சோமநாதபுரம்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
சோமநாதபுரம் மைசூர் மாவட்டத்தில் (கர்நாடக மாநிலம், இந்தியா) உள்ள ஒரு சிறு நகரம் ஆகும். இந்நகரமே ஹோய்சாளப் பேரரசின் கட்டிடக்கலையின் முதன்மையான இருப்பிடம் ஆகும். இங்கு தான் கலைநயம் மிக்க கேசவர் கோயில் அமைந்துள்ளது. இந்நகரம் பதிமூன்றாம் நூற்றாண்டில் வாழ்ந்த மூன்றாம் நரசிம்மன் என்ற மன்னனின் அமைச்சரான சோமா என்பவரால் கட்டப்பட்டது. எனவே இது சோமநாத புரம் என்று வழங்கப்பட்டது. இங்குள்ள கேசவர் கோயில் மிக நுட்பமான சிற்பவேலைப்பாடுகளைக் கொண்டுள்ளது.