நல்லூர் கைலாசநாதர் கோயில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.

நல்லூர் கைலாசநாதர் கோயில் இலங்கை வடபுலத்தில் உள்ள யாழ்ப்பாண அரசின் தலைநகரமாக விளங்கிய நல்லூரில் இருக்கும் சிவனுக்கு உரிய கோயிலாகும். யாழ்ப்பாண வரலாற்று நூற் சான்றுகளின் படி யாழ்ப்பாண அரசை நிறுவியவனாகிய சிங்கைஆரியன் தலைநகரான நல்லூரிலே அரண்மனையையும் அதன் அயலிலே முருகன் கோயிலையும் கிழக்கே வெயிலுகந்த பிள்ளையார் கோயிலையும் வடக்கே சட்டநாதர் ஆலயம் மேற்கிலே வீரமாகாளி அம்மன் கோயில் தெற்கிலே கைலைவிநாயகர் கோயில், கைலாசநாதர் கோயில், கைலைநாயகி கோயில் ஆகியவற்றைக் கட்டினார் என அறியப் படுகின்றது.

யாழ்ப்பாண வரலாற்றின் மூல நூல்களில் ஒன்றாகக் கருதப்படும் கைலாயமாலை இக் கோயில் தொடர்பில் எழுந்த ஒரு நூல் என்பது குறிப்பிடத்தக்கது.

[தொகு] பூசைகள்

வேதகம முறைப்படி நித்திய நைமித்திய பூசைகள் நடைபெறுகின்றன. நாடோறும் ஆறுகாலப்பூசைகள் நடைபெறுகின்றன. மகோற்சவங்கள் பிள்ளையாருக்கு சித்திரையிலும் சிவனுக்கு ஆனியிலும் நடைபெறுகின்றது.

[தொகு] ஆதாரங்கள்

  1. ஈழத்துச் சிவாலயங்கள், வித்துவான் வசந்தா வைத்திய நாதன்