வான்புலிகள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் வான்படை (Air Force) வான் புலிகள் என்ற பெயரால் அழைக்கப்படுகிறது.

வான்புலிகள் படைப்பிரிவிடம் தாக்குதலுக்கு பயன்படுத்தக்கூடியவை உள்ளிட்ட வான் கலங்கள், உலங்குவானூர்திகள் போன்றன இருப்பதாக பொதுவான கருத்து நிலவுகிறது.

ஆகஸ்டு 11, 2006 அன்று யாழ்ப்பாணத்திலுள்ள பலாலி வான்படைத்தளம் (இலங்கை இராணுவத்தினருக்கு சொந்தமானது) வான்புலிகளால் வான்கலங்களை பயன்படுத்தி தாக்கப்பட்டிருக்கக்கூடும் என்ற ஊகங்களை உருவாக்கும்படியான செய்திகள் வெளியாகியிருக்கின்றன.

வான்புலிப் படைப்பிரிவு தொடர்பான முதல் அதிகாரப்பூர்வ அறிவித்தல் 1998ம் ஆண்டு மாவீரர்தின உரையின்போது விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களால் செய்யப்பட்டது. அந்நிகழ்வின்போது வான்புலிகளுக்கு சொந்தமான வான்கலத்திலிருந்து பூக்கள் தூவப்பட்டதாக நேரில் பார்த்தவர்களுடைய அனுபவங்கள் பதிவுசெய்யப்பட்டுள்ளன.

[தொகு] வெளி இணைப்புகள்