கௌரிமனோகரி
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
கௌரிமனோகரி இராகம் 23வது மேளகர்த்தா. "வேத" என்றழைக்கப்படும் 4 வது சக்கரத்தின் 5 வது மேளம்.
- ஆரோகணம் : ஸ ரி க ம ப த நி ஸ்
- அவரோகணம் : ஸ் நி த ப ம க ரி ஸ
- இந்த இராகத்தில் ஷட்ஜம், சதுஸ்ருதி ரிஷபம், சாதாரண காந்தாரம், சுத்த மத்திமம், பஞ்சமம், சதுஸ்ருதி தைவதம், காகலி நிஷாதம் ஆகிய சுரங்கள் வருகிறன.
[தொகு] சிறப்பு அம்சங்கள்
- மூர்ச்சனாகாரக மேளம். இதன் ரி, ம, ப சுரங்கள் கிரக பேதத்தின் வழியக முறையே நாடகப்பிரியா (10), வாஸஸ்பதி (64), சாருகேசி (26) ஆகிய மேளங்களைத் தோற்றுவிக்கிறன.
- பிரத்தியாகத கமகம் இந்த இராகத்திற்கு அழகைக் கொடுகின்றது.
- கருணைச்சுவை நிரம்பியது. எப்பொழுதும் பாடலாம்.
- அசம்பூண மேள பத்ததியில் இந்த இராகத்திற்கு "கௌரீ வேளாவளி" என்ற பெயர் கொடுக்க்ப்பட்டுள்ளது.
- ஐரோப்பிய இசையில் உள்ள Melodic Minor Scale என்ற சுரக்கோர்வையின் ஆரோகணம் கௌரிமனோகரி மேளத்தை ஒத்துள்ளது. (அதன் அவரோகணம் 20 வது மேளமான நடபைரவியை ஒத்துள்ளது.)
[தொகு] உருப்படிகள்
- கிருதி : குருலேக : கண்ட சாபு :தியாகராஜர்.
- கிருதி : கௌரிமனோகரி : ஆதி : பாபநாசம் சிவன்.
- கிருதி : உன் நாமம் உன் பேச்சு : ஆதி : பெரிய சாமித் தூரன்.
- கிருதி : என்று சென்று : ரூபகம் : முத்துத் தாண்டவர்.
- கிருதி : உன்னை அன்றி : ஆதி : இலட்சுமணப்பிள்ளை.