ராஜீவ் காந்தி படுகொலை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.

இந்தியாவில் உள்ள ஸ்ரீபெரும்புதூரில் மே 21, 1991 அன்று தற்கொலைத் தாக்குதல் ஒன்றில் ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்டர். ராஜீவ் காந்தி முன்னாள் இந்தியப் பிரதமர் ஆவார். இவரே இந்திய இலங்கை ஒப்பந்தம், 1987 ஏற்பட வழிவகுத்தவர். இத்தாக்குதலை தமிழீழ விடுதலை புலிகளின் பெண் தற்கொலை உறுப்பினரான தனு (en:Thenmuli Rajaratnam) நடத்தினார். இந்தக் கொலையத் தொடர்ந்து இந்திய அரசு விடுதலைப் புலிகளைத் தடை செய்தது. மேலும், இவரது கொலைக்காக, வேலுப்பிள்ளை பிரபாகரன் உள்ளிட்ட பல விடுதலைப்புலிகளை குற்றவாளிகளாக அறிவித்து இந்திய உயர்நீதி மன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

இவரது கொலையை ஒரு பாரிய துன்பவியல் சம்பவம் என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் தனது ஏப்ரல் 14, 2002 [1] ஊடகவியாளர் சந்திப்பில் விபரித்தார்.

[தொகு] வெளி இணைப்புகள்