இலங்கையர்கோன்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
இலங்கையர்கோன் ஈழத்துச் சிறுகதை முன்னோடிகளுள் ஒருவர். இவரது இயற்பெயர் த. சிவஞானசுந்தரம் என்பதாகும். ஈழத்து சிறுகதைத்துறை முன்னோடிகளுள் இவருடைய உறவினரான சி. வயித்திலிங்கம், சம்பந்தன் ஆகியோரும் குறிப்பிடத்தக்கவர்கள். மணிக்கொடி, பாரததேவி, சக்தி, சூறாவளி, கிராம ஊழியன், சரஸ்வதி ஆகிய தமிழக இதழ்களிலும் ஈழகேசரி, தினகரன், ஈழநாடு, கலைச்செல்வி, வீரகேசரி ஆகிய ஈழத்து இதழ்களிலும் இவரது சிறுகதைகள் வெளிவந்தன. இவர் விமர்சனம், நாடகம் ஆகிய துறைகளிலும் ஈடுபாடு காட்டினார். அரசாங்க சேவையில் காரியாதிகாரியாகப் பணிபுரிந்த இவர் 15-11-1961 இல் காலமானார்.
[தொகு] வானொலி நாடகங்கள்
- விதானையார் வீட்டில்
- கொழும்பிலே கந்தையா
- லண்டன் கந்தையா
[தொகு] வெளிவந்த நூல்கள்
- வெள்ளிப்பாதசரம் (சிறுகதைத் தொகுப்பு)
- மாதவி மடந்தை (மேடை நாடகம்)
- மிஸ்டர் குகதாசன் (நகைச்சுவை நாடகம்)
- முதற்காதல் (மொழிபெயர்ப்பு நாவல்)