களின் தலையீடு குறைவாகவேயுள்ளது. இப்பல்கலைக் கழகத்தில் ஆங்கில மற்றும் தமிழ் மொழியில் பாடங்கள் நடத்தப் படுகின்றன.
2001 ஆம் ஆண்டில் சுவாமி விபுலானந்த இசை நடனக் கல்லூரியும் இதன் ஒருபாகமாக்கப்பட்டது.
இப்பல்கலைக் கழக உபவேந்தராக கலாநிதி ரவீந்திரநாத் கடமையாற்றுகின்றார். இவர் கொழும்பில் இனம் தெரியாத ஆயுதாரிகளால் கடத்தப்பட்டுப் பலமாத காலமாகியும் இவரது நிலை சரியாகத் தெரியவில்லை. உபவேந்தர் பதவியில் இருந்து விலகினால் விடுவிக்கப்படுவார் என்று கூறு உபவேந்தர் பதிவியில் இருந்து விலகுவதாக் கூறியும் இன்னமும் விடுவிக்கப்படவில்லை.
[தொகு] அமைவிடம்
இப்பல்கலைக் கழகத்தின் பிரதான வளாகம் ஆனது செங்கலடி நகரத்திற்கு அருகே வந்தாறுமூலையில் அமைந்துள்ளது. இது சுற்றுலாப் பயணிகளைக் கவரும் பாசிக்குடாப் பகுதிக்கு சுமார் 10 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது.
[தொகு] பீடங்கள்
- கலைப் பீடம்
- விஞ்ஞான பீடம்
- விவசய பீடம்