பன்றித்தலைச்சி அம்மன் கோவில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.

யாழ்குடாநாட்டில் உள்ள வரலாற்றுப் பிரசித்தி பெற்ற ஆலயங்களுள் மட்டுவில் பன்றிதலைச்சி அம்மன் ஆலயமும் ஒன்றாகும். தென்மராட்சி பெருநிலப் பரப்பில் சாவகச்சேரி-புத்தூர் வீதியில் மட்டுவில் வடக்குப் பகுதியில் இந்த ஆலயம் அமைந்துள்ளது. இந்த ஆலயம் வயலும் வயல் சார்ந்த இடத்தில் மருதமரமும், புளியமரமும் ஓங்கி வளர்ந்த பகுதியில் அமைந்துள்ளது.

அம்பாளின் ஆலயம் 1750 ஆம் ஆண்டுப் பகுதியில் நிர்மாணிக்கப்பட்டதாக சான்றுகள் கூறுகின்றன. இதனை ஆலயத்தின் மூலஸ்தானத்தின் பின்புறமாக பித்தளையில் பொறிக்கப்பட்ட எழுத்துக்கள் சான்று பகர்கின்றன. ஆலயச்சூழல் இயற்கையுடன் ஒன்றித்து அழகு நிறைந்த இடமாகக் காட்சி தருகின்றது. ஓங்கி வளர்ந்த தென்னைகள், பனைகள், அதனுடன் கூடிய மரங்கள் பச்சைப் பசேலென அசைந்து ஆலய்த்திற்கு மெருகூட்டுகின்றன. ஆலயத்தின் வரலாறு தனிச்சிறப்புக் கொண்டது. அம்பாளின் அற்புதங்கள் சொல்லில் அடங்காதவை. இதனால் ஆலயத்தில் திங்கள் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் கூடும் அடியார்களின் எண்ணிக்கை அளவிடற்கரியது.

அம்பாளின் அற்புதங்கள் உட்பட அருளாட்சியும் தன்னை நாடி வருபவர்களிற்கு நற்பேறும் வழங்கி நல்வாழ்வளிக்கும் தாய்தெய்வம் இந்த அம்பிகை. பன்றிதலைச்சி அம்மன் என்றால் யாழ்ப்பாணம் மட்டுமல்ல இலங்கை பூராவும் என் உலக ரீதியாகவும் அற்புதங்களை அறியாதவர் எவருமில்லை என்றே கூறவேண்டும். ஆலயத்திற்கு வருகைதரும் அடியவர்கள் நீராடுவதற்கு வசதியாக ஆலயத்தின் தெற்குப் பக்கத்தில் 100 அடி நீளம் அகலம் உடைய தீர்த்தக் கேணி அமைந்துள்ளது. அநதக் கேணியில் உள்ள தீர்த்தம் சலசல்த்த படி தூய்மையாக இதம் பரப்பும்

அங்கு பொங்கல் பொங்கி அம்பாளிளுக்கு நிவேதித்து வரும் அடியவர்களிற்கும் வழங்கி இஷ்ட சித்திகளைப் பெறுவர். பன்றித்தலைச்சி தாயே எங்கள் வல்வினையைப் போக்கிடு எங்கள் துயர்களைக் களைந்து விடு என மனமிரங்கி வணங்கிடுவர். இதனால் நினைத்த வரத்தைப் பெற்றிடுவர். இவ் வகையான வழிபாடு இன்று நேற்றல்ல இவை பழமை வாய்ந்த வரலாற்றுடன் கூடிய வழிபாடு ஆகும்.

முற்காலத்தில் அம்பாள் மட்டுவில் பகுதியில் இயற்கை வனப்பு நிறைந்த கிராமத்தில் உறைந்து பல அற்புதங்களையும் அருளாட்சியையும் வழங்கி வ்ந்ததாக வரலாறுகள் கூறிவருகின்றன.