கர்னூல்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
கர்னூல் இந்தியாவின் ஆந்திர மாநிலத்திலுள்ள ஒரு மாவட்டத்தின் பெயரும் தலைநகரின் பெயரும் ஆகும். 2001-ஆம் ஆண்டு கணக்கெடுப்பின் படி இம்மாவட்டத்தின் மக்கள்தொகை 3,529,494 ஆகும். இது ஆந்திராவின் மேற்குமத்தியப் பகுதியில் அமைந்துள்ளது. இது துங்கபத்திரா மற்றும் ஹந்திரி ஆறுகளின் தென்கரையில் அமைந்துள்ளது. 1953 முதல் 1956 வரை கர்னூலே ஆந்திராவின் தலைநகரமாக இருந்தது.