பூமணி
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
பூமணி (பிறப்பு - 1947, இயற்பெயர் - P.மாணிக்கவாசகம்.), ஒரு தமிழ் எழுத்தாளர் ஆவார். இவருடைய சொந்த ஊர் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஆண்டிபட்டி. கரிசல் வட்டாரத்து வாழ்க்கையின் நுட்பங்களைத் தனது எழுத்தில் வெளிப்படுத்திய சிறந்த எழுத்தாளர். பூமணி, கூட்டுறவுத் துறையின் உயர் அலுவலராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர்.
பொருளடக்கம் |
[தொகு] ஆக்கங்கள்
[தொகு] சிறுகதைத் தொகுப்பு
- வயிறுகள்.
- ரீதி.
- நொறுங்கல்கள்.
[தொகு] நாவல்
- வெக்கை.
- நைவேத்தியம்.
- வரப்புகள்.
- வாய்க்கால்.
[தொகு] திரைப்படம்
- கருவேலம்பூக்கள்.
[தொகு] சிறப்புகள்
- இலக்கியச் சிந்தனை பரிசு, அக்னி விருது, திருவனந்தபுரம் தமிழ்ச் சங்க விருது உள்ளிட்ட பல முக்கிய விருதுகளைப் பெற்றவர்.
- தேசிய திரைப்பட வளர்ச்சி நிறுவனத்துக்காக இவர் இயக்கிய கருவேலம்பூக்கள் திரைப்படம் பல முக்கிய உலகத் திரைப்பட விழாக்களில் பங்கு பெற்றது.
- வெக்கை நாவல் இந்தியில் மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளது.
[தொகு] வெளி இணைப்புகள்
- கருவேலம்பூக்கள் திரைப்பட விமர்சனம். (ஆங்கிலம்)
- பூமணியின் கட்டுரைத் தொகுப்பில் கூறப்பட்டுள்ள தன் தாய் தேனம்மாவினை பற்றி அம்பையின் http://www.hinduonnet.com/thehindu/lr/2003/01/05/stories/2003010500280400.htm கருத்துக்கள்]. (ஆங்கிலம்)[