ம. சிவசுப்பிரமணியன்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
முகில் என்கிற பெயரில் எழுதும் ம. சிவசுப்பிரமணியன் ஒரு தமிழ் எழுத்தாளர் ஆவார். 28 மே, 1980ல் கோயமுத்தூரில் பிறந்த முகிலின் சொந்த ஊர் தூத்துக்குடி.
கணிப்பொறித் துறையில் பட்ட மேற்படிப்பை முடித்துவிட்டு, விகடன் மாணவர் நிருபராகவும், கல்கியில் பகுதி நேர நிருபராகவும் பணியாற்றிவிட்டு, விரைவில் நியூ ஹொரைசன் மீடியா நிறுவனத்தின் தமிழ் பிரிவில் உதவி ஆசிரியராகப் பணியில் சேர்ந்தார்.
கல்கி, தினமணி கதிர், குங்குமம், ரிப்போர்ட்டர் போன்ற இதழ்களில் தொடர்ந்து எழுதும் முகில், தமிழின் நம்பிக்கைதரும் நகைச்சுவை எழுத்தாளர்களுள் ஒருவர். தினமணி கதிரில் இரண்டு வருடங்களாக வெளிவரும் இவரது 'லொள்ளு தர்பார்' 'லொள் காப்பியம்' பத்திகள் வாசகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பைப் பெற்றவை.
முகிலின் நூல்கள்:
- ஆ.. (கவிதைகள்)
- ம்.. (கவிதைகள்)
- துப்பாக்கி மொழி (இந்தியத் தீவிரவாத இயக்கங்கள் குறித்த ஆய்வு)
- கண்ணீரும் புன்னகையும் (நடிகர் சந்திரபாபுவின் வாழ்க்கை)
- லொள்ளு தர்பார் (நகைச்சுவைக் கட்டுரைகள்)
- ஸ்...! (அண்டார்டிகா: பயணம் - வரலாறு - வாழ்க்கை)
- மும்பை: குற்றத் தலைநகரம்