சிற்பி (சி. சரவணபவன்)
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
சிற்பி சி. சரவணபவன் (பி. 1933) ஈழத்தின் குறிப்பிடத்தக்க ஒரு எழுத்தாளர். சிறுகதையாசிரியர், நாவலாசிரி்யர் மற்றும் சஞ்சிகையாசிரியர் எனப் பல தளங்களிலும் இயங்கியவர். சிற்பியின் முதற் சிறுகதையான 'மலர்ந்த காதல்' 1952 இல் சுதந்திரனில் பிரசுரமானது.
ஈழத்து எழுத்தாளர் பன்னிரண்டு பேரின் சிறுகதைகளைத் தொகுத்து 1958 இல் ஈழத்துச் சிறுகதைகள் என்னும் சிறுகதைத் தொகுப்பை கந்தரோடைத் தமிழருவிப் பதிப்பகம் மூலம் வெளியிட்டார். ஈழத்து எழுத்தாளர்கள் பலரது சிறுகதைகள் தொகுக்கப்பட்டது இதுவே முதற்தடவையாகும். சிற்பி கலைச்செல்வியின் ஆசிரியர் என்பது குறிப்பிடத்தக்கது.