சீத்தலைச் சாத்தனார்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
சீத்தலைச் சாத்தனார் சங்க காலத்தில் வாழ்ந்த புலவர்களில் ஒருவர். மணிமேகலை என்னும் காப்பியத்தைப் படைத்தவர்.
சீத்தலைச் சாத்தனார் பிறந்த ஊர் சீத்தலை என்பர். மதுரையிலே வாழ்ந்தவர். கூல (தானிய) வாணிகம் செய்தவர். பௌத்த சமயத்தைச் சேர்ந்தவர். மணிமேகலை தவிர இவர் குறுந்தொகைப் பாடல்கள் சிலவற்றையும் பாடியுள்ளார்.