இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.

இந்தியாவில் 28 மாநிலங்களும், 6 நடுவண் அரசின் ஆட்சிப்பகுதிகளும், நாட்டின் தலைநகரப் பகுதி ஒன்றும் உள்ளன.


மாநிலங்கள்:

  1. ஆந்திரப் பிரதேசம்
  2. அருணாசலப் பிரதேசம்
  3. அஸ்ஸாம்
  4. பீகார்
  5. சத்தீஸ்கர்
  6. கோவா
  7. குஜராத்
  8. ஹரியானா
  9. இமாசலப் பிரதேசம்
  10. ஜம்மு காஷ்மீர்
  11. ஜார்க்கண்ட்
  12. கர்நாடகம்
  13. கேரளம்
  14. மத்தியப் பிரதேசம்
  1. மகாராஷ்டிரம்
  2. மணிப்பூர்
  3. மேகாலயா
  4. மிசோரம்
  5. நாகாலாந்து
  6. ஒரிசா
  7. பஞ்சாப்
  8. இராஜஸ்தான்
  9. சிக்கிம்
  10. தமிழ்நாடு
  11. திரிபுரா
  12. உத்தராஞ்சல்
  13. உத்தரப் பிரதேசம்
  14. மேற்கு வங்காளம்

நடுவண் அரசின் ஆட்சிப்பகுதிகள்:

நாட்டின் தலைநகரப் பகுதி:

[தொகு] இந்திய மாநிலங்களின் உருவாக்கம்

தற்போதைய இந்தியா, பாகிஸ்தான், வங்காளதேசம், பூட்டான் ஆகிய நாடுகளை உள்ளடக்கியிருந்த பிரித்தானிய இந்தியா இரண்டு விதமான துணை அரசியல் அலகுகளைக் கொண்டிருந்தது. மாகாணங்கள், வைஸ்ராயினால் நியமிக்கப்பட்ட, கவர்னர் அல்லது சிறப்பு கமிஷனர் தரத்திலுள்ள பிரித்தானிய அதிகாரிகளால் நேரடியாக ஆளப்பட்டன. சமஸ்தானங்கள், பிரித்தானியரின் மேலாதிக்கத்தை ஏற்றுக்கொண்ட உள்ளூர் பரம்பரை ஆட்சியாளர்களால் ஆளப்பட்டுவந்தன. பிரித்தானிய இந்தியா 15 மாகாணங்களைக் கொண்டிருந்தது: அஜ்மேர்r-மேர்வாரா, அஸ்ஸாம், பலுச்சிஸ்தான், வங்காளம், பீகார், பம்பாய், மத்திய மாகாணங்களும், பெராரும், கூர்க், டெல்லி, மதராஸ், வடமேற்கு எல்லை, ஒரிசா, பஞ்சாப், சிந்து, மற்றும் ஐக்கிய மாகாணங்கள். பிரித்தானிய இந்தியாவில், பல்வேறு அளவுகளில் பல சமஸ்தானங்களும் இருந்தன. இவற்றுள், ஒரு கோடிக்கு மேல் சனத்தொகையைக் கொண்ட ஐதராபாத் தொடக்கம், மிகச் சிறிய சமஸ்தானங்கள் வரை அடங்கி இருந்தன. இருந்தன. இவற்றை விட வேறு இரு ஐரோப்பிய நாடுகளும் இந்தியாவில் சில பிரதேசங்களை ஆண்டு வந்தன. போத்துக்கீச இந்தியா, கோவா, தமனும் தியுவும், தட்ராவும் நாகர் ஹவேலியும் ஆகிய கரையோரப் பிரதேசங்களையும், பிரெஞ்சு இந்தியா, சண்டர்நகர், Yanaon, பாண்டிச்சேரி, காரைக்கால், மாகே ஆகிய ஐந்து பிரதேசங்களையும் உள்ளடக்கியிருந்தன.

1947 ல் இந்திய பாகிஸ்தான் பிரிவினையின் போது, மேற்படி மாகாணங்களும், சமஸ்தானங்களும், இரு நாடுகளுக்கு மிடையே பங்கிடப்பட்டன. பஞ்சாப், வங்காளம் ஆகிய இரண்டும் மட்டும், சமய அடிப்படையில் பிரித்து வழங்கப்பட்டன. ஐதராபாத்தின் முஸ்லிம் ஆட்சியாளர் சுதந்திரமாக இருக்க முயன்றாரெனினும், இந்தியப் படை தலையிட்டு அதனை இந்தியாவுடன் இணைத்தது. ஜம்மு காஷ்மீருக்கு இரு நாடுகளுமே உரிமை கோரின. பெரும்பான்மை மக்கள் முஸ்லிம்களாக இருந்தார்கள், இந்துவான ஆட்சியாளர் நாட்டை இந்தியாவுடன் இணைத்தார்.

1950 ல், இந்திய அரசியல் சட்டம் அமுலுக்கு வந்ததுடன், பலவகையான மாநிலங்கள் உருவாக்கப்பட்டன.

முன்னர் மாகாணங்களாயிருந்த, பிரிவு A மாநிலங்கள், கவர்னராலும், தெரிவுசெய்யப்பட்ட சட்டசபையாலும் ஆளப்பட்டன. இந்தப் பிரிவிலடங்கிய ஒன்பது மாநிலங்களாவன; அஸ்ஸாம், மேற்கு வங்காளம், பீகார், பம்பாய், மத்தியப் பிரதேசம் (முன்னர் மத்திய மாகாணங்களும், பெராரும்), மதராஸ், ஒரிசா, பஞ்சாப், உத்தரப் பிரதேசம் (முன்னாள் ஐக்கிய மாகாணங்கள்).

இவற்றையும் பார்க்கவும்: சனத்தொகை அடிப்படையில் இந்திய மாநிலங்களின் பட்டியல், துணைத் தேசிய அமைப்புகளின் தலைநகரங்கள், பொருளாதாரத்தின் அளவுப்படி இந்திய மாநிலங்கள்

[தொகு] வெளியிணைப்புகள்



இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும் இந்திய தேசியக் கொடி
அருணாசலப் பிரதேசம் | அஸ்ஸாம் | ஆந்திரப் பிரதேசம் | இமாசலப் பிரதேசம் | உத்தரப் பிரதேசம் | உத்தராஞ்சல் | ஒரிசா | கர்நாடகம் | குஜராத் | கேரளம் | கோவா | சத்தீஸ்கர் | சிக்கிம் | தமிழ் நாடு | திரிபுரா | நாகாலாந்து | பஞ்சாப் | பீகார் | மகாராஷ்டிரம் | மணிப்பூர் | மத்தியப் பிரதேசம் | மிசோரம் | மேகாலயா | மேற்கு வங்காளம் | ராஜஸ்தான் | ஹரியானா | ஜம்மு காஷ்மீர் | ஜார்க்கண்ட்
யூனியன் ஆட்சிப்பகுதி: அந்தமான் நிக்கோபார் தீவுகள் | சண்டீகர் | தமன் தியூ | தாதர் நகர் ஹவேலி | பாண்டிச்சேரி | லட்சத்தீவுகள்
தேசிய தலைநகரப் பகுதி: தில்லி
ஏனைய மொழிகள்