நாவலப்பிட்டி
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
நாவலப்பிட்டி | |||
[[படிமம்:|250px|{{{படிமம்_தலைப்பு}}}]] நாவலப்பிட்டி நகரின் ஒரு தோற்றம் |
|||
|
|||
உத்தியோகபூர்வ வலைத்தளம்: [1] | |||
அமைவிடம் | |||
[[படிமம்:{{{படிமம்_வரைபடம்}}}|180px|நாவலப்பிட்டி]] நாவலப்பிட்டி அமைவிடம் |
|||
மாகாணம் | மத்திய மாகாணம், இலங்கை | ||
மாவட்டம் | கண்டி | ||
உள்ளூர் நிர்வாகம் | |||
உள்ளூராட்சி வகை | நகரசபை | ||
நகர பிதா | |||
---|---|---|---|
உப நகர பிதா | |||
மொத்த வாக்காளர் | {{{வாக்காளர்_எண்ணிக்கை}}} | ||
மொத்த வட்டாரங்கள் | {{{வட்டார_எண்ணிக்கை}}} | ||
புவியியல் பண்புகள் | |||
அமைவிடம் | |||
சனத்தொகை - மொத்தம் (2001) - அடர்த்தி |
ஆவது நிலை 13,533 ச.கி.மீ. |
||
சராசரி வெப்பநிலை | {{{சராசரி_வெப்பநிலை}}} பாகை செல்சியஸ் | ||
சராசரி மழைவீழ்ச்சி | {{{சராசரி_மழைவீழ்ச்சி }}} மில்லி மீற்றர்கள் | ||
கடல் மட்டத்திலிருந்து உயரம் | 602 மீற்றர்கள் | ||
பரப்பளவு | கி.மீ. | ||
நேர வலயம் | ஒ.ச.நே. +5.30 | ||
இதர விபரங்கள் | |||
குறியீடுகள் • அஞ்சல் • தொலைபேசி |
20650 +54 |
||
நாவலப்பிட்டி இலங்கையின் மத்திய மாகாணத்திலுள்ள கண்டி மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு நகரமாகும். மாவட்ட தலைநகரான கண்டியிலிருந்து 30 கி.மீ. தெற்கே கண்டியையும் ஹற்றனையும் இணைக்கும் பெருந்தெருவில் அமைந்துள்ளது. பாரிய தேயிலைத்தோட்டங்கள் இந்நகரைச் சூழ காணப்படுகின்றது. தெபஸ்பாகே கோராளை பிரதேச செயலாளர் பிரிவில் காணப்படும் பிரதான நகரமாகும். இது நகரபிதா ஒருவரால் வழிநடத்தப்படும் நகரசபையால் ஆளப்படுகிறது.
பொருளடக்கம் |
[தொகு] புவியியலும் காலநிலையும்
நகரம் இலங்கையின் மத்திய மலைநாட்டின் தென் மேல் சாய்வில் அமைந்துள்ளது. சராசரி உயரம் கடல் மட்டத்திலிருந்து 602 மீற்றர்களாகும். ஆனால் இப்பிரதேசம் மிக சாய்வான மலைகளைக் கொண்டுள்ளது. மேலும் 930 மீற்றர் உயரமான தொலொஸ்பாகை மலைத்தொடர்கள் நகருக்கு அண்மையில் காணப்படுகின்றன. இலங்கையின் மிக நீளமான நதியான மகாவலி கங்கை இந்நகரின் ஊடாகப் பாய்கிறது. நகரின் வருடாந்த மழை வீழ்ச்சி சுமார் 2500 மி.மீ. ஆகும். இது மே மாதம் தொடங்கி ஆகஸ்டு மாதம் வரையான காலப்பகுதியில் வீசும் தென்மேற்கு பருவக் காற்றினால் கிடைக்கிறது. சராசரி வெப்பநிலை 28 பாகை செல்சியஸ் ஆகும். மிக குறைந்த வெப்பநிலையான 15 பாகை செல்சியஸ் சனவரி மாதத்தில் உணரப்படும்.
[தொகு] மக்கள்
நாவலப்பிட்டி ஒரு பல்கலாச்சார பல்சமய நகரமாகும்.
[தொகு] வரலாறு
பிரித்தானியர் வருகையின் போது இந்நகர் ஒரு சிறிய கிராமமாகவே காணப்பட்டது. அவர்களின் ஆட்சியின் போது நகரைச்சூழவுள்ள பிரதேசத்தில் இரப்பர், கோப்பித் தோட்டங்கள் செய்யப்பட்டன. அவை ஒருவித நோயால் பாதிக்கப்பட்டதை தொடர்ந்து தேயிலை இப்பிரதேசத்தில் அறிமுகப் படுத்தப்பட்டது. இதற்காக இந்தியாவின் அப்போதைய மெட்றாஸ் மாவட்டத்திலிருந்து கொண்டுவரப்பட்ட தமிழர்கள் இப்பிரதேசத்தில் குடியேற்றப்பட்டனர். இன்றும் இவர்களது சந்ததியினர் குறிப்பிடத்தக்களவு பெரும்பான்மையுடன் நாவலப்பிட்டியில் வசிக்கின்றனர். 1874 ஆம் ஆண்டு தேயிலைத் தோட்டங்களிலிருந்து கொழும்புக்கு தேயிலையை கொண்டுச் செல்வதை இலகுவாக்கும் நோக்கில் நாவலப்பிட்டிக்கு தொடருந்து பாதையை அமைத்தார்கள். இந்நகரைச்சுற்றி வேறு இயற்கை வளங்கள் காணப்படாத நிலையில் நகரின் வளர்ச்சி இரயிலையும் அதனுடன் தொடர்புடைய சேவைகளையும் அண்டியே நடைப்பெற்றது. காலப்போக்கில் இரயிலின் முக்கியத்துவம் குன்றிப்போனாலும் நகரின் வளர்ச்சி பாரிய அளவில் பாதிக்கப்படவில்லை.
[தொகு] பிரச்சினைகள்
நகரில் அவ்வப்போது ஏற்பட்ட இனக்கலவரங்களும், அதிகளவு மழைவீழ்ச்சி காரணமாக ஏற்படும் இயற்கை அழிவுகளும் இந்நகரம் எதிநோக்கும் பிரச்சினைகளாகும்.
[தொகு] உசாத்துணை
- ஆசிய விபத்து தடுப்பு தகவல்கள், தொகுப்பு 7, இல. 4, ஒக்டோபர்-டிசம்பர் 2001