கே. பி. ஹரன்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
கே. பி. ஹரன் (அக்டோபர் 17,1906 - அக்டோபர் 14, 1981) தமிழ்நாட்டிலும் இலங்கையிலும் தலைசிறந்த பத்திரிகையாளராக இருந்தவர்.
[தொகு] வாழ்க்கைக் குறிப்பு
கிருஷ்ணசுவாமி பிராணதார்த்தி ஹரன் எனப்படும் கே. பி. ஹரன் தமிழ்நாடு தஞ்சை மாவட்டம் திருவையாறு என்னும் ஊரில் பிறந்தார். தனது 23வது வயது முதல் தமிழ்ப்பத்திரிகை உலகில் பல பத்திரிகைகளில் பணியாற்றிய இவர் பத்திரிகைத் துறையில் 50 வருட அனுபவங்களைப் பெற்றவர்.
ஊர்க்குருவி, ஐயாறன், கே.பி.எச் என்னும் புனைபெயர்களில் பல கட்டுரைகளை எழுதினார். ஈழத்தில் இவரது ஆன்மீகச் சொற்பொழிவுகள் பெயர்பெற்றவை.
இறுதிக் காலத்தை சென்னை மயிலாப்பூரில் கழித்த இவர் தனது 75 ஆவது வயதில் காலமானார்.
[தொகு] பணியாற்றிய பத்திரிகைகள்
- தமிழ்நாடு
- ஸ்வராஜ்யா
- தாருல் இஸ்லாம்
- ஹனுமான்
- ஹிந்துஸ்தான்
- வீரகேசரி (பிரதம ஆசிரியர், 1939-1959)
- ஈழநாடு (பிரதம ஆசிரியர் 1959-1979)