மாயாவி
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
மாயாவி என்பது சிறுவர்களுக்கான சித்திரக்கதைகளில் வரும் ஒரு கற்பனை கதாபாத்திரம் ஆகும். லீ பாக் என்பவர் "டெய்லி ஸ்டிரிப்" எனும் நாளிதழுக்காக 1939-ல் மாயாவியை உருவாக்கினர்.
[தொகு] மாயாவியின் வரலாறு
மாயாவி "பெங்காலியா" எனும் அடர்ந்த வனப்பகுதியில் வசிப்பவர் ஆவார். அவ்வனத்தின் இயற்கை வளங்களையும், அங்கு வாழும் பழங்குடிகளையும் பல தலைமுறைகளாக காத்து வரும் காவலர் அவர். இவர் எப்பொழுதும் ஊதா நிற முகமூடி அணிந்திருப்பதால் இவரை முகமூடி வீரர் என்றும் அழைப்பர்.