விஷ்ணு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.

இந்துக் கடவுளர்களில் மும்மூர்த்திகள் என்று அழைக்கப்படுபவர்களுள் விஷ்ணுவும் ஒருவர். சிவனும், பிரம்மாவும் ஏனைய இரு கடவுள்கள். பிரம்மா படைத்தலுக்கும், விஷ்ணு காத்தலுக்கும், சிவன் அழித்தலுக்கும் உரியவர்களாகச் சொல்லப்படுகின்றது. விஷ்ணு தமிழ் சங்கப் பாடல்களில் திருமால் என்ற பெயரில் அழைக்கப்படுகிறார். இதே கருத்தை அய்யாவழியின் புனித நூலான அகிலத்திரட்டு அம்மானையும் கூறுகிறது. இந்துசமயத்தின் ஒரு பிரிவான வைஷ்ணவ சமயத்தினர் விஷ்ணுவையே முழுமுதற் கடவுளாக வழிபட்டு வருகின்றனர்.

[தொகு] விஷ்ணுவின் அவதாரங்கள்

உலகில் அதர்மம் தலையெடுக்கும்போது விஷ்ணு உலகில் அவதரித்து உலகைக் காப்பதாக வைணவர்கள் கருதுகின்றனர். இவ்வாறு இவருடைய பத்து அவதாரங்களாக கூறப்படுபவை பின்வருவன

வட இந்தியர் சிலர் பலராமருக்கு பதிலாக புத்தரை பத்து அவதாரங்களுள் ஒருவராக கருதுகின்றனர். பாகவத புராணத்தில் இருபத்தைந்து அவதாரங்கள் கூறப்படுகிறது.

"http://ta.wikipedia.org../../../%E0%AE%B5/%E0%AE%BF/%E0%AE%B7/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%81.html" இலிருந்து மீள்விக்கப்பட்டது