மகிந்த ராஜபக்ச

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.

மஹிந்த ராஜபக்ஷ
மகிந்த ராஜபக்ச

இலங்கையின் 6வது சனாதிபதி
பதவியில் உள்ளார்
பதவிக் காலம் தொடங்கிய நாள்
நவம்பர் 19, 2005
முன்னிருந்தவர் சந்திரிகா குமாரதுங்க

பிறப்பு நவம்பர் 18, 1945
வீரகெட்டிய, அம்பாந்தோட்டை, இலங்கை
கட்சி இலங்கை சுதந்திரக் கட்சி
வாழ்கைத் துணை சிறாந்தி ராஜபக்ஷ
சமயம் பௌத்தம்

பேர்ஸி மஹிந்த 'மகிந்த' ராஜபக்ச (பிறப்பு நவம்பர் 18, 1945), இலங்கை சனநாயக சோஷலிசக் குடியரசின் ஆறாவது அதிபர் (இலங்கைத் தமிழ் சனாதிபதி) 13ஆவது இலங்கை பாராளுமன்றத்தின் பிரதம மந்தரியும் ஆவார். இலங்கையின் ஐந்தாவது சனாதிபதியாக [ஆதாரம் தேவை] நவம்பர் 19, 2005 அன்று பதவி ஏற்பு செய்தார். ஏப்ரல் 6, 2005 முதல் இலங்கைப் பிரதம மந்திரியாக பதவிப்பொறுப்பு வகிக்கிறார். இவர் இலங்கை சுதந்திரக் கட்சியின் முக்கிய உறுப்பினர்களில் ஒருவர். ஷிராந்தி ராஜபக்ச இவரின் மனைவியாவார். இவரது இரண்டாவது மகன் இலங்கைக் கடற்படையில் இணைந்துள்தாகப் பெரிதும் பிரச்சாரம் செய்யப்பட்ட போதும் [1] அரச செலவில் இலண்டனில் மேற்படிப்பிற்காக அனுப்பட்டார்.

பொருளடக்கம்

[தொகு] ஏனைய தகைமைகள்

பலஸ்தீனுடனான ஒருமைப்பாட்டிற்கான இலங்கை சபையின் தலைவர்[ஆதாரம் தேவை].
மல்வத்தை பீடத்தினால் ஸ்ரீரோகண ஜனரஞ்சக என்ற பட்டம் வழங்கிக் கௌரவிக்கப்பட்டுள்ளார்[ஆதாரம் தேவை].

[தொகு] மனித உரிமை மீறல்கள்

இலங்கையின் அதிபரும் பாதுகாப்புத்துறை அமைச்சருமாகிய மஹிந்த ராஜபக்சா தமிழர்களுக்கு எதிரான பல மனித உரிமை மீறல்களைப் புரிந்துள்ளார் என பல சர்வதேச அமைப்புக்கள் குற்றஞ்சாட்டியுள்ளன.

  1. 2007 பெப்ரவரி இல் 3 சிங்கள ஊடகவியலாளர்கள் தனக்கு எதிரான கருத்துக்களைத் தெரித்ததற்கா இராணுவத்தின் உதவியுடன் கடத்தப்பட்டனர்.[2]
  2. 2006 ஏப்ரல் மாதம், திருகோணமலை நகரில் நடந்த தமிழர்களுக்கு எதிரான கலவரத்தை அடக்குவதற்கு வேண்டிய எவ்விதமான நடவடிகையையும் எடுக்கவில்லை என மனித உரிமைகள் கண்காணிப்பு ராஜபக்சாவுக்கு குற்றம் சாட்டியது. அது இச்சம்பவம் பற்றிய உறுதியான அறிகையையோ இப்பகுதியில் சட்டத்தை நிலை நாட்ட எந்த நேரடி தலையீட்டையும் ராஜபக்சா செய்ய தவறிவிட்டார் என குற்றம் சாட்டியது.[3]
  3. மேலும், 2006 ஏப்ரல் மாதம் எல்லையற்ற ஊடகவியலாளர் தராகி சிவராம் கொலை வழக்கில் யூலை 20005 இல் சந்தேக நபர் கைதான போதும் இதுவரையில் சட்ட நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை என குற்றம் சாட்டியது.[4]

[தொகு] ஆதாரங்கள்

  1. மகிந்தவின் மகன் கடற்படையில் இணைகிறார் அணுகப்பட்டது நவம்பர் 26, (ஆங்கிலத்தில்)
  2. 3 சிங்கள ஊடகவியலாளர்கள் கடத்தல் தமிழ் நெட் அணுகப்பட்டது பெப்ரவரி 11, 2007 (ஆங்கிலத்தில்)
  3. "Sri Lanka: Government Must Respond to Anti-Tamil Violence", Human Rights Watch, 2006-04-25. 2006-10-01 அன்று தகவல் பெறப்பட்டது..
  4. "Tamilnet editor’s murder still unpunished after one year", Reporters Without Borders, 2006-04-28. 2006-10-01 அன்று தகவல் பெறப்பட்டது..

[தொகு] வெளி இணைப்புகள்



இலங்கையின் சனாதிபதிகள் {{{படிம தலைப்பு}}}
வில்லியம் கொபல்லாவஜூனியஸ் ரிச்சட் ஜயவர்தனாரணசிங்க பிரேமதாசாடிங்கிரி பண்டா விஜயதுங்காசந்திரிகா குமாரதுங்கமகிந்த ராஜபக்ச