மண்டகப்பட்டு குடைவரைக் கோயில்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
தமிழ் நாடு, விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த ஊர் மண்டகப்பட்டு. இங்கேதான் பல்லவர்களால் கட்டப்பட்ட மண்டகப்பட்டு குடைவரைக் கோயில் உள்ளது. இதுவே அவர்களால் கட்டப்பட்ட முதலாவது குடைவரைக் கோயில் ஆகும். பல்லவப் பேரரசன் முதலாம் மகேந்திரவர்மனால் கட்டுவிக்கப்பட்ட இக் கோயிலே செங்கல், மரம், உலோகம், சுதை முதலிய கட்டிடப் பொருட்களைப் பயன்படுத்தாமல் கட்டிய முதலாவது கோயில் என இக் கோயிலிலுள்ளவடமொழிக் கல்வெட்டொன்று கூறுகிறது. இது மும்மூர்த்திகளான பிரம்மா, விஷ்ணு, ஈஸ்வரன் ஆகிய கடவுளர்களுக்காக அமைக்கப்பட்டது எனவும் மேற்குறிப்பிட்ட கல்வெட்டு மூலம் அறிய வருகிறது.