கலியன் கேட்ட வரங்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.

அய்யாவழி
அய்யா வைகுண்டர்
அகிலத்திரட்டு
கோட்பாடு
சமயச் சடங்குகள்
சுவாமிதோப்பு பதி
அய்யாவழி மும்மை
போதனைகள்
அருல் நூல்

அய்யாவழி புராண வரலாற்றின் அடிப்படையில் கலியன் எனப்படுபவன் குறோணியின் ஆறாவது துண்டின் பூலோகப் பிறப்பு ஆவான்.

இவன் பூவுலகில் பிறந்தவுடன் அழைக்கப்பட்டு சிவபெருமான் முன்னிலையில் நிறுத்தப்படுகிறான். அவர் மேல் நம்பிக்கை இல்லாதவனாய் அவரை அவன் இழிவுபடுத்த, அவரிடம் தேவைப்படும் வரங்களை கேட்க சொல்கிறார்கள், தேவர்கள். உடனே ஒரு பெண்ணை படைத்துக் கொடுக்குமாறு கேட்க, சிவன் ஒரு பெண்ணை படைத்து கொடுக்கிறார். இதன் பின்னால் தான் அவர் மேல் கலியனுக்கு நம்பிக்கை வருகிறது. அதன் பின்னால் உலகை ஆளும் பொருட்டு பல விதமான வரங்களைக் கேட்கிறான்.

[தொகு] கலியன் கேட்ட வரங்கள்

  • மாயவனாரின் திருமுடி, சக்கரம் மற்றும் இரதம்.
  • சிவனுடைய வெண்ணீறு
  • அந்தணரின் பிறப்பு
  • சக்திக்குரிய வலக்கூறு
  • சிவனின் மூல மந்திரம்
  • சக்தி மூல மந்திரம்
  • தவத்துக்குரிய மூல மந்திரம்
  • பிரம்ம தேவரின் மூல மந்திரம்
  • நாராயணரின் மூல மந்திரம்
  • இலட்சுமியின் மூல மந்திரம்
  • தெய்வ சக்திகளின் மூல மந்திரம்
  • காலனின் மூல மந்திரம்
  • காமாட்சி மூல மந்திரம்
  • கன்னி சரஸ்வதி மூல மந்திரம்
  • காளி தன் மூல மந்திரம்
  • கணபதியின் மூல மந்திரம்
  • சுப்பிரமணியரின் மூல மந்திரம்
  • கிங்கிலியர் தன் மூல மந்திரம்
  • ஆயிரத்து எட்டு அண்டத்துக்குரிய மூல மந்திரம்
  • கூடு விட்டு கூடு பாயிம் வித்தை
  • நாட்டை அழித்து நகரில் கொள்ளை அடித்தல்
  • உலகம் அனைத்தையும் தூங்க வைக்கும் தந்திரம்
  • அயர்த்தி மோகினியின் கரு (உற்பத்தி விதி)
  • ஆவடக்கு மோகினி உருவாக்கும் வித்தை
  • அழைக்க வெகு மோகினியை கட்டுப்படுத்தும் இரகசியம்
  • ஆண்களையும் பெண்களையும் பிரிக்கும் தந்திரம்
  • கோள்களின் செயல்பாடுகளை பயன்படுத்தி குடிகெடுக்கும் தந்திரம்
  • உலகம் அனைத்தும் இயங்காவண்ணம் ஏகம் தனை ஸ்தம்பிக்கச்செய்யும் வலிமை
  • மந்திர வித்தைகள் மற்றும் அதன் கரு
  • பூசை விதிமுறைகள்
  • புவனச்சக்கரத்தின் இயக்க கட்டுப்பாடு
  • தீட்சை விதிமுறைகள் மற்றும் சிவ விதி
  • நீர் மற்றும் கனல் ஆகியவற்றின் மேல் மிதக்கும் வித்தைகள்
  • கலையை ஆட்சி செய்யும் வித்தை
  • மிருகங்களை கட்டுப்படுத்தி வேலை வாங்கும் வித்தை
  • வாதைகளை கட்டுப்படுத்தும் திறமை
  • அட்ட-கர்மங்களிடத்தும் ஆதிக்கம் செலுத்தும் தன்மை
  • மொட்டைக் குறளியை ஏவல் செய்யப் பணிக்கும் உரிமை
  • மந்திரஜாலம், இந்திரஜாலம் மற்றும் மாய்மாலத் தந்திரம்
  • தனக்கு இடையூறு செய்யும் கோள்களை அறிய உதவும் குளிகை
  • வரும் நோய்களை தீர்க்க வைத்திய சாஸ்திரம்
  • தந்திரத்துக்கான சாஸ்திர வகைகள்
  • சிவன், பிரம்மா, விஷ்ணு ஆகிய மூவரின் வடிவம்
  • தனது முற்பிறப்பை அறியும் அறிவு
  • தேவர்களின் பிறப்பு இரகசியம்
  • பறக்கும் குளிகை
  • சிவனை அழைக்கும் குளிகை
  • அனைத்தையும் கண்காணாமல் மறைக்கும் குளிகை
  • திருமாலை அழைக்கும் குளிகை
  • மாயாஜாலம் செய்யும் குளிகை
  • சக்தியை வரவளைக்கும் குளிகை
  • வேதங்களை வரவளைக்கும் குளிகை
  • காளிதனை வேலைவாங்கும் குளிகை
  • கூளிப்பேய் கணங்களை அழைத்து ஏவல் செய்யப் பணிக்கும் குளிகை
  • தேவரையும் வானவரையும் வரவழைக்கும் குளிகை
  • மூவரையும் அழைத்து வேடிக்கை காட்டும் குளிகை
  • தனக்கு பழி செய்தவரை வெல்லும் குளிகை
  • தலைவிதி முதலியவற்றை அறியப் பயன்படும் குளிகை

[தொகு] ஆதாரம்

  • நா.விவேகானந்தன், அகிலத்திரட்டு அம்மானை மூலமும் உரையும், முதற் பாகம், 2003.