அடும்பு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.

அடும்பு என்பது ஒருவகையான படரும் கொடி. இது கடற்கரையிலும் வறண்ட மணல் மேட்டிலும் படர்ந்து வளரும்.இதன் அறிவியல் பெயர் ஐப்போமியா பெஸ் கேப்ரே (Ipomomea pes-caprae). சங்க இலக்கியங்களிலே நெய்தல் நிலத்திலே விளைவதை குறித்துள்ளனர் பல பாடல்களில். நற்றிணை என்னும் நூலில் (பாடல் 254ல்) 'குன்றோங்கு வெண்மணல் கொடியடும்பு கொய்தும்' என்று குறிப்பிடப்படுகின்றது. இதன் இலை ஆட்டுக்காலின் குளம்படி போலும் கவைத்து (இரு கிளையாக) உள்ளதைப் பற்றி தமிழ் இலக்கியங்கள் கூறுவதைப்போலவே அறிவியலிலும் Biloba குறிக்கப்பட்டுள்ளது. இக்கொடியின் மலர் செந்நீல நிறத்தில் பெரியதாக இருக்கும். இச்செடி இருவிலை நிலைத்திணை வகையைச் சேர்ந்தது (Dicotyledons). [மலையாளப் பெயர்: அடும்பு வள்ளி, இந்திப்பெயர்: டோப்படிலேடா]

[தொகு] உசாத்துணைகள்

  • பி. எல். சாமி, 'சங்க இலக்கியத்தில் செடி கொடி விளக்கம்' , திருநெல்வேலி சைவ சித்தாந்தக் கழகம், 1967, பக். 1-184.
  • மா. ந. புஷ்பா, , குறிஞ்சிப்பாட்டுத் தாவரங்கள் தொகுப்பேடு , அரசுத் தொல்லியல், அருங்காட்சியகத் துறையின் ஆணையர், சென்னை 6000 008, ஆண்டு 2002, பக். 1-84