தோடி
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
தோடி (ஹனுமத்தோடி) என்பது எந்நேரமும் பாடக்கூடிய இராகம். பக்திச்சுவையுள்ளது. விரிவான ஆலாபனைக்கு இடம் தரும் இராகம். 19ம் நூற்றாண்டில் வாழ்ந்த தோடி சீதாராமய்யர் இந்த இராகத்தை 8 நாட்களாக பாடினார் என சொல்லப்படுகிறது. இந்துஸ்தானி இசையில் பைரவி தாட் என்றழைக்கப்ப்டுகிறது.
[தொகு] இலக்கணம்
ஆரோகணம்: | ஸ ரி1 க2 ம1 ப த1 நி2 ஸ் |
அவரோகணம்: | ஸ் நி2 த1 ப ம1 க2 ரி1 ஸ |
- 8 வது மேளகர்த்தா. நேத்ர என்று அழைக்கப்படும் 2 ஆவது வட்டத்தில் (சக்கரத்தில்) 2 வது மேளம். கடபயாதி திட்டத்தின் படி ஹனுமத்தோடி என்று அழைக்கப்படுகிறது.
- இந்த இராகத்தில் வரும் சுரங்கள்: ஸட்ஜம், சுத்த ரிஷபம் (ரி1), சாதாரண காந்தாரம் (க2), பஞ்சமம், சுத்த தைவதம் (த1), கைசிகி நிஷாதம் (நி2) ஆகியவை.
- கிரக பேதத்தின் வழியாக இந்த மேளத்தின் ரி, க, ம, த, நி ஆகிய சுரங்கள் முறையே கல்யாணி, ஹரிகாம்போஜி, நடபைரவி, சங்கராபரணம், கரகரப்பிரியா ஆகிய மேளங்களித் தோற்றுவிக்கிறன. (மூர்ச்சனாகாரக மேளம்).
[தொகு] சிறப்பு அம்சங்கள்
- பல ஜன்ய இராகங்களைக் கொண்ட மேளகர்த்தா.
- ஆரோகணத்திலும் அவரோகணத்திலும் பஞ்சமம் இல்லாமல் இசைத்தால் அதற்குச் சுத்த தோடி என்று பெயர்.
- பஞ்சம நீக்கத்துடன் (வர்ஜதுடன்) கூடிய ஜண்டை (இரட்டைச்) சுரக்கோர்வைகளும், தாட்டுச் சுரக்கோர்வைகளும் இந்த இராகத்தின் வடிவத்தைக் காட்டுகின்றன.
[தொகு] உருப்படிகள்
- கீதம்: கலைமகளே (ரூபக தாளம், பெரியசாமி தூரன்)
- பதம்: தாயே யசோதா (ஆதி தாளம், ஊத்துக்காடு வெங்கட சுப்பையர்)
- வர்ணம்: கனகாங்கி (அட தாளம், பல்லவி கோபலய்யர்)
- சுரஜதி: ராவேஹிமகிரி (ஆதி தாளம், சியாமா சாஸ்திரிகள்)
- கிருதி: கமலாம்பிகே (ரூபக தாளம், முத்துசாமி தீட்சிதர்)