கதகளி
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
கதகளி இது கேரள மாநிலத்தின் பாரம்பரிய நடன வடிவமாகும். இது பல பாத்திரங்களைக்கொண்ட ஒரு நாட்டிய நாடகமாக ஆடப்பட்டு வருகிறது. இராமாயணம், மகாபாரதம் போன்ற சமயம் சார்ந்த பழங்கதைகள் இந்த நடனத்துக்குக் கருப்பொருளாக அமைகின்றன.
முகபாவமும், கையசைவுகளும் இந்த நடனத்தின் முக்கியமான அம்சங்களாகும். ஒப்பனையும், உடையலங்காரமும் இதனை ஒரு தனித்துவமான நடன வடிவமாக்குகின்றன. பாத்திரங்களின் தன்மைக்கேற்ப ஐந்து வகையான ஒப்பனைகள் உள்ளன. இவை பச்சை, கதி, தடி, கரி, மினுக்கு என அழைக்கப்படுகின்றன.