காஞ்சிபுரம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.

காஞ்சீபுரம்
மாநிலம்
 - மாவட்டங்கள்
தமிழ்நாடு
 - காஞ்சிபுரம்
பரப்பளவு   ச.கி.மீ
கால வலயம் IST (ஒ.ச.நே.+5:30]])
மக்கள் தொகை (2001)
 - மக்களடர்த்தி
152,984
 - /ச.கி.மீ
காஞ்சிபுரம் கோயில்
காஞ்சிபுரம் கோயில்

காஞ்சிபுரம் (ஆங்கிலம்:Kancheepuram), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள காஞ்சிபுரம் மாவட்டத்தில் இருக்கும் ஒரு நகராட்சி ஆகும். பாலாற்றின் கரையில் அமைந்துள்ள இந்நகரம், காஞ்சிபுரம் மாவட்டத்தின் தலைநகருமாகும். இங்கு பல கோயில்கள் உள்ளன. அவற்றுள், காமாட்சியம்மன் கோயில், ஏகாம்பரநாதர் கோயில், வரதராஜபெருமாள் கோயில், கைலாசநாதர் கோயில் ஆகியவை முக்கியமானவை. இங்கு தயாரிக்கப்படும் காஞ்சிப் பட்டுப் புடவைகள் மிகவும் பிரபலமானவை.

கி.பி. 4ஆம் நூற்றாண்டு முதல் 9ஆம் நூற்றாண்டு வரை பல்லவர்களின் தலைநகராக விளங்கிய காஞ்சிபுரம், கலை, மற்றும் தமிழ், சமஸ்கிருத மொழிகளின் கல்வியில் சிறந்து விளங்கியது.

[தொகு] மக்கள் வகைப்பாடு

இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 152,984 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.[1] இவர்களில் 50% ஆண்கள், 50% பெண்கள் ஆவார்கள். காஞ்சீபுரம் மக்களின் சராசரி கல்வியறிவு 75% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 81%, பெண்களின் கல்வியறிவு 69% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. காஞ்சீபுரம் மக்கள் தொகையில் 10% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.

[தொகு] ஆதாரங்கள்

  1. இந்திய 2001 மக்கள்தொகை கணக்கெடுப்பு. இணைப்பு அக்டோபர் 20, 2006 அன்று அணுகப்பட்டது.

[தொகு] வெளி இணைப்புகள்

காஞ்சிபுரம் மாவட்டம் பற்றிய வலைப்பக்கம்