தொ. மு. சி. ரகுநாதன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.

தொ. மு. சிதம்பர ரகுநாதன், (அக்டோபர் 20, 1923 - டிசம்பர் 31, 2001) சிறுகதை, நாவல், விமரிசனம், ஆய்வு, மொழிபெயர்ப்பு, நாடகம், வாழ்க்கை வரலாறு எனப் பலதுறைகளிலும் எழுதியவர். பத்திரிகை ஆசிரியராக இருந்தவர். ரகுநாதனின் எழுத்துக்கள், ஆய்வுகள், விமரிசனங்கள் யாவும் தமிழில் மார்க்சிய சிந்தனைகளை வளர்த்தது.

பொருளடக்கம்

[தொகு] வாழ்க்கைக் குறிப்பு

1942 இல் கல்லூரியில் படிக்கும் போதே மாணவர் போராட்டங்களில் கலந்துகொண்டு சிறை சென்றவர். கல்லூரிப் படிப்பை முடித்து இலக்கியத்தில் நாட்டம் கொண்டார்.

1944 இல் தினமணி பத்திரிகையில் துணை ஆசிரியராகவும் பின்னர் 1946 இல் முல்லை இதழிலும் பணியாற்றினார். சாந்தி என்ற இலக்கிய மாத இதழை பதிப்பித்து வெளியிட்டார். சோவியத் நாடு இதழின் ஆசிரியராக 20 ஆண்டுகளாக இருந்தார்.

[தொகு] எழுதிய நூல்கள்

[தொகு] சிறுகதை

  • சேற்றில் மலர்ந்த செந்தாமரை
  • க்ஷணப்பித்தம்
  • சுதர்மம்
  • ரகுநாதன் கதைகள்

[தொகு] கவிதை

  • ரகுநாதன் கவிதைகள்
  • கவியரங்கக் கவிதைகள்
  • காவியப் பரிசு

[தொகு] நாவல்

  • சிலை பேசிற்று
  • மருத பாண்டியன்

[தொகு] விமரிசனம்

  • இலக்கிய விமரிசனம்
  • சமுதாய விமரிசனம்
  • கங்கையும் காவிரியும்
  • பாரதியும் ஷெல்லியும்
  • பாரதி காலமும் கருத்தும்
  • புதுமைப்பித்தன் கதைகள் - சில விமரிசனங்களும் விஷமத்தனங்களும் (1999)

[தொகு] வரலாறு

  • புதுமைப்பித்தன் வரலாறு

[தொகு] ஆய்வு

  • எங்கோவடிகள் யார்? (1984)

[தொகு] விருதுகள்

  • சாகித்திய அகடமி விருது: (1983, பாரதி காலமும் கருத்தும்)


[தொகு] வெளி இணைப்புகள்