சுபபந்துவராளி
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
சுபபந்துவராளி இராகம் 45 வது மேளகர்த்தா இராகமாகும். "வசு" எனப்படும் 8 வது சக்கரத்தில் 3 வது மேளம். தேனுகா இராகத்தின் நேர் பிரதி மத்திம இராகம் ஆகும்.
- இந்த இராகத்தில் ஷட்ஜம், சுத்த ரிஷபம், சாதாரண காந்தாரம், பிரதி மத்திமம், பஞ்சமம், சுத்த தைவதம், காகலி நிஷாதம் ஆகிய சுரங்கள் வருகிறன.
[தொகு] இதர அம்சங்கள்
- இது சிவ பந்துவராளி என்றும் அழைக்கப்பட்டது.
- காந்தாரத்தை அசைக்கமல் பாட வேன்டும்.
- கருணை சுவையை வெளிப்படுத்தும் இராகம். எப்பொழுதும் பாடலாம்.
- தைவதத்தை ஷட்ஜமாகக் கொண்டால் சலநாட்டை (36) என்ற மேளம் ஒலிக்கும்.
- இந்துஸ்தானி இசையில் "தோடி தாட்" என்று பெயர்.
[தொகு] உருப்படிகள்
- கிருதி : கலந்து கொள்வேன் : மிஸ்ர சாபு : முத்துத் தாண்டவர்.
- கிருதி : வேலனே வேறே : மிஸ்ர சாபு : கோடீஸ்வர ஐயர்.
- கிருதி : சிந்தைக் கனவில் : ஆதி : சுத்தானந்த பாரதியார்.
- கிருதி : எந்நாளூஊரக : மிஸ்ர சாபு :தியாகராஜர்.
- கிருதி : சிறி சத்ய : திஸ்ர ஏகம் :பெரியசாமித்தூரன்.