அன்னப் பறவை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.

தென்னிந்திய அலங்காரங்களில் அன்னப் பட்சி
தென்னிந்திய அலங்காரங்களில் அன்னப் பட்சி

அன்னப் பட்சி என்பது இந்தியப் பழங்கதைகளில் வருகின்ற ஒரு கற்பனைப் பறவையாகும். அபூர்வமான இயல்புகள் பல இதன் மீது ஏற்றிச் சொல்லப்பட்டுள்ளன. பாலில் கலந்துள்ள நீரை விடுத்துப் பாலை மட்டும் குடிக்கின்ற சக்தி இதற்கு இருப்பதாகக் கூறப்படுவது இவற்றுள் ஒன்று. இது ஒரு மங்களகரமான குறியீடாகக் கொள்ளப்படுவதன் காரணமாக மரபுவழி அலங்காரங்களிலும், சிற்பம், ஓவியம் முதலிய கலைகளிலும் அன்னப் பட்சிக்கு முக்கிய இடம் உண்டு. இந்துக்களுக்கு மட்டுமன்றி பௌத்தர்களுக்கும் அன்னப்பட்சி மங்களமான ஒன்றாகும். இதனால் பௌத்த வழிபாட்டுத்தலங்களில் காணப்படும் அலங்காரங்களில் அன்னப் பட்சியின் உருவம் பரவலாகப் பயன்படுத்தப்பட்டுள்ளதைக் காணலாம்.

[தொகு] வெளியிணைப்புகள்

யாழ்ப்பாண வீடுகளில் நுழைவாயில் அலங்காரங்கள் (ஆங்கிலம்)