ஆறு (திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.

ஆறு
இயக்குனர் ஹரி
தயாரிப்பாளர் சரண்
கதை ஹரி (திரைக்கதை)
ஹரி (கதை)
சுஜாதா (வசனம்)
நடிப்பு சூர்யா
திரிஷா
அசிஷ் விஷ்யாத்ரி
இசையமைப்பு தேவி சிறீ பிரசாத்
வினியோகம் ஜெமினி புரொடக்ஷன்ஸ்
வெளியீடு 2005
கால நீளம் 168 நிமிடங்கள்.
மொழி தமிழ்
IMDb profile

ஆறு 2005 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஹரியின் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சூர்யா, திரிஷா மற்றும் பலர் நடித்துள்ளனர்.


[தொகு] வகை

மசாலாப்படம்

[தொகு] கதை

கதைச்சுருக்க எச்சரிக்கை: கதைச்சுருக்கம் மற்றும் / அல்லது கதை முடிவு விவரங்கள், கீழே தரப்பட்டுள்ளன.

விஷ்வனாதனுக்குக் கூலியாளாக இருக்கும் ஆறு (சூர்யா) தனது எஜமானரான விஷ்வனாதனுக்காக (அசிஷ் விஷ்யாத்ரி) பல கொடிய செயல்களைத் துணிந்து செய்கின்றார். ஆனால் விஷ்வனாத்தின் பரம எதிரியான ரெட்டியினால் பல பிரச்சனைகள் வரவே அவருக்கு எதிராக ஆறுவை மோதச் சொல்கின்றார். ஆனால் விஷ்வனாத்தின் சூழ்ச்சியினால் ஆறுவின் நெருங்கிய நண்பர்கள் கொல்லப்படவே பின்னைய காலங்களில் முதலாளியின் சூழ்ச்சிகளை அறிந்து கொள்கின்றார் ஆறு. பின்னர் தனது முதலாளியைப் பழி வாங்குகின்றார்.