திருப்பைஞ்ஞீலி நீலகண்டேசுவரர் கோயில்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
திருப்பைஞ்ஞீலி நீலகண்டேசுவரர் கோயில் சம்பந்தர், அப்பர், சுந்தரர் மூவரதும் பாடல் பெற்ற சிவாலயமாகும். இது திருச்சி மாவட்டத்தில் அமைந்துள்ளது. அந்தணர் வடிவில் இறைவன் வந்து அப்பருக்குப் பசி போக்கிய தலமென்பது தொன்நம்பிக்கை (ஐதிகம்).