தம்பிஐயா தேவதாஸ்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
தம்பிஐயா தேவதாஸ் (பிறப்பு,24.04.1951,புங்குடுதீவு யாழ்ப்பாணம்) மொழிபெயர்ப்பு மற்றும் சினிமாத் துறைகளில் பங்களித்து வரும் ஈழத்து எழுத்தாளராவார். ஆரம்பத்தில் சிங்கள நாவல்களை தமிழுக்குக் கொண்டுவருவதில் உழைத்த இவர் இப்பொழுது சினிமா தொடர்பான ஆவணப்படுத்தற் பணிகளில் ஈடுபட்டுள்ளார். பட்டதாரி ஆசிரியரான இவர் பாட நூல்களையும் எழுதியுள்ளார்.
பொருளடக்கம் |
[தொகு] இவருடைய ஆக்கங்கள்
[தொகு] மொழிபெயர்ப்பு நாவல்கள்
- நெஞ்சில் ஓர் இரகசியம் (1975)
- இறைவன் வருத்த வழி (1976)
- மூன்று பாத்திரங்கள் (1977)
[தொகு] சினிமா தொடர்பான நூல்கள்
- இலங்கைத் தமிழ்ச் சினிமாவின் கதை (1994,2000)
- பொன் விழாக் கண்ட சிங்கள சினிமா (1999)
- இலங்கைத் திரையுலக முன்னோடிகள் (2001)
[தொகு] பிற நூல்கள்
- தேர்ந்த சிறுகதைகளும் நாகம்மாள் நாவலும் (1998)
- சிங்களப் பழமொழிகள் (2005)