குறிப்பு வினைமுற்று

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.

குறிப்பு வினைமுற்று என்பது செய்பவனாகிய கருத்தாவை மட்டும் விளக்கும் வினைமுற்று ஆகும். காலத்தை வெளிப்படையாக உணர்த்தாது, குறிப்பினால் மட்டும் உணர்த்துவதால், இது குறிப்பு வினைமுற்று என பெயர் பெற்றது.


எ.கா:அவன் பொன்னன்.


இத்தொடரில் பொன்னன் என்பது பொன்னையுடையன் என்று பொருள் தரும். இதில், பொன் என்னும் பொருளின் அடிபடையில் தோன்றி அதனை பெற்றிருக்கும் கருத்தவை மட்டும் உணர்த்துகின்றது. இச்சொல் காலத்தை உணர்த்தவில்லை. பொருளாதி ஆறின் அடிப்படையில் தொன்றும் மற்ற குறிப்பு வினைமுற்றுகளின் எ.கா

பொன்னன் - பொருள்
ஆரூரன் - இடம்
ஆதிரையான் - காலம்
கண்ணன் - சினை
க்ரியன் - குணம்
நடையன் - தொழில்


இவ்வாறு பொருள், இடம், காலம், சினை, குணம், தொழில் என்னும் ஆறின் அடிப்படையில் தோன்றி, செய்பவன், கருவி, நிலம், செயல், காலம், செய்பொருள் என்னும் ஆறினுள் செய்பவனாகிய கருத்தாவை மட்டும் விளக்குவது குறிப்பு வினைமுற்று ஆகும்.

[தொகு] இவற்றையும் பார்க்கவும்