சிவவாக்கியர்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
சிவவாக்கியர் என்பவர் ஒரு தமிழ்நாட்டுச் சித்தர். பதினெண் சித்தர்களில் ஒருவராக இவர் எண்ணபடுகிறார். சித்தர் பாடல்கள் திரட்டில் இவருடடைய பாடல்களே மிக அதிகம் உடையவை. இவரைப் பற்றிய குறிப்புகள் அபிதான சிந்தாமணியிலும் தி.வி. சாம்பசிவம் பிள்ளை அவர்கள் எழுதிய தமிழ்-ஆங்கில மருத்துவ அகராதியிலும் உள்ளன. ஆனால் இவை இரண்டும் முற்றிலும் வேறுபடுகின்றன என்பதும் இக்கதைகளுக்கு அடிக்கோள்கள் ஏதும் இல்லை என்பதும் அறிந்து, இவர் இயற்றிய பாடல்களை மட்டும் போற்றுகின்றனர். இவருடைய பாக்களில் ஒரு வித துள்ளல் ஓசையும், அடுக்கடுக்காய் கருத்துக்களும் கேள்விகளும் இருப்பது சிறப்பு. எடுத்துக்காட்டாக, புறவழிபாடாக கடவுள் வழிபாடு செய்பவர்களைப் பார்த்து அடுக்கடுக்காய் வினாக்கள் தொடுக்கின்றார்.
உடம்பு உயிர் எடுத்ததோ? உயிர் உடம்பு எடுத்ததோ? உடம்பு உயிர் எடுத்த போது உருவம் ஏது? உருத் தரிப்பதற்கு முன் உடல் கலந்தது எங்ஙனே? கருத் தரிப்பதற்கு முன் காரணங்கள் எங்ஙனே?
அக்கரம் அனாதியோ? ஆத்துமம் அனாதியோ? புக்கிருந்த பூதமும் புலங்களும் அனாதியோ?
உயிரி்ருந்த தெவ்விடம் உடம்பெடுப்ப தின்முனம் உயிர தாவ தேதடா உடம்ப தாவ தேதடா உயிரையும் உடம்பையும் ஒன்று விப்ப தேதடா உயிரினால் உடம்பெடுத்த உண்மை ஞானி சொல்லடா?
இவர் வாழ்ந்த காலமும் தெளிவாய் தெரியவில்லை.
[தொகு] உசாத் துணை
இரா.இளங்குமரன், சித்தர் பாடல்கள்: சிவவாக்கியர், சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம், சென்னை, 1984, பக்கங்கள் 1 - 126.