வ. அ. இராசரத்தினம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.

வ. அ. இராசரத்தினம்
வ. அ. இராசரத்தினம்

வ. அ. இராசரத்தினம் (பி. ஜூன் 5, 1925, மூதூர்) புகழ் பெற்ற ஈழத்து சிறுகதை, நாவல் எழுத்தாளர். சுருக்கமாக வ. அ. என அறியப்படுபவர். ஈழநாகன், கீழக்கரை தேவநேயப் பாவாணர், வியாகேச தேசிகர் என்னும் பல புனைபெயர்களிலும் எழுதியுள்ளார்.

பொருளடக்கம்

[தொகு] வாழ்க்கைக் குறிப்பு

மூதூர், திருக்கோணமலையைப் பிறப்பிடமாக கொண்ட இவரின் பெற்றோர் வஸ்தியாம்பிள்ளை, அந்தோனியா. தாமரைவில் றோமன் கத்தோலிக்கப் பாடசாலையிலும் பின்னர் மூதூர் புனித அந்தோனியார் பாடசாலையிலும் கல்வி கற்றார். 1952 மேரி லில்லி திரேசா என்பாரைத் திருமணம் புரிந்தார்.

[தொகு] இலக்கியப் பயணம்

1946 இல் மட்டக்களப்பு ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியில் சேர்ந்து ஆசிரியப் பயிற்சியைப் பெற்றார். அங்குதான் அவர் தனது மழையால் இழந்த காதல் என்ற சிறுகதையை எழுதினார். இது 1948 ஆம் ஆண்டு செப்டம்பரில் தினகரன் பத்திரிகையில் வெளிவந்தது. இவரது முதற் கவிதை திருகோணமலையில் இருந்து அ. செ. முருகானந்தன் அவர்களை ஆசிரியராகக் கொண்டு வெளிவந்த எரிமலை என்ற பத்திரிகையில் 1948 இல் வெளிவந்தது. இவர் தனது இலக்கியப் பயணத்தை சுய வரலாற்று நூலாக இலக்கிய நினைவுகள் என்ற பெயரில் எழுதியுள்ளார்.

[தொகு] இவரது நூல்கள்

  • துறைக்காரன் (நாவல்)
  • கொழுகொம்பு (நாவல்)
  • கிரௌஞ்சப் பறவைகள் (நாவல்)
  • ஒரு காவியம் நிறைவு பெறுகிறது (சிறுகதைத் தொகுதி)
  • ஒரு வெண்மணற் கிராமம் காத்துக் கொண்டிருக்கின்றது (நாவல்)
  • தோணி (சிறுகதைத் தொகுதி)
  • பூவரசம் பூ (மொழிபெயர்ப்புக் கவிதை)
  • மூதூர் புனித அந்தோனியார் கோயிலின் பூர்வீக வரலாறு (சரித்திரம்)
  • இலக்கிய நினைவுகள் (நினைவுக் கட்டுரைகள், அன்பர் வெளியீடு, திருக்கோணமலை, 1995)

[தொகு] வெளி இணைப்புக்கள்