சியோல்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
சியோல் தென்கொரிய நாட்டின் தலைநகராகும்.உலகின் மக்கள் தொகை அதிகமுள்ள நகரங்களில் இதுவும் ஒன்று. சியோல் தென்கொரிய நாட்டின் வடமேற்குப்பகுதியில், தென்கொரிய-வடகொரிய எல்லைக்கருகே ஹான் நதியின் கரையில் அமைந்துள்ளது.
சியோல் என்ற பெயர் கொரிய மொழியில் தலைநகரம் என்று பொருள் தரும் சியோராபியோல் அல்லது சியோபியோல் என்ற வார்த்தையில் இருந்து மருவியதாகக் கூறப்படுகிறது.