பேச்சு:அ.ந.கந்தசாமி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.

இந்நிலையில் அறிஞர் அ.ந.கந்தசாமியின் படைப்புகளைத் திரட்டும் பணியில் கடந்த பத்து ஆஆண்டுகளுக்கும் மேலாக ஈடுபட்டுக் கொண்டு வருகின்றேன். அவற்றைத் தேடும் பணியில் இதுவரையில் பெரிதாகப் பலன் ஏற்பட்டதென்று கூறுவதற்கில்லை. இருந்தாலும் ஓரளவு முன்னேற்றம் கண்டிருக்கின்றேன் என்றுதான் கூறவேண்டும். இதுவரையில் அவரது இருபதுக்கும் சற்று அதிகமான கவிதைகள், ஐந்து சிறுகதைகள், 'மதமாற்றம்' நாடகம், 'மனக்கண்' நாவல் (அத்தியாயம் 30இனை இதுவரையில் பெற முடியவில்லை), ஏழெட்டுக் கட்டுரைகள், அவரது தாஜ்மகால் என்னும் ஓரங்க நாடகமொன்று, 'வெற்றியின் இரகசியங்கள்' எனக் குறைந்த அளவு ஆஆக்கங்களையே பெறமுடிந்துள்ளது. மனக்கண் நாவல் சுவடிகள் திணைக்களத்துக்கு நேரில் தொடர்பு கொண்டு பெறப்பட்டது. அதனைப் பிரதிகளெடுத்து அனுப்பிய அதன் இயக்குநருக்கு எனது நன்றிகள். மேலும் அ.ந.க பற்றிய ஏனையவர்கள் சில எழுதிய கட்டுரைகள், , அந்தனி ஜீவாவின் 'சாகாத இலக்கியத்தின் சரித்திர நாயகன்' என்னுமொரு தொடர் கட்டுரை போன்ற படைப்புகள் சிலவற்றையும் பெறமுடிந்துள்ளது. அண்மையில் கே.எஸ்.சிவகுமாரன் கூட 'டெய்லி நியூஸ்" பத்திரிகையில் அ.ந.க பற்றிய தனது அனுபவங்களைப் பகிர்ந்து கட்டுரையொன்று எழுதியிருந்தது குறிப்பிடத் தக்கது. அ.ந.க பற்றி இந்நிலையில் பல முதிய எழுத்தாளர்களுடன் அ.ந.கவின் படைப்புகள் தொடர்பாகத் தொடர்பு கொண்டபொழுது அவர்களாலும் அவர்களது வயது காரணமாகப் பெரிதாக உதவ முடியவில்லை. இந்நிலையில் கொழும்பிலுள்ள சில பதிப்பகங்களுடன் தொடர்பு கொண்டபொழுதும் பெரிதாக அவர்களும் ஆர்வம் காட்டவில்லை. இந்நிலையில் பதிவுகள் இதழில் இதுபற்றி அறிவித்தலொன்று வெளியிட்டிருந்தோம். கொழும்பிலிருந்து பேரின்பநாயகம் மயூரன் என்னுமொரு இளைஞர் என்னுடன் தொடர்பு கொண்டு தன்னால் முடிந்த உதவிகளைச் செய்வதாக முன்வந்தார். அவரது ஒத்துழைப்புக்கு எனது தனிப்பட்ட நன்றிகள். அதன் முதற்படியாக அவர் திருமதி கமலினி செல்வராசனுடன் தொடர்புகொண்டு அவரிடமிருந்து பெற்ற அறிஞர் அ.ந.கந்தசாமியின் இளைமைக்காலப் புகைப்படமொன்றினை எமக்கு அனுப்பியிருந்தார். அதனையே நீங்கள் இங்கு காண்கின்றீர்கள். இதற்காக திருமதி கமலினி செல்வராசனுக்கும் எமது நன்றிகள்.

'மனக்கண்' நாவலின் அத்தியாயம் 30ஐத்தவிர அனைத்து அத்தியாயங்களும் எம்மிடமுள்ளன. எனவே யாராவது அந்த 30வது அத்தியாயத்தை வைத்திருந்தால் எமக்கு அனுப்பி வைத்து உதவினால் நன்றியாகவிருப்போம். மயூரனும் இது விடயத்தில் தன்னால் முடிந்த உதவிகளைச் செய்வதாகக் கூறியுள்ளார்.


2. சாகித்திய மண்டலத்தின் "பா ஓதல்" கவி அரங்கிலும் கந்தசாமியின் குரல் ஒலித்தது. "கடவுள் என் சோர நாயகன்" என்னும் தலைப்பில் அவர் ஓதிய பா, அவரே குறிப்பிட்டதுபோல, தமிழுக்கே புதியது. "நாயகனாகவும், நாயகியாகவும், குழந்தையாகவும் மற்றும் பலவாறாகவும் கடவுளைத் தமிழ்க் கவிஞர் பலர் பாவித்திருக்கின்றார்கள். ஆனால் எவராவது சோர நாயகனாகப் பாவித்ததிண்டோ?" என்றார் கந்தசாமி. [இக்கவிதையை யாராவது வைத்திருந்தால் எமக்கு அனுப்பி வைத்துதவவும். எம்முடன் ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சலில் தொடர்புகொள்ளலாம்.- ஆசிரியர்

அ.ந.க. தனது இறுதிக்காலத்தில் 'களனி வெள்ளம்' என்னுமொரு நாவலினையும் தோட்டத்தொழிலாளர்களை மையமாக வைத்து எழுதிக் கொண்டிருந்தார். அவர் இறந்ததும் எழுத்தாளர் செ.கணேசலிங்கனிடமிருந்த அப்பிரதி 1983 கலவரத்தில் எரியுண்டு போனதாக அறிகின்றோம். செ.கணேசலிங்கன் அ.ந.க.வின் இறுதிக் காலத்தில் அவரைப் பராமரித்தவர்களிலொருவர். அதுபற்றித் தனது குமரன் சஞ்சிகையில் அ.ந.க.வின் இறுதிக்காலம் பற்றிய தொடர் கட்டுரையொன்றினையும் எழுதியுள்ளார். இக்கட்டுரைத் தொடரினை யாராவது வைத்திருப்பின் எமக்கு அனுப்பி வைத்தால் நன்றியுடையவர்களாகவிருப்போம். அ.ந.க.வின் படைப்புகளை வைத்திருக்கும் எழுத்தாளர்கள் அவற்றை எமக்கு அனுப்பி வைத்தால் நன்றியாகவிருப்போம். அ.ந.கவுடன் பழகிய எழுத்தாளர்கள் அவருடனான தமது அனுபவங்களைப் பதிவுகளுடன் பகிர்ந்து கொண்டால் அவற்றை நாம் பதிவுகளில் பிரசுரிப்போம். அத்துடன் எதிர்காலத்தில் அ.ந.கவின் போதுமான படைப்புகள் கிடைத்ததும், அவற்றைத் தமிழகத்தில் வெளியிடும் எண்ணமுண்டு. அப்போது இத்தகைய கட்டுரைகளையும் சேர்த்துக் கொள்ளலாம். இது போல் ஈழத்தின் ஏனைய இலக்கிய முன்னோடிகளின் படைப்புகளையும் எவ்விதமான பாகுபாடுமின்றிச் சேகரித்து வெளியிட வேண்டுமென்பதும் எம் அவா. நேரம், காலம் கூடி வந்தால் எல்லாம் நன்கு நடக்குமென்ற நம்பிக்கை எமக்குண்டு. அ.ந.க வின் படைப்புகள் வைத்திருப்பவர்கள், அவருடனான தமது அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ள நினைப்பவர்கள் எம்முடன் பின்வரும் முகவரியில் தொடர்பு கொள்ளலாம்: Pathivukal ,P.O.Box 22088 ,45 Overlea Blvd ,Toronto, Ontario ,Canada M4H 1N9 அல்லது ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சலிலும் தொடர்பு கொள்ளலாம்.