சூறாவளி (இதழ்)
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
சூறாவளி என்பது கா.நா. சுப்ரமண்யம் ஏப்ரல் 1939ல் தொடங்கிய புதிய சிற்றிதழ். மணிக்கொடி என்னும் சிற்றிதழில் எழுதி வந்த படைப்பளிகளின் எழுத்துக்களை வெளியிடுவதற்காக துவக்கப்பட்ட இதழ். இவ்விதழில் புதுமைப்பித்தன், கு.ப. ராஜகோபாலன், போன்றோர் எழுதினர். பாரதிதாசனின் கவிதைகள் வெளிவந்தன. வசன கவிதையைப் பற்றிய விவாதங்கள் சூறாவளியில்தான் முதன்முதல் வெளிவந்தன. வியாபார நோக்கில் இவ்விதழ் வெற்றி பெற வில்லை. கிழமைதோறும் (வாரந்தோறும்) வந்துகொண்டிருந்த இவ்விதழ் 20 இதழ்கள் வந்தபின் செப்டமர் 1939ல் நின்றுவிட்டது.