யாப்பருங்கலம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.

தொல்காப்பியத்துக்குப் பின்னர் செய்யுளுக்கு இலக்கணம் கூற எழுந்த நூல்களுள் சிறப்பானவையாகப் போற்றப்படும் நூல்களுள் யாப்பருங்கலம் என்னும் நூலும் ஒன்று. இதை இயற்றியவர் அமிதசாகரர் என்னும் சமண முனிவர். யாப்பருங்கலக் காரிகை என்னும் இன்னொரு யாப்பிலக்கண நூலை எழுதியவரும் இவரே. இந் நூலின் காலம் 11 ஆம் நூற்றாண்டு.

இந்த நூலுக்கு மிக விரிவான விருத்தியுரை எழுதப்பட்டுள்ளது. இதை எழுதியவர் அமிதசாகரரின் குருவாகிய குணசாகரர் என்று கூறப்படுகின்றது.