மத்தேயு நற்செய்தி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.

புனித மத்தேயு,புனித ஈசாக்கு தேவாலயம் பீற்றஸ்பேக்,இரசியா
புனித மத்தேயு,
புனித ஈசாக்கு தேவாலயம் பீற்றஸ்பேக்,இரசியா
புதிய ஏற்பாடு
மத்தேயு
மாற்கு
லுக்கா
யோவான்
பணிகள்
உரோமர்
1 கொரிந்தியர்
2 கொரிந்தியர்
கலாத்தியர்
பிலிப்பியர்
பிலேமோன்
1 தெசலோனிக்கியர்
2 தெசலோனிக்கியர்
எபேசியர்
கொலொசெயர்
1 திமோத்தேயு
2 திமோத்தேயு
தீத்து
எபிரெயர்
யாக்கோபு
பேதுரு
பேதுரு
யோவன்
யோவன்
யோவன்
யூதா
வெளிபபடுத்தல்கள்


மத்தேயு நற்செய்தி (மத்தேயு சுவிசேசம்) விவிலியத்தின் புதிய ஏற்பாட்டிலுள்ள நான்கு நற்செய்தி நூல்களின் முதலாவது நூலாகும். இது இயேசுவின் வாழ்கை வரலாற்றை குறிக்கிறது. இநூல் புதிய ஏற்பாட்டின் முதலாவது நூலாகும்.இது இயேசுவின் சீடரான மத்தேயுவின் பெயரை கொண்டுள்ளது எனினும் இநூலின் எழுத்தாளர் அவரா என்பது கேள்விக்குறியதே. வேறு ஒருவர் எழுதி புனித மத்தேயுவின் பெயரில் வெளியிட்டிருக்கலாம் என்பது இப்போது ஏற்றுக்கொள்ளப் பட்ட கருத்தாகும். மற்றைய நற்செய்தி நூல்களான மாற்கு,லூக்கா என்பவற்றுடன் பொதுவான வசன எடுத்தாழ்கையும், உள்ளடக்கத்தையும் கொண்டுள்ளது.

[தொகு] அமைப்பு

இந்நூல் மொத்தம் 28 அதிகாரங்களை கொண்டுள்ளது. இந்நூலை பொதுவாக 4 பிரதான பிரிவுகளாக பிரித்து நோக்கலாம். ஒவ்வொன்றும் இயேசுவின் வாழ்கையின் வெவ்வேறு பகுதிகளை குறிக்கிறது.

  1. இயேசுவின் வம்சவரலாறு,பிறப்பு மற்றும் குழந்தை பருவம் (அதிகாரம் 1-2)
  2. ஸ்நாபக யோவானின் பகிரங்க வாழ்வும் இயேசுவின் ஞானஸ்நானமும் (அதிகாரம் 3; 4:11)
  3. கலிலேயாவில் இயேசுவின் பகிரங்க வாழ்க்கை (4:12–26:1)
    1. மலைப்பிரசங்கம் (அதிகாரம் 5-7)
    2. மறைபரப்பு பணிக்கு சீடரை பணிக்கிறார் (10-11:1)
    3. உவமைகள் (அதிகாரம் 13)
    4. கிறிஸ்தவரிடயேயான தொடபுகள் (அதி 18-19:1)
    5. இரண்டாம் வருகை பற்றிய முன்னறிவித்தல் (அதிகாரம் 24-26:1)
  4. இயேசுவின் பாடுகள்,மரணம்,உயிர்ப்பு,மறைபரப்பு பணிப்பு (28:16–20)

இநூலின் பிரதான நோக்கம் நாசரேத்தூர் இயேசுவே வாக்களிக்கப்பட்ட மெசியா என்பதை வழியுறுத்துவதாகும். மேலும் இந்நூல், இயேசு பழைய ஏற்பாட்டில் முன்னுரைக்கப்பட்ட தீர்க்கதரிசனங்களை நிறைவுசெய்ய வந்தார் என்பதை முன்னிருத்தி நிற்கிறது. இதற்காக குறைந்தது 65 சந்தர்ப்பங்களில் பழைய எற்பாட்டை மேற்கோள் காட்டுகிறது. இந்நூலின் அடிபடை நோக்கத்தை பின்வ்ரும் வசனம் நன்கு விளக்குகிறது.

(இயேசு:)"நியாயப் பிரமாணத்தையோ தீர்க்கதரிசனங்களையோ அழிக்க வந்தேன் என்று எண்ணிக் கொள்ளாதேயுங்கள் அழிக்கிறதற்கு அல்ல, நிறைவேற்றுகிறதற்கே வந்தேன்"(5:17)

[தொகு] சில தகவல்கள்

புனித மத்தேயு எபிரேய (அரமய்க்) மொழியில் ஒரு நற்செய்தி எழுதியதாகவும் அது அழிந்துபோனதாகவும் கருதப்படுகிறது. பிறகு அந்நூலின் கிரேக்க மொழிபெயர்ப்பு அல்லது மூல நூலுடன் பழக்கப்பட்ட ஒருவர் தொகுத்த விடயங்கள் புனித மத்தேயுவின் பெயரில் வெளியிடப்பட்டுள்ளது. இது எழுதப்பட்ட காலம் குறித்த ஒரு கருத்து கிடயாது. பொதுவாக கி.பி. 50-100 இடையிலான காலப்பகுதி என கருதப்படுகிறது.

[தொகு] உசாத்துணை