தவசி முருங்கை
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
தவசி முருங்கை (Justicia tranquebarensis) மூலிகை மருத்துவத்திலும் உணவுத் தயாரிப்பிலும் பயன்படும் செடியாகும். இது சன்னியாசி முருங்கை எனவும் அழைக்கப்படுகிறது. வீடுகளில் வளர்க்கப்படும் இதன் துவர்ப்புச் சுவையுடையதான இலையே பயனுள்ளதாகும். இதன் இலை வறை செய்து உண்ணப்படுகிறது. மிகுந்த சத்துள்ள உணவாகக் கருதப்படும் இது பத்திய உணவுகளிலும் சேர்த்துக் கொள்ளப்படுகிறது.
[தொகு] மருத்துவ குணங்கள்
இதன் இலைச்சாற்றை உட்கொண்டால் மூக்கால் நீர் வழிதல், உண்ணாக்கு இருமல், இரைப்பு போன்றவை குணமாகும்.
[தொகு] உசாத்துணை
- மூலிகைகள் - ஓர் அறிமுகம்" - சித்தமருத்துவ கலாநிதி சே. சிவசண்முகராஜா, 2003