நல்லூர் சின்னத்தம்பிப் புலவர்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
நல்லூர் சின்னத்தம்பிப் புலவர் யாழ்ப்பாணம் நல்லூரைச் சேர்ந்தவர். ஏழு வயதிலேயே பாடல் இயற்றி கூழங்கைத் தம்பிரானிடம் ஆசி பெற்றவர். 18-19ம் நூற்றாண்டைச் சேர்ந்தவர். அவர் பதினைந்து வயதளவிற் சிதம்பரம் சென்று தலயாத்திரை செய்து மீளும்போது வேதாரணியத்தை அடைந்து அங்கே மறசையந்தாதி பாடி அரங்கேற்றினார். [1]
[தொகு] இயற்றிய பிரபந்தங்கள்
- கல்வளை அந்தாதி
- மறசை அந்தாதி
- கரவை வேலன் கோவை
- பறாளை விநாயகர் பள்ளு
[தொகு] குறிப்புகள்
- ↑ முத்துத்தம்பிப்பிள்ளை, ஆ., யாழ்ப்பாணச் சரித்திரம், 1912, யாழ்ப்பாணம்: நாவலர் அச்சகம் (நான்காம் பதிப்பு, 2000, சென்னை: Maazaru DTP)