வ.வே.சு.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
இந்திய விடுதலைக்காக முதன்மை பங்காற்றியவரும், சிறந்த இலக்கிய வாதியும், மொழி பெயர்ப்பாளருமான வரகனேரி வேங்கடேச சுப்பிரமணிய ஐயர், வேங்கடேச ஐயர் - காமாட்சி தம்பதியினருக்கு மகனாக திருச்சிராப்பள்ளி வரகனேரியில் 1881 ஏப்ரல் 2 ஆம் நாள் பிறந்தார்.
தூயவளனார் கல்லூரியில் பி.ஏ. பட்டம் பெற்றுப் பின்னர் சென்னை சென்று ப்ளீடர் (வக்கில்) பரிட்சையில் முதல் பிரிவில் தேறி, ஜில்லா கோட்டில் முதல் வகுப்பு ப்ளீடராகச் சேர்ந்து வக்கீல் தொழில் நடத்தினார். லண்டன் சென்று பாரிஸ்டர் பட்டம் பெற வேண்டும் என்ற விருப்பத்தின் அடிப்படையில் லண்டன் சென்று அங்கு இந்தியா ஹவுஸில் தங்கினார்.
பட்டம் பெற வந்த வ.வே.சுவை சுதந்திர வீரராக்கியது இந்தியா ஹவுஸ். ஷாம்ஜி கிருஷ்ணவர்மா, சாவர்க்கர், டி.எஸ்.எஸ். ராஜன் போன்றவர்களின் நட்பு, இந்தியா ஹவுஸில் ரகசியமாக இயங்கி வந்த “அபிநவபாரத்” சங்கத்தில் வ.வே.சுவை உறுப்பினராகச் சேரவைத்தது. இச்சங்கம் இந்திய விடுதலைக்கான இளைஞர்களின் களமாகத் திகழ்ந்தது. வ.வே.சு ராணுவ வீரருக்குரிய போர்ப் பயிற்சிகளை இங்குக் கற்றுக் கொண்டார்.
1909இல் தசரா பண்டிகையைத் தேசிய விழாவாக இந்தியா ஹவுசில் கொண்டாடினர். அதில் சிறப்பு விருந்தினராகக் காந்தி அடிகளை அழைத்து வந்து பேச வைத்தனர். இதே ஆண்டில் கர்னல் கர்ஸான் வில்லி லண்டனில் சுடப்பட்டார். இவரைச் சுட்டுக்கொன்றவர் மதன்லால் திங்காரா என்ற இந்திய ஹவுஸ் மாணவர். இதனால் வ.வே.சு உட்பட பலரும் தலைமறைவாயினர்.
லண்டனில் இருந்த வ.வே.சு மாறுவேடத்தில் ஐரோப்பிய நாடுகள் பலவற்றிலும் சுற்றிவிட்டு, 1910இல் இந்தியா வந்து புதுச்சேரியில் தங்கினார். இங்கு பாரதி, நீலகண்ட பிரம்மச்சாரி, வ.ரா. அரவிந்தர் போன்றவர்களோடு இணைந்து இந்திய விடுதலைக்குப் போராட முன்வந்தார். இங்கு “தர்மாலயம்” என்ற இல்லம் அமைத்து சுதந்திரப்போருக்கு வீரர்களைத் தயாரிக்கும் விதமாக அவர்களுக்குக் குத்துச்சண்டை, குஸ்தி, சிலம்பம், துப்பாக்கிச் சுடுதல் போன்ற பயிற்சிகளை வ.வே.சு. கற்பித்தார். அவரால் இங்குப் பயிற்சிக் கொடுக்கப்பட்டவர் தான் கலெக்டர் ஆஷை கொன்ற வாஞ்சிநாதன். ஆஷ் படுகொலைக்குப் பிறகு புதுச்சேரியில் தீவிரவாத குழுக்கள் இயங்க முடியாத நிலை உருவானது.
1920ல் பொது மன்னிப்புப் பெற்று வ.வே.சு திருச்சிராப்பள்ளி வந்தார். 14 ஆண்டுகளுக்குப் பிறகு வரகனேரி இல்லம் வந்த அவர் காங்கிரஸ் இயக்கத்தில் பங்கு கொண்டு உழைத்தார். 1920இல் சென்னை சென்று தேசபக்தன் இதழின் ஆசிரியராகச் சிலகாலம் பணியாற்றினார். இராஜதுவேஷ குற்றம் சாட்டப்பட்டு பெல்லாரி சிறையில் சிலகாலம் இருந்து பின்னர் விடுதலையானார். 1922இல் சேரன் மாதேவியில் தமிழ்க்குருகுலம் என்ற கல்வி நிலையத்தையும் அதை நிர்வகிக்க பரத்வாஜ் ஆசிரமத்தையும் அமைத்தார். 1924இல் பாலபாரதி என்ற இதழைத் தொடங்கினார்.
மிகச் சிறந்த சுதந்திரப் போராட்ட வீரராகத் திகழ்ந்ததைப் போலவே வ.வே.சு. இலக்கியப் புலமையிலும் சிறந்து விளங்கினார். கம்ப நிலையம் என்ற நூல் விற்பனையகத்தைத் தொடங்கி ஏராளமான நூல்களை வெளியிட்டார். மாஜினியின் சுயசரிதை, கரிபாலிடியின் வரலாறு, நெப்போலியன், தன்னம்பிக்கை, கம்பராமாயணம் ஓர் ஆராய்ச்சி போன்ற நூல்களை எழுதியுள்ளார். திருக்குறளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துள்ளார். லண்டனில் இருந்தபோது பாரதியின் இந்தியா இதழில் “லண்டன் கடிதம்” என்ற பெயரில் தொடர்ந்து எழுதினார். இவரது மங்கையர்க்கரசியின் காதல் என்ற புத்தகம் தமிழில் வெளிவந்த முதலாவது சிறுகதைத் தொகுதியாகும். வ.வே.சு என்னும் சுதந்திர வீரவிளக்கு பாபநாசம் அருவியில் தவறி விழுந்த தனது மகளைக் காப்பாற்ற முனைந்து 1925 ஜுன் 4ல் அணைந்தது
சு. முருகானந்தத்தின் நடந்தாய் வாழியிலிருந்து
அறிஞர் : புரட்சியாளர் வ.வே.சு.ஐயர்
Posted by revathi on 2005/3/8 11:35:19 (41 reads)
வ.வே.சு ஐயர் கம்பீரமான தோற்றம் உடையவர். மார்பை எட்டிப் பார்க்கும் அழகான கருப்பு தாடி; அன்பு ஒழுகும் கண்கள்; செருகிக் கட்டப்பட்ட முரட்டுக் கதர்; மேலே உடம்பு முழுவதும் போர்த்தப்பட்ட ஓர் ஆடை; நெற்றியில் பிறைசந்திரக்குறி; குளிர்ந்த பார்வை; உண்மை முனிவரின் தோற்றம்; நிமிர்ந்த நடை, ஒரு தனி அழகு கொண்டது; நடப்பதற்கும் நடை என்று பெயர் ஒழுக்கத்திற்கும் தமிழில் நடையென்று பெயர்; இரண்டிலும் சாலச் சிறந்தவர் வ.வே.சு ஐயர்.
வரகனேரி வெங்கடேச சுப்பிரமணிய ஐயர் திருச்சி வரகனேரியைச் சேர்ந்த வேங்கடேச ஐயருக்கும், சின்னாளப் பட்டி எனும் ஊரைச் சேர்ந்த காமாட்சியம்மாளுக்கும் 2.4.1881இல் பிறந்தார். வேங்கடேச ஐயர் எம்.ஏ.தேர்ச்சி கண்டு, திருச்சி வரகனேரி வர்த்தக சங்கம், ஜனோபகார நிதி முதலிய நிறுவனங்களை நடத்தி வந்தார். சுப்பிரமணியம் திருச்சி செயிண்ட் ஜோசப் கல்லூரியில் பயின்றார். தம் பன்னிரண்டாம் வயதில் தகுதித் தேர்வு எழுதி (மெட்ரிகுலேஷன்) தேறினார். பதினாறாம் வயதில் பி.ஏ. பட்டத் தேர்வில் மாகாணத்தில் முதலாவதாகத் தேறினார்.
அவர், தம் பன்னிரண்டாம் வயதிலேயே அத்தை மகள் பாக்கியலட்சுமி அம்மையாரைத் திருமணம் செய்து கொண்டார். அவர் பி.ஏ. படித்து முடித்த பின்னர், சென்னை மாநகர் வந்து சட்டம் பயின்றார். வழக்கறிஞர் பட்டம் பெற்றதும் பத்தொன்பதாம் வயதில் திருச்சி திரும்பி வழக்கறிஞர் தொழில் நடத்தி வந்தார். இவரின் மைத்துனர் பசுபதி ஐயர் என்பார், இவரை ரங்கூனுக்கு அழைத்துச் சென்று பாரிஸ்டர் கல்வி பயில வைக்கத் திட்டமிட்டார். 1907இல் வ.வே.சு.ஐயர் ரங்கூன் வழி இலண்டன் ஏகினார்.
இலண்டனில் தீவிர தேசிய இயக்கவாதியான விநாயக தாமோதர சாவர்க்கரின் அறிமுகம் ஏற்பட்டது. சியாம் கிருஷ்ணவர்மா, விபின் சந்த்ரபால், லாலா ஹரிதயாள், மேடம் காமா முதலியோருடன் ஒன்றிப் பழகினார். தேசிய இயக்கத்தை ஒரு கண்ணாகவும், பாரிஸ்டர் கல்வியை மற்றொரு கண்ணாகவும் கொண்டிருந்தார்.
விடுதலைப் போராட்டத்தில் பட்டம், பதவிகளைத் தூக்கி எறிந்தவர் பலர். தனது வருவாய்களையும், தொழில்களையும் துச்சமாக எண்ணி உதறித் தள்ளியவர்கள் பலர். வ. வே. சு ஐயர் அவர்களும் அத்தகையவர்களில் ஒருவர். பாரிஸ்டர் பட்டத்திற்காக லண்டனுக்குச் சென்றார் அவர். அங்குள்ள இந்திய விடுதிக்கு அடிக்கடிச் சென்றபோது வீர சாவர்க்கர் போன்ற புரட்சி வீரர்களின் தொடர்பு அவருக்குக் கிடைத்தது. அவர் மனதிலும் தேசிய வெறி குடியேற, பாரிஸ்டர் படிப்பு அவருக்கு இரண்டாவது பட்சமாகியது. ஆயினும் படிப்பை அவர் புறக்கணிக்காமல் படித்து முடித்தார். தேர்வில் வெற்றி பெற்றார். பட்டமளிப்பு விழாவில் ராஜ விசுவாசப் பிரமாணம் எடுத்துக் கொண்டால் மட்டுமே பட்டம் அளிப்பதாக வழக்கம். நாட்டின் விடுதலைக்காகப் பிரமாணம் எடுத்துகொண்ட வ. வே. சு, அன்னிய அரசிற்கு ராஜ விசுவாசப் பிரமாணம் எடுத்துக் கொள்வாரா? மறுத்து விட்டார். பட்டமும் பெறவில்லை.
இலண்டனுக்கு 1908இல் வந்த காந்தி அண்ணலைச் சந்தித்தார். இவர் இலண்டனில் வாழ்ந்த காலத்தில் பாரதியாரின் “இந்தியா” பத்திரிகைக்கு எழுச்சியூட்டும் கட்டுரைகள் எழுதி அனுப்பி வந்தார்.
இலண்டன் “இந்தியா விடுதி” (India House)யில் தங்கியிருந்த அவருடன் 30 பேர் சேர்ந்து விடுதலை இயக்கத்தில் ஈடுபட்டனர். துப்பாக்கிப் பயிற்சி பெற்றார். புரட்சி இளைஞர் களுக்கும் அப்பயிற்சி அளித்தார். அவரிடம் பயிற்சியாளராக விளங்கிய மதன்லால் திங்க்ரா, 1909இல் கர்ஸன் வைலியைச் சுட்டுக் கொன்றார்.
திங்க்ராவிற்கு மரணதண்டனை அளிக்கப் பெற்றதும், அந்த வீர இளைஞர் தூக்குமேடை ஏறி, வீர மரணத்தைத் தழுவினார்.
திங்க்ரா, கர்ஸன் வைலியைக் கொன்றதன் விளைவாக, சாவர்க்கர் கைது செய்யப்பட்டார். பாரிஸ்டர் தேர்வு கண்ட வ.வே.சு. பட்டமளிப்பு விழாவில் அரச நம்பிக்கையாளன் உறுதிமொழி (ராஜவிசுவாசப் பிரமாணம்) எடுக்க மறுத்தார். அதையொட்டி அவரைக் கைது செய்ய ஆங்கில அரசு ஆணையிட்டது. சாவர்க்கரை வ.வே.சு சந்தித்தார். அப்போது சாவர்க்கர் வ.வே.சுவை எவ்வாறாயினும் இந்தியா தப்பிச் செல்லக் கூறினார். அவ்வண்ணம் வ.வே.சுவும் சீக்கியர்போல் வேடம் பூண்டு பிரான்ஸ் சென்றார். அங்கே அவரை வேவுபார்க்க வந்தவனிடம் தாம் வீர விக்ரம்சிங் என்ற சீக்கியர் என்று கூறி ஏமாற்றி, துருக்கி, கொழும்பு வழியாகப் பயணம் செய்தார். அப்பயணம் வீரதீர சாகசச் செயல்கள் நிறைந்தது.
1910 அக்டோ பர் 9ஆம் நாள் வ.வே.சு.ஐயர் புதுச்சேரி வந்தார். மண்டயம் ஸ்ரீ நிவாசாச்சாரியார், அரவிந்த கோஷ், மகாகவி பாரதியார் ஆகியோருடன் இணைந்தார். இங்கும் வ.வே.சு.ஐயர் இந்தியாஔவில் தொடர்ந்து எழுதி வந்தார். பல மொழிபெயர்ப்பு நூல்களை வடித்தார். திருக்குறளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார். கம்பராமாயணப் பாலகாண்டப் பதப்பிரிப்புப் பதிப்பையும் கொணர்ந்தார்.
கலெக்டர் ஆஷ் துரையைச் சுட்டுக் கொன்ற வாஞ்சிநாதன் என்னும் வீர இளைஞனுக்குப் புதுச்சேரியில் முன்னதாக வ.வே.சு. ஐயர் துப்பாக்கி சுடும் பயிற்சி அளித்தது குறிப்பிடத்தக்கது.
முதல்உலகப் போரின்போது, வ.வே.சு.ஐயரை அல்ஜியர்ஜுக்கு நாடு கடத்த ஆங்கில அரசு சூழ்ச்சி செய்து, பிரஞ்சு அரசை அணுகிற்று. இது கைகூடவில்லை. இப்போது அவருக்குக் காந்தியாரை இரண்டாம் முறை சந்திக்கும் வாய்ப்பு ஏற்பட்டது.
முதல் உலகப்போர் முடிந்ததும், வ.வே.சு பிரிட்டிஷ் இந்தியா வர அனுமதிக்கப்பட்டார். ஓதமிழ்த்தென்றல்ஔ திரு.வி.கலியாண சுந்தரனார் தேசபக்தன்ஒ இதழிலிருந்து விலகவும், அதன் ஆசிரியர் பொறுப்பை வ.வே.சு ஐயர் ஏற்றார். ஆனால் தேசபக்தனில் அவர் எழுதாத ஓர் எழுச்சிக் கட்டுரையைக் காட்டிப் பிரட்டிஷார் அவரைப் பெல்லாரி சிறைக்கு அனுப்பினர்.
ஒன்பது திங்கள் சிறையிருந்த அவர், “கம்பராமாயண ஆராய்ச்சி” எனும் அரிய நூலை ஆங்கிலத்தில் எழுதினார்.
சிறை விடுதலைக்குப் பின்னர், சேரன்மாதேவியில், 1923இல் “தமிழ்க்குருகுலம்”-”பாரத்வாஜ ஆசிரமம்” தொடங்கினார். தொழிற்கல்வியும் அறிவுக் கல்வியும் மாணவர்க்கு அளித்தார்.
இம்மையத்தை அடுத்த, வ.வே.சு. தமது உட்கிடக்கையாக விளங்கிய கெரில்லாப் புரட்சி முறைகளை முதிர்ந்தவர்க்கு புகட்டியதுடன், துப்பாக்கிச் சுடும் பயிற்சியை விடுதலை வேட்கிகளுக்கும் அளித்தார். “சங்கேத பாஷை”யில் செய்தி பரப்பி தேச விடுதலை உணர்வுக்கு உரம் இட்டு ஊக்கி வளர்த்தார்.
அதிதீவிரவாதியான வ.வே.சு. ஐயர் காந்தியைச் சந்தித்த பின் (இரண்டாவது சந்திப்பில்) தன் கைத்துப்பாக்கியைக் காந்தியிடம் ஒப்படைத்துவிட்டு அஹிம்சாவாதியாக மாறினார்.
இலக்கியவாதியாக விளங்கிய இந்த அரசியல்வாதி தம் குருகுல மாணவர்களுடன் 3.6.1925 அன்று அம்பாசமுத்திரம் அருவி காணத் தம் மகள் சுபத்திராவுடன், மகன் கிருஷ்ணமூர்த்தியையும் அழைத்துக் கொண்டு சுற்றுலா சென்றார். அங்கு அவரும் அவர் மகள் சுபத்திரையும் எதிர்பாராது அருவியில் கால் வழுக்கி விழுந்து அமரத்துவம் எய்தினர்.
மொழியார்வம், முதிர்ந்த நாட்டப்பற்று, முனிவர்க்குரிய மனப்பக்குவம், வீரனுக்குரிய வேகம், நியாயவாதியின் நிதானம், நேர்மையாளர்க்குரிய நெஞ்சுரம், பழைமையில் பக்தி, புதுமையில் ஆர்வம், தொண்டுணர்வு, தியாக சிந்தை ஆகியவற்றின் முழு வடிவமாக விளங்கியவர் வ.வே.சு ஐயர். அவரது வாழ்க்கையே ஒரு வீர காவியம். அந்த இலக்கியவாதி தம் படைப்புகளின் மூலம் இன்றும் நம்மிடையே வாழ்ந்து வருகிறார்.
கம்பன் காவியத்தைப் பலர் பலவிதமாக அணுகியதுண்டு. அண்மையில் மறைந்த நீதியரசர் மு.மு.இஸ்மாயில் அவர்கள் கம்பன் கவியழகைப் பிரபல பத்திரிகைகள் வழியே கட்டுரைகளாகவும், மேடைச் சொற்பொழிவுகளாகவும் பிழிந்து தந்ததுண்டு. ரசிகமணி டி.கே.சி. அவர்கள் ஒவ்வொரு பாடலாக எடுத்துப் பார்த்து இது கம்பனுடையது, இது இடைச்செருகல் என்று கூறு பிரித்ததுண்டு. கிரேக்கம், இலத்தீன், பிரெஞ்சு, ஆங்கிலம், சமஸ்கிருத மொழிக் காவியங்களை மூலமொழியிலேயே படித்தறிந்த விடுதலைப் போராட்ட வீரரான வ.வே.சு. அய்யர் ஒவ்வொரு பாத்திரமாக ஆராய்ந்து அழகிய ஆங்கிலக் கட்டுரைகளாக வடித்ததுண்டு.
1910-ம் ஆண்டு நவம்பர் மாத்தில், பாரதியாரின் "கனவு", "சுயசரிதை" முதலிய கவிதைகள் அடங்கிய "மாதாமணிவாசகம்" என்ற நூல் வெளியிடப்பட்டது.
இவ்வேளையில் வ. வே. சு. ஐயர் புதுவைக்கு வந்தார். ஐயரின் சந்திப்பால் பாரதியார் புத்துணர்வு பெற்று, அரசியல், கலை, இலக்கியம் ஆகிய பல துறைகளிலும் ஆர்வத்துடன் ஈடுபட ஆரம்பித்தார்.
அடுத்த வருடம், மணியாச்சி என்ற இடத்தில் மாவட்ட கலக்டர் ஆஷ் என்பவர் தீவிரவாதிகளால் சுட்டுக் கொலை செய்யப்பட்டார். இதன் பயனாக புதுவையிலிருந்த தேசபக்தர்கள் மீது பொலிஸார் தங்கள் பார்வையை வீச ஆரம்பித்தனர். பலர் புதுவையிலிருந்து வெளியேறினர்.
ஒரு வரலாற்றுச் சம்பவத்தை நினைவுபடுத்த விரும்புகிறேன். 1920 அல்லது 30 களில் நடந்த சம்பவம். சேரன்மாதேவி என்கிற இடத்தில் வ.வே.சு. அய்யர் குருகுலம் ஒன்றை நடத்தி வந்தார். அது செட்டிநாட்டுச் செட்டியார்களால் பொருளுதவி செய்து நடத்தி வரப்பட்டது. அப்போது அந்த குருகுலத்தில் நடைமுறையிலிருந்த ஒரு வழக்கம் தமிழகம் முழுவதும் பெரிய சர்ச்சையை கிளப்பியது. அங்கே பற்பல ஜாதி மாணவர்கள் பயின்றாலும், பிராமண மாணவர்களுக்கு என்று ஒரு உணவு கூடமும், பிற ஜாதி மாணவர்களுக்கு என்று தனியாக ஒரு உணவுக் கூடமும் செயல்பட்டு வந்தன. பிராமண மாணவர்களுக்கான இடத்தில் சமையல், பரிமாறல் என்று அனைத்தும் பிராமணர்களே! -- நாமக்கல் ராஜா.
இந்த வவேசு ஐயர் சம்பவம் நிறைய திரிப்புகளுக்கு உள்ளான ஒன்று. வவேசு ஐயர் சாதி வித்தியாசம் பார்த்தவரா என்பது ஆய்வுக்கு உரிய ஒரு தலைப்பு. ஏனெனில், பாரதி ரா.கனகலிங்கத்துக்குப் பூணூல் அணிவித்த சமயத்தில் அந்த நிகழ்ச்சிக்குத் தலைமை தாங்கி நடத்தியவர் வவேசு ஐயர். அவரிடத்தில் சாதி வேற்றுமை காணும் போக்கு இருந்ததா என்பது உணர்ச்சிக் கலப்பின்றி, தெளிவாக, நிதானமாகப் பார்த்துத் தெளிய வேண்டிய ஒரு செய்தி. ஒரு பக்கத்திலிருந்து மட்டும் செய்திகளைப் படித்தறிந்து அதனைப் பெரிதாக்கிக் கொண்டே போவது (blowing out of proportions) யாருக்கும் செய்யக் கூடிய நியாயமான செய்கையாகாது.
ரா.அ.பத்மநாபன் எழுதி, 'நேஷனல் புக் டிரஸ்ட், இந்தியா' பதிப்பித்துள்ள 'வ வே ஸ¤ ஐயர்' என்ற அவருடைய வாழ்க்கை வரலாற்று நூல் 'குருகுலக் கிளர்ச்சி' என்ற தலைப்பில் இந்தச் செய்தியைத் தந்திருக்கிறது. நான் பல சந்தர்ப்பங்களில் செய்திருப்பது போல இப்போதும் இந்தப் புத்தகத்திலிருந்து முழுப் பகுதியையும் தட்டிப் போட விருப்பம்தான். முடியவில்லை. உடல் நிலையும் ஒரு காரணம். எழுதுகின்ற தொடர்கள் - முக்கியமாக இராமாயணத் தொடர் - தட்டிப் போய் நிற்பதற்கும் இதுதான் காரணம். எனவே தொடர்புள்ள அத்தியாயத்திலிருந்து ஒரு பகுதியை மட்டுமாவது தருகிறேன்.
குருகுலத்தில் சமபந்தி போஜனமே நடந்தது என்பது இந்த நூல் தெரிவிக்கும் செய்தி. (பத்மநாபன் மழுப்பி வேண்டுமானால் எழுதுவாரே தவிர, பொய் எழுதமாட்டார். பல சமயங்களில் பத்மநாபன் அவர்கள் மழுப்பி எழுதும் போக்கை நான் கண்டித்திருக்கிறேன்.) ஆனால் இந்த விஷயத்தில் தெளிவாகவே சொல்கிறார்:
மேற்கோள்
பொருளடக்கம் |
[தொகு] =
'ஐயரும் தமது தமிழ்க் குருகுலத்தில் சமபந்தி உணவு முறையையே நடத்தலானார். ஆனால், சின்னாட்களில் இரண்டு பிராமணச் சிறுவர்களின் வீட்டார் ஆட்சேபித்தார்கள். தங்கள் சிறுவர்களுக்குத் தனியாக உணவு பரிமாற ஏற்பாடு செய்யும்படி கோரினார்கள்.
ஐயர் ஆரம்பத்திலேயே சாப்பாடு சமபந்தி போஜனமாக இருக்குமென்று சொல்வில்லை; பந்தியைப் பற்றி அவர் ஏதுமே முன்கூட்டிச் சொல்லவில்லை. **அந்த இரு சிறுவர்களின் வீட்டினரோ, குருகுலத்துக்கு உற்சாகமாக உதவியவர்கள்.** இருதலைக் கொள்ளி எறும்பு போல ஐயர் தவித்தார். அந்த இரண்டு மாணவர்கள் தனியே சாப்பிட விதிவிலக்கு அனுமதி கொடுத்தார். தாற்காலிக ஏற்பாடாக அவர்களுக்குச் சமையல் அறையிலிருந்து போஜன கூடத்துக்கு வரும் வழியில் இருந்த உக்கிராண அறை (ஸ்டோர் ரூம் பக்கம்) பாதையில் உணவு பரிமாறினார்கள்.
.....விடுமுறையின் போது வீட்டுக்குப் போன சிறுவர்கள் தங்கள் குருகுலத்தைப் பற்றிப் பெருமையாகப் பேசினார்கள். அத்துடன் இரண்டு பிராம்மணச் சிறுவர்களுக்கு சமபந்தி போஜனத்திலிருந்து விலக்களித்து, தனியே சாப்பாடு போடுகிறார்கள்' என்ற செய்தியையும் சொன்னார்கள். சமூகச் சீர்திருத்தத்தில் ஆர்வமுள்ள சில பெற்றோர்களுக்கு இச்செய்தி வருத்தம் தந்தது. சமபந்தி போஜனம் என்ற முன்னேற்றத்திலிருந்து நழுவிவிட்ட பிற்போக்கான ஏற்பாடு இது என்று கருதினார்கள்.
.....விதிவிலக்களிக்கப்பட்டது இரண்டு பையன்களுக்கு மட்டும்தான்; மற்ற பிராம்மணச் சிறுவர்களும் **ஐயர் உட்பட** எல்லா பிராம்மண உபாத்தியாயார்களும் சமபந்தியிலேயே சாப்பிட்டு வந்தார்கள் என்பதை அவர்கள் நினைவில் வைக்கவில்லை. தமக்குப் பந்திப் பிரிவினையில் நம்பிக்கை இல்லையென்று, தாம் சமபந்தியில் போஜனம் செய்வதன் மூலம் ஐயர் காட்டினார்.
[தொகு] =
மேற்கோள் முடிவு.
அந்த நாளில் காங்கிரஸ் கட்சி இந்த குருகுலத்துக்கு நிதியுதவி செய்திருந்தது. இந்தக் காரணத்தால் டாக்டர் வரதராஜுலு நாயுடு இந்தத் 'தனிப் பந்தி' முறையைக் கண்டித்தார். பெரியார் ஈ வெ ராமசாமி நாயக்கர் அவர்கள் டாக்டர் வரதராஜுலு நாயுடுவை ஆதரித்து, சாதிப் பிரிவினைகள் பாராட்டுவதைக் கண்டித்துச் சேலத்தில் நடந்த ஒரு பொதுக்கூட்டத்தில் பேசினார். (இது இங்கிருந்து காங்கிரஸ் கட்சியை விட்டுப் பெரியார் பிரிந்தது ஏன் என்ற தலைப்புக்குக் கிளைக்கும் ஒன்று. எனவே, இங்கே நிறுத்திக் கொள்கிறேன்.)
இப்படிப்பட்ட பேச்சுகளால், வவேசு ஐயர் ஏதோ எல்லா பிராமணச் சிறுவர்களுக்கும் தனிப்பந்தி வைத்திருக்கிறார் என்பது போன்ற ஒரு தோற்றம் பரவிவிட்டது. இது குறித்துத் தம் நிலையை விளக்கி வவேசு ஐயர் ஹிந்து பத்திரிகைக்கு ஒரு கடிதம் எழுதினார். ஹிந்து பத்திரிகையின் நூற்றாண்டுப் பதிப்பிலிருந்து இந்தப் பகுதியைத் தருகிறேன்:
Quote:
[தொகு] =
In a letter published in The Hindu on April 15, V. V. S. Aiyer said that except in the case of two Bhrahmin boys in the case of all other Brahmin and non-Brahmin students there was common dining and he made it clear that no Brahmin taken into the Gurukula thereafter would be given any exemption from the general mess." (A Hundred Years of The Hindu - page 337)
[தொகு] =
End of Quote
எனவே, விலக்களிக்கப்பட்டது இரண்டே இரண்டு சிறுவர்களுக்கு மட்டும்தான். அதுவும், அவர்களுடைய பெற்றோர், குருகுலத்துக்கு நிதி வழங்கியவர்கள் என்ற சங்கடத்துக்காக. இதுவும் ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்றுதான் என்றாலும், அன்றைய நிதி நிலைமையில், குருகுலத்தைத் தொடர்ந்து நடத்த வேண்டிய கட்டாய சூழ்நிலையில், ஐயருக்கு வேறு வழி இருந்திருக்கவில்லை.
எல்லோருக்கும் கொடுப்பதுபோல் வவேசு ஐயருக்கும் இன்னொரு சந்தர்ப்பம் கொடுக்க வேண்டும். இந்தக் கேள்வியை மறு ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும்.
o o o
வா.வே.சு அய்யருக்கும் வாஞ்சிநாதனுக்கும் தொடர்பு உண்டுதானே? இந்தச் சுட்டி ஒரு தகவலுக்காகத்தான். http://www.tamiloviam.com/atcharam/page.asp?ID=20&fldrID=1 -- நம்பி.
செங்கோட்டை அக்கிரகாரத்தின் வழியாக ஒரு தாழ்த்தப்பட்ட இனப் பெண்ணை பிரசவத்துக்காக கலெக்டர் ஆஷ் ஏற்றிச் சென்றான்; ஆகவே வாஞ்சிநாதன் கோபமுற்றான் என்று சொல்லப்படுவதும் ஆய்வுக்கு உரிய ஒன்றுதான். நான் இணையத்தில்தான் இத்தகைய செய்திகளைக் கேள்விப்படுகிறேன். இதற்கு முன்னால் படித்ததில்லை. தேவையான தகவல் திரட்டு இருந்த போதிலும் இத்தகைய விவாதங்களில் தற்சமயம் உடல்நிலை காரணமாக ஈடுபட முடியாதவனாக இருக்கிறேன். சில நாள் கழித்துப் பார்ப்போம்.
அது ஒரு புறம் இருக்கட்டும். வாஞ்சிநாதனுக்குத் துப்பாக்கிப் பயிற்சி தந்தவர் வவேசு ஐயர்தான். பாண்டிச்சேரியில் கரடிக்குப்பம் என்றறியப்படும் கருவடிக்குப்பத்தில் இந்தப் பயிற்சி நடந்தது. கலெக்டர் ஆஷைக் கொல்ல வாஞ்சிநாதன் பயன்படுத்திய துப்பாக்கி (·ப்ரெஞ்சு நாட்டுத் தயாரிப்பு என்று நினைவு. விவரங்களைச் சரிபார்த்துச் சொல்கிறேன்.) வவேசு ஐயர் தந்தது என்றொரு குறிப்பு இருக்கிறது. 'இந்தத் துப்பாக்கியைப் பாரதிதாசன்தான் வாஞ்சிநாதனுக்குத் தந்தார்,' என்று பாரதிதாசனுடைய மகன் மன்னர்மன்னன் சொன்னதுண்டு. ஆனால், இது ஐயத்துக்குரியதே. மன்னர்மன்னன் சொல்லியிருக்கும் சில செய்திகளில் உண்மை இல்லை என்பதை என் கட்டுரை ஒன்றில் (வெடிக்காய் வியாபாரம்) குறித்திருக்கிறேன்.
ஆனால், இவ்வளவு இருந்த போதிலும் கொலை வழக்கில் வவேசு ஐயருடைய பெயர் வரவே இல்லை என்பது நோக்கத்தக்கது.
பாரதிக்கு உடல் நலமில்லை என்ற செய்தி பல நண்பர்களுக்குத் தாமதமாகவே தெரிந்தது. தாம் எழுதாத ஒரு தலையங்கத்திற்காக செப்டம்பர் 11ம் தேதி கைது செய்யப்பட்டு சிறைக்குச் சென்று கொண்டிருந்த வ.வே.சு ஐயர், நிலைமையறிந்து, போகும் வழியில், போலீஸ் துணையோடு பாரதியின் வீட்டுக்கு வந்து அவரைப் பார்த்தார். அவரது குடும்பத்தாருடன் பேசினார். அவர்கள் பாரதி மருந்துட்கொள்ள மறுப்பதைச் சொன்னர்கள். "பாரதி, நீ மருந்து சாப்பிட மாட்டேன் என்கிறாயாமே? சாப்பிட்டு உடம்பைத் தேற்றிக் கொள்ள வேண்டாமா?" என்று பரிவோடு அறிவுறுத்திவிட்டுச் சென்றார்.
பாரதி வாழ்ந்த காலத்தில் அவருடைய கவிதைகளை உடனுக்குடன் வாசிக்கவும் மதிப்பிடவும் வல்லதான சிந்தனைச்சூழல் அமைந்திருக்கவில்லை. வ. வே. சு. ஐயர், ஏ. வி. சுப்பிரமணிய ஐயர் முதலான சிலர் மட்டுமே பாரதி கவிதைகளை முக்கிய ஆக்கங்களாகக் கருதிச் சில திறனாய்வுக் குறிப்புகளை அவரது சமகாலத்தில் பதிவு செய்திருந்தனர்.
சிறுகதை என்னும் இலக்கிய வடிவம் ஆங்கிலத்திலிருந்து இறக்குமதியாகியிருந்தாலும் தமிழிற்கு வந்து ஏறத்தாழ நூறாண்டுகளாகியிருக்கிறது. மரபை உடைத்துக் கொண்டு வெளியே வருவதில் நம் படைப்பாளிகள் பெருமளவு தயக்கம் காட்டுவதாகவே தெரிகிறது. வ.வே.சு ஜயரின் "குளத்தங்கரை அரசமரம்" பேச ஆரம்பித்தில் தொடங்கிய இந்த வடிவம், இன்னமும் கூட நோக்கத்தக்கது.
வ.வே.சு.ஐயர் அவர்களின் மனைவி சிறீ மதி பாக்கியலஷ்மி அம்மாள் பட்ட கஷ்டங்கள்தான் எத்தனை.