மன்னா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.

மன்னா அல்லது மனா யாத்திராகமம் நூலில் கூறப்பட்டுள்ள இஸ்ரவேலருக்காக பாலைவனத்தில் அதியசமாக உருவாக்கப்பட்ட உணவாகும். இஸ்ரவேலர் வாக்களிக்கப்பட்ட நாட்டில் முதலாவது அறுவடை செய்த போது மன்னா பொழிவது நின்றுப்போனது. "மன் வு" அல்லது "மன்னா என்ற" எபிரேய மொழிப் பதம் "இது என்ன?" என மொழிப் பெயர்க்கப்படும். மொழியியலாளர் யோர்ஜ் கொசென் என்பவர் இப்பதம் உணவு என்ற பொருளுடைய எகிப்திய "மென்னுயு" என்ற சொல்லின் மறு வடிவம் என் கருதுகின்றார்[1]. மன்னா என்பது இன்று ஆன்மீக கொடைகளை குறிப்பதற்காக பயன்படுத்தப்படுகிறது.

கிறிஸ்தவர் மன்னாவை திவ்விய நற்கருணையின் அடையாளமாக நோக்குகின்றனர் [2]. புனித பவுல் மன்னாவை "ஆன்மீக உணவு" எனக் குறிப்பிடுகிறார்[3] அவர் மன்னாவுக்கும் திவ்விய நற்கருணைக்குமான தொடர்ப்பை விளக்குகிறார்.


யூத-கிறிஸ்தவ சமயங்களின் படி, மன்னா அதிசயமாக கடவுளால் இஸ்ரவேலருக்கு அவர்களது 40வருட பாலைவன வாழகையில் கொடுக்கப்பட்டதாகும். அது இரவில் பனிப்போல பொழிந்த்தது மேலும் அது கொத்துமல்லி விதையளவாகவும் முத்து போன்ற நிறமாகவும் காணப்பட்டது[4] அது சூரிய வெப்பத்தால் உருகிப்போக முன்பாக சூரியோதயத்துக்கு முன்பாக சேகரிக்கப்பட்டது. அவகள் அதை சேகரித்து அரைத்து அல்லது இடித்து சமைத்தனர்[5]. சபத்துக்கு முதல் நாள் இரட்டிப்பான அளவு மன்னா பொழிந்தது சபத் நாளில் மன்னா பொழியவில்லை. இஸ்ரவேலர் கிகால் என்னும் இடத்துக்கு வந்து நிசான் மாதாம் 14 ஆம் நாள் அங்கு அறுவடைச் செய்யப்பட்ட தானியங்களை உண்ட போது மன்ன பொழிவது நின்றுப்போனது.



[தொகு] ஆதாரம்

  1. Durch Gosen zum Sinai, 1881, p. 236
  2. யோவான் நற்செய்தி 6:
  3. கொரிந்தியர் 10:3
  4. எண்ணாகமம் 11:7
  5. எண்ணாகமம் 11:8
"http://ta.wikipedia.org../../../%E0%AE%AE/%E0%AE%A9/%E0%AF%8D/%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE.html" இலிருந்து மீள்விக்கப்பட்டது