அத்வைதம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.

அத்வைதம் (அ + துவைதம்) என்பது கடவுள் வேறு, மனிதன் வேறு என்ற கொள்கையை மறுக்கிறது. அத்வைத தத்துவத்தின்படி, பிரபஞ்சத்திலுள்ள அனைத்துமே ஒன்று என்பதாகும். மனிதனின் மனதில் உள்ள மாயை காரணமாக வேறுபாடுகள் தோன்றுகின்றது என்பதும், இவ்வேறுபாடுகள் மனிதனின் மனத்தில் மட்டும் தான், உண்மையில் அல்ல என்பதும் இத்தத்துவத்தின் சாரம்.