இலங்கை அரசியல் கொலைகளின் பட்டியல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.

இலங்கை அரசியலில் ஈடுப்பட்டிருந்த பல முக்கிய நபர்கள் கொலை செய்யப்பட்டுள்ளனர். இலங்கையில் உள்நாட்டு யுத்தம் ஆரம்பிக்கு முன்பே அரசியல் கொலைகள் ஆரம்பித்து விட்டன. 1959 ஆம் ஆண்டு செப்டம்பர் 26 இல் இலங்கைப் பிரதமர் எஸ். டபிள்யூ. ஆர். டி. பண்டாரநாயக்கா பௌத்த பிக்கு ஒருவரால் கொலை செய்யப்பட்டார்.

இப்பட்டியல் இலங்கையில் கொலைச் செய்யப்பட்ட அரசியல் பிரதிநிதிகளை மட்டுமே கொண்டுள்ளது. இது எவ்வகையிலும் முழுமையான பட்டியல் இல்லை.

பொருளடக்கம்

[தொகு] 1950 முதல் 1970 வரை

  • எஸ். டபிள்யூ. ஆர். டி. பண்டாரநாயக்கா, 1959 செப்டம்பர் 26, கொழும்பு: இலங்கைப் பிரதமர் எஸ். டபிள்யூ. ஆர். டி. பண்டாரநாயக்கா பௌத்தபிக்குவான சோமாராம தேரரால் துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்யப்பட்டார்.

[தொகு] 1971 முதல் 1990 வரை

[தொகு] 1991 முதல் 2000 வரை

  • ரஞ்சன் விஜேரத்னே, 1991 மார்ச் 2, கொழும்பு: இலங்கையின் பாதுகாப்பு அமைச்சர் ரஞ்சன் விஜேரத்னே தொலைவில் இருந்து இயக்கிய கார் குண்டு ஒன்றின் மூலம் கொலை செய்யப்பட்டார். கொலைக்கு யாரும் உரிமை கோராத போதும் தமிழீழ விடுதலைப் புலிகள்மீது சந்தேகம் நிலவுகிறது.[2]


  • லலித் அத்துலத் முதலி, 1993 ஏப்ரல் 23, கொழும்பு: இலங்கை பாராளுமன்றின் எதிர்கட்சித் தலைவர் லலித் அத்துலத் முதலி கொழும்பில் தேர்தல் பிரச்சார கூட்டத்தின் போது துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்யப்பட்டார்.


  • ரணசிங்க பிரேமதாச, 1993 மே 1, கொழும்பு: இலங்கை சனாதிபதி ரணசிங்க பிரேமதாச கொழும்பில் மே தின ஊர்வலத்தின் போது தமிழீழ விடுதலைப் புலிகளின் தற்கொலை குண்டுதாரியால் கொலை செய்யப்பட்டார்.[3]


  • காமினி திசாநாயக்கா, 1994 அக்டோபர் 23, கொழும்பு: ஐக்கிய தேசியக் கட்சியின் சனாதிபதி வேட்பாளர் காமினி திசாநாயக்காவும் மேலும் 51 பேரும் கொழும்பில் தேர்தல் கூட்டத்தில் நடந்த குண்டு வெடிப்பில் பலியானர்கள்.


  • ஜி.எம்.பிரேமச்சந்திர, 1994 அக்டோபர் 23, கொழும்பு: பாராளுமன்ற உறுப்பினர், ஐக்கிய தேசியக் கட்சியின் சனாதிபதி தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் நடந்த குண்டு வெடிப்பில் இவரும் மேலும் 51 பேரும் பலியானர்கள்.


  • வீரசிங்க மல்லிமாரச்சி, 1994 அக்டோபர் 23, கொழும்பு: பாராளுமன்ற உறுப்பினர் ஐக்கிய தேசியக் கட்சியின் சனாதிபதி தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் நடந்த குண்டு வெடிப்பில் இவரும் மேலும் 51 பேரும் பலியானர்கள்.


  • காமினி விஜெசேகர, 1994 அக்டோபர் 23, கொழும்பு: பாராளுமன்ற உறுப்பினர் ஐக்கிய தேசியக் கட்சியின் சனாதிபதி தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் நடந்த குண்டு வெடிப்பில் இவரும் மேலும் 51 பேரும் பலியானர்கள்.


  • ஒசி அபேகுணசேகர, 1994 அக்டோபர் 23, கொழும்பு: பாராளுமன்ற உறுப்பினர் ஐக்கிய தேசியக் கட்சியின் சனாதிபதி தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் நடந்த குண்டு வெடிப்பில் இவரும் மேலும் 51 பேரும் பலியானர்கள்.




  • சரோஜினி யோகேஸ்வரன், 1998 மே 17, யாழ்ப்பாணம்: தமிழர் விடுதலைக் கூட்டணியின் யாழ்ப்பாண நகர முதல்வர் சரோஜினி யோகேஸ்வரன் தனது வீட்டில் இணந்தெரியாத ஆயுததாரிகளால் சுட்டுக் கொலை செய்யப்பட்டார்ர். இரகசிய படையான சங்கிலியன் படை இதற்கு உரிமை கோரியது.


  • எஸ் சண்முகநாதன், ஜூலை 15 1998:பாராளுமன்ற உறுப்பினர்





  • ஆருண டி. சில்வா, 2000 ஜூன் 7 கொழும்பு: தெகிவளை பிரதி நகர முதல்வர் அருண டி. சில்வா தற்கொலை குண்டுக்கு இலக்காகி பலியானார்.


  • சி. வி. குணரத்னே, 2000 ஜூன் 7 கொழும்பு: கைத்தொழில் அபிவிருத்தி அமைச்சர் சி. வி. குணரத்னே தற்கொலை குண்டுக்கு இலக்காகி பலியானார்.



  • எம். எல். பைதுள்ளா, 2000 அக்டோபர் 2:மக்கள் கூட்டணியின் வேட்பாளர்


[தொகு] குறிப்புகள்

  1. [1]
  2. பி.பி.சி. இந்நாளில்
  3. ரொய்டர்ஸ் செய்தி
  4. பி.பி.சி. செய்தி குறிப்பு

[தொகு] ஆதாரம்

[தொகு] இவற்றையும் பார்க்க