டோடோ
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
டோடோ அழிந்த பறவையினங்களில் ஒன்று. இது மொறீசியஸ் தீவில் வாழ்ந்த பறக்க முடியாத பறவையாகும். ஏறத்தாழ ஒரு மீற்றர் உயரமான டோடோ நிலத்தில் கூடு கட்டி வாழ்ந்தது; பழங்களை உணவாகக் கொண்டது.
கொன்றுண்ணிகளற்ற தீவில் வாழ்ந்த பறவையாதலினால் டோடோ மனிதர்களைக் கண்டு பயப்படாதமை அதன் அழிவுக்கு காரணமானது. மொறீசியஸ் தீவுகளுக்கு போர்த்துக்கேயர் 1505 இல் சென்றனர். பின்னர் டச்சுக்கரர்கள் அங்கு குடியேறினர். மனிதர்களாலும் அவர்களது வளர்ப்புப் பிராணிகளாலும் ஏறத்தாழ நூறாண்டுக் காலத்தில் படிப்படியாக டோடோ பறவையினம் முற்றாக அழிக்கப்பட்டது.