சமணம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.

சமண சாதுக்கள்

இந்தியாவில் கி.மு. 6 ஆம் நூற்றாண்டில் மகாவீரரைப் முதன்மையாகப் பின்பற்றி வடிவம் பெற்ற சமயம் சமணம் ஆகும். இவருக்கும் முன்பு 23 தீர்தங்கரர் என அறியப்படும் சமணப்பெரியார்கள் இருந்துள்ளார்கள். காந்தி அவர்கள் பின்பற்றிய அகிம்சை சமண சமயத்தின் மையக் கோட்பாடுகளில் ஒன்றாகும். இன்று உலகில் சமண சமயத்தை ஏறத்தாள 5 மில்லியன் மக்கள் பின்பற்றுகின்றார்கள் []. பல்வேறு வரலாற்று காலகட்டங்களில் தமிழர்களிடம் சமணம் பரவி இருந்தது, இன்றும் குறிப்பிடத்தக்க சமணர்கள் தமிழர்கள் ஆவார்கள்.

பொருளடக்கம்

[தொகு] சமணமும் தமிழ்நாடும்

24 தீர்தங்கரர்கள், தமிழ்நாட்டு சிற்பங்கள், 5-6 ம் நூற்றாண்டு
24 தீர்தங்கரர்கள், தமிழ்நாட்டு சிற்பங்கள், 5-6 ம் நூற்றாண்டு

சமணம் தமிழ்நாட்டில் 2000 ஆண்டுகளுக்கு மேற்பட்ட வரலாற்றை கொண்டிருக்கின்றது. வடநாட்டில் தோன்றிய சமய நெறி என்றாலும், தமிழ்நாட்டில் வேரூன்றி பல நூற்றாண்டுகள் செழுப்புடன் விழங்கியது. தமிழ்நாட்டில், தமிழ் மொழியில், தமிழர் சிந்தனையில் சமணத்தின் பங்கு இணைபிரிக்க முடியாதது.


"சமணத்திற்கும் பெளத்தத்திற்குமிடையில் முரண்பாடு ஏறபட்டதும் புத்தசமயம் தமிழ்நாட்டை விட்டு இலங்கைச் சென்றது. சமணமே தமிழகத்தின் தனிப்பெரும் சமயமாக பல நூற்றாண்டுகள் நிலைபெற்றிருந்தது. சிந்தாந்த ரீதியில் சமணர்களது அறநெறிகள் இன்றுவரை தமிழ்நாட்டில் ஆதிக்கம் பெற்றுள்ளன...தமிழக மக்கள் சிந்தனையில் சமண அறநெறிகள் உள்ளன." [1]

[தொகு] சமணரும் தமிழும்

  • சீவக சிந்தாமணி (சமணம், அரசன் சீவகன் வரலாறு, எட்டு மணம் பின் துறவறம், வடமொழி தழுவல்)
  • வளையாபதி (70 செய்யுள்கள் கிடைகின்றன)
  • குண்டலகேசி

[தொகு] இவற்றையும் பார்க்க

[தொகு] மேற்கோள்கள்

  1. செ. கணேசலிங்கன். (2001). நவீனத்துவமும் தமிழகமும். சென்னை: குமரன் பதிப்பகம். பக்ங்கள் 50.

[தொகு] வெளி இணைப்புகள்

"http://ta.wikipedia.org../../../%E0%AE%9A/%E0%AE%AE/%E0%AE%A3/%E0%AE%9A%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D.html" இலிருந்து மீள்விக்கப்பட்டது