மார்க்சிய பொருள்முதல்வாதம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.

பொருள்முதல்வாத தத்துவத்தின்மீதான கார்ல் மார்க்சின் வியாக்கியானமே மார்க்சிய பொருள்முதல்வாதம் எனப்படுகிறது.

மரபான பொருள்முதல் வாதத்தின் மாறாநிலையை, போதாமையாக உணர்ந்த கார்ல் மார்க்ஸ், பொருள்முதல் வாதத்தினை இயங்கியல் தத்துவத்தோடு இணைத்து இயங்கியல் பொருள்முதல் வாதமாக வளர்த்தெடுத்தார்.

மனம், கடவுள், ஆன்மா எனும் கருத்துருவங்களே முதன்மையானது, மற்றவை எல்லாம் இரண்டாம்பட்சமானது எனும் கருத்துமுதல்வாதிகளின் முடிவினை முற்றாக நிராகரித்ததாக பொருள்முதல்வாத தத்துவம் அமைகிறது.

கடவுள் , மனம் போன்றவை புறச்சூழல் மீது செலுத்தும் தாக்கத்தினை விட, புறச்சூழல் மனம், மனித சிந்தனை ஆகியவற்றின் மீது செலுத்தும் தாக்கமே முதன்மையானது என கருதுவதே பொருள்முதல்வாதம். இது கடவுட் கோட்பாட்டை முற்றாக நிராகரிக்கிறது.

மார்க்சின் பொருள்முதல்வாதக் கோட்பாடு பின்வரும் முக்கிய அம்சங்களை கொண்டிருக்கிறது.

  • பொருள் அடிப்படையாது. மனம் அல்லது கருத்து இரண்டாம் பட்சமானது.


  • நமது உணர்வு நிலை, அதாவது சிந்தனை உட்பட அனைத்தினதும் தோற்றுவாய்கள் வாழ்வின் பொருள் சார்ந்ந்தவிடயங்களிற் காணப்படக்கூடியனவும்நம்மைச்சூழவுள்ள பொருட்களைப் பிரதிபலிப்பனவுமாகும்.


  • இப்போது பொருள் அதன் அதியுயர்ந்த வடிவாக விருத்திபெற்றுள்ளது. அதை நாம் மனம் என்கிறோம்.பொருள் சார்ந்த எச்சூழலிலிருந்து மனம் தோன்றியதோ, அதை மாற்றும் வலிமை மனதிற்கு இப்போது உண்டு. இந்த ஊற்றுமூலத்தினின்றே சகல கருத்துக்களும் எழுந்தன.


  • பொருள் புறவயமானதும், மனிதனது மனவிருப்பினின்று சுயாதீனமானதுமாகும்.அதேவேளை பொருள் அனைத்துமே அறியப்படக்கூடியனவாகும். அறிய இயலாததெனவும், "தன்னளவிலான பொருள்" எனவும் எதுவுமே இல்லை. இதுவரை அறியப்படாதனவே உள்ளன. மனிதனது ஆற்றலைக் கடந்தது எனவோ , இயற்கையை மீறியது எனவோ எதுவும் இருக்க இயலாது.