வாகைத் திணை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.

வாகைத்திணை என்பது வெற்றி பெற்ற அரசனும் அவனது வீரர்களும் வெற்றியின் அடையாளமான வாகைப்பூவைச் சூடி வெற்றியைக் கொண்டாடுதலைக் குறிக்கும்.

[தொகு] இலக்கியத்தில் வாகைத்திணை

வாகைத்திணையானது புறநானூற்றில் இடம்பெறும் ஒரு புறத்திணையாகும்[1].

தலையாலங் கானத்துச் செரு வென்ற பாண்டியன் நெடுஞ்செழியனை இடைக்குன்றூர் கிழார் பாடிய அரச வாகை புறநானூற்றில் இடம்பெற்றுள்ளது. அரசவாகை என்பது அரசனது வெற்றியைச் சிறப்பாகக் கூறுதல் ஆகும். இது வாகைத் திணையின் ஓர் உட்பிரிவாகும்.

[தொகு] அடிக்குறிப்பு

  1. திணை என்பது ஒழுக்கம், நெறி எனப் பொருள்படும்