ஜோர்ஜ் ஈஸ்ற்மன்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
ஜோர்ஜ் ஈஸ்ற்மன் (George Eastman, ஜூலை 12, 1854 - மார்ச் 14, 1932) ஈஸ்ற்மன் கொடக் கம்பனியின் (Eastman Kodak Co) தாபகரும் படச்சுருளைக் கண்டுபிடித்தவரும் ஆவார். படச்சுருளின் கண்டுபிடிப்பே புகைப்படக்கலையை சாதாரண மக்களும் பயன்படுத்த வழிவகை செய்தது. அதுவே அசையும் படங்களின் கண்டுபிடிப்புக்கும் அடிப்படையாக அமைந்தது.
1854 இல் பிறந்த ஈஸ்ற்மன் தனது பதினான்காவது வயதில் வேலை செய்ய ஆரம்பித்தார். 1888 இல் "கோடக்" என்பதை வியாபாரக் குறியீடாக காப்புரிமை செய்து கொண்டார். 1932 இல் தன்னியக்கக் கைத்துப்பாக்கியால் தன்னைத்தானே சுட்டுத் தற்கொலை செய்து கொண்டார். "என் வேலை முடிந்தது. காத்திருப்பானேன்?" (My work is done. Why wait?) என்பதே அவர் தற்கொலைக்கு முன் எழுதி வைத்ததாகும்.