முத்தரசநல்லூர்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
திருச்சி மாநகரத்திற்கு மேற்கே ஏழு கி.மீ தொலைவில் காவிரி ஆற்றின் தென் கரையில் அமைந்துள்ள வரலாற்று சிறப்பு மிக்க ஓர் அழகிய கிராமம் முத்தரசநல்லூர் (Mutharasanallur). கல்வெட்டுக்களை கொண்ட கொவில்கள் உள்ளன. அதில் பண்டைய மக்களின் வாழ்க்கைப் பற்றிய குறிப்புகள் உள்ளன. இக்கல்வெட்டுக்கள் இந்திய தொல்பொருள் துறையினரால் பாதுகாக்கப்பட்டு வருகிறது.
பொருளடக்கம் |
[தொகு] வரலாறு
முத்தரசன் என்ற குறுநில மன்னன் இப்பகுதியை ஆட்சி செய்திருக்கிறான். இந்த மன்னனின் பெயராலேயே இந்த ஊர் முத்தரசநல்லூர் என்று அழைக்கப்படுகிறது. இந்த ஊர் மிக பழமையான கிராமம். இங்குள்ள புகைவண்டி நிலையம் சுதந்திரத்திரத்திற்கு முன் நிறுவப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த புகைவண்டி நிலையம், திருச்சி - கரூர் தடத்தில் மூன்றாவது நிலையமாகும். (பாலக்கரை, கோட்டை, முத்தரசநல்லூர்). அருகே உள்ள சிற்றூர்கள் ஜீயபுரம், அல்லூர், பழூர், கூடலூர், முருக்கப்பேட்டை, கம்பரசம்பேட்டை ஆகியவை.
[தொகு] முன்னாள் பஞ்சாயத்து தலைவர்கள்
- திரு. மருதநாயகம்
- திரு. சீனிவாசன்
- திரு. சந்திர சேகரன்
- திரு. காமராஜ்
[தொகு] அரசியல்
அரசியல் பிரிவுகளில், இந்த கிராமம் ஓர் ஊராட்சி. அந்தநல்லூர் ஒன்றியத்திற்கு உட்பட்டது. ஸ்ரீரங்கம் வட்டத்தின் ஒரு பதியாக விளங்குகிறது.
[தொகு] மக்கள்
சுமார் 10,000க்கும் மேற்பட்ட மக்கள் இங்கு வசிக்கின்றனர். இவர்களின் முக்கிய தொழில் விவசாயம். நெல், கரும்பு, வாழை, எள், உளுந்து ஆகியன முக்கிய பயிர்களாகும்.
[தொகு] விழாக்கள்
[தொகு] மாரியம்மன் திருவிழா
சுமார் 60 ஆண்டுகளுக்கு மேலாக மக்கள் ஒன்றாக இணைந்து, வரி வசூலித்து 7 நாட்கள் திருவிழா அம்மனுக்கு நடத்திக்கொண்டிருக்கிறார்கள். இந்த திருவிழாக்களின் வரவு செலவு கணக்குகள் 60 ஆண்டுகளுக்கும் மேலாக பாதுகாக்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடக்தக்கது. மேலும் இந்த திருவிழாவின் முடிவில் பெளர்ணமி வெளிச்சத்தில், காவிரி ஆற்றின் மணலில் சுமார் 25 ஆயிரம் பேர்களுக்கு அன்னதானம் வழக்கப்படுகிறது.
[தொகு] மதுரகாளியம்மன் திருவிழா
இந்த திருவிழா, 1 வருடத்திற்கு ஒருமுறை சித்திரை மாதத்தில் நடைபெறுகிறது. பாம்பு ஆட்டம், மஞ்சள் நீர் விளையாட்டு பொன்றவை இவ்விழாவின் சிறப்பு.