நா.பார்த்தசாரதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.

படிமம்:Deepam Parthasarathy.jpg
நா.பார்த்தசாரதி

நா.பார்த்தசாரதி (N.Parthasarathy) புகழ் பெற்ற தமிழ் புதின (நாவல்) எழுத்தாளர் ஆவார். மணிவண்ணன் என்ற புனைப்பெயரிலும் அறியப்படும் இவர் 'தீபம்' என்ற இலக்கிய இதழை நடத்தி வந்ததால் 'தீபம்' நா.பார்த்தசாரதி என்றும் அழைக்கப்படுகிறார். பெரும்பாலும் இவருடைய கதைகள் சமகால சமூகப் பிரச்சினைகளைத் தீர்க்கப் போராடும் கொள்கைப் பிடிப்புள்ள கதைமாந்தர்களைப் பற்றியதாய் அமைந்துள்ளது. இவருடைய புகழ் பெற்ற புதினங்களான குறிஞ்சி மலர் மற்றும் பொன் விலங்கு தொலைக்காட்சித் தொடர்களாகவும் வந்துள்ளன. சாகித்ய அகாதமி விருது பெற்றுள்ளார்.

[தொகு] நா.பார்த்தசாரதியின் புதினங்கள்

  • சாயங்கால மேகங்கள்
  • மணிபல்லவம்
  • ஆன்மாவின் ராகங்கள்
  • குறிஞ்சி மலர்
  • பொன் விலங்கு