தியாகராஜ சுவாமிகள்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
தியாகராஜ சுவாமிகள் (1767 -1848) தியாக பிரம்மம் என்று போற்றப்படுபவர். சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவர். தென்னிந்திய சங்கீதத்துக்கு அளப்பரிய சேவைகள் ஆற்றிய இவர் ஒரு சிறந்த இசை ஞானியாக விளங்கியவர்.
பொருளடக்கம் |
[தொகு] வாழ்க்கைக் குறிப்பு
கி.பி. 18ஆம் நூற்றாண்டில் சோழ நாட்டில் திருவாரூரில் ராம பக்தரான ராமபிரம்மம் என்பவருக்கும் சீதாம்மாவுக்கும் மூன்றாவது புதல்வராக இவர் பிறந்தார். இவர் பிறந்த பின் இவரின் குடும்பத்தினர் தஞ்சாவூருக்கு அண்மையில் உள்ள திருவையாறில் குடியேறினர். திருவையாறில் இவர் சமஸ்கிருத மொழியில் பயிற்சி பெற்றார். நுட்ப புத்தியும் ராம பக்தியும் கொண்ட தியாகராஜர் ஓய்வு நேரங்களில் சோந்தி வெங்கடராமையரிடம் இடம் சங்கீதம் பயின்று வந்தார். குருவின் அருளாலும் வழிநடத்தலாலும் சங்கீத சம்பிரதாயங்களில் மிக சிறந்த முறையில் இவர் கற்று தேறினார்.
[தொகு] சீடர்கள்
தியாகராஜரின் பெருமை பரவத் தொடங்கையதும் அவரிடம் பாடம் கேட்கப் பல சீடர்கள் வந்தனர். இந்திய இசை வரலாற்றில் வேறெந்த இசைப் புலவருக்கும் இல்லாத அளவு இவருக்கே எண்ணிறந்த சீடர்கள் சேர்ந்தனர். இச் சீடர்களும், இவர்களின் சீடர்களும் பிற்காலத்திலே சிறந்த இசைக் கலைஞர்களாகவும், இசைப் புலவர்களாகவும் திகழ்ந்தனர். அவ்ர்களில் முக்கியமான சிலர் பின்வருமாறு:
- தஞ்சாவூர் ராமராவ் (சீடர்களில் வயதில் மூத்தவர். தியாகராஜரின் அந்தரங்க செயலாளராகவும் இருந்தவர்.)
- வீணை குப்பையர்.
- வாலாஜாபேட்டை வெங்கடராமண பாகவதர்.
- வாலாஜாபேட்டை கிருஷ்ணபாகவதர்.
- உமையாள்புரம் கிருஷ்ணபாகவதர்.
- உமையாள்புரம் சுந்தரபாகவதர்.
- சித்தூர் ராதாகிருஷ்ணையார்.
- நெமம் சுப்பிரமணிய ஐயர்.
- கன்னையா பாகவதர்.
- கோவிந்த சிவன்.
- அமிர்தலிங்கம் பிள்ளை.
[தொகு] தியாகராஜராஜரால் கையாளப்பட்ட அபூர்வ இராகங்கள்
- சிறீமணி (2)
- ரசாளி (4)
- மனோரஞ்சனி (5)
- தேசிய தோடி (8)
- சுத்த சீமந்தினி (8)
- கண்டா (8)
- வர்த்தினி (9)
- கலகண்டீ (13)
- கலகடா (13)
- ஜூஜாஹூளி (13)
- வசந்தபைரவி (14)
- ஆகிரி (14)
- சிந்துராமக்கிரிய (15)
- குர்ஜரி (15)
- ரேவகுப்தி (15)
- குண்டக்கிரிய (15)
- கௌரி (15)
- கௌளிபந்து (15)
- பிந்துமாலினி (15)
- கலாவதி (16)
- வேகவாகினி (16)
- சுப்ரதீபம் (17)
- பைரவம் (17)
- பூர்ணலலித (19)
- சுத்ததேசி (20)
- ஜிங்கலா (20)
- இந்தோளவசந்தம் (20)
- மார்க்கஹிந்தோளம் (20)
- ஜயந்தசிறீ (20)
- வசந்தவராளி (20)
- அமிர்த வாகினி (20)
- கோகிலவராளி (20)
- உதயரவிச்சந்திரிக (20)
- கிரணாவளி (21)
- சித்தரஞ்சனி (22)
- ஆபேரி (22)
- தேவாம்ருதவர்ஷினி (22)
- சாலசபைரவி (22)
- கன்னடகௌளை (22)
- ருத்ரப்பிரிய (22)
- நாயகி (22)
- உசேனி (22)
- மனோகரி (22)
- தேவமனோகரி (22)
- ஜயமனோகரி (22)
- மஞ்சரி (22)
- பலமஞ்சரி (22)
- ஜயந்தசேனா (22)
- சுத்தபங்காள (22)
- கலாநிதி (22)
- ஜயநாரயனி (22)
- சுரபூஷனி (22)
- வீரவசந்தம் (24)
- கமலாமனோகரி (27)
- சிம்மவாகினி (27)
- நளினகாந்தி (27)
- கர்னாடக பியாக் (28)
- நாராயணகௌளை (28)
- சித்துகன்னட (28)
- சாமா (28)
- பலஹம்ச (28)
- குந்தலவராளி (28)
- சரஸ்வதிமனோகரி (28)
- உடாபரணம் (28)
- ஈசமனோகரி (28)
- ஆந்தாளி (28)
- ஆந்தோளிகா (28)
- நவரசகன்னட (28)
- நாராயணி (28)
- காபிநாராயணி (28)
- சாயாதரங்கிணி (28)
- பங்காள (28)
- பகுதாரி (28)
- கோகிலத்வனி (28)
- சுராவளி (28)
- நாகஸ்வராளி (28)
- ராகபஞ்சரம் (28)
- மாளவி (28)
- சுபோஷிணி (28)
- ரவிச்சந்திரிகா (28)
- பிரதாபவராளி (28)
- ஜஞ்ஜோடி (28)
- கருடத்வனி (28)
- டக்கா (29)
- கன்னட (29)
- கோலாகலம் (29)
- பூர்ணசந்திரிக்கா (29)
- ஜனரஞ்சனி (29)
- விவர்த்தனி (29)
- சாயாநட (34)
- கானவாரிதி (35)
- விஜயசிறீ (39)
- நபோமணி (40)
- சந்திரஜோதி (41)
- தீவிரவாகினி (46)
- துந்துபிப்பிரியா (48)
- மந்தாரி (50)
- தீபகம் (51)
- ராமமனோகரி (52)
- பூர்விகல்யாணி (53)
- விஜயவசந்தா (54)
- ரஞ்சனி (59)
- கைகவசி (60)
- ஹம்சநாதம் (60)
- சுருதிரஞ்சனி (61)
- பூஷாவளி (64)
- சரஸ்வதி (64)
- யமுனாகல்யாணி (65)
- அமீர்கல்யாணி (65)