பேச்சு:சிலப்பதிகாரம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.

[தொகு] கட்டுரையை மேம்படுத்துவதற்கான சில கருத்துக்கள்

சிலப்பதிகாரம், அது எழுதப்பட்ட காலத்தில் இப்பகுதியில் போற்றப்பட்ட பல விழுமியங்கள், வழக்கங்கள் முதலியவற்றை நமக்குத் தருகிறது. எடுத்துக்காட்டாக, கோவலனின் முடிவு அவன் மாதவியுடன் வாழச் சென்றதால் இருக்கலாம். அதாவது, நடைமுறையில் பின்பற்றப்பட்டதோ இல்லையோ, கற்பொழுக்கம் என்பது அந்த காலகட்டத்தில் குறைந்தது ஒரு idealistic விழுமியமாக இருந்திருக்கும். அதனால், இளங்கோ கோவலனுக்கு அம்மாதிரியான முடிவைத் தந்திருக்கலாம். மேலும், மன்னனுக்கான விழுமியமான நீதி தவறாமையைப் பற்றி நாம் பாண்டிய மன்னனின் முடிவின் மூலம் அறிகிறோம். இதுபற்றி எவரிடமாவது ஒரு ஆய்வுப் புத்தகம் இருந்தால் அதிலிருந்து தகவல்களைப் பெற்று இங்கே தரலாம்.

மேலும், கதையின் பண்பாட்டுப் பின்புலம், ஆசிரியரின் வாழ்க்கைப் பின்புலம், தற்குறிப்பேற்ற அணி போன்ற அணிகளைக் கையாண்ட விதம், நடை போன்றவற்றைப் பற்றியும் எழுதினால் ஒரு நல்ல கட்டுரை உருவாகலாம். இலக்கியப் படைப்பைப் பற்றிய நல்ல எடுத்துக்காட்டுக் கட்டுரைகள் பின்வருவன.

-- Sundar \பேச்சு 04:59, 7 டிசம்பர் 2005 (UTC)