அம்பி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.

அம்பி
அம்பி

அம்பி என அழைக்கப்படும் இராமலிங்கம் அம்பிகைபாகர் ஈழத்தின் குறிப்பிடத்தக்க எழுத்தாளர்களில் ஒருவராவார். இவர் பல ஆண்டுகள் பப்புவா நியூ கினியில் பணியாற்றிவிட்டு, தற்சமயம் சிட்னியில் வசிக்கிறார். சிறுவர் இலக்கியத்திற்கு குறிப்பாக புலம்பெயர் நாடுகளில் தமிழ்ச் சிறார்களுக்காக கவிதைகளை எழுதி வருபவர்.

[தொகு] டாக்டர் கிறீன் குறித்து ஆராய்ச்சி

அவுஸ்திரேலியாவில் தமிழ்ப்பாட நூல் ஆலோசகராகவும் பணியாற்றிய அம்பி, மருத்துவத் தமிழ் முன்னோடி டாக்டர் சாமுவேல் ஃபிஸ்க் கிறீன் அவர்களுக்கு இலங்கை அரசு முத்திரை வெளியிடுவதற்கு ஆக்கபூர்வமாக உழைத்தவர். டாக்டர் கிறீன் பற்றி ஆய்வுகள் செய்து பல நூல்களை எழுதி வெளியிட்டுள்ளார்.

[தொகு] விருதுகள்

  • கவிதைக்காக (கொஞ்சும் தமிழ்) இலங்கை அரசின் சாகித்திய விருது.
  • தமிழ் நாட்டில் உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டில் கவிதைக்காகத் தங்கப் பதக்கம்.

[தொகு] படைப்புகள்

  • கிறீனின் அடிச்சுவடு (யாழ்ப்பாணம், 1967)
  • அம்பி பாடல் (சிறுவர் பாடல்கள், சுண்ணாகம், 1969)
  • வேதாளம் சொன்ன கதை (மேடை நாடகம், கொழும்பு, 1970)
  • கொஞ்சும் தமிழ் (சிறுவர் பாடல்கள், கொழும்பு, 1992)
  • அந்தச் சிரிப்பு
  • யாதும் ஊரே; ஒரு யாத்திரை
  • அம்பி கவிதைகள் (சென்னை, 1994)
  • மருத்துவத் தமிழ் முன்னோடி (சென்னை, 1995)
  • Ambi's Lingering Memories (Poetry, பப்புவா நியூ கினி, 1993, 1996)
  • Scientific Tamil Pioneer Dr Samuel Fisk Green (கொழும்பு, 1998)
"http://ta.wikipedia.org../../../%E0%AE%85/%E0%AE%AE/%E0%AF%8D/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF.html" இலிருந்து மீள்விக்கப்பட்டது