நிலா
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
'நிலா
நிலா, நிலவு, அம்புலி, சந்திரன் என்று் பலவாறு கூறப்படும் இக்கோளம் வானிலே பூமியைச் சுற்றி வருகின்றது. இரவிலே குளிர்வாக ஒளிதரும் இக்கோளத்தை வானிலே காணலாம். குழந்தைகளாக இருக்கையிலே தாய் நிலாவைக்காட்டி 'நிலா நிலா இங்கே வா' என்று சொல்லி சோறூட்டுதல் பெருவழக்கு.
இந்த நிலாதான் பூமியின் ஒரே இயற்கையான துணைக்கோள். இது பூமியைச் சுற்றி வர சராசரி 27.32 நாட்கள் ஆகின்றது. இந்த நிலா பூமியை ஒரு நீள் வட்டப் பாதையில் சுற்றிவருவதாகக் கண்டு பிடித்துள்ளார்கள். பூமிக்கும் நிலாவுக்கும் சராசரி தொலைவு 384, 403 கி.மீ. துணைக்கோள் என்று கண்டு இருக்கிறார்கள்
[தொகு] நிலாவின் கலைகள் (அல்லது) பிறைகள்கலைகள் என்பது நிலாவின் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு அளவாகத் தெரியும் தனித்தனி நிலைகளைக் குறிப்பன. இதனைப் பிறை என்று சொல்வது பெருவழக்கு. முதல் நாள் நிலாவே தென்படாது. இரவு மிக இருட்டாக இருக்கும். இதனை அமாவாசை என்றும் உவா நாள் என்றும் அழைப்பர். பிறகு ஒவ்வொரு நாளும் சிறிகச் சிறுக நிலா (வெளிச்சம் தெரியும் பகுதி) பெரிதாகிகொண்டே வரும், இவைகளை இரண்டாம் பிறை, மூன்றாம் பிறை என்றும் இரண்டாங்கலை, மூன்றங்கலை என்றும் நாட்களைச் சொல்வார்கள். பின்னர் சுமார் 14 நாட்கள் கழித்து ஒரு நாள் முழு நிலா பெரிதாய் வட்ட வடிமாய்த் தெரியும். இதனை முழு நிலா நாள் என்றும் பௌர்னமி நாள் என்றும் சொல்வர். பிறகு அடுத்த சில நாட்கள் நிலா சிறுக சிறுக தேய்ந்து கொண்டே போய், மீண்டும் உவா நாளுக்கான நிலைக்கே திரும்பி விடும். முதலில் முழுநிலா நாள் வரை வளர்ந்து வருவதை வளர்பிறை என்றும், அடுத்த சுமார் 14 நாட்களைத் தேய்பிறை என்றும் அழைப்பர். நிலா நம் பூமியைச் சுற்றி வருகையிலே எப்படி கதிரொளி நிலாக் கோளத்தின் மீது பட்டு புமியில் தெரிகிறது என்பதை கீழே உள்ள படம் விளக்குகிறது.
|