வரப்பு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.

தமிழக கிராமம் ஒன்றில் வரப்பில் நின்று மேயும் மாடு
தமிழக கிராமம் ஒன்றில் வரப்பில் நின்று மேயும் மாடு

விளை நிலங்களுக்கு இடையே உள்ள மண் தடுப்புகள் வரப்புகள் என்று அழைக்கப்படுகின்றன. இவை பெரும்பாலும் ஓர் ஆள் நடந்து செல்லத்தக்க அகலத்தில் அமைந்திருக்கும். இவை நிலத்தில் மழை நீரையும் பாசன நீரையும் தேக்கி வைக்கவும், மேம்பட்ட விரைந்த நீர்ப்பாசனத்திற்கும் உதவுகின்றன. நிலத்தில் பயிர் சாகுபடி செய்யப்பட்டுள்ள பொழுது வயலை கடந்து செல்ல உதவும் பாதைகளாகவும் அண்டை நிலங்களுடன் எல்லையை வரையறுக்கவும் இவை பயன்படுகின்றன. வரப்பில் வளரும் புல், கால்நடைகளின் மேய்ச்சலுக்கு பயன்படுகின்றது. மேலும், நிலத்தை பார்வையிடப் பயன்படும் ஓர் உயர்ந்த தளமாகவும் வரப்புகள் உதவுகின்றன. பயிர் சாகுபடிக்கு முன் வரப்பு வெட்டித் திருத்துவது முக்கியப் பணியாகும். வரப்புகளை உட்புறமாக அதிகமாக வெட்டுவதன் மூலம் வரப்பை நகர்த்தி அண்டை நிலத்தை அபகரிக்கும் வாய்ப்பு உள்ளதால் சில சமயங்களில் வரப்புகள் நில உரிமை தகராறுகளுக்கு காரணமாய் அமைவதும் உண்டு.

"http://ta.wikipedia.org../../../%E0%AE%B5/%E0%AE%B0/%E0%AE%AA/%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81.html" இலிருந்து மீள்விக்கப்பட்டது