வடதிருமுல்லைவாயில்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
வடதிருமுல்லைவாயில் - மாசிலாமணீஸ்வரர் கோயில் சுந்தரர் பாடல் பெற்ற தலமாகும். இது செங்கற்பட்டு மாவட்டத்தில் அமைந்துள்ளது. இத்தலம் கிருதயுகத்தில் இரத்தினபுரமாகவும், திரேதாயுகத்தில் வில்வவனமாகவும், துவாபரயுகத்தில் சண்பக வனமாகவும், கலியுகத்தில் முல்லைவனமாகவும் விளங்குகிறது என்பது தொன்நம்பிக்கை (ஐதிகம்).