தான்றி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.

தான்றி (Terminalia bellerica) ஓர் இன மரமாகும். இது தமிழ்நாட்டில் மலைப்பகுதிகளில் காணப்படுகிறது. இதன் பட்டையும் பழமும் மூலிகை மருத்துவத்தில் பயன்படுகின்றன. மார்ச் முதல் மே வரையான காலத்தில் மஞ்சள் நிறத்தில் பூக்கள் மலரும். பின்னர் உருண்டை வடிவிலான ஐந்து பள்ளங்களைக் கொண்ட காய்கள் தோன்றிப் பின் சாம்பல் நிறப் பழங்களாகும். இப்பழங்கள் கசப்பும் துவர்ப்புமான சுவையுடையன. இப்பழம் மூலத்தைக் குணமாக்கும். சளி, வயிற்றுப்போக்கு என்பவற்றைக் கட்டுப்படுத்தும்.


"http://ta.wikipedia.org../../../%E0%AE%A4/%E0%AE%BE/%E0%AE%A9/%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF.html" இலிருந்து மீள்விக்கப்பட்டது