தோடர்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
தோடர்கள் தமிழ் நாட்டில் வாழும் பழங்குடிகளில் ஒரின மக்கள். இவர்கள் உள்ள நீலகிரி மாவட்டத்தில் வாழ்கின்றனர். தோடர்கள் தாம் வாழும் இட்த்தை மந்து என்று கூறுகின்றனர். இம் மந்துகளில் எருமை மாடுகளை வளர்க்கின்றனர். பெரும்பாலும் இவர்கள் வாழ்க்கை எருமை மாடுகளைச் சுற்றியே அமைகின்றது. இவர்கள் மொழி பேச்சுத்தமிழ் என்று கால்டுவெல் அறிஞர் கருதினார். பாடுவதில் ஈடுபாடு உடையவர்கள்.
[தொகு] உசாத்துணை
அ.கா.பெருமாள். (2005). தமிழகப் பழங்குடிகள். மனோரமா இயர்புக் 2005, 302-318.