கீவளூர் கேடிலியப்பர் கோயில்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
கீவளூர் கேடிலியப்பர் கோயில் (கீழ்வேளூர்) பாடல் பெற்ற தலங்களில் ஒன்றாகும். சம்பந்தர், அப்பர் பாடல் பெற்ற இத்தலம் தஞ்சை மாவட்டத்தில் அமைந்துள்ளது. இத்தலத்தில் இறைவன் அகத்தியருக்கு வலது பாத தரிசனம் தந்தார் என்பதும், முருகன் வழிபட்ட தலமென்பதும், அவர் வழிபடும் போது ஐந்து திக்குகளிலும் காளி காவல் புரிந்தார் என்பதும் தொன்நம்பிக்கைகள்.