பாரதிதாசன்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
பாரதிதாசன் (1891-1964) பாண்டிச்சேரியில் (புதுச்சேரியில்) பிறந்து பெரும் புகழ் படைத்த பாவலர். இவருடைய இயற்பெயர் கன சுப்புரத்தினம். தமிழாசிரியராக பணியாற்றிய இவர் சுப்பிரமணிய பாரதியார் மீது கொண்ட பற்றுதலால் பாரதிதாசன் என்று தம் பெயரை மாற்றிக்கொண்டார். பாரதிதாசன் தம் எழுச்சி மிக்க எழுத்தால் புரட்சிக் கவிஞர் என்றும் பாவேந்தர் என்றும் பரவலாக அழைக்கபடுபவர். இவர் குயில் என்னும் கவிதை வடிவில் ஒரு திங்களிதழ் நடத்தி வந்தார்.
பாரதிதாசன் எழுதிய வரிகள்:
புதியதோர் உலகம் செய்வோம் கெட்ட
போரிடும் உலகத்தை வேரோடு சாய்ப்போம்
தமிழுக்கு அமுதென்று பேர் - அந்த
தமிழின்பத் தமிழெங்கள் உயிருக்கு நேர்
போன்றவை புகழ் பெற்றவை.
[தொகு] பாரதிதாசனைன் ஆக்கங்கள்
- பாரதிதாசனின் கவிதைகள் (கவிதைத்தொகுப்பு)
- பாண்டியன் பரிசு (காப்பியம்)
- எதிர்பாராத முத்தம் (காப்பியம்)
- குறிஞ்சித்திட்டு (காப்பியம்)
- குடும்ப விளக்கு (கவிதை நூல்)
- இருண்ட வீடு (கவிதை நூல்)
- அழகின் சிரிப்பு (கவிதை நூல்)
- தமிழ் இயக்கம் (கவிதை நூல்)
- இசையமுது (கவிதை நூல்).