திருவான்மியூர்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
திருவான்மியூர் - மருந்தீஸ்வரர் கோயில் அப்பர், சம்பந்தர் ஆகியோரால் பாடல் பெற்ற தலமாகும். சென்னை மாவட்டத்தில் அமைந்துள்ளது. வான்மீகி முனிவருக்கு இறைவன் நடனக் காட்சியருளியமை, காமதேனு பால் சொரிந்து வழிபட்டமை, அகத்தியருக்கு மூலிகைகளைப் பற்றி இறைவன் உபதேசித்தமை ஆகியன இத்தலத்திலேயே நிகழ்ந்தன என்பது தொன்நம்பிக்கை (ஐதிகம்)