முத்துத் தாண்டவர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.

முத்துத் தாண்டவர் (1525-1625) என்பார் சீர்காழியிலே வாழ்ந்து கருநாடக இசையில் பல இசைப்பாட்டுக்கள் இயற்றியும் பாடியும் பெரும்புகழ் பரப்பிய இசை முன்னோடி. இவர் கருநாடக இசையில் மும்மூர்த்திகள் என்று போற்றப்படும் தியாகராச சுவாமிகள், முத்துசாமி தீட்சதர், சியாமா சாஸ்திரி ஆகிய மூவருக்கும் முன்னிருந்த ஆதி மும்மூர்த்திகளில் ஒருவர். இவர் இயற்றிய பாடல்கள் தமிழில் உள்ளன. கருநாடக ஆதி மும்மூர்த்திகள் எனப்படுபவர்கள் அருணாசலக் கவிராயர் (1712-1779), மாரிமுத்துப் பிள்ளை (1717-1787), முத்துத் தாண்டவர்(1525-1625).

முத்துத் தாண்டவர் மாணிக்கவாசகரைப் போல் தில்லைப் பெருவெளியில் மறைந்தருளினார் என்று சொல்லப்படுகின்றது. இவர் எராளமான இசைப் பாடல்களை இயற்றியுள்ளார்.

இவர் இயற்றிப் பாடிவந்த பாடல்களில் சில:

  • பூலோககயி லாசகிரி சிதம்பரம்மல்லாற், புவனத்தில் வேறுமுண்டோ. இராகம் கல்யாணி, தாளம்- ஜம்பை தாளம்
  • ஈனமொருஸ்தல மின்னமொருகோயி, லின்னமொரு தெய்வ மிப்படியுண்டோ. இராகம் - தோடி, தாளம் - ஏக தாளம்
  • சேவிக்க வேண்டுமையா - சிதம்பரம், சேவிக்க வேண்டுமையா. இராகம் - கல்யாணி, தாளம் - ஏக தாளம்
  • சிற்சபைதனிலே கண்டு கொண்டேனென்றும். இராகம் - நீலாம்பரி, தாளம் - திரிபுடை தாளம்
  • நடனங்கண்ட போதேயென்றன் சடலஞ்செய், பாக்கியமையா. இராகம் - ஆகிரி, தாளம் - ஆதி தாளம்

[தொகு] உசாத்துணை

  • லேனா தமிழ்வானன் (பதிபாசிரியர்), தமிழ் மும்மணிகளின் கீர்த்தனைகள், மணிமேகலைப் பிரசுரம், சென்னை 600 017, முதற்பதிப்பு 1987. பக்கங்கள் 1-108.
  • மு.அருணாசலம், தமிழ்நாட்டில் பண்டை இசை மரபுகள் (பதிப்பு தெரியவில்லை, 1990க்கு முன வெளியிட்டது. டாக்டர் நா. மகாலிங்கம் அவர்களால் அச்சிட்டு நீதிபதி சிவசுப்பிரமணியத்தால் ராணி சீதை ஹாலில் வெளியிட்டது). மு. அருணாசலம், சித்தாந்தம் என்னும் மாத இதழில் (மாதிகையில்) ஏப்ரல் 1990, பக். 98-99ல் ஒரு கட்டுரையில் குறிப்பிட்ட படி முத்துத்தாண்டவர் வாழ்ந்த காலம் 1525-1625.