வி. எஸ். அச்சுதானந்தன்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
வேலிக்ககத்து சங்கரன் அச்சுதானந்தன் (பிறப்பு - அக்டோபர் 20, 1923) கேரள மாநிலத்தின் இருபதாவது முதல் அமைச்சர் ஆவார். காமரேட் வி எஸ் என்று அழைக்கபடும் அவர், 1985 முதல் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)-இன் போலிட்ப்யூரோ உறுப்பினராக இருந்து வருகிறார்.
[தொகு] இளமைப் பருவம்
கேரளாவின் ஆலப்புழை மாவட்டத்தில் சங்கரன் அக்கம்மா தம்பதியினருக்கு பிறந்த அச்சுதானந்தன், சிறு வயதிலேயே வறுமைக்கு உள்ளானார். தனது தாயை நான்கு வயதிலும் தந்தையை பதினொரு வயதிலும் இழந்த அவர், தனது ஏழாவது வகுப்புடன் பள்ளிக் கல்வியை நிறுத்தும் கட்டாயம் ஏற்பட்டது. ஒரு துணிக் கடையில் வேலை பார்க்க ஆரம்பித்த அவர், பின்னர் ஒரு கயிறுத் தொழிற்சாலையில் பணிபுரிந்தார்.
[தொகு] அரசியல் வாழ்க்கை
தொழில் சங்க ஈடுபாட்டின் மூலம் அரசியலுக்கு வந்த வி.எஸ், 1938ஆம் ஆண்டு மாநில கங்கிரஸில் சேர்ந்தார். கருத்து வேறுபாடுகளால், 1940ஆம் ஆண்டு காங்கிரஸிலிருந்து வெளியேறி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் உறுப்பினர் ஆனார். பின்னர் இந்திய சுதந்திர போராட்டத்தில் பங்கு பட்ட அவர், ஐந்து வருடத்துக்கும் மேலாக சிறையில் அடைக்கப்பட்டார். 1964ஆம் ஆண்டு, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியிலிருந்து பிரிந்து சென்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) நிறுவிய 32 உறுப்பினர்களுள் இவரும் ஒருவர்.