காந்தி கிராமம் கிராமியப் பல்கலைக்கழகம்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
காந்தி கிராமம் கிராமியப் பல்கலைக்கழகம் தமிழ்நாட்டுப் பல்கலைக்கழகங்களுள் ஒன்றாகும். இது 1976 ஆகஸ்ட் 3 ஆம் நாள் மத்திய அரசால் தன்னாட்சி அதிகாரம் பெற்ற பல்கலைக்கழகமாகியது. திண்டுக்கல் மாவட்டத்தின் காந்தி கிராமத்தில் 300 ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்துள்ளது. கிராம சமுதாய அறிவியல், கிராம வளர்ச்சி, அயல்நாட்டு மொழிகள், தமிழ், இந்திய மொழிகள், கிராமியக் கலைகள், கிராம சுகாதாரம் மற்றும் நலவாழ்வு போன்ற துறைகள் இங்கு உள்ளன.