புதையல் உவமை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.

புதையல் அல்லது மறந்துள்ள புதையல் இயேசு தனது போதனைகளின் போது விண்ணரசை விளக்குவதற்காக கூறிய உவமானக் கதையாகும். இது மத்தேயு 13:44 இல் எழுதப்பட்டுள்ளது. இது முத்து உவமைக்கு முன்னதாக கூறப்பட்டது. இது ஒருவசனம் மட்டுமேயுள்ள சிறிய உவமையாகும்.

பொருளடக்கம்

[தொகு] உவமை

ஒருவர் நிலத்தில் மறைந்திருந்த புதையல் ஒன்றைக் கண்டுபிடிக்கிறார். அவர் அதை முடி மறைத்து விட்டு மகிழ்ச்சியுடன் போய்த் தமக்குள்ள யாவற்றையும் விற்று அந்த நிலத்தை வாங்கிக்கொள்கிறார்.

[தொகு] பொருள்

இயேசு விண்ணரசை மறைந்திருக்கும் புதையலுக்கு ஒப்பிடுகிறார். அதை கண்ட மனிதன் போய் தனக்குள்ளதெல்லாவற்றையும் விற்று அந்நிலத்தை விலைக்கு வாங்கி புதியலை அடைகிறான். அதனால் அவன் முன்னரை விட செல்வந்தனாகிறான். அழியக்கூடிய இவ்வுலக செல்வங்களைக் கொண்டு அழியாத விண்ணக செல்வங்களை தேட வேண்டும் என்பது இதன் பொருளாகும்.


[தொகு] ஏனைய நூல்கள்

விவிலியத்தின் ஏனைய நற்செய்தி நூல்களில் இவ்வுவமை காணப்படுவதில்லை. ஆனாலும் விவிலிய நூலாக ஏற்கப்படாத தோமையாரின் நற்செய்தி நூலில் இதனை ஒத்த உவமை ஒன்று காணப்படுகிறது. இது 109 வது வசனத்தில் கூறப்பட்டுள்ளது. பின்வரும் தோமையாரின் நற்செய்தியின் வசனம் பற்றசன்-மேயர் (Patterson-Meyer) ஆங்கில மொழிபெயர்ப்பின் தமிழாக்கமாகும்.

109. இயேசு கூறியதாவது."(தந்தையின்) அரசு பினவரும் நிகழ்ச்சிக்கு ஒப்பாகும்; தனது நிலத்தில் ஒரு புதையல் மறைந்திருந்தும் அதை அம்மனிதன் அறியாமல் இருந்தான். அவன் மரித்தபோது அந்நிலத்தை மகனுக்கு விட்டுச்சென்றான். மகனும் புதையல் பற்றி அறியாது நிலத்தை வேறு ஒருவருக்கு விற்றுவிடுகிறான். நிலத்தை வாங்கியவனோ நிலத்தை உழும்போது புதையலை கண்டுபிடித்தான். பின்பு அவன் எல்லோருக்கும் பணத்தை வட்டிக்கு கொடுக்கும் பெருஞ்செல்வந்தனானான்.




[தொகு] இவற்றையும் பார்க்கவும்

இயேசுவின் உவமைகள் - தொகு
கனிகொடா அத்திமரம் | வலை | இரவில் வந்த நண்பன் | நல்ல சமாரியன் | நல்ல ஆயன் | வளரும் விதை | புதையல் | திராட்சை தோட்ட வேலையாட்கள்  | புளித்த மா | காணாமல் போன காசு | காணாமல் போன ஆடு | மன்னர் மகனின் திருமணம் | கடுகுவிதை | முத்து | பரிசேயனும் பாவியும் | தாலந்துகள் உவமை | ஊதாரி மைந்தன் | மூட செல்வந்தன் | செல்வந்தனும் இலாசரசும் | நேர்மையான பணியாள் | செம்மறியாடுகளும் வெள்ளாடுகளும் | விதைப்பவனும் விதையும் | கோதுமையும் களைகளும் | பத்து கன்னியர் | இரண்டு கடன்காரர் | இரண்டு மகன்கள் | நேர்மையற்ற நடுவர் | நீதியற்ற வீட்டுப் பொறுப்பாளர் | இரக்கமற்ற பணியாளன் | திராட்சை செடி | பொல்லாத குத்தகையாளர் | வீடு கட்டிய இருவர் |கிழிந்த ஆடையும் பழந்துருத்தியும்

[தொகு] உசாத்துணைகள்

[தொகு] வெளியிணப்புகள்

ஏனைய மொழிகள்