பிள்ளைத்தமிழ்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
தமிழில் வழங்கும் பிரபந்த நூல் வகைகளுள் ஒன்று பிள்ளைத்தமிழ். இறைவனையோ சிறப்புப் பெற்ற மனிதர்களையோ குழந்தையாக உருவகித்துப் பாடப்படுவதே பிள்ளைத்தமிழாகும். இது ஆண்பாற் பிள்ளைத்தமிழ், பெண்பாற் பிள்ளைத்தமிழ் என இரண்டு பால்களிலும் பாடப்படுவதுண்டு. மூன்று மாதம் முதல் இருபத்தொரு மாதம் வரையான குழந்தையின் வாழ்க்கைக் காலத்தைப் பத்துப் பருவங்களாகப் பிரித்துக் காண்பர். ஒவ்வொரு பருவத்துக்கும் பத்துப் பாடல்கள் வீதம் அமைத்துப் பாடப்படுவது வழக்கு.
[தொகு] பருவங்கள்
ஆண்பாற் பிள்ளைத்தமிழ் காப்பு, செங்கீரை, தால், சப்பாணி, முத்தம், வருகை, அம்புலி, சிற்றில், சிறுபறை, சிறுதேர் எனும் பத்துப் பருவங்களையுடையது. பெண்பாற் பிள்ளைத்தமிழில் காப்பு, செங்கீரை, தால், சப்பாணி, முத்தம், வருகை, அம்புலி, நீராடல், அம்மானை, ஊசல் எனும் பருவங்கள் அடங்குகின்றன.
[தொகு] பிள்ளைத்தமிழ் நூல்கள்
- மதுரை மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ் - குமரகுருபரர்
- முத்துக்குமார சுவாமி பிள்ளைத்தமிழ் - குமரகுருபரர்
- திருச்செந்தூர் பிள்ளைத்தமிழ் - குமரகுருபரர்
- சேக்கிழார் பிள்ளைத்தமிழ் - திரிசிரபுரம் மீனாட்சிசுந்தரம் பிள்ளை
[தொகு] இவற்றையும் பார்க்கவும்
- இலக்கிய நூல் வகைகள்
- தமிழ் சிற்றிலக்கியங்கள்