பேச்சு:மாணிக்கவாசகர்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
தலைப்பை மாணிக்கவாசகர் என மாற்ற வேண்டும். இவர் 63 நாயன்மார்களுள் ஒருவரல்லர். --செல்வா 18:14, 15 மார்ச் 2007 (UTC)
- மாணிக்கவாசகர் என்றே இவர் அழைக்கப்படுகிறார். அப்படியே மாற்றிவிடலாம்.--Kanags 20:18, 15 மார்ச் 2007 (UTC)
"மாணிக்கவாசகர்" என்னும் தலைப்பில் என் கட்டுரை இட்டுள்ளேன். முன்னர் இருந்த கட்டுரையில் அரசன் வரகுண பாண்டியன் என்றுள்ளது. ஆனால் அரசனோ, "அரிமர்த்தன பாண்டியன்." இரு கட்டுரைகளில் எது நன்றாக உள்ளதோ அதையே வைத்துக்கொள்ளலாம்.--ஞானவெட்டியான் 06:40, 19 மார்ச் 2007 (UTC)
- இரு கட்டுரைகளுமே தவறான கருத்துக்கள் மலிந்து காணப்படுகின்றது!! சிவஞானபோதம் எழுதிய மெய்கண்டார் வாழ்ந்தது கி.பி 1100-1200. மாணிக்கவாசகர் காலம் இதற்கு பல நூற்றாண்டுகள் முன். (மாணிக்கவாசகர் காலம் பற்றி மறைமலை அடிகள் ஒரு நூலே எழுதியுள்ளார்). கையில் சிவஞானபோதம் வைத்திருந்தார் என்றெல்லாம் முற்றும் கற்பனை/புனைவாக எழுதுவது மிகவும் வருந்தத் தக்கது. ஒரு கலைக்களஞ்சியத்தில் வலுவான உண்மைகள், அல்லது வலுவான மேற்கோள்களில் அடிப்படையில் எழுதவேண்டும். மாணிக்கவாசகருடைய கதையைச் சுருக்கி, அவர் நூல்களில் உள்ள கருத்துக்கள் வழி அவர் என்ன ஆக்கங்கள் செய்தார் எனக் கூறுவது பொருந்தும். அவருடைய கதையைச் சொல்லவேண்டும் எனில் எங்கிருந்து கருத்துக்கள் எடுத்தாள்கிறார்கள் என்னும் மேற்கோள்கள் துல்லியமாய்த் தருதல் வேண்டும். --செல்வா 12:28, 19 மார்ச் 2007 (UTC)
//கையில் சிவஞானபோதம் வைத்திருந்தார் என்றெல்லாம் முற்றும் கற்பனை/புனைவாக எழுதுவது மிகவும் வருந்தத் தக்கது. //
போதம் என்றால் அறிவு, உபதேசம்
சிவஞான போதம் என்பது சிவனைப் பற்றிய உண்மை உணர்த்தும் உபதேச நூல் இதை மெய்கண்டாரின் "சிவஞான போதம்" நூலுடன் குழப்பிக் கொள்ள வேண்டாம். அடிப்படையில் மெய்யியல் தெரியதவர்களுக்கு எழுதுகிறோம் என்னும் விழிப்புணர்வுக் குறைவால் அங்கே விளக்கவில்லை.எக்கருத்தாயினும் ஆற அமர விசாரித்துப் பின் கற்பனயெனில் கற்பனை எனலாமல்லவா? கட்டுரையின் அடிக்குறிப்பில் ஆதரம் தந்துள்ளேன்.
ஆதாரம் - அபிதான சிந்தாமணி - பக் 851 --ஞானவெட்டியான் 13:37, 19 மார்ச் 2007 (UTC)
- அபிதான சிந்தாமணியில் போதுமான ஆதாரம் ஏதும் தரப்படவில்லை. கடைசியாக தலபுராணம் கூறுகின்றது என்று பொதுவாக கூறியுள்ளதேயன்றி எப்பொழுது யாரால் இத்தலபுராணம் எழுதப்பட்டது முதலிய செய்திகள் ஏதும் இல்லை. த வி கட்டுரையில் நாம் எழுதும் பொழுது, "மாணிக்கவாசகரைப் பற்றி வேறு வழிகளில் உறுதி செய்ய வியலா சில கருத்துக்கள் அபிதான சிந்தாமணியில் திருவாதவூர் (?) தலபுராணத்தில் உள்ளனவாக தரப்பட்டுள்ளது" என்று தொடங்கி சுருக்கமாக அவருடைய "வரலாற்றைத்" தரலாம். அல்லது அபிதான சிந்தாமணியில் உள்ள கதையை பிற வலைப்பதிவுகள் ஏதும் குறித்திருந்தால் அதற்கு சுட்டி தந்து சுருக்கமாகச் சொல்லலாம். திருவாசகம் ஒப்பற்ற நூல்களில் ஒன்று, அதில் உள்ளவற்றை கட்டுரைக்குள் தலைப்புக்கேற்றவாறு ஒரு சில சொல்லி நிறைவு செய்வது பொருந்தும்.--செல்வா 15:09, 19 மார்ச் 2007 (UTC) நான் மீண்டும் ஒரு முறை படித்துப் பார்த்தேன். இது அண்மைக்கால மரபுவழி வரும் கதை ஆகையால், நான் குறிப்பிட்டவாறு ஒரு வரி முன்னுரை கொடுத்து இக்கதையைக் கொடுத்தால் சரியாக அமையும் என நினைக்கிறேன். மாணிக்கவாசகர் தன்னை புலையன் என்றுதான் கூறியுள்ளார். நரியை பரியாக்கியதெல்லாம் மெய்யியல் கருத்துக்கள் (உண்மை நிகழ்வுகளல்ல). திருநாவுக்கரசரும் நரி-பரி எனப்படும் குறிப்பைத் தந்துள்ளார். இதெல்லாம் பரிமொழி எனப்படும். --செல்வா 15:28, 19 மார்ச் 2007 (UTC)
//அபிதான சிந்தாமணியில் உள்ள கதையை பிற வலைப்பதிவுகள் ஏதும் குறித்திருந்தால் அதற்கு சுட்டி தந்து சுருக்கமாகச் சொல்லலாம். //
என்னுடைய "திருவாசகம்" வலைப்பதிவிலேயே முன்னுரையாக இட்டுள்ளேன். காண்க:http://thiruvaasakam.blogspot.com/
//திருவாசகம் ஒப்பற்ற நூல்களில் ஒன்று, அதில் உள்ளவற்றை கட்டுரைக்குள் தலைப்புக்கேற்றவாறு ஒரு சில சொல்லி நிறைவு செய்வது பொருந்தும்.// நாளை இக்கருத்துக்களை இடுகிறேன். தற்போதைக்கு விக்கிநடை கைவராததால் யாரேனும் அதை முறையாகத் தொகுத்துத் தந்தால் நலம் பயக்கும்.--ஞானவெட்டியான் 17:30, 19 மார்ச் 2007 (UTC)