பலாலி வீதி
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
இலங்கை, யாழ்ப்பாணக் குடாநாட்டின், முக்கிய நகரமான யாழ்ப்பாணத்தை, அதிலிருந்து சுமார் பத்து மைல்கள் தொலைவில் உள்ள பலாலி என்னும் ஊருடன் இணைக்கும் வீதியே பலாலி வீதி ஆகும். இது யாழ்ப்பாண நகரத்தில் அமைந்துள்ள ஆரிய குளம் என அழைக்கப்படும் குளத்துக்கு அருகில் இருந்து தொடங்கி, கந்தர் மடம், திருநெல்வேலி, கோண்டாவில், உரும்பராய், ஊரெழு, புன்னாலைக் கட்டுவன், வசாவிளான் ஆகிய ஊர்களினூடாக, யாழ்ப்பாணத்தின் வானூர்தி நிலையம் அமைந்திருக்கும் பலாலியை அடைகின்றது.
சாதாரண வழித் தடங்களாக அமைந்திருந்த இப் பாதை 1850 களை அண்டிய காலப்பகுதியில் பிரித்தானிய குடியேற்றவாத அரசினால் ஒழுங்கான வீதியாக அமைக்கப்பட்டது.
[தொகு] முக்கிய சந்திகள்
சுமார் 10 மைகளுக்கு மேல் நீளம் கொண்ட இவ்வீதியைப் பல வீதிகள் குறுக்காக வெட்டிச் செல்கின்றன. இவ்வாறு உருவான முக்கியமான சந்திப்புகள் வருமாறு:
- ஆரியகுளம் சந்தி
- இலுப்பையடிச் சந்தி
- பல்கலைக் கழகச் சந்தி
- கந்தர்மடம் சந்தி
- திருநெல்வேலிச் சந்தி
- கோண்டாவில் சந்தி
- உரும்பராய்ச் சந்தி
- ஊரெழுச் சந்தி
- புன்னாலைக் கட்டுவன் சந்தி
- வசாவிளான் சந்தி