தொ. மு. ராமராய்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.

ராமராய் கி.பி. 1852-ம் ஆண்டில் பிறந்தார்.

பண்டிதர் ஸ்ரீமான் லக்ஷ்மணாச்சார்யரின் மாணவராகி சகல வேத உபநிஷத சாஸ்திரங்களிலும் பன்மொழி இலக்கண இலக்கியங்களிலும் விரிவான கல்வி கற்றார்.

தாய்மொழி ஸவ்ராஷ்ட்ரியைத் தவிரவும் ஸம்ஸ்க்ருதம், ஹிந்தி, குஜராத்தி, மராத்தி, பஞ்சாபி, பெங்காலி, ஒரியா, தெலுங்கு, கன்னடம், மலையாளம், தமிழ், ஆங்கிலம் முதலிய பதினெட்டிற்கும் மேற்பட்ட மொழிகளைக் கற்றுப் புலமை பெற்றார். 1880-ம் ஆண்டிலிருந்து முழு நேரத்தையும் செல்வத்தையும் ஸவ்ராஷ்ட்ர மொழி இலக்கிய வளர்ச்சிக்கே செலவிட்டார்.

ஸவ்ராஷ்ட்ர மொழிக்கென முழுமையான அளவில் விஞ்ஞான ரீதியாக வரிவடிவம் அமைத்து அச்சு எழுத்துக்களையும் தயாரித்தார்.

திரு. ராமராய் அவர்கள் தாமே இயற்றி வெளியிட்ட நூல்களுள் சில :

ஸவ்ராஷ்ட்ர போதினி, ஸவ்ராஷ்ட்ர நீதி ஸம்பு , ஸவ்ராஷ்ட்ர வியாகரணம் , ஸவ்ராஷ்ட்ர நந்தி நிகண்டு

இவை தவிர, தமிழ், தெலுங்கு, ஸம்ஸ்க்ருதம், ஸவ்ராஷ்ட்ரம், ஆகிய நான்கு மொழி சொற்தொகுப்பாக 'சதுர்பாஷா வல்லரி' எனும் நூலையும் இயற்றி வெளியிட்டுள்ளார்.

திரு. ராமராய் அவர்கள் இயற்றிய ஸவ்ராஷ்ட்ர நீதி ஸம்பு எனும் நீதி நூலிலுள்ள கருத்தாழத்தைக் கண்டு இன்புற்ற ஆங்கில பேராசிரியர். எச்.என். ராண்டேல் என்பவர் அந்நூலை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து லண்டனிலுள்ள இந்திய மொழி இலக்கியக் கருவூலத்தில் சேர்த்து வைத்துள்ளார்.

திருமுருக கிருபானந்த வாரியார் ஸ்வாமிகளும் தமது 'திருப்புகழமிர்தம்' என்னும் நூலில் ஸவ்ராஷ்ட்ர நீதி ஸம்புவைப் பிரசுரித்துத் தமிழ் மக்களிடையே பரப்பியுள்ளார்.