நூலகம் திட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.

நூலகம் திட்டம் என்பது ஈழத்து தமிழ் நூல்களையும் எழுத்தாவணங்களையும் மின்வடிவில் இணையத்தில் பேணி வைப்பதற்கான இலாப நோக்கற்ற ஒரு தன்னார்வ கூட்டுழைப்பாகும்.

இத்திட்டத்தின் செயற்பாடுகள் திறந்த நிலையில் ஒழுங்கமைக்கப்பட்டுள்ளன. பொறுப்புக்கள் ஆரவத்துக்கு ஏற்பவே பகிர்ந்தளிக்கபட்டுள்ளன. திட்டத்தின் அங்கத்துவர்கள் யா.ரும் மடலாடற் குழு ஒன்றில் இணைந்திருப்பர். முக்கியமான முடிவெடுப்புக்கள், விவாதங்கள் அனைத்தும் அக்குழுவிலே நிகழ்த்தப்படும். பொறுப்புக்களை ஏற்றுக்கொள்ள விரும்புபவர்களுக்கும் தகுதி உடையோர்க்கும் மடற்குழு பொறுப்புகளை வழங்கும். இணையப்பாதுகாப்பு காரணமாக வழங்கி தொடர்பான கட்டுப்பாடுகள் வலைத்தள நிர்வாகியாக பொறுப்பேற்றுக்கொண்ட ஓரிரு உறுப்பினர்களிடமே இருக்கும்

நூலகம் திட்டத்தின் சின்னம்

பொருளடக்கம்

[தொகு] நோக்கங்கள்

  • ஈழத்து நூல்களையும் எழுத்தாவணங்களையும் அழிவிலிருந்து காப்பதும், ஆவணப்படுத்துவதும், அடுத்ததடுத்த தலைமுறைகளுக்கும் கிடைக்கக்கூடியவண்ணம் பேணுதலும்.
  • ஈழத்து நூல்களை இலகுவாக , இலவசமாக இணையத்தில் படிக்க, உசாத்துணைப்பாவனைக்கு பயன்படுத்த தக்கதாக கிடைக்கச்செய்தல்
  • ஆய்வு நோக்கங்களுக்காக இணைய தேடுபொறிகளில் தேடல்கள் நிகழ்த்துவோர், தமிழ் தேடல்கள் மூலம் ஈழத்து நூல்களை கண்டடைய, அநூல்களின் உள்ளடக்கத்தை பெற்றுக்கொள்ள வழி செய்தல்..


[தொகு] நூற் தெரிவு

ஈழத்து எழுத்தாளர்களின் நூல்களில் கிடைத்தற்கரியனவற்றுக்கும் குறிப்பிடத் தக்கனவற்றுக்கும் முன்னுரிமை அளித்தே மின்னூலாக்குவதற்கான புத்தகங்கள் தெரிவு செய்யப்படுகின்றன. ஆயினும் இத்திட்டத்திற்கு பங்களிப்புச் செய்ய விரும்புவோர் தாம் விரும்பும் எந்த நூலையும் மின்னூலாக்கலாம். நூல் ஈழத்து எழுத்தாளரால் எழுதப்பட்டதாக இருக்கவேண்டும் என்பதே முக்கியமானது. மேலும் சமகால எழுத்தாளர்களின் நூல்களை வெளியிடுவதற்கு குறித்த நூலாசிரியரின் அனுமதி பெறப்பட வேண்டும்.

[தொகு] பதிப்புரிமை

இத்திட்டம் ஈழத்து நூல்களை இலவசமாக இணையத்தில் வழங்குவதால் பதிப்புரிமை தொடர்பான சிக்கல்கள் எழ வாய்ப்புகள் உண்டு என கருதப்படுகிறது. இதை எதிர்கொள்ளுமுகமாக சில நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

  • நூல்களை படிக்கவும் உசாத்துணை பாவனைக்கு பயன்படுத்தவும் மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. நூலுக்கான முழு பதிப்புரிமையும் அநூலில் குறிப்பிடப்பட்டுள்ளவாறே அமையும்.
  • சமகால எழுத்தாளர்களின் நூல்களை சமர்ப்பிக்க விரும்புவோர் அவ்வெழுத்தாளரின் எழுத்துமூல அனுமதியை கட்டாயம் பெற்றிருக்க வேண்டும்.
  • பிற இணையத்தளங்கள் இநூற்களை பயன்படுத்துவதற்கு பின்வரும் நிபந்தனைகளுக்குட்பட்ட அனுமதியே வழங்கப்படுகிறது.
    • எதுவித வணிக நோக்குமின்றியதாக இருத்தல் வேண்டும்.
    • மூல மின்பதிப்பை ஆக்கியவர், வெளியிட்டோர் பற்றிய குறிப்புகள் மின்னூல்களில் தொடர்ந்தும் பேணப்படவேண்டும்.
    • அவர்களது மின்பதிப்புகளைப் பிற வணிக நோக்கற்ற திட்டங்கள் பயன்படுத்துவதற்கான அனுமதி அளிக்கப்படவேண்டும்.

[தொகு] திட்ட வரலாறு

  • இந்த நூலகம் ஆரம்பத்தில் ஈழநூல் என்பதாகத் தான் இருந்தது. மதுரைத் திட்டத்தால் கவரப்பட்டு ஈழத்து நூல்களுக்கான தனியான செயற்றிட்டம் தேவை என்ற எண்ணத்துடன் ஈழநூல் திட்டம் ஆரம்பிக்கப்பட்டது.
  • முதலாவது ஈழநூலாக திருக்கோணமலையின் வரலாறு 28.07.2004 இல் சூரியன் வலைத்தளத்தில் வெளியிடப்பட்டது. இது பற்றி மு.மயூரன் "ம்..." வலைப்பதிவில் பகிரங்கப்படுத்தியிருந்தார்.
  • ஆரம்பத்தில் தனது புத்தகங்களை மின்னூலாக்க அனுமதி தந்தவர் திரு.சிவசேகரம். மிக ஆர்வமாக தம்மிடமிருந்த புத்தக மின்வடிவங்களைத் தந்து ஊக்கப்படுத்தியவர் தேசிய கலை இலக்கியப் பேரவையின் திரு. சோ. தேவராஜா.
  • தற்காலிகமாக/பரீட்சார்த்தமாக இத்திட்டத்தை வலையேற்றுவதற்கான சாத்தியம் கிடைத்த போது noolaham.org என்ற பெயர் பதிவுசெய்யப்பட்டது
  • 2005 இன் ஆரம்பத்திலிருந்து கோபிநாத், மு. மயூரன் ஆகியோர் சில நூல்களை வலையேற்றிக்கொண்டிருந்தனர். பின்னர் தி.பிரதீபா வன்னி மான்மியம் என்ற புத்தகத்தை தட்டச்சு செய்து அளித்தார்.
  • 2005 நடுப்பகுதியில் வழங்கி செயலிழந்தமையால் தற்காலிகமாக திட்டம் இடைநிறுத்தப்பட்டது.
  • 2006ல் noolaham.net என்ற பெயர் பதிவுசெய்யப்பட்டது

[தொகு] இவற்றையும் பார்க்கவும்

[தொகு] வெளி இணைப்புக்கள்

ஏனைய மொழிகள்