இரத்தினபுரி சிவன்கோயில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.

திரிபுரசுந்தரி சமேத இரத்தின சபேஸ்வரசுவாமி ஆலயம் இலங்கையில் இரத்தினபுரி வரக்காகோட்ட வீதியில் கருணைமிகு சிவன் ஆலயம் அமைந்துள்ளது. நூறு ஆண்டுகளிற்குமேல் பழமைவாய்ந்த தொரு இவ்வாலயம் தனிச்சிறப்பானது.

இரத்தினபுரி சைவபரிபாலன மகா சபையினரால் நிர்மாணிக்கப்பட்டுவரும் இவ்வாலயம் 1989ஆம் ஆண்டு ஸ்ரீ பொன்னம்பலவாணேஸ்வர தேவஸ்தான காலஞ்சென்ற பிரதம குருக்கள் சிவஸ்ரீ குஞ்சிபாதக் குருக்கள் தலைமையில் பாலபஸ்தானம் செய்து வைக்கப்பட்டு புனருத்தாரணப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டன். 15 ஆண்டுகளிற்குப் பின் இப்பணிகள் பூர்த்தியடைந்தன

இன்று இவ்வாலயம் விநாயகர், சுப்பரம்மணியர், நடராஜர், வைரவர், நவக்கிரக 58 பரிவாரங்களுடன் உள்ள ஓர் ஆலயமாகவுள்ளது. கும்பாபிஷேகம் நடைபெற்றபின்னர் முதன்முறையாக 4 ஏப்பர் 2006ஆம் அன்று சுவாமி வெளிவீதி வலம் வந்து அடியார்களிற்கு அருள்பாலித்தார்.

இவ்வாயத்தில் முக்கியதினங்கள் அனைத்தும் சிறப்பாகக் கொண்டாடப் படுகின்றன.

[தொகு] ஆதாரங்கள்

  1. ஈழத்துச் சிவாலயங்கள், வித்துவான் வசந்தா வைத்திய நாதன்