செய்வினை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.

செய்வினை (சூனியம்) என்பது பழங்காலந்தொட்டு இலங்கை,கேரளா மற்றும் உலகின் பல பாகங்களிலும் ஒரு மனித சக்தியினை இன்னொருவரின் மந்திரச் சக்தியினால் கட்டுப்படுத்தப்படும் செயலாக அழைக்கப்படுகின்றது.இதன் தோற்றம் மற்றும் இதனைச் சார்ந்த நிகழ்வுகள் பலராலும் இன்றளவும் கண்டுபிடிக்க முடியாத நிலையாகவே உள்ளது.பலர் இதனை உணமையெனவும் சிலர் செய்வினையை ஒரு மூட நம்பிக்கை எனவும் கூறுவர்.இவ்வாறு மனிதர்களின் சக்தியைக் கட்டுப்படுத்தக் கூடிய மந்திரசக்திகள் மற்றும் அவற்றின் நிகழ்வுகள் மற்றும் அவை உண்மையினை ஆராயும் பொழுது உலகின் பல பாகங்களின் நடைபெற்ற,நடைபெற்றுவரும் நிகழ்வுகளுடன் ஒன்றிக் காணப்படுவது குறிப்பிடத்தக்கது.