திருநீறு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.

திருநீறு (விபூதி) இந்துக்களால் குறிப்பாக சைவர்களால் மதிக்கப்படும் மதச் சின்னமாகும். இது ஜஸ்வர்யம் என்றும் போற்றப்படும்.

பொருளடக்கம்

[தொகு] விளக்கம்

அழியாத தன்மையுடைய ஒரு பொருள் உண்டென்பதைக் காட்டவே திருநீற்றைச் சின்னமாகக் கொண்டனர் சைவசமயிகள். சைவத்தின் முழுமுதற் கடவுளான சிவனை இது குறிப்பதாக சைவர்கள் நம்புகின்றர். ஞானம் என்னும் நெருப்பில் அனைத்தும் சுட்டெரிக்கப்பட்ட பின் எஞ்சுவது பரிசுத்தமான சிவதத்துவமே என்பதை விபூதி குறிக்கின்றது. உலகில் யார் எத்தகையினராக இருந்தாலும் மரணத்திற்குப்பின் இறுதியில் தீயில் வெந்து ஒருபிடி சாம்பல் ஆக வேண்டும் என்பதைக் குறிக்கின்றது.

[தொகு] அணியும் முறை

வலது கையின் நடு மூன்று விரல்களால் எடுத்து திருநீறைப் பூசிக்கொள்ளல் வேண்டும். எடுக்கும் போது திருச்சிற்றம்பலம் என்றும் பூசும் போது மந்திரமாவது நீறு என்றும் சொல்லிக் கொள்ளுதல் வேண்டும்.

உச்சி, நெற்றி, மார்பு, கொப்பூழ், முழந்தாள் இரண்டு, இரு கோள்கள், முழங்கைகள், மணிக் கட்டுகள், காதுகள், கழுத்து, முதுகுத் தண்டின் அடி என பதினாறு இடங்களில் திருநீறு அணிய வேண்டும்.

[தொகு] பலன்கள்

திருநீறு அணிவதால் வரும் பலன்கள் ஐஸ்வர்யங்களை அளித்தும் பரிசுத்தமாக்கியும் பாவங்களிலிருந்து விலகியும் சர்வ உபத்திரவங்களை அழித்தும் நசித்தும் சௌபாக்கியத்தைக் கொடுத்தும் சம்பத்துக்களை அளித்தும் மோட்சத்தை அளிக்கும்.

[தொகு] வெளியிணைப்புகள்