கண்டங்கத்திரி
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
கண்டங்கத்திரி (Solanum xanthocarpum) ஒரு மருத்துவ மூலிகைப் பயன்பாடுள்ள ஒரு செடியாகும். சளி, இருமல், சுவாசப் பாதை நோய்கள் நீக்குவதற்கு இம்மூலிகை பயன்படுகிறது. இதன் இலைச்சாறு கதங்காய் எண்ணையுடன் கலந்து காய்ச்சி கால் கை வெடிப்புக்களுக்குப் பூசப் பயன்படுகிறது. சிறுநீர் தடைப்பட்டால் கண்டங்கத்திரிச் சாற்றுடன் தேன் கலந்து கொடுக்கப்படுகிறது.