பிராமி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.

பிராமி என்பது ஒரு பழங்கால எழுத்து முறையாகும். இது பழங்காலத்தில் தெற்காசியா முழுவதும் வழக்கத்தில் இருந்தது. அசோகரின் 3ஆம் நூற்றாண்டு காலத்திய கல்வெட்டுக்கள் பிராமி எழுத்துக்களிலேயே எழுதுப்பட்டுள்ளன. இது வரையிலும் பிராமி எழுத்துக்களின் மிகப்பழைய கல்வெட்டுக்கள் இவையே என்று கருதப்பட்டு வந்தது. ஆனால் அண்மையில் தமிழ் நாட்டிலும் இலங்கையிலும் கி.மு 6ஆம் நூற்றாண்டு காலத்திய கல்வெட்டுக்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. எனவே பிராமி எழுத்து முறை இன்னும் பழமையானவையாக இருக்கலாம் எனக் கருத்தப்படுகிறது[1].


பிராமி எழுத்து முறையிலிருந்தே பெரும்பான்மையான தெற்காசிய, தென்-கிழக்காசிய மொழிகளின் எழுத்து முறை தோன்றின. தற்காலத்து இந்தோ-அரேபிய எண் முறையும், பிராமி எண் முறையிலிருந்தே தோன்றியது.


[தொகு] பிராமி தோற்றம்

 அசோகரின் பிராமி கல்வெட்டு .
அசோகரின் பிராமி கல்வெட்டு .
 அசோகரின் ஸ்துபியின் ஒரு பகுதி.
அசோகரின் ஸ்துபியின் ஒரு பகுதி.

பிராமி எழுத்துமுறையின் தோற்றம் குறித்துப் பலர் பலவிதமான கருத்துக்களைத் தெரிவித்துள்ளனர். அவற்றுள் முக்கியமானவற்றை குறிப்பிடப்பட்டுள்ளன.


சிலர் பிராமி எழுத்துமுறை செமிட்டிக் எழுத்துமுறையான அரமேயத்திலிருந்து (Arameic) உருவாக்கப்பட்டிருக்கலாம் என கருதுகின்றனர், ஏனெனில் அக்காலத்திய வடமேற்கிந்திய கரோஸ்தி எழுத்துக்கள் அரமேயத்திலிருந்தே தோன்றின. மேலும் அரமேய மொழிக்கும் பிராகிருத மொழிகளுக்கும் பொதுவாக உள்ள ஒலிகளின்(Phenomes) அரமேய எழுத்துக்களும், ஆரம்ப பிராமி எழுத்துக்களும் ஓரளவுக்கு ஒரே மாதிரியுள்ளன.அனால் பிராகிருத மொழிகளில் காணப்படும் 'ஹ'கரம் கூடிய மெய்யெழுத்துக்கள் (ख-kha घ-gha झ-jha போன்றவை) அரமேயத்திலில்லை. அரமேயத்திற்கே உரிய ஒலிகளை குறிக்கப் பயன்படுத்தப்பட்ட எழுத்துக்கள் பிராகிருத ஒலிகளைக் குறிக்கப் பயன்படுத்தப்பட்டிருக்கலாம். மேலும் அரமேய எழுத்துக்களில் மாறுபாடு செய்யப்பட்டுச் சில பிராமி எழுத்துக்கள் உருவாக்கப்பட்டிருக்கலாம். உதாரணமாக அரமேய 'ப'வை சற்று சுழித்தால் பிராமி ப்ஹ(फ) எழுத்தைப்போலவே உள்ளது.


 பிராமி கல்வெட்டு
பிராமி கல்வெட்டு


ரைஸ் டேவிட் என்ற பாலி மொழி அறிஞர் பிராமி எழுத்துமுறை மத்திய ஆசிய வணிகர்களால் அறிமுகப்படுத்தப்பட்டிருக்கலாம் என்று கருதுகின்றார். கல்வெட்டுகளில் பொறிப்பதற்காகவே பிராமி எழுத்துமுறை அசோகரால் கண்டுபிடிக்கப்பட்டதாகவும் சிலர் கருதுகின்றனர்.


ஹன்டர் மற்றும் ரேமெண்ட் என்ற ஆங்கிலேய அறிஞர்கள், பிராமி எழுத்துமுறை முற்றிலும் [இந்தியா]]விலிருந்தே தோன்றியது எனவும், அது சிந்து சமவெளி எழுத்துக்களிலிருந்து தோன்றியிருக்கலாம் என்றும் கூறுகின்றனர். மேலும் சிலரும் இக்கருத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.


சில தமிழ் அறிஞர்கள், பிராமி என்பது தமிழர்களது எழுத்து முறையென்றும், அதையே அசோகர் மாற்றம் செய்து பிராகிருதம் எழுதக்கூடிய எழுத்துமுறையாக உருவாக்கினார் எனக் கருதுகின்றனர்[2]. மேலும் அவர்கள் பிராமியை 'தமிழி' என அழைக்க வேண்டும் எனக் கூறுகின்றனர்.

[தொகு] இன்றைய நிலை

பிராமி எழுத்து முறையை உபயோகிக்கக்கூடிய பல கணினி நிரலிகள் உருவாக்கப்பட்டுள்ளன. பிராமி எழுத்துக்களடங்கிய எழுத்துருக்களையும் பலர் உருவாக்கியுள்ளனர். பிராமி எழுத்து முறை யூனிகோடில் சேர்க்கும் கோரிக்கை யூனிகோட் குழுமத்தின் பரிசீலனையில் உள்ளது.

[தொகு] வெளி இணைப்புகள்

"http://ta.wikipedia.org../../../%E0%AE%AA/%E0%AE%BF/%E0%AE%B0/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF.html" இலிருந்து மீள்விக்கப்பட்டது