கண்ணதாசன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.

கண்ணதாசன் (Kannadasan) ( 24.6.1927 - 17.10.1981) புகழ் பெற்ற தமிழ்த் திரைப்பட பாடலாசிரியரும் கவிஞரும் ஆவார்.நான்காயிரத்திற்கும் மேற்பட்ட கவிதைகள், ஐந்தாயிரத்திற்கம் மேற்பட்ட திரைப்படப் பாடல்கள், நவீனங்கள், கட்டுரைகள் பல எழுதியவர்.சண்டமாருதம், திருமகள், திரை ஒலி, மேதாவி, தென்றல், தென்றல்திரை, முல்லை, கண்ணதாசன் ஆகிய இதழ்களின் ஆசிரியராக இருந்தவர்.தமிழக அரசின் அரசவைக் கவிஞராக இருந்தவர். சாகித்ய அகாதமி விருது பெற்றவர்.

பொருளடக்கம்

[தொகு] வாழ்க்கைக் குறிப்பு

இந்து மதத்தில் பிறந்தவராயினும் மதவேற்றுமை கருதாமல் ஏசுகாவியம் பாடியவர். கம்பரின் செய்யுளிலும், பாரதியாரின் பாடல்களிலும் மிகுந்த ஈடுபாடு கொண்டவர். அவர்களை மானசீக குருவாகக் கொண்டவர். சண்டமாருதம், திருமகள், திரை ஒலி, மேதாவி, தென்றல், தென்றல்திரை, முல்லை, கண்ணதாசன் ஆகிய இதழ்களின் ஆசிரியராக இருந்தவர்.


[தொகு] படைப்புகள்

  • வனவாசம் (சுயசரிதை)
  • இயேசு காவியம்
  • அர்த்தமுள்ள இந்து மதம்

[தொகு] விருதுகள்

  • சாகித்ய அகாதமி விருது

[தொகு] வெளி இணைப்புகள்

ஏனைய மொழிகள்