அடோனிஸ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.

அலி அஹமது செயித் (Ali Ahmed Said) என்ற இயற்பெயருடைய அடோனிஸ் 1930 இல் சிரியாவில் பிறந்தார். 1950 இல் டமஸ்க்ஸ் பல்கலைக்கழகத்தில் சேர்ந்தார். 1956 இல் லெபனானுக்கு நாடுகடத்தப்பட்டார். 1957 இல் லெபனியக் கவிஞர் யூஸுஃவ் அல்-க்ஹால் (Yusuf al-Khal) என்பவருடன் இணைந்து ஒரு பதிப்பகத்தை நிறுவினார். 1968 இல் மௌஃவிகிஃவ் (Mawfiqif) என்னும் அரபுக் கவிதைச் சஞ்சிகையத் தொடங்கினார்.

மஹ்மூட் தர்வீஷ், அடோனிஸ், சமிஹ் அல் காசிம் (Samih al Qusim) ஆகிய மூவரது கவிதைகளையுங் கொண்ட தொகுதியின்று 'ஒரு தேசப்படத்திற்குப் பலியானோர்' (Victims of a Map) என்ற தலைப்பில் 1984 இல் வெளியானது. அடோனிஸின் கவிதைகளிற் சில சி. சிவசேகரத்தால் மொழிபெயர்க்கப்பட்டு பாலை என்ற தலைப்பில் தேசிய கலை இலக்கியப் பேரவை வெளியீடாக 1999 இல் வெளிவந்தது.