காவலூர் வானியல் ஆய்வகம்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
இந்தியாவின் மிகப்பெரிய வானியல் ஆய்வுத் தொலைநோக்கி, காவலூர் வானியல் ஆய்வகத்தில், இந்திய வான் இயற்பியல் ஆய்வகத்தால் (Indian Institute of Astrophysics) நிறுவப்பட்டுள்ளது. இத்தொலைநோக்கிக்கு, இந்திய வானியல் முன்னோடியான வைணி பப்பு (Vaini Bappu) அவர்களின் பெயர் சூட்டப்பட்டுள்ளது.
தொலைநோக்கி நிறுவுவதற்கு தேர்வு செய்யப்படும் இடம் சில பண்புகளைப் பெற்றிருக்க வேண்டும். சிறிது உயரமான இடமாகவும், வருடத்துக்கு பல நாட்கள் மேகமூட்டமில்லாமலும், நகர வெளிச்சத்தால் பாதிக்கப்படாமலும் அவ்விடம் இருக்க வேண்டும். இப்பண்புகள் அமையப்பெற்றிருந்ததால், காவலூர் தேர்ந்தெடுக்கப்பட்டது. இவ்வூர் வேலூர் மாவட்டத்தில் உள்ளது.