அன்னை தெரேசா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.

அன்னை தெரேசா 1985
அன்னை தெரேசா 1985

அன்னை தெரேசா (எக்னஸ் கோன்சா பொஜக்ஸ்யூ, ஆகஸ்ட் 26, 1910 - செப்டம்பர் 5, 1997) இந்தியாவில் கருணை இல்லம் (Missionaries of Charity) என்ற கிறிஸ்தவ சமூகசேவை அமைப்பை தோற்றுவித்த அல்பேனிய உரோமன் கத்தோலிக்க அருட்சகோதரியாவார். கொல்கத்தாவின் வறிய மக்களிடையே அவர் செய்த நற்பணிகள் உலக பிரசித்தமாக்கியது. இவரது மரணத்தின் பின்னர் பாப்பரசர் இரண்டான் அருளப்பர் சின்னப்பரால் ஆசிர்வதிக்கப்பட்டவராக அறிவிக்கப்பட்டார்.

1962 இல் சமாதானம் மற்றும் உலக புரிந்துணர்வுக்கான மக்சேசே விருது வழங்கப்பட்டது. 1972 இல் பாப்பரசர் 23ஆம் அருளப்பர் சமாதான பரிசும் கபிரியேல் விருதும் வழங்கப்பட்டது. 1973 இல் அவருக்கு டெம்லெடொன் விருதும், 1979 இல் அமைதிக்கான நோபல் பரிசும், 1980 இல் இந்திய அரசின் பாரத ரத்னா பட்டமும் வழங்கப்பட்டது. 1981 இல் எய்டி ஆட்சியாளரான ஜியாண்-குளோட் டவலியரினால் லெஜென் டி ஒணர் (Legion d'Honneur) என்ற கௌரவ பட்டமும் வழங்கப்பட்டது. 1985 இல் அமெரிக்காவின் அதியுயர் விருதான விடுதலைக்கான அதிபர் பதக்கம் வழங்கப்பட்டதோடு 1996 இல் கௌரவ அமெரிக்க குடிமகள் தகமையும் வழங்கி கௌரவிக்கப்பட்டார். 1997இல் அன்னை தெரேசாவுக்கு அமெரிக்க காங்கிரஸ் தங்கப்பதக்கம் வழங்கப்பட்டது. மேலும் உயிருடன் இருந்தபோதே இந்திய தபால் தலையில் உருவம் பதிக்கபப்ட்ட முதலாவது நபரும் இவரேயாவார்.

[தொகு] இவற்றையும் பார்க்கவும்