உபாகமம்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
உபாகமம் விவிலியத்தின் ஐந்தாவது நூலாகும்.திருச்சட்ட நூல்களில் (டோறா அல்லது ஆகம நூல்கள்) ஐந்தாவதுமுமாகும். இது பழைய ஏற்பாட்டில் காணப்படுகிறது. இது இஸ்ரவேலர் எகிப்தின் அடிமை வாழ்விலிருந்து விடுபட்டு, மோசேயின் தலைமையின் கீழ், கானான் நாடு நோக்கி பயணிக்கையில், மோசேயின் மரணத்திற்கு முன் அவர் இஸ்ரவேலருக்கு உபதேசித்த மூன்று பிரசங்கங்களை கூறுகின்றது. விவிலியத்தின் ஐந்து ஆகாமம நூல்களில் இறுதியானதாகும். மொத்தம் 34 அதிகாரங்களை கொண்டுள்ளது.