சோமசுந்தரப் புலவர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.

நவாலியூர் சோமசுந்தரப் புலவர்
நவாலியூர் சோமசுந்தரப் புலவர்

சோமசுந்தரப் புலவர் இலங்கை, யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ள நவாலி என்னும் ஊரைச் சேர்ந்தவர். தங்கத் தாத்தா என அன்பாக அழைக்கப்பட்டவர். நவாலியூர்ச் சோமசுந்தரப் புலவர் ஏறக்குறையப் பதினைந்தாயிரம் செய்யுள் இயற்றியுள்ளார். ஆடிப்பிறப்புக்கு நாளை விடுதலை போன்ற பல செய்யுள்களை சுவையான முறையில் எளிய தமிழில் பாடியுள்ளார். பலவகைப் பக்திப் பாடல்களையும் அவர் இயற்றியிருக்கின்றார். கதிர்காமம் முருகக் கடவுளைக் குறித்து பாடிய கதிரைச் சிலேடை வெண்பா புகழ் பெற்றது.

பொருளடக்கம்

[தொகு] இயற்றிய பிரபந்தங்கள்

பதிகம், ஊஞ்சல் என்றும் இரண்டு பிரபந்தங்களையும் பாடிய சோமசுந்தரப் புலவர் கலம்பகம், நான்மணி மாலை, அட்டகம், அந்தாதி, சிலேடை வெண்பா, திருப்பள்ளியெழுச்சி ஆகிய பிரபந்தங்களையும் பாடினார்.

சைவத் தலங்களை மையமாக அட்டகிமுக் கலம்பகம், தில்லை அந்தாதி, கதிரைச் சிலேடை வெண்பா போன்ற பிரபந்தங்களைப் பாடியுள்ளார்.

[தொகு] இயற்றிய நாடகங்கள்

  • உயிரிளங்குமரன்

[தொகு] இணையத்தில் புலவரின் குழந்தைப் பாடல்கள்

[தொகு] வெளி இணைப்புகள்