சிங்களப் புத்தாண்டு
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
சிங்களவர் பண்பாடு |
|
சிங்கள மொழி |
|
தொகு |
சிங்களவர்கள் ஏப்ரல் 13 (அல்லது ஏப்ரல் 14 ஆம் திகதியை (அதாவது சித்திரை முதலாம் நாள்) சிங்களப் புத்தாண்டு நாளாக கொண்டாடுகின்றார்கள். சிங்கள மொழியில் அழுத் அவுருது என்று கூறுகிறார்கள் (அழுத் = புது, அவுருது = ஆண்டு, வருடம்). இலைதுளிர் காலத்தின் அரும்பில் இந்த புத்தாண்டு தொடங்குகின்றது. காலையில் எழுந்து நீராடி, புதிய வெள்ளை ஆடை அணிந்து, புத்தர் விகாரங்களுக்கு (பௌத்த விகாரைகளுக்கு) சென்று வழிபடுவர். கிரிபத்தும் (வெண் பொங்கல்) பிற பலகாரங்களும் செய்து, உறவினர் நண்பர்களுடன் பகிர்ந்து உண்டு களிப்பர். பெரியோரை மதித்து கை விசேடம்விளக்கம் தேவை பெறுவர். சிறுவர்கள் வெடி கொளுத்தி மகிழ்வார்கள்.