நுழைவாயில்:இலங்கை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.


edit  

இலங்கை - அறிமுகம்


இலங்கை இந்தியத் துணைக்கண்டத்தின் தென்கீழ் கரைக்கு அப்பால் இந்து சமுத்திரத்தில் அமைந்துள்ள ஒரு அழகான தீவு தேசம் ஆகும். இலங்கையின் அமைவின் காரணமாக இந்து சமுத்திரத்தின் நித்திலம் என்ற புகழும் இதற்கு உண்டு. இலங்கை ஒரு பல்லின பல்சமய நாடாகும். இலங்கை 2500 ஆண்டு பழைமையான வரலாற்றை கொண்டது. அதற்கு முன்னர் இராமாயணத்தில் இலங்கை பற்றிய தகவல்கள் காணப்படுகிறது. 1815 ஆம் ஆண்டு இலங்கையின் கடைசி சுதேச இராச்சியமான கண்டி இராச்சியம் வீழ்ச்சியடைந்தது தொடக்கம் இலங்கை பிரித்தானியாவின் குடியேற்றவாதநாடாக மாறியது. மீண்டும் 1948 பெப்ரவரி 4 ஆம் நாள் சுதந்திரம் பெற்று சுதந்திர நாடாகியது. 1972 ஆம் ஆண்டு இலங்கை தன்னை குடியரசாக பிரகடணப்படுத்தியது. 1948 ஆண்டுக்ப் பின்னரான இலஙகையில் தோன்றிய இனமுறுகள் ஒரு உள்நாட்டு யுத்தத்தை ஏற்படுத்தியது. 2002 ஆம் முதல் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இலங்கை அரசுக்கும் இடையே யுத்த நிறுத்த ஒப்பந்தம் கைசாத்டிடப்பட்டு, பல மீறல்கள்களுக்கு மத்தியிலும், நடைமுறையிலுள்ளது.

edit  

தேர்வுக் கட்டுரை


யாழ்ப்பாண நகரம் இலங்கைத்தீவின் வட கோடியிலுள்ள ஒரு நகராகும். இது யாழ்ப்பாணக் குடாநாட்டின் தென்மேற்குப் பகுதியில் யாழ்ப்பாண நீரேரியைப் பார்த்தபடி அமைந்துள்ளது. இலங்கையின் தலைநகரான கொழும்பிலிருந்து 396 கி.மீ. தூரத்தில் அமைந்துள்ள இந் நகரம், நீண்ட காலமாகவே நாட்டிலுள்ள இரண்டாவது பெரிய நகரமாக விளங்கி வருகிறது. 1987 ஆம் ஆண்டுக்கு முன்னர் வடமாகாணத்தின் தலைநகரமாக விளங்கிய யாழ்ப்பாணம், அந்த ஆண்டில், தற்காலிகமாக வடக்கு, கிழக்கு மாகாணங்களை இணைத்து உருவான வட-கிழக்கு மாகாணசபைக்குத் திருகோணமலையைத் தலைநகரமாக்கியபின், மாகாணத் தலைநகரம் என்ற அந்தஸ்த்தை இழந்தது.


மேலும்...

edit  

தேர்வுப் படிமம்


கண்டி நகரில் அமைந்துள்ள இலங்கையின் மிகப் புனிதமான வணக்கத் தளங்களில் ஒன்றான தலதா மாளிகை. 1592 தொடக்கம் 1815 வரை இருந்த கண்டி இராச்சியத்தின் அரசர்களின் அரண்மனை வளாகத்தின் உள்ளேயே இவ்வாலயம் அமைந்துள்ளது.

edit  

தெரியுமா உங்களுக்கு?...


  • இலங்கை இந்து சமுத்திரத்தில் முத்து என அழைக்கப்படுகின்றது.
  • இலங்கை கிரிக்கட் உலகக்கிண்ணத்தை 1996 ல் கைப்பற்றியது.
  • தெற்கு ஆசியாவில் இலங்கையே கல்வி அறிவு கூடிய நாடாகும்.
  • இலங்கையின் முதலாவது அதிபர் (சனாதிபதி) வில்லியம் கொபல்லாவ ஆவார்.
edit  

இணைய மூலங்கள்

edit  

தொடர்புடைய நுழைவாயில்கள்


இதுவரை உருவாக்கப்படவில்லை

edit  

நுழைவாயில்:இலங்கை செய்திகள்


  • மாவிலாறு அணையை திறக்க படையினர் தீவிர முயற்சி

(29 யூலை 2006) திருகோணமலை மாவட்டம் வெருகல் பகுதியிலுள்ள `மாவில்' ஆற்றை நோக்கி வெலிக்கந்தையிலிருந்து நேற்று வெள்ளிக்கிழமை அதிகாலை படையினர் மேற்கொண்ட இராணுவ நடவடிக்கையை தாங்கள் முறியடித்துள்ளதாக விடுதலைப் புலிகள் தெரிவித்துள்ளனர்.

மகாவலி ஆற்றின் கிளை ஆறான வெருகல் ஆற்று நீர் சிங்களப் பிரதேசத்துக்கு செல்வதை விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியிலுள்ள வெருகல் மக்கள் கடந்த ஒருவாரமாகத் தடை செய்துள்ள நிலையிலேயே இந்த ஆற்று நீரை சிங்களப் பகுதிக்கு திறந்துவிடும் நோக்கில் படையினர் இந்த இராணுவ நடவடிக்கையை நேற்றுக் காலை மேற்கொண்டனர்.

edit  

தொடர்பான பகுப்புகள்

edit  

நீங்கள் செய்யக்கூடியது

edit  

தொடர்புடைய விக்கிமீடியா திட்டங்கள்

வார்ப்புரு:Portals

வார்ப்புரு:Purgepage


ஏனைய மொழிகள்