கிராம புத்துணர்வு இயக்கம்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
கிராம புத்துணர்வு இயக்கம் இந்தியாவின் தமிழ்நாட்டில் கிராமங்களில் உணவு உற்பத்தி, மருத்துவம், கல்வி, விளையாட்டு போன்ற துரைகளை மேம்படுத்தி பூரணமான ஆரோக்கியமான கிராமிய வாழ்வை ஏற்படுத்துவதை நோக்கமாக கொண்ட திட்டமாகும். இசா அறக்கட்டளையினாரல் முன்மொழிந்து ஆகஸ்ட் 2003 முதல் நடத்தப்படும் இத்திட்டமானது தமிழ் நாட்டின் 54,000 [ஆதாரம் தேவை] கிராமங்களை இலக்காக கொண்டுள்ளது. இத்திட்டம் இசா அறக்கட்டளையின் நிறுவனர் ஜகி வாசுதேவ் அவர்களின் கருத்துப்படி ஆரம்பிக்கப்பட்டதாகும்.[1] பல்லாயிரக்கணக்கான [ஆதாரம் தேவை] தன்னார்வ தொண்டர்களும், நன்கொடையாளர்களும், அவர்களுடைய பிரதிநிதிகளும் அந்தந்தப் பகுதியைச் சேர்ந்த கிராமத்தினர் உதவியுடன் இத்திட்டங்களை நடைமுறைப்படுத்துவதில் ஈடுபடுகிறார்கள்.
பொருளடக்கம் |
[தொகு] செயல்திட்டங்கள்
- கிராமப்புற நலவாழ்வு – இலவச நடமாடும் மருத்துவமனைகள்
- யோக சாலைகளும் உடற்பயிற்சிக் கூடமும்
- மூலிகைத் தோட்டம், கிராமங்களில் தோட்டப்பண்ணை
- ஆக்கப்பூர்வமான பொழுதுபோக்கு அம்சங்கள்
- சுகாதாரம் சுற்றுச்சூழல் குறித்த விழிப்புணர்வு
- பெண்களுக்கு தொழிற் பயிற்சி
- கணனி பயிற்சி மையங்கள்
- கிராம நூலகம்
[தொகு] செயற்பாடுகளும் வெற்றிகளும்
இத்திட்டத்தின் அங்கமான இலவச நடமாடும் மருத்துவமனைகள் உரிய நேரத்தில், இலவசமாக மருத்துவ வசதி செய்து தருவதோடு, அது குறித்த விழிப்புணர்வையும், வழிபாட்டுதலையும் ஏற்படுத்துகிறது. உள்நாட்டு வைத்திய மற்றும் பாரம்பரிய சிகிச்சை முறைகள் மீண்டும் அறிமுகப்படுத்தும் வகையில், மூலிகைத் தோட்டங்களை அமைப்பது குறித்தும், அதன் பயன்பாடு குறித்தும் அறிவுறுத்தப்படுகின்றன. தற்போது கோபி, கோவை, சேலம், ஈரோடு மற்றும் கடலூர் மாவட்டங்களில் சுமார் 720 [ஆதாரம் தேவை] கிராமங்களில் ஆயர்வேதம், சித்த மருத்துவம் மற்றும் அலோபதி மருத்துவங்களில் தேர்ச்சிபெற்ற மருத்துவர்கள், இலவச நடமாடும் மருத்துவமனைகள் மூலமாக கிராமங்களில் அடிப்படை ஆரோக்கிய வழிமுறைகளையும், இலவச மருத்துவ சேவைகளையும், இலவச மருந்துகளையும் தினமும் ஏறத்தாழ 2,400 நபர்களுக்கு வழங்கி வருகின்றனர்.[ஆதாரம் தேவை] மேலும் இலவச யோகப்பயிற்சி மூலம் சுமார் 80,000 [ஆதாரம் தேவை] கிராமப்புற மக்கள் இதுவரை பயனடைந்துள்ளார்கள்.
குழந்தைகளுக்கான இலவச யோகப்பயிற்சிகளும் இலவச கம்ப்யூட்டர் பயிற்சிகளும் நடத்தப்பட்டு வருகிறது. இதுவரை 120 [ஆதாரம் தேவை] கிராமங்களில் 3,600 [ஆதாரம் தேவை] குழந்தைகளுக்கு கற்றுக் கொடுக்கப்பட்டுள்ளது.350க்கும் மேலான கிராமங்களில் ஆண்களுக்கு வலைப்பந்து , பொண்களுக்கு துரோபால் போன்ற விளையாட்டு பயிற்சிகள் அளிக்கப்படுகின்றது. வருடத்திற்கு ஒரு முறை கிராம மக்களுக்கான கிராம ஒலிம்பிக் போட்டிகளும் நடத்தப்படுகின்றது. மேலும் விவசாயிகளுக்கான விவசாய கருத்தரங்குகள், விழிப்புணர்வு முகாம்கள் மற்றும் விவசாய கண்காட்சிகள் நடத்தப்படுகின்றன. இதுவரை 25,000 [ஆதாரம் தேவை] க்கும் மேற்பட்ட விவசாய பெருமக்கள் இதில் கலந்துகொண்டு பயனடைந்தள்ளனர். நாட்டை பசுமையாக்கும் நோக்குடன் ஒவ்வோரு கிராமத்திலும் சுமார் 100 முதல் 300 [ஆதாரம் தேவை] வரை மரக்கன்றுகள் நடப்படுகின்றன. இதுவரை ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் நடப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகின்றன.[ஆதாரம் தேவை]
[தொகு] குறிப்புகள்
- ↑ கிராம புத்துணர்வு இயக்க தளம். இணைப்பு 2006-11-24 அன்று அணுகப்பட்டது.