டக்ளஸ் தேவானந்தா
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
டக்களஸ் தேவானந்தா (Douglas Devananda) (10/11/1957; யாழ்ப்பாணம், இலங்கை) ஒரு இலங்கை அரசியல்வாதி ஆவார். இவர் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் தலைவர் ஆவார். ஆரம்பத்தில் ஈழப் போராளியாக இருந்து பின்னர் ஜனநாயக அரசியலுக்கு மாறியவர். இவரின் அரசியல் தமிழீழ விடுதலைப் புலிகளின் ஏக பிரதிநிதித்துவ கொள்கைக்கு நேரடி சவாலாக இருப்பதோடு, அக்கொள்கையையும் மறுதலிக்கின்றது.