பேச்சு:சிவன்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
[தொகு] சிவனின் தோற்றம்
சிவனையே உலகில் முதன் முதலாக வழிபட்டனர் என்ற கூற்றினை ஒரு விபரணப்படத்தினில் பார்த்தேன் பி.பி.சி விபரணப்படத்தில்.ஆனாலும் அது ஒரு கூற்றென நினைக்கின்றேன்.உறுதிப்படுத்த INDIA EMPRE OF SPIRITஇவ்விபரணப்படத்தினைப்பார்க்கவும்.--நிரோஜன் சக்திவேல் 21:34, 6 டிசம்பர் 2006 (UTC)
இந்த மும்மூர்த்திகள் தொடர்பாக பல கருத்துக்கள் உண்டு. அவை கிறிஸ்தவ மும்மூர்த்திகளை ஈடுசெய்ய ஒரு முயற்சி என்றும் சில குறிப்பிடுவர். எனவே சிவன் இந்து சமயத்தின் ஒரு முக்கிய கடவுள் என்று மாத்திரம் குறிப்பிட்டாள் நன்று என்று நினைக்கின்றேன். --Natkeeran 01:32, 7 டிசம்பர் 2006 (UTC)
இல்லை நான் கூற நினைப்பதென்னவென்றால் நாகரீகம் தோன்றிய முதன்முதலில் பசுபதி என்ற சிலையினை வைத்து வழிபடப்பட்டது மொகஞ்சதாரோவிலென இவ்விபரணப்படம் கூறுகின்றது.பசுபதி என்றால் சிவனின் இன்னொரு பெயரென நினைக்கின்றேன்.ஆனாலும் இம்மொகஞ்சதாரோ நாகரீகங்களிற்கு முன்னர் தோன்றிய எகிப்திய நாகரீகங்களில் இறைவன் வழிபடப்படவில்லையா என்பதுவும் என் கேள்வியே ஆனாலும் இவ்விபரணப்படத்தில் அவ்வாறு முதன்முதல் என்று கூறுகின்றனர் என நினைக்கின்றேன்.அனைவரும் பார்க்க.எனக்கு உண்மை தெரிந்தாகவேண்டும் ஆவலாகவுள்ளது.ஏனெனில் இந்து சமயம் பண்டைய சமயமென்றார் எந்தக்கடவுள் உலகில் முதன்முதலிம் வணங்கப்பட்டிருக்கவேண்டும் மேலும் அப்பதிலை நான் தெரிந்துகொள்ள ஆவலுடன் உள்ளேன்.அனைவரும் இவ்விபரணப்படத்தினைப்பாருங்கள் பின்னர் ஒரு முடிவுக்கு வரலாம்.--நிரோஜன் சக்திவேல் 02:08, 7 டிசம்பர் 2006 (UTC)