தபேலா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.

தபேலா
தபேலா

தபேலா (அல்லது தப்லா) இந்துஸ்தானி இசையில் மிக முக்கியமான தாள வாத்தியம். கடந்த 200 ஆண்டுகளிலேயே தபேலா பிரபல்யம் அடைந்துள்ளது. கச்சேரியின் பிரதான பாடகர் அல்லது வாத்தியக்கருவியை இசைப்பவர் தபேலா ஜதிகளை (டேக்காக்களை) அனுசரித்தே பாட அல்லது வாத்தியத்தை இசைக்க வேண்டும்.

[தொகு] தபேலாவின் அமைப்பு

தபேலா 2 பாகங்களால் ஆனது. இடது கையால் வாசிக்கப்படுவது பயான் என்றும் வலது கையால் வாசிக்கப்படுவது தயான் என்றும் அழைப்பர். பயான் மண்ணாலோ செம்பாலோ ஆக்கப்படும். தயான் மரத்தினால் ஆக்கப்பட்டு இருக்கும். இரண்டினதும் மேற்பாகம் தோலினால் மூடப்பட்டிருக்கும்.

உருளை வடிவான மரத்துண்டுகள் தபேலாவில் பொருத்தப்பட்டிருக்கும். இத்துண்டுகளை மேலேயும் கீழேயும் நகர்த்துவதன் மூலம் சுருதியைக் கூட்டிக் குறைக்கலாம். தபேலா 1 அடி முதல் 15 அங்குலம் வரை நீளம் உள்ளது. பயான் 1 அங்குலம் அல்லது 2 அங்குலம் தயானை விடக் குறைவானது ஆகும். மிருதங்கத்தைப் போன்று மாவும், தண்ணீரும் கலந்த பாயாவில் பூசப்படும். இப்பச்சை நிரந்தரமாகப் பொருத்தப்பட்டிருக்கும்.

[தொகு] வாசிக்கும் முறை

தபேலா வாசிப்பதில் வெவ்வேறு பாணிகள் உண்டு. இப்பாணிகள் Pur Va Baj, Dilli Baj, Ajrara Baj போன்றன. தற்போது தென்னிந்தியாவில் பக்திப்பாடல், மெல்லிசைப்பாடல், பஜனைப்பாடல்களுக்கும் தபேலா பக்கவாத்தியமாக வாசிக்கப்படுகிறது.

[தொகு] பிரபல தபேலா கலைஞர்கள்

அபான் மிஸ்ரி (Mistri), அல்லா ரக்கா கான் (Alla Rakka Khan), அவரது புதல்வர் உஸ்தாத் ஸாகிர் ஹூசேன் (usted Zakir Hussain) ஆகியோர் தபேலா வாசிப்பதில் பிரபல்யம் பெற்றவர்கள்.

"http://ta.wikipedia.org../../../%E0%AE%A4/%E0%AE%AA/%E0%AF%87/%E0%AE%A4%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B2%E0%AE%BE.html" இலிருந்து மீள்விக்கப்பட்டது