லட்சுமிகாந்தன் கொலை வழக்கு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.

பொருளடக்கம்

[தொகு] லட்சுமிகாந்தன்

லட்சுமிகாந்தன் என்பவர் 1940ல், பத்திரிக்கையாளர். அவர் சென்னையில் சினிமாதூது என்ற பத்திரிக்கையை ஆரம்பித்தார். அக்காலத்தில் இரண்டாம் உலகப் போரினால் காகித பற்றாக்குறையினால் புது பத்திரிக்கைகளை ஆரம்பிக்க அரசாங்கம் அனுமதிக்கவில்லை. சினிமாதூது சினிமாவின் பெரும்புள்ளிகளை பற்றி தாறுமாறாக எழுதியதால், சிலர் அரசாங்கத்தின் கவனத்திற்க்கு அனுமதியில்லாமல் சினிமாதூது வந்ததை கொண்டுவந்து, அதை மூடும் படு செய்தனர். அடுத்தது லட்சுமிகாந்தன், இந்துநேசன் எனும் ஏற்கனெவே சென்றிருந்த பத்திரிக்கையை வாங்கி, அதில் சினிமா புள்ளிகளின் கெட்ட நடத்தையை அநாமதேய செய்திகளாக பதித்தார். அதிலும் முக்கியமாக ஆண், பெண் நட்சத்திரங்களின் காம சல்லாபங்களையும், ஜல்சாக்களையும், கோணங்கித்தனங்களையும் பச்சையாக எழுத ஆரம்பித்தார். பிறகு சமுதாயத்தின் எல்லா கலைகளிலிருந்த பெரும் புள்ளிகள் , அவர் 'செய்தி'களுக்கு இலக்கானார்கள். இப்பொழுது இருக்கும் தனி நபர்களின் அவதூறு பரப்புவதில் கவனம் செலுத்தும் மஞ்சள் ஏடுகளின் முன்னோடி. அதனால் அவர் பல எதிரிகளை சம்பாதித்தார்

[தொகு] கொலைச் சம்பவம்

8-11-1944 அன்று, சென்னை புரசவாக்கத்தில் ரிக்சாவில் போகும்போது, சிலர் அவரை கத்தியால் குத்தினர்; அவர் நேரே சென்னை பொது மருத்துவ மனையில் சேர்க்கப் பட்டார். போலீஸ் அவரிடம் கேள்வி கேட்டு, சந்தேகமானர் பற்றி பேசினர். 9-11-1944 அன்று, திடீலென்று அவர் உடல்நிலை சரிந்து மாண்டார். டிசம்பர் 44ல், போலீஸ் 8 பேரை கைது செய்து, கொலை வழக்கு தொடர்ந்தது. இந்த எட்டில் அந்த நாட்களின் சூப்பர் ஸ்டாராக இருந்த தியாகர¡ஜ பாகவதரும்,என்.எஸ்.கிருஷ்ணனும், திரைப்படத் தயாரிப்பாளராÉ ‚ஸ்ரீராமுலும் அடங்குவர். அவர் 8 பேரும் 'கொலை சதி' செய்ததாக குற்றம் சாட்டப் பட்டனர்.

[தொகு] வழக்கின் போக்கு

ஏப்ரல் 1945ல் சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு ஆரம்பித்தது. அன்று இந்தியாவின் பிரபலமான குற்றத் துறை வழக்கறிஞர்கள் குற்றம் சாட்டப் பட்ட 8 பேருக்கும் வாதிட்டனர். ஸ்ரீராமுலுன் மேல் ஆதாரம் வன்மையில்லாத்தால் அவர் விடுவிக்கப் பட்டார். மே 45ல், பாகவதர், கிருஷ்ணன் உள்பட ஆறுபேர் 'கொலை சதி' குற்றம் செய்தவர் என தீர்மானிக்கப் பட்டது. ஜட்ஜ் எல்லொருக்கும் ஆயுள்தண்டனை கொடுத்தார். பிறகு குற்றவாளிகள், மேல் நீதி மன்றத்திற்க்கு சென்றனர்; ஆனால் அவர்கள் வாதத்தை மேல்நீதிமன்றம் ஏற்க்கவில்லை.

1946ல், பாகவதரும், கிருஷ்னனும் தங்கள் வழக்கை லண்டனிலுள்ள ப்ரிவி கௌன்ஸிலுக்கு எடுத்துச் சென்றனர். அப்போது, பாகவதர் நடித்த ஹரிதாஸ் 100 வாரங்கள் மேல் தியேட்டர்களில் ஓடி, ஒரு புது சாதனையை செய்தது. ஏப்ரல் 1947ல் ப்ரிவி கௌன்ஸில் சென்னை உயர்நீதி மன்றம் நீதி தீர்ப்பை மறுபரிசீலனை செய்ய வேண்டுமென்று உத்தரவிட்டது. சென்னை உயர்நீதி மன்றம் வழக்கை மறு பரிசீலனை செய்து, பாகவதரையும், கிருஷ்ணனையும் ஏப்ரல் 47ல், விடுதலை செய்தது.

[தொகு] பின்பு

முப்பது மாதம் சிறை வாசத்திற்க்கு பின், தன் விசிறிக் கூட்டங்கள் நடுவே விடுவிக்கப் பட்ட பாகவதர் நேரே வடபழனி முருகன் கொவிலில் சென்று கும்பிட்டு, சொந்த ஊர் சென்றார். அவரும், கலைவாணரும் 1950லும் படம் எடுத்தனர்; ஆனால் அவர்கள் புகழ் முன்பிருந்த சிகரங்களை எட்ட வில்லை.

[தொகு] வெளி இணைப்புகள்