மலையக இலக்கியம்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
இலங்கையின் மலையகப் பகுதியில் பெரும்பாலும் வசிக்கும் தமிழ் மக்களின் இலக்கிய ஆக்கங்கள் மலையக இலக்கியம் எனப்படும் இவர்கள் பெரும்பாலும் தேயிலை இறப்பர் தோட்டங்களில் வேலைசெய்வதற்காக இந்தியாவிலிருந்து குடியேற்றப்பட்டவர்களுமவர்களது சந்ததியினருமாவர். இந்தப் பின்னணி காரணமாக மலையக இலக்கியமானது மற்றைய நிலைப்பிரிவுகளிலிருந்து வெளிப்பட்ட இலக்கியத்திலிருந்து தெளிவான வேறுபாட்டைக் கொண்டுள்ளது. மலையக இலக்கியம் மலையக மக்களின் பொருளாதார, சமூக, கல்வி, அரசியல் பிரச்சினைகளை முன்வைத்து பெரும்பாலும் அமைகின்றது. சி.வி.வேலுப்பிள்ளை,அருணாசலம்ஆகியவர்கள் மலையக இலக்கியத்தில் குறிப்பிடத்தகவர்கள்.