வகுளாபரணம்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
வகுளாபரணம் 14வது மேள கர்த்தா இராகமாகும். அக்னி என்றழைக்கப்படும் 3 வது சக்கரத்தில் 2 வது மேளம்.
- ஆரோகணம் : ஸ ரி க ம ப த நி ஸ்
- அவரோகணம் : ஸ் நி த ப ம க ரி ஸ
- இந்த மேளத்தில் ஷட்ஜம், சுத்த ரிஷபம், அந்தர காந்தாரம், சுத்த மத்திமம், பஞ்சமம், சுத்த தைவதம், கைசிகி நிஷாதம் ஆகிய சுரங்கள் வருகின்றன.
- மத்தியஸ்தாயி ஷட்ஜத்திலிருந்து தாரஸ்தாயி மத்திமம் வரை சஞ்சாரம் செய்வது இந்த இராகத்திற்கு இனிமையைக் கொடுக்கும்.
இந்த இராகத்தில் வரும் அந்தர காந்தாரமும், கைசிகி நிஷாதமும் இவ்விராகத்தின் இரஞ்சகத்தை வெளிப்படுத்தும்.
[தொகு] உருப்படிகள்
- கிருதி : கொனியாடி : ஆதி : கர்ப்பபுரிவாசர்.
- கிருதி : ஏராமுனி : திரிபுடை : தியாகராஜர்.
- கிருதி : நிலையான பேரின்பமே : மிஸ்ர சாபு : அம்புஜம் கிருஷ்ணா.
- கிருதி : கெட்டுப்போகாதே : ஆதி :முத்துத் தாண்டவர்.
- கிருதி : நம்பினேன் ஐயா : ஆதி : கோடீஸ்வர ஐயர்.