மருதம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.

மருதம் என்பது பண்டைத் தமிழகத்தில் பகுத்து அறியப்பட்ட ஐந்து வகைத் தமிழர் நிலத்திணைகளில் ஒன்றாகும். வயலும் வயல் சார்ந்த இடமும் மருதம் என அழைக்கப்பட்டது. இதனால் மருத நிலத்தில் வாழ்ந்தோர் உழவுத் தொழில் புரிவோராவர்.

[தொகு] மருத நிலத்தின் பொழுதுகள்

கார், கூதிர், முன்பனி, பின்பனி, இளவேனில், முதுவேனில் என்னும் பெரும் பொழுதுகளும் வைகறை, விடியல் என்னும் சிறுபொழுதுகளும் மருத நிலத்துக்குரிய பொழுதுகளாகும்.

[தொகு] மருத நிலத்தின் கருப்பொருட்கள்

  • தெய்வம்: இந்திரன்
  • மக்கள்: உழவர், உழத்தியர், கடையர், கடைசியர்
  • பறவைகள்: நாரை, குருகு, தாரா
  • விலங்குகள்: எருமை, நீர்நாய்
  • மலர்கள்: தாமரை, கழுநீர், குவளை
  • மரங்கள்: காஞ்சி, மருதம்
  • உணவு: செந்நெல், வெண்நெல்
  • பண்: மருத யாழ்
  • தொழில்: களைகட்டல், நெல்லரிதல், கடாவிடல்
"http://ta.wikipedia.org../../../%E0%AE%AE/%E0%AE%B0/%E0%AF%81/%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D.html" இலிருந்து மீள்விக்கப்பட்டது