தோடி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.

தோடி (ஹனுமத்தோடி) என்பது எந்நேரமும் பாடக்கூடிய இராகம். பக்திச்சுவையுள்ளது. விரிவான ஆலாபனைக்கு இடம் தரும் இராகம். 19ம் நூற்றாண்டில் வாழ்ந்த தோடி சீதாராமய்யர் இந்த இராகத்தை 8 நாட்களாக பாடினார் என சொல்லப்படுகிறது. இந்துஸ்தானி இசையில் பைரவி தாட் என்றழைக்கப்ப்டுகிறது.

[தொகு] இலக்கணம்

ஆரோகணம்: ஸ ரி121 ப த1 நி2 ஸ்
அவரோகணம்: ஸ் நி21 ப ம12 ரி1
  1. 8 வது மேளகர்த்தா. நேத்ர என்று அழைக்கப்படும் 2 ஆவது வட்டத்தில் (சக்கரத்தில்) 2 வது மேளம். கடபயாதி திட்டத்தின் படி ஹனுமத்தோடி என்று அழைக்கப்படுகிறது.
  2. இந்த இராகத்தில் வரும் சுரங்கள்: ஸட்ஜம், சுத்த ரிஷபம் (ரி1), சாதாரண காந்தாரம் (க2), பஞ்சமம், சுத்த தைவதம் (த1), கைசிகி நிஷாதம் (நி2) ஆகியவை.
  3. கிரக பேதத்தின் வழியாக இந்த மேளத்தின் ரி, க, ம, த, நி ஆகிய சுரங்கள் முறையே கல்யாணி, ஹரிகாம்போஜி, நடபைரவி, சங்கராபரணம், கரகரப்பிரியா ஆகிய மேளங்களித் தோற்றுவிக்கிறன. (மூர்ச்சனாகாரக மேளம்).

[தொகு] சிறப்பு அம்சங்கள்

  • பல ஜன்ய இராகங்களைக் கொண்ட மேளகர்த்தா.
  • ஆரோகணத்திலும் அவரோகணத்திலும் பஞ்சமம் இல்லாமல் இசைத்தால் அதற்குச் சுத்த தோடி என்று பெயர்.
  • பஞ்சம நீக்கத்துடன் (வர்ஜதுடன்) கூடிய ஜண்டை (இரட்டைச்) சுரக்கோர்வைகளும், தாட்டுச் சுரக்கோர்வைகளும் இந்த இராகத்தின் வடிவத்தைக் காட்டுகின்றன.

[தொகு] உருப்படிகள்


"http://ta.wikipedia.org../../../%E0%AE%A4/%E0%AF%8B/%E0%AE%9F/%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF.html" இலிருந்து மீள்விக்கப்பட்டது