வடிம்பலம்ப நின்ற பாண்டியன்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
பாண்டிய மன்னர்களின் பட்டியல் | |
---|---|
முற்காலப் பாண்டியர்கள் | |
வடிம்பலம்ப நின்ற பாண்டியன் | |
பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதி | |
சங்ககாலச் பாண்டியர்கள் | |
முடத்திருமாறன் | கி.மு 200 - கி.பி. 200 ?? |
இளம் பெருவழுதி | கி.மு 200 - கி.பி. 200 ?? |
பூதப் பாண்டியன் | கி.மு 200 - கி.பி. 200 ?? |
ஆரியப் படைகடந்த நெடுஞ்செழியன் | கி.பி. 100 - கி.பி. 300 ?? |
நன்மாறன் | கி.பி. 100 - கி.பி. 300 ?? |
தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன் | கி.பி. 100 - கி.பி. 300 ?? |
உக்கிரப் பெருவழுதி | கி.பி. 100 - கி.பி. 300 ?? |
பொற்கைப் பாண்டியன் | கி.பி. 100 - கி.பி. 300 ?? |
பாண்டியன் அறிவுடை நம்பி | கி.பி. 100 - கி.பி. 300 ?? |
பாண்டியன் கீரஞ்சாத்தன் | கி.பி. 100 - கி.பி. 300 ?? |
பாண்டியன் மதிவாணன் | கி.பி. 100 - கி.பி. 300 ?? |
பன்னாடு தந்த பாண்டியன் | கி.பி. 400 முன்னர் ?? |
நல்வழுதி | கி.பி. 400 முன்னர் ?? |
இலவந்திகைப் பள்ளித் துஞ்சிய நன்மாறன் | கி.பி. 400 முன்னர் ?? |
குறுவழுதி | கி.பி. 400 முன்னர் ?? |
நல்வெள்ளியம்பலத்துத் துஞ்சிய பெருவழுதி | கி.பி. 400 முன்னர் ?? |
இடைக்காலப் பாண்டியர்கள் | |
பாண்டியன் கடுங்கோன் | கி.பி. 575 - கி.பி. 600 |
மாறவர்மன் அவனிசூளாமணி | கி.பி. 600 - கி.பி. 625 |
சடையவர்மன் செழியன்வேந்தன் | கி.பி. 625 - கி.பி. 640 |
கோச்சடையன் ரணதீரன் | கி.பி. 640 - கி.பி. 670 |
மாறவர்மன் அரிகேசரி பராங்குசன் - இராச சிம்மன்-1 | கி.பி. 670 - கி.பி. 710 |
நெடுஞ்செழியன் பராந்தகன் - இராச சிம்மன் - 2 | கி.பி. 710 - கி.பி. 765 |
வரகுண மகாராசன் | கி.பி. 765 - கி.பி. 792 |
சீமாறன் பரசக்கர கோலாகலன் - சீபல்லவன் | கி.பி. 835 - கி.பி. 862 |
வரகுண பாண்டியன் | கி.பி. 862 - கி.பி. 880 |
பராந்தக பாண்டியன் | கி.பி. 880 - கி.பி. 900 |
இராச சிம்மன் -3 | கி.பி. 900 - கி.பி. 920 |
பராந்தக பாண்டியன் | கி.பி. 946 - கி.பி. 966 |
பிற்காலப் பாண்டியர்கள் | |
அரிகேசரி சடையவர்மன் பராக்கிரம பாண்டியன் | கி.பி. 1422 - கி.பி. 1461 |
அழகன் பெருமாள் குலசேகரன் | கி.பி. 1429 - கி.பி. 1473 |
சீபல்லவன் | கி.பி. 1534 - கி.பி. 1543 |
முதலாம் அதிர்வீரராம பாண்டியன் | கி.பி. 1564 - கி.பி. 1606 |
வரதுங்கராமன் | கி.பி. 1588 - கி.பி. 1609 |
வரகுணராமன் குலசேகரன் | கி.பி. 1615 |
edit |
வடிம்பலம்ப நின்ற பாண்டியன் என்னும் அரசன் சங்ககாலத்துக்கு (கி.மு.200 - கி.பி.200) முன் ஆண்ட அரசன். இவனை நெடியோன் எனவும் அழைப்பர். பல்லாண்டுகளாக ஆண்டதால் இப்பெயர் பெற்றதாகக் கருதுகின்றனர். கடற்கோளால் கொள்ளப்பட்ட குமரி நாட்டில் முந்நீர்க் கடல் தெய்வத்திற்கு இவன் விழா எடுத்ததாக அறியப்படுகின்றது. இவனுடைய அவையில் தொல்காப்பியம் அரங்கேற்றப்பட்டது. இவ்வரசன் தலைச்சங்கத்தின் இறுதியில் வாழ்ந்ததாகத் தெரிகின்றது. முதல் இரு தமிழ்ச் சங்கங்கள் இருந்ததற்கான உறுதி பயக்கும் சான்றுகள் அதிகம் இல்லை. இலக்கியச் சான்றுகளின் அடிப்படையில் முதல் இரு சங்கங்கள் இருந்ததாகக் கருதப்படுகின்றது. சங்க இலக்கியங்களில் வரும் சிறு குறிப்புகளும், இறையனார் அகப்பொருளில் வரும் விரிவான குறிப்புமே இவ் இலக்கிய சான்றுகள்.
இன்றுள்ள குமரி முனைக்குத் தெற்கே பஃறுளி ஆறு என்று ஓர் ஆறு கடற்கோளுக்கு முன்னர் இருந்தது. ஒரு புறநானூற்றுப் பாடல் நெடியோன் என்னும் இவ்வரசனைப் பற்றிய பாடலில் இவனை வாழ்த்தும் ஒரு செய்தியில்
"முன்னீர் விழவின் நெடியோன்"
"நன்னீர் பஃறுளி மணலினும் பலவே"
என்று குறிப்பிடப்பட்டுள்ளான்.