இலட்சுமணப் பிள்ளை
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
இலட்சுமணப் பிள்ளை (1865 - 1950) தமிழ்த் தியாகராசர் எனப்பட்டவர். திருவனந்தபுரத்தில் பிறந்தார். ஆங்கிலம், தமிழ், மலையாளம் ஆகிய மொழிகளில் புலமை உடையவர். இவர் இயற்றிய பாடல்களை பக்திப்பாடல்கள், அறநெறிப் பாடல்கள், தத்துவப் பாடல்கள், புகழுரைப் பாடல்கள் எனப் பிரிக்கலாம். சுமார் 80 இராகங்களை இவரது பாடல்களில் காணலாம்.