ராஜன் ஹூல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.

ராஜன் ஹூல் (சில வேலைகளில் ராஜன் கூல்) இலங்கையின் முன்னணி மனித உரிமை செயற்பாட்டாளரும் முன்னாள் பல்கலைக்கழக கணித விரிவுரையாளருமாவார். இவர் 1988 ஆம் ஆண்டு ராஜினி திராணகமவுடன் இணைந்து மனித உரிமைகளுக்கான யாழ் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தை ஆரம்பித்தார். தற்போது இவர் தென்னிலங்கையிலிருந்து மனித உரிமை நடவடிக்கைகளை தொடர்ந்து செய்துவருகின்றார்.

[தொகு] சரிதம்

ராஜன் கூல் யாழ்பாணத்தைச் சேர்ந்த தமிழ்க் கிறிஸ்தவ பாதிரியாருடைய மகனாவார். பேராசிரியர் ரத்னஜீவன் ஹூல் இவரது சகோதரர் ஆவார். ராஜன் கூல் தன்னுடைய மாணவப் பருவத்தில் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் ஆதரவாளராகவும் தந்தை செல்வநாயகத்தில் நம்பிக்கை உடையவராகவும் இருந்தார். 1977 ஆம் ஆண்டு தமிழர்களுக்கு எதிராக நடந்த வன்முறைச் சம்பவங்களை அடுத்து அரசியல் அமைப்புகளில் ஈடுபடத் தொடங்கினார். பின்னர் லண்டனுக்கு உயர்கல்வி கற்கச் சென்ற கூல் 1985ஆம் ஆண்டு யாழ்ப்பாணம் திரும்பினார். யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் கணிதவியல் விரிவுரையாளராக இணைந்த கூல் சண்டே ரிவிவ் (Saturday Review) என்ற ஆங்கில பத்திரிகையில் பகுதி-நேர ஆசிரியராகவும் பணியாற்றினார்.

1986 ஆம் ஆண்டு ராஜினி திராணகமவும் சிறிதரனும் தங்களின் உயர் கல்வியை முடித்துக் கொண்டு லண்டனிலிருந்து யாழ்ப்பாணம் திரும்பினார்கள். இதையடுத்து இவர்களோடு ஒன்று சேர்ந்த கூல், 1989 ஆம் ஆண்டு முறிந்த பனை என்னும் ஆங்கில நூலை எழுதி வெளியிட்டார். அதே ஆண்டில் மனித உரிமைகளுக்கான யாழ் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தையும் ஆரம்பித்தார். 1989 செப்டம்பர் 21 இல் ராஜினி பணிக்கு செல்லும் வழியில் சுட்டுக் கொல்லப்பட்டார். 1990 ஆம் ஆண்டு இரண்டாவது ஈழப்போர் தொடங்கியதும் மனித உரிமைகளுக்கான யாழ் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தின் ஏனைய உறுப்பினர்கள் உயிர் அச்சுறுத்தல் காரணமாக யாழ்ப்பாணத்தை விட்டு தென்னிலங்கைக்கு தப்பிச் சென்றார்கள். கூலின் பல்கலைக்கழக வேலையும் பறிபோனதால் அவரும் தென் இலங்கைக்கு குடிப்பெயர்ந்தார்.

[தொகு] வெளியீடுகள்

1.முறிந்த பனை - The Broken Palmyrah (1989, Co author, Harvey Mudd College California)

2. Sri Lanka: The Arrogance of power; Myth, Decadence and murder (2000, UTHR, Colombo)

[தொகு] ஆதாரங்கள்

ஏனைய மொழிகள்