கீரவாணி
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
கீரவாணி என்பது கருநாடக இசையில் 21வது மேளகர்த்தா இராகம். விரிவான ஆலாபனைக்கு இடம் கொடுப்பதுடன், பக்தி சுவையையும் வெளிப்படுத்தும். எப்போதும் பாடலாம்.
ஆரோகணம்: | ஸ ரி2 க2 ம1 ப த1 நி3 ஸ் |
அவரோகணம்: | ஸ் நி3 த1 ப ம1 க2 ரி2 ஸ |
[தொகு] இதர அம்சங்கள்
- 21 வது மேளகர்த்தா. வேத என்றழைக்கப்படும் 4 வது சக்கரத்தில் 3 வது மேளம்.
- இந்த இராகத்தில் ஷட்ஜம், சதுஸ்ருதி ரிஷபம் (ரி2), சாதாரண காந்தாரம் (க2), சுத்த மத்திமம் (ம1), பஞ்சமம், சுத்த தைவதம் (த1) , காகலி நிஷாதம் (நி3) ஆகிய சுரங்கள் வருகின்றன.
- இது ஒரு மூர்ச்சனாகாரக மேளம். கிரக பேதத்தின் வழியாக இந்த இராகத்தின் மத்திமம் ஹேமவதியையும் (58), பஞ்சமம் வகுளாபரணத்தையும் (14), கோசலத்தையும் (71) கொடுக்கும்.
- பிரதியாகத கமகம் இந்த இராகத்தின் சாயலை நன்கு வெளிப்படுத்தும்.
- மேல்நாட்டு இசையில் Harmonic Minor Scale என்பது கீரவாணி இராகமே.
- அசம்பூர்ண மேளபத்ததியில் "கிரணாவளி" என்றழைக்கப்படுகிறது.
[தொகு] உருப்படிகள்
- கிருதி : கலிகியுண்டேகதா : ஆதி : தியாகராஜ சுவாமிகள்.
- கிருதி : இன்னமும் சந்தேக :மிஸ்ர சாபு : கோபாலகிருஷ்ண பாரதியார்
- கிருதி : தேவி நீயே : ஆதி : பாபநாசம் சிவன்.
- கிருதி : வேலவா வினை தீர : மிஸ்ர ஜம்பை : கோடீஸ்வர ஐயர்.
- கிருதி : உனை நம்பினேன் ஐயா : ஆதி : முத்துத் தாண்டவர்.