கவிகுஞ்சர பாரதியார்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
கவிகுஞ்சர பாரதியார் (1810 - 1896) பெருங்கரை என்னும் ஊரில் பிறந்தார். மதுரகவி பாரதியிடம் இசை பயின்றார். 1865 இல் முத்துராமலிங்க சேதுபதியின் சகோதரர் பொன்னுசாமித் தேவர் வேண்டுகோளுக்கு இணங்க கந்த புராணத்தை கீர்த்தனை வடிவில் பாடினார். பேரின்பக் கீர்த்தனைகள் என்னும் நூலும் எழுதியுள்ளார். சோலைமலை அழகர் மீது குறவஞ்சி எழுதினார். திருமுக விலாசம் என்னும் நூலையும் இயற்றியுள்ளார்.