பிஸ்மில்லா கான்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
உஸ்தாத் பிஸ்மில்லா கான் Ustad Bismillah Khan |
|
---|---|
பிறப்பு | மார்ச் 21, 1916 |
இறப்பு | ஆகஸ்ட் 21, 2006 |
பணி | ஷெனாய் இசைக்கலைஞர் |
உஸ்தாத் பிஸ்மில்லா கான் (மார்ச் 21, 1916 - ஆகஸ்ட் 21, 2006) உலகப் புகழ்பெற்ற ஷெனாய் இசை மேதை. உஸ்தாத் என்பது மேதை அல்லது குரு எனப்பொருள்படும். இவர் இந்தியாவின் மிக உயர் பாரத ரத்னா விருதினை 2001 இல் பெற்றுக்கொண்டார்.
[தொகு] வாழ்க்கைக் குறிப்பு
பிஸ்மில்லாகான், இந்திய அரண்மனை இசைக் கலைஞர்கள் குடும்பத்தில் பிறந்தார். பெற்றோர் பெயர் பைகாம்பர் கான், மித்தன். வாரணாசி விஸ்வநாதர் கோயிலில் ஷெனாய் இசைக் கலைஞராக இருந்த அவருடைய மாமா அலி பக்ஸ் விலையாட்டுவிடம் ஷெனாய் இசைக்கருவி வாசிக்க பயிற்சி பெற்றார். பிஸ்மில்லாகானுக்கு ஐந்து மகன்களும், மூன்று மகள்களும் இருக்கிறார்கள்.
[தொகு] விருதுகள்
அவர் தனது வாழ்நாளில் உலக நாடுகள் பலவற்றுக்கும் சென்று தனது இசைத்திறமையால் மக்களை மகிழ்வித்தார். பாரத ரத்னா தவிர, பத்மவிபூஷண், சங்கீத நாடக அகாடமி விருது, தான்சேன் விருது போன்ற பல்வேறு விருதுகளையும் அவர் பெற்றுள்ளார்.