இலங்கை தேசிய கொடி உருவாக்கம்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
ஆங்கிலேயர் இலங்கையை விட்டு செல்லும்போது இலங்கைக்கு என கொடி உருவாக்கும் தேவை ஏற்பட்டது.அதுவரை பிரிடிஷ் யுனியன் ஜக் கொடியே இலங்கை கொடியாக இருந்து வந்தது. அப்பொழுது பிரதமராக இருந்த டி. எஸ். சேனாநாயக்க ஆங்கிலேயர் கைப்பற்றும் வரை கண்டியை ஆண்ட சுதந்திர இலங்கையின் கடைசி அரசன் ஸ்ரீ விக்கிரம ராஜசிங்கன் கொடியான சிவப்பு பிண்ணணியில் மஞ்சள்நிற வாளேந்திய சிங்கக்கொடியானது சுதந்திர இலங்கையை குறிக்கும் சிறந்த கொடியாக அமையும் என தேர்வு செய்தார். எனினும் அக் கொடியில் தங்கள் இனத்துவங்களை பிரதிபலிக்கும் அடையாளங்கள் ஏற்படுத்த வேண்டும் என தமிழ், முஸ்லிம் தலைவர்கள் கேட்டுக்கொண்டனர்.
சிறிது நாட்களின் பின் தேசிய கொடியில் மாற்றம் ஏற்படுத்துவது தொடர்பாக எஸ். டபிள்யூ. ஆர். டி. பண்டாரநாயக்க, ஜீ. ஜீ. பொன்னம்பலம், J.L.கொத்தலாவல, T.P.ஜாயா, L.A ராஜபக்ச, S. நடேசன், ஜே. ஆர். ஜயவர்தன என்போர் அடங்கிய நாடளமன்றக்குழு ஏற்படுத்தப்பட்டது. இக்குழுவின் பரிந்துரைக்கமைய தேசிய கொடியில் சமமான மஞ்சள்,பச்சை நிறங்கள் கொண்ட two vertical stripes உருவாக்கப்பட்டது. இதில் பச்சை முஸ்லிம் இனத்தையும்,மஞ்சள் தமிழரையும் குறிக்கும் ,அத்துடன் பௌத்த தர்மத்தை குறிக்கும் வகையில் அரசிலை கொடியின் நான்கு முலைகளிலும் பொறிக்கப்பட்டன. இதுவே தற்போழுது காண்ப்படும் தேசிய கொடியின் தோற்ற அமைப்பு உருவாகிய விதமாகும்.