எம். எஸ். சுப்புலட்சுமி
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
எம். எஸ். சுப்புலட்சுமி | |
---|---|
புகழ் பூத்த கருநாடக இசைப்பாடகி
|
|
பிறப்பு | செப்டம்பர் 16, 1916 மதுரை,தமிழ் நாடு,இந்தியா |
இறப்பு | டிசம்பர் 11, 2004 சென்னை,தமிழ் நாடு,இந்தியா |
பணி | கர்நாடக இசைப்பாடகி |
துணை | கல்கி சதாசிவம் |
எம். எஸ். சுப்புலட்சுமி என்று பரவலாக அறியப்படும் மதுரை சண்முகவடிவு சுப்புலட்சுமி (செப்டம்பர் 16, 1916 - டிசம்பர் 11, 2004) ஒரு புகழ்பெற்ற கருநாடக இசைப் பாடகியாவார். 1998 ஆம் ஆண்டு இந்தியாவின்் மிக உயர்ந்த விருதான பாரத ரத்னா விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார்.
[தொகு] வாழ்க்கை
சுப்புலட்சுமி அவர்கள் தமிழ்நாட்டின் மதுரையில் ஒரு இசைக்குடும்பத்தில் பிறந்தார். மிக இளம் வயதிலேயே இசை கற்றுக்கொள்ளத் துவங்கிய இவர் தனது பத்தாவது வயதில் முதல் இசைப்பதிப்பை வெளியிட்டார்.
செம்மங்குடி சீனிவாச ஐயர் அவர்களிடம் கருநாடக இசைப்பயிற்சியும் பண்டிதர் நாராயண ராவ் வியாஸ் அவர்களிடம் இந்துஸ்தானி இசைப்பயிற்சியும் பெற்றார். தனது 17-வது வயதில் தன் முதல் அரங்கேற்றததை நிகழ்த்தினார். தமிழ், கன்னடம், மலையாளம், தெலுங்கு, வங்காள மொழி, இந்தி, சமஸ்கிருதம், குஜராத்தி ஆகிய பல மொழிகளில் இவர் பாடியுள்ளார்.
சுப்புலட்சுமி திரைப்படங்களிலும் நடித்துள்ளார். 1945-ல் இவர் நடித்து பக்த மீரா படம் மிகவும் புகழ்பெற்றது. விடுதலைப்போராட்ட வீரரான கல்கி சதாசிவம் அவர்களை 1940 ஆண்டு சுப்புலட்சுமி அவர்கள் மணந்தார். இவர்களுக்கு குழந்தைகள் இல்லை.
இவர் உலகின் பல நாடுகளுக்கும் பண்பாட்டுத்தூதுவராகச் சென்று பல நிகழ்ச்சிகள் நடத்தியுள்ளார். மேலும் ஐக்கிய நாடுகள் சபையிலும் இவர் தன் அரங்கேற்றத்தை நிகழ்த்தியுள்ளார்.
1997-ல் அவரது கணவரின் இறப்புக்குப் பிறகு பொதுநிகழ்ச்சிகளில் இவர் கலந்துகொள்ளவில்லை. இவர் டிசம்பர் 11, 2004-இல் இயற்கை எய்தினார்.
[தொகு] விருதுகள்
பல்வேறு அமைப்புகள் இவருக்கு பல விருதுகளை வழங்கி பெருமைப்படுத்தியுள்ளன. அவையாவன:
- பத்ம பூசண் - 1954
- சங்கீத கலாநிதி - 1968
- ராமன் மகசேசே விருது - 1974
- பத்ம விபூசண் - 1975
- காளிதாச சன்மான் - 1988
- நாட்டு ஒருமைப்பாட்டிற்கான இந்திரா காந்தி விருது - 1990
- பாரத ரத்னா - 1998