திருக்கோணமலை
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
திருகோணமலை | |||
![]() திருகோணமலை நகரின் ஒரு தோற்றம் |
|||
|
|||
உத்தியோகபூர்வ வலைத்தளம்: [1] | |||
அமைவிடம் | |||
[[படிமம்:{{{படிமம்_வரைபடம்}}}|180px|திருகோணமலை நகர சபை]] திருகோணமலை அமைவிடம் |
|||
மாகாணம் | கீழ் மாகாணம், இலங்கை | ||
மாவட்டம் | திருகோணமலை | ||
உள்ளூர் நிர்வாகம் | |||
உள்ளூராட்சி வகை | திருகோணமலை நகரசபை | ||
நகரபிதா | கௌரி முகுந்தன் | ||
---|---|---|---|
உப நகரபிதா | |||
மொத்த வாக்காளர் | 36,144 | ||
மொத்த வட்டாரங்கள் | |||
புவியியல் பண்புகள் | |||
அமைவிடம் | |||
சனத்தொகை - மொத்தம் (2001) - அடர்த்தி |
ஆவது நிலை 88,454 ச.கி.மீ. 11056.75 |
||
சராசரி வெப்பநிலை | 28 பாகை செல்சியஸ் | ||
சராசரி மழைவீழ்ச்சி | 1630 மில்லி மீற்றர்கள் | ||
கடல் மட்டத்திலிருந்து உயரம் | 3 மீற்றர்கள் | ||
பரப்பளவு | 2.9 கி.மீ. | ||
நேர வலயம் | ஒ.ச.நே. +5.30 | ||
இதர விபரங்கள் | |||
குறியீடுகள் • அஞ்சல் • தொலைபேசி |
31000 +026 |
||
திருகோணமலை/திருக்கோணமலை (தமிழ் இலக்கணப்படிஒருக் மிகவேண்டும். மிக அண்மைக்காலம் வரையிலும் திருக்கோணமலை என்றே வழங்கிவந்தது. பிறமொழியாக்கங்கள் இதற்கு சான்று. ) அல்லது திரிகோணமலை இலங்கையின் கிழக்குப் பகுதியிலுள்ள முக்கிய நகரங்களில் ஒன்றாகும். இதே பெயரே இந்த நகரம் அமைந்துள்ள மாவட்டத்துக்கும் வழங்கிவருகின்றது.
பொருளடக்கம் |
[தொகு] அமைவிடம்
இலங்கையின் கீழ் கரையில் அதாவது கிழக்கு மாகாணத்தில் அமைந்துள்ளது. இதன் எல்லைகளாக அனுராதபுரம், மட்டக்களப்பு, முல்லைத்தீவு என்ற மாவட்டங்கள் அமைந்துள்ளன.
[தொகு] சனத்தொகை
சுமார் 70,000 மக்களைக்கொண்டுள்ளது இந்த நகரம்.தமிழர், சிங்களவர், முஸ்லீம்கள் ஆகிய மூன்று இன மக்களும் இந்த நகரதில் வாழ்கின்றபோதிலும் நகரத்தில் தமிழர்களே பெரும்பான்மையாக வாழ்கின்றனர். தமிழ் மக்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட திருகோணமலையில், சுதந்திரத்துக்குப்பின் தொடர்ந்துவரும் அரசாங்கங்கள், சிங்களவர்களைக் குடியேற்றி தமிழர்களின் அரசியல் செல்வாக்கைக் குறைத்துவருவதாகத் தமிழர் கட்சிகள் குற்றம் சாட்டுகின்றன.
[தொகு] வரலாறு
இங்குள்ள இயற்கைத் துறைமுகம் காரணமாக இந்த நகரம் இலங்கைக்கு வெளியிலும் அறியப்பட்ட ஒன்றாகும். இங்கு அமைந்துள்ள தொன்மையான சிவன் கோயிலான திருக்கோணேஸ்வரம் கோயிலும் இலங்கையிலும் வெளிநாடுகளிலுமுள்ள இந்து மக்கள் மத்தியில் பரவலாக அறியப்பட்டதாகும். இது ஏழாம் நூற்றாண்டில் திருஞானசம்பந்தமூர்த்தி நாயனாரின் பாடல் பெற்ற தலமாகும். இது மட்டுமன்றி இலங்கையின் இன அரசியலிலும் திருகோணமலை மிக முக்கியத்துவம் வாய்ந்ததாகும். 1987ல் இலங்கை - இந்திய ஒப்பந்தத்தின் அடிப்படையில் தற்காலிகமாக இணைத்து நிர்வகிக்கப்படுகின்ற வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் தலைநகரமாகத் திருகோணமலையே விளங்குகிறது.
இது பண்டய காலம் முதலே பிரபலமான துறைமுகமாக இருந்துள்ளது. ஒல்லாந்தர், ஆங்கிலேயர்,போர்த்துக்கேயர், பிரஞ்சு போன்றோரின் ஆட்சிக்குட்பட்டு இருந்தது. பிரட்ரிக் கோட்டை மேற்கத்தைய ஆதிக்கத்தின் எச்சமாக இன்றும் நகரில் காணக்கூடியதாக உள்ளது. இந்த கோட்டையினுள்ளேயே புகழ் பூத்த திருக்கோணேச்சர ஆலயம் அமைந்துள்ளது.
[தொகு] பிரித்தானியர் ஆட்சி
1957 வரை திருகோணமலை பிரித்தானியக் கடற்படையின் முக்கிய தளமாகவும், அதில் பணி புரிந்த இங்கிலாந்து பிரசைகளின் வசிப்பிடமாகவும் இருந்தது. திருமலை கோட்டை பிரித்தானியர்களாலும் பாவிக்கப்பட்டது. இது தற்போது இலங்கை இராணுவத்தால் பாவிக்கப்பட்டு வருகின்றது. 1950 களில் பிரித்தானியரால் கோட்டையினுள் கட்டப்பட்ட பல பங்களாக்கள் இன்றும் நிலைத்து இருப்பதுடன் இவை இலங்கை இராணுவத்தால் பயன்படுத்த படுகின்றமையும் குறிப்பிடத்தக்கது. சிங்கப்பூரை ஜப்பானியர்கள் கைப்பற்றிய பின்பு திருகோணமலையே பிருத்தானியரின் பிரதான கடற்படைத்தளமாக செயற்பட்டமை குறிப்பிடத்தக்கது.
[தொகு] கிழக்குப் பல்கலைக்கழகம்
திருகோணமலையில் தனியான பல்கலைக்கழகம் இல்லாத போதும் கிழக்குப் பல்கலைக்கழகத்தின் வளாகம் ஒன்று திருமலையில் உள்ளது. இது திருகோணமலை வளாகம் என அழைக்கப்படுகின்றது. திருகோணமலை வளாகம் தற்போது திருகோணமலை நகர எல்லையினுள் இருப்பினும் இதை நிலாவெளி எனும் புறநகர் பகுதிக்கு இடமாற்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
[தொகு] தொலைத் தொடர்பு
[தொகு] தொலைபேசி
குறியீடு: 026 (வேறு மாவட்டங்களில் இருந்தும் தொலைபேசியூடாகத் தொடர்பு கொள்ள).
- ஆரம்பிக்கும் இலக்கங்கள்
- 026-2 திருகோணமலை இலங்கைத் தொலைத் தொடர்பு நிலையம்
- 026-4 திருகோணமலை சண்ரெல்
- 026-5 திருகோணமலை லங்காபெல்
- 060-226 திருகோணமலை இலங்கைத் தொலைத் தொடர்பு நிலையம் CDMA இணைப்பு
[தொகு] கம்பி இணைப்புக்கள்
இலங்கைத் தொலைத்தொடர்பு நிறுவனம் கம்பியிணைப்புக்களை வழங்கி வருகினறது.
[தொகு] கம்பியற்ற இணைப்பு (நகர்பேசி)
திருகோணமலை நகரப்பகுதியில் இலங்கைத் தொலைத் தொடர்பு நிலையத்தின் இணைப்புக்கள் தவிர்ந்த ஏனைய நகர்பேசியிணைப்புக்கள் (சண்ரெல் உட்பட) ஆகஸ்டு 27, 2006 முதல் செயலிழக்கச் செய்யப்பட்ட நகர்பேசி மீண்டும் செப்டம்பர் 2 முதல் வழமைக்குத் திரும்பியுள்ளது.
- CDMA இணைப்புக்கள்
- சண்ரெல்
- இலங்கைத் தொலைத் தொடர்புநிறுவனம்
- லங்காபெல் (கந்தளாய் மாத்திரம்)
- TDMA (GSM) இணைப்புக்கள்
- மோபிற்றல், இலங்கைத் தொலைத் தொடர்புநிறுவனம்
- மோபிற்றல் கோபுரங்கள் திருகோணமலை நகரம், கந்தளாய், புல்மோட்டை ஆகிய பகுதிகளில் அமைந்துள்ளது. புல்மோட்டையில் அமைந்துள்ள கோபுரமானத்தினூடாக முல்லைத்தீவு மாவட்டத்தில் அலம்பில் கடற்கரையோரமாக நகர்பேசியூடாகத் தொடர்புகொள்ளக் கூடியதாகவுள்ளதாகத் தெரிகின்றது.
- டயலொக்
- செல்ரெல்
- ஹச்
- மோபிற்றல், இலங்கைத் தொலைத் தொடர்புநிறுவனம்
[தொகு] போக்குவரத்து
[தொகு] புகையிரதம்
திருகோணமலையில் இருந்து கொழும்பிற்கு காலை 7 மணிக்கும் மாலை 7 மணிக்கும் புகையிரதங்கள் புறப்படுகின்றன. மட்டக்களப்பு, வவுனியா பகுதிகளிற்குச் செல்பவர்கள் மாஹோ சந்தியில் பிரிந்து கொள்ளலாம் அதாவது அங்கு புகையிரதத்தை மாற்றிக்கொள்ள வேண்டும். கொழும்பிலிருந்து இரவுப் புகையிரதம் இரவு 10:30 இற்குப் புறப்படும் ஒரே இயந்திரத்திலேயே மட்டக்களப்பு பெட்டிகளும் கொழும்பிலிருந்து புறப்படுவதால் திருகோணமலைப் பெட்டியில் ஏறியதை உறுதிப்படுத்திக் கொள்வது நன்று.
[தொகு] பஸ்
திருகோமலையில் இருந்து நேரடியாக கொழும்பிற்கு பஸ் எடுப்பது சிரமமாகவுள்ளதால் திருகோணமலையில் இருந்து குருநாகலிற்கு பஸ் எடுத்து அங்கிருந்து கொழும்பிற்குப் பிரயாணிக்கலாம். திருகோணமலையில் இருந்து கொழும்பு செல்லும் பஸ் இலக்கம் 49 ஆகும்.
[தொகு] இவற்றையும் பார்க்கவும்
- திருக்கோணேச்சரம்
- திருகோணமலை கோட்டை
- நிலாவெளி கடற்கரை
- கோணேஸ்வரா இந்துக்கல்லூரி
[தொகு] வெளி இணைப்புகள்
இலங்கையின் மாகாண தலைநகரங்கள் | ![]() |
---|---|
கொழும்பு | கண்டி | காலி | யாழ்ப்பாணம் | திருகோணமலை | குருநாகல் | அனுராதபுரம் | பதுளை | இரத்தினபுரி |
இலங்கையின் மாவட்டத் தலைநகரங்கள் | ![]() |
---|---|
கொழும்பு | கம்பஹா | களுத்துறை | கண்டி | மாத்தளை | நுவரெலியா | காலி | மாத்தறை | அம்பாந்தோட்டை | யாழ்ப்பாணம் | வவுனியா | மன்னார் | முல்லைத்தீவு | கிளிநொச்சி | மட்டக்களப்பு | திருகோணமலை | அம்பாறை | குருநாகல் | புத்தளம் | அனுராதபுரம் | பொலன்னறுவை | பதுளை | மொனராகலை | இரத்தினபுரி | கேகாலை |