காவலூர் ராசதுரை
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
காவலூர் ராசதுரை இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தில் நீண்ட காலம் பணியாற்றியவர். சிறுகதை, நாவல், நாடகம், விமரிசனம், மதிப்பாய்வு, திரைப்படம் முதலான துறைகளில் ஈடுபாடுள்ளவர்.
குழந்தை ஒரு தெய்வம் (1961), வீடு யாருக்கு? (1972), ஒரு வகை உறவு (1976) என்பன நூலுருவில் வெளியாகின. தவிர விளம்பரக்கலையில் மிகுந்த பரிச்சயம் மிக்க காவலூர் ராசதுரையின் விளம்பரக்கலை தொடர்பான நூலும் வெளிவந்துள்ளது. பொன்மணி திரைப்படத் தயாரிப்பில் இவரது பங்கு கனதியானதாகும்.
புலம் பெயர்ந்து தற்போது சிட்னியில் வாழ்ந்து வருகிறார். இவரது புதல்வர் நவீனன் ராசதுரையும் சிறுகதைகள், கட்டுரைகள் எழுதி வருகிறார்.