கதிரைமலைப்பள்ளு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.

ஈழத்துக் கதிரைமலைப்பள்ளினைப் பின் பற்றியே தமிழகத்திற் பள்ளுப் பிரபந்தங்கள் எழுந்தன என்பர். இந்நூல் 130 செய்யுள்கள் கொண்டது. பிற்காலத்திய இடைச்செருகல்கள் சிலவுங் காணப்படுகின்றன.

இந்நூலாசிரியரின் பெயர் புலப்படவில்லை. (1478 - 1519 )இல் நல்லூரிலிருந்து அரசாண்ட பரராசசேகர மகாராசாவின் காலத்தது இந்நூல் என்பதற்குப் பல ஆதரங்களுள. பரராசசேகரனின் ஆணையின்படி பன்னிரு புலவரால் இயற்றப்பட்ட பரராசசேகரம் என்னும் வைத்தியநூலில் தென்கதிரைவேலர்' பலவிடங்களிற புகழப்படுகிறார். இப் பன்னிருபுலவர்களுள் ஒருவரே 'கதிரைமலைப்பள்ளு'ப் பாடியிருக்ககூடும்.