பிரம்மபுத்ரா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.

இக்கட்டுரையை (அல்லது கட்டுரைப்பகுதியை) பிரம்மபுத்திரா ஆறு கட்டுரையுடன் இணைக்கப் பரிந்துரைக்கப்படுகிறது. (கலந்துரையாடவும்)

பிரம்மபுத்திரா ஆறு, திபெத்திலுள்ள கயிலாய மலையில் ஸாங்-போ என்ற பெயரில் உற்பத்தியாகி, இந்தியா மற்றும் பங்களாதேஷ் ஆகிய நாடுகளில் பாய்கிறது. மொத்தம் 2800 கி.மீ. நீளமுள்ள இந்நதி, 1700 கி.மீ. தூரம் திபெத்திலுள்ள 4000 மீட்டருக்கும் அதிகமான மலைகளிலேயே கிழக்கு நோக்கி பயணிக்கிறது. பிறகு நாம்சா-படுவா மலையருகே, தெற்கு தென்மேற்காக வளைந்து அருணாசல பிரதேசத்தில் சியாங் என்ற பெயரில் நுழைந்து, அதன்பின் சமவெளிப் பகுதியை அடைகிறது. சமவெளிப்பகுதியில் இந்நதி திகாங் என்று அழைக்கப்படுகிறது. சமவெளிப் பகுதியில் 35 கி.மீ. தொலைவு கடந்தபின், திபங் மற்றும் லோகித் என்ற நதிகளோடு சங்கமித்து மிகவும் அகன்ற நதியாக ஆகி, பிரம்மபுத்திரா என்று பெயர் மாற்றமடைந்து அசாம் மாநிலத்தில் நுழைகிறது.


அசாம் மாநிலத்தின் முக்கிய நதியான பிரம்மபுத்திரா, ஒருசில இடங்களில் 10 கி.மீ. வரை அகலமுடையதாயிருக்கிறது. திப்ரூகட் அருகே அது இரண்டாகப் பிரிகிறது. பிரிந்த அவ்விரு கிளைகளும் நூறு கிலோமீட்டருக்கு அப்பால் இணைகின்றன. இதனால் உருவாகியுள்ள தீவு மஜிலித்தீவு என்று அழைக்கப்படுகிறது.