தலதா மாளிகை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.

தலதா மாளிகையின் வெளித் தோற்றம்
தலதா மாளிகையின் வெளித் தோற்றம்

தலதா மாளிகை என்பது இலங்கையின் கண்டி நகரில் உள்ள புகழ் பெற்ற பௌத்த ஆலயம் ஆகும். பௌத்த சமயத்தவர்களால் உயர்வாக மதிக்கப்படுகின்ற புத்தரின் புனிதப் பல் இங்கே வைக்கப்பட்டிருப்பதன் காரணமாக இது புனித தந்த தாது ஆலயம் எனவும் அழைக்கப்படுகின்றது. 1592 தொடக்கம் 1815 வரை இருந்த கண்டி இராச்சியத்தின் தலைநகரமாகக் கண்டி நகரம் விளங்கியது. அதனை ஆண்டு வந்த அரசர்களின் அரண்மனை வளாகத்தின் உள்ளேயே இவ்வாலயமும் அமைந்துள்ளது.

இலங்கையிலுள்ள முக்கியமான பௌத்த பீடங்களான மல்வத்தை பீடம், அஸ்கிரிய பீடம் ஆகியவற்றைச் சேந்த பீடாதிபதிகள் ஆண்டுக்கு ஒருவராகச் சுழற்சி முறையில் இதன் உள் மண்டபத்தில் நாளாந்த கிரியைகளை நடத்தி வருகிறார்கள். காலை, மதியம், மாலை என நாளொன்றுக்கு மூன்று தடவைகள் கிரியைகள் நடைபெறுகின்றன.

ஆலயத்தின் உட்புறம்
ஆலயத்தின் உட்புறம்


[தொகு] வெளியிணைப்புகள்

ஏனைய மொழிகள்