கணையாழி (இதழ்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.

கணையாழி என்னும் இதழ் 1965ல் தொடங்கப்பட்டு இந்தியத் தலைநகர் புது தில்லியில் இருந்து வெளிவந்த ஒரே தமிழ் இலக்கிய இதழ் என்னும் பெருமை கொண்டது. அதைத் தொடங்கிய கஸ்தூரிரங்கன் அதன் ஆசிரியராகவும் திகழ்ந்தார். தொடக்க நாட்களில் இது புது தில்லி வட்டார அறிவிஜீவிகளுக்காக நடத்தபட்டதாக ஒரு கணிப்பு நிலவியது. பின்னர் சற்று விரிவடைந்து இலக்கிய தன்னுணர்வுகளைத் தூண்டியதாக சொல்லப்படுகின்றது. தி. ஜானகிராமன், என்.எஸ். ஜெகந்நாதன், பாலகுமாரன், அசோகமித்திரன், இந்திரா பார்த்தசாரதி, சுஜாதா, க.நா. சுப்ரமண்யம் ஆகியோருடைய படைப்புகள் வெளிவந்தன. கணையாழி, இப்பொழுதும் தொடர்ந்து வெளிவரும் ஒரு மாதாந்த இலக்கிய சஞ்சிகை. இப்பொழுது, தசரா அறக்கட்டளையினரால் கணையாழி வெளியிடப்படுகிறது. கவிதைகள், சிறுகதைகள், கட்டுரைகள், மொழிபெயர்ப்புகள், விமர்சனங்கள், அறிமுகங்கள் என்பன கணையாழியில் வெளிவருகின்றன. தி. ஜானகிராமன், அசோகமித்திரன் அக்கியோர் கணையாழியில் ஆசிரியராகப் பணிபுரிந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.