ஜோன் ஹன்ஸ்ஸன் பௌயர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.

 ஜோன் ஹன்ஸ்ஸன்
ஜோன் ஹன்ஸ்ஸன்

இலங்கை அரசு மற்றும் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பினர் ஆகியோருக்கிடையேயான சமாதான முன்னெடுப்பில் இதுவரைகாலமும் நோர்வேயின் விசேடதூதுவராக 2002ம் ஆண்டிலிருந்து செயற்பட்டுவந்த எரிக் சொல்ஹெய்மின் இடத்திற்கு தற்போது அவருக்குப் பதிலாக நோர்வே அரசால் புதிதாக நியமிக்கப்பட்டவரே ஜோன் ஹன்ஸ்ஸன் பௌயர் (வயது 53) (John hansen bauer) ஆவார். நோர்வேயை சேர்ந்த இவர் சமூக மானிடவியல் (social anthropology) துறையில் கல்விமான் ஆவார். நோர்வே நாட்டின் சமாதான மற்றும் ஒருமைப்பாட்டிற்கான அமைச்சகத்திலும் மற்றும் நோர்வே வெளிவிவகார அமைச்சின் சமாதான ஆலோசகராகவும் பணியாற்றுகிறார். ஏற்கனவே இவர் 1993 இடம்பெற்ற இஸ்ரேல்- பலஸ்தீன சமாதான முன்னெடுப்புகளில் பங்குபற்றியுள்ளார். இவரின் நியமனம் குறித்து 17 மார்ச் 2006 ல் நோர்வே அரசால் அறிவிக்கப்பட்டுள்ளது.

[தொகு] வெளி இணைப்பு