ஈரோடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.

ஈரோடு

ஈரோடு
மாநிலம்
 - மாவட்டங்கள்
தமிழ்நாடு
 - ஈரோடு
அமைவிடம் 11.35° N 77.73° E
பரப்பளவு
 - கடல் மட்டத்திலிருந்து உயரம்
  ச.கி.மீ

 - 183 மீட்டர்
கால வலயம் IST (ஒ.ச.நே.+5:30]])
மக்கள் தொகை (2001)
 - மக்களடர்த்தி
151,184
 - /ச.கி.மீ

ஈரோடு (ஆங்கிலம்:Erode), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள ஈரோடு மாவட்டத்தில் இருக்கும் ஒரு நகராட்சி ஆகும். ஈரோடு விசைத்தறி தொழிலுக்கும் மஞ்சள் சாகுபடிக்கும் பெயர் பெற்றது. காங்கயம் காளைகளும் ஊத்துக்குளி வெண்ணையும் தமிழ் நாடு முழுவதும் புகழ் பெற்றவை. ஜவுளிப்பொருட்களான துண்டுகள், படுக்கை விரிப்புகள், லுங்கிகள் ஆகியன உலகமுழுவதும் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. இப்பகுதி பருத்தி விளைச்சலுக்கு சாதகமாக உள்ளது. பஞ்சாலைகளும் மோட்டார் வாகன உதிரிபாக தொழிற்சாலைகளும் இங்குள்ள முக்கிய தொழில்களுள் ஒன்றாகும்.

[தொகு] புவியியல்

இவ்வூரின் அமைவிடம் 11.35° N 77.73° E ஆகும்.[1] கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 183 மீட்டர் (600 அடி) உயரத்தில் இருக்கின்றது.

[தொகு] மக்கள் வகைப்பாடு

இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 151,184 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.[2] இவர்களில் 51% ஆண்கள், 49% பெண்கள் ஆவார்கள். ஈரோடு மக்களின் சராசரி கல்வியறிவு 78% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 83%, பெண்களின் கல்வியறிவு 72% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. ஈரோடு மக்கள் தொகையில் 9% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.

[தொகு] ஆதாரங்கள்

  1. Erode. Falling Rain Genomics, Inc. இணைப்பு அக்டோபர் 20, 2006 அன்று அணுகப்பட்டது.
  2. இந்திய 2001 மக்கள்தொகை கணக்கெடுப்பு. இணைப்பு அக்டோபர் 20, 2006 அன்று அணுகப்பட்டது.
"http://ta.wikipedia.org../../../%E0%AE%88/%E0%AE%B0/%E0%AF%8B/%E0%AE%88%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%81.html" இலிருந்து மீள்விக்கப்பட்டது