உரிச்சொல்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
உரிச்சொல் என்பது பல்வேறு வகைப்பட்ட பண்புகளையும் உணர்த்தும் சொல்லாகும். பெயர்ச் சொற்களையும் வினைச் சொற்களையும் விட்டு நீங்காதனவாய் வரும்.
உரிச்சொல் இருவகைப்படும்
- ஒரு பொருள் குறித்த பல சொல்
- பல பொருள் குறித்த ஒரு சொல்
எ.கா
ஒரு பொருள் குறித்த பல சொல்
- சாலப் பேசினான்.
- உறு புகழ்.
- தவ உயர்ந்தன.
- நனி தின்றான்.
இந்நான்கிலும் வரும், சால, உறு, தவ, நனி என்னும் உரிச்சொற்கள் மிகுதி என்னும் ஒரு பொருளை உணர்த்துவன.
பல பொருள் குறித்த ஒரு சொல்
- கடிமனை - காவல்
- கடிவாள் - கூர்மை
- கடி மிளகு - கரிப்பு
- கடிமலர் - சிறப்பு
இந்நான்கிலும் வரும் கடி என்னும் உரிச்சொல் - காவல், கூர்மை, கரிப்பு, சிறப்பு முதலிய பல பொருள்களைக் உணர்த்தும்