ஜாம்ஷெட்ஜி டாடா
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
படிமம்:Stamp India 1965 15p Tata.jpg
1965-ல் வெளியிடப்பட்ட டாடா நினைவு தபால்தலை
ஜாம்ஷெட்ஜி நுஸ்ஸெர்வாஞ்சி டாடா (மார்ச் 13, 1839 - மே 19, 1904) அவர்கள் நவீன தொழில்துறையின் முன்னோடிகளுள் ஒருவராவார். இவர் இந்திய தொழில்துறையின் தந்தை என்று அறியப்படுகிறார். இவர் பாரிஸ் நகரத்திலேயே நீண்ட காலம் வசித்தார். இவர் இந்தியாவின் குஜராத் மாநிலத்திலுள்ள நவசாரி என்னுமிடத்தில் பிறந்தார். எஃகு உற்பத்திக்குப் பெயர்பெற்ற ஜாம்ஷெட்பூர் நகரத்திற்கு இவருடைய நினைவாகவே பெயர்சூட்டப்பட்டது.