உரிச்சொல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.

உரிச்சொல் என்பது பல்வேறு வகைப்பட்ட பண்புகளையும் உணர்த்தும் சொல்லாகும். பெயர்ச் சொற்களையும் வினைச் சொற்களையும் விட்டு நீங்காதனவாய் வரும்.

உரிச்சொல் இருவகைப்படும்

  • ஒரு பொருள் குறித்த பல சொல்
  • பல பொருள் குறித்த ஒரு சொல்

எ.கா

ஒரு பொருள் குறித்த பல சொல்

  • சாலப் பேசினான்.
  • உறு புகழ்.
  • தவ உயர்ந்தன.
  • நனி தின்றான்.

இந்நான்கிலும் வரும், சால, உறு, தவ, நனி என்னும் உரிச்சொற்கள் மிகுதி என்னும் ஒரு பொருளை உணர்த்துவன.

பல பொருள் குறித்த ஒரு சொல்

  • கடிமனை - காவல்
  • கடிவாள் - கூர்மை
  • கடி மிளகு - கரிப்பு
  • கடிமலர் - சிறப்பு

இந்நான்கிலும் வரும் கடி என்னும் உரிச்சொல் - காவல், கூர்மை, கரிப்பு, சிறப்பு முதலிய பல பொருள்களைக் உணர்த்தும்

[தொகு] இவற்றையும் பார்க்கவும்