சந்திரிகா பண்டாரநாயக குமாரதுங்க

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.

சந்திரிக்கா குமாரதுங்க
சந்திரிகா பண்டாரநாயக குமாரதுங்க

இலங்கையின் 5வது சனாதிபதி
பதவிக் காலம்
நவம்பர் 12, 1994 – நவம்பர் 19, 2005
முன்னிருந்தவர் டிங்கிரி பண்டா விஜயதுங்கா
பின்வந்தவர் மஹிந்த ராஜபக்ஷ

பிறப்பு ஜூன் 29, 1945
இலங்கை
கட்சி இலங்கை சுதந்திரக் கட்சி
வாழ்கைத் துணை காலஞ்சென்ற விஜய குமாரதுங்க


சந்திரிகா பண்டாரநாயக குமாரதுங்க (பிறப்பு ஜூன் 29, 1945) இலங்கையின் ஐந்தாவது சானாதிபதியும் நான்காவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட சனாதிபதியுமாவார். இவர் இலங்கை சுதந்திரக் கட்சியின் முன்னாள் தலைவருமாவார்.

இவரது தந்தையான எஸ். டபிள்யூ. ஆர். டி. பண்டாரநாயக்கா சந்திரிக்காவின் பிறப்பின் போது அமைச்சராக இருந்து பின்னர் இலங்கையின் பிரதமராக உயர்ந்தார். சந்திரிக்காவுக்கு 14 வயதாகும் போது அவரது தந்தை கொலை செய்யப்பட்டார்.அதன் பின்னர், சந்திரிக்காவின் தாயான சிறிமாவோ பண்டாரநாயக்கா 1960 இல் உலகின் முதல் பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

சந்திரிக்கா பரிஸ் பல்கலைக்கழகத்தில் அரசியல் விஞ்ஞானம் தொடர்பா பட்டபடிப்பை முடித்தவராவார். இவர் சிங்களம்,ஆங்கிலம் மற்றும் பிரெஞ்சு மொழிகளில் பரிச்சயம் உள்ளவராவார்.

இலன்ங்கை திரும்பிய சன்ந்திரிக்கா, இ.சு.க.வில் இணைந்து தமது அரசியல் வாழ்க்கையை தொடங்கினார். 1972-1976 காலப்பகுதியின் நில மறுசீரமைப்பின் போது, இலங்கை நில மறுசீரமைப்பு ஆணைக்குழுவுக்கு மேலதிக பிரதான இயக்குனராக பணியாற்றினார்.1974 இ.சு.க. பெண்கள் அணியின் நிறைவேற்றுக் குழு உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டார். 1976 - 1977 காலப்பகுதியில், கொத்தனி பன்னைகளை அமைத்த ஜனவச ஆணைக்குழுவின் தலைவராக பணியாற்றினார்.1976- 1979 காலப்பகுதியில், உணவு மற்றும் விவசாய அமைப்பிற்கு விசேட அலோசகராக பணியாற்றினார்.

1978 இல் சந்திரிக்கா இலங்கையின் பிரபல நடிகரும் அரசியல்வாதியுமான விஜய குமாரணதுங்கவை மணந்தார். அவர் 1988இல் கொலை செய்யப்பட்டார். அதன் பிறகு சந்திரிக்கா தனது பெயரில் இருந்த 'ண' வை அகற்றிவிட்டு குமாரதுங்க என்றே பாவித்து வருகின்றார். இது விஜயவின் அரசியலில் இருந்து தான் விடுபடுவதற்கு எடுத்த ஒரு முயற்சியாகும்.


1994 ஆகஸ்ட் 19இல் சந்திரிக்கா மக்கள் முன்னணி தலைமையிலான அரசில் பிரதமராக தெரிவு செய்யப்பட்டார். அவ்வாண்டு நவம்பர் மாதம் நடைபெற்ற சனாதிபதி தேர்தலில் வெற்றிப் பெற்று சனாதிபதியாக பதவியேற்றார். இவரது ஆட்சியின் ஆரம்ப பகுதியில் தமிழீழ விடுதலைப் புலிகளுடன் பேச்சுவார்த்தையில் ஈடுப்பட்டார். இது தோல்வியடையவே, பிற்பகுதியில் போ மூலம் புலிகளை அடக்க முட்பட்டார்.


1999 ஒக்டோபர் மாததில் சனாதிபதி தேர்தலுக்குரிய நாளுக்கு முன்னாதாகவே சந்திரிகா தேர்ர்தலை நடத்த திட்டமிட்டார்.[1].டிசம்பர் 18 1999 இல் கொழும்பு நகரசபை முன்னரங்கில் நடைப் பெற்ற தேர்தல் பிரச்சார கூட்டத்தின் போது, அவரை கொலை செய்யும் நோக்கில் தமிழீழ விடுதலைப் புலிகளின் தற்கொலை குண்டுதாரி என சந்தேகிக்கப்படும் ஒருவர் வெடிக்கச் செய்த குண்டினால் தனது வலது கண்ணை இழந்தார்.[2]. அங்கரிக்கப்படாத சுயசரித நூலான "கள்வரின் தலைவி" என்ற நூலில் விக்டர் ஐவன் இந்நிகழ்ச்சி, மக்களிட அனுதாப அலைகளை ஏற்படுத்த அவரால் அவரது "குண்டர் படை"யைக் கொண்டு செய்வித்ததாக கூறுகின்றார்.[3]. அத்தேர்தலில் சந்திரிக்க ரணில் விக்கிரமசிங்கவை வெற்றிப் பெற்று இரண்டாபது முறையும் சனாதிபதியாக பதவியேற்றார்.[4]


[தொகு] ஆதாரங்கள்

  1. பி.பி.சி. செய்திகள்
  2. பி.பி.சி. செய்திகள் கொலை முயற்சி
  3. விக்டர் ஐவன்
  4. இரண்டாவது முறை சனாதிபதியாகுதல்

[தொகு] சார்புடைய கட்டுரைகள்

[தொகு] வெளியிணைப்புகள்


இலங்கையின் சனாதிபதிகள் இலங்கை தேசியக்கொடி
வில்லியம் கொபல்லாவஜூனியஸ் ரிச்சட் ஜயவர்தனாரணசிங்க பிரேமதாசாடிங்கிரி பண்டா விஜயதுங்காசந்திரிகா குமாரதுங்கமஹிந்த ராஜபக்ஷ