மிதிவெடி அபாயக் கல்வி
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
மிதிவெடி அபாயக் கல்வி என்பது மிதிவெடி அபாயத்திலிருந்து மக்களைக் காக்கும் வண்ணம் செய்யும் நடவடிக்கையாகும். இவ்வகை நடவடிக்கைகளை இலங்கையில் ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதியம் நடத்தி வருகின்றது. இதில் முக்கியமான சில விடயஙகள் ஆராயப் படுகின்றன. மிதிவெடிகள் யாரை இலக்குவைக்கப் படுகின்றது எந்த வயதுக் குழுவினருக்கு எவ்வாறான கல்வியினை வழங்குதல் வேண்டும். இதில் ஐக்கிய நாடுகள் அபிவிருத்தித் திட்டத்தின் மிதிவெடி நடவடிக்கைப் பிரிவான் மிதிவெடிகள் தொடர்பான தகவற் தளத்தின் அதாவது IMSMA (Information Management System for Mine Action). தரவுகளில் இருந்து பெறப்பட்ட தகவல்களின் படி மிதிவெடி அபாயத்திற்கு பெரும்பாலும் உழைக்கின்ற ஆண்களே விறகு பொறுக்குதல், தோட்டம் கொத்துதல், மாடு மேய்த்தல் போன்ற நடவடிக்கைகளின் போது காயமடைந்துள்ளனர். இதுவரை வெடிக்காத வெடிபொருட்கள் வெடித்ததில் பெரும்பாலும் பதின்ம வயதில் உள்ள பாடசாலை ஆண் சிறார்களே பாதிக்கப் பட்டுள்ளனர்.
இக்கல்வி நடைமுறைகளில் பெரும்பாலும் மிதிவெடி அடையாளங்களை இனம் கண்டு அப்பகுதியினைத் தவிர்த்தல் போன்றவை வலய மிதிவெடி அலுவலகங்களுடன் கூட்டிணைந்து நடத்தப் படும்.