இயற்கை உரம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.

குப்பைகள் மக்கி இயற்கை உரமாக மாறும் பொழுது நடை பெறும் ஆக்சிஜனில்லா வினைகளால் விரும்பத்தகாத மணம் கொண்ட வாயுக்கள் வெளியேறக்கூடும்
குப்பைகள் மக்கி இயற்கை உரமாக மாறும் பொழுது நடை பெறும் ஆக்சிஜனில்லா வினைகளால் விரும்பத்தகாத மணம் கொண்ட வாயுக்கள் வெளியேறக்கூடும்

இயற்கை உரம் (Manure) என்பது வேளாண்மையில் மண்ணூட்டப் பொருளாகப் பயன்படுத்தப்படும் உயிரினங்களிலிருந்து கிடைக்கும் பொருட்களைக் குறிக்கும். தொழு உரம் என்பது மக்கவைக்கப்பட்ட உயிர்சார் பொருட்களைக் குறிக்கும் ஒரு குறிப்பிட்ட வகை இயற்கை உரமாகும்.

உயிர்சார் பொருட்கள் மற்றும் பாக்டீரியாக்களால் கவரப்படும் நைட்ரஜன் போன்ற ஊட்டப்பொருட்கள் ஆகியவற்றை நிலத்தில் ஏற்றுவதன் மூலம் இயற்கை உரங்கள் மண் வளத்தைக் கூட்டுகின்றன. மேலும், பூஞ்சைகள் மற்றும் பாக்டீரியா போன்ற நுண்ணுயிர்களை உண்டு வாழும் உயர் உயிரினங்களினால் ஒரு உயிர் சங்கிலி ஏற்பட்டு மண் உணவு வலை (soil food web) உருவாக ஏதுவாகிறது.

[தொகு] வெளி இணைப்புகள்