பேச்சு:ஔவையார்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.

சங்ககாலத்து ஔவையார் வேறு ஆத்திச்சூடி பாடிய ஔவையார் வேறு. மொத்தம் 3 ஔவையார்கள் இருந்திருக்கிறார்கள். ஆத்திச்சுடி ஔவையார் பிற்காலத்தவர். ஔவையா-1 (கி.பி. 250க்கு முன்னர் வாழ்ந்தவர்), ஔவையார்-2 12-14 ஆம் நூறாண்டுகளில் வாழ்ந்திருக்க வேண்டும். ஔவையார்-3 16 ஆம் நூறாண்டு வாக்கில் வாழ்ந்திருக்க வேண்டும். இப்படியே திருவள்ளுவர் பெயரிலும் மிகப் பிற்காலத்தில் ஓரிருவர் வாழ்ந்துள்ளன்ர், அவற்றுள் சித்தர் என்று கூறும் ஒருவரும் உள்ளனர் (இவர் திருக்குறள் இயற்றிய திருவள்ளுவர் அல்ல).--C.R.Selvakumar 17:16, 12 ஜூலை 2006 (UTC)செல்வா

ஒன்றுக்கு மேற்பட்ட ஔவையார் குறித்த தகவல் சுவையானதாகவும் புதிதாகவும் உள்ளது. இதைக் கட்டுரைப் பகுதியில் (இயன்றால ஆதாரங்களுடன்) குறிப்பிட்டால், உங்களுக்குத் தெரியுமா ? பகுதியில் சேர்க்கலாம் --ரவி 12:32, 13 ஜூலை 2006 (UTC)
ஔவையார் என்ற பெயரில் பல கவிஞர்கள் இருந்துள்ளனர் என்று கேள்விப்பட்டுள்ளேன். இதற்குத் தகுந்த ஆதாரங்கள் கிடைத்தால் கண்டிப்பாக சேர்த்து உங்களுக்குத் தெரியுமா? பகுதியில் குறிப்பிடலாம். -- Sundar \பேச்சு 12:40, 13 ஜூலை 2006 (UTC)

ரவி, சுந்தர், அதியமான் காலத்து (சங்க காலத்து) ஔவையாருடைய மொழிநடை, பொருள் எல்லாம் ஆத்திச்சூடி ஔவையாரில் இருந்து மிக மாறுபட்டது. தற்பொழுது என்னிடம் ஏதும் அராய்ச்சிக் கட்டுரைகள் இல்லை. எழுத்தாளர் தொ.மு.சி. ரகுநாதன் எங்கோ எழுதியதாக நினைவு. இவரோ வேறு யாரோ, பிற்கால ஔவையார் ஒரு ஆண் என்றும் ஔவையார் என்பது புனைப்பெயர் என்றும் எழுதியுள்ளனர். ஆனால் மொழிநடையை வைத்து யாரும் மிக எளிதாக அதியமான் காலத்து ஔவையாரையும் பிற்கால ஔவயாரையும் அடையாளம் காணலாம். விநாயகர் அகவல் பாடிய ஔவயார் வேறானவர். மேலும் ஏதும் தெரிந்தால் எழுதிகிறேன். --C.R.Selvakumar 02:39, 14 ஜூலை 2006 (UTC)செல்வா