குருத்துத் திசுள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.

கருவுறும் முன் தாயின் கருப்பையில் இருக்கும் முட்டைக்குப் பெயர் ஊசைட் (Oocyte). விந்து(Sperm) சேர்ந்து கருவுற்றபின் அது சைகோட் (Zygote) என்று அழைக்கப் படும். இந்த சைகோட்டில் ஒரே ஒரு திசுள்தான் (cell) இருக்கும். பிறகு இந்த திசுள் பிரிந்து இரண்டாகும். அடுத்து நான்காகும், அடுத்து எட்டாகும். திசுள்கள் இப்படியே இரட்டித்துப் பல்கிப் பெருகி குழந்தை வடிவத்தை அடைந்து வளரத்தொடங்கும். இப்படிப் திசுள்கள் பிரியும் ஆக முதல் நிலையில் இருக்கும் முட்டையை நாம் சினை முட்டை (Embryo) என்று அழைக்கிறோம். சுமார் 1000 திசுள்களுக்குக் குறைவாக உள்ள சினை முட்டையில் இருக்கும் திசுள்களே குருத்துத் திசுள்களாகும் (Stem cell).

பொருளடக்கம்

[தொகு] குருத்துத் திசுள்களின் தன்மை

குருத்து திசுளுக்கு ஒரு சிறப்புத் தன்மை உண்டு. அது உடலில் உள்ள எந்தத் திசுவில் உள்ள திசுளாகவும் மாறும் வல்லமை படைத்தது. அதாவது, அது மூளைத்திசுக்களை உண்டாக்கும் திசுள்களாகவோ, கண்ணின் ஓளிபுகும் குவி ஆடி (convex lens) திசுக்களை உண்டாக்கும் திசுள்களாகவோ, நரம்பு மண்டலத்தை உருவாக்கும் திசுள்களாகவோ அல்லது மனித உடலில் உள்ள எந்தவொரு வகைத் திசுவையும் உண்டாக்கும் திசுள்களாகவோ உருவெடுக்க முடியும்.

[தொகு] குருத்துத் திசுள் ஆராய்ச்சி

[தொகு] குருத்துத் திசுள் ஆராய்ச்சிப் பணிகள்

தற்பொழுது நடக்கும் பெரும்பாலான குருத்துத் திசுள் ஆராய்ச்சிகளின் முக்கிய நோக்கங்கள் மூன்று அகும்.

  • நோய் தீர்த்தல். (Therapeutic purposes)
  • பழுதடைந்த உடற் பாகங்களுக்கு மாற்று பாகங்களை சோதனைச் சாலையில் உருவாக்க முடியுமா என்று ஆய்தல். (Organ replacement)
  • திசுள்கள் எப்படி வகை பிரிகின்றன (Cell differentiation)என்பது குறித்த அடிப்படை அறிவியலை புரிந்துகொள்ளல்.

[தொகு] குருத்துத் திசுள் ஆராய்ச்சியின் நன்மைகள்

குருத்துத் திசுள்களின் மேற்கண்ட தன்மையினால், அவற்றை சிகிச்சைக்கும் பயன் படுத்தலாம். அவற்றிற்கு உடலின் எந்தவொரு திசுவாகவும் மாறும் சிறப்புத்தன்மையுள்ளதால் உடலில் நோயுற்று அழிந்து போகும் அல்லது விபத்துகளில் சிதைந்து போகும் பாகங்களைத் திரும்பப் பழைய நிலைக்கு வளர்க்க அவற்றை உபயோகிக்கும் வகையில் பல ஆராய்ச்சிகளும் உலகில் நடந்து வருகின்றன.

[தொகு] குருத்துத் திசுள் ஆராய்ச்சி குறித்த சர்ச்சைகள்

மனிதனை நகலெடுப்பதால் சமுக வளர்ச்சிக்கு வேண்டிய முக்கிய திறமையுள்ள, அறிவாற்றலுள்ளவர்களை நகலெடுத்து சிறப்பான மனித சமூகங்களை உருவாக்க இயலும் என்று மனித நகலெடுப்பு ஆதரவாளர்கள் வாதிடுகிறார்கள்.உலகின் அனைத்து உயிர்களும் ஒரே அளவில் முக்கியத்துவம் பெற்றவை; ஆகவே இப்படி திட்டமிட்டுத் தீர்மானிக்கப் படும் சமூகத்தால் ஏற்படப் போகும் சீர்கேடுகளையும், இயற்கையை மாற்றியமைப்பதால் விளையக் கூடிய அழிவுகளையும் இன்னொரு சாரார் சுட்டிக்காட்டி கடுமையாக எதிர்க்கிறார்கள். உலகில் மனித நகலெடுப்பிற்கு எதிர்ப்புதான் அதிகம் கிளம்பியிருக்கிறது.


இனப்பெருக்கம் மூலம் மனித நகலெடுக்கும் முயற்சியை எதிர்ப்பது புரிகிறது. ஆனால் சிகிச்சைக்காக குருத்துத் திசுள்களை பயன் படுத்தும் ஆராய்ச்சிகளையும் ஏன் எதிர்க்கப் படுகிறது?குருத்துத் திசுள்களை சினை முட்டையிலிருந்து எடுக்கும் போது சினைமுட்டை அழிக்கப் படும். அப்படி அழியும் போது அது ஒரு உயிரையே அழிப்பதற்குச் சமானம் என்பது இந்த எதிர்ப்பை முன் வைப்பவர்கள் வாதம். அப்படிப் பார்க்கப் போனால் இயற்கை முறையில் கருத்தரிக்க இயலாதவர்களுக்கு கருத்தரிக்க வைக்க இப்போது மருத்துவர்கள் கருப்பையிலிருந்து பல சினைமுட்டைகளை வெளியே எடுத்து மருத்துவம் செய்கிறார்கள். அதில் உபயோகமாகும் சினைமுட்டைகளைத் தவிர மற்றவை அழிக்கப் படுகின்றன. இதை மட்டும் ஒத்துக் கொள்ளலாமா என்று எதிர் கேள்வி கேட்கின்றனர் மற்றொரு சாரார்.