இ. பத்மநாப ஐயர்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
இ. பத்மநாப ஐயர் (இரத்தின ஐயர் பத்மநாப ஐயர், பி. 1941, யாழ்ப்பாணம்) ஈழத்து இலக்கியத்துக்குப் பெரும் பங்காற்றி வரும் இலக்கிய ஆர்வலர். தனது இலக்கியப் பங்களிப்புக்காக இயல் விருது பெற்றவர். கண்ணில் தெரியுது வானம் முதலிய தொகுப்பு நூல்களை வெளியிட்டுள்ளார். பல எழுத்தாளர்களின் நூல்களை வெளியிடுவதில் பங்காற்றியுள்ளார். தமிழியல் பதிப்பகத்தின் மூலம் பல நூல்களை வெளியிட்டு வருகிறார். காலச்சுவடு, நூலகம் திட்டம் போன்றவற்றின் ஆலோசகராகவும் இருக்கிறார். இப்பொழுது லண்டனில் வசித்து வருகிறார்.