உக்கிரப் பெருவழுதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.

பாண்டிய மன்னர்களின் பட்டியல்
முற்காலப் பாண்டியர்கள்
வடிம்பலம்ப நின்ற பாண்டியன்
பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதி
சங்ககாலச் பாண்டியர்கள்
முடத்திருமாறன் கி.மு 200 - கி.பி. 200 ??
இளம் பெருவழுதி கி.மு 200 - கி.பி. 200 ??
பூதப் பாண்டியன் கி.மு 200 - கி.பி. 200 ??
ஆரியப் படைகடந்த நெடுஞ்செழியன் கி.பி. 100 - கி.பி. 300 ??
நன்மாறன் கி.பி. 100 - கி.பி. 300 ??
தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன் கி.பி. 100 - கி.பி. 300 ??
உக்கிரப் பெருவழுதி கி.பி. 100 - கி.பி. 300 ??
பொற்கைப் பாண்டியன் கி.பி. 100 - கி.பி. 300 ??
பாண்டியன் அறிவுடை நம்பி கி.பி. 100 - கி.பி. 300 ??
பாண்டியன் கீரஞ்சாத்தன் கி.பி. 100 - கி.பி. 300 ??
பாண்டியன் மதிவாணன் கி.பி. 100 - கி.பி. 300 ??
பன்னாடு தந்த பாண்டியன் கி.பி. 400 முன்னர் ??
நல்வழுதி கி.பி. 400 முன்னர் ??
இலவந்திகைப் பள்ளித் துஞ்சிய நன்மாறன் கி.பி. 400 முன்னர் ??
குறுவழுதி கி.பி. 400 முன்னர் ??
நல்வெள்ளியம்பலத்துத் துஞ்சிய பெருவழுதி கி.பி. 400 முன்னர் ??
இடைக்காலப் பாண்டியர்கள்
பாண்டியன் கடுங்கோன் கி.பி. 575 - கி.பி. 600
மாறவர்மன் அவனிசூளாமணி கி.பி. 600 - கி.பி. 625
சடையவர்மன் செழியன்வேந்தன் கி.பி. 625 - கி.பி. 640
கோச்சடையன் ரணதீரன் கி.பி. 640 - கி.பி. 670
மாறவர்மன் அரிகேசரி பராங்குசன் - இராச சிம்மன்-1 கி.பி. 670 - கி.பி. 710
நெடுஞ்செழியன் பராந்தகன் - இராச சிம்மன் - 2 கி.பி. 710 - கி.பி. 765
வரகுண மகாராசன் கி.பி. 765 - கி.பி. 792
சீமாறன் பரசக்கர கோலாகலன் - சீபல்லவன் கி.பி. 835 - கி.பி. 862
வரகுண பாண்டியன் கி.பி. 862 - கி.பி. 880
பராந்தக பாண்டியன் கி.பி. 880 - கி.பி. 900
இராச சிம்மன் -3 கி.பி. 900 - கி.பி. 920
பராந்தக பாண்டியன் கி.பி. 946 - கி.பி. 966
பிற்காலப் பாண்டியர்கள்
அரிகேசரி சடையவர்மன் பராக்கிரம பாண்டியன் கி.பி. 1422 - கி.பி. 1461
அழகன் பெருமாள் குலசேகரன் கி.பி. 1429 - கி.பி. 1473
சீபல்லவன் கி.பி. 1534 - கி.பி. 1543
முதலாம் அதிர்வீரராம பாண்டியன் கி.பி. 1564 - கி.பி. 1606
வரதுங்கராமன் கி.பி. 1588 - கி.பி. 1609
வரகுணராமன் குலசேகரன் கி.பி. 1615
edit

உக்கிரப் பெருவழுதி என்னும் பாண்டிய அரசன் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியனின் மகன் ஆவான். படைமுகத்தில் பெரும் விரைவோடும் பெருச்சினத்தோடும் சூறாவளி எனப் போரிடும் ஆற்றல் உள்ளவன். எனவே இவனை 'உக்கிர' என்னும் அடைமொழியுடன் அழைப்பது வழக்கம். இவன் வேங்கை மார்பன் என்னும் அண்டை நாட்டு அரசனுடைய கானப் பேரெயிலை வெற்றி கொண்டான் என்பதால் கானப்பேரெயில் கடந்த உக்கிரப்பெருவழுதி என புகழப்படுபவன். ஒருமுறை உக்கிரப் பெருவழுதி காலத்து அரசாண்ட சோழன் இராசசூயம் வேட்டப் பெருநற்கிள்ளியும, சேரமான் மாரி வெண்கோவும் ஒன்றாக கூடியிருந்தனர். சோழன் இயற்றிய வேள்விக்கு மற்ற இரு அரசர்களும் வந்திருந்தனர். அப்பொழுது மூவரசர்களும் ஒருங்கே அமர்ந்திருந்த அருங்காட்சியை கண்ட சங்க காலத்து ஔவயார் அழகான பாட்டுப் ஒன்றை பாடினார். அது புறநானூற்றில் உள்ளது. அதில்:
வாழச்செய்த நல்வினை அல்லது
ஆழுங்காலை புணை பிறிதில்லை"
என்று வழங்கும் அறவாக்கு பெரிதும் போற்றப்படுவது.

புறநானூற்றில் உள்ள ஔவையாரின் பாடலின் வரிகள்:


நாகத் தன்ன பாகார் மண்டிலம்
தமவே யாயினும் தம்மொடு செல்லா
வேற்றோர் ஆயினும் நோற்றோர்க்கு ஒழியும்
ஏற்ற பார்ப்பார்க்கு ஈர்ங்கை நிறையப்
பூவும் பொன்னும் புனல்பட சொரிந்து,


பாசிழை மகளிர் பொலங்கலத்து ஏந்திய
நாரறி தேறல் மாந்தி, மகிழ் சிறந்து
இரவலர்க்கு அருங்கலம் அருகாது வீசி
வாழ்தல் வேண்டும், இவண் வரைந்த வைகல்,
வாழச்செய்த நல்வினை அல்லது


ஆழுங் காலைப் புணைபிறிது இல்லை
ஒன்று புரிந்து அடங்கிய இருபிறப்பாள
முத்தீப் புரையக் காண்தக இருந்த
கொற்ற வெண்குடைக் கொடித்தேர் வேந்தீர்;
யான்அறி அளவையோ இவ்வே; வானத்து
வயங்கித் தோன்றும் மீனினும் இம்மெனப்
பரந்து இயங்கும் மாமழை உறையினும்,
உயர்ந்து சமந்தோன்றிப் பொலிக, நும் நாளே


இவ்வரசன் காலத்தில் தான் திருக்குறள் அரங்கேற்றப் பட்டது. இவன் இயற்றிய பாடல்கள் சங்க இலக்கியங்களாகிய அகநானூற்றிலும் நற்றிணையிலும் உள்ளன