வட்டெழுத்து
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
வட்டெழுத்து என்பது கி.பி இரண்டாம் நூற்றாண்டிலிருத்து கி.பி பத்தாம் நூற்றாண்டு வரை தமிழை எழுத பயன்படுத்தப்பட்டு வந்த ஓர் எழுத்து முறையாகும். வட்டெழுத்த்தை மலையாள மொழியினை எழுதவும் பயன்படுத்தினர். தற்கால தமிழ் எழுத்துக்கள் வட்டெழுத்தில் இருந்து தோன்றியவையே.
[தொகு] வட்டெழுத்து தோற்றம்
வட்டெழுத்துக்கள் பிராமி எழுத்து முறையில் இருந்து தோன்றியதாக கருதப்படுகிறது. பிராமி எழுத்துக்களை ஓலைச்சுவடிகளில் எழுதுவதற்கிணங்க அதை மாறுபடுத்தியதால், வட்டெழுத்து தோன்றியது என பொதுவாக கருதப்படுகின்றது[1]. பிராமி எழுத்துக்கள் கோடுகளாக இருப்பதால்( கோடுகளை ஓலைச்சுவடியில் எழுதுனால் அவை கிழிந்து விடும்) ஓலைச்சுவடியில் எழுதும் பொருட்டு அவை வட்ட வடிவமாக உருமாற்றப்பட்டு எழுதுப்பட்டதால் வட்டெழுத்து உருவானதாகக் கருதலாம்.
ஆனால் சிலர் வட்டெழுத்தே தமிழரின் பழங்கால எழுத்து முறையென்றும் அதிலிருந்தே தமிழ் பிராமி எழுத்துக்கள் தோன்றியன என்றும் வாதிடுகின்றனர்[2]. அனால் இந்த வாதம் பலரால் ஒப்புகொள்ளப்படவில்லை.
கி.பி 8ஆம் நூற்றாண்டுகளில் வட்டெழுத்து கிரந்த எழுத்துக்களுடன் மணிப்பிரவாளத்தை எழுத பயன்படுத்தப்பட்டது.
கி.பி 11ஆம் நூற்றாண்டுகளில் வட்டெழுத்து தமிழ் நாட்டில் வழக்கொழிந்து, தற்கால தமிழ் எழுத்துக்களை ஒத்த எழுத்து முறை பயன்படுத்தப்பட துவங்கப்பட்டது[3]. ஆனால் கேரளத்தில் 15ஆம் நூற்றாண்டுவரை வட்டெழுத்து மலையாளத்தை எழுத பயன்படுத்தப்பட்டது.
[தொகு] சில வட்டெழுத்து வடிவங்கள்
கீழ்க்கண்ட வட்டெழுத்துக்கள் கி.பி 8ஆம் நூற்றாண்டை சார்ந்தவை