அழகரார்யான்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
ஸ்ரீ அழகரார்யர் எட்டு மொழிகளில் புலமை பெற்றவராய் உபந்யாஸம் செய்யும் வல்லமை உடையவராய்த் திகழ்ந்தார். புரோஹிதம், ஜோதிடம், ஸங்கீதம் ஆகியவற்றிலும் தேர்ச்சி பெற்றிருந்தார். வரகவி ஸ்ரீ வேங்கடஸூரி ஸ்வாமிகளின் பிரதம சீடராக இருந்தார்.
ஸ்ரீ அழகரார்யர் 'ஆஸவ்ச நிர்ணயம்' மற்றும் 'விஷ்ணு புராணம்' என்ற இரு நூல்களை இயற்றி வெளியிட்டார். மேலும் இவர், ஸவ்ராஷ்ட்ர வியாகரணம், ந்ருஸிம்ஹ ஸதகம், ஸ்ருங்கார வர்ண கீதங்கள், லாவணிகள், பஜனோற்சவ கீர்த்தனைகள் ஆகியவற்றையும் இயற்றினார். இவர் இயற்றிய 'பஞ்சல் சரித்ரு' என்கிற ஸவ்ராஷ்ட்ர மொழி நவ்கா காவியம் இவரது புலமையைப் பறைசாற்றும் ஒப்புயர்வற்ற நூலாகும்.