அப்துல் காதர் லெப்பை
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
அப்துல் காதர் லெப்பை இருபதாம் நூற்றாண்டின் குறிப்பிடத்தக்க ஈழத்து முஸ்லிம் கவிஞர்களுள் ஒருவர். இவர் 1913 செப்டெம்பர் 7ஆம் திகதி காத்தான்குடியில் பிறந்தார். 1934இல் ஆசிரியராகப் பணியாற்றத் தொடங்கிய இவர் 1943இல் தலைமையாசிரியராகப் பதவியுயர்வு பெற்றார்.
1965இல் கிண்ணியாவில் நடைபெற்ற இஸ்லாமியக் கலை இலக்கிய விழாவில் ஆருக்குக் கவிஞர் திலகம் என்ற பட்டம் வழங்கப்பட்டது. உமர் கய்யாம் பாடல்களின் மொழிபெயர்ப்பான "ரூபாய்யாத்" இவருக்கு இலங்கை சாஹித்திய மண்டலப் பரிசைப் பெற்றுக் கொடுத்தது. 1984 அக்டோபர் 7ஆம் திகதி காலமானார்.
[தொகு] இவரது நூல்கள்
- செய்னம்பு நாச்சியார் மான்மியம்
- ரூபாய்யாத்
- என் சரிதம் (சுயசரிதை)