ஜோசப் பிரீஸ்ட்லி
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.

உயிர்வளி என்று கூறப்படும் ஆக்ஸிஜனைக் கண்டுபிடித்த ஜோசப் பிரீஸ்ட்லி
ஜோசப் பிரீஸ்ட்லி' ('Joseph Priestley )(மார்ச் 13, 1733 – பெப்ரவரி 8, 1804) ஒரு ஆங்கிலேய வேதியியல் அறிஞர். இவருடைய பல கண்டுபிடிப்புகளுள் உயிர்வளி என்று கூறும் ஆக்ஸிஜனைக் கண்டுபித்தது மிகவும் புகழ் வாய்ந்தது. இவர் ஒரு சிறந்த ஆசிரியராகவும் மெய்யியல் அறிஞராகவும் திகழ்ந்தார். கார்பன்-டை-ஆக்சைடு பற்றிய இவருடைய ஆய்வுகளும் புகழ் பெற்றவை. ஆக்ஸிஜனை இவருக்கும் முன்னால் கார்ல் வில்ஹெல்ம் ஷீல் என்பார் கண்டுபிடித்தார் என்று தற்கால ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.