ஃவெடரிக்கோ கார்ஸியா லோர்கா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.

வெடரிக்கோ கார்ஸியா லோர்கா ஸ்பெயினில் 1898இல் பிறந்தவர்; ஸ்பானிய மொழியில் எழுதினார். கிராமிய வாழ்வு இவரது படைப்புக்களின் அடிநாதமாக அமைந்திருக்கிறது. தான் எழுதிய கவிதைகளை அழுத்தமாக வாசித்துக் காட்டுவதில் திறமைமிக்கவர். 'நியூயோர்க்கில் கவிஞன்' என்ற நெடுங்கவிதை இவரது முக்கியமான படைப்புக்களில் ஒன்றாகும். 'ஃபேர்னாடா அல்பாவின் வீடு', 'இரத்தத் திருமணம்', 'யேர்மா' முதலிய புகழ்பெற்ற நாடகங்களையும் எழுதியுள்ளார். ஸ்பானிய உள்நாட்டுப் போரின்போது சர்வாதிகாரி ஃவிரங்கோவின் கையாள்களால் 1936 இல் கொல்லப்பட்டார்.