191 பீச்ட்றீ கோபுரம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.

191 பீச்ட்றீ கோபுரம் (பொதுவாக "பீச்ட்றீ" கோபுரமென்றே அழைக்கப்படுகிறது) அத்லாந்தாவின் நான்காவது உயரமான வானளாவியாகும். 50 மாடிகளையும், 235 மீட்டர் உயரத்தையும் கொண்ட இக் கட்டிடம், உலகின் மிக உயர்ந்த 200 கட்டிடங்களுள் ஒன்றாகும்.

மிகவும் அழகிய தோற்றம் கொண்ட இக் கட்டிடம், 1991, மற்றும் 1998 ஆம் ஆண்டுகளுக்கான போமா (BOMA) விருதைப் பெற்றது. இதன் இரண்டு கோபுரங்களினதும் முகப்புகளுக்கு "ரோசா தாந்தே" எனும் கருங்கல் பலகைகள் பதிக்கப்பட்டுள்ளன. யன்னல்கள், சாம்பல் நிற tinted கண்ணாடிகளால் ஆனவை. ஒவ்வொரு கோபுரமும், இரவில் ஒளியூட்டப் படுகின்ற உச்சிகளைக் கொண்டுள்ளன.

கட்டிடக்கலை நிறுவனங்களான கெண்டால்/ஹீற்றன் அசோசியேற் நிறுவனமும், ஜோன்சன்/பர்கீ ஆர்க்கிட்டெக்ட் நிறுவனமும் இக்கட்டிடத்தை வடிவமைத்துள்ளன.