கூட்டு மதிநுட்பம்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
கூட்டாக பல மனிதர்களின் பங்களிப்பை உள்வாங்கி பலக்கிய ஆக்கங்களை ஆக்க தக்க அறிவுக்கட்டமைப்பை கூட்டு மதிநுட்பம் எனலாம். சமூகத்தின் பல செயல்பாடுகள் கூட்டு மதிநுட்பத்தில்தான் தங்கி இருக்கின்றன. கட்டிடம் கட்டுவது, திரைப்படம் தயாரிப்பது, நாட்டை நிர்வாகிப்பது போன்ற செயல்பாடுகள் கூட்டு மதிநுட்பத்தின் மூலமே சாத்தியமாகின்றன.
கூட்டு மதிநுட்பம் தானாக உருவாகுவதாகவோ அல்லது இயங்குவதாக கருத முடியாது. மனிதர்கள் கூட்டாக இணைந்து ஒரு குறிக்கோளுக்காக கூட்டு மதிநுட்பத்தை ஆக்கி, சமூகமாக பராமரித்து, விரிவாக்கி, பயன்பெறுகின்றார்கள். ஒரு கூட்டு மதிநுட்பத்தை சார்ந்த சமூகம் தேக்கமடையும் பொழுது அல்லது கலையும் பொழுது அந்த கூட்டு மதிநுட்பமும் அழிந்துபோகும். எடுத்துக்காட்டாக முன்னர் சிறப்புற்றிருந்து பின்னர் அழிந்த நாகரீகங்ளைச் சுட்டலாம்.