பயனர் பேச்சு:Vij

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.

வாருங்கள், Vij!

விக்கிபீடியாவிற்கு உங்களை வரவேற்கிறோம். விக்கிபீடியா பற்றி அறிந்து கொள்ள புதுப் பயனர் பக்கத்தை பாருங்கள். தமிழ் விக்கிபீடியா பற்றிய உங்கள் பொதுவான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும். ஏதேனும் உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்தில் கேளுங்கள். நீங்கள் கட்டுரை எழுதி பயிற்சி செய்ய விரும்பினால், தயவு செய்து மணல்தொட்டியைப் பயன்படுத்துங்கள். பேச்சுப் பக்கங்களிலும் கலந்துரையாடல்களிலும் உங்கள் கையொப்பத்தை இட ~~~~ என்ற குறியீட்டைப் பயன்படுத்துங்கள்.

விக்கிபீடியாவிற்கு பங்களிப்பது பற்றி மேலும் அறிந்த கொள்ள, தயவு செய்து பின் வரும் பக்கங்களை ஒருமுறை பார்க்கவும்:

புதுக்கட்டுரை ஒன்றைத் துவக்க தலைப்பை கீழே உள்ள பெட்டியில் இட்டு அதற்கு கீழே உள்ள தத்தலை அமுக்குங்கள்.


உங்களைப் பற்றிய தகவல்களை உங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், நாங்கள் உங்களைப் பற்றி அறிந்து கொள்ளலாம். மேலும், விக்கிபீடியா உங்களுக்கு முதன் முதலில் எப்பொழுது எவ்வாறு அறிமுகம் ஆனது என்றும் தெரிவித்தால் மேலும் பல புதுப்பயனர்களை ஈர்க்க உதவியாக இருக்கும். நன்றி.

--Umapathy 00:00, 26 நவம்பர் 2006 (UTC)

நல்வரவு விஜயராகவன். உங்கள் பங்களிப்பால் தமிழ் விக்கிபீடியா மேலும் வளம் பெறும் என்று நம்புகின்றேன். --Natkeeran 02:03, 2 டிசம்பர் 2006 (UTC)

விஜயராகவன், நீங்கள் ஆரியர் ஏன்ற கட்டுரையில் கூற விரும்புவதை சுருக்கி எழுத முடியுமா; 3-5 பந்திகள். உங்கள் பார்வையையும் கட்டுரையில் தகுந்த முறையில் சேர்த்துக் கொள்ளலாம். நன்றி. --Natkeeran 02:03, 2 டிசம்பர் 2006 (UTC)

வேளாண்மை கட்டுரையில் படங்களை மாற்றி உள்ளேன். சுற்றிக் காட்டியதற்கு நன்றி, விஜய். இது போன்ற காப்புரிமை விலக்கு பெற்ற படங்களை நீங்கள் http://www.flickr.com/photo_zoom.gne?id=208648512&size=o என்ற தளத்தில் இருந்து பெற்று விக்கிபீடியாவில் பதிவேற்றலாம்.--Ravidreams 09:50, 7 டிசம்பர் 2006 (UTC)

விஜய், தமிழ்ப் படங்களுக்கு முன்னுரிமை கொடுத்து சேர்க்கலாம். ஆனால், பிற நாட்டுப் படங்களை நீக்க வேண்டும் என்று அவசியமில்லை. தமிழ் விக்கிபீடியாவுக்கு உலகளாவிய பார்வையும் அவசியம் தானே. ?--Ravidreams 11:58, 7 டிசம்பர் 2006 (UTC).

தமிழ்நாட்டு வேளாண்மையை பற்றி பேசும்போது, தமிழ்நாட்டு படங்கள் ஒன்றாக போகும். அப்பொதுதான் 'மண்வாசனை' வீசும். அப்பொழுதுதான், மக்கள், கட்டிடங்கள், கருவிகள், வேலை/ஓய்வு பழக்கங்கள் எப்படி தமிழ்நாட்டில் இருக்கும் என படிக்கிரவர்களுக்கு சொல்லாமலேயே புரியும். ஒரு படம் ஆயிரம் சொற்களுக்கு சமம். அந்த நோக்கில்தான் அப்படி எழுதினேன். ஐரொப்பிய நாட்டுபுரங்களின் கட்டுரையில் தமிழ்நாட்டு சீன்கள் செல்லா.--விஜயராகவன் 12:29, 7 டிசம்பர் 2006 (UTC).

ரவிட்ரீம்ஸ் - நீங்கள் தமிழ்நாட்டை மையமாக கொள்ளாமல், பொதுவாக வேளாண்மையை பற்றி எழுதுகிறீர்களென்றால், எந்த நாட்டு படமும் போகும்; நவீன படஙக்ளும் போகும். அது கட்டுரையின் குறியைப் பொருத்தது. நான் கட்டுரையின் குறியை தப்பாக புரிந்துகொண்டிருக்கலாம்--விஜயராகவன் 13:05, 7 டிசம்பர் 2006 (UTC).

தற்பொழுது உள்ள வேளாண்மை கட்டுரை உலக நோக்கு உடையது தான். பொதுவாக விக்கிபீடியா கட்டுரைகள் உலக நோக்கோடு தான் எழுதப்படுகின்றன. கட்டுரையின் ஒரு பகுதி தமிழ்ச் சூழலை விளக்கி எழுதப்படுகிறது. அந்தப் பகுதிகளில் கண்டிப்பாக தமிழ்ப்படங்கள் இடம்பெற வேண்டும். கட்டுரை தலைப்புகள் தமிழ்நாட்டைக் குறித்ததாக இருக்கும்போதும் தமிழ்ப் படங்கள் சரியாக இருக்கும். அப்புறம், நீங்க என்ன ரவின்னே அழைக்கலாம்.--Ravidreams 13:50, 7 டிசம்பர் 2006 (UTC)

விஜய், நாம் சேர்க்கும் படிமங்களில் தமிழ் மண்வாசணை இருக்க வேண்டும். அதாவது, த.வி. தமிழ் மயப்பட்டு இருக்க வேண்டும். உங்கள் கருத்து சரிதான். தற்சமயம், ஆரியர் தொடர்பாக சில குறிப்புகள் எடுத்து வருகின்றேன். நீங்கள் இட்ட கட்டுரையையும் பார்த்தேன். நீங்கள் பல விடயங்களை ஒரே கட்டுரைகளில் தர முயன்றதுதான் கோபி முரண்பட்டதுக்கு ஒரு காரணம் என்று நினைக்கின்றேன். விரைவில் அந்தக் கட்டுரையை மேம்படுத்தலாம், உங்களின் கருத்துக்களையும் உள்வாங்கி.
உங்களின் தமிழ் எழுத்தில் சற்று அதிகமான எழுத்துப் பிழைகள் இருக்கின்றன. நான் ஒன்றும் அவ்வளவு திறம் இல்லை. ஆனால் பிறர் சுட்டிக்காட்டி, சற்று இலக்கணமும் அவ்வப்பொழுது படித்து இப்பொழுது சற்று முன்னேற்றம். எழுத்துப் பிழைகளை சற்றுக் கவனத்தில் கொள்ளவும். நீங்கள் ஆங்கில வழிக் கல்வி போலிருக்கின்றது. ஏன் என்றால் உங்கள் ஆங்கிலம் நன்று. மேலும், உங்களின் கருத்தும் இங்கு Wikipedia:2006 தமிழ் விக்கிபீடியா ஆண்டு அறிக்கை/2006 Tamil Wikipedia Annual Review வரவேற்கப்படுகின்றது. நன்றி. --Natkeeran 01:58, 8 டிசம்பர் 2006 (UTC).
நட்கீரன் - உங்கள் ஆலோசனைக்கு நன்றி. என் எழுத்துப் பிழைகள் ர ற வில் தான் அனேகமாக வரும். தற்காலத் தமிழில் - அதாவது தமிழ் பேச்சில் ர, ற வித்தியாசம் மறைந்து விட்டது என மொழி ஆய்வாளர்கள் சொல்கிறனர். அது என் எழுத்துக்கு ஒரு காரணமாக இருக்கலாம். அது ஒரு புரம் இருக்க, நீங்கள் என் பிழைகளை தாராளமாக திருத்துங்கள். ஆரியர் கட்டுரைக்கு உங்கள் ஐடியாவையும் சொல்லுக. நான் பள்ளியில் தமிழ் மீடியம் தான். பல்கலைகழகம் தான் ஆங்கிலம். எழுது தமிழும் , பேச்சு தமிழும் பெரிய வித்தியாசத்தை காண்பிப்பது மொழி வளர்ச்சிக்கு உகந்ததல்ல. நடைமுறைக்கு ஒவ்வாத இலக்கணம் குழப்பத்தைதான் விளைவிக்கும். அது பெரிய விஷயம் - வேறிடைத்தில் விவாதிக்கலாம். --விஜயராகவன் 09:50, 8 டிசம்பர் 2006 (UTC)

ஒன்றை மட்டும் உங்களுக்குச் சுட்டிக் காட்ட விரும்புகிறேன். விக்கிபீடியாவிற்கு இதுவரை தொடர்ந்து பல இந்தியர் பங்களித்து வருகிறார்கள். யாரும் உங்களைப் போல ரகர, றகர பிழைகள் விட்டதில்லை. ஈழத்தில் ரகரறகர வேறுபாடு தெளிவாகவே உள்ளது.

அது இருக்கட்டும். அந்த மொழி ஆய்வாளர்கள் யார்?

மரபினால் ஒரு த்வனியும் ஸ்வரமும் பிசகாமல் , யாயோடு வாயாக சொல்லிக் கொடுக்க்ப்பட்டு, நம்மிடம் உள்ளன. வேதங்கள் மனித டேப் ரிகாடர்கள்' என கருதும் அதே மொழி ஆய்வாளர்கள் தானா?

இன்னும் உங்களுக்கு வேதங்கள் ஒரு த்வனியும் ஸ்வரமும் பிசகாமல் வேண்டும். ஆனால் எழுத்துத் தமிழுக்கும் பேச்சுத் தமிழுக்கும் வித்தியாசம் கூடாது; நடைமுறையற்ற இலக்கணங்கள் அகற்றப்பட வேண்டும். இல்லையா? உங்கள் அற்புதமான கருத்துக்களுடன் நாம் விவாதிக்கவும் வேண்டும் என்று எதிர்பார்க்கிறீர்கள் என்பதுதான் பெரிய முரண்நகை.

கோபி 04:53, 9 டிசம்பர் 2006 (UTC).

கோபிக்கு பதில்:.

"இன்னும் உங்களுக்கு வேதங்கள் ஒரு த்வனியும் ஸ்வரமும் பிசகாமல் வேண்டும். ஆனால் எழுத்துத் தமிழுக்கும் பேச்சுத் தமிழுக்கும் வித்தியாசம் கூடாது. வேதங்கள் மனித டேப் ரிகாடர்கள்' என கருதும் அதே மொழி ஆய்வாளர்கள் தானா?" .

நிச்சியமாக அந்த ஆய்வாளர் பெயரை தருகிரேன். ஹரால்ட் ஷிப்மன் அல்லது ஜார்ஜ் ஹார்ட்டின் ஒரு கட்டுரையில் படித்ததாக ஞாபகம். ஆனால், நான் எவ்வளவோ வல்லுனர்கள் கட்டுரை/புத்தகப் பெயரை கொடுத்தாலும் அதை நம்ப போகிறீர்களா??. Your attitude is irrational.


கோபி இந்த இரண்டு விஷயங்களும் தனி. வேதமொழி செவ்வியல் சமஸ்கிருத காலத்திலேயே நடைமுறையில் இல்லை. வேதமொழி சடங்குகளுக்கு வெளியே யாரும் உபயோகிப்பத்தில்லை - சமஸ்கிருத விசிறிகள் கூட. ஆனால் தமிழில் அந்தஸ்து வேறு. அது பல கோடி மக்களின் வாழ்வில் நடைமொழி. ஆனால் தற்போது விஞ்ஞானம், பொருளாதாரம், மனித சம்பநதமான ஆய்வு போன்றவைக்கு உபயோகமாகவில்லை.போகிர போக்கை பார்த்தால் அப்படி ஆகாது போல தோன்றுகிறது. இந்த வித்தியாசத்தை மனதில் வைக்காமல், நான் ஏன் தமிழை வேதமொழி போல கருதவில்லை என சாட்டுகிறீர். --விஜயராகவன் 10:23, 9 டிசம்பர் 2006 (UTC).

கோபிக்கு பதில்:

உங்கள் கேள்வி "அது இருக்கட்டும். அந்த மொழி ஆய்வாளர்கள் யார்?" அதற்க்கு சரியான பதில் கிடைத்து விட்டது. அதை எழுதியவர் ஜார்ஜ் ஹார்ட் - பேச்சு (மேலும் பல விஷயங்களில்) தமிழ் வல்லுனர்.

http://www.infitt.org/tscii/archives/msg00146.html .

"Languages grow historically. As they grow and change, their phonetics change. Very few Tamils, for example, can pronounce the difference between the 2 r's (though Malayalis and Sri Lankan Tamils can). This is a historic change -- 1000 years ago, the phonemes were probably distinct in almost all dialects of Tamil." .

வேறொடு இடத்தில் சொல்கிறார்: Proto-Dravidian had a set of alveolar stops, midway between dental and retroflex. Tamil retained them in many forms -- Sri Lankan, some southern dialects, and of course modern Malayalam (which is an offshoot of medieval Tamil). Most spoken Tamil dialects -- and now even the way in which most people pronounce the formal language -- have lost them. In terms of pronunciation, I would guess that Malayalam and SL Tamil are closer to older Tamil than modern Indian Tamil. ........... One issue with SL Tamil is that it has lost the "zh" and replaced it with retroflex l. This is also true of most non-Brahmin Tamil, though not of the Brahmin dialect in India and Malayalam. If you are a Sri Lankan, then you distinguish between kaaTTu (forest), kaaRRu (wind) and kaattu (having waited). Indian Tamils do not make the latter two distinctions, though Malayalis do. G. Hart--விஜயராகவன் 22:06, 9 டிசம்பர் 2006 (UTC).

றகரத்தைப் பற்றி மற்றொரிடத்தில் எழுதுகிறார். As you may know, Malayalis pronounce "Tamil" sounds better than most Tamils, who cannot say "za" properly. Almost no Tamil in India can properly articulate "Ra." The sound has been lost in their language, though they still write it. --விஜயராகவன் 23:01, 9 டிசம்பர் 2006 (UTC)



பொருளடக்கம்

[தொகு] தமிழ் வழியம்??

விஜய், நீங்கள் தமிழ் வழியத்தில் படித்தீர்கள் என்பது சரியான ஆச்சரியமாக இருக்கிறது. நம்ப முடியவில்லை. பேச்சுத் தமிழிலும் உச்சரிப்பை சரிவர பின்பற்றுவது தான் தீர்வு. இலக்கணத்தையும் எழுத்துத் தமிழையும் மாற்றுவது அல்ல. அப்படி மாற்றினால், பெரும் குழப்பம் வரும். இரண்டு தலைமுறைகள் கழிந்து இந்த தலைமுறையில் என்ன எழுதினோம் என்பதையே அவர்களால் விளங்கிக் கொள்ள முடியாமல் போகி விடும். இதே காரணத்துக்காகத் தான் வட்டார நடைகளை விட்டு பொதுத் தமிழ் நடையில் எழுதுவதும். அதே வேளை, கொங்குத் தமிழ், மதுரைத் தமிழ் என்று பேச்சுத் தமிழ் வேறுபடுவது மொழியின் சிதைவு அல்ல. அது மொழியின் ஒரு கூறு. இது பக்கம் பக்கமாக உரையாட வேண்டிய விதயம். ஒரு குறிப்புக்காக இங்கு சொல்கிறேன். வேறு தளங்களில் விரிவாக உரையாடலாம். நீங்கள் எழுதி வரும் ஆரியர் கட்டுரையின் தலைப்பை வேதங்களில் ஆரியர் பற்றிய குறிப்புகள் என்று மாற்றி விட்டால் பாதி சர்ச்சை நீங்கி விடும். உங்கள் கட்டுரையும் வேதத்தை மட்டுமே முதன்மை ஆதாரமாக கொள்வதால் பொருத்தமான தலைப்பாக இருக்கும். தவிர, வேதங்களில் உள்ளது என்று observation மட்டும் தந்தால் இன்னும் 25% பிரச்சினை தீரும். observationஐ கொண்டு inferences எழுத முற்படும் போது தான் வரலாற்றுத் திரிப்பு என்ற முக்கியசர்ச்சை எழுகிறது.--Ravidreams 10:37, 8 டிசம்பர் 2006 (UTC)


ரவி, எழுத்து தமிழ், பேச்சு தமிழ் வேறு வேறு என்றோ முடிவாகி விட்டது. இங்கு விவாதிக்க என்ன இருக்கின்றது. புனைகதையில் வட்டாரத் தமிழ் பயன்படுத்துவது வேறு, கலைக்களஞ்சியத்தில் அப்படிப் பயன்படுத்த முடியாது. நல்ல கட்டுரைத் தமிழ் நடையில் வட்டார வேறுபாடு காண்பிப்பது கடினம். இருப்பினும் இலங்கை எழுத்தில் ஒரு சில முரண்பாடுகள் இருப்பது உண்மை. --Natkeeran 01:49, 9 டிசம்பர் 2006 (UTC)

[தொகு] பாராட்டு

ஆனந்தரங்கம் குறித்த உங்கள் கட்டுரைத் தகவல் நன்று. பாராட்டுக்கள். தமிழில் முதலில் நாட்குறிப்பு எழுதியவர் இவர் என்ற தகவலை விக்கிபீடியா:உங்களுக்குத் தெரியுமா பகுதியில் காட்சிப்படுத்த உள்ளேன். சிப்பாய் எழுச்சி குறித்து ஏற்கனவே முதல் இந்திய விடுதலைப் போர் என்று ஒரு கட்டுரை உள்ளது. அத்துடன் உங்கள் சிப்பாய் எழுச்சி கட்டுரையை சேர்க்கலாம். அப்புறம், சிப்பாய் எழுச்சி கட்டுரைத்தலைப்பின் இறுதியில் முற்றுப் புள்ளி வைக்கப்படிருக்கிறது. கட்டுரைத்தலைப்பில் முற்றுப் புள்ளி தேவை இல்லை.--Ravidreams 22:06, 9 டிசம்பர் 2006 (UTC).

ரவி , பாராட்டுக்கு நன்றி. நான் முதலில் வேலூர் என்ற பெயரில் தேடி, வேலூர் சிப்பாய் கலகம் கிடைக்க வில்லை. அதனால்தான், நான் முதலில் எழுதுவதாக நினைத்தேன். 'முற்றுப் புள்ளி' பீட்பேக் நன்றி. அந்த தவறு நான் விகியில் இன்னும் சரியாக , வேகமாக எழுதத் தெரியாமல், பயந்து, பயந்து எழுதினதின் விளைவு. சரியாக்க வேண்டுமானல் இரு கட்டுரையும் ஒன்றாக்கலம். அதில் தவறு இல்லை. --விஜயராகவன் 22:16, 9 டிசம்பர் 2006 (UTC).

இன்னொரு சங்கதி; ஆனந்தரங்கம் எழுதிய நாட்குறிப்புதான் நமக்கு கிடைத்துள்ளது - அதுவும் அதிர்ஷ்ட வசத்தால். அதற்க்கு முன்னாடி எழுதிய நாட்குறிப்பு மறைந்து விட்டது. ஆனால் பொதுமக்களுக்கு தமிழில் முதலில் நாட்குறிப்பு எழுதியவர் என ஆனந்தரங்கத்தை அறிமுகப் படுத்துவதில் தவரில்லை.--விஜயராகவன் 22:22, 9 டிசம்பர் 2006 (UTC).

ரவி, வேலூர் சிப்பாய் கலகத்தை 'முதல் இந்திய விடுதலைப் போர்' என அழைக்க முடியாது. ஏனென்றால், சிப்பாய் கலகக் காரர்களுக்கு ஒரு பரந்த அரசியல்/ ராணுவ குறி இல்லை. அவர்கள் மொத்த தமிழ் நாட்டின் விடுதலைக்கொ, அல்லது மொத்த இந்தியாவின் விடுதலைக்கோ கனவு கூட காணவில்லை. தங்கள் கலகத்தை மற்ற பிரதேசங்களுக்கு 'ஏற்றுமதி' செய்ய நினைக்கவே --விஜயராகவன் 22:41, 9 டிசம்பர் 2006 (UTC)

விஜய், இங்கு பயப்பட ஒன்றும் இல்லை. கருத்தளவில் தீவிரமான விமர்சனங்களை முன்வைப்போமே தவிர, தமிழ் விக்கிபீடியா போன்ற நட்பான குழுமம் தமிழ் இணையத்தில் எங்கு தேடினாலும் காணக்கிடைக்காது. நீங்கள் கட்டுரைகளை எழுத முனையும் முன் இங்கு ஏற்கனவே உள்ள பிற கட்டுரைகளை நிறைய படியுங்கள். அவை உங்கள் எழுத்துத் திறனை வளர்க்க உதவும். பிறகு, தயக்கமின்றி எழுதலாம். தவிர, இதன் மூலம் பலனுள்ள பல பின்னூட்டுகளையும் நீங்கள் இட்டு வருகிறீர்கள். இது தமிழ் விக்கிபீடியா உயர்த்த உதவும். எ-கலப்பை-யில் தமிழ்99 விசைப்பலகை முறையில் தட்டச்சுங்கள். இது பிழைகளை தவிர்த்து விரைவாக எளிதாக எழுத உதவும். வேறு எந்த தட்டச்சு முறையை நான் பரிந்துரைப்பதில்லை. இது குறித்த என் வலைப்பதிவுக்குப் பார்க்க - http://thamizhthendral.blogspot.com/2006/12/blog-post_08.html

ஆனந்தராகம் தான் முதலில் நாட்குறிப்பு எழுதினார் எந்த ஆதாரமும் கிடையாது. ஆனால், நமக்கு கிடைக்கும் முதல் நாட்குறிப்பு அவருடையது தான் என்பது தான் நம் புரிதல். சரி தானே? வேலூர் கலகம் குறித்து அந்தந்த பக்கங்களில் கருத்து தெரிவிக்கிறேன். --Ravidreams 23:10, 9 டிசம்பர் 2006 (UTC). --விஜயராகவன் 23:39, 9 டிசம்பர் 2006 (UTC)

ரவி, ஆ.ர.பி.. பற்றி உங்கள் புரிதல் சரிதான். நான் இன்னும் விகியில் கற்றுக் கோண்டு, வேகமாக எழுதி, சிறந்த முறையில் கட்டுரையை எழுத எவ்வளவோ இருக்கிறன. இப்போ எனக்கு விகியில் பரீட்சை வைத்தால், 100 க்கு 30 மார்க் தான் வாங்குவேன். பை த வே, நான் வேலூர் எழுச்சியை பற்றி பல வருடங்களுக்கு முன் கூகிளில் எழுதினேன். அப்போது, அது யார் கவனத்திலையும் இல்லை. http://groups.google.co.uk/group/soc.culture.indian/browse_thread/thread/bde6c60a0b365728/d4c673ada7d324c0?lnk=st&q=%22mutiny+in+vellore%22&rnum=2&hl=en#d4c673ada7d324c0 --விஜயராகவன் 23:39, 9 டிசம்பர் 2006 (UTC)

[தொகு] தமிழ்நாட்டு வயற்காட்டுப் படிமம்

விஜய், தமிழ்நாட்டு வயற்காட்டுப் படிமம் கிடைக்காததால்தான் ஐரோப்பிய படிமத்தைப் பயன்படுத்தினேன். தற்போது மாற்றியுள்ளேன். மற்றபடி கட்டுரைகளில் பொதுவான தலைப்புக்களுக்கு பல பண்பாடுகளின் படங்களையும் தகவல்களையும் தமிழரின் பண்பாட்டிற்கு முன்னுரிமை கொடுத்து தர வேண்டும். -- Sundar \பேச்சு 09:24, 11 டிசம்பர் 2006 (UTC).

நன்றி, ஒத்துக் கொள்கிறேன்.--விஜயராகவன் 09:33, 11 டிசம்பர் 2006 (UTC)

[தொகு] குற்றம் மர்மம்

குற்றம்/மர்மம் பொருந்துமா என்று தெரியவில்லை. கட்டுரையை எழுதி நீங்களே ஒரு பொருத்தமான பகுப்பு தரலாம். நன்றி. --Natkeeran 04:31, 19 டிசம்பர் 2006 (UTC)