பகுப்பு பேச்சு:வரலாறு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.

[தொகு] மக்களின் வரலாறு பதியப்படவேண்டும்

"இது வரையிலான வரலாறு என்பது ஆள்வோரின் வரலாறாக (அரசுகளின் வரலாறாக) ஓர் ஒற்றைச் சொல்லாடலாக, தட்டையானதோர் ஒற்றைத் தடத்தில் தொடர்ந்து செல்லும் ஒன்றாகவே பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் வெகு சனங்களின் பார்வைகள், மொழியாடல்கள், அனுபவங்கள், குரல்கள், நினைவுக் குறிப்புகள், அறிவுத் தேடல்கள், வரலாறுகள் கவனம் பெறாதும் பார்க்கபெறாதும் கேக்கப்படாதுமே போயுள்ளன." (மகரந்தனின் சனங்களும் வரலாறும் பதிப்புரையிலிருந்து) --Natkeeran 01:02, 5 ஜூலை 2006 (UTC)


"தமிழ்நாட்டைப் பொறுத்த அளவில் பிரமிப்பூட்டும் பல்லவர் மற்றும் பிற்காலச் சோழர் கால வரலாற்று மாயையிலிருந்து சராசரித் தமிழன் இன்னும் மீளவில்லை. கல்கியும் சாண்டில்யனும் விக்ரமனும் உருவாக்கிய வெகுசன வரலாற்று நாவல்களின் தாக்கம் நம் வரலாற்றுணர்வை மிகவும் குறுக்கிவிட்டது. சாதிய மேலாண்மையையும் அதன் அடிப்0படையில் உருவாக்கப்பட்ட சுரண்டல்களும் 'ஆசியக் கொடுங்கோன்மை' என்றழைக்கப்படும் உடன்கட்டை, குழந்தை மணம், நரபலி, தீண்டாமை, தேவதாசி முறை போன்ற சமூகக் கொடுமைகளும் தமிழ்ச் சமூகத்தில் இடம் பெற்றிருந்தன. இன்றும் கூட இவற்றுள் சில நம் சமூக வாழ்வில் பழைய வடிவிலோ புதிய வடிவிலோ இடம்பெற்றுள்ளன. இக்கொடுமைகளை மக்கள் எதிர் கொண்டமையும் அவற்றிலிருந்து விடுபட அவர்கள் நடத்திய போராட்டங்களையும் நமது வரலாற்று நூலகள் முறையாக பதிவு செய்யவில்லை." (ஆ. சிவசுப்பிரமணியன், வாய்மொழி வழக்காறுகளும் வரலாறும் கட்டுரை, சனங்களும் வரலாறும் என்ற நூலில் பக் 22) --Natkeeran 15:09, 5 ஜூலை 2006 (UTC)

[தொகு] வரலாறு தொடர்புடைய சுட்டிகள்