பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.

பாண்டிய மன்னர்களின் பட்டியல்
முற்காலப் பாண்டியர்கள்
வடிம்பலம்ப நின்ற பாண்டியன்
பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதி
சங்ககாலச் பாண்டியர்கள்
முடத்திருமாறன் கி.மு 200 - கி.பி. 200 ??
இளம் பெருவழுதி கி.மு 200 - கி.பி. 200 ??
பூதப் பாண்டியன் கி.மு 200 - கி.பி. 200 ??
ஆரியப் படைகடந்த நெடுஞ்செழியன் கி.பி. 100 - கி.பி. 300 ??
நன்மாறன் கி.பி. 100 - கி.பி. 300 ??
தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன் கி.பி. 100 - கி.பி. 300 ??
உக்கிரப் பெருவழுதி கி.பி. 100 - கி.பி. 300 ??
பொற்கைப் பாண்டியன் கி.பி. 100 - கி.பி. 300 ??
பாண்டியன் அறிவுடை நம்பி கி.பி. 100 - கி.பி. 300 ??
பாண்டியன் கீரஞ்சாத்தன் கி.பி. 100 - கி.பி. 300 ??
பாண்டியன் மதிவாணன் கி.பி. 100 - கி.பி. 300 ??
பன்னாடு தந்த பாண்டியன் கி.பி. 400 முன்னர் ??
நல்வழுதி கி.பி. 400 முன்னர் ??
இலவந்திகைப் பள்ளித் துஞ்சிய நன்மாறன் கி.பி. 400 முன்னர் ??
குறுவழுதி கி.பி. 400 முன்னர் ??
நல்வெள்ளியம்பலத்துத் துஞ்சிய பெருவழுதி கி.பி. 400 முன்னர் ??
இடைக்காலப் பாண்டியர்கள்
பாண்டியன் கடுங்கோன் கி.பி. 575 - கி.பி. 600
மாறவர்மன் அவனிசூளாமணி கி.பி. 600 - கி.பி. 625
சடையவர்மன் செழியன்வேந்தன் கி.பி. 625 - கி.பி. 640
கோச்சடையன் ரணதீரன் கி.பி. 640 - கி.பி. 670
மாறவர்மன் அரிகேசரி பராங்குசன் - இராச சிம்மன்-1 கி.பி. 670 - கி.பி. 710
நெடுஞ்செழியன் பராந்தகன் - இராச சிம்மன் - 2 கி.பி. 710 - கி.பி. 765
வரகுண மகாராசன் கி.பி. 765 - கி.பி. 792
சீமாறன் பரசக்கர கோலாகலன் - சீபல்லவன் கி.பி. 835 - கி.பி. 862
வரகுண பாண்டியன் கி.பி. 862 - கி.பி. 880
பராந்தக பாண்டியன் கி.பி. 880 - கி.பி. 900
இராச சிம்மன் -3 கி.பி. 900 - கி.பி. 920
பராந்தக பாண்டியன் கி.பி. 946 - கி.பி. 966
பிற்காலப் பாண்டியர்கள்
அரிகேசரி சடையவர்மன் பராக்கிரம பாண்டியன் கி.பி. 1422 - கி.பி. 1461
அழகன் பெருமாள் குலசேகரன் கி.பி. 1429 - கி.பி. 1473
சீபல்லவன் கி.பி. 1534 - கி.பி. 1543
முதலாம் அதிர்வீரராம பாண்டியன் கி.பி. 1564 - கி.பி. 1606
வரதுங்கராமன் கி.பி. 1588 - கி.பி. 1609
வரகுணராமன் குலசேகரன் கி.பி. 1615
edit

பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதி என்னும் பாண்டிய மன்னன் கடைச்சங்க காலத்துக்கும் முன் வாழ்ந்தவன் என்பது இலக்கியங்களில் இருந்து உய்த்தறியப் படும் ஒன்று. சங்க காலம் என்பது ஏறத்தாழ கி.மு. 200 முதல் கி.பி. 200 வரையிலான காலம். எனவே இவ்வரசன் கி.மு. 200க்கு முன் வாழ்ந்திருக்க வேண்டும் என எண்ணப்படுகின்றது. இவ்வரசனைப் பற்றி புறநானூற்றில் ஐந்து பாடல்கள் உள்ளன. இவன் அரசர்களுக்குரிய வேள்விகள் பலவற்றைச் செய்ததினால் பல்யாகசாலை என்னும் அடைமொழி பெற்றான். பிற்காலத்துச் செப்பேடுகளும் இவனது பெருமையைக் கூறுகின்றது. வேள்விக் குடி செப்பேடுகள் கூறுகின்ற செய்தி:
கொல்யானை பலவோட்டிக்
கூடா மன்னர் குழாந் தவிர்த்த
பல்யாக முதுகுடுமிப் பெருவழுதி
சின்னமன்னூர்ச் செப்பேடுகளும் பாண்டிய மன்னர்களில் ஒருவன் ஆயிரம் வேள்விகள் செய்ததாகச் சொல்லுகின்றன.

இவ்வரசன் வீரம் செறிந்தவனாக இருந்தான், புலவர்களுக்கும் இரவலர்களுக்கும் இல்லை என்னாது கொடுத்த வள்ளன்மை கொண்டவன், சிவபெருமானிடம் பேரன்பு பூண்டவன் எனத் தெரிகின்றது. சங்க காலத்துப் புலவர்கள் காரிகிழார், பெண்பாற் புலவர் நெட்டிமையார், நெடும்பல்லியத்தனார் முதலியோர் இவ் அரசனைப் பாடியுள்ளார்கள்.

இவ்வரசன் போருக்குப் போகும் முன் முதலில் போரில் பங்கு கொள்ளாதவர்களை விலகச் செய்த பின் தான் அறப்போர் செய்யத் துவங்குவான் என்பது இவன் புகழ். நெட்டிமையார் பாடலில் பாடலில் கீழ்க்காணுமாறு கூறுகின்றார்:
ஆவும், ஆனியற் பார்ப்பன மாக்களும்,
பெணிட்ரும், பிணியுடை யீரும் பேணித்
தென்புலம் வாழ்நர்க்கு அருங்க்டன் இறுக்கும்
பொன்போற் புதல்வர்ப் பெறாஅ தீரும்
எம்அம்பு கடிவிடுதும், நும் அரண சேர்மின் என


அறத்துஆறு நுவலும் பூட்கை, மறத்தின்
கொல்களிற்று மீமிசைக் கொடிவிசும்பு நிழற்றும் எங்கோ, வாழிய குடுமி! தங்கோச்
செந்நீர்ப் பசும்பொன் வயிரியர்க்கு ஈத்த,
முந்நீர் விழவின், நெடியோன்
நன்னீர்ப் பஃறுளி மணலினும் பலவே