விஞ்ஞான புனைக்கதைகளும் தொழிநுட்ப வளர்ச்சியும்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
இன்றைய நவீன உலகில் பயன்படுத்தப்படும் பல்வேறுபட்ட நவீன உபகரனங்களின் தோற்றமானது விஞ்ஞான புனைக்கதைகளின் சிந்தனையில் உருவானது என்றால் மிகையாகாது. இப் புனைக்கதைகளை புனையும் புனைக்கதையாளர்களால் கணணி உலகம் எந்த அளவிற்கு ஒளிமயமாக்கப்பட்டது என்பது, அவர்களின் கதைகளில் கூறப்பட்டவற்றை ஒன்றாக வைத்துப் பார்க்கும் போது மிகவும் தெளிவாக புலப்படுகின்றது. CRT மொனிடர் என அழைக்கப்படும் கத்தோற்று கதிர் குழாய்கள் (Cathode Ray Tube) பயன்படுத்தப்படும் சாதாரன மொனீட்டர்களில் வெளிச்சத்தைக் கொடுப்பது; பொஸ்பர் எனும் இரசாயனம் பூசப்பட்ட கண்ணாடியானது வெள்ளித்திரை போன்று மின்னுவதனாலாகும். மொனீட்டரின் பின்புரமாக இருக்கும் கத்தோட்டு கதிர் பாய்ச்சியானது ஒரே இடத்திற்கு கதிர்களைப் பாய்ச்சுவதனால் அவ்விடத்தில் பொஸ்பரானது சேதத்திற்கு உற்பட வாய்ப்புள்ளது இதனை தவிர்ப்பதற்கான ஒரு வழிமுறையே ஸ்கிரீன் சேவர் (Screensaver) ஆகும்.
தொட்டி ஒன்றில் நீந்தும் மீன்கள், அல்லது கற்பாறை ஒன்றின் மத்தியில் நீந்தும் மீன்களைக்கொண்ட தற்காலத்தில் நமது கணணிகளில் பயன்படுத்தும் ஸ்கிரீன் சேவர் (Screensaver) களுக்கான அடிப்படை சிந்தனையானது ஒரு விஞ்ஞான புனைக்கதையினாலேயே உருவானது. 1961 ஆம் ஆண்டில், அதாவது கணணிகளை மேசையின் மீது அல்ல அறைகளில் வைக்கப்பட்ட பாரிய கணணிகள் இருந்த காலத்தில் “ஸ்ரேஞ்சர் இன் அ ஸ்ரேஞ்சர் லேண்ட்” (Stranger in a stranger Land) எனும் புனைக்கதையில் “ரொபட் ஹைன்லைன்” இவ்வாறு எழுதியிருந்தார். “...அவன் தனது அறையினுள் வரும் போது ஜீல் அமர்ந்துகொண்டிருந்தான். அவனது கதிரையின் முன்னால் ஸ்டீரியோ விஷன் தொட்டியொன்று இருந்தது அவம் ஒரு சுவிச்சை அழுத்தியதும் பாறைகளினிடையால் கப்பி மீன்கள் நீந்திச் செல்ல ஆரம்பித்தது......”
கணணித் திறைகளில் காணப்படும் ஐகன் (Icon) களை ஆரியாதிருக்க வாய்ப்பில்லை, இதன் தொழிற்பாட்டை சொல்லச் சொன்னல் என்ன சொல்வீர்கள் , ஆம், பெரிய ஒரு தகவளை அல்லது படத்தை தன்னகத்தே வைத்திருப்பதுதான். நீங்கள் அதனை செடுகியதும் அது அதனை விரிவாக்கிக் காட்டுகிண்றது. 1968 சேர். ஆதர் சீ. கிளாக் அவர்கள் எழுதிய “2001 அ ஸ்பேஸ் ஒடிஸி” (2001 A Space Odyssey) விஞ்ஞான புனைக்கதையில் பின்வருமாறு பதிவாகியுள்ளது
“...விளம்பர்ங்கள், குறிப்புகள் மற்றும் விவரனங்களினால் அலுப்பு ஏற்பட்டதன் பின்னர் வாகனத்தின் செய்தித் தளத்திற்கு அவனது புல்ஸ்கேப் அளவிலான நியூஸ் பேடினை இனைத்து பூமியிலிருந்து வரும் புதிய தகவல்களை அறிந்துகொண்டான். உலகின் பிரபல இலத்திரனியல் ஊடகங்களின் பிரதான செய்திகள் இங்கு தற்காலிக நினைவில் வைத்துக்கொள்ளப்பட்டு அவை விரும்பியவாறு அலசி ஆராயப்பட்டது. இவை திரையில் ஒரு தபால் முத்திரையளவு சிறிய குறியீடாக காட்சியளித்தன. அவன் அதன் மீது அழுத்தியது முழு விபரத்தையும் பெரக்கூடிய விதத்தில் அது முழுத் திரையிலும் பரந்து விரிந்து காட்சியளித்தது....” சேர் ஆதர் சீ. கிளார்க்கின் மனதில் உதித்த இந்த ஒரு தபால் முத்திரையளவு சிறிய குறியீட்டின் செயற்பாடு இன்று உங்களுக்கு பலக்கப்பட்ட ஒன்று. அதாவது கணணித் திரையிலுள்ள “ஐகன்” கள் தொழிற்படுவது இம்முறையிலாகும்.
(இன்னும் தொடரும்.............)