சேரன் (கவிஞர்)
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
உருத்திரமூர்த்தி சேரன் யாழ்ப்பாணம் அளவெட்டியில் பிறந்தார். ஈழத்தின் குறிப்பிடத்தகுந்த கவிஞர்களில் ஒருவர். ஈழத்தின் நவீன கவிதையின் முதல்வரான மஹாகவியின் மகன்.
இவரது கவிதைகள் சிங்களம், ஆங்கிலம், ஜேர்மன், டச்சு ஆகிய மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. கனடா, யோர்க் பல்கலைக்கழகத்தில் சமூகவியலில் முனைவர் பட்டம் பெற்று அங்கு பகுதிநேர விரிவுரையாளராக பணியாற்றுகிறார்.
[தொகு] இவரது நூல்கள்
- இரண்டாவது சூரிய உதயம் (1983)
- யமன் (1984)
- கானல் வரி (1989)
- எலும்புக் கூடுகளின் ஊர்வலம் (1990)
- எரிந்து கொண்டிருக்கும் நேரம் (1993)
- நீ இப்பொழுது இறங்கும் ஆறு (2000)
- உயிர் கொல்லும் வார்த்தைகள்