விமல் குழந்தைவேல்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
விமல் குழந்தைவேல் அம்பாறை மாவட்டத்தில் அக்கரைப்பற்றில் உள்ள கோளாவில் கிராமத்தில் பிறந்தவர். சிறுகதைகள் மற்றும் நாவல்களை எழுதுபவர்.
தொண்ணூறுகளில் எழுதத் தொடங்கிய இவரது படைப்புக்கள் வீரகேசரி, தினகரன், கனடா செந்தாமரை, பாரீஸ் ஈழநாடு, லண்டன் தேசம் மற்றும் உயிர்நிழல் போன்ற இதழ்களில் வெளிவந்துள்ளன.
[தொகு] இவரது நூல்கள்
- தெருவில் அலையும் தெய்வங்கள் (சிறுகதைகள்)
- அவளுக்குள் ஒருத்தி (சிறுகதைகள்)
- அசதி (சிறுகதைகள்)
- மண்ணும் மல்லிகையும் (நாவல்)