பா. ராகவன்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
பா. ராகவன். (Pa. Raghavan, பிறப்பு: அக்டோபர் 8, 1971; சென்னை) தமிழ் எழுத்தாளர் மற்றும் பத்திரிக்கையாளர் ஆவார். இயந்திரவியல் பட்டப்படிப்பு முடித்தவர். அமுதசுரபி, தாய் போன்ற இதழ்களில் சில காலம் பணியாற்றிவிட்டு, 1992ம் ஆண்டு டிசம்பர் 6ம் தேதி கல்கியில் சேரந்து பணியாற்றத் தொடங்கினார். திரைப்பட விமரிசகராக நுழைந்து, 2000ம் ஆண்டு வரை கல்கியில் துணையாசிரியராகப் பணியாற்றிய பா.ராகவன், அதன்பின் குமுதம் வார இதழின் துணையாசிரியராக இரண்டாண்டுகாலம் பணியாற்றினார். குமுதம் குழுமத்திலிருந்து 'ஜங்ஷன்' என்ற மாதமிருமுறை இதழ் தொடங்கப்பட்டபோது அதன் பொறுப்பாசிரியராக ஓராண்டுகாலம் பணியாற்றினார். அதன்பின் பத்திரிகைப் பணியிலிருந்து விலகி பதிப்புத்துறைக்கு வந்து. நியூ ஹாரிசான் மீடியா(New Horizon Media) நிறுவனத்தின் அங்கமான கிழக்கு பதிப்பகத்தின் பதிப்பாசிரியராகப் பணிபுரிகிறார்.
பொருளடக்கம் |
[தொகு] தனிக் கட்டுரை நூல்கள்
- ஜெயித்த கதை
- "154 கிலோபைட்"
- "24 கேரட்"
- "ஓப்பன் டிக்கெட்"
[தொகு] நாவல்கள்
- அலை உறங்கும் கடல்
- புவியிலோரிடம்
- "மெல்லினம்"
- "அலகிலா விளையாட்டு"
- "தூணிலும் இருப்பான்"
- "ரெண்டு"
[தொகு] சிறுகதைத் தொகுதிகள்
- மூவர்
- பறவை யுத்தம்
- நிலாவேட்டை
- "குதிரைகளின் கதை"
[தொகு] அரசியல் வரலாறுகள்
- பாக். ஒரு புதிரின் சரிதம் - பாகிஸ்தானின் அரசியல் வரலாறு
- டாலர் தேசம்(அமெரிக்காவின் அரசியல் வரலாறு)
- 9/11 : சூழ்ச்சி வீழ்ச்சி மீட்சி (2004)
- "நிலமெல்லாம் ரத்தம்"
- "அல் காயிதா : பயங்கரத்தின் முகவரி"
- "ஹிஸ்புல்லா : பயங்கரத்தின் முகவரி"
[தொகு] விருதுகள்
- பாரதிய பாஷா பரிஷத்
- இலக்கியப்பீடம் சிறந்த நாவலாசிரியர் விருது ( அலகிலா விளையாட்டு - 2003)
- திருப்பூர் தமிழ்ச்சங்கப் பரிசு (மெல்லினம் நாவலுக்காக)