மாவீரர் நாள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.

மாவீரர் நாள் என்பது தமிழீழ விடுதலைப்போராட்டத்தில் பங்குபற்றி உயிரிழந்த தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தின் உறுப்பினர்களையும், அவ்வியக்கத்தால் மாவீரர்களாக தெரிவுசெய்யப்பட்ட இயக்கத்துக்கு வெளியேயான சில போராளிகளையும் நினைவுகூர்ந்து பெருமைப்படுத்தும் நாள் ஆகும்.

இந்நாள் தமிழீழத்திலும் மற்றும் புலம்பெயர் வாழ் தமிழர்களால் ஐரோப்பா, அமெரிக்கா, கனடா, அவுஸ்திரேலியா உட்பட பல உலகநாடுகளில் கடைப்பிடிக்கப்படுகிறது.

மாவீரர் நாள் 1989 ஆம் ஆண்டில் தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது. அப்போது மாவீரர் வாரம் என்று ஒருவாரம் நினைவுகூரப்படும். அவ்வாரத்தின் இறுதிநாள்தான் மாவீரர் நாள் ஆகும்.

அதன்படி நவம்பர் 21 ஆம் திகதி முதல் 27 ஆம் திகதி வரை இவ்வாரம் நினைவுகூரப்படும். முன்பு மாவீரர் நாள் தீபம் ஏற்றுவது நள்ளிரவு 12.00 மணிக்கு என்றிருந்து பின்னர் அது மாலை 06.05 மணிக்கு என்று மாற்றப்பட்டது.

[தொகு] இவற்றையும் பார்க்கவும்

[தொகு] வெளி இணைப்புகள்