வற்றாப்பளை அம்மன் கோயில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.

[தொகு] வரலாற்றுப் பின்னணி

இலங்கையில் முல்லைத்தீவில் ஆரம்பகாலத்தில் விவசாயிகளால் ஆரம்பிக்கப்பட்ட பொங்கல் வழிபாடனது பின்னர் 1950 களில் வாரம் ஒருநாள் என்ற வழிபாடாகி பின்னர் வேதாகம வழிப்படி முறையான பூசைகளுடன் ஆரம்பிக்கப் பட்டது. 1958 களில் ஆலயபரிபாலன சபையின் கீழ் கொண்டுவரப்பட்டு திங்கள் வெள்ளி தோறும் விசேட அபிசேஷகம் என்ற முறையில் ஆலய வழிபாடுகள் நடைபெறத்தொடங்கின. இவ்வாலயமானது ஆங்கிலேயர் காலத்திலேயே பிரபலமாக விளங்கியது. இவ்வாலயத்திற்கு தமிழர்கள் மாத்திரமன்றி சிங்களவர்களும் வழிபட்டு வருகின்றனர். உள்நாட்டுப் பிரச்சினைகள் மூலம் ஆலயம் பலமுறை சேதாமாகிய போதிலும் 2002 ஆண்டு சமாதான ஒப்பந்தத்தின் பின்னர் மீண்டும் புனரமைக்கப்பட்டு வருகின்றது. இதன் இராஜ கோபுரமானது 2006 ஆம் ஆண்டு நிறைவடைய இருக்கின்றது.

[தொகு] விசேட வழிபாடுகள்

  • பங்குனித் திங்கள் (தமிழ் மாதமுறைப்படி) - 4
  • கார்த்திகைத் திங்கள் (தமிழ் மாதமுறைப்படி) - 4
  • நவராத்திரி
  • சிவராத்திரி
  • பங்குனி மாதக்கடைசியில் (தமிழ் மாதமுறைப்படி) நடைபெறும் மஞ்சம்


[தொகு] வெளியிணைப்புக்கள்

Wikimedia Commons logo
விக்கிமீடியா காமன்ஸ் -ல் இத்தலைப்பு தொடர்புடைய மேலும் பல ஊடகக் கோப்புகள் உள்ளன: