சுருதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.

சுருதி எனப்படுவது சுவரத்தைத் தொடங்குவதற்கு அடிப்படையான ஒலியமைப்பு ஆகும். இது கேள்வி என்றும் சொல்லப்படும். நாதத்திலிருந்து சுருதி உற்பத்தியாகின்றது.

[தொகு] முக்கியத்துவம்

நாம் பாடுவதற்கு மத்யஸ்தாயி ஸட்ஜத்தையே ஆதாரமாகக் கொள்வதனால் அதனையே சுருதி என்கிறோம். சுருதி சுத்தமாக இசைக்கப்படும் சங்கீதம் தான் கேட்பதற்கு இனிமையாக இருக்கும். சுருதி சங்கீதத்திற்கு மிகப் பிரதானமாக இருப்பதனால் சுருதியை மாதா என்றும் லயத்தைப் பிதா என்றும் சொல்வர்.

[தொகு] வகைகள்

சுருதி இரு வகைப்படும். அவையாவன:

  1. பஞ்சம சுருதி - இது மத்யஸ்தாயி ஷட்ஜத்தை ஆதாரமாகக் கொண்டு பாடுவது;
  2. மத்திம சுருதி - இது மத்யஸ்தாயி மத்திமத்தை ஆதாரமாகக் கொண்டு பாடுவது.

சாதாரணமாகப் பாட்டுக்கள் எல்லாம் பஞ்சம சுருதியிலேயே பாடப்படுகிறது. நிஷாதாந்திய, தைவதாந்திய, பஞ்சமாந்திய இராகங்களில் அமைந்த பாடல்களும் தாரஸ்தாயி ஷட்ஜத்திற்குட்பட்ட சிறுவர் பாடல்களும் மத்திம சுருதியில் பாடப்படுகின்றன. நாம் சாதாரணமாக சுருதி சேர்க்கும் பொழுது ஸா-பா-ஸ்ர்-பா என்ற முறையில் சேர்க்கிறோம்.

[தொகு] சுருதிக்குப் பயன்படும் கருவிகள்

சுருதிக்குப் பயன்படும் கருவிகளுள் தலைசிறந்தது தம்பூரா ஆகும். இன்று இலத்திரனியல் சுருதிப்பெட்டியும் அரங்கிசையில் இடம்பெற ஆரம்பித்துள்ளது.

"http://ta.wikipedia.org../../../%E0%AE%9A/%E0%AF%81/%E0%AE%B0/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF.html" இலிருந்து மீள்விக்கப்பட்டது