பிந்துசாரர்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
பிந்துசாரர் மௌரியப் பேரரசின் இரண்டாவது மன்னர் ஆவார். இவர் சந்திரகுப்த மௌரியரின் மகன் ஆவார். இவர் தனது ஆட்சிக்காலத்தின் மௌரியப் பேரரசை விரிவுபடுத்தினார். தெற்கே தோழமை அரசுகளான சேர, சோழ, பாண்டியர்களைத் தவிரவும் கலிங்க நாட்டைத் தவிரவும் இந்தியாவின் ஏனைய பகுதிகளை இவர் வெற்றி கொண்டார். மாமன்னர் அசோகர் இவரது மகன் ஆவார்.