ஆணல்ட் சதாசிவம்பிள்ளை
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
ஆணல்ட் சதாசிவம்பிள்ளை (1820-1896) என்று பரவலாக அறியப்படும் ஜே. ஆர். ஆணல்டின் (J.R. Arnold) தமிழ்ப் பெயர் சதாசிவம்பிள்ளை என்பதாகும். இவரது தந்தையார் தெல்லிப்பளையைச் சேர்ந்த அருணாசலம். 11.10.1820 அன்று நவாலி, மானிப்பாயில் பிறந்த சதாசிவம்பிள்ளை 1835 இல் கிறிஸ்தவரானார்.
மானிப்பாய் அமெரிக்கன் மிஷன் பாடசாலையில் தனது ஆரம்பக்கல்வியைப் பெற்ற சதாசிவம்பிள்ளை, 1832 இல் பட்டிகோட்டா செமினறியில் (Batticotta Seminary) இணைந்து 1840இல் பட்டதாரியாகி மானிப்பாய் ஆங்கிலப் பாடசாலையில் ஆசிரியராகச் சேர்ந்தார். 1844 இல் சாவகச்சேரி அமெரிக்க மிஷன் ஆங்கிலப் பாடசாலையில் ஆசிரியராகப் பணிபுரிந்தார். அதன் பின்னர் உடுவில் மகளிர் கல்லூரிக்கு 1847இல் மாற்றம் பெற்றார். சதாசிவம்பிள்ளை ஜூலை 9, 1846இல் முத்துப்பிள்ளை (Margaret E. Nitchie) என்பாரைத் திருமணம் புரிந்தார்.
ஈழத்தின் முதல் பத்திரிகையான உதயதாரகை, மற்றும் Morning Star ஆகியவற்றின் ஆசிரியராகப் பணிபுரிநதது மட்டுமல்லாமல் யாழ்ப்பாணத்தில் பத்திரிகைத்துறையின் வளர்ச்சிக்குப் பெருதூணாக இருந்தார். இவர் எழுதிய நூல்களுள் மிக முக்கியமானது பாவலர் சரித்திர தீபகம் ஆகும். இது தவிர கிறிஸ்தவ தமிழ் இலக்கியங்களையும் இயற்றி வெளியிட்டார்.
[தொகு] எழுதிய நூல்கள்
- பாவலர் சரித்திர தீபகம்
- இல்லற நொண்டி (1887, நொண்டி ஒருவன் உத்தம ஆடவர், நற்குணப் பெண்டிர், துர்க்குணப் பெண்டிர் ஆகியோரின் இயல்புகளைக் கூறுவதாக அமைந்துள்ளது)
- மெய்வேட்டசரம்
- திருக்கடகம்
- நன்நெறிமாலை
- நன்நெறிக்கொத்து
- Carpotacharam
- வெல்லை அந்தாதி (சிறுவர் நூல், 16 பக்கங்கள், 1890)