சிம்மேந்திரமத்திமம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.

சிம்மேந்திரமத்திமம் கருநாடக இசையில் 57வது மேளகர்த்தா இராகம். கருணைச் சுவையை வெளிப் படுத்தும் இராகம். எப்பொழுதும் பாடலாம். விரிவான ஆலாபனைக்கு இடம் தரும் இராகம்.

ஆரோகணம்: ஸ ரி222 ப த1 நி3 ஸ்
அவரோகணம்: ஸ் நி31 ப ம22 ரி2

[தொகு] இதர அம்சங்கள்

  • "திசி" என்றழைக்கப் படும் 10வது சக்கரத்தில் 3வது மேளம். 21வது மேளமாகிய கீரவாணியின் நேர் பிரதி மத்திம மேளம் ஆகும்.
  • இந்த இராகத்தில் ஷட்ஜம் (ஸ), சதுஸ்ருதி ரிஷபம் (ரி2), சாதாரண காந்தாரம் (க2), பிரதி மத்திமம் (ம2), பஞ்சமம் (ப), சுத்த தைவதம் (த1), காகலி நிஷாதம் (நி3) ஆகிய சுரங்கள் வருகின்றன.
  • முக்கிய பிரதி மத்திம இராகங்களில் இதுவும் ஒன்று.
  • பிரத்தியாகத கமகம் இந்த இராகத்திற்கு அழகைத் தருகிறது.
  • இந்த இராகத்தின் வழி இராகமாகிய (ஜன்யமான) ஸூமத்யுதி அசம்பூர்ண மேள பத்ததியில் 57வது இராகமாக விளங்குகிறது.
  • ஐரோப்பிய ஹங்கேரி நாட்டின் இசையிலும், நாடோடி இனத்தாரின் இசையிலும் இந்த இராகம் ஒலிக்கிறது.

[தொகு] உருப்படிகள்

  1. கிருதி  :"அசைந்தாடும் மயில் ஒன்று"  :ஆதி  :ஊத்துக்காடு வெங்கடசுப்பையர்
  2. கிருதி : நீதுசரணமுலே : ஆதி : தியாகராஜ சுவாமிகள்.
  3. கிருதி : காமாட்சி : ரூபகம் : முத்துசாமி தீட்சிதர்.
  4. கிருதி : இன்னம் ஒரு தலம் : ரூபகம் : முத்துத் தாண்டவர்.
  5. கிருதி : உன்னையல்லால் : ஆதி : கோடீஸ்வர ஐயர்.
  6. திருப்புகழ் : இரவு பகல் : திஸ்ர ஜம்பை : அருணகிரிநாதர்.

[தொகு] திரை இசைப் பாடல்கள்

  1. "எல்லாம் இன்ப மயம்" (மணமகள்)
  2. "ஆடாத மனமும் உண்டோ" (மன்னாதி மன்னன்)
  3. "ஆனந்த ராகம்" (பன்னீர் புஷ்பங்கள்)