அஷ்டபதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.

அஷ்டபதி என்னும் மகா காவியம் ஜயதேவரால் அருளிச் செய்யப்பட்டது ஆகும். இது கீதகோவிந்தம் என்றும் அழைக்கப்படுகின்றது.

[தொகு] இலட்சணம்

  • ராதை, கிருஷ்ணன், சகி ஆகிய மூவரே இக்காவியத்தின் கதாபாத்திரங்கள்.
  • பல விருத்தங்களால் அமைந்து சுலோகங்களால் இக்காவியம் ஆரம்பிக்கின்றது.
  • பல இராகங்களிலும், தாளங்களிலும் வெகு அழகாய் இயற்றப்பட்டுச் சொற்சுவை, பொருட்சுவை ததும்பும் 24 கீர்த்தனைகளே இக்காவியத்தின் முக்கிய பாகமாகும். அழகான சுலோகங்கள் நடுவிலும், முடிவிலும் காணப்படுகின்றன.
  • ஒவ்வொரு கீர்த்தனத்திலும் 8 சரணங்கள் இருப்பதால் அஷ்டபதி எனப் பெயர் பெற்றது. (அஷ்ட - எட்டு)
  • கருணை, வீரம், சாந்தி முதலிய ஒன்பது ரசங்களில் மனோகரமான, மனதுக்கு இரம்மியமான சிருங்கார ரசத்தையே பிரதானமாகக் கொண்டு அமைந்துள்ளது. அதாவது வெளிப்பொருளாக சிற்றின்பமே வர்ணிக்கப்பட்டுள்ளது. ஆனால் உட்பொருளை நோக்கின் கிருஷ்ணனை பரமாத்மாவாகவும், ராதையை ஜீவாத்மாவாகவும், சகியை ஞான குருவாகவும் கொண்டு, ஜீவாத்மாவானது பரமாத்மாவை அடைய முயலும் நிலையை விளக்கிக் காட்டுவது தெரிகின்றது.

[தொகு] அஷ்டபதியின் தனிப்பெருமை

இந்திய சங்கீத சாஸ்திர நூல்களில் காலத்தால் முந்தியதென்று வழங்கும் சாரங்கதேவருடைய சங்கீத ரத்னாகரத்துக்கும் ஏறக்குறைய 200 வருடங்கள்க்கு முந்திய சங்கீத முறையை அஷ்டபதி விளக்குகின்றது. எனவே தென்னிந்தியாவும், வட இந்தியாவும் அடங்கியுள்ள பாரத நாட்டின் வெகு புராதன இசைநூல் இதுவாகும்.

[தொகு] ஜயதேவருடைய காலம்

இவரின் காலத்தை நிர்ணயிப்பதில் ஆராய்ச்சி அறிஞர்களிடையே கருத்து வேற்றுமை நிலவி வருகின்றது. எனினும் இவர் கி.பி. 11வது நூற்றாண்டின் முடிவில் வாழ்ந்திருப்பார் எனக் கருதப்படுகின்றது.