மருதம்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
மருதம் என்பது பண்டைத் தமிழகத்தில் பகுத்து அறியப்பட்ட ஐந்து வகைத் தமிழர் நிலத்திணைகளில் ஒன்றாகும். வயலும் வயல் சார்ந்த இடமும் மருதம் என அழைக்கப்பட்டது. இதனால் மருத நிலத்தில் வாழ்ந்தோர் உழவுத் தொழில் புரிவோராவர். மருத நிலத்தலைவர்கள் மகிழ்நன், ஊரன் என்று அழைக்கப்பட்டனர்.
[தொகு] மருத நிலத்தின் பொழுதுகள்
கார், கூதிர், முன்பனி, பின்பனி, இளவேனில், முதுவேனில் என்னும் பெரும் பொழுதுகளும் வைகறை, விடியல் என்னும் சிறுபொழுதுகளும் மருத நிலத்துக்குரிய பொழுதுகளாகும்.
[தொகு] மருத நிலத்தின் கருப்பொருட்கள்
- தெய்வம்: இந்திரன்
- மக்கள்: உழவர், உழத்தியர், கடையர், கடைசியர்
- பறவைகள்: நாரை, குருகு, தாரா
- விலங்குகள்: எருமை, நீர்நாய்
- மலர்கள்: தாமரை, கழுநீர், குவளை
- மரங்கள்: காஞ்சி, மருதம்
- உணவு: செந்நெல், வெண்நெல்
- பண்: மருத யாழ்
- தொழில்: களைகட்டல், நெல்லரிதல், கடாவிடல்
தமிழர் நிலத்திணைகள் |
---|
குறிஞ்சி | முல்லை | மருதம் | நெய்தல் | பாலை |