பயனர் பேச்சு:Njaanam
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
வாருங்கள், Njaanam!
விக்கிபீடியாவிற்கு உங்களை வரவேற்கிறோம். விக்கிபீடியா பற்றி அறிந்து கொள்ள புதுப் பயனர் பக்கத்தை பாருங்கள். தமிழ் விக்கிபீடியா பற்றிய உங்கள் பொதுவான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும். ஏதேனும் உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்தில் கேளுங்கள். நீங்கள் கட்டுரை எழுதி பயிற்சி செய்ய விரும்பினால், தயவு செய்து மணல்தொட்டியைப் பயன்படுத்துங்கள். பேச்சுப் பக்கங்களிலும் கலந்துரையாடல்களிலும் உங்கள் கையொப்பத்தை இட ~~~~ என்ற குறியீட்டைப் பயன்படுத்துங்கள்.
விக்கிபீடியாவிற்கு பங்களிப்பது பற்றி மேலும் அறிந்த கொள்ள, தயவு செய்து பின் வரும் பக்கங்களை ஒருமுறை பார்க்கவும்:
புதுக்கட்டுரை ஒன்றைத் துவக்க தலைப்பை கீழே உள்ள பெட்டியில் இட்டு அதற்கு கீழே உள்ள தத்தலை அமுக்குங்கள்.
உங்களைப் பற்றிய தகவல்களை உங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், நாங்கள் உங்களைப் பற்றி அறிந்து கொள்ளலாம். மேலும், விக்கிபீடியா உங்களுக்கு முதன் முதலில் எப்பொழுது எவ்வாறு அறிமுகம் ஆனது என்றும் தெரிவித்தால் மேலும் பல புதுப்பயனர்களை ஈர்க்க உதவியாக இருக்கும். நன்றி.
--Natkeeran 04:44, 8 ஏப்ரல் 2006 (UTC)
வாருங்கள் ஞானவெட்டியான் ஐயா அவர்களே:
இந்த தகவலை வாசித்தால், எதாவது பதில் இங்கு இடுங்களேன். --Natkeeran 04:55, 8 ஏப்ரல் 2006 (UTC)
[தொகு] குறிப்பு
சமுதாய வலை வாசலில் நீங்கள் இட்டிருந்த கட்டுரைப் பகுதிகளை தற்போதைக்கு இங்கு வெட்டி ஒட்டுகிறேன். வலை வாசல் பயனர்களுக்கு ஒரு வழிகாட்டு பக்கம் மட்டுமே. எப்படி கட்டுரைப் பக்கம் உருவாக்குவது என்பது அறிய இந்த உதவிப் பக்கத்தைப் பார்க்கவும். நன்றி.--ரவி 19:57, 13 ஏப்ரல் 2006 (UTC)
ஆரியர் வருகையின்பொழுது, தமிழினம் (திராவிட இனமல்ல)காட்டுமிராண்டிகளாக இருந்தனர் என்பதை ஒப்புக்கொள்ள இயலவில்லை.
ஆரியர் தொல்லகம் பற்றிச் சிறிது நோக்குவம்:
"ஆரிய வரணத்தின் தொல்லகம் ஆசியாவினின்று, பால்டிக் நாடுகளிலும் காண்டினேவிய நாட்டிலுமே யிருந்தது. அங்கே ஆரிய மொழிகள் எழுந்தன.அவற்றைப்புழங்கிய உயரமான நீலக்கண்ணும் வெளுத்த முடியும் வாலமுகமுங்கொண்ட மக்கள், அங்குநின்றும் பரவினபோது, அம்மொழிகளும் அவர்களுடன் பரவின. அவர்கள் மணக்கலப்பாலேயே, தங்கட்கு இனமாகவும் அயலாகவுமுள்ள மக்கள்மேல், தங்கள் தலைமையையும் மொழிகளையும் ஏற்றுவதில் வெற்றி பெற்றார்கள். இந்தியாவிலும் ஐரானிலும் உள்ள கீழையாரியர், ஆரிய வரணத்தின் கடைசியும் மிகச் சேய்மையுமான கிளையினராவார். அவர்கள் பெரிய ஆற்றொழுக்கங்களைப் பின்பற்றி வந்து, கடைசியில் பஞ்சாப்பில் தங்கினார்கள்." என முதலாம் லதாம்(LATHAAM) விளக்குகிறார். இதை,POESCHE யும் PENKAவும் ஒத்துக் கொள்கின்றனர். SAYCEம் எல்லாவற்றையும் முழுமையாக ஒப்புக்கொள்கிறார்.[Principles of Comparative Philosophy - Preface].
ஆரியர் இந்தியாவுக்குள் நுழையுமுன்பே, வட இந்தியர்கள் நல்ல நாகரீகத்தை அடைந்திருந்தனர். சர் ஜான் மார்ஷல் மொகஞ்சதாரோவைப் பற்றி குறிப்பிடுகையில்: "5000 ஆண்டுகட்கு முன்பு ஆரியப் பெயரையே கேள்விப்படுமுன்,இந்தியாவில், மற்றநாடுகளுமில்லாவிடினும், குறைந்தது பஞ்சாபும் சிந்தும் மிக முன்னேறியதும், இணையற்றபடி ஓரியலானதும், சமகால மெசபடோமிய எகிப்திய நாகரீகத்திற்கு மிகநெருங்கியதும், சில விடயங்களில் அதினும் சிறந்ததுமான ஒரு சொந்த நாகரீகத்தை நுகர்ந்துகொண்டிருந்தது......."
இது ஒருபுறமிருக்க. தமிழக எல்லை என்ன? "வடவேங்கடம் தென்குமரி - ஆயுடைத்
தமிழ்கூறும் நல்லுலகத்து" - பனம்பரனார்(தொல்காப்பியரின் உடன் மாணவர்)
ஆரியன் தமிழகத்துள் பெருங்கூட்டமாய் வராது, சிறு சிறு கூட்டமாய் பலமுறையாக வந்தனர். முதலாவது, காசியபன், விசிரவசு முதலியவர் தமித்துவந்து அசுரப்பெண்களை மணந்தனர். பின்பு தமிழ் கற்றுத் தமிழாசிரியராயும், பின்பு மதவாசிரியராயும் அமர்ந்தபின், தம் கூட்டத்தாரைத் தமிழரசர்களின் அனுமதியுடனே கூட்டங் கூட்டமாய் வரவழைத்துக் குடியேற்றினர். ஆக, ஆரியர் வருகைக்கு முன்னரே தமிழக மக்கள், கல்வி,கேல்வி,கலைகளிலுந்தேர்ந்திருந்தனர். ஆரியர் தமிழரிடமிருந்து தமிழையும்,நாகரீகத்தையும் கற்று அதைவைத்தே தமிழர்களை வீழ்த்தியுள்ளார்கள். இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன் ஆரியப் புலவர் குமட்டூர் கண்ணனாருக்குப் பரிசில் கொடுத்ததை, பதிற்றுப்பத்தில்(இரண்டாம் பத்தில்) கூறியவை விளக்கும். ஆரியர்கள் இங்கு வந்து தமிழ் கற்றுப் பாக்கள் இயற்றும்பொழுது தமிழன் அரசாண்டுள்ளான். ஆனால், எல்லோரையும் நம்பும் வெகுளித்தனத்தால் நம்பிக் கெட்டனர்.
இந்து சமயம், திராவிட சமயம் என்றெல்லாம் பாகுபாடு கிடையாது. ஆரியர் முதலில் வந்திறங்கிய இடம் சிந்துநதி தீரம். சிந்து நாடென அழைத்தனர். பாரசீகர்கள், சகரத்தைத் தங்கள் வழக்கப்படி ஹகரமாக்கி, ஹிந்து நாடென்றனர். கிரேக்கர்கள் அதை இந்தியாகச் சிதைத்தனர். ஆங்கிலேயரோ,இந்தியாவாக்கிவிட்டனர். ஆக இந்து சமயம் என எப்படிக் கூறுவது?
தமிழரின் சமயம் மட்டுமே உள்ளது. காலவழக்கில் தங்களின் போக்குக்கு ஏற்றார்போல் வளைக்கப் பட்டுவிட்டது. மொழியாராய்ச்சிக்குச் செல்வதால் காலம்தான் வீணாகும். இருந்ததும் இருப்பதும் தமிழ்ச் சமயமே.
நமக்குத் தேவை:
தமிழ்ச் சமயம் இருந்தது.இருக்கின்றது.
அது பிளவுபட்டு 6 அகச்சமயங்களாகவும், 6 புறச்சமயங்களாகவும் இருக்கிறது. மொகஞ்சதாரோ, ஹாரப்பா நாகரீகத்தொடு ஒத்திருப்பதால் சுமேரிய மொழிக்கும் தமிழுக்கும் ஒற்றுமைகள் இருக்கலாம். மொழிக்கூற்றை அலசிப் பார்த்தால் விளங்கும். காலமில்லை. காலன் வந்துவிடுவான். அவனை எதிர்க்கும் வல்லபம் தேடவேண்டும். அதற்குக் காலம் மிகவும் அவசியம். அவனன்றி ஓர் அணுவுமசையாது; அவனே சர்வ வியாபி. அப்படி இருக்கையில், மந்திரமும் அவனுள்தான். மந்திரத்துக்குள் அவனில்லை. அவனைக் கட்ட மந்திரமும்,மந்திர சாத்திரங்களும் ஒரு கயிறு (சகாதேவன் கிருட்டிணனைக் கட்டிய கயிறு). அவனனனுமதியின்றி அக் கயிற்றால்கூட அவனைக் கட்டவியலாது. ஏதோ எனக்குத் தெரிந்தது. தவறிருப்பின் திருத்துக.
அன்பு, - ஞானவெட்டியான் - திண்டுக்கல்(தமிழகம்)
[தொகு] நன்று
இன்று தான் உங்கள் பயனர் பக்கத்தில் உள்ள கட்டுரையை கண்டேன். சிந்தனையைத் தூண்டியது. நன்று--ரவி 09:13, 19 ஜூலை 2006 (UTC)