தெரிநிலை வினைமுற்று
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
தெரிநிலை வினைமுற்று என்பது செய்பொருள் ஆறையும் காட்டும் வினைமுற்று ஆகும்.
எ.கா: கயல்விழி மாலை தொடுத்தாள்
இதில்
- கயல்விழி என்பது வினையை செய்யும் கருத்தா
- தொடுத்தாள் என்பது கருத்தாவின் செயலை உணர்த்தும் வினைமுற்று. இச்சொல்லிலிருந்து,
செய்பவன் | - கயல்விழி |
கருவி | - நார், பூ, கை |
நிலம் | - அவள் இருப்பிடம் |
செயல் | - தொடுத்தல் |
காலம் | - இறந்த காலம் |
செய்பொருள் | - மாலை |
ஆகியவற்றை அறியலாம்
இவ்வாறு, செய்பவன், கருவி, நிலம், செயல், காலம், செய்பொருள் என்னும் ஆறையும் உணர்த்துவது தெரிநிலை வினைமுற்று ஆகும். இவற்றுள் சில குறைந்து வரும் ஆனால் காலத்தை தெளிவாகக் காட்டும்.