பேச்சு:இணுவில் சிவகாமி அம்மன் கோயில்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
அம்மனா சூரனை அழித்தார் நான் நினைத்தேன் சூரனுக்கு பல முகங்கள் மாறி வரும் அவரை முருகன் அழித்தாரென்று.எது உண்மை--சக்திவேல் நிரோஜன் 02:37, 4 நவம்பர் 2006 (UTC)
இந்து சமயத்தில் உள்ள பல கடவுள்கள், இது போல அசுரர்களை அழித்த கதைகள் புராணங்களிலே உள்ளன. ஆனால் வேறுவேறு அசுரர்கள். இதனால்தான் முருகன் கோயில், அம்மன் கோயில், சிவன் கோயில், பிள்ளையார் கோயில் என எல்லாக் கோயில்களிலும் சூரன் போர் நடப்பதுண்டு. அம்மன் போர் செய்து அழித்தது மகிஷாசுரன் (மகிஷம் = எருமை) என்பவனை. மகிஷாசுரனை அழித்த அம்மன் மகிஷாசுரமர்த்தினி என அழைக்கப்படுகிறார். மகிஷாசுரமர்த்தினி சிங்கத்தின் மீது அமர்ந்து எருமைத்தலை கொண்ட அசுரனுடன் போரிடும் காட்சியை சிற்பமாக இங்கே காணலாம். Mayooranathan 09:48, 4 நவம்பர் 2006 (UTC)