அராலி
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
அராலி என்னுமூர் யாழ்ப்பாணக் குடாநாட்டின் தென்மேற்குக் கரையோரமாக அமைந்திருக்கும் ஒரு முக்கோண வடிவான கிராமமாகும். இது வட்டுக்கோட்டைத் தொகுதியின் அல்லது கோவிற்பற்றின் ஓர் உபபிரிவாகும். முற்காலத்தில் அராலியில் 'ஆறா' எனும் ஒருவகை மீன் அதிகமாகக் கிடைத்ததாலோ இன்றும் இவ்வூரில் அதிகமாகக் காணப்படும் அரளிச் செடிகள் அதிகமாக இருந்ததாலோ 'அராலி' என்னும் பெயர் ஏற்பட்டிருக்க வேண்டும்.
அராலிக் கிராமம் அராலி கிழக்கு, தெற்கு, மேற்கு, வடக்கு என நான்கு பிரிவிகளாக பண்டைக்காலம் தொட்டே பிரிக்கப்பட்டிருக்கிறது. யாழ்ப்பாணத்திலிருந்து செல்பவர்கள் முதலில் காண்பது அராலிப் பாலத்தையும் வழுக்கையாற்றையுமே. அராலிப்பாலம் யாழ்ப்பாணத்திலிருந்து காரைநகருக்குக் கடற்கரையோரமாகச் செல்லும் வீதியில் ஐந்தாவது மைல் இறுதியிலே அமைந்துள்ளது.
வழுக்கையாறு தெல்லிப்பழைப் பகுதியில் ஆரம்பித்து, மல்லாகம், அளவெட்டியூடாகப் பாய்ந்து, சண்டிருப்பாயைத் (சண்டிலிப்பாயைத்) தாண்டி அராலிக் கடலை நோக்கி ஓடிவருகிறது. அராலிப் பாலத்தின் அருகேயமைந்திருக்கும் சந்தியிலிருந்து தெற்கு நோக்கி இரண்டு மைல் தூரம் போனால் அராலித் துறைமுகத்தையடையலாம்.