கிட்டு
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
கேணல் கிட்டு (ஜனவரி 2, 1961 - ஜனவரி 16, 1993) என அழைக்கப்படும் சதாசிவம் கிருஸ்ணகுமார் தனது பதினெட்டாவது வயதில் 1979 இல் தமிழீழ விடுதலைப்போராட்டத்தில் இணைந்தார்.
தமிழீழ விடுதலைப் புலிகள் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனிடம் இராணுவப் பயிற்சி பெற்றார். 1983 இல் இந்தியாவில் பயிற்சி பெற்றார். 1985 ஜனவரியில் யாழ் மாவட்டத் தளபதி ஆனார். 1987 மார்ச்சில் கைக்குண்டுத் தாக்குதலில் இடது காலை இழந்தார். பின்னர் இலண்டனில் வாழ்ந்தார். பின்னர் லெப். கேணல் குட்டிசிறி உட்பட 10 பேருடன் 'குவேக்கர்ஸ்' இன் சமாதானச் செய்தியுடன் தமிழீழம் திரும்புகையில் இந்தியக் கடற்படையால் சுற்றி வளைக்கப்பட்ட போது கப்பலை வெடிக்க வைத்து வீரச்சாவடைந்தார்.