கரும்புலிகள்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
கரும்புலிகள், தமிழீழ விடுதலைப் புலிகளின் ஒரு சிறப்புத் தாக்குதல் படையணியாகும். இது தமது இலக்கை நிறைவு செய்ய தற்கொலை தாக்குதலில் ஈடுபடத் துணியும் படையணியாகும். இவர்கள், உலகில் பயங்கரமானதும் கட்டுப்பாடு மிக்கதுமான தற்கொலை படையணியாக விளங்குகிறார்கள். 270க்கும் மேற்பட்ட கரும்புலிகள் கடலிலும் நிலத்திலும் நடைபெற்ற சமர்களிலும் வேறு தாக்குதல்களிலும் உயிர் நீத்துள்ளனர். பெரும்பாலானோர் இலங்கையில் எல்லைக்குள் உயிர் நீத்தனர். இலங்கை குடியரசுத் தலைவர் ரணசிங்க பிரேமதாசா கரும்புலிகளின் தாக்குதலில் இறந்தவரனக் கருதப்படுகின்றது.