பேச்சு:சைவ சித்தாந்தம்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
[தொகு] குறிப்புகள்
"சைவ சித்தாந்தம் என்ன சொல்கிறது? இந்த உலக இயக்கம் மூன்று சக்திகளால் ஆகின்றது. அவை இச்சை, கிரியை மற்றும் ஞானம். இச்சை என்றால் விருப்பம் அல்லது ஆசை. கிரியை என்றால் செயல். ஞானம் என்றால் அறிவு. ஒன்றின் மீது ஆசை வைத்து அதை அடைவதற்குக்கு வேண்டிய செயல் செய்யப்படுகிறது. அந்தச் செயலை அறிவதற்கும், பிறகு செயலாற்றுவதற்கும் அறிவு தேவைப்படுகிறது. உலகத்தில் எந்த இயக்கம் என்று பார்த்தாலும் மேற்சொன்ன மூன்று விளைவுகளுக்குள்ளேயே முடிந்து விடுகிறது. ஞானம் குறைவானால், செயலாற்றல் குறையும். ஆசை கை கூடாது. ஆசை தவறானால், அதை அடையும் அறிவும் இருந்தால் தவறான செயல் நடந்தேறும். இப்படி எல்லாமே மூன்று சக்திகளில் முடிந்து விடுகிறது." http://iniyathu.blogspot.com/
"தென்னிந்தியாவிலே சோழப் பேரரசு தோன்றிய காலம், வரலாற்றில் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு காலப் பகுதியாகும். கிருஷ்ணா நதிக்குத் தெற்கே உள்ள நிலப்பகதிகள் யாவும் முதன் முறையாக வலுவுள்ள தமிழ்ப் பேரரசொன்றின் கீழ் அமைந்து சிறப்புமிக்க மாவட்டங்களாக ஒரு குடைக் கீழ் ஆளப்பட்டன. சோழப் பேரரசின் புகழ் உச்ச நிலையில் பட்டொளி வீசிய போது கங்கையும் கடாரமும் கலிங்கமும் இலங்கையும் அதன் அடிபணிந்து நின்றன. அராபியரும் சீனரும் அதன் வாணிபச் சிறப்பிற் பங்கு கொண்டிருந்தனர் இத்தகைய சிறப்புமிக்க காலப்பகுதியிலேதான் தமிழகத்திலே “சைவ சித்தாந்தம்” என்னும் பெருந்தத்துவம் சாத்திர வடிவம் பெற்றது. சைவசித்தாந்த சாத்திரங்கள் பதினான்கு. அவற்றுள் தலையாயது எனக் கொள்ளப்படும் சிவஞானபோதம் பதின்மூன்றாம் நூற்றாண்டிலே எழுந்தது. மெய்கண்டார் காலம் கி.பி. பதின்மூன்றாம் நூற்றாண்டென்பது யாவரும் ஒப்பமுடிந்த உண்மை." http://rethinavelu.tamilpayani.com/blog/
"சித்தாந்தம் என்ற சொல்லை முதன்முதலில் கையாண்டவரும் திருமூலரே!வேதம் பொதுவானது ஆகமம் சிறப்பானது. வேதம் ஆகமம் என்று இரண்டே நூல்கள்தான் உண்டு. பிற நூல்கள் இவற்றின் அடிப்படையில் எழுந்தவை. சிவாகமங்கள் வேதத்தின் உட்கருத்தை அதாவது சைவ சித்தாந்தத்தை எடுத்துரைக்கின்றன." http://karuppupaiyan.blogspot.com/2006/04/blog-post.html
"சைவ சித்தாந்தம் உலகியலோடு முரண்படாவண்ணம் திகழ்கிறது. பிறவியுற்று உலகியலில் வாழ்ந்து, கடந்து இறைவனை உணர்ந்து அடைதலே சைவ சித்தாந்தம். நாம் அன்றாடச் செயல்களை மாற்ற வேண்டும். அதற்கு மந்திரச் சொல் வேண்டும். அன்றாடச் செயல்கள் இன்பம், துன்பம் நிறைந்தது. ஆனால்,மந்திரச் செயல் அப்படியல்ல.மகிழ்வை மட்டுமே உணர்த்துகிறது." http://www.senthamil.com/viewarticle.asp?cid=74&catid=51
[தொகு] சுட்டிகள்
- http://www.geocities.com/Athens/2583/index.html; http://www.geocities.com/Athens/2583/bookgiri.html
- http://members.tripod.com/~Kanaga_Sritharan/muthucoomaraswamy.htm
- http://www.himalayanacademy.com/ssc/
- http://www.experiencefestival.com/saiva_siddhanta
- http://www.seekersway.org/seekers_guide/saiva_siddhanta_gurudeva_suvaya_subramuniyaswami_1_o.html Saiva Siddhanta - An Introduction
- http://www.intamm.com/samayam/epigraphical.htm EPIGRAPHICAL ECHOES OF SAIVA SIDDHANTA
- http://www.britannica.com/eb/article-9064981
- http://www.bhagavadgitausa.com.cnchost.com/primer_in_saiva_siddhanta.htm ***
[தொகு] கேள்விகள்
- சைவ சித்தாந்தம் வேதத்தை அடிப்படையாக கொண்டதா?
- சித்தாந்தம் வேதாந்தம் வேதம் அடிப்படை ஒற்றுமை வேற்றுமைகள் எவை?--Natkeeran 12:19, 20 ஜூலை 2006 (UTC)