முருகையன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.

முருகையன் (பிறப்பு - 1935, கல்வயல், சாவகச்சேரி, யாழ்ப்பாணம்) ஈழத்தின் முன்னணிக் கவிஞர்களுள் ஒருவர்.

1950 முதல் கவிதை எழுதும் முருகையன் ஏராளமான கவிதைகள், சில காவியங்கள், மேடைப் பாநாடகங்கள், வானொலிப் பாநாடகங்களை எழுதியுள்ளார். திறனாய்வுக் கட்டுரைகள், கவிதை மொழிபெயர்ப்பு என்பவற்றிலும் ஈடுபட்டுள்ளார்.

1964 - 1965 காலப்பகுதியில் வெளிவந்த நோக்கு என்ற காலாண்டுக் கவிதை இதழின் இணையாசிரியராகவும் பணியாற்றியுள்ளார்.

[தொகு] இவரது சில கவிதை நூல்கள்

  • ஒருவரம் (1964)
  • வந்து சேர்ந்தன, தரிசனம் (1965)
  • நெடும்பகல் (1967)
  • கோபுரவாசல் (1969)
  • ஆதிபகவன் (1978)
  • நாங்கள் மனிதன் (1992)
  • மேற்பூச்சு (1995)
  • சங்கடங்கள் (2000)

[தொகு] வெளி இணைப்புக்கள்

[தொகு] முருகையனின் நூல்கள்