சைவ சமயம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.

சைவ சமயம், இந்து சமயத்தின் உட்பிரிவுகளுள் ஒன்று. சிவன் அல்லது சிவபெருமானை முழுமுதற் கடவுளாகக் கொள்ளும் சமயம். இது எப்பொழுது தோன்றியது, எவரால் தோற்றுவிக்கப்பட்டது என்று கூற முடியாத வரலாற்றுப் பழமை வாய்ந்தது.

பொருளடக்கம்

[தொகு] சைவத்தின் மூன்று பிரிவுகள்

இன்று நிலவும் சைவத்தை மூன்று பெரும் பிரிவுகளாகப் பிரிக்கலாம்.

இவற்றின் தத்துவங்கள், கோட்பாடுகள் ஆகியவற்றில் சில வேறுபாடுகள் உள்ளனவாயினும் அவற்றின் அடிப்படைக் கொள்கைகளில் வேறுபாடு இல்லை.

சைவ சித்தாந்தத்தை தத்துவமாகக் கொண்டு விளங்குவது சித்தாந்த சைவம். இச்சைவம் இந்தியாவில் மட்டுமன்றி இலங்கை, மலேசியா, சிங்கப்பூர் போன்ற நாடுகளிலும் பிறநாடுகளிலும் விளங்குகிறது.

[தொகு] சைவசமயத்தின் குறைபாடுகள்

பேராசிரியர் வி. நித்தியானந்தம் "ஈழத்தமிழர் மத்தியில் இந்து மதம்: அதன் சமூகப்பொருளாதாரப் பரிமாணம் பற்றிய சில சிந்தனைகள்" என்ற ஆய்வுக் கட்டுரையில் சைவசமயத்தின் பல குறைபாடுகளை தெளிவாகக் காட்டியுள்ளார். அவற்றின் ஒரு தொகுப்பு பின்வருமாறு:

  • விளங்கா மொழியில் வழிபாடு
  • சைவக் குருமார்கள் மக்களிடம் அன்னியப்பட்டு நிற்றல்
  • சமூக சேவையை முன்நிறுத்தாதல்
  • போட்டி மனப்பான்மையை ஏதுவாக்கி ஒற்றுமையைச் சீர்குலைத்தல்
  • சமூக வளங்களை வீணடித்தல்

[தொகு] இவற்றையும் பார்க்கவும்


[தொகு] மேற்கோள்கள்

  • வி. நித்தியானந்தம். (2006). "ஈழத்தமிழர் மத்தியில் இந்து மதம்: அதன் சமூகப்பொருளாதாரப் பரிமாணம் பற்றிய சில சிந்தனைகள்". கலம், 45-67.