மாமனிதர் விருது
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
மாமனிதர் விருது என்பது தமிழ்மக்களின் வாழ்நிலை மேம்பாட்டுக்காக, உரிமைக்காக, விடுதலைக்காக, விடுதலைப் போராட்டத்துக்காக அரும்பாடுபடும் தமிழருக்கு தமிழீழ விடுதலைப் புலிகளினால் வழங்கப்படும் அதி உயர் விருதாகும்.
விடுதலைப்புலிகளின் உயர்மட்டக்குழு ஈழத்தமிழரின் விடிவுக்காக பாடுபடுபவர்களின் பெயரை தேர்ந்தெடுத்து விடுதலைப் புலிகளின் தலைவர் வே. பிரபாகரனுக்கு சிபார்சு செய்யும். தலைவர் தலைமையில் கூடும் அம்முக்கிய குழு தேர்வு செய்யப்பட்டவர் குறித்து பரிசீலித்து பின்னர் முடிவெடுத்து அவரை விருதுக்கு உரியவராக அறிவிக்கும். மாமனிதர் குறித்த விவரங்கள் விளக்கங்களை தந்திருக்கும்.
[தொகு] மாமனிதர் விருது பெற்றவர்கள்
- அ. துரைராஜா, பேராசிரியர்
- அருணாசலம் ஐயா
- சிரித்திரன் சுந்தர்
- இராசரட்ணம்
- கலைஞானி செல்வரட்ணம்
- சி. ஜே. எலியேசர்
- குமார் பொன்னம்பலம்
- காசி ஆனந்தன்
- சந்திரநேரு அரியநாயகம்
- தர்மரட்ணம் சிவராம்
- ஜோசப் பரராஜசிங்கம்
- ஞானரதன்
- நடராஜா ரவிராஜ்