பாபேல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.

பாபேல் என்பது பபிலோனுக்கு ஆரம்பத்தில் கொடுக்கப்பட்ட எபிரேய பெயராகும். இது பாபேல் கோபுரம் இருந்த இடமாகும். பெயரின் ஆரம்பம் பற்றி ஆதியாகமம் 11:9 இல் கூறப்பட்டுள்ளது. அதன்படி பாபேல் என்ற பெயரானது குழப்பம் என பொருளுடைய "பாபல்" என்ற எபிரேய மொழி சொல்லின் மறுவலாகும் என்பது விவிலிய கருத்தாகும். ஆனால் இது. அக்காத் மொழியில் "கடவுளின் வாயில்" எனப்பொருள்படும் "பப்-இலு" வின் மறூவலாகும் என்பது ஆய்வாளரின் கருத்தாகும்.

[தொகு] ஆதியாகமம்

ஆதியாகமம் 10:10[1] இல் பாபேல் நிம்ரோத் அரசனின் வசிப்பிடம் என குறிப்பிடுகிறது. மேலும் ஆதியாகமம் 11:1-9[2] இல் ஊழிவெள்ளத்துக்கு பின்பு மனிதர் பேழை தங்கிய மலையிலிருந்து வெளியேரி ஒரு சமவெளியொன்றில் தங்கினார்கள். அங்கு அவர்கள் விண்ணை எட்டும் மிக உயரமான கோபுரமொன்றை கட்டினார்கள். இது பாபேல் கோபுரம் எனப்பட்டது.

பின் வந்தகாலங்களில் பாபேல் என்பது பொதுவான கிரேக்க பதமான பபிலோனுக்கு மாற்றம் செய்யப்பட்டது.


[தொகு] ஆதாரங்கள்

  1. ஆதியாகமம் 10:10
  2. ஆதியாகமம் 11:1-9
"http://ta.wikipedia.org../../../%E0%AE%AA/%E0%AE%BE/%E0%AE%AA/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B2%E0%AF%8D.html" இலிருந்து மீள்விக்கப்பட்டது