முதலாம் பராந்தக சோழன்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
சோழ மன்னர்களின் பட்டியல் | |
---|---|
முற்காலச் சோழர்கள் | |
இளஞ்சேட்சென்னி | கரிகால் சோழன் |
நெடுங்கிள்ளி | நலங்கிள்ளி |
கிள்ளிவளவன் | கொப்பெருஞ்சோழன் |
கோச்செங்கண்ணன் | பெருநற்கிள்ளி |
மாற்றார் இடையாட்சி கி.பி. 200-848 | |
இடைக்காலச் சோழர்கள் | |
விஜயாலய சோழன் | கி.பி. 848-871(?) |
ஆதித்த சோழன் | 871-907 CE |
பராந்தக சோழன் I | கி.பி. 907-950 |
கண்டராதித்தர் | கி.பி. 950-957 |
அரிஞ்சய சோழன் | கி.பி. 956-957 |
சுந்தர சோழன் | கி.பி. 957-970 |
உத்தம சோழன் | கி.பி. 970-985 |
இராஜராஜ சோழன் I | கி.பி. 985-1014 |
இராஜேந்திர சோழன் | கி.பி. 1012-1044 |
இராஜாதிராஜ சோழன் | கி.பி. 1018-1054 |
இராஜேந்திர சோழன் II | கி.பி. 1051-1063 |
வீரராஜேந்திர சோழன் | கி.பி. 1063-1070 |
அதிராஜேந்திர சோழன் | கி.பி. 1067-1070 |
சாளுக்கிய சோழர்கள் | |
குலோத்துங்க சோழன் I | கி.பி. 1070-1120 |
விக்கிரம சோழன் | கி.பி. 1118-1135 |
குலோத்துங்க சோழன் II | கி.பி. 1133-1150 |
இராஜராஜ சோழன் II | கி.பி. 1146-1163 |
இராஜாதிராஜ சோழன் II | கி.பி. 1163-1178 |
குலோத்துங்க சோழன் III | கி.பி. 1178-1218 |
இராஜராஜ சோழன் III | கி.பி. 1216-1256 |
இராஜேந்திர சோழன் III | கி.பி. 1246-1279 |
சோழர் சமுகம் | |
சோழ அரசாங்கம் | சோழ இராணுவம் |
சோழர் கலைகள் | சோழ இலக்கியம் |
பூம்புகார் | உறையூர் |
கங்கைகொண்ட சோழபுரம் | தஞ்சாவூர் |
தெலுங்குச் சோழர்கள் | |
edit |
முதலாம் பராந்தக சோழன் (கி.பி 907-953) ஆதித்த சோழனின் மகனாவான். களப்பிரரை முறியடித்து கிபி 575 இல் ஏற்படுத்தப்பட்ட பாண்டிய அரசு இவன் காலத்தில் 915 இல் முறியடிக்கப்பட்டது . அச் சமயத்தில் பாண்டி நாட்டை ஆண்டவன் 2ம் இராசசிம்மன் ஆவான்.பல ஆண்டுகள் இடம் பெற்ற இப்போரில் இலங்கை மன்னன் 5ம் காசியப்பன்(913-923) பாண்டியனுக்கு ஆதரவாக போரிட்டான் .முடிவில் பராந்தகன் மதுரையை கைக்கொண்டான்.போர் முடிவில் பாண்டி மன்னன் இலங்கை தப்பினான். பாண்டிய அரசை கைப்பற்றியதே இவன் காலத்தில் நிகழ்த்த முக்கிய சம்பவமாகும்.தன் தந்தை கட்டாது விட்ட பல கோயில்களை கட்டினான்.
இவ்வரசன் காலத்தில் மாதவர் என்ற வேதியர் ருக்வேத பாஷ்யம் என்னும் நூலை எழுதினார். இந்நூலில் ஜகதேகவீரன் என இவ்வரசனைக் குறிப்பிடுகின்றார் [1]. இச்சுவடி இன்றும் சரசுவதி மகாலில் உள்ளது. மேலும் பல வேத நூல்களும் சரசுவதி மகால் நூலகத்தில் சேர்க்கப்பட்டன. திருவெற்றியூரின் கோயில் கல்வெட்டில் உள்ள குறிப்பின்படி இவ்வரசன் தன் காலத்தில் தேவாரம் திருவெம்பாவை பாடல்களைக் கோயில்களில் பாட அறக்கட்டளைகள் ஏற்படுத்தினான் எனத் தெரிகின்றது.
[தொகு] மேற்கோள்கள்
- ↑ ஆ.குணசேகரன், சரசுவதி மகால் நூலகம், சைவ சித்தாந்த பதிப்புக் கழகம்