புதிய ஏற்பாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.

புதிய ஏற்பாடு அல்லது கிரேக்க விவிலியம் கிறிஸ்தவர்களின் புனித நுலான விவிலியத்தின் இரண்டு பெரும்பாகங்களில் கடையானது ஆகும். இது "புதிய உடன்படிக்கை" எனவும் அழைக்கப்படுகிறது. இது பலதரப்பட்ட எழுத்தாளர்களால் கி.பி. 45 க்கு பின்னும் கி.பி. 140 க்கு முன்னும் எழுதப்பட்டு சிறுக சிறுக சில நூற்றாண்டுகளாக ஒன்று சேர்க்கப்பட்டது. இது கிறிஸ்தவத்தின் அடிப்படையாகும். புதிய ஏற்பாடு இயேசுவின் பிறப்புடன் ஆரம்பிக்கிறது.

பொருளடக்கம்

[தொகு] புதிய ஏற்பாட்டு நூலகள்

புதி ஏற்பாட்டில் 27 தனிப்பட்ட சிறிய நூல்கள் காணப்படுகின்றன. இச் சிறு நூல்கள் அனைத்திலும் இயேசு மையகர்தாவாக இருக்கிறார். கிறிஸ்தவத்தின் எல்லா உற்பிரிவினரும் இவற்றை மாற்றமின்றி ஏற்றுக்கொள்கின்றனர். புதிய ஏற்பாட்டில் இயெசுவின் சரிதம் கூறும் நான்கு நற்செய்தி நூல்களும் அப்போஸ்தலரின் பணிகள கூறும் ஒரு நூலும்,21 போதனா நிருபங்களும் ஒரு தீர்கதரிசன நூலும் காணப்படுகிறது.

[தொகு] நற்செய்திகள்

புதிய ஏற்பாடு
மத்தேயு
மாற்கு
லுக்கா
யோவான்
பணிகள்
உரோமர்
1 கொரிந்தியர்
2 கொரிந்தியர்
கலாத்தியர்
பிலிப்பியர்
பிலேமோன்
1 தெசலோனிக்கியர்
2 தெசலோனிக்கியர்
எபேசியர்
கொலொசெயர்
1 திமோத்தேயு
2 திமோத்தேயு
தீத்து
எபிரெயர்
யாக்கோபு
பேதுரு
பேதுரு
யோவன்
யோவன்
யோவன்
யூதா
வெளிபபடுத்தல்கள்


ஒவ்வொரு நற்செய்தியும் இயேசுவின் இவ்வுலக வாழ்கையை கூறுகின்றன. இயேசுவின் போதனைகளுக்கு முக்கிய இடம் கொடுக்கப்பட்டுள்ளது. ஆய்வாளரிடையே இந்நூல்கள் யாரால் எப்போது எழுதப்பட்டது என்பது பற்றிய ஒருமைபாடு கிடையாது.

  • மத்தேயு நற்செய்தி அப்போஸ்தலரான மத்தேயு எழுதியது என்பது மரபு
  • மாற்கு நற்செய்தி அப்போஸ்தலரான பேதுருவின் சீடர் மாற்கு எழுதியது என்பது மரபு
  • லூக்கா நற்செய்தி சவுல் என்று அழைகப்பட்டு கிறிஸ்துவை ஏற்றப் பின்னர் பவுல் என பெயர்மாற்றன் செய்யப்பட்ட வேத ஊழியரின் சீடரான லூக்கா எழுதியது என்பது மரபு
  • யோவான் நற்செய்தி இயேசுவின் பிரியமான சீடர் என கருதப்படும் அப்போஸ்தலரான யோவான் எழுதியது என்பது மரபு

இவற்றில் முதல் மூன்று நூல்களும் ஒத்தவையாகும் நான்காவது நூல் பல வேரறுபாடுகளை கொண்டுள்ளது.

[தொகு] அப்போஸ்தலர் பணி

அப்போஸ்தலர் பணி இயேசுவின் மரணத்துக்கு பின்னரான ஆதி கிறிஸ்தவரின் வாழ்வை சித்தரிக்கிறது. அப்போஸ்தலரின் மறை போதனா பயணங்களை குறித்து விரிவாக எழுதப்பட்டுள்ளது. இந்நூல் லூக்கா நற்செய்தியை எழுதிய எழுதாராலேயே எழுதப்பட்டது என்பது ஏற்றுக்கொள்ளப்பட்ட கருத்தாகும். பவுல் கூறியவற்றை லூக்கா எழுதினார் என்பது மரபு.

[தொகு] புனித பவுல் எழுதிய நிருபங்கள்

  • உரோமருக்கு எழுதிய நிருபம்
  • கொரிந்தியருக்கு எழுதிய முதலாவது நிருபம்
  • கொரிந்தியருக்கு எழுதிய இரண்டாவது நிருபம்
  • கலாத்தியருக்கு எழுதிய நிருபம்
  • பிலிப்பியருக்கு எழுதிய நிருபம்
  • பிலேமோனுக்கு எழுதிய நிருபம்
  • தெசலோனிக்கியருக்கு எழுதிய முதலாவது நிருபம்
  • தெசலோனிக்கியருக்கு எழுதிய இரண்டாவது நிருபம்
  • எபேசியருக்கு எழுதிய நிருபம்
  • கொலோசெயருக்கு எழுதிய நிருபம்

[தொகு] போதனை நிருபங்கள்

  • தீமோத்தேயுவுக்கு எழுதிய முதலாவது நிருபம்
  • தீமோத்தேயுவுக்கு எழுதிய இரண்டாவது நிருபம்
  • தீத்துவுக்கு எழுதிய நிருபம்
  • எபிரெயருக்கு எழுதிய நிருபம்

[தொகு] பொதுவான நிருபங்கள்

  • யாக்கோபு எழுதிய நிருபம்
  • 1 பேதுரு எழுதிய முதலாவது நிருபம்
  • 2 பேதுரு எழுதிய இரண்டாவது நிருபம்
  • 1 யோவன் எழுதிய முதலாவது நிருபம்
  • 2 யோவன் எழுதிய இரண்டாவது நிருபம்
  • 3 யோவன் எழுதிய மூன்றாவது நிருபம்
  • யூதா எழுதிய நிருபம்

[தொகு] வெளிபபடுத்தல்கள்

வெளிப்படுத்தின விசேடங்கள்

[தொகு] உசாத்துணை