சுஜாதா (எழுத்தாளர்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.

சுஜாதா (Sujatha, பிறப்பு: மே 3, 1935) தமிழகத்தின் முக்கியமான எழுத்தாளர்களில் ஒருவராவார். இயற்பெயர் ரங்கராஜன். தனது தனிப்பட்ட கற்பனை மற்றும் நடையால் அவர் பல வாசகர்களை கவர்ந்துள்ளார். சுஜாதாவின் முதல் கதை 1953 ஆம் ஆண்டு சிவாஜி என்ற பத்திரிக்கையில் வெளிவந்தது. சிறுகதைகள், நாவல்கள், நாடகங்கள், அறிவியல் நூல்கள், கவிதைகள், கட்டுரைகள், திரைப்பட கதை-வசனங்கள், தொலைக்காட்சி நாடகங்கள் என பல துறைகளில் தன் முத்திரையினைப் பதித்தவர் சுஜாதா.

பொருளடக்கம்

[தொகு] புனைபெயர்

இவருடைய, "இடது ஓரத்தில்" என்ற சிறுகதை 1962 ஆம் ஆண்டு குமுதம் இதழில் ரங்கராஜன் என்ற பெயரில் வெளிவந்தது. குமுதம் ரா.கி.ரங்கராஜனுடன் குழப்பம் ஏற்பட்டதால் தன் மனைவி பெயரை, 'சுஜாதா', தன் புனைப்பெயராக வைத்துக்கொண்டார்.

[தொகு] ஆக்கங்கள்

[தொகு] நாவல்

  • பதவிக்காக
  • ஆதலினால் காதல் செய்வீர்
  • பிரிவோம் சந்திப்போம்
  • அனிதாவின் காதல்கள்
  • எப்போதும் பெண்
  • என் இனிய இயந்திரா
  • மீண்டும் ஜீனோ
  • நிலா நிழல்
  • கரையெல்லாம் செண்பகப்பூ
  • யவனிகா

[தொகு] குறுநாவல்

  • "ஆயிரத்தில் இருவர்"
  • "தீண்டும் இன்பம்"
  • "குரு பிரசாத்தின் கடைசி தினம்"

[தொகு] சிறுகதை

  • ஸ்ரீரங்கத்துக் கதைகள்

[தொகு] நாடகம்

  • Dr. நரேந்திரநாத்தின் வினோத வழக்கு்
  • கடவுள் வந்திருந்தார்

[தொகு] கட்டுரை

  • கணையாழியின் கடைசி பக்கங்கள்
  • கற்றதும் பெற்றதும் [பகுதி 1-5]
  • கடவுள் இருக்கிறாரா
  • தலைமை செயலகம்
  • எழுத்தும் வாழ்க்கையும்
  • ஏன் ? எதற்கு ? எப்படி ?

[தொகு] திரைப்படமாக்கப்பட்ட இவரின் கதைகள்

  • காயத்ரி
  • கரையெல்லாம் செண்பகப்பூ
  • ப்ரியா
  • விக்ரம்
  • வானம்வசப்படும்

[தொகு] பணியாற்றிய திரைப்படங்கள்

[தொகு] வெளி இணைப்புகள்

ஏனைய மொழிகள்