காமவர்த்தனி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.

  • 51 வது மேளகர்த்தா. "பிரம்ம" எனப்ப்டும் 9 வது சக்கரத்தில் 3 வது மேளம். மாயாமாளவகௌளையின் நேர் பிரதி மத்திம இராகம் ஆகும்.
ஆரோகணம்: ஸ ரி132 ப த1 நி3 ஸ்
அவரோகணம்: ஸ் நி31 ப ம23 ரி1
  • இந்த இராகத்தில் ஷட்ஜம், சுத்த ரிஷபம் (ரி1), அந்தர காந்தாரம் (க3, பிரதி மத்திமம் (ம2), பஞ்சமம், சுத்த தைவதம் (த1), காகலி நிஷாதம் (நி3)ஆகிய சுரங்கள் வருகிறன.

[தொகு] இதர அம்சங்கள்

  • பழமையான இராகம். அசம்பூர்ன மேள பத்ததியில் "காசிராமக்கிரியா" என்றழைக்கப்பட்டது.
  • காந்தாரத்தை அசைக்கமல் பாட வேன்டும்.
  • கருணைச் சுவையை வெளிப்படுத்தும் இராகம். எப்பொழுதும் பாடலாம்.
  • பண்டைத்தமிழிசையில் "சாதாரிப்பண்" என்றழைக்கப்பட்டது.
  • மூர்ச்சனாகாரக மேளம். இந்த இராகத்தின் நிஷாத மூர்ச்சனை கனகாங்கி மேளமாகும்.
  • தாரச்தாயி காந்தாரத்திற்கு மேல் சஞ்சாரம் காண்பததரிது.
  • ஜண்டசுர வரிசைப் பிரயோகங்கள், தாட்டு சுரப்பிரயோகங்கள், பிரத்தியாகத கமகங்கள் இந்த இராகத்திற்கு அழகைக் கொடுக்கின்றன.
  • இந்துஸ்தானி இசையில் "பூர்வி தாட்" என்று பெயர்.

[தொகு] உருப்படிகள்

  • கிருதி : ஈசனே கோடி : மிஸ்ர சாபு : முத்துத் தாண்டவர்.
  • கிருதி : ரகுவர நன்னு : ஆதி : தியாகராஜர்.
  • கிருதி : குஞ்சித பதத்தை : ரூபகம் : கோபாலகிருஷ்ண பாரதியார்.
  • கிருதி : சிவ சிவ என : மிஸ்ர சாபு :தியாகராஜர்.
  • கிருதி : விசாலாட்சம் : மிஸ்ர சாபு :முத்துஸ்வாமி தீட்சிதர்.